என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money"

    • சேலம் சூரமங்கலம் சின்னமோட்டூர் பகுதியில் கூலி தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை.
    • உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த ரூ.25,000, 2 1/2 பவுன் தங்க நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் சின்னமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி ரத்தினாம்பாள் (வயது 47). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் மாலை வீடு திரும்பியபோது, முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த ரூ.25,000, 2 1/2 பவுன் தங்க நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ரத்தினாம்பாள் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் பைப்பூர் பகுதியில் பெண்ணிடம் பணம் கேட்டு தகராறு செய்த 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • பாலாஜி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்தி, பிரதிப், லோகேஷ் ஆகியோருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் பைப்பூர் பகுதியை சேர்ந்த வர் மாது என்கிற மகேஸ்வரி (வயது 40). இவருடைய மகன் பாலாஜி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்தி, பிரதிப், லோகேஷ் ஆகியோருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நேற்று முன்தினம் பாலாஜி வீட்டிற்கு சென்ற கார்த்தி மற்றும் நண்பர்கள் மகேஸ்வரியிடம் உன் மகன் எங்கு உள்ளார் என்று கேட்டு தகராறு செய்து மகேஸ்வரி,அவருடைய உறவினர்கள் சின்னத்தாய், மெய்யம்மாள் ஆகியோரை தாக்கி காயப்படுத்தியதாக தெரிகிறது.

    இதுபற்றி மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கார்த்தி,பிரதிப், லோகேஷ்,பர மானந்தம், உதயகுமார்,மணி, வெற்றி,விஜயா, பூங்கோடி ஆகியோர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மதுரையில் கத்தி முனையில் பணம் பறித்த 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
    • கீரைத்துறை, ஜெய்ஹிந்துபுரம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை தெற்கு வாசல் போலீஸ் சரகத்தில் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை போலீசார் தினமும் ரோந்து சென்று வருகின்றனர். கண்மாய்கரை, ராஜமான் நகரில் ரோந்து சென்றனர். கங்கை அம்மன் கோவில் அருகே பதுங்கி இருந்த வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார்.

    அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை காவல் நிலை யத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் காமராஜர்புரம் இந்திரா நகரை சேர்ந்த முத்துக்குமார் மகன் எலி தினேஷ் (வயது 22) என்பது தெரியவந்தது.

    இவர் மீது காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதுரை மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமியின் வலதுகரமாக திகழ்ந்தவர். எனக்கு நிறைய எதிரிகள் உண்டு. தற்காப்புக்காக அரிவாள் வைத்திருந்தேன்" என்று தெரிவித்தார். ஆயுதங்களுடன் திரிந்த எலி தினேஷை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.

    முத்துப்பட்டி, அழகப்பன் நகரை சேர்ந்தவர் செல்வம் (45), ஆட்டோ டிரைவர். நேற்று இவர் சோலையழகுபுரம் தெருவில் நடந்து சென்றார். அங்கு வந்த வாலிபர் மது குடிக்க பணம் கேட்டார். செல்வம் தர மறுத்தார். ஆத்திரம் அடைந்த வாலிபர், 'கத்தியால் குத்தி விடுவேன்' என்று மிரட்டி, செல்வத்தின் சட்டைபையில் இருந்த ரூ.385-ஐ பறித்து தப்பினார்.

    இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோலையழகுபுரம், இந்திரா நகரை சேர்ந்த ஆட்டோ பிரவீன் (32) என்பவரை கைது செய்தனர். அவர் மீது அவனியாபுரம், ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

    • ரெயிலில் மறந்து வைத்துச் சென்ற ரூ. 4.65 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை ரெயில்வே போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
    • போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கைக்கு ரெயில் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் அலங்கானூர் ஊராட்சி பழங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு என்ற ராமச்சந்திரன் (வயது 70).இவர் பெரம்பலூரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர் மனைவி முத்துலட்சுமியுடன் (60) நேற்று இரவு சென்னையில் இருந்து ராமேசுவரம் செல்லும் ரெயிலில் பயணம் செய்தார். இன்று காலை 6 மணிக்கு ரெயில் பரமக்குடி வந்ததும் மனைவியுடன் இறங்கி விட்டார். ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் கைப்பை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பரமக்குடி ரெயில் நிலைய அதிகாரி யிடம் தகவல் தெரிவித்தார். அவர் ராமநாதபுரம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். ராமநாதபுரம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை உதவி சார்பு ஆய்வாளர் மோகன்ராஜ், போலீஸ்காரர் ஜலாலுதீன் ஆகியோர் குறிப்பிட்ட ரெயில் பெட்டியில் ஏறி பார்த்தபோது கைப்பை அங்கு இருந்தது. அதை திறந்து பார்த்த போது ரூ. 4.65 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் நகை, பணம், செல்போன் ஆகியவையும் பத்திரமாக இருந்தன.

