என் மலர்
நீங்கள் தேடியது "plastic"
- 25-வது வார்டுயில் உள்ள பெண்களுக்கு பிளாஸ்டிக் இல்லா மாநகராட்சி மற்றும் புகையில்லா போகி என்ற தலைப்பில் கோலப்போட்டி நடத்தது.
- கோலத்திற்கு சிறப்பு பரிசுகளும் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட தத்தோஜியப்பா சந்தில் பிளாஸ்டிக் இல்லா மாநகராட்சி மற்றும் புகையில்லா போகி என்ற தலைப்பின் கீழ் கோலப்போட்டி நடத்தப்பட்டது.
இதற்கு 25-வது வார்டு கவுன்சிலர் ஆர்.தெட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார்.
மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பெண்கள் விழிப்புணர்வு கோலங்கள் இட்டனர்.
சிறந்த கோலத்திற்கு சிறப்பு பரிசுகளும் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.
மேலும் புகையில்லா போகி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டன.
- நான்கு சாலையில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்.
- வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.2920 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார்.
துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு:-
எதிர்கட்சி தலைவர் மணிகண்டன்: திலகர் திடலில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு எந்தவித ரசீதும் கொடுக்காமல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அங்கு முறையாக ரசீது கொடுத்து கட்டணம் வாங்க வேண்டும்.
மாநகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும்.
மஞ்சப்பை திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ராஜக்கோரி இடுகாட்டு வளாகத்தில் தமிழீழ விடுதலை புலிகள் போராளி போசன் கல்லறை இடிக்கப்பட்டுள்ளது. அதனை சீரமைக்க வேண்டும்.
கவுன்சிலர் கோபால் : மேலவீதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். உடனடியாக சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். மேலும் வாரத்தில் சில நாட்கள் குறைந்த அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
அதனை முறைப்படுத்தி சரியான அளவில் குடிநீர் விநியோகிக்க வேண்டும். நான்கு சாலையில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும். பணிகள் அனைத்தையும் துரிதமாக முடிக்க வேண்டும்.
யு.என்.கேசவன் : நவ்ரங் பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும். ராமநாதன் ரவுண்டானா பகுதியில் 5 சாலைகள் செல்கிறது. அதில் ஒரு இடத்தில் தான் வேகத்தடை உள்ளது. மீதமுள்ள 4 இடங்களிலும் வேகத்தடை அமைக்க வேண்டும்.
கண்ணுக்கினியாள் : எனது வார்டில் பூச்சந்தை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக்கை அகற்ற வேண்டும்.
சரவணன் : சீனிவாசபுரத்தில் குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
காந்திமதி : மீன் மார்க்கெட்டை சரி செய்ய வேண்டும். வெள்ளைபிள்ளையார் கோவில் பகுதியில் ஆக்கிரப்பை அகற்றுவதாக இருந்தால் முன் அறிவிப்பு செய்ய வேண்டும்.
இதேப்போல் கவுன்சிலர்கள் ஜெய்சதீஷ் உள்பட பல்வேறு கவுன்சிலர்களும் தங்களது வார்டு சம்பந்தபட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
துணை மேயர் அஞ்சுகம் பூபதி பேசும்போது:-
கரந்தை பகுதியில் நீர்தேக்க தொட்டியை தரமான முறையில் சுத்தம் செய்த ஒப்பந்தகாரர் ரவியை மாநகராட்சி பாராட்டுகிறது.
ராஜகோரி மயானத்தில் போராளி போசன் கல்லறை இடிந்து கிடப்பதாக வந்த தகவலை அடுத்து மாநகராட்சி சார்பில் உடனடியாக சென்று கல்லறை சீரமைக்கப்பட்டது.
சாலையோரம் வியாபாரம் செய்ய அனுமதிக்கபட்ட பகுதி, அனுமதிக்கப்படாத பகுதி என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றார்.
கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு மேயர் சண்.ராமநாதன் பதில் அளித்து பேசியதாவது ;-
தஞ்சை பெரிய கோவில் புகழ் பெற்றது. இங்கு தினமும் ஆயிரகணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது இங்கு வாகன பார்க்கிங் பிரச்சினை உள்ளது.
