என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "marathon"

    • விபத்தை தடுத்திட, பொது போக்குவரத்தை பலப்படுத்தி பொதுத்துறையை பாதுகாத்திட வலியுறுத்தி மாரத்தான்.
    • 2 பிரிவுகளிலும் தலா 7 பேருக்கு ஆறுதல் பரிசு.

    தஞ்சாவூர்:

    சுற்றுசூழலை பாதுகாத்திட வேண்டும். விபத்தை தடுத்திட, பொது போக்குவரத்தை பலப்படுத்தி பொதுத்துறையை பாதுகாத்திட வலியுறுத்தி தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம்- சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    மண்டல தலைவர் காரல்மார்க்ஸ், பொது செயலாளர் மணிமாறன் ஆகியோர் தலைமை தாங்கினர். போட்டியை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் ஆண்கள், பெண்களுக்கு தனி தனி பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டு மாரத்தான் ஓடினர்.

    போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே ரூ.8000, ரூ.6000, ரூ.5000 மற்றும் பெண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ரூ.6000, ரூ.5000, ரூ.3000 மற்றும் 2 பிரிவுகளிலும் தலா 7 பேருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

    பரிசுகளை டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், சி.ஐ.டி.யூ தமிழ்நாடு மாநில துணை பொது செயலாளர் திருச்செல்வன், மாநில செயலாளர் ஜெயபால், அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் பொது மேலாளர் ஜெபராஜ் நவமணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டேனியல், சின்னை.பாண்டியன் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.

    போட்டியை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் கண்ணன், எஸ்.இ.டி.சி- சி.ஐ.டி.யூ மாநில துணை தலைவர் வெங்கடேசன், சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர்கள் அன்பு, செங்குட்டுவன், எஸ்.எப்.ஐ. மாவட்ட செயலாளர் சந்திரசேகர், ஜீவா, திருநாவுக்கரசு ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மண்டல பொருளாளர் ராமசாமி நன்றி கூறினார்.

    • ராணுவ மையம் சாா்பில் ஆண்டுதோறும் மகளிா் தினம் கொண்டாடப்படுவது வழக்கம்.
    • போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றிபெற்றவா்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    ஊட்டி,

    மெட்ராஸ் ராணுவ மையம் சாா்பில் ஆண்டுதோறும் மகளிா் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மகளிா் தின கொண்டாட்டம் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரில் நடந்தது. இதில் பெண்கள் சக்தி மற்றும் பாலின சமத்துவம் என்ற பெயரில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    போட்டியை மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரின் கமாண்டன்ட் பிரிகேடியா் சுனில்குமாா் யாதவ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றிபெற்றவா்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    • கந்தர்வகோட்டையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது
    • போட்டியை மாவட்ட கழகச் செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்து போட்டியில் கலந்து கொண்டார்.

    கந்தர்வகோட்டை

    கந்தர்வகோட்டையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் மாவட்ட அயலக அணி சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை மாவட்ட கழகச் செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்து போட்டியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தமிழ் அய்யா, நகரச் செயலாளர் ராஜா, இளைஞர் அணி அமைப்பாளர் பாலகுமார், சுரேஷ் பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

    • போட்டியானது இலஞ்சி ராமசாமி பிள்ளை பள்ளியிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடத்தப்பட்டது.
    • பங்கு பெற்ற அனைவருக்கும் குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரித்தல், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து நடத்தும் மகளிர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    போட்டியானது இலஞ்சி ராமசாமி பிள்ளை அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி யிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடத்தப்பட்டது. போட்டியில் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பாக்கியவதி முதல் இடத்தையும், மாணிக்க ஸ்ரீ 2-ம் இடத்தையும், ஆக்ஸ்போர்டு பள்ளியை சேர்ந்த பொனிஷா, இலஞ்சி ராமசுவாமி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 3-ம் இடத்தையும் தட்டிச் சென்றனர்.

    பரிசு

    வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1000, 2-ம் பரிசு ரூ.750,

    3-ம் பரிசு ரூ.500 மற்றும் சான்றிதழ்கள் மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் குளிர்பானம், குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. விழாவில் தென்காசி மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, தென்காசி மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, தென்காசி மாவட்ட சகி ஒருங்கிணை ப்பாளர் மையத்தின் மைய நிர்வாகி ஜெயராணி, சமூக விரிவாக்க அலுவலர் ஆரோக்கிய மேரி, ராமசுவாமி பிள்ளை அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி இலஞ்சி தலைமையாசிரியர் ஆறுமுகம், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வாகன விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை தீயணைப்பு
    • கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு துறை வீரர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும் தீயணைப்பு துறை சார்பில் தீ கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு துறை வீரர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தீயணைப்புத் துறை சார்பில் தீ தொண்டு வார விழாவை முன்னிட்டு தீ விபத்து ஏற்படாத வகையிலும், தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் வாகன விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை தீயணைப்பு துறை சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டி கடலூர் டவுன் ஹாலில் இருந்து புறப்பட்டு தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை வரை நடைபெற்றன.

