search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala"

    • விளையாட்டு, யோகா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார்.
    • கேரளாவை சேர்ந்த பழங்குடியின சகோதரிகள் தயாரிக்கின்றனர்.

    திருவனந்தபுரம்:

    பிரதமர் மோடி ஒவ்வொறு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் 'மன் கி பாத்' (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உடையாற்றுகிறார்.

    மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி, தற்போது மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது.

    நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். விளையாட்டு, யோகா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார்.

    மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பல பொருட்களுக்கு உலகம் முழுவதும் கடும் கிராக்கி ஏற்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். அப்போது அவர் ஆந்திர மாநிலம் 'அரக்கு காபி', கேரள மாநிலம் 'கார்தும்பி குடைகள்' பற்றியும் பேசினார். 'கார்தும்பி குடைகள்' பற்றி பிரதமர் மோடி கூறியதாவது:-

    கேரள கலாசாரம், பாரம்பரியம் மற்றும் சடங்குகளில் குடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. கேரளாவின் அட்டப்பாடியில் தயாராகும் 'கார்தும்பி குடைகள்' சிறப்பு வாய்ந்தவை. இந்த வண்ணமயமான குடைகளை கேரளாவை சேர்ந்த பழங்குடியின சகோதரிகள் தயாரிக்கின்றனர்.

    இன்று இந்த குடைகளின் தேவை நாடுமுழுவதும் அதிகரித்து வருகிறது. இந்த குடைகள் ஆன்லைன் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது. வத்தலக்கி கூட்டுறவு விவசாய சங்கத்தின் மேற்பார்வையில் 'கார் தும்பி குடைகள்' தயாரிக்கப்படுகின்றன. இந்த சமூகம் பெண் சக்தியால் இயக்கப்படுகிறது.

    பெண்களின் தலைமையின் கீழ் அட்டப்பாடி பழங்குடி சமூகம் முன்முயற்சிக்கு ஒரு சிறந்த உதாரணத்தை உருகாக்கியுள்ளது. இவர்கள் குடைகளை மட்டும் விற்கவில்லை. அவர்களது பாரம்பரியத்தை உலகம் முழுவதும் அறிமுகம் செய்கின்றனர்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    'மன் கி பாத்' நிகழ்ச்சியில் `கார் தும்பி குடைகள்' மற்றும் அதனை தயாரிக்கும் பழங்குடியின பெண்கள் பற்றி பிரதமர் மோடி பேசியிருப்பது கேரளாவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் `கார் தும்பி குடைகள்' தயாரித்துவரும் அட்டப்பாடி பழங்குடியின பெண்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியை சேர்ந்த பழங்குடியின கிராம பெண்களால் 'கார்தும்பி குடைகள்' தயாரிக்கப்படுகிறது. தொழில்நுட்ப சமூகம் மற்றும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை குறிவைத்து 'கார் தும்பி குடைகள்' இந்த பருவமழையில் சந்தைக்கு வந்துள்ளன.

    சுமார் 50 முதல் 60 பழங்குடியின பெண்கள் `கார் தும்பி குடைகள்' தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு 20-30 குடைகளுக்கும், அவர்கள் தினமும் 600 முதல் 800 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். தற்போது பல இ-காமர்ஸ் இணையதளங்களில் குடைகள் ரூ.350-390க்கு விற்கப்படுகின்றன.

    • அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்ல முடியவில்லை என்றும் புகார்கள் எழுந்தன.
    • சுகாதா ரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் விசாரணையில் இறங்கி உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    மலையாள பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பகத்பாசில். தமிழில் கமல்ஹாசனின் விக்ரம்-2, உதயநிதியின் மாமன்னன் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

    இவர் மலையாளத்தில் புதிதாக பைங்கிளி என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி தாலுகா மருத்துவமனையில் நடத்தப்பட்டது. இதில் தான் தற்போது பிரச்சனை வெடித்துள்ளது.

    படப்பிடிப்பின் போது அங்கிருந்த நோயாளிகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், டாக்டர்கள் சிகிச்சையில் இருக்கும் போதே படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும், உடல்நல பாதிப்புடன் வந்தவர், அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்ல முடியவில்லை என்றும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக செய்திகளும் வெளியானது.

