search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • 23-வது வார்டு பகுதி மக்கள் காட்சி மண்டபம் பகுதியில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டுடர்வகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு- வாக்குவாதம் ஏற்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 23-வது வார்டு பகுதியில் கடந்த 3 மாதத்திற்கு மேலாக கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

    சாலை மறியல்

    மேலும் பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுவதுடன் கலங்கலான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் அதனை பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் 23-வது வார்டு பகுதி மக்கள் கலங்களான குடிநீருடன் இன்று நெல்லை - தென்காசி நெடுஞ்சாலையில் காட்சி மண்டபம் பகுதியில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் மறியல் போராட்டத்தில் தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    போக்குவரத்து பாதிப்பு

    அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டுடர்வகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு- வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, 3 நாட்களுக்குள் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக நெல்லை- தென்காசி சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

    • கழிவுக் கிடங்கில் இருந்து நேற்று மாலை 4.10 மணி அளவில் கரும்புகை எழுந்ததை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்துள்ளனா்.
    • கடந்த வாரம் திருப்பூர் காதர்பேட்டை பனியன் பஜாரில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான ஆடைகள் எரிந்து நாசமாகின.

    திருப்பூர்:

    திருப்பூா் புதுப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பின்னலாடை கழிவுக்கிடங்கு உள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்டத் தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தொழிலாளா்கள் குடியிருப்பில் இருந்துள்ளனா். இந்நிலையில், கழிவுக் கிடங்கில் இருந்து நேற்று மாலை 4.10 மணி அளவில் கரும்புகை எழுந்ததை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்துள்ளனா்.

    இதுகுறித்து திருப்பூா் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலா் வி.மோகன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். எனினும் கிடங்கில் பரவிய தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

    இதையடுத்து, திருப்பூா் வடக்கு, அவிநாசி, காங்கயம் மற்றும் ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் இருந்து கூடுதலாக 4 தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் வரை போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகள், எந்திரங்கள் சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த வாரம் திருப்பூர் காதர்பேட்டை பனியன் பஜாரில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான ஆடைகள் எரிந்து நாசமாகின.

    தற்போது பின்னலாடை கழிவுக்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர் தீ விபத்தால் திருப்பூர் பொதுமக்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  

    • தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    • எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 94, 95-வது வார்டு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. திருநகர் பகுதியில் பொதுமக்கள், நடைபயிற்சி செல்வோர், மாணவ-மாணவிகள், பெண்கள் அதிகளவில் சென்று வரும் சாலைகளில் நாய்கள் கூட்டமாக திரிகின்றன.இவைகள் வாகனங்களில் செல்ப வர்களையும் துரத்துகின்றன. இதனால் அவர்கள் பயந்து கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது.

    மேலும் வீட்டில் வளர்க்கப்படும் கோழி, ஆடு, வாத்து போன்ற வளர்ப்பு பிராணிகளை நாய்கள் தூக்கிச்செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்துட னேயே வெளியே சென்று வருகின்றனர்.

    நாய்களுக்கு கருத்தடை செய்யப் பட்டு அவற்றின் இனப்பெருக்கம் தடுக்கப்படுவதாக மாநக ராட்சி சார்பில் கூறப்பட்டா லும், தொடர்ந்து தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    எனவே கூட்டமாக திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.
    • கூண்டை சுற்றிலும் உள்ள கால்தடத்தை பார்க்கும் போது, சிறுத்தை கூண்டை சுற்றிலும் வட்டமிட்டபடி வந்துள்ளது.

    காங்கயம்,:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊதியூர் வனப்பகுதிக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு வந்த ஒரு சிறுத்தை பதுங்கியிருந்து மலையடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.

    மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், ட்ரோன்கள் கேமராக்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.