    இது குறித்து ராமநாதபுரம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பரமக்குடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ராமு மனைவியுடன் ராமநாத புரம் வந்தார். ெரயில்வே பாதுகாப்பு படை உதவி சார்பு ஆய்வாளர் மோகன் ராஜ், போலீஸ்காரர் ஜலாலு தீன் ஆகியோரிடம் நன்றி தெரிவித்து கைப்பையை பெற்று சென்றனர்.

    போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கைக்கு ரெயில் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    • போலீசார் கடலங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அவர்கள் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    தரங்கம்பாடி:

    மணல்மேடு அருகே கடலங்குடி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன் மற்றும் போலீசார் கடலங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கடலங்குடி அரண்மனை தெரு பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாட்டிக்கொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் அவர்கள் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பந்தநல்லூர் மேல செல்லப்பன் பேட்டையை சேர்ந்த கதிரேசன் (வயது37), திருக்கோடிக்காவலைசேர்ந்த தமிழரசன் (40), பந்தநல்லூர் நெய்குப்பையை சேர்ந்த முத்துக்குமார் (38), திருவிடைமருதூர் முல்லங்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முனியப்பன் மகன் கார்த்திகேயன் (34), திருவிடைமருதூரை சேர்ந்த முகமது ரபீக் (47), திருச்சியை சேர்ந்த முஸ்தபா (60), அத்திகடையை சேர்ந்த அனிபா (40), மன்னார்குடி அரிசி கடை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (48), காரைக்காலை சேர்ந்த சதீஷ்குமார் (50), ஆகிய 9 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    • முருகன் முள்ளக்காடு மெயின்ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார்.
    • திருட்டு குறித்து முத்தையாபுரம் போலீசில் முருகன் புகார் செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜூவ்நகரை சேர்ந்தவர் முருகன் (வயது52). இவர் முள்ளக்காடு மெயின்ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு தூங்க சென்றார். இன்று அதிகாலை கடையை திறக்க முருகன் சென்றார்.

    அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் சில பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக அப்பகுதியினர் கூறும்போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு இடத்தில் 40 கோழிகளும், மற்றொரு இடத்தில் காரில் வந்து ஆடுகளையும் மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். எனவே இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இதில் 15 லட்சத்து 60 ஆயிரத்து 503 பேர் பொங்கல் பரிசு பணம் வாங்கினர்.
    • தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை வாங்கவில்லை.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந் தது.ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவடடங்களில் 15 லட்சத்து 88 ஆயிரத்து 937 குடும்ப அட்டைக்கு ரூ.1000 பணம் வழங்க அந்தந்த ரேசன் கார்டுகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதில் 15லட்சத்து 60 ஆயிரத்து 503 பேர் பொங்கல் பரிசு பணம் வாங்கினர்.

    மிதம் 28 ஆயிரத்து 434 பேர் ரூ.1000 வாங்க வில்லை.

    இதைப்போல் தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை வாங்காததால் அரசுக்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பி வந்துவிட்டது.

    இந்த தொகையை அரசு கருவூலத் தில் அதிகாரிகள் செலுத்தி விட்டனர்.

