search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala"

    • பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
    • முன்னதாக இன்று காலை கேரளாவின் மூணாறு அருகே உள்ள கேப் ரோடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி இத்துறவி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அப்பகுதிகளில் இன்னும் மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட குறிச்சியர்மலை, மூரிக்காப்பு, கொம்பு அம்பு குத்தி மலை போன்ற பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன, இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    நில அதிர்வு உணரப்பட்ட பகுதிகளுக்கு விரைந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். இந்த நில அதிர்வால் மக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

    முன்னதாக இன்று காலை கேரளாவின் மூணாறு அருகே உள்ள கேப் ரோடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாகப் பெரிய பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு விழுந்த போது வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் அம்சபாவிதம் தவிர்க்கப்பட்டது.  

    • கேரளாவில் இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டது.
    • நிலச்சரிவு காரணமாக பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன.

    கேரளா மாநிலத்தின் மூனாறு அருகே உள்ள கேப் ரோடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக பெரிய பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு விழுந்த போது வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் அம்சபாவிதம் தவிர்க்கப்பட்டது. 

    முன்னதாக கடந்த 30 ஆம் தேதி கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு காரணமாக 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மீட்பு பணிகள் கூட முழுமை பெறாத நிலையில், மீண்டும் கேரளா மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு.
    • வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளில் ராணுவம் ஈடுபட்டது.

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டன. நிலச்சரிவால் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ கடந்தது.

    வயநாடு நிலச்சரிவைத் தொடர்ந்து இந்திய ராணுவம், துணை ராணுவ படைகள், கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, காவல்துறை உள்ளிட்டோர் மீட்பு-தேடுதல் பணியில் கடந்த ஒன்பது நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களில் பெரும் பகுதியினர் திருப்பி அனுப்பப்பட்டனர். ராணுவ அதிகாரிகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ் நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

    மீட்பு பணிகளில் ஈடுபட்டு திரும்பும் ராணுவ வீரர்களுக்கு குடியிருப்பு வாசிகள் கைத்தட்டி உற்சாகம் எழுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.


    • அமீபிக் மூளைக்காய்ச்சல் கடந்த மாதம் பரவத் தொடங்கியது.
    • மூளைக்காய்ச்சல் பாதிப்பு 15 ஆக உயர்ந்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவ தொடங்கின. அதிலும் "பிரைமரி அமீபிக் மெனிங்கே என்செபா லிடிஸ்" என்று அழைக்கப்படும் மூளையை தாக்கும் "அமீபிக் மூளைக்காய்ச்சல்" கடந்த மாதம் பரவத் தொடங்கியது.

    உயிர்க்கொல்லி நோயான இந்த காய்ச்சலுக்கு 3 குழந்தைகள், ஒரு வாலிபர் என மொத்தம் 4 பேர் அடுத்தடுத்து பலியாகினர். மேலும் சிலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேங்கிக்கிடக்கும் அசுத்தமான தண்ணீரில் இருக்கும் அமீபாக்கள், குளிப்பவர்களின் உடலுக்குள் காதுமடல் மற்றும் மூக்கு துவாரம் வழியாக புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

    ஆகவே இந்த பாதிப்பில் இருந்து தப்ப தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் குளிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.

    இந்நிலையில் திருவனந்தபுரத்தில் மேலும் 6 பேருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 5பேர் கடந்த 23-ந்தேதி இறந்த வாலிபரின் நண்பர்கள் ஆவர்.

    அவர்கள் 6 பேரும் தங்களது கிராமத்தில் உள்ள பாசி நிறைந்த குளத்தில் குளித்ததன் மூலமாக தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த குளத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த குளத்தில் யாரும் குளிக்கக்கூடாது என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

    அவர்களை தவிர மேலும் ஒருவருக்கு எப்படி பாதித்தது என்று சுகா தாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள 6 பேரில் 4 பேர் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இவர்களையும் சேர்த்து கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பு 15 ஆக உயர்ந்திருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் தெரி வித்திருக்கிறார்.