    இப்போட்டியில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு துறை வீரர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும் தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்து நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற தீயணைப்பு வீரர்களுக்கு மாவட்ட தியணைப்பு அதிகாரி குமார் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். அப்போது தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் ஆறுமுகம், நிலைய அலுவலர்கள் விஜயகுமார், கொளஞ்சிநாதன், கொளஞ்சிநாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • இந்தியாவின் ஒடியா வம்சாவளியை சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார்.
    • சேலை அணிந்து கொண்டு அவர் மாரத்தான் ஓடியது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

    இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் இந்தியாவின் ஒடியா வம்சாவளியை சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். இவர் கைத்தறியிலான சம்புல்வரி வகை சேலை அணிந்து இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய மான்செஸ்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு சுமார் 42 கிலோ மீட்டர் தூரம் ஓடி உள்ளார். சேலை அணிந்து கொண்டு அவர் மாரத்தான் ஓடியது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தனது மாரத்தான் அனுபவம் குறித்து மதுஸ்மிதா ஜெனா கூறுகையில், சேலை அணிந்து மாரத்தான் ஓடிய ஒரே நபர் நான் தான். இவ்வளவு நீண்ட தூரம் ஓடுவது ஒரு தொடர் வேலை.. ஆனால் சேலையில் இவ்வாறு செய்வது இன்னும் கடினமானது. முழு தூரத்தையும் 4.50 மணி நேரத்தில் முடிக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    எனது பாட்டி, தாயார் எப்போதும் சேலை அணிந்திருந்ததால் அவர்களை பார்த்து இந்த ஆடையை தேர்ந்தெடுத்தேன். பெண்கள் சேலை அணிந்து கொண்டு ஓட முடியாது என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் முடிவு தவறானது என நிரூபித்துள்ளேன் என்றார். 

    • விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
    • போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், பெண்களின் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது. இதில் 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 8 கிலோ மீட்டர் தூரமும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 8 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டிக்கு தொண்டி செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து பழையக் கோட்டை வரையும், 3 கிலோ மீட்டர் போட்டிக்கு காடாங்குடி வரையும், தொண்டி-மதுரை சாலையில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஓடினர்.

    தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவகர் அலிகான், வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி, சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு, மேற்கு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம், நகர காங்கிரஸ் தலைவரும், கவுன்சிலருமான காத்தராஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சிறுவர்களுக்கு 2 கிலோமீட்டர் தூர மாரத்தான் ஓட்டம் நடந்தது. முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுத்தொகை, கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • பள்ளி மாணவ -மாணவிகளு க்கு நுழைவு கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும்.
    • ஆறுதல் பரிசு தலா 25 நபர்களுக்கு வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தணுவர்சன் அறக்கட்டளை சார்பில் கல்வியே நாட்டின் முதல் அரண், போதை பொருள் தடுப்பு மற்றும் சிறுவர்- சிறுமியர் பாலியல் தடுப்பு விழிப்புணர்வுக்காக வருகிற ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற உள்ளது.ஆண் மற்றும் பெண் ( ஓபன் ) பிரிவில் 20 கி.மீ. தூரத்திற்கு மாரத்தான் ஓட்டமும், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தனி தனியாக 5 கி.மீ. தூரத்திற்கு மாரத்தான் ஓட்டமும் நடைபெற உள்ளன.

    இதில் ஆண் மற்றும் பெண் (ஓபன்) பிரிவிற்கு நுழைவு கட்டணமாக ரூ.250- செலுத்த வேண்டும். முதல் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்படும்.

    மேலும் முதல் ஐந்து இடங்களை பிடித்தவர்கள் மற்றும் ஆறுதல் பரிசாக 50 பேர்களுக்கும் பரிசு வழங்கப்படும்.

    இதே போல் பள்ளி மாணவ -மாணவிகளு க்கு நுழைவு கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். முதல் பரிசு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்க ப்படும்.

    இந்த பிரிவிலும் ஐந்து இடங்களை பிடித்தவர்கள் மற்றும் ஆறுதல் பரிசு தலா 25 நபர்களுக்கு வழங்கப்படும்.

    இந்த மாரத்தானில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது.

    இந்தியாவில் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும்.

    நிர்வாகம் எடுக்க முடிவே இறுதியானது.

    போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 7598093559 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை தணுவர்சன் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் உலகநாதன் தெரிவித்துள்ளார்.

    • இளைஞர்கள் மற்றும் 60 வயதிற் குட்பட்ட பொதுமக்கள் பங்குபெற்றனர்.
    • கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    போதை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ந் தேதி கடைபிடிக்கப்படு கிறது. இதனை முன்னிட்டு திருக்கோவிலூரில் மாரத் தான் போட்டி கள்ளக் குறிச்சி மாவட்ட போலீஸ் துறையின் சார்பில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் 13 வயது முதல் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகள், இளை ஞர்கள் மற்றும் 60 வயதிற் குட்பட்ட பொதுமக்கள் பங்குபெற்றனர். இந்த மாரத்தான் போட்டி யில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். திருக்கோ விலூர் அரசினர் அங்கவை சங்கவை பெண்கள் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருந்து காலை 7 மணி அளவில் மாரத்தான் போட்டி தொடங்கியது.