சிறிய இடமாக உள்ளதால் பலரால் வாகனங்களை நிறுாத்தி வைக்க முடியவில்லை. எனவே இனி பெரிய கோவில் பகுதியில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. திலகர் திடலில் உரிய முறையில் ரசீது கொடுத்து தான் வாகன பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வருகிற 1-ந் தேதி முதல் மாநகராட்சி பகுதியில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் சம்பந்தபட்ட உரிமையாளர்களுக்கு முதல் கட்டமாக ரூ.3000 அபராதம் விதிக்கப்படும்.
அதற்கு அடுத்தும் மாடுகளை சுற்றி திரிய விட்டால் கூடுதல் அபராதம் விதிக்கப்படும்.
மாநகராட்சியில் 51 வார்டுகளிலும் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.2920 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
போசன், பட்டுக்கோட்டை அழகிரி கல்லறைகள் பேணி பாதுகாக்கப்படும்.
கவுன்சிலர்கள் முன்வைத்த கோரிக்கைகளை அனைத்தும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நோடல் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- விதிமீறல்கள் குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை,
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதை தவிர்க்க, ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
ஆனாலும் விதிமீறல் தொடர்வதால், தினமும் டன் கணக்கில் சேகரமாகும் குப்பையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் காணமுடிகிறது. மாநகராட்சி அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு முதல் முறை ரூ.25 ஆயிரம், இரண்டாவது முறை, ரூ.50 ஆயிரம், மூன்றாவது முறை ரூ. 1 லட்சம் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் போன்ற மிகப்பெரிய வணிக நிறுவனங்களுக்கு, முதன் முறை, 10 ஆயிரம், இரண்டாவது 15 ஆயிரம், மூன்றாவது முறை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மளிகைக்கடைகள், மருந்துக்கடைகள் உள்ளிட்டவற்றுக்கு முதன் முறை, ரூ.1,000, இரண்டாவதாக, ரூ.2,000, மூன்றாவதாக, ரூ.5,000-ம், சிறு வணிக விற்பனையாளர்களுக்கு முதல் முறை ரூ.100, இரண்டாவதாக, ரூ.200, மூன்றாவது முறை ரூ.500 விதிக்க விதி முறை உள்ளது. ஆனாலும் விதிமீறல்கள் தொடர்கின்றன.
இதையடுத்து, மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கிடங்குகள், கடைகள் உள்ளிட்டவற்றில்ஆய்வு செய்துஅபராதம் விதிக்க தனிப்படை அமைத்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக, பிளாஸ்டிக் நோடல் அலுவலராக, சலேத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிளாஸ்டிக் தொடர்பான புகார்களை நோடல் அலுவலரின், 94894-57403 என்ற செல்போன் எண்ணில், பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்.
தனிப்படையில் சுகாதார ஆய்வாளர் உள்ளிட் டோர் இடம்பெற்று உள்ளனர். தற்போது, பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இதனால் விதிமீறல்கள் குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- முதற்கட்டமாக 2000 வீடுகளுக்கு துணிப்பை வழங்கப்பட்டது.
- கடைகள், பேக்கரிகள், உணவு விடுதிகள் போன்றவற்றில் சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சியில் கடந்த ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்பட்டு பிளாஸ்டிக் ஒழிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடைகள், பேக்கரிகள், உணவு விடுதிகள் போன்றவற்றில் சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர். இதற்கிடையே பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடு தோறும் துணிப்பைகள் வழங்கும் திட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் துவக்கி வைத்தார்.
இதன்படி முதற்கட்டமாக 2000 வீடுகளுக்கு துணிப்பை வழங்கப்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில், கரைப்புதூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடைகளில் பிளாஸ்டிக் பைகள் இருந்தால் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் வீடுகளுக்கு துணி பைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. கரைப்புதூர் ஊராட்சியை பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாற்றும் முயற்சியில் ஊராட்சி நிர்வாகத்துடன் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
- மரக்கன்றுகளை நன்றாக வளர்க்க வேண்டும்.
