என் மலர்
நீங்கள் தேடியது "Park"
- குற்றாலம் பேரூராட்சி பூங்கா பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
நெல்லை:
குற்றாலம் பேரூராட்சி பூங்கா பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது அருகில் விஷ பாட்டிலும் கிடந்தது.
இதையடுத்து அவரது உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகிறது
- மாடுகள் பிடிக்கும் பணி தொடரும் என மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகிறது.
மாடுகள் ஏலம்
எனவே பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் டவுன், மேலப்பாளையம், பாளை போன்ற நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடை யூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து ஏலம் விடும் நடவடிக்கையில் இறங்கி யுள்ளனர்.
இதற்கு பா.ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் மீண்டும் அதே நிலை தொடர்ந்தால் மாடுகள் ஏலம் விடப்படும்.மாடுகள் பிடிக்கும் பணி தொடரும் என மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பூங்காவில் அடைப்பு
அதன்படி இன்று நெல்லை வி.எம். சத்திரம் பகுதியில் இரவு நேரங்களில் சாலைகளில் திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து பரணி நகர் மாநகராட்சி பூங்காவிற்குள் அடைத்து வைத்தனர். இதற்கு பரணி நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரூ.1.50 லட்சம் வரை செலவு செய்து மூலிகைச் செடி, கொடிகள் வளர்த்து வந்ததாகவும், மாடுகளை அடைத்ததால் செடி, கொடிகள் சேதம் அடைவதாகவும் அவர்கள் புகார் கூறினர். உடனடியாக பூங்காவிற்குள் கட்டப்பட்டு இருந்த மாடுகளை வெளி யேற்ற வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரூ.12 லட்சம் மதிப்பில் உணர்வு ஒருங்கிணைப்பு சிகிச்சை பூங்கா திறக்கப்பட்டது
- திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
திருச்சி:
திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உணர்வு ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.
ேமலும், 32 படுக்கைகளுடன் கூடிய இ.சி.ஆர்.பி. தீவிர சிகிச்சை பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோல் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சலவை எந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.
அறுவை சிகிச்சைகளை டிஜிட்டல் முறையில் சரி பார்க்கும் தொழில்நுட்பத்தை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சிகளில் திருநாவுக்கரசர் எம்.பி. கலெக்டர் மா.பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,
எம்.எல்.ஏ.க்கள் காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், கதிரவன், சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், அப்துல் சமது, மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன், சேர்மன் துரைராஜ், கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள உணர்வு ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்காவை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன். ஆகியோர் திறந்துவைத்த காட்சி. அருகில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பலர் உள்ளனர்.
- எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- அகழாய்வு பணிகள் நடைபெற்ற பகுதியினை பார்வையிட்டார்
பெரம்பலூர்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் 12.30 மணியளவில் சிப்காட் தொழில் பூங்காவை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அதில் அமையவுள்ள பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதையடுத்து தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தோடு பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்கா மற்றும் தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாற்றம் செய்தார்.
அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5.15 மணிக்கு அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் மாளிகைமேட்டுக்கு சென்று, அங்கு அகழாய்வு பணிகள் நடைபெற்ற பகுதியினை நேரில் பார்வையிடுகிறார்.
நலத்திட்ட உதவிகள்
இதில், மாளிகைமேடு அகழாய்வில் கண்டறியப்பட்ட பழமையான பொருட்கள் மற்றும் அகழாய்வு மேற்கொண்ட பகுதிகளை பார்வையிடுகிறார். பின்னர் இரவில் அரியலூர் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அங்கு 2 மாவட்டங்களுக்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
அமைச்சர் வருகையையொட்டி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
"
- முழுக்க முழுக்க உள்ளூர் கலைஞர்களை கொண்டு சிமெண்டு கலவை, பிளாஸ்டா பாரீஸ் மூலம் புலி, மான்,பாம்பு, மயில், பறவை சிற்பங்கள் உருவாக்கப்படுகிறது.
- பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை பார்த்தும், வாங்கியும் செல்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவை முருங்கம்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் கைவினை கிராமத்தில் உள்ளூர் கலைஞர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் அரங்குகள் அமைத்து கைவினை பொருட்கள் உருவாக்கப்படுகிறது.
இங்கு சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் தனி அரங்கு உள்ளது. இங்கு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகளின் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அழிந்து வரும் காடுகள், வனவிலங்குகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும், மீட்கும் முயற்சியாக சிற்பங்கள் உருவாக்கப்பட்டு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க உள்ளூர் கலைஞர்களை கொண்டு சிமெண்டு கலவை, பிளாஸ்டா பாரீஸ் மூலம் புலி, மான், பாம்பு, மயில், பறவை சிற்பங்கள் உருவாக்கப்படுகிறது. இவை புதுவைக்கு வருகிற சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை பார்த்தும், வாங்கியும் செல்கின்றனர். மேலும் தங்கள் வீடுகளிலும், நிறுவனங்களிலும் சிற்பங்கள் அமைக்க தேவையான சிற்பங்களை ஆர்டர் கொடுத்தும் செல்கின்றனர்.
இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த ஆர்டர்கள் மட்டுமே கிடைத்த நிலையில் தற்போது விலங்கு மற்றும் பறவை சிற்பங்களுக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளன. இதனால் இரவு பகலுமாக கலைஞர்கள் ஆர்வத்துடன் சிற்பங்களை செய்து வருகின்றனர்.
மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து மிருகங்களின் சிலைகளையும் அரங்கில் அமைக்க ஏற்பாடும் செய்யப்பட்டு வருகின்றது. இங்கு உருவான விலங்குகளின் சிலைகள் ஜார்க்கண்ட், கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது பறவை, விலங்குகள் என 100 சிற்பங்கள் தயாராகி வருகிறது. இவை ஆந்திரா மாநிலத்தின் உள்ள நகர்வனம் பூங்காவில் வைக்கப்பட உள்ளது. இதேபோல் பிற மாநில பூங்காக்களுக்கும் புதுவையில் தயாராகும் சிற்பங்கள் செல்ல உள்ளது.
முருகப்பாக்கம் கைவினை கிராமத்துக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த வனவிலங்குகளின் சிலைகள் முன்பு நின்று செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்தும், வாங்கியும் செல்கின்றனர்.
- சாத்தூர் நகராட்சியில் ரூ.60.73 லட்சத்தில் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய பூங்காவை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
- தி.மு.க. ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ், முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியில் ரூ.60.73 லட்சத்தில் விளை யாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய பூங்கா திறப்பு விழா நடந்தது.
கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விழாவில் கலந்து கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு பூங்காவை திறந்து வைத்தார்.
சாத்தூர் நகராட்சியில் பெரியார் நகர் வார்டு 1-ல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ11.23 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட பூங்காவும், வார்டு 4-ல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49.50 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய புதிய பூங்காவும் என மொத்தம் ரூ.60.73 லட்சம் மதிப்பிலான 2 பூங்காக்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
திறப்பு விழாவில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, தாசில்தார் வெங்கடேசன், நகராட்சி ஆணையாளர் இளவரசன், நகர் மன்ற தலைவர் குருசாமி, சாத்தூர் யூனியன் சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ், முருகேசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 600 கிராமிய கலைஞர்களின் நிகழ்ச்சிகளை கடற்கரை, பூங்காக்களில் கண்டு களிக்கலாம்.
- நாளையும், நாளை மறுநாளும் தீவுத்திடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கிராமிய கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்துகிறார்.
சென்னை:
தி.மு.க. ஆட்சியில் கடந்த 2007-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 2011-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை வரை இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்பிறகு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.
இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதன் தொடக்கவிழா நாளை (வெள்ளிக் கிழமை) சென்னை தீவுத் திடலில் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 4 நாட்கள் சென்னையில் உள்ள 16 இடங்களில் 'நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்படுகிறது. 600 கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிகளை கடற்கரை, பூங்காக்களில் கண்டுகளிக்கலாம்.
தீவுத்திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு திடல், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பால பூங்கா, ராயபுரம் ராபின்சன் பூங்கா, ராகேஸ்வர ராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை மாநகராட்சி விளையாட்டு திடல், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு திடல், அண்ணாநகர் டவர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, திருவான்மியூர் கடற்கரை சாலை, சைதாப்பேட்டை அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி விளையாட்டு திடல், தி.நகர் நடேசன் பூங்கா, எலியட்ஸ் கடற்கரை, மே தின பூங்கா, எழும்பூர் அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படுகிறது. தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நாளையும், நாளை மறுநாளும் தீவுத்திடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கிராமிய கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்துகிறார்.
இந்த நம்ம ஊரு திருவிழாவில் கரகாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம் பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
- தியான கூடம், சிலுவை பாதை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மகிழ்ந்தனர்.
- மனஇறுக்கம் விலகி மனமகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படும் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இதனால் அந்த பகுதியே குதுகலமானது.
பேராலயத்தில்நடைபெறும்திருப்பலிகளிலும், பழையமாதாஆலயம், நடுத்திட்டு, தியான கூடம், சிலுவைபாதை, சிறுவர் பூங்கா, உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று மகிழ்ந்தனர். மேலும் கடற்கரையில் குடும்பத்து டனும், நண்பர்களுடனும் கடலில் நீராடி மகிழ்ந்தனர்.
இதனால் மனஇறுக்கம் விலகி மனமகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
கடற்கரையில் அசாம்பாவிதங்கல் தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- பூங்காவை ஆய்வு செய்து மண்புழு உரம் தயாரிப்பு பணிக்கு அறிவுரை வழங்கினார்.
- அலுவலகத்தில் ஆன்லைன் வரிவிதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்தார்.
சுவாமிமலை:
சுவாமிமலை பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்காவை கூடுதல் இயக்குநர் மலையமான் திருமுடிக்காரி வளம் மீட்பு பூங்காவை ஆய்வு செய்து மண்புழு உரம் தயாரிப்பு பணிக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் வளாகம், சன்னதி தெருவில் உள்ள வணிக கடைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, சன்னதி தெருவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கழிப்பறை கட்ட அறிவுறுத்தினார்.
மேலும், பேரூராட்சி அலுவலகத்தில் ஆன்லைன் வரிவிதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கனகராஜ், உதவி செயற்பொறியாளர் மாதவன், சுவாமிமலை பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- தொண்டியில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- விளையாட ஊஞ்சல் கிடைக்காமல் பலர் மணலில் உட்கார்ந்து திரும்பிச் சென்றனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பொதுமக்கள் பொழுது போக்குவதற்கு கடற்கரை மட்டுமே உள்ளது. மேலும் கடலில் சிறிது தூரம் விசைப்படகு நிறுத்த கட்டப்பட்ட ஜெட்டிபாலம் உள்ளது. அதுவும் பழு தடைந்துள்ளது.
இதில் ஆபத்தை உணராமல் பலர் கடல் அழகை ரசிக்க ஜெட்டி பாலத்தில் நின்றும், தடுப்புச்சுவர் இல்லாத இடத்தில் கால்களை தொங்க விட்டும் உட்காரு கின்றனர். இதனால் அருகே உள்ள அழகப்பா பல்க லைக்கழகத்தின் கடலியல் மற்றும் கடலோரவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டண கடற்கரை பூங்காவில் காணும் பொங்கலையொட்டி ஏராளமான பொது மக்கள் குவிந்தனர். வெளியூர்களில் இருந்து வந்த விருந்தாளிகளும், சுற்றுலாப்பயணிகளும் கடற்கரையைச் சுற்றிப் பார்க்க வருகை தந்தனர். அங்கும் விளையாட ஊஞ்சல் கிடைக்காமல் பலர் மணலில் உட்கார்ந்து திரும்பிச் சென்றனர்.
இதனால் தமிழக சுற்றுலா வளர்ச்சித் துறை சார்பில் தொண்டியில் உள்ள நீண்ட கடற்கரையை சுத்தப்படுத்தி, அழகுபடுத்தி பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
- மாணவ- மாணவிகளை கல்வி சுற்றுலா கட்டாயம் அழைத்து செல்ல வேண்டும்.
- தாங்கள் வசிக்கும் பகுதிகளில் விளையாட்டு பூங்கா வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 12 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளை உறுப்பினராக கொண்டு பாலர்சபை கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த பாலர் சபையில் சிறப்பு பார்வையாளராக நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டு பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பள்ளி மேம்பாடு, பகுதி வாழ் மேம்பாடு மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து அதற்குண்டான தீர்வுகளை விரைந்து செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பிரதாபராமபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, செருதூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி, புனித மிக்கெல் அரசினர் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த குழந்தைகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மை குழுவில் மாணவ பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும், பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள், நூலகம் மற்றும் கழிப்பறைகள் வேண்டும் வேண்டும்,
அரசு போட்டித் தேர்வுகளுக்கு பள்ளியில் பயிற்சி அளிக்க வேண்டும், மாணவ மாணவிகளை கல்வி சுற்றுலா கட்டாயம் அழைத்து செல்ல வேண்டும், தாங்கள் வசிக்கும் பகுதிகளில் விளையாட்டு பூங்கா வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் குழந்தைகளால் பாலர் சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதில் நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், கிராம ஊராட்சி தலைவர் சிவராசு, துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.
- சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் மர கன்றுகள் நடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- தெற்கு மவுண்ட் ரோட்டில் உள்ள ஓடையில் அமலை செடிகள் அகற்றப்பட்டது.
நெல்லை:
நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் மற்றும் மழை நீர் வடிகால்கள் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் நெல்லை மாநகராட்சி டவுன் மண்டலத்துக்கு உட்பட்ட 22-வது வார்டு அபிராமி நகர் பூங்காவில் கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மேற்பார்வையில் "பொது இடங்களில் பெருமளவில் மரம் நடுதல்" என்ற தலைப்பில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் மர கன்றுகள் நடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். மேலும் அந்த வார்டு பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு பூங்காவில் நடப்பட்டுள்ள 5 செடிகளுக்கும் தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து தெற்கு மவுண்ட் ரோட்டில் உள்ள ஓடையில் படர்ந்திருந்த அமலை செடிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. சிறிய பொக்லைன் மூலமாக நடந்த இப்பணியின் மூலம் சுமார் 3 டன் குப்பைகள் அகற்றப்பட்டது.