    • வனத்துறையினர் அதிரடி சோதனை.
    • வனத்துறையினர் பாம்பு இறைச்சியை கைப்பற்றினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு தளியகோணம் பகுதியில் ஒருவர் மலைப்பாம்பை பிடித்துச் சென்றிருப்பதாக வனத்துறையிருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மலைப்பாம்பை பிடித்ததாக கூறப்பட்ட அந்த பகுதியை சேர்ந்த ராஜேஷ்(வயது42) என்பவரின் வீட்டுக்கு பாலப்பல்லி வனச்சரக அதிகாரி ரதீஷ் தலைமையிலான வனத்துறையினர் அதிரடியாக சென்றனர்.

    அப்போது அங்கு ராஜேஷ் இல்லை. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த கவுன்சிலர் முன்னிலையில் வனத்துறையினர் சோதனை செய்தனர். இதில் ராஜேஷ் வீட்டின் சமையலறையில் மலைப்பாம்பு சமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், பாம்பு இறைச்சியை கைப்பற்றினர்.

    பின்பு தணியகோணம் பகுதியில் பதுங்கியிருந்த ராஜேசை பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது தளியகோணம் வயல் பகுதியில் மலைப்பாம்பை பிடித்ததாகவும், அதனை வைத்து "ஸ்பெஷல் டிஷ்" தயாரித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராஜேசை கைது செய்தனர்.

    அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட மலைப்பாம்பு இறைச்சி அறிவியல் பரிசோதனைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி பயோலேபுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ராஜேஷ் இரிஞ்சாலக்குடா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    வனச் சட்டங்களின்படி பாம்புகளை கொல்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.25ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

    • தற்போது ​​4 பேர் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில மாதங்களாக அமீபிக் மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நீர்நிலைகளில் குளிக்கும்போது தேங்கி நிற்கும் நீரில் இருக்கும் அமீபா, மூக்கின் வழியாக மனிதனின் உட லுக்குள் சென்று மூளையை தாக்கும் இந்த அரியவகை நோய் உயிர்ப்பலி வாங்கி வருகிறது.

    இந்நிலையில் திருவனந்தபுரத்தில் மேலும் 4 பேர் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம் கன்னரவிளையை சேர்ந்த அகில் (26) என்பவர் கடந்த ஜூலை 23 அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு ஆளானார்.

    அகில் தனது நண்பர்கள் அனிஷ் (26), அச்சு (25), ஹரிஷ் (27), தனுஷ் (26) ஆகியோருடன் குளத்தில் குளித்தபோது அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் 3 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தற்போது 4 பேர் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4-வது நபருக்கும் அறிகுறிகள் உள்ளது. ஆனால் இன்னும் சோதனை முடிவுகள் வரவில்லை.

    நிலைமையின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு, சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், மாநில அதிவிரைவு குழு கூட்டத்தை கூட்டினார் (RRT) கூட்டத்தை கூட்டினார்.

    தேங்கி நிற்கும் நீர்நிலைகளில், குறிப்பாக பாசிகள் வளர்ந்துள்ள நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்குமாறு எச்சரித்த அமைச்சர், குளிக்கும்போது நாசிக்குள் தண்ணீர் வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தினார்.

    மேலும் நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டார்.

    இந்நிலையில் தீவிர தலைவலி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அகில், உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

    சுகாதாரத் துறையினர், நோய்த்தொற்றின் மூலத்தைக் கண்டறிய, பரிசோதனைக்காக தண்ணீர் மாதிரிகளை சேகரித்து நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

    • 'வயநாடு நிலச்சரிவானது பசு வதையோடு நேரடியாக தொடர்புடையது'
    • கேரளாவில் பசு வதையை நிறுத்தவில்லை என்றால் மேலும் இதுபோன்று தொடர்ந்து பேரழிவுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்த கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் பயங்கர நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.

