என் மலர்
நீங்கள் தேடியது "passenger"
- 3 மாத காலம் மேட்டுப்பாளையம்,நெல்லை ரெயில் இயக்கப்பட்டது.
- மேட்டுப்பாளையம்- நெல்லை வாராந் திர ரெயில் 5 வாரங்களுக்கு மட்டுமே நீட்டிக்கப்பட டது.
கோவை
மேட்டுப்பாளையம் -நெல்லை வாராந்திர ரெயில்,பயணிகளின் கோரிக் கையை ஏற்று கோடை விடுமுறையை முன்னிட்டு கடந்த மே மாதம் முதல் 3 மாத காலம் மேட்டுப்பாளையம், கோவை, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, சிவகாசி தென்காசி வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரெயில் மறுநாள் சனிக்கிழமை காலை 7.45 மணிக்கு நெல்லையை அடையும்.
மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 7.45 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து சேரும். 3 மாத காலத்துக்கு மட்டுமே அறிவிக்கப்பட்ட இந்த ரெயில் கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இதற்கு ரெயில் பயணிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.
மேலும் 70 சதவீத பயணிகளுடன் சென்ற இந்த ரெயில் ஏன் ரத்து செய்யப்பட்டது என்று ரெயில் பயணிகள் சங்கங்கள் தரப்பில் கண்டனம் எழுப்ப பட்டது. இதை தொடர்ந்து அந்த வாராந்திர ரெயில் ஜூலை மாதம்21-ந் தேதி முதல் ஆகஸ்ட் 19-ந் தேதி வரை 5 வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது. அது நேற்றுடன் முடிவடைந்து. மீண்டும் அந்த ரெயிலை இயக்குவது குறித்து அறிவிப்பு ஏதும் இல்லாத தால் மேட்டுப்பாளையம்- நெல்லை ரெயில் 2-வது முறையாகரத்து செய்யப்பட்டுள்ளது. இனி அடுத்த வாரம் அந்த ரெயில் இயக்கப்படாது. இது ெரயில் பயணிகளிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
மேட்டுப்பாளையம்- நெல்லை ரெயிலில் கடந்த 2 வாரங்களாக முன் பதிவுக்கு டிக்கெட் கிடைக்காமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. எனவே ரெயில்வேக்கு அதிக வருமானம் ஈட்டித் தரும் அந்தரெயிலை நீட்டிக்காமல் ரெயில்வே நிர்வாகம் மவுனமாக உள்ளது. ஆனால் கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு இயக் கப்பட்டு வரும் வாராந் திர ரெயில் கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி முதல் 5 மாதங்களுக்கு நீட்டித்து. அதாவது நவம்பர் மாதம் வரை நீட்டித்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டது.
ஆனால் அதே மாதம் நீட்டிக்கப்பட்ட மேட்டுப்பாளையம்- நெல்லை வாராந் திர ரெயில் 5 வாரங்களுக்கு மட்டுமே நீட்டிக்கப்பட டது. அதன்பிறகு நீட்டிப்பது பற்றி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.இதில் தென்னக ரெயில்வே பாரபட்சத்துடன் நடப்பதோடு மட்டு மல்லாமல் கோவையை வஞ்சிப்பதாகவும் தெரிகிறது. எனவே ரெயில்வேக்கு அதிக வருமானம் ஈட்டித் தரும் மேட்டுப்பாளையம்- நெல்லை வாராந்திர ரெயிலை மீண்டும் இயக்குவ தோடு மட்டுமல்லாமல் அதை நிரந்தர ரெயிலாகவும் மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- பாலக்காடு டவுன்-ஈரோடு ரெயில் வாரத்தில் வியாழக்கிழமை தவிர மற்ற நாட்கள் இயக்கப்படும்.
- ஈரோடு-கோவை முன்பதிவில்லா தினசரி ரெயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
திருப்பூர் :
பாலக்காடு டவுன்-ஈரோடு செல்லும் முன்பதிவில்லா ரெயில் (எண்.06818) நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் வாரத்தில் வியாழக்கிழமை தவிர மற்ற நாட்கள் இயக்கப்படும். இந்த ரெயில் தினமும் பாலக்காடு டவுனில் மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டுக்கு இரவு 7.10 மணிக்கு சென்றடையும். கோவைக்கு 4.17 மணிக்கும், வடகோவைக்கு 4.27 மணிக்கும், பீளமேடுக்கு 4.37 மணிக்கும், சிங்காநல்லூருக்கு 4.42 மணிக்கும், இருகூருக்கு 4.49 மணிக்கும், சூலூருக்கு 4.57 மணிக்கும், சோமனூருக்கு 5.09 மணிக்கும், வஞ்சிப்பாளையத்துக்கு 5.19 மணிக்கும், திருப்பூருக்கு 5.29 மணிக்கும், ஊத்துக்குளிக்கு 5.49 மணிக்கும், ஈரோடுக்கு 7.10 மணிக்கும் சென்றடையும்.
