search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala"

    • தென் இந்தியாவிலும் பா.ஜ.க. வலுவாகி வருகிறது.
    • கேரள சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிக்காக காத்திருக்கிறோம்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் மட்டும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதன்மூலம் கேரளாவில் கால்பதித்த பெருமையை அக்கட்சி பெற்றது.

    அது மட்டுமின்றி கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலை விட, தற்போது நடந்த தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீத மும் அதிகரித்தது. இதனால் கேரள மாநி லத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    வருகிற உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தல்களில் பெரும்பான்மையான வெற்றியை பெற்றுவிட வேண்டும் என்ற இலக்குடன் பா.ஜ.க. செயல்படத் தொடங்கியிருக்கிறது.

    இந்நிலையில் பா.ஜ.க. புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது.

    அதில் பா.ஜ.க. தேசிய தலைவரும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியுமான ஜெ.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஊழல் மற்றம் குடும்ப அரசியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கட்சிகள் அதிகாரத்தை பெற பொய் தகவல்களை பரப்புகின்றன. அந்த கட்சிகள் பா.ஜ.க.வை வடமாநில கட்சி போல் சித்தரிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டன.

    ஆனால் அவை அனைத்தும் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் உடைத்தெறியப்பட்டது. இந்த தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் முன்பைவிட அதிக வாக்குகளை பா.ஜ.க. பெற்றது. தென் இந்தியாவிலும் பா.ஜ.க. வலுவாகி வருகிறது.

    கேரள மாநிலத்தில் நடந்த மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் மட்டும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் 75 ஆயிரம் வாக்குகள் பெரும்பான்மையை பெற்றார்.

    திருவனந்தபுரம் மற்றும் அட்டிங்கல் தொகுதியில் தோல்வியடைந்தாலும் பா.ஜ.க.வுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. 6 மாநகராட்சிகளில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் 36 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இது வெற்றிக்கு சமம்.

    கேரளாவில் எதிர் அணியாகவும், அகில இந்திய அளவில் ஒரே அணியாகவும் பயணிக்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் காலாவதியான கொள்கைகளை மக்கள் நிராகரித்துள்ளனர். இங்கு பா.ஜ.க.வினர் உயிரை பணயம் வைத்து போராடி வருகின்றனர்.

    2016-ம் ஆண்டு நடைபெற உள்ள கேரள சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிக்காக காத்திருக்கிறோம். அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும். தமிழ்நாட்டிலும் பிரதான கட்சியாக பா.ஜ.க. உருவெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

    இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

    • பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்க இருந்த மைதானத்தை சுற்றிவளைத்தனர்.
    • போலீஸ் நிலையத்துக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சமீபத்தில் வெளியான 'மஞ்சுமெல் பாய்ஸ்', 'பிரேமலு', 'ஆடுஜீவிதம்' உள்ளிட்ட படங்கள் வெற்றிபெற்றன. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படங்களை ரசிகர்கள் கொண்டாடினர்.

    இதனால் இந்த படங்கள் கோடிக்க ணக்கில் வசூலை குவித்தன. இந்த படங்களின் வரிசையில் நடிகர் பகத் பாசில் நடித்த 'ஆவேசம்' படம் வெற்றிப் படமாக அமைந்தது.

    ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் பகத் பாசில் ஜாலி கலந்த வில்லத்தனத்துடன் நடித்திருந்தது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது. ரூ.50 கோடிக்குள் எடுக்கப்பட்ட அந்த படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலை குவித்திருப்பதாக கூறப்படுகிறது.

    ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் விதத்தில் அமைந்திருக்கும் 'ஆவேசம்' படத்தில் பிறந்தநாள் கொண்டாட்ட காட்சி பிரபலமாக பேசப்பட்டது.