- பிளாஸ்டிக்கை ஒழித்து மஞ்சப்பைகளுக்கு மாற வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோவில் நந்தவனத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நடைபெற்று வரும் ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் அமுதவள்ளி நேரில் பார்வையிட்டு பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவ மாணவியர்களுக்கு மஞ்சப்பை மரக்கன்றுகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: முதல்-அமைச்சர் உங்களை போன்ற பள்ளிக் குழந்தைகளுக்கு எண்ணற்ற பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.அந்த வகையில் பள்ளி குழந்தையாகிய நீங்கள் இன்று வாங்கிச் செல்லும் மரக்கன்றை நன்றாக வளர்க்க வேண்டும். பூமித்தாயை பாதுகாக்க பிளாஸ்டிக்கை ஒழித்து மஞ்சப்பைகளுக்கு மாற வேண்டும். உலக வெப்பமயமாதலில் நம்மை பாதுகாத்து கொள்ள மரங்கள் நடுவது ஒன்றே சிறந்த வழியாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் தமிழ்ஒளி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கண்மணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிளாஸ்டிக் பயன்பாடு குறைவாகத்தான் இருந்தது.
- பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், கவின்மிகு தஞ்சை இயக்கம் ஆகியவை சார்பில் இன்று நெகிழி தடுப்பு குறித்து வணிகர்களுக்கான பயிற்சி பட்டறையை நடத்தியது.
இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். ஆணையர் சரவண–குமார் வகித்தார். மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் விஜயபிரியா, மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி ஆகியோர் வரவேற்று பேசினர்.
இதில் ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது :-
நெகிழி இல்லாத மாவட்டமாக தஞ்சாவூர் மாற வேண்டும். அதற்கு வணிகர்கள் பொதுமக்கள், அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. ஒரு தடிமனான பிளாஸ்டிக் மக்குவதற்கு 1000 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பிளா–ஸ்டிக்கை பயன்படுத்தும் போது அதில் மண்ணில் மக்காமல் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. மண் வளத்தை பாதிக்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிளாஸ்டிக் பயன்பாடு குறைவாகத்தான் இருந்தது. தற்போது பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த சவாலாக உள்ளது. இருந்தாலும் அனைவரும் மனது வைத்தால் நிச்சயமாக கட்டுப்படுத்தி விடலாம். கடைகளுக்கு பொதுமக்கள் பொருட்கள் வாங்கும்போது துணிப்பை அல்லது மஞ்ச பைகளை கொண்டு செல்லுங்கள். வியாபாரிகளும் பொதுமக்களுக்கு பொருட்கள் கொடுக்கும் போது பிளாஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள். பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக தஞ்சாவூர் மாற வேண்டும்.
பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் விதிப்பது எங்களது நோக்கமல்ல. பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க வேண்டும். இதற்கு வணிகர்கள், வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தஞ்சை மாவட்டம், மாநகராட்சி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
செந்தமிழ் வட்டாரத்தில் இருந்து மணிமண்டபம் வட்டார வரை ஆறு வழிச்சாலை வரப்போகிறது. தஞ்சை மாவட்டம் சுற்றுலா நிறைந்த மாவட்டமாகும். அதன்படி வளர்ச்சியை நோக்கியே பயணம் இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து ஆணையர் சரவணகுமார் பேசும்போது,
கலெக்டர் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார். அவருக்கு படைத்தளபதியாக பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். பிளாஸ்டிக் பயன்பாட்டை அனைவரும் முற்றிலும் தடுக்க வேண்டும். விபத்தில்லா தஞ்சாவூர் மாநகரை உருவாக்க சாலைகள் அகலப்படுத்தபட்டு வருகின்றன. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டுப்பவர்களுக்கு அபராதம் விதிப்பது மறுமுறை ஹெல்மெட் அணிந்து செல்வதற்காக தான். அனைவரும் போக்கு வரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் திருச்சி பிஷப் கல்லூரி துணை முதல்வர் அழகப்பா மோசஸ், கவின்மிகு தஞ்சை இயக்கம் செயலாளர் பர்வீன் ஆகியோர் வணிகர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்தனர். பிளாஸ்டிக் மாற்றாக பயன்படுத்தக்கூடிய பொருட்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி பட்டறையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 421 மனுக்கள் பெறப்பட்டது.