    இதனைத் தொடர்ந்து கேரள மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணையில் இறங்கி உள்ளது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ததோடு, 7 நாட்களுக்குள் எர்ணாகுளம் மாவட்ட மருத்துவ அதிகாரி, அங்கமாலி தாலுகா மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆகியோர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையில் சம்பவம் குறித்து மாநில சுகாதா ரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் விசாரணையில் இறங்கி உள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநரிடம் அவர் விளக்கம் கேட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிள்ளைகள் சீக்கிரம் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு செல்லுங்கள்.
    • 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    மழை காலத்தில் மாணவ-மாணவிகள் பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது வழக்கமான நடைமுறையாக இருக்கிறது. இரவு முழுவதும் மழை பெய்து காலையிலும் அது தொடரும் என்ற பட்சத்தில் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்படும்.

    காலநிலைக்கு தகுந்தாற்போல் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார்கள். காலை நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்யும் போது விடுமுறை அறிவிப்பும் காலையில் தான் வெளியிடப்படும்.

    விடுமுறை தொடர்பான அறிவிப்பை பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோரும் ஆர்வமுடன் எதிர்பார்ப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் மழை பெய்வதை பார்த்து இன்று பள்ளிக்கு விடுமுறையா? இல்லாயா? என்று கலெக்டரின் முகநூல் பக்கத்தில் மாணவ -மாணவிகள் நேரடியாக கேள்வி கேட்ட சம்பவம் கேரளாவில் அரங்கேறி இருக்கிறது.

    கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்த வரும் நிலையில், சில மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. பலத்த மழை பெய்யும் மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், நிலைமைக்கு தகுந்தவாறு விடுமுறை அறிவித்து வருகின்றனர்.

    இப்படிப்பட்ட சூழலில் தான், பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டர் பிரேம் கிருஷ்ணனின் முகநூல் பக்கத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் இன்றைக்கு பள்ளி விடுமுறையா? இல்லையா? என்று நேரடியாக கேள்வி கேட்டி ருக்கின்றனர். ஏராளமானோர் கலெக்டரிடம் அந்த கேள்வியை கேட்டனர்.

    மாணவ-மாணவிகள் அந்த கேள்விக்கு கலெக்டரும் பதில் தெரிவித்து பதிவு வெளியிட்டார். அவரது பதிவில் "விடுமுறை இல்லையே, பிள்ளைகள் சீக்கிரம் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு செல்லுங்கள்" என்று பதிலளித்திருக்கிறார். பள்ளி மாணவர்களின் கேள்விக்கு கலெக்டர் அளித்திருக்கும் பதில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    கலெக்டரின் இந்த பதிவை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் "லைக்" செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரியவகை காய்ச்சலான நைல் காய்ச்சலும் சிலரை பாதித்தது.
    • ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏராளமானோர் சிகிச்சைக்காக குவிந்த வண்ணம் உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. அதற்கு முன்னதாகவே அங்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவியது. அதிலும் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல் என பல வகையான காய்ச்சல்கள் அதிகளவில் பரவியது. மேலும் அரியவகை காய்ச்சலான நைல் காய்ச்சலும் சிலரை பாதித்தது.

    இந்நிலையில் பருவமழை பெய்ய தொடங்கியதால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவல் கேரளாவில் மேலும் அதிகரித்திருக்கிறது. அதிலும் கடந்த ஒரு மாதத்தில் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த ஜூன் மாதத்தில் எலிக்காயச்சலால் 253 பேரும், டெங்கு காய்ச்சலால் 1,912 பேரும், மஞ்சள் காமாளையால் 500 பேரும், எச் 1 என் 1 தொற்றால் 275பேரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எலி காய்ச்சலுக்கு 18 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 3 பேரும், மஞ்சள் காமாலைக்கு 5 பேரும், எச் 1 என் 1 தொற்றுக்கு 3 பேரும் இறந்துள்ளனர்.