    மிகவும் பிரமாண்டமாக நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் ஆட்டம் பாட்டத்துடன் பிறந்தநாள் கொண்டாடுவது போன்று எடுக்கப்பட்டிருந்த அந்த காட்சியை பார்க்கும் போதே நமக்குள் ஒருவித உற்சாகம் பிறப்பதை உணர முடியும் என்று படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

    இந்நிலையில் 'ஆவேசம்' படத்தில் இடம்பெற்றுள்ள பிறந்தநாள் பார்ட்டியை போன்று பிறந்தநாள் கொண்டாடிய ஒரு கும்பலை போலீஸ் படை சுற்றிவளைத்து பிடித்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி கும்பலின் தலைவன் தீக்கட்டு சஜன். இவரது பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் வித்தியாசமாக கொண்டாட திட்டமிட்டனர். அதன்படி 'ஆவேசம்' படத்தில் வருவது போன்று பிறந்தநாளை மதுவிருந்து, ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாட ஏற்பாடு செய்தனர்.

    அதன்படி திருச்சூர் அருகே உள்ள தேக்கிங்காடு மைதானத்தில் தீக்கட்டு சஜனின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடக்க இருந்தது. இதற்காக அவரது ஆதரவாளர்கள், கூட்டாளிகள் என ஏராளமானோர் தேக்கிங்காடு மைதானத்தில் திரண்டனர். 'ஆவேசம்' பட பாணியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற இருந்தது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்க இருந்த மைதானத்தை சுற்றிவளைத்தனர். இதையடுத்து பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு திரண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். இருந்தபோதிலும் அவர்களை போலீசார் தப்பிச்செல்ல முடியாதபடி சுற்றி வளைத்தனர்.

    பின்பு அவர்களில் 32 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 17 பேர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவர். பிறந்தநாள் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்தியதால் தீக்கட்டு சஜனின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    மேலும் தங்களது திட்டத்தை முறியடித்ததால் ஆத்திரமடைந்த தீக்கட்டு சஜன் திருச்சூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம், கிழக்கு மற்றும் மேற்கு போலீஸ் நிலையங்களுக்கு தொலைபேசியில் அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தீக்கட்டு சஜன் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத சட்டப்பிரிவு களின் கீழ் வழக்குப் பதிந்தனர். தலை மறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • வியூகங்களை தற்போதே பா.ஜ.க. வகுக்க தொடங்கிவிட்டது.
    • மாநிலம் தழுவிய கூட்டம் திருவனந்தபுரத்தில் நாளை நடைபெற உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 18 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது.

    பா.ஜ.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. மாநிலத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்டு கட்சிக்கு இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அதே நேரத்தில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்தாலும், அந்த வெற்றியின் மூலம் கேரளாவில் கால் பதித்துவிட்டது மற்றும் வாக்கு சதவீதம் அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர்கள் தங்களின் வெற்றிக் கொண்டாட்டத்தை தொடர்ந்தபடி இருக்கின்றனர்.

    கேரளாவில் அவர்களது அடுத்த இலக்கு நடைபெற உள்ள பாலக்காடு மற்றும் செலக்கரா சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலாக இருக்கிறது.

    மேலும் அடுத்தடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சட்டசபை தேர்தலும் பா.ஜ.க.வின் இலக்காக உள்ளது.

    இந்த தேர்தல்களில் அதிகமான இடங்களில் வெற்றியை பெற்றாக வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. அதற்கான வியூகங்களை தற்போதே பா.ஜ.க. வகுக்கத் தொடங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாக அமைப்பு நிர்வாகிகள் 3 ஆயிரம் பேருடனான மாநிலம் தழுவிய கூட்டம் திருவனந்தபுரத்தில் நாளை நடைபெற உள்ளது.

    நாளை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் கூட்டத்தில் பஞ்சாயத்து கமிட்டி அளவிலான தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மாலையில் நடக்கும் நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொள்கிறார்.

    நட்டா வருகையால் கேரள மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்திருக்கின்றனர்.

    • கேரளாவின் ராஜகிரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் குருட்டுகுலம் அப்பெண்ணின் உடல்நிலையை சோதித்தார்.
    • மயக்கமடைந்த பெண் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் உதவியோடு, அவருடைய இதயத்துடிப்பைச் சோதனை செய்தார்.

    டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானத்தில், மயக்கமடைந்த பயணியை ஆப்பிள் வாட்ச் உதவியுடன் மருத்துவர் காப்பற்றிய சம்பவம் நடந்துள்ளது.

