search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mamallapuram"

    மாமல்லபுரத்தில் போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியை சேர்ந்த மோகனா. இவர் உறவினருடன் கோவளம் அருகே உள்ள மருத்துவமணைக்கு சென்று விட்டு ஷேர் ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டு இருந்தார். வரும் வழியில் கிருஷ்ணன்காரனை சாய்பாபா கோயிலுக்கு செல்ல பஸ் நிறுத்தத்தில் இருவரும் இறங்கினார்கள்.

    அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம வாலிபர் ஒருவர் தன்னை சாதாரண உடையில் ரோந்து சுற்றும் ரகசிய போலீஸ் என அவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு வழிப்பறி கொள்ளை அதிகமாக நடக்கும் பகுதி இது. அதனால் நகைகளை பத்திரமாக கைபையில் வைத்து பாதுகாப்பாக எடுத்து செல்லுங்கள் என எச்சரிப்பது போல் கூறிவிட்டு சென்றான்.

    இதை நம்பிய மோகனா தனது 11பவுன் நகை மற்றும் செல்போனை கை பையில் வைத்து விட்டு நின்றார். அப்போது அதே வாலிபர் மின்னல் வேகத்தில் பைக்கில் வந்து மோகனாவின் கைப்பையை பறித்து தப்பி சென்று விட்டான்.

    மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அமீர் அகமது சென்னை கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவரது நண்பர் மிர்சாஅலி ஓ.எம்.ஆரில் உள்ள கம்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக உள்ளார்.

    இவர்கள் 10-க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் சென்னை அரும்பாக்கத்தில் தனி வீடு எடுத்து தங்கி உள்ளனர். நேற்று இருவரும் மோட்டார் சைக்கிளில் பாண்டிச்சேரிக்கு சென்று நண்பர் ஒருவரை சந்தித்து விட்டு சென்னை திரும்பி கொண்டிருந்தனர்.

    மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி இருளர்கள் காலனி அருகே வந்தபோது சென்னையில் இருந்து பாண்டிச்சேரி சென்ற அரசு பஸ் நேருக்கு நேர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அமீர் அகமதும் மிர்சா அலியும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    மிர்சா அலி இன்னும் ஓரிரு மாதத்தில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

    மாமல்லபுரத்தில் காவலாளி மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 60). இவர் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதி வளாகத்தில் தங்கி காவலாளியாக வேலை பாத்து வந்தார்.

    இந்த நிலையில் தங்கியிருந்த அறையில் சம்பத் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சம்பத் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.

    சம்பத் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    காணும் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடற்கரை, பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் பொது மக்கள் குடும்பத்துடன் சென்று உற்சாகமாக பொழுதை கழித்தனர். #KannumPongal
    பொன்னேரி:

    காணும் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடற்கரை, பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் பொது மக்கள் குடும்பத்துடன் சென்று உற்சாகமாக பொழுதை கழித்தனர்.

    பழவேற்காட்டில் இன்று காலை முதல் பொது மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர். அவர்கள் பழவேற்காடு கடற்கரை டச்சுகல்லறை, லைட்அவுஸ் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்துடன் அமர்ந்து கொண்டு வந்த உணவை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். லைட்அவுஸ் குப்பம், செம்பாசிபள்ளி குப்பம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. படகு சவாரி, கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மாமல்லபுரத்தில் காணும் பொங்கலை கொண்டாட காலையிலே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. புரதான சின்னங்களான கடற்கரை கோவில், புலிக்குகை, அர்ச்சுனன் தபசு, பட்டர் பால், ஐந்துரதம் மற்றும் குடவரை கோவில் பகுதிகளை அவர்கள் கண்டு ரசித்தனர்.

    காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வடநெம்மேலி, முதலை பண்ணை, திருவிடந்தை, பட்டிபுலம், தேவநேரி கடற்கரை பகுதியிலும் மக்கள் கூட்டம் இருந்தது.  #KannumPongal
    மாமல்லபுரம் அருகே பஸ், கார் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். திருமண கோஷ்டியினர் 16 பேர் படுகாயம் அடைந்தனர். #Accident
    மாமல்லபுரம்:

    சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் (வயது23). இவர் சென்னை தரமணியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

    இவர் தனது பள்ளிக் கூட நண்பர்களான புதுக்கோட்டை மாவட்டம் அதிராம்பட்டனத்தைச் சேர்ந்த முகமது தகீம் அப்சுரா (22), பெரம்பூரைச் சேர்ந்த சாய்சதீஷ் (22) மற்றும் 2 பேருடன் நேற்று காலை காரில் சென்னையில் இருந்து புதுவைக்கு சென்றார்.

    அங்கு நண்பர் ஒருவரை பார்த்து விட்டு நேற்று மாலை மீண்டும் காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். காரை கார்த்திக் ஓட்டியதாக தெரிகிறது.

    நேற்று இரவு மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எண்ணூரில் இருந்து திருமண கோஷ்டியினர் 50 பேர் ஒரு பஸ்சில் கடலூர் துறைமுக பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    முன்னாள் சென்ற அரசு பஸ்சை திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் முந்த முயன்றது. அப்போது எதிரே வந்த கார் நிலைதடுமாறி ஓடி திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியது.

    இதில் காரில் இருந்த கார்த்திக், முகமது தகீம், சாய்சதீஷ் உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். 5 பேரின் உடல்களும் காருக்குள் சிக்கிக் கொண்டது.

    தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் மற்றும் திருக்கழுக்குன்றம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி காருக்குள் இருந்த 5 பேரின் உடல்களையும் எடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் திருமண கோஷ்டியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 16 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து தொடர்பாக திருமண கோஷ்டி சென்ற பஸ் டிரைவர் ராகவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #Accident



    மாமல்லபுரம் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த சாலவான் குப்பத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் அர்ச்சனா (வயது14). நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். ரவிச்சந்திரன் தினசரி மது அருந்தி விட்டு வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்தார். இதை தட்டிக்கேட்ட மனைவி அர்ச்சனாவை அவர் தகாத வார்த்தைகளால் திட்டினார். இதில் மன முடைந்த அர்ச்சனா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மாமல்லபுரம்-கல்பாக்கத்தில் புதுப்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    பையனூரை அடுத்த பண்டிதமேடு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்கும் திருப்போரூரை அடுத்த மானாம்பதியை சேர்ந்த கவுசல்யாவுக்கும் (22) கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி திருமணம் நடந்தது.

    நேற்றுமுன்தினம் கவுசல்யாவின் தந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் தந்தையை பார்த்த அழைத்து செல்லும்படி கவுசல்யா, கணவர் அசோக்குமாரிடம் கூறினார். ஆனால் அவர் மனைவியை அழைத்து செல்லவில்லை.அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த கவுசல்யா கணவர் வேலைக்கு சென்றதும் வீட்டில் உள்ள மின் விசிறியில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருமணம் ஆன 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மாமல்லபுரம் போலீசாரும் செங்கல்பட்டு ஆர்.டி.ஓவும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கல்பாக்கம் அடுத்த நெய்குப்பி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் குமுதவல்லி. இவர் பி.சி.ஏ. படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த குமுதவல்லி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மாமல்லபுரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கடலூர் மாவட்டம், திருவந்திபுரத்தை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது28) சென்னையில் உள்ள தனியார் தொலைபேசி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    இவர் ஆயுதபூஜை கொண்டாட மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு சென்றார். பண்டிகை விடுமுறை முடிந்து அவர் மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். மாமல்லபுரம் பைபாஸ் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்புச் சுவர் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த யோகேஸ்வரன் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி யோகேஸ்வரன் உயிரிழந்தார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுநீரை தடை செய்யப்பட்ட பகுதியான மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய் சாலையோரத்தில் ஊற்றப்படுகிறது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பகுதியில் ஓட்டல்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் ஏராளமாக உள்ளன. இங்கிருந்து கழிவு நீரை பெற்று வெளி இடத்துக்கு கொண்டு சென்று ஊற்ற தனியார் டேங்கர் லாரிகள் அதிக அளவு பணம் வசூலித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுநீரை தடை செய்யப்பட்ட பகுதியான மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய் சாலையோரத்தில் டிரைவர்கள் ஊற்றி வருகிறார்கள்.