- நெகிழி மாசில்லா சுற்றுச்சூழல் மற்றும் பொருட்கள் விழிப்புணர்வு சுவரொட்டியை வெளியிட்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 421 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதா ரருக்குதெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து அவர், வருவாய் துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை 2 நபர்களுக்கும், கடந்த ஆண்டு தேர் தீ விபத்தில் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகள் மற்றும் புதிய கான்கிரீட் வீடு கட்டுவதற்கான ஆணைகளை 3 நபர்களுக்கு வழங்கினார்.
பின்னர் நெகிழி மாசில்லா சுற்றுச்சூழல் மற்றும் பொருட்கள் விழிப்புணர்வு சுவரொட்டியினை வெளியிட்டார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சணல்பைகள், பனியன்துணி மேட்டுகள், மஞ்சப்பை, பாக்குமட்டை தயாரிப்பது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது
- மகளிர் கூட்டமைப்பினர் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நகரங்களின் தூய்மை மக்கள் இயக்கம் திட்டத்தின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது. இதைத்தொடர்ந்து சாமளாபுரம் பகுதி அளவிலான மகளிர் கூட்டமைப்பு மூலம் மகளி ர்சுய உதவிக்குழுவி னருக்கு சணல்பைகள், பனியன்துணி மேட்டுகள், மஞ்சப்பைகள், வயர்கூடைகள் ஆகியவற்றை உபயோக ப்படுத்த க்கோரியும், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் சணல்பைகள், பனியன்துணி மேட்டுகள், மஞ்சப்பை, பாக்குமட்டை தயாரிப்பது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் சாமளாபுரம் பகுதி அளவி லான மகளிர் கூட்டமைப்பி னர் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு மகளிர் குழுவினருக்கு விழி ப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழ னிச்சாமி, துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தகுமார், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் மைதிலிபிரபு, பூங்கொடி சண்முகம், பெரிய சாமி, ஒருங்கிணைப்பாளர் பாக்கியம்மாள் ,சாமளாபுரம் பகுதி அளவிலான கூட்டமைப்பின் செயலாளர் ரம்யா, சாமளாபுரம் பேரூராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பிளாஸ்டிக் தவிர்ப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- கேசா இளம்படை அமைப்பின் எதிர்கால திட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் ஜீவலதா பேசினார்.
ராஜபாளையம்
ஜெ.சி.ஜ. ராஜபாளையம் கேசா டி மிர் மற்றும் புதுயுகத்தின் கேசா இளம்படை இணைந்து பிளாஸ்டிக் தவிர்ப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருவள்ளுவர் நகரில் நடத்தியது. கேசா இளம்படையின் துணை ஒருங்கிணைப்பாளர் ரேஷ்மா பேசினார். சிறப்பு விருந்தினர்களாக எல்.ஜ.சி. காப்பீடு ஆலோசகர் திருமுருகன், திருவள்ளுவர் நகர மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அங்குராஜ், 2-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் வள்ளிமயில் ராஜா, யூனியன் வைஸ் சேர்மன் துரைகற்பகராஜ் ஆகியோர் பேசினர்.
மாணவி சிவதர்ஷினி வரவேற்றார். பிளாஸ்டிக் தவிர்ப்போம் என்ற தலைப்பில் மாணவன் நரேஷ், பிளாஸ்டிக்கை குறைப்போம் என்ற தலைப்பில் சிவதர்ஷினியும், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வோம் என்ற தலைப்பில், காவ்ய தர்ஷினியும் பேசினர். கேசா இளம்படை அமைப்பின் எதிர்கால திட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் ஜீவலதா பேசினார். துணை ஒருங்கிணைப்பாளர் ரேஷ்மா வாழ்த்துரை வழங்கினார். மாணவி ஹாஜிரா பர்ஹின் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெ.சி.ஜ ராஜபாளையம் கேசா டி மிர் தலைவர் பானுபிரியா, மாலா, அழகுராஜா, சத்யா ஆகியோர் பள்ளியின் தாளாளர் திருப்பதி செல்வன், முதுநிலை முதல்வர் அருணாதேவி வழிகாட்டுதலின் படி செய்திருந்தனர்.