    ஜூலை 2 ஆம் தேதி பறந்து கொண்டிருந்த விமானத்தில் 56 வயதான பெண் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல், மயக்கமடைந்துள்ளார்.

    அதே விமானத்தில் பயணம் செய்த, கேரளாவின் ராஜகிரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் குருட்டுகுலம் அப்பெண்ணின் உடல்நிலையை சோதித்தார்.

    அப்போது அவரிடம் எந்த மருத்துவ உபகரணமும் இல்லாததால், மயக்கமடைந்த பெண் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் உதவியோடு, அவருடைய இதயத்துடிப்பைச் சோதனை செய்தார். மேலும் எலக்ட்ரோ கார்டியோகிராம் சோதனையையும் செய்தார்.

    அப்போது அப்பெண்ணின் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்ததையும், ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததையும் அவர் கண்டுபிடித்தார். பின்னர் விமானத்தில் இருந்த மருந்துகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றினார்.

    விமானம் சான்பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியதும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "மருத்துவர்கள் மருத்துவருக்கான அடையாள அட்டையுடன் விமானத்தில் பயணிக்க வேண்டும். அப்போதுதான் யாருக்கேனும் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், அவருக்கு நம்மால் சிகிச்சை அளிக்க முடியும். அடையாள அட்டை இல்லாவிட்டால் மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதிக்க மாட்டார்கள்" என்று மருத்துவ அடையாளத்தின் முக்கியத்துவத்தை மருத்துவர் குருட்டுகுலம் விவரித்தார்.

    • சுகாதாரத் துறையினர் இறந்த பன்றிகளின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரே நாளில் 310 பன்றிகளை கொன்று புதைத்தனர்.

    திருச்சூர்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கட்டிலப்பூவம், மடக்கத்தாரா ஆகிய பகுதிகளில் உள்ள பண்ணைகளில் பன்றிகள் திடீரென அடுத்தடுத்து இறந்தன. இதனால் பண்ணை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை அறிந்த சுகாதாரத் துறையினர் இறந்த பன்றிகளின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதன் முடிவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதித்து பன்றிகள் இறந்தது உறுதியானது.

    இதைத்தொடர்ந்து நோய் பரவலை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் ஒரே நாளில் 310 பன்றிகளை கொன்று புதைத்தனர். அங்கு கிருமிநாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட பண்ணைகளில் இருந்து ஒரு கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதி தொற்று மண்டலமாகவும், 10 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகள் கண்காணிப்பு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. நோய் பாதித்த பகுதிகளில் இருந்து பன்றி இறைச்சி விற்பனை, பன்றி இறைச்சி கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • அரியவகை நோய் உயிர்ப்பலி வாங்கி வருகிறது.
    • 3-வது உயிர்ப்பலி நிகழ்ந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில மாதங்களாக அமீபிக் மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நீர்நிலைகளில் குளிக்கும் போது தேங்கி நிற்கும் நீரில் இருக்கும் அமீபா, மூக்கின் வழியாக மனிதனின் உட லுக்குள் சென்று மூளையை தாக்கும் இந்த அரியவகை நோய் உயிர்ப்பலி வாங்கி வருகிறது.

    கேரளாவில் கண்ணூரில் 13 வயது சிறுமியும், மலப்புரத்தில் 5 வயது சிறுமியும் ஏற்கனவே இந்த நோய்க்கு இறந்து விட்ட நிலையில், தற்போது கோழிக்கோட்டில் மேலும் ஒரு மாணவன் பரிதாபமாக இறந்துள்ளான்.

    கோழிக்கோடு மாவட்டம் ராமநாட்டு நகர் பகுதியைச் சேர்ந்த அஜித் பிரசாத்-ஜோதி தம்பதியரின் மகனான மிருதுல் (வயது 12), 7-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் தனது பள்ளியின் அருகே உள்ள குளத்தில் குளித்து விட்டு வீட்டுக்கு வந்தது முதல் அமீபிக் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    வாந்தி மற்றும் தலைவ லியால் அவதிப்பட்ட அவனை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மிருதுல் பரிதாபமாக இறந்தான். கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு 3-வது உயிர்ப்பலி நிகழ்ந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • நான் கேரளாவிற்கும் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கும் எம்.பி.யாக பிரதிபலிப்பேன்.
    • சபரிமலையை தொட நினைத்தவர்கள் எல்லாம் காணாமல் தான் போவார்கள்.