    இதனால், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இயற்கை பேரிடர் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முன்னாள் எம்.எல்ஏ.வும் பாஜக மூத்த தலைவருமான கியான் தேவ் அகுஜா, வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு அங்கு பசுவதை செய்யப்படுவதே காரணம் என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

     

    இதுகுறித்து ஊடகத்தினரிடம் அவர் பேசுகையில், 2018 முதல் நடந்த பேரிடர்களை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், பசு வதை செய்யப்பட்ட பகுதிகளில்தான் அதிக பேரழிவு சமபவங்கள் ஏற்பட்டுள்ளது தெரியும். வயநாடு நிலச்சரிவானது பசு வதையோடு நேரடியாக தொடர்புடையது.

    கேரளாவில் பசு வதை அதிகம் நடப்பதாலேயே இந்த பேரழிவானது ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலும் கேரளாவில் பசு வதையை நிறுத்தவில்லை என்றால் மேலும் இதுபோன்று தொடர்ந்து பேரழிவுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

    தற்போது உத்தராகண்ட், இமாச்சல பிரதேசத்திலும் மேகவெடிப்பு, நிலச்சரிவுகள் ஏற்பட்டிருந்தாலும் வயநாட்டுடன் ஒப்பிடும்போது அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறைவானதே ஆகும் என்று தெரிவித்துள்ளார். அகுஜாவின் கருத்து சர்ச்சையானதை அடுத்து, இது சோககரமாக பேரழிவுக்கு மதச் சாயம் பூசுவதாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) பொதுச்செயலாளர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.  

    • நிலச்சரிவில் சிக்கி இதுவரை 340க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • இதுபோன்ற சூப்பர் ஹீரோக்களால் கேரளாவின் புகழ் பிரகாசமாக ஜொலிக்கிறது

    கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளிரவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் பலநூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.

    இந்த கோர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 340க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் அட்டமாலா வனப்பகுதியில் சிக்கித்தவித்த பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 6 பேரை 8 மணி நேரம் போராடி கேரள வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

    இந்த சம்பவத்தின் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியுள்ளார்.

    அவரது பதிவில், "இத்தகைய இருண்ட காலத்திலும் இதுபோன்ற சூப்பர் ஹீரோக்களால் கேரளாவின் புகழ் பிரகாசமாக ஜொலிக்கிறது என்பதை இவர்களின் வீரம் நமக்கு நினைவூட்டுகிறது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    • அனைத்து பள்ளி-கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை.
    • பள்ளிகளில் நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அங்கு பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    வயநாட்டில் கனமழை கொட்டியதால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர்.

    இந்நிலையில கேரள மாநிலத்தில் வருகிற 5-ந்தேதி கரை கமனழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று வயநாடு, கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்தமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட டுள்ளதால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகள் உளிட்ட அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் டியூசன் மையங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருந்தது.

    அதேபோல் பாலக்காடு மாவட்டத்திலும் அனைத்து பள்ளிகள், அங்கன்வாடி கள், டியூசன் மையங்களுக்கு மாவட்ட கலெக்டர் இன்று விடுமுறை அறிவித்தார்.

    இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் ஏராளமான பள்ளிகளில் நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

    • அரபிக் கடல் சூடேற்றம் இந்த கனமழை மற்றும் அதனைதொடர்ந்த நிலச்சரிவுவுக்கான காரணமாக சூழலியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்
    • ஐதராபாத்தில் உள்ள நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர்(NRSC) தளத்தில் இருந்து சாட்டிலைட்டைகள் அனுப்பப்ட்டன

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29-ந்தேதி கனமழை பெய்தது. மேக வெடிப்பு காரணமாகக் கனமழை கொட்டித் தீர்த்ததால் வயநாடு மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்கள் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    தேசிய பேரிடர் மீட்புப்படை,தீயணைப்புப் படை வனத்துறை, காவல்துறை, தன்னார்வலர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து மீட்புப் பணியில் அயராது ஈடுபட்டு வருகின்றனர். தோண்டத் தோண்ட சடலங்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அரபிக் கடல் சூடேற்றம் என பல்வேறு காரணிகள் இந்த கனமழை மற்றும் அதனைதொடர்ந்த நிலச்சரிவுக்கான காரணமாக சூழலியல் ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்.