    இந்தநிலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிறுத்தையை பார்த்ததாக தகவல் தெரிவித்தனர். அந்த இடங்களுக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வந்தனர். கடந்த சில நாட்களாக ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆட்டுக்குட்டிகள் தொடர்ந்து மாயமாகி வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று கால்தடங்களை ஆய்வு செய்து சிறுத்தை வேட்டையாடியதாக உறுதிப்படுத்தினர். இதனால் அச்சம் அடைந்த ஊதியூர் பகுதி மக்கள் சிறுத்தையின் தொடர் வேட்டையை கண்காணிக்க தாங்களாகவே முன்வந்து அவர்களது தோட்டத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள விவசாயி கார்த்தி என்பவரது தோட்டத்தில் புகுந்த சிறுத்தை மெதுவாக நடந்து சென்று இரை தேடிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தினசரி கூண்டு இருக்கும் பகுதிக்கு வரும் சிறுத்தை உள்ளே ஆடுகளை பாதுகாப்பான முறையில் அடைத்து வைத்து இருப்பதை பார்த்து விட்டு செல்கிறது. இதனால் சிறுத்தையை பிடிக்க விடாமுயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் மலையடிவார பகுதியில் வைக்கப்பட்ட கூண்டு ஒன்றை சுற்றிலும் சிறுத்தையின் கால்தடம் பதிந்திருந்தது. இந்த கால்தடம் சிறுத்தை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் கூண்டை சுற்றிலும் உள்ள கால்தடத்தை பார்க்கும் போது, சிறுத்தை கூண்டை சுற்றிலும் வட்டமிட்டபடி வந்துள்ளது. ஆனால் கூண்டுக்குள் சிக்காமல் போக்கு காட்டி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இது வனத்துறையினருக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டார்.
    • முத்துபாண்டி என்பவரை பழிக்கு பழி வாங்க வந்ததாக கூறினார்.

    விருதுநகர்

    சிவகாசி தனியார் ஆஸ்பத்திரி பின்புறமுள்ள பகுதியில் சிவகாசி நடராஜர் காலனியை சேர்ந்த மகேந்திரன்(24), தெற்கு தெருவை சேர்ந்த மகேந்திரகுமார், முடங்கிநாடார் தெருவை சேர்ந்த சிவகிரி(20) ஆகியோர் சாலையில் நின்று கொண்டு அரிவாளை காட்டி அந்த பகுதியில் சென்ற பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்தனர். அந்த பகுதியில் ரோந்து சென்ற டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் அவர்களை பிடித்து விசாரித்தார். அவர் கொடுத்த புகாரின்பேரில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    சிவகாசி வெள்ளைசாமி யாபுரம் தெருவை ேசர்ந்த வர் தினேஷ்குமார்(24). இவர் சிவகாசி வெம்பக் கோட்டை ரோட்டில் உள்ள அய்யனார் காலனி பகுதியில் அரிவாளுடன் நின்று கொண்டு அந்த பகுதியில் சென்றவர்களை அச்சுறுத்தி கொண்டிருந்தார். தகவல் அறிந்த டவுன் ேபாலீசார் அங்கு வந்து தினேஷ்குமாரை பிடித்து விசாரித்தனர். அவர் அந்த பகுதியை சேர்ந்த முத்துபாண்டி என்பவரை பழிக்கு பழி வாங்க வந்ததாக கூறினார். போலீசார் அவரை கைது செய்தனர்.

    • சாலையோர ‘பார்’களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • டாஸ்மாக் நிர்வாகம் நினைத்தால் ரோட்டில் மது அருந்துவது நிச்சயம் குறையும்.

    சென்னை மாநகரில் பார்களை ஏலம் விடுவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் பார் உரிமையாளர்களுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சினையால் பார்கள் மூடப்பட்டுள்ளன.

    சென்னையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மாலை நேரங்களில் பார் களில் கூட்டம் அலை மோதும். குளிர்சாதன வசதிக்கொண்ட பார்கள் மற்றும் சாதாரண பார்கள் என இரண்டிலுமே மதுபிரி யர்கள் நிரம்பி இருப்பார்கள். பல மணி நேரங்களை பார் களிலேயே செலவழித்து... சில பாட்டில்களை உள்ளே தள்ளிவிட்டு 'ரிலாக்ஸ்' ஆக உற்சாகத்தோடு பொழுதை போக்கும் மது பிரியர்கள் பார்கள் மூடப்பட்டுள்ள தால் திண்டாடி வருகிறார் கள்.