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி சுரேஷ் கோபி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேரள மக்கள் வழங்கிய ஆசிர்வாதத்தால் நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகி உள்ளேன். நான் கேரளாவிற்கும் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கும் எம்.பி.யாக பிரதிபலிப்பேன். மக்களுக்கு முக்கியமாக எதை செய்ய வேண்டுமோ அதை செய்வேன். என் பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் இருக்கிறது. சுற்றுலாத்துறை மூலமாக எந்த திட்டமாக இருந்தாலும் செய்து கொடுக்கலாம். பெட்ரோலியம் துறையில் துறை சார்ந்த அனுபவங்கள் எதுவும் தற்போது என்னிடம் இல்லாததால், அதை கற்றுக்கொண்டு வருகிறேன்.

    பெட்ரோலிய பொருட்கள் விலை குறைப்பு பற்றி யோசிக்காமல் அதற்குரிய வேறு வழி என்ன என்று யோசிக்க வேண்டும். சபரிமலையை தொட நினைத்தவர்கள் எல்லாம் காணாமல் தான் போவார்கள்.

    கேரளாவில் பிறந்தாலும் சென்னை என்னை வளர்த்த இடம். நடிக்க வாய்ப்பு தந்து, தூங்க இடம் தந்தது. தமிழ்நாட்டை நேசிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவரிடம் நீட் குறித்து நடிகர் விஜய் பேசியது குறித்து கருத்து கேட்டபோது, அரசியல் பற்றி கேட்க வேண்டாம் என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆவணி மாத தொடக்கத்தில் தான் தந்திரி பதவி மாற்றம் நடைபெறும்.
    • சிங்கமாத பூஜைகள் ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்குகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற ஆலயம் சபரிமலை அய்யப்பன் கோவில். இந்த கோவிலின் முக்கிய பூஜைகளை கேரள மாநிலம் செங்கனூர் பகுதியை சேர்ந்த தாழமண் தந்திரி குடும்பத்தை சேர்ந்த வர்களே நடத்தி வரு கின்றனர். சபரிமலை அய்யப்பன் கோவில் குறித்த அனைத்து முக்கிய முடிவுகளையும் தாழமண் தந்திரி குடும்பத்தினர் தான் எடுப்பார்கள்.

    தற்போது சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரியாக கண்டரரு ராஜீவரு மற்றும் கண்டரரு மகேஷ் மோகனரு ஆகி யோர் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தந்திரி பொறுப்பில் இருப்பார்கள். இந்த நிலையில் தந்திரி பொறுப்பில் இருந்து கண்டரரு ராஜீவரு விலக முடிவு செய்துள்ளார்.

    அவருக்கு பதிலாக புதிய தந்திரியாக அவரது மகனான கண்டரரு பிரம்மதத்தன் நியமிக்கப்பட உள்ளார். ஆண்டு தோறும் மலையாள மாதமான சிங்க மாதம் (தமிழில் ஆவணி மாதம்) தொடக்கத்தில் தான் தந்திரி பதவி மாற்றம் நடைபெறும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ந்தேதி சிங்க மாதம் தொடங்குகிறது.

    சிங்கமாத பூஜைகள் ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்குகிறது. அன்று சபரிமலை கோவில் தந்திரியாக கண்டரரு பிரம்மதத்தன் பொறுப்பேற்கிறார். அன்றைய தினம் மாலை அவரது முன்னிலையிலேயே சபரிமலை அய்யப்பன் கோவில் நடையை மேல்சாந்தி திறக்க உள்ளார்.