    இந்த மாதத்தில் நேற்று வரை மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 684 பேர் பல்வேறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 81 ஆயிரத்து 127 பேருக்கு காய்ச்சல் பாதித்துள்ளது. அதிலும் நேற்று ஒரு நாளில் 10 ஆயிரத்து 914 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்களில் 186 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டி ருக்கிறது.

    டெங்கு காய்ச்சல், எலி காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல், மஞ்சள்காமாலை என பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருவதால் கேரளாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏராளமானோர் சிகிச்சைக்காக குவிந்த வண்ணம் உள்ளனர்.

    மழை தீவிரம் அடையும் போது நோய்கள் பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • ‘கூகுள் மேப்’ என்பது புவியியல் தகவல் தொழில்நுட்ப மென்பொருள்.
    • கார் சுமார் 150 மீட்டர் தூரம் வரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    'கூகுள் மேப்' என்பது புவியியல் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் ஆகும். ஒரு இடத்தில் இருந்து வெறோரு இடத்திற்கு வாகனங்களில் பயணிப்பவர்கள், சரியான இடத்திற்கு செல்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை.

    செல்லவேண்டிய இடத்திற்கு செல்லும் சாலை உள்ளிட்ட அனைத்தையும் 'கூகுள் மேப்' காண்பித்துவிடுவதால், தெரியாத இடத்திற்கு கூட எளிதாக சென்று விட முடிகிறது.

    இருந்தபோதிலும் சில நேரங்களில் 'கூகுள் மேப்' தவறான வழியை காண்பித்து விடுவதால் பலர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அதுபோன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நடந்திருக்கிறது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கண்ணங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் அப்துல் ரஷீத்(வயது35), தஷ்ரீப்(36).

    சம்பவத்தன்று இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் உப்பினங்கியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு காரில் சென்றனர். அவர்கள் 'கூகுள் மேப்' உதவியுடன், அது காட்டிய வழியை பின்பற்றி காரில் சென்றனர்.

    குட்டிகோல் பல்லாஞ்சி ஆற்றின் பாலம் வழியாக அவர்கள் சென்றனர். அப்போது அவர்களது கார் ஆற்றுள்குள் பாய்ந்தது.

    'கூகுள் மேப்' புதிதாக கட்டப்பட்டிருந்த பாலத்தை காட்டாமல், பழைய பாலத்தை காட்டியிருக்கிறது. அதனை பின்பற்றி அப்துல் ரஷீத், தஷ்ரீப் ஆகியோர் காரில் சென்றனர்.

    அவர்கள் சென்ற பழைய பாலத்தில் தடுப்புகள் இல்லாதது இருட்டில் தெரியவில்லை. இதனால் அவர்களது கார் ஆற்று வெள்ளத்தில் சிக்கியது. அவர்களுடைய கார் சுமார் 150 மீட்டர் தூரம் வரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    சிறிது தூரத்தில் ஆற்றுக்குள் இருந்த செடிகளில் அவர்களது கார் சிக்கி நின்றது. இதையடுத்து அப்துல் ரஷீத், தஷ்ரீப் ஆகி இருவரும் காரின் பக்கவாட்டு ஜன்னல் வழியாக வெளியே வந்தனர்.

    தங்களது கார் ஆற்று வெள்ளத்தில் சிக்கியது குறித்து தங்களின் உறவினர்களுக்கு போனில் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வெள்ளத்தில் சிக்கியிருந்த அப்துல் ரஷீத், தஷ்ரீப் ஆகிய இருவரையும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.

    மேலும் அவர்களது காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார், ஆற்றின் நடுவே இருந்த செடியில் சிக்கி நின்றதால் அப்துல் ரஷீத், தஷ்ரீப் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயங்க போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது.
    • கேரள பேருந்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்தால் கேரளாவுக்கு வரும் தமிழக பேருந்துகளை சிறைபிடிப்போம்.

    தமிழகத்தில் கடந்த 14-ந்தேதி முதல் உரிய தமிழக பதிவு எண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை இயங்க போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது.

