search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • சேஷமூலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
    • இலவச பட்டா வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் சேஷமூலை ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    அதில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கலந்து கொண்டார்.

    அப்போது, சேஷமூலை ஊ.ஒ.தொடக்கப் பள்ளிக்கு வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும். இலவச பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொது மக்கள் முன்வைத்தனர்.

    அவற்றை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென எம்.எல்.ஏ கூறினார்.

    இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சரக வருவாய் ஆய்வாளர், உதவி பொறியாளர் மற்றும் தென்பிடாகை, சேஷமூலை கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • காளிகுமாரசாமி கோவிலுக்கு அருகில் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது.
    • சாலையில் செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.

    வீரபாண்டி:

    திருப்பூா் வீரபாண்டி அருகே உள்ள பலவஞ்சிபாளையத்தில் இருந்து காளிகுமாரசாமி கோவிலுக்கு செல்லும் சாலையை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.இந்தத் சாலையானது தாராபுரம் சாலைக்கு சென்றடைவதால் வாகனப் போக்குவரத்தும் அதிக அளவில் உள்ளது.

    காளிகுமாரசாமி கோவிலுக்கு அருகில் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு வரும் மதுப்பிரியா்கள் மதுவை அருந்திவிட்டு காலி பாட்டில்களை சாலைகளில் வீசிச் செல்கின்றனா். மேலும் பகல் நேரங்களில் சாலையோரம் அமா்ந்து மது அருந்துவதால் இந்த சாலையில் செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. ஆகவே, மதுபானக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    உடுமலை :

    உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி வெளி மாவட்ட பஸ்களும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கிறது.

    இதன் காரணமாக காலை முதல் இரவு வரையிலும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது .இந்த நிலையில் பஸ் நிலையத்தில் பொது மக்களுக்கான அடிப்படை அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஏழை எளிய மக்கள் தாகத்தோடு திரும்பி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அடிப்படை அத்தியாவசிய தேவைகளில் குடிநீரின் பங்கு முக்கியமானதாகும்.ஆனால் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. பொது மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு தண்ணீர் வழங்கக்கூடிய எந்திரம் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து உள்ளது. அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் குடிநீர் வசதி இல்லாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். கோடை வெப்பம் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் உடலின் இயக்கத்திற்கு தண்ணீரின் பங்கு முக்கியமானதாகும்.அதை உணர்ந்தாவது நிர்வாகம் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருவதற்கு முன் வர வேண்டும்.

    அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் தண்ணீர் வழங்கும் எந்திரம் பழுதடைந்தும் காட்சி பொருளாகவும் மாறி வருகிறது. எனவே உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் செயல்படாமல் உள்ள குடிநீர் வழங்கும் எந்திரங்களை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் அரசு ஊழியர்கள்-பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
    • சட்டம்- ஒழுங்கு கெட்டுள்ளதால் மக்கள் அச்சத்துடன் செல்லக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவ லக வாயிலில் கோடை காலத்தை முன்னிட்டு நீர்-மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. அ.தி.மு.க. இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.

    அ.தி.மு.க.அமைப்புச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி உள்ளிட்ட பழங்கள் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், பெண் போலீசார் என அரசு ஊழி யர்கள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. சட்டம்- ஒழுங்கு கெட்டுள்ளதால் மக்கள் அச்சத்துடன் செல்லக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மக்கள் ஏற்கவில்லை. தொண்ட ர்களும் ஏற்க வில்லை என்பது அவர் நடத்திய மாநாட்டில் தெளி வாக தெரிந்தது.

    நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் அனைத்து நாடாளுமன்ற தொகுதிக ளிலும் அ.தி.மு.க. தலைமை யிலான கூட்டணியே வெற்றி பெறும். கூட்டணி குறித்து தலைமைக் கழகம் அறிவிக்கும். மதுரையில் நடைபெற உள்ள மாநாடு இதுவரை தமிழகத்தில் நடந்தி ராத திருப்புமுனை மாநாடாக அமையவுள்ளது. 50 லட்சம் பேர் அங்கு திரண்டு புதியதொரு சகாப்தத்தை உருவாக்க உள்ளனர். அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பகுதி துணைச்செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர் பொன்.முருகன், நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வெய்க்காலிபட்டியில் இயங்கி வந்த மதுபான கடை கடந்த 3 நாட்களாக அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது.
    • இதையடுத்து சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மகிழச்சியடைந்தனர்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட கடையம் பெரும்பத்து ஊராட்சி வெய்க்காலிபட்டியில் இயங்கி வந்த மதுபான கடையால் அப்பகுதியில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வந்தது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் கூறி சம்பந்தபட்ட அதிகாரிகள் மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனிடமும் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மகிழச்சியடைந்தனர். மேலும் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனை ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலாெபரமசிவன் தலைமையில்,ெபாதுமக்கள் நேரில் சந்தித்து மதுக்கடையை மூடுவதற்கும், சபரி நகர் பகுதிக்கு பகுதி நேர ரேஷன் கடை கிடைப்பதற்கு பரிந்துரை செய்ததற்கும் நன்றி தெரிவித்தனர். இதில் வார்டு உறுப்பினர்கள் ஜெய மாரியம்மன், ரஞ்சிதா, பிரபு, ராஜேஸ்வரி, வேல்ராஜ், லட்சுமி வினிங்ஸ்டன் ,துணைத்தலைவர் அரசகனிரவி, தொழிலதிபர் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.
    • வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், டிரோன்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர்.

    காங்கயம் :

    காங்கயம் ஊதியூர் வனப்பகுதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வந்த ஒரு சிறுத்தை அங்கேயே பதுங்கி மலையடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர். மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், டிரோன்கள் கேமராக்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர்.

    ஆனால் சிறுத்தை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகாமலும், கூண்டுகளில் சிக்காமலும், வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு மலையடிவார பகுதியில் சிறுத்தை மீண்டும் தன் வேட்டையை தொடங்கியது. ஊதியூர்-காசிலிங்கம் பாளையம் சாலை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கட்டியிருந்த நாயை சிறுத்தை தூக்கிச் சென்றது. இதையடுத்து ஊதியூர் வனப்பகுதியில் இன்னும் சிறுத்தை பதுங்கி இருப்–பது உறுதி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வனப்பகுதிகளில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள 4 கூண்டுகளை தயார்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர், அதன்படி கூண்டுக்குள் மாட்டு இறைச்சி மற்றும் உயிருடன் நாயை பாதுகாப்பான முறையில் வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் கூண்டுக்கு அருகே கூட சிறுத்தை வரவில்லை.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- கூண்டுகளில் வைக்கப்பட்ட இறைச்சிகளை சிறுத்தை வந்து சாப்பிடவில்லை. வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மான்கள் கூட்டமாக சுற்றி வருகிறது. ஒருவேளை ஊதியூர் வனப்பகுதியில் சுற்றித்திரியும் மான் கூட்டங்களை சாப்பிட்டு வரலாம். ஊதியூர் பகுதியில் தற்போது தெருநாய்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தெருநாய்களை சிறுத்தை வேட்டையாடி வரலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதன் காரணமாக கூண–டுகளில் வைக்கப்பட்டுள்ள இறைச்சிகளை சாப்பிட சிறுத்தை வராமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • குளத்தில் மீன் பிடித்த போது வலையில் முதலை சிக்கியது.
    • அதனை பிறகு குளத்திலேயே விட்டு விட்டு சென்று விட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காட்டில் சுமார் 5 ஏக்கரில் புதுக்குளம் அமைந்துள்ளது.

    இந்த குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலை இருப்பதாக தகவல் பரவியது.