    தந்திரி பொறுப்பில் இருந்து விலகினாலும், சபரிமலை விழாக்களில் கண்டரரு ராஜீவரு பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய தந்திரியாக பொறுப்பேற்க உள்ள கண்டரரு பிரம்மதத்தன் தனது எட்டாவது வயதில் பூஜைகள் பற்றி படிக்க தொடங்கி இருக்கிறார். சட்டத்துறையில் பணியாற்றி வந்த அவர், சபரிமலை பூஜை பணிகளில் கவனம் செலுத்துவதற்காக அந்த பணியை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ராஜினாமா செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அப்துல் ரஹீமுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
    • அப்துல் ரஹீமுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. கேரள மாநிலத்தை சேர்ந்த பலரும் நிதியுதவி வழங்கினார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோடம்புழா பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் கடந்த 2006-ம் ஆண்டு சவுதி அரேபியா நாட்டுக்கு வேலைக்கு சென்றார். ரியாத்தில் ஹவுஸ் டிரைவர் விசாவில் சென்று வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவருக்கு 26 வயது.

    அங்கு ஒரு தம்பதியின் நடக்கமுடியாத நிலையில் இருந்த 15 வயது மாற்றுத்திறனாளி மகனை பராமரித்து வந்தார். இந்நிலையில் காரில் சென்றபோது அந்த சிறுவனை அப்துல் ரஹீம் கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதனடிப்படையில் அப்துல் ரஹீம் கைது செய்யப்பட்டார்.

    சிறுவனின் கொலை தவறுதலாக நடந்தது என்று அப்துல் ரஹீம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அவர் சவுதி அரேபியா சிறையில் அப்துல் ரஹீம் அடைக்கப் பட்டார். கொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் பொது மன்னிப்பு வழங்க மறுத்ததால் அப்துல் ரஹீமுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

    அவர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தற்போது வரை 18 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். அப்துல் ரஹீமை மீட்க அவரது பெற்றோர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். சிறுவனின் பெற்றோர் மன்னித்தால் அப்துல் ரஹீமை விடுவிக்கலாம் என்று கோர்ட்டு தெரிவித்தது.

    அப்போது மகன் இறப்புக்கு இழப்பீடு செய்யும் வகையில் 'பிளட் மணி' என்ற வகையில் ஒன்றரை கோடி ரியால் (இந்திய மதிப்பில் ரூ34 கோடி) வழங்கினால் மன்னிக்க தயாராக இருப்பதாக சிறுவனின் பெற்றோர் கூறினர். அந்த தொகையை கடந்த ஏப்ரல் 16-ந்தேதிக்குள் ரூ.34 கோடியை வழங்கினால் அப்துல் ரஹீம் உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை உருவானது.

    ஆனால் அவ்வளவு பெரிய தொகையை அப்துல் ரஹீமின் குடும்பத்தினரால் திரட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்துல் ரஹீமை காப்பாற்ற தேவையான நிதியை திரட்ட சமூக சேவகர்கள் களமிறங்கினர். உலகம் முழுவதும் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்த பலரும் நிதியுதவி வழங்கினார்கள்.

    இதன்மூலம் ரூ.34 கோடி வசூல் ஆனது. அந்த தொகை சவுதி அரேபியா கோர்ட்டில் குறிப்பிட்ட நாளுக்குள் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அப்துல் ரஹீம் விடுதலையாகும் சூழல் உருவானது. அவரது குடும்பத்தினர் வழங்கிய ரூ.34 கோடி கொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டது.

    அந்த பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள், அப்துல் ரஹீமை மன்னிக்க தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து அப்துல் ரஹீமுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்படுவதாக ரியாத் குற்றவியல் நீதிமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    மரணதண்டனை ரத்து அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டதால் சவுதி அரேபியா சிறையில் இருந்து அப்துல் ரஹீம் விடுதலையாகிறார். 18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர் நாளை விடுதலை செய்யப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சுதீர் போஸ் (வயது53).
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சுதீர் போஸ் (வயது53). கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    1971-ம் ஆண்டு பிறந்த இவர், பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களான ஜெஸ்சி மற்றும் பிஜி விஸ்வம்பரன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியதன் மூலம் மலையாள திரையுலகில் கால்பதித்தார். அதன்பிறகு பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

    கடந்த 2008-ம் ஆண்டு நடிகர் கலாபவன் மணி, முகேஷ் மற்றும் ரம்பா நடித்த 'கபடி கபடி' திரைப்படத்தை இயக்கி சுதீர் போஸ் இயக்குனரானார். இந்த படத்தில் நாதிர்ஷா இசையமைப்பில் நடிகர் கலாபவன் மணி பாடிய 'மின்னாமினுங்கே' என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது. இதன் மூலம் சுதீர் போஸ் இயக்கிய 'கபடி கபடி' படம் கொண்டாடப்பட்டது.