    போட்டியை கள்ளக் குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர்கள் 5 முனை சந்திப்பு, கிழக்கு தெரு, தெற்கு வீதி, ஏரிக்கரை வழி யாக ஆசனூர் ரோட்டில் உள்ள திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தை சென்றடைந்தது. இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் இரு வரும் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் முதல் 3 இடம் பிடித்த ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி ஆகிய இரு பிரிவைச் சேர்ந்த வெற்றி யாளர்களுக்கு முதல் பரி சாக ரூ.5000, 2-வது பரி சாக ரூ.3000, 3-ம் பரிசாக ரூ.2000 வழங்கப்பட்டது. அத்துடன் போட்டியில் கலந்து கொண்ட அனை வருக்கும் சான்றி தழ்களை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மோகன்ராஜ், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் குமார் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சி களுக்கான ஏற்பாடுகளை திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

    • முதல் 3 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
    • விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

    முத்துப்பேட்டை:

    சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை யொட்டி முத்துப்பேட்டையில் இன்று காலை காவல்துறை மற்றும் த.மு.மு.க. ஆகியவை இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    மினி மாரத்தானை முத்துப்பேட்டை துணைபோலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கோவிலூர் பைபாஸ் தனியார் வனத்துறை அலுவலகத்திலிருந்து தொடங்கிய மாரத்தான் மன்னார்குடி சாலை, ஆண்கள் பள்ளி, பழைய பஸ் நிலையம், திருத்துறைப்பூண்டி சாலை, ஆசாத்நகர் வழியாக புதிய பஸ் நிலையத்தை வந்தடைந்தது.

    இதில் மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

    முடிவில் போட்டியில் வென்ற முதல் 3 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

    இதில் அல்மஹா அறக்கட்டளை நிறுவன ஹைதர் அலி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், முத்துக்குமார், த.மு.மு.க. மாநில நிர்வாகி வக்கீல் தீன் முகம்மது, நகர தலைவர் அலிம், மன்சூர், காமிம், நிஜாம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • காமராஜர் சிலையில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியில் நிறைவு பெற்றது.
    • 10 இடங்களை பிடித்த வீரர்களுக்கு ரொக்கப்பரிசு,கேடயம் வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் எஸ்.எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சாம்பியன் மாரத்தான் போட்டி நடைபெற்றது. கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    காமராஜர் சிலையில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டி மாதாங்கோவில் தெரு, எட்டையாபுரம் சாலை, புதூர்ரோடு, ரெயில் நிலையம், வழியாக எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியில் நிறைவு பெற்றது.

    இதில் முதல் 10 இடங்களை பிடித்த வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம், 2-வது பரிசு 2 ஆயிரம், 3-வது பரிசாக ரூ. 1,000 மற்றும் 7 பேர்களுக்கு ஊக்க பரிசாக ரூ. 500 மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி செயலர் எஸ். கண்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் காமராஜ் முன்னிலை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டினார். போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி உதவி பேராசிரியர் சந்திரன், கல்லூரி அனைத்துதுறை உதவி பேராசியர்கள் செய்திருந்தனர்.

    • போக்குவரத்து விதிகள் கடைபிடிப்பது பற்றிய விழிப்புணர்வுக்காக மினி மாரத்தான் போட்டி நடக்கிறது.
    • உடுமலை பஸ் நிலையம் அருகே உள்ள உடுமலை லேப் அண்ட் எக்ஸ் ரேஸ்சில் இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உடுமலை முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் லெப்டினன்ட் சுபாஷ் ஐஏஎஸ்., அகாடமி மற்றும் உடுமலை லேப் அண்ட் எக்ஸ்ரேஸ் பிரியா நர்சிங் கல்லூரி சார்பில் போதைப்பொருள் நெகிழி ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் கடைபிடிப்பது பற்றிய விழிப்புணர்வுக்கான மினி மாரத்தான் போட்டி வருகிற ஆகஸ்ட் 13 .8 .23 (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறுகிறது.

    உடுமலை இராகல்பாவிபிரிவு முதல் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள பதிவு கட்டணம் ரூ. 50 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பதிவு கட்டணத் தொகை புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு மருத்துவ செலவுக்காக அளிக்கப்படுகிறது.

    உடுமலை பஸ் நிலையம் அருகே உள்ள உடுமலை லேப் அண்ட் எக்ஸ் ரேஸ்சில் இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது.9865275123 , 830056811 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். தவிர பள்ளி கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்களிடம் பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு 8.8.23 (செவ்வாய்க்கிழமை )மாலை 5.30 மணிக்கு நிறைவடைகிறது. இப் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் வெற்றி பெறுபவருக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது

    போட்டிக்கான ஏற்பாடுகளை முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க தலைவர் ராமலிங்கம், செயலாளர் சக்தி, பொருளாளர் சிவகுமார் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க நிர்வாகிகள் நாயப் சுபேதார் நடராஜ். ஏ.ஒய்.கான், லெப்டினன்ட் சுபாஷ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் கே .ஆர் .செல்வராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×