    பார்கள் மூடப்பட்டிருந்த போதிலும் டாஸ்மாக் மதுக் கடைகள் எப்போதும் போல திறக்கப்பட்டு வா... வா... என்று அழைப்பதால் குடி மகன்கள் கையில் பாட்டிலை வாங்கி வைத்துக்கொண்டு எங்கே போய் குடிப்பது? என தவிக்கும் நிலையே காணப் படுகிறது.

    இதனால் சென்னையில் பல இடங்களில் சாலையில் நின்று மது குடிப்பது என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.

    முகப்பேர் சர்ச் ரோடு, சூளைமேடு நெல்சன்மாணிக் கம் ரோடு, பழைய வண்ணா ரப்பேட்டை மேயர் பசுதேவ் தெரு, அடையாறு கெனால் பேங்க் ரோடு மற்றும் எழும் பூர் பகுதியில் உள்ள டாஸ் மாக் மதுக்கடை என சென்னை மாநகரில் அனைத்து கடைகள் முன்பும் நின்று கொண்டு மதுபிரியர்கள் குடித்து கும்மாளமடித்து வருகிறார் கள். கடைகளில் நின்று டீ குடிப்பது போல தெருக் களை பார்களாகவே நினைத்து ஹாயாக அமர்ந்து குடிமகன்கள் மது அருந்தி வருகிறார்கள்.

    டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கிவிட்டு சாலையோரமாக அமர்ந்து கொண்டு ரோட்டில் செல் லும் பள்ளி மாணவ-மாண விகள் மற்றும் குழந்தைகள் என யாரைப் பற்றியும் கவலைப்படாமல் 'சைடிஸ்' சகிதமாக உற்சாக பானத்தை உள்ேள தள்ளிவிட்டு ரோட்டில் போகிறவர்களை பார்த்து "இன்னாப்பா... மொறைக்கிற" என்று கேள்வி கேட்பதால் நமக் கெதுக்கு வம்பு என பலர் ஒதுங்கி செல்வதையும் பார்க்க முடிகிறது.

    ரோட்டில் நின்று பொது மக்களுக்கு இடையூறாக மது அருந்துபவர்களை போலீ சார் எச்சரித்து விரட்டி விடுவது உண்டு. ஆனால் தற்போது அதுபோன்று எந்தவிதமான இடையூறும் செய்யப்படுவதில்லை.

    இதனால் குடிமகன்கள் எந்தவித பயமோ... கூச்சமோ இன்றி பொதுவெளி யில் குடிப்பது அதி கரித்துக் கொண்டே செல்கிறது.இப்படி மதுஅருந்தும் குடி மகன்கள் ஊறுகாய் பாக் கெட், மிக்சர் பாக்கெட், சில்லி சிக்கன் என 'சைடிஸ்' களை உள்ளே தள்ளி விட்டு வெற்று கவர்களை ரோட்டி லேயே வீசிவிட்டு சென்று விடுகிறார்கள்.

    அதேபோன்று காலி மது பாட்டில்களையும் ரோட்டி லேயே போட்டுவிட்டு சென்று விடுவதால் 'பார்' களில் குவிய வேண்டிய குப்பைகள் ரோட்டில் சேர்ந்து கொண்டிருக்கிறது.

    சென்னையில் கடந்த சில நாட்களாகவே டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டு இது போன்ற சாலையோர 'பார்'களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இதனால் குடியிருப்பு வாசிகளும், குடும்பத்தோடு வெளியில் செல்பவர்களும் முகம் சுழிப்பதுடன் இந்த பிரச்சினைக்கு டாஸ்மாக் நிர்வாகத்தினர் தீர்வு காண உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான அன்ப ரசனிடம் இந்த பிரச்சி னைக்கு தீர்வு தான் என்ன என்று கேட்டபோது, டாஸ் மாக் நிர்வாகம் நினைத்தால் ரோட்டில் மது அருந்துவது நிச்சயம் குறையும் என்றார்.

    இதற்கு முன்பு 2014 மற்றும் 2021-ம் ஆண்டுகளி லும் இதுபோன்ற பிரச் சினை இருந்தது. அப்போது பார்களுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்பட்டு குடி மகன்கள் பார்களில் போய் குடித்தார்கள். இப்போதும் அதுபோன்று செய்யலாம் என்றார்.