    இந்நிலையில் கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கே.பி.கணேஷ் குமார் தமிழகத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகளுக்கான வரியை உயர்த்தியதற்காக தமிழகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    நேற்று கேரள சட்டசபையில் பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கான மானியங்கள் மற்றும் வாகனங்கள் வரி மீதான விவாதத்தை நிறைவு செய்த அமைச்சர், கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் பேருந்து கூட பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், கேரள பேருந்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்தால் கேரளாவுக்கு வரும் தமிழக பேருந்துகளை சிறைபிடிப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
    • கடலும் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழும்பி ஆர்ப்பரித்தன.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, வயநாடு, திருச்சூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

    கோழிக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழை நேற்றும் நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. கடலும் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழும்பி ஆர்ப்பரித்தன.

    கடல்நீரால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு கப்பாடு, கொயிலாண்டி கடல் எல்லை சாலைகள் தகர்ந்தன. இதனால் அந்த வழியாக போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. துவப்பரா பகுதியிலும் சாலை கடல்நீரில் அடித்துச் செல்லப்பட்டது. கோட்டயம் நகரின் மேற்கு பகுதியில் பாமரச்சால், திருவார்ப்பு, குமரகம் பகுதிகளில் பல இடங்களிலும் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

    இடுக்கி பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    • சுற்றுலா மையங்களுக்கு செல்ல தடை.
    • மலையோர பகுதிகளில் இரவுநேர பயணத்துக்கு தடை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

    இதனால் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக தினமும் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் பொதுமக்கள் தங்குவதற்காக நிவாரண முகாம்களும் தயாராக வைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தநிலையில் கேரள மாநிலம் முழுவதும் கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் மட்டு மின்றி பல இடங்களில் சாலைகளிலும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழை காரணமாக பல மாவட்டங்ளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

    கோழிக்கோடு மாவட் டத்தில் பல இடங்களல் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆலப்புழா மற்றும் கண்ணூரில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இடுக்கி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலையோர பகுதிகளில் இரவுநேர பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கோட்டயம் மாவட்டத்தில் சுற்றுலா மையங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மாநிலம் முழுவதும் கனமழை நீடித்து வரும் நிலையில் பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி, கேட்டயம், எர்ணா குளம்ஆகிய மாவட்டங்களிலும், கண்ணூர் மாவட்டத்தில் இரிட்டி தாலுகாவிலும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மலைபபகுதிகளில் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. கனமழை தொடரும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    மேலும் நடப்பு தென்மேற்கு பருவமழை சீசனில் கேரளாவில் அதிகபட்ச மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள் ளது. 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் சராசரியாக 69.6 மில்லிமீட்டரும், அதிகபட்சமாக கோட்ட யத்தில் 103 மில்லிமீட்டரும் மழை பெய்திருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    • கீழ் படுக்கையில் படுத்திருந்த அலிகான் மீது நடுப் படுக்கை உடைந்து விழுந்தது.
    • இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே அமைச்சரை கேரளா காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    எர்ணாகுளம் - நிஸாமுதீன் விரைவு ரெயிலின் ஸ்லீப்பர் பெட்டியில், படுக்கை விழுந்ததில் கழுத்தில் படுகாயமடைந்த கேரளாவைச் சேர்ந்த அலிகான் (62) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    கீழ் படுக்கையில் படுத்திருந்த அலிகான் மீது நடுப் படுக்கை உடைந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

    ஆனால் நடு படுக்கை உடைந்து விழவில்லை, மற்றொரு பயணி சரியாக சங்கிலி மாட்டாமல் சென்றதால், நடுப் படுக்கை வேகமாக மோதியதில் கீழ்ப் படுக்கையில் படுத்திருந்த அலிகான் காயமடைந்துள்ளார் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில்,

    ரெயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மோடி அரசின் கீழ் இப்படி தான் உள்ளது.

    • போதுமான ரெயில்கள் அல்லது இருக்கைகள் இல்லை.
    • நீங்கள் பாதுகாப்பாக ரெயிலில் ஏற முடியாது.
    • நீங்கள் ரெயிலில் ஏற முடிந்தால், இருக்கை இருக்காது.
    • உங்களுக்கு ரெயிலில் இருக்கை கிடைத்தாலும், ரெயில் விபத்து, 'இருக்கை விழுந்து விபத்து' போன்றவற்றில் நீங்கள் கொல்லப்படலாம்"

    என்று பதிவிட்டுள்ளது.