    • மதுரை அருகே கட்டிட காண்டிராக்டரிடம் பணம், செல்போன்கள் திருடப்பட்டன.
    • இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் சக்தி சிவராஜ் (வயது 36). கட்டிட கான்ட்ராக்டரான இவர் மதுரை துவரிமான் மேலக்கால் மெயின் ரோட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் தங்கி, நாகமலை புதுக்கோட்டையில் திருமண மண்டபம் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்தி தங்க வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் சக்தி சிவராஜ் சம்பவத்தன்று இரவு அறையில் படுத்து தூங்கினார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, அவர் வைத்திருந்த 14 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 2 செல்போன்களை காணவில்லை. இது தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் அறைக்குள் புகுந்து பணம் மற்றும் செல்போன்களை திருடியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி மேற்கண்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • அரிசிபாளையத்தில் நேற்று காலை இவரும், இவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றனர். இந்நிலையில் மாலை வீட்டுக்கு வந்த பழனி, வீட்டின் கதவுகள் திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.13 ஆயிரம் ரொக்கம், 1 1/2 கிராம் தங்க நகைகள், பூஜை அறையில் உண்டியல்களில் இருந்த சுமார் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் அரிசிபாளையம் சையத் கபூர் தெருவை சேர்ந்தவர் பரணி என்கிற பழனி (வயது 45). இவர் தம்மண்ணன் ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை இவரும், இவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றனர்.

    இந்நிலையில் மாலை வீட்டுக்கு வந்த பழனி, வீட்டின் கதவுகள் திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிகள் அனைத்தும் கலைந்து கிடந்தது.

    மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.13 ஆயிரம் ரொக்கம், 1 1/2 கிராம் தங்க நகைகள், பூஜை அறையில் உண்டியல்களில் இருந்த சுமார் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பழனி உடனடியாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதே போல் அரிசிபாளையம் நாராயணசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளி தொழிலாளி சக்திவேல் (45) என்பார் வீட்டிலும் நேற்று மதியம் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த ரூ.6 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.

    இது குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். 

    • வாடிப்பட்டி அருகே தொழிலதிபரை மிரட்டி நகை-பணம் பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    • கத்தியை காட்டி மிரட்டி ஒரு பவுன் மோதிரம், ரூ.900 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மகாராணி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 53). இவர் திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறையில் தென்னை நார் கம்பெனி நடத்தி வருகிறார்.

    நேற்று மதியம் ராமநாதன் காரில் தனது கம்பெனிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் காரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் ராமநாதனிடம் கத்தியை காட்டி மிரட்டி ஒரு பவுன் மோதிரம், ரூ.900 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று போலீசார் வாகன சோதனையின்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது அவர்கள் ராமநாதனிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர்கள் பொன்பெரு மாள் கோவில்தெருவை சேர்ந்த பரட்டை ஆறுமுகம் (35), ராமநாயக்கன்பட்டி செல்லையா (28), பேட்டை புதூர் கோபிநாத்ராஜா (35) என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • சேலம் லைன்மேடு புது திருச்சி கிளை ரோடு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்து சென்றனர்.
    • உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 1/2 பவுன் தங்க நகைகள், ரூ.5000 ரொக்கம் மற்றும் வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் லைன்மேடு புது திருச்சி கிளை ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி அந்தோணியம்மாள் (வயது 45). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்று காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.

    நேற்று மாலை 6 மணி அளவில், வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 1/2 பவுன் தங்க நகைகள், ரூ.5000 ரொக்கம் மற்றும் வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அந்தோணியம்மாள் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சில நாட்களில் அனுப்பி விடுவோம் என தட்டி கழித்து வந்தனர்.
    • நாங்கள் கொடுத்த பணத்தை மீட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    மதுக்கூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோயம்புத்தூர், திருவாரூர், காங்கேயம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேர் துனிசியா நாட்டில் வேலைவாய்ப்பு உள்ளது.

    அங்கு சென்றால் நன்றாக சம்பாதிக்கலாம் என கூறி தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கினர்.

    அனைவரிடம் வசூலித்த பணம் பல லட்சங்களை தாண்டும்.

    ஆனால் பல மாதங்களாகியும் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை.

    அவர்களிடம் கேட்டால் சரியான பதில் இல்லை.

    சில நாட்களில் அனுப்பி விடுவோம் என தட்டி கழித்து வந்தனர்.

    இதனால் பணத்தையும் கொடுத்து வேலைக்கும் செல்லாமல் கடும் அவதி அடைந்து வருகிறோம்.

    எனவே அந்த 3 பேர் கூறிய வெளிநாட்டில் வேலை உள்ளது உண்மைதானா என்று விசாரிக்க வேண்டும்.

    மேலும் அவர்களிடம் இருந்து நாங்கள் கொடுத்த பணத்தை மீட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×