    குடிமகன்களின் திண் டாட்டத்துக்கு டாஸ்மாக் நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

    • மதுக்கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மேல்நிலைப்பள்ளி அருகே ஒரு மதுக்கடை உள்ளது.

    கீழக்கரை

    ஏர்வாடி தர்கா செல்லும் வழியில் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் மேல்நிலைப்பள்ளி அருகே ஒரு மதுக்கடை உள்ளது. இங்கு ஏராளமான மதுப்பிரியர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இதனால் மாலை நேரத்தில் பள்ளி விட்டு செல்லும் மாணவிகள், பணிமுடிந்து செல்லும் பெண்கள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்ல வேண்டி உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பள்ளி அருகே உள்ள மதுக் கடையால் பொதுமக்களுக்கு தொந்தரவு அதிகரித்து வருகிறது. பெண்கள், மாணவர்கள் அந்த சாலையில் தயக்கத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது. மேலும் அந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.

    ஆகவே அந்த மதுக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துவிட்டோம். எங்களது கோரிக்கையை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நாங்கள் குடியிருக்கும் இடத்தை எங்களிடமே திருப்பி வழங்க வேண்டும் .
    • வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    திருவையாறு கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருவையாறு பேரூராட்சி இரண்டாவது வார்டில் உள்ள கஸ்தூரிபாய் நகரில் சுமார் 16 குடும்பங்கள் கடந்த 70 வருடங்களாக வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருந்து வரும் வீட்டிற்கும் முறையாக அரசிற்கு வரி செலுத்தி வருகிறோம்.

    நாங்கள் குடியிருக்கும் தெருவிற்கு சாலை வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகள் தமிழக அரசால் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் எங்களின் பல குடும்பங்களுக்கு பசுமை வீடுகளையும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

    நாங்கள் அனைவரும் விவசாய தின கூலி .

    இந்நிலையில் திருவையாறு சுற்றுவட்ட சாலை அமைப்பதற்கு எங்களுக்கு சொந்தமான இடத்தில் இருந்து எங்களை அப்புறப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு சாலை விரிவாக்கம் செய்து வருகிறது.

    நாங்கள் குடியிருக்கும் தெருவில் எங்களின் வீடுகளுக்கு அருகாமையில் சுற்றுவட்ட பாதை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அரசு அதிகாரிகள் அளவீடு செய்துள்ளனர்.

    இதனால் எங்களில் சுமார் 15 குடும்ப ங்களின் வீடுகள் மற்றும் எங்கள் கிராமத்தில் உள்ள தில்லை காளியம்மன் கோவிலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே நாங்கள் குடியிருக்கும் இடத்தை எங்களிடமே திருப்பி வழங்க வேண்டும் .

    எங்களது இடத்தின் அருகே ஏராளமான காலியிடங்கள் உள்ளது.

    இந்த இடத்தில் நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்ய சாலை அமைத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி மாநகராட்சி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    • கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட் பட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேயர் இந்திராணி தலைமை யில் நடைபெற்றது. அப் போது மதுரை மாநகராட்சி மண்டலம் 2-க்கு உட்பட்ட விளாங் குடி 20-வது வார்டு பகுதி களுக்குட்பட்ட 116 தெரு பகுதிகளில் அடிப் படை வசதிகளை நிறை வேற்றக் கோரி பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.

    மேலும் இப்பகுதியில் சாக்கடை, கழிவு நீர் பிரச் சினை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருவதால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். இதனை சரி செய்யாத மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து கவுன்சிலர் நாக ஜோதி சித்தன் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட பொது மக்கள் மண்டல அலு வலகத்தை முற்றுகையிட்டு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பதாகை களை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மேயர், ஆணையாளரிடம் மனு அளிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த னர். தொடர்ந்து மனு அளிக்க மண்டல அலுவல கத்திற்குள் வந்த பொது மக்கள் மேயர் மற்றும் அதி காரிகள் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் பொது மக்கள் சார்பில் கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தார்.

    மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர், ஆணையா ளர் ஆகியோர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் தனர். அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    அதே போல் மானகிரி 33-வது பகுதியில் கடந்த 6 மாதமாக குடிநீர் வராததை கண்டித்தும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்ப் பாட்டம் நடத்தினர். இத னால் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நீதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள நெட்டுக்குளம் கிராமத்தில் நீதி விநாயகர் கோவிலில் கும்பாபிஷே விழா நடந்தது. இதனை முன்னிட்டு திருவேடகம் கோபால கிருஷ்ணன் ஜோசியர் தலை மையில் 2 நாட்கள் யாக பூஜை நடந்தது. தொடர்ந்து மேள தாளத்்துடன் சிவாச்சாரி யார்கள் புனித நீர் குடங்க ளுடன் கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் கோபுர கலசத்தில் பூஜைகள் செய்து கும்பாபிஷேகம் நடந்தது.

    பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

    • நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
    • மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் மனு அளிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை நகரிய உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை நகர் பொதுமக்கள் நலன் கருதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை ( செவ்வாய்க்கிழமை) தஞ்சை கோர்ட்டு சாலையில் உள்ள நகரிய செயற்பொ றியாளர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

    எனவே தஞ்சை நகரிய கோட்டத்திற்கு உட்பட்ட நகர் எல்லையான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கரந்தை, பள்ளியக்கிரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம் ,மேரீஸ் கார்னர், அருளானந்த நகர், பர்மா காலனி ,நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர் ,பழைய வீட்டு வசதி வாரியம், காந்திஜி ரோடு, மருத்துவக் கல்லூரி ரோடு, நீலகிரி, மானோஜிபட்டி, ரகுமான் நகர், ரெட்டிபாளையம் ரோடு, சிங்கப்பெருமாள் கோவில், ஜெபமாலைபுரம், வித்யா நகர், மேல வெளி பஞ்சாயத்து, தமிழ் பல்கலைக்கழக வளாக குடியிருப்பு, மாதா கோட்டை சாலை, புதிய பஸ் நிலையம், திருவேங்கட நகர், இனாத்துகான்பட்டி, நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய இடங்களை சேர்ந்த மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த பாடல் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
    • சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் போதை பொருள் தடுப்பு குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தஞ்சையில் நடிகர் விஜய் பாடலை மாற்றி அமைத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

    கடந்த 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் லியோ திரைப்படத்தின் பாடலான நான் ரெடி தான் வரவா? அண்ணன் நான் கிளம்பி வரவா? என்ற வரிகளுடன் கூடிய பாடல் வெளியானது.

    இந்த பாடல் அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்று உள்ளது.

    இதனால் இந்தப் பாடல் வரிகளைக் கொண்டு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி னால் கண்டிப்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் என்று தஞ்சாவூர் போலீசார் முடிவு செய்தனர்.

    இதற்காக பாடல் வரிகளில் சிலவற்றை மட்டும் மாற்றினர்.

    அதன்படி நான் ரெடி தான் வரவா? போலீஸ் நான் கிளம்பி வரவா? என்று வாசகமாக மாற்றி அமைத்துள்ளனர்.

    இந்த விழிப்புணர்வு வாசகம் போதைப் பழக்கம் மற்றும் போதை பயன்பாடு குறித்து புகார் தெரிவிப்பதற்காக வெளியிடப்பட்டுள்ளது.

    புகார் தெரிவிக்க 9042839147 என்ற செல்போன் எண்ணும் கொடுத்துள்ளனர்.

    தற்போது இந்த விழிப்புணர்வு போஸ்டர் வரிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

    போலீசுக்கும், பொதும க்களுக்கும் நல்லுறவு ஏற்படுத்தவும், போதைப் பொருட்களை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்பதை உணர்த்தவும் டிரெண்ட் ஆகும் திரைப்படப் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பயன்படுத்திக் கொள்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    போலீசார் இந்த விழிப்புணர்வு வாசகம் கண்டிப்பாக போதை பொருள் பயன்பாட்டை தடுக்கும் என்பதற்கு மாற்று கருத்து இல்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×