    • சுற்றுலாத் துறையை முடக்க முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • கடகம்பள்ளி சுரேந்திரன் சட்டசபையில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்திற்கு சுற்றுலாத்துறை மூலம் அதிக அளவு வருமானம் வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் தினமும் கேரளாவுக்கு வந்து சுற்றுலா தலங்களை பார்த்துச் செல்கின்றனர்.

    இந்தநிலையில் சுற்றுலாத் துறையை முடக்க முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை முன்னாள் சுற்றுலாத்துறை மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான கடகம்பள்ளி சுரேந்திரன் சட்டசபையில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    முதல்-மந்திரி பினராய் விஜயனின் அறிவுறுத்தலை கூட சுற்றுலாத்துறை அதிகாரிகள் புறக்கணிப்பதாக கூறிய அவர், காயல் புனரமைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும், அதனை தனியாரிடம் ஒப்படைத்து திட்டத்தை முடக்க முயற்சிகள் நடப்பதாகவும் தெரிவித்தார்.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காத சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ், துறை சார்ந்த அறிக்கையின் படி திட்டம் செயல்படுத்தப்படும் என்று மட்டும் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவலர் குடியிருப்பில் சிவில் போலீஸ் அதிகாரி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
    • கடந்த 5 மாதங்களாக பூந்துறை பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக போலீஸ் துறையில் பணியில் இருக்கும் பலர் தற்கொலை முடிவை எடுத்து வருகின்றனர். இந்த தகவல் போலீசாரிடமும் மாநில அரசிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் அவர்கள் தற்கொலை முடிவை எடுப்பதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.

    இந்த நிலையில் காவலர் குடியிருப்பில் சிவில் போலீஸ் அதிகாரி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    திருவனந்தபுரம் மாநகர போக்குவரத்து அமலாக்க (வடக்கு) பிரிவில் சிவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் மதனகுமார். பரஸ்சலா பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 5 மாதங்களாக பூந்துறை பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். அங்கு தான் மதனகுமார், தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர் 2 நாட்களுக்கு முன்பே தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.

    கேரளாவில் கடந்த 5 ஆண்டுகளில் 81 போலீசார் தற்கொலை செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன. காவல்துறையினரிடம் அதிகரித்து வரும் தற்கொலை போக்குகள் மாநில அரசுக்கும் காவல்துறைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பிரச்சனையில் போலீஸ் அதிகாரிகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

    • அனைத்து கட்சிகளுடன் ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • மத்திய அரசு கேரளம் என அரசியலமைப்பில் மாற்ற பினராயி விஜயன் வேண்டுகோள்.

    தமிழ்நாட்டின் அண்டை மாநிலம் "கேரளா" என்று அழைக்கப்பட்டு வருகிறது. இனிமேல் கேரளா மாநிலம் "கேரளம்" என்று அழைக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். அத்துடன் அதற்கான தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

    காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மற்றும் கருவூல பெஞ்ச்கள் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதால் ஒருமனதாக தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது தொழில்நுட்ப காரணத்திற்கான தடைப்பட்டது. அதனால் தற்போது மீண்டும் கொண்டு வரப்பட்டது.

    "மொழி அடிப்படையில் கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி மாநிலங்கள் உருவாகின. அதனடிப்படையில் கேரளா மாநிலம் பிறந்த தினம் நவம்பர் 1-ந்தேதியாகும். தேசிய சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மலையாளம் பேசும் சமூகங்களுக்கு ஒன்றுபட்ட கேரளாவை உருவாக்க வேண்டிய தேவை வலுவாக எழுந்தது. ஆனால் அரசியல் சட்டத்தின் முதல் அட்டவணையில் நமது மாநிலத்தின் பெயர் கேரளா என்று எழுதப்பட்டுள்ளது.

    இதனால் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 3-ன் கீழ் மாநிலத்தின் பெயரை கேரளம் எனத் திருத்த செய்ய மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் அனைத்து மொழிகளிலும் கேரளம் என மாற்றம் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    ×