    இதனால் சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள். இதை தட்டிக் கேட்கும் பொது மக்களை டேங்கர் லாரி டிரைவர்கள் மிரட்டும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

    கழிவுநீரால் அண்ணா நகர், சூளைமேடு பகுதியில் குடியிருக்கும் பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    எனவே சாலையோரத்தில் கழிவுநீரை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    மாமல்லபுரம் அருகே வடநெம்மேலி முதலை பண்ணையில் முதல் முறையாக சுற்றுலா பயணிகள் இரவு 7 மணி முதல் 8 மணி வரை கையில் டார்ச் லைட்டுடன் சென்று முதலைகளை பார்க்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அருகே உள்ள வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் முதலைப்பண்ணை உள்ளது.

    இங்கு 25 வகை முதலைகளும், ஆமைகள், பாம்புகள் உட்பட 35 வகை ஊர்வன விலங்குகளும் உள்ளன.

    இதனை காண சுற்றுலா பயணிகளுக்கு திங்கட்கிழமையை தவிர்த்து மற்ற நாட்களில் பகலில் மட்டும் அணுமதி வழங்கப்பட்டு வந்தது.

    பொதுவாக முதலைகள் இரவில் தான் சுதந்திரமாக உலவுவது வழக்கம். அப்போது முதலைகளின் கண்கள் சிகப்பாக ஒளி வீசுவதை பார்க்கும் போது, அதன் உறுமல் சத்தமும் திரில்-பயம் கலந்த புது அனுபவமாக இருக்கும்.


    முதலைகளை அதன் வசிப்பிடத்தில் இரவில் சென்று பார்க்கும் அனுமதி வெளிநாடுகளில் மட்டும் உண்டு. இந்தியாவில் கிடையாது.

    இந்த நிலையில் முதல் முறையாக வடநெம்மேலி முதலை பண்ணையில் சுற்றுலா பயணிகள் இரவு 7 மணி முதல் 8 மணி வரை கையில் டார்ச் லைட்டுடன் சென்று முதலைகளை பார்க்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    குழந்தைகளுக்கு ரூ.100-ம், பெரியவர்களுக்கு ரூ.200-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. #Tamilnews
    மாமல்லபுரம் அருகே கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    நெய்வேலி நகரியத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் சத்தியரேகா (வயது 17). மாமல்லபுரத்தில் பையனூரில் உள்ள தனியார் தொழில் நுட்ப கல்லூரியில் பயோ மெடிக்கல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    அவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று விட்டு சத்தியரேகா விடுதிக்கு வந்தார். அப்போது அவர் சோகமாக காணப்பட்டார். இது பற்றி கேட்ட போது எதுவும் கூறவில்லை.

    இந்த நிலையில் விடுதி வளாகத்தில் உள்ள கூரையில் சசிரேகா தனது துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து மற்ற மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சத்தியரேகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சத்தியரேகா தற்கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரத்தில் மாடியில் இருந்து விழுந்த 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம், திருக்குளம் தெருவில் வசித்து வருபவர் முகமது யாமின். இவரது மனைவி சீமா பேகம்.

    இவர்களுக்கு 5 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இவர்களில் 6-வது மகள் அலிசா (வயது 6). இவர்களது சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம்.

    கடந்த 15-ந்தேதி அலிசா, வீட்டின் அருகே உள்ள மாடியில் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் தவறி கீழே விழுந்தாள்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அலிசாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி அலிசா பரிதாபமாக இறந்தாள். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×