என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Practice numeracy"
- தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் 2-ம் பருவத்திற்கான பயிற்சி வட்டார அளவில் 2 கட்டமாக வட்டார கல்வி அலுவலர் அருண் தலைமையில் நடைபெற்றது.
- இதில் வட்டார வள மைய பார்வையாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
எருமப்பட்டி:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் உள்ள வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வள மையம் சார்பில் எருமப்பட்டி ஒன்றியத்தில் பணியாற்றும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் 2-ம் பருவத்திற்கான பயிற்சி வட்டார அளவில் 2 கட்டமாக வட்டார கல்வி அலுவலர் அருண் தலைமையில் நடைபெற்றது.
பயிற்சி
முதற்கட்டமாக 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு 3, 4 -ந் தேதி ஆகிய 2 நாட்கள் பயிற்சி நடைபெற்றது. 2-ம் கட்டமாக 4-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு 5, 6-ந்தேதிகளில் பயிற்சி நடைபெற்றது.
இதில் வட்டார வள மைய பார்வையாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மணிவண்ணன் பயிற்சியினை பார்வையிட்டு எண்ணும் எழுத்தும் பயிற்சி குறித்த சிறப்பு தகவல்களை வழங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி பயிற்சியை கண்காணித்தார்.
புதுமைகள்
இதில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பாடத்திட்டத்தின் புதுமைகள், மாதிரி வகுப்புகள், கற்றல், துணை கல்விகள் பயன்படுத்தும் உத்திகள், வரைபடம் வரைதல், கடிதம் எழுதுதல் போன்றவற்றை மாணவர்களுக்கு எளிமையாக கற்பித்தல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. கருத்தாளர்களாக எருமப்பட்டி வட்டார ஆசிரியர்கள் செயல்பட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பானுமதி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.
- அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரிய ஆசிரியைகளுக்கு, ‘எண்ணும் எழுத்தும்’ என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
- 90 ஆசிரியர்களுக்கு, எண்ணும் எழுத்தும் 3-ம் பருவ பயிற்சி, வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
வாழப்பாடி:
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரிய ஆசிரியைகளுக்கு, 'எண்ணும் எழுத்தும்' என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாரத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 90 ஆசிரியர்களுக்கு, எண்ணும் எழுத்தும் 3-ம் பருவ பயிற்சி, வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் வழிகாட்டுதல் படி நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், ஒருங்கிணைப்பாளர் முதுநிலை விரிவுரையாளர் நாகலட்சுமி, வட்டார கல்வி அலுவலர்கள் நெடுமாறன், வித்யா, வட்டார மேற்பார்வையாளர் திலகவதி ஆகியோர் முன்னிலையில் கருத்தாளர்கள் பயிற்சி அளித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்