இதுபோல் ஈரோடு-பாலக்காடு டவுன் முன்பதிவில்லா ரெயில் (எண்.06819) வருகிற 30-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தினமும் ஈரோட்டில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு டவுனை காலை 11.45 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் ஊத்துக்குளிக்கு காலை 7.59 மணிக்கும், திருப்பூருக்கு 8.13 மணிக்கும், வஞ்சிப்பாளையத்துக்கு 8.24 மணிக்கும், சோமனூருக்கு 8.34 மணிக்கும், சூலூருக்கு 8.44 மணிக்கும், இருகூருக்கு 8.51 மணிக்கும், சிங்காநல்லூருக்கு 8.56 மணிக்கும், பீளமேடுக்கு 9.04 மணிக்கும், வடகோவைக்கு 9.14 மணிக்கும், கோவைக்கு 9.30 மணிக்கும் சென்றடையும்.
இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு-கோவை முன்பதிவில்லா தினசரி ரெயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. ஈரோட்டில் தினமும் காலை 7.15 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு காலை 9.45 மணிக்கு சென்றடைந்தது. இந்தநிலையில் ஈரோட்டில் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு 10.15 மணிக்கு சென்றடையும் வகையில் நேர மாற்றம் செய்யப்பட்டு, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது.
ஈரோட்டில் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு ஊத்துக்குளிக்கு 8.35 மணிக்கும், திருப்பூருக்கு 8.49 மணிக்கும், வஞ்சிப்பாளையத்துக்கு 8.59 மணிக்கும், சோமனூருக்கு 9.09 மணிக்கும், சூலூருக்கு 9.19 மணிக்கும், இருகூருக்கு 9.27 மணிக்கும், சிங்காநல்லூருக்கு 9.34 மணிக்கும், பீளமேடுக்கு 9.41 மணிக்கும், வடகோவைக்கு 9.49 மணிக்கும், கோவைக்கு 10.15 மணிக்கும் சென்று சேரும்.
இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பயணிகள் ரெயில் வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.
- ரெயிலில் வந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
சேலம்:
விருத்தாசலம்-சேலம் இடையே பயணிகள் ரெயில் வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், ரெயில் பயணிகள், சேவை சங்கங்களின் கோரிக்கையினை ஏற்று இனி ஞாயிற்றுக்கிழமையிலும் இயக்க ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.
அதன்படி இன்று சேலம்-விருத்தாசலம் இடையே இந்த ரெயில் இயக்கப்பட்டது. ஆத்தூர் ரெயில்நிலையத்துக்கு இந்த ரெயில் இன்று காலை 7.05 மணிக்கு வந்தது. இதை தொடர்ந்து ரெயிலுக்கு ரோட்டரி மிட்டவுன் சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரெயிலில் வந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆத்தூர் ரோட்டரி மிட்டவுன் சங்க தலைவர் சீனிவாசன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
- இதுவரை மேட்டுப்பாளையம், கோவையில் இருந்து பழனி ஒட்டன்சத்திரம் வழியாக தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரெயில்கள் இல்லை.
- நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து மதுரை, பழனி வழியாக இந்த சிறப்பு ரெயிலை கோவைக்கு நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தென்காசி:
தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இயங்கும் நெல்லை- மேட்டுப் பாளையம் வாராந்திர ரெயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி விதி எண் 377 ன் கீழ் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுப்பியுள்ள கேள்வியில், பழனி முருகன் கோவில் இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பழனிக்கு வருவது வழக்கம். இதில் பழனி ரெயில் நிலையம் மிக முக்கிய பங்காற்றுகிறது.
மேலும் கொடைரோடு ரெயில் நிலையமானது கொ டைக்கானல் செல்வதற்கு மிக முக்கியமான ரெயில் நிலையமாகும். இதுவரை மேட்டுப்பாளையம், கோவையில் இருந்து பழனி ஒட்டன்சத்திரம் வழியாக தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரெயில்கள் இல்லை.
அந்தக் குறையைப் போக்கும் வகையில் தற்போது பழனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி வழியாக இயங்கி கொண்டிருக்கும் மேட்டுப்பாளையம் - நெல்லை வாராந்திர ரெயிலை பொதுமக்களின் நலன் கருதி நிரந்தர ரெயிலாக இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இந்த மேட்டுப்பாளையம் - நெல்லை சிறப்பு ரெயிலானது மருதமலை, பழனி, மதுரை மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், சங்கரன்கோவில், தென்காசி காசி விஸ்வநாதர், தோரணமலை முருகன் கோவில், பாபநாசம் உள்ளிட்ட முக்கிய புண்ணிய தலங்கள் வழியாக செல்வதால் இந்த சிறப்பு ரெயிலை பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து மதுரை, பழனி வழியாக இந்த சிறப்பு ரெயிலை கோவைக்கு நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த சிறப்பு ரெயிலானது 11 வாரங்களில் ரூ.80 லட்சம் வரை வருமானம் தந்துள்ளது.
- தென்காசி - நெல்லை நான்கு வழிச்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக பஸ் பாய்ந்தது.
- சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் பள்ளத்தில் சிக்கியிருந்த பஸ்சை மீட்டனர்.
பாவூர்சத்திரம்:
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், நெல்லை வழியாக ராமேஸ்வரம் செல்லும் அரசு பஸ் இன்று அதிகாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.
பஸ்சை டிரைவர் மாடசாமி ஓட்டி வந்தார். பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலை அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது தென்காசி - நெல்லை நான்கு வழிச்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக பஸ் பாய்ந்தது.
இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறல் சத்தம் போட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இன்றி உயிர்தப்பினர். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் பள்ளத்தில் சிக்கியிருந்த பஸ்சை மீட்டனர்.
இதுகுறித்து பஸ்சில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பணி நடந்து வருவதை குறிப்பிடும் வண்ணம் அதற்கான எச்சரிக்கை பலகைகள், பாதுகாப்பு மற்றும் பணி உபகரணங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். எவ்வித விபத்துக்களும் இன்றி பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- டவுன் பஸ்களும், மதுரை, கோவை, திண்டுக்கல், பழனி என 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- பஸ் நிலைய விரிவாக்கப்பணிகளுக்கு 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
உடுமலை :
கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை பஸ் நிலையம் 1964ல் கட்டப்பட்டு, 1996ல் விரிவாக்கம் செய்யப்பட்டது.உடுமலை சுற்றுப்புற கிராமங்களுக்கு டவுன் பஸ்களும், மதுரை, கோவை, திண்டுக்கல், பழனி என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், 300க்கும் மேற்பட்ட பஸ்களும் இயக்கப்படுகின்றன.தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள்வந்து செல்கின்றனர். ஆனால் பஸ்கள் நிற்பதற்கான ரேக் மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லை. போதிய வசதியில்லாத, இந்த பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நிலையில் இரு ஆண்டுக்கு முன் நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பஸ் நிலைய விரிவாக்கப்பணிகளுக்கு 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதில் 15 பஸ்கள் நிற்கும் ரேக், 12 கடைகள், நேரக்காப்பாளர் அறை, பயணிகள் அமரும் வளாகம், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓய்வு அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.பணி துவக்க விழா நடந்து 1½ ஆண்டுக்கு மேலாகியும் பணி துவங்காமல் இழுபறியாகி வந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன் பணி துவங்கியது.
துவங்கிய பணியும், ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. எனவே பஸ் நிலைய விரிவாக்கப்பணியை வேகமாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மீட்டர் கேஜ் ரயில்கள் ஓடிய நேரத்தில் நெல்லை - கொல்லம் இடையே பகல்நேர ரயில்கள் இயக்கப்பட்டன.
- 2018-ம் ஆண்டு பிராட் கேஜ் ஆன பிறகு இந்த ரயில்கள் இயக்கப்படவில்லை.
நெல்லை:
தமிழகத்தில் மீட்டர் கேஜ் ெரயில்கள் ஓடிய நேரத்தில் நெல்லை - கொல்லம் இடையே அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை, ஆரியங்காவு, தென்மலை, புனலூர், கொட்டாரக்கரை வழியாக பகல்நேர ெரயில்கள் இயக்கப்பட்டன.
இப்பாதை 2018-ம் ஆண்டு பிராட் கேஜ் ஆன பிறகு இந்த ெரயில்கள் இயக்கப்படவில்லை.இதனால் நெல்லைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வரும் கேரள மக்கள், இரு மாநில மாணவர்கள், வணிகர்கள் தனியார் மற்றும் அரசு வங்கி ஊழியர்கள், பால் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் குற்றாலம் அருவிகள், குண்டாறு, அடவிநயினார், பாபநாசம், மணிமுத்தாறு அணைகள், மாஞ்சோலை எஸ்டேட், அகத்தியர் அருவி, ஆரியங்காவு, பாலருவி, தென்மலை சுற்றுலா தலம், கல்லடா அணை, அம்பநாடு எஸ்டேட் ஆகிய இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த ெரயில்களால் பயன் பெறுவர்.
எனவே இந்த ெரயில்களை விரைவில் இயக்கிட ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும், அந்த ரெயில்களில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்திட மேற் கண்ணாடி கூரை வசதி உள்ள விஸ்டாடோம் பெட்டி ஒன்று இணைக்க வேண்டும் எனவும் செங்கோட்டை பயணிகள் நலச்சங்கத்தினர் மத்திய ெரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு மனு அனுப்பி உள்ளனர்.