    இதையொட்டி கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேதாரண்யம் தீயணைப்பு துறையினர் புதுக்குளம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இந்த குளத்தில் திருட்டுத்தனமாக ஒரு சிலர் மீன் பிடித்த போது வலையில் முதலை சிக்கியதாகவும், அதனை பிறகு குளத்திலேயே விட்டு விட்டு சென்றதாகவும் தகவல் கிடைத்தது.

    இதையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர், இந்த குளத்தில் முதலை இருப்பதால் பொதுமக்கள் குளத்தில் இறங்க வேண்டாம் என குளத்தின் அருகே எச்சரிக்கை பலகை வைத்தனர்.

    தொடர்ந்து, இந்த குளத்தை கண்கா ணித்து வருவதாகவும் வனத்துறை அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.

    • அங்காடியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    • கீழ்புத்தூரில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றதையும் ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் ஆலங்குடி கொத்தாட்டையில் புதிய நெற்களம் கட்டும் பணி குறித்தும், கொத்தடடை கிராமத்தில் ஊராட்சி புதிய அங்கன்வாடி கட்டிடத்தின் கட்டுமான பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    ஆலங்குடி ஊராட்சி அருள் மொழி பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புரைமைக்கப்பட்ட கழிவறை கட்டிட பணி குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், ஆலங்குடி ஊராட்சி கொத்தட்டையில் உள்ள அங்கனவாடியில் பயிலும் குழந்தைகளின் வளர்ச்சி குறித்தும், கன்னித்தோப்பு பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை குறித்தும் ஆய்வு நடத்தினோம்.

    ஆலங்குடி ஊராட்சியில் உள்ள பொது விநியோகத் திட்ட அங்காடியில் பொது மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர் ஒன்றியம் மாரியம்மன் கோவில் சமுத்திரம் ஏரியில் நீர்வளத்துறை கல்லணை கால்வாய் கோட்டம் சார்பில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், அம்மாபேட்டை பேரூராட்சி சார்பில் தமிழ்நாடு சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புத்தூரில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றதையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை தேர்வுநிலை பேரூராட்சி பேருந்து நிலையம் அருகே மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் அம்மாபேட்டை தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார்.

    இந்த ஆய்வின்போது பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, அம்மாபேட்டை செயல் அலுவலர் ராஜா, வட்டார வார்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மதியரசன், கூத்தரசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் கடை வீதி அருகே குளக்கரைத் திடல் உள்ளது. கடைவீதி மற்றும் மெயின்ரோடு பகுதியில் ஏராளமான நகைக்கடைகள், துணிக்கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட கடைகள் உள்ளன.
    • இந்த கடைகளுக்கு பொருட்கள் வாங்க மோட்டார்சைக்கிள் மற்றும் கார்களில் வரும் பொதுமக்கள், குளக்கரைத்திடலில் வாகனங்களை நிறுத்தி விட்டு பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வாகனங்களை எடுத்துச் செல்வது வழக்கம்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய கோவில்களில் தேர்த்திருவிழா நடைபெறும். பங்குனி உத்திரத்திற்கு அடுத்த நாள் முப்பெரும் தேரோட்டம் நடைபெறும்.

    நாமக்கல் கடை வீதி அருகே குளக்கரைத் திடல் உள்ளது. கடைவீதி மற்றும் மெயின்ரோடு பகுதியில் ஏராளமான நகைக்கடைகள், துணிக்கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு பொருட்கள் வாங்க மோட்டார்சைக்கிள் மற்றும் கார்களில் வரும் பொதுமக்கள், குளக்கரைத்திடலில் வாகனங்களை நிறுத்தி விட்டு பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வாகனங்களை எடுத்துச் செல்வது வழக்கம்.

    மேலும் மாலை நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் குளக்கரைத்திடலுக்கு வந்து நாமக்கல் மலை ஓரமாக அமர்ந்து ஓய்வெடுத்துச் செல்வது வழக்கம். நாமக்கல் நகருக்கு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வருகை தரும்போது இந்த குளக்கரைத்திடலில் தான் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