    நிலச்சரிவில் மக்கள் சிக்கித் தவிக்கும் காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி மனதை ரணமாக்கி வரும் நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோ, வயநாடு பகுதிகளில் முந்தைய காலங்களில் ஏற்பட்ட  நிலச்சரிவுகளையும் தற்போதய நில்சசரிவையும் ஒப்பிடும்  சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

     

    இஸ்ரோ தகவலின்படி, மண் சரிவு ஆரம்பப் புள்ளியில் இருந்து 8 கிலோ மீட்டர் பயணித்து முடிந்திருக்கிறது என்றும் ஒட்டுமொத்தமாக 86,000 சதுர அடி பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த பாதிப்புகளை இஸ்ரோவின் ஐதராபாத் தளமான நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர்(NRSC) தளத்தில் இருந்து நவீன கார்டோசாட்-3 ஆப்டிகல் சாட்டிலைட் மற்றும் மேகங்களின் ஊடாக தெளிவாக பார்க்கக்கூடிய RISAT சாட்டிலைட்களை வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு கடந்த ஜூலை 31 ஆம் தேதி அனுப்பி, அங்கு எடுத்த படங்களை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் NRSC அறிக்கைபடி, சூரல்மலை பகுதிகளில் பெய்த அதீத மழையே அதிகப்படியான நிலச்சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிகிறது.   

     

     

    • மண்ணில் புதையுண்ட பலரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
    • இதுவரை 64 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகப்பெரிய சம்பவமாக மாறி இருக்கிறது. அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்து இருக்கிறது.

    அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் அந்த இடத்தில் வீடுகள் தடமே இல்லாமல் காட்சி அளிக்கிறது. அனைத்து இடங்களும் மண்ணாலும், மரங்கள் மற்றும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

    நிலச்சரிவில் சிக்கி 184 பேர் உயிரிழந்த நிலையில், மண்ணில் புதையுண்ட பலரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

    இதனால், உயிரிழப்பு எண்ணக்கை மேலும் உயர வாயப்புள்ளதாக அஞ்சப்பட்டது.

    இந்நிலையில், கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 225 பேர் குறித்த விவரங்கள் தெரியாததால் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    உயிரிழந்தவர்களில், 94 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு, இதுவரை 64 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    பலர் மாயமான நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

    400க்கும் மேற்பட்ட வீடுகளில், தற்போது 40 வீடுகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    • மாநிலங்களவையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்.
    • மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கையை கேரளா புறம் தள்ளியது ஏன்?

    கேரள வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 184 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மண்ணில் புதையுண்ட பலரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். இதனால், உயிரிழப்பு எண்ணக்கை மேலும் உயர வாயப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில் மாநிலங்களவையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா பதில் அளித்துள்ளார்.

    அதில், கனமழை குறித்து கேரளாவுக்கு 5 நாட்களுக்கு முன்பே மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    குஜராத்தில் சூறாவளி ஏற்பட்டபோது அது குறித்து 3 நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை வழங்கினோம். எச்சரிக்கையை குஜராத் அரசு அபாயத்தைப் புரிந்துக்கொண்டதால் ஒரு பசு கூட இறக்கவில்லை.

    இதுபோல், மழை மற்றும் நிலச்சரிவு குறித்து கேரளாவிற்கு 2 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கையை கேரளா புறம் தள்ளியது ஏன்?

    பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து மக்களை முன்கூட்டியே வெளியேற்றாதது ஏன் ?

    முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தான், தேசிய பேரிடர் மீட்பு படை முன்கூட்டியே அங்கு சென்றது.

    மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 90 சதவீத தொகையை செலவழிப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

    இயற்கை பேரிடர் குறித்து 7 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை வழங்கும் முதன்மையான 4 நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×