    இவருக்கு ப்ரீதா என்ற மனைவியும், மிதுன் என்ற மகனும், சவுபர்ணிகா என்ற மகளும் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவனந்தபுரம் பதிஞ்சரேனடா பகுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் தான் உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

    அவரது மறைவுக்கு மலையாள திரையுலக நடிகர்-நடிகைகள், திரைப்பட இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சுதீர் போசின் இறுதிச்சடங்கு வருகிற 5-ந்தேதி நடை பெறும் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

    • சகோதரி-3 வயது மகள் படுகாயம்.
    • வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளம் வெள்ளார் பகுதியை சேர்ந்தவர் சிமி(வயது35). நேற்று சிமி மற்றும் அவரது 3 வயது மகள் சிவன்யா, சகோதரி சினி(35) ஆகிய 3பேரும் ஸ்கூட்டரில் சென்றனர். சினி ஸ்கூட்டரை ஓட்ட, சிமி தனது மகளுடன் பின்னால் அமர்ந்து பயணித்தார்.

    திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெண்பால வட்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஸ்கூட்டர் திடீரென சினியின் கட்டுப்பாட்டை மீறி ஓடி, பாலத்தில் மேலே இருந்து தடுப்புச்சுவரை தாண்டி கீழே இருந்த சர்வீஸ் சாலையில் விழுந்தது.

    பல அடி உயரத்தில் இருந்து ஸ்கூட்டருடன் 3 பேர் கீழே விழுந்ததை அங்கு நின்றுகொண்டிருந்த ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் சிமி, அவரது மகள் மற்றும் சகோதரி ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிமி பரிதாபமாக இறந்தார். அவரது மகள் மற்றும் சகோதரி ஆகிய இருவரும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்ற வருகின்றனர்.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிமி உள்ளிட்ட 3 பேரும் மேம்பாலத்தில் இருந்து ஸ்கூட்டருடன் சர்வீஸ் சாலையில் விழுந்தது ஏதே சினிமாவில் பார்த்தது போன்று இருந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் சிமி உள்ளிட்டோர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழும் காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

    • ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 போலீஸ் நிலையங்கள்.
    • புகார்கள் பெறுதல் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து துறைகளையும் நவீன மயமாக்கும் கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதிலும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய காவல் துறையை நவீனப்படுத்த அனைத்து மாநிலங்களும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

    அதன்படி கேரள மாநிலத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களும் `ஸ்மார்ட்' போலீஸ் நிலையங்களாக மாற்றப்பட உள்ளன. நவீனமயமாக்கல் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 போலீஸ் நிலையங்களை முன்னிலைப்படுத்தி இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளன.

    இவ்வாறு நவீனமாக்கும் போலீஸ் நிலையங்களில் புகார்கள் பெறுதல் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும். அதற்காக அந்த போலீஸ் நிலையங்கள் அனைத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் மின்னணு உபகரணங்களால் ஒருங்கிணைக்கப்படுகிறது. மேலும் அங்கு நவீன தொழில்நுட்ப நிபுணத்துவம் பெற்ற போலீசார் நியமிக்கப்படுகிறார்கள்.

    இங்கு பணிபுரியக்கூடிய அதிகாரிகளுக்கு சைபர் குற்றங்களை சமாளித்தல், செயற்கை நுண்ணறிவு (ஏ-ஐ தொழில்நுட்பம்) உள்ளிட்ட நவீன தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

    மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்துதல், பாதுகாப்பு நெறிமுறைகள், முகத்தை அடையாளம் காணுதல் மற்றும் வீடியோ காட்சிகளை பகுப்பாய்வு செய்தல் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    ×