- ஆக்கிரமிப்பில் உள்ள நடைமேடை கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரி–களுக்கு உத்தரவிட்டார்.
- பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் காந்திஜி சாலை, அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் அதிக போக்குவரத்து நிறைந்த பகுதிகள் ஆகும்.
இந்நிலையில், நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து காவல் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆணையர் சரவணகுமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்ேபாது அந்த பகுதிகளில் ஆக்கிரமிப்பில் உள்ள நடைமேடை கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரி–களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, அவர் உடன் வந்த அதிகாரிகள் அனைத்து கடைகளையும் அப்புறப்படுத்தினர்.
மேலும் நடைமேடை கடைகளில் பயன்படுத்திய பிளாஸ்டிக் பைகளையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் மீண்டும் இந்த பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
ஆய்வின்போது மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மோகனா, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- 40 கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் இருக்கிறதா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
- 8 கடைகளிலிருந்து 1215 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
தமிழக அரசு சுற்றுச்சூ ழலுக்கு மாசு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும் தடை விதிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வோருக்கு அபராதமும் விதிக்க உத்தரவிட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி லாவண்யா, மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் வினோத் உள்ளிட்டோர் நேற்று மேட்டுப்பாளையத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக கோவை சாலை, அண்ணாஜி ராவ் ரோடு, மார்க்கெட், ஊட்டி சாலைகளில் செயல்பட்டு வரும் 40 கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் இருக்கிறதா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது,தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர் கள்,பேப்பர் கப்புகள்,கேரி பேக்குகள், பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட தட்டுகள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்த 8 கடைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் என மொத்தமாக ரூ.80 ஆயிரம் விதித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.மேலும்,அக்கடைகளில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 1215 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் ஆய்வி ன்போது மேட்டுப்பாளையம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன், சுகாதார மேற்பார்வை யாளர் மணி மற்றும் நகராட்சி ஊழியர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மேட்டுப்பா ளையம் நகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை கடை உரிமையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து பேசிய மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் வினோத் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப்பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம்.மீறி விற்பனை செய்வது தெரிய வந்தால் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தங்களது அதிரடி நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
- பரமத்திவேலூரில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்ப டுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
- அதிக அளவில் கடை உரிமையாளர் விற்பனை செய்து வருவதாக நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிக ளுக்கு, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ரகசிய தகவல் தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்-கரூர் செல்லும் சாலையில் பிளாஸ்டிக் பைகள், கப்புகள், கவர்கள், கேரி பேக்குகளை மொத்த விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்ப டுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பைகளை, அதிக அளவில் கடை உரிமையாளர் விற்பனை செய்து வருவதாக நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிக ளுக்கு, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ரகசிய தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர் மணிவண்ணன் தலைமை யில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் சந்தானகிருஷ்ணன், வேலூர் பேரூராட்சி செயல் அலுவ லர் செல்வக்குமார், துப்புரவு ஆய்வா ளர் குருசாமி மற்றும் துப்புரவு பணியாளர்கள் கொண்ட குழுவி னர் நேற்று மாலை பரமத்திவேலூர் 4 ரோடு அருகே உள்ள வெங்க டசாமி (வயது 55) என்பவருக்கு சொந்த மான கடையில் திடீரென புகுந்து சோதனை மேற்கொண்ட னர்.
இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலி தீன் கவர்கள், கேரி பேக்கு கள், பைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள 3 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடை உரிமையாளர் வெங்க டசாமிக்கு ரூ.25 அபராதம் விதிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பைகள், கப்பு கள் பேரூராட்சிக்கு சொந்தமான லாரியில் ஏற்றப்பட்டு பாது காப்பான இடத்தில் வைக்கப் பட்டுள்ளது. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், மீண்டும் விற்பனை செய்தால் கடை உரி மையாளருக்கு 2-வது தவணை யாக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரித்தனர்.