திருவாரூர்:
ரெயில் பயணிகளின் வசதிக்காக நாடு முழுவதும் முக்கிய ரெயில் நிலையங்களில் இலவச வைபை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை நிலையங்களில் வைபை வசதி உள்ளது. இதேபோல் திருவாரூர் ரெயில் நிலையத்திலும் பயணிகளின் வசதிக்காக வைபை வசதி தொடங்க வேண்டும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனை ஏற்று திருவாரூர் ரெயில் நிலையத்தில் வைபை வசதி தொடங்கப்பட்டுள்ளது. சுமார் அரைமணி நேரம் வரை மட்டுமே இந்த வசதி செயலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ரெயில் பயணிகள் கூறியதாவது:-
திருவாரூர் ரெயில் நிலையத்தில் வைபை வசதி வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தோம். அதன் அடிப்படையில் தற்போது இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. நடைமேடையில் மட்டுமே சிக்னல் கிடைக்கிறது. செல்போனுக்கு கடவுசொல் வரும். இதை பயன்படுத்தினால் இலவச வைபை வசதி கிடைக்கும்.
சுமார் அரைமணி நேரம் மட்டுமே செயலில் உள்ளது. ஆனால் ஒரு மணி நேரம் வரை வைபை வசதியை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைபை வசதி, ரெயிலை பயணிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் செங்கல்பட்டு விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நேற்று இரவு 10மணி முதல் சரியாக இயங்காததால் பயணிகள் பல மணிநேரம் காத்திருந்தனர்.
இதுகுறித்து டெப்போவில் இருந்த போக்குவரத்து ஊழியர்களிடம் கேட்டனர். ஆனால் அதற்கு அவர்கள் சரியான பதில் சொல்லவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் நள்ளிரவு 12மணி அளவில் திடீரென்று பிளாட்பாரம் 1-ல் பஸ்களை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.
மறியல் காரணமாக அந்த வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் வெளியே செல்ல வழியில்லாமல் வரிசையாக காத்துநின்றன.
தகவலறிந்து வந்த கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அவர் வெளியூர் பேருந்துகளை ஏற்படுத்திக் கொடுத்தனர். இதையடுத்து பயணிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். #koyambedubusstand
திருவண்ணாமலை:
சாலை பாதுகாப்பு வார விழா வருகிற 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் திருவண்ணமலை டவுன் போலீசார் மூலம் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது, சாலை விதிகளை கடைப்பிடிப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
திருவண்ணாமலை காந்தி சிலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய விதிகள் வழியாக சென்று மீண்டும் அதே இடத்தில் நிறைவடைந்தது.
தொடர்ந்து திருவண்ணாமலை நகரத்திற்கு வரும் வெளிநாட்டினர் மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது போலீசார் மற்றும் வெளிநாட்டு பயணிகள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் பூத நாராயணர் கோவிலில் இருந்த கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு நடைபயணமாக சின்னக்கடை வீதி வழியாக பஸ் நிலையத்திற்கு வந்தனர்.
பின்னர் பஸ் நிலையம் எதிரில் பொது மக்களுக்கு வெளிநாட்டினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். வெளிநாட்டினர் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்திய விதம் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.
இது குறித்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் ஈடுபட்ட வெளிநாட்டு பயணிகளிடம் கேட்டபோது, ‘‘இங்கு இருச்சக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் வேகமாக செல்கின்றனர். சாலை பாதுகாப்பு விதிகளை பெரும்பாலானோர் பின்பற்றுவது இல்லை.
ஆனால் எங்கள் நாடான ஜெர்மனியில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். கார் ஓட்டுபவர்கள் ‘சீட் பெல்ட்’ அணிய வேண்டும்.
இல்லையென்றல் கடுமையான அபராதம் விதிக்கப்படும். எனவே அனைவரும் சாலை பாதுகாப்பு விதியை பின் பற்ற வேண்டும்’’ என்றனர்.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து நேற்று இரவு ஒரு விமானம் துபாய் செல்ல தயாராக இருந்தது.
இந்தநிலையில் பயணி ஒருவர் அனுமதி இல்லாமல், வெளிநாட்டு பணம் கொண்டு செல்வதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் இந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகளிடம் சோதனை செய்தனர்.
சோதனை நடந்தபோது, ஒருவருடைய நடவடிக்கை வித்தியாசமாக இருந்தது. அவரை தனியாக அழைத்துச் சென்று அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது அவருடைய பை மற்றும் உள்ளாடையில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் நோட்டுகளை மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய பணத்தில் அதன்மதிப்பு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.
அந்த பயணியின் பெயர் அப்துல்லா (38). ராமநாதபுரத்தை சேர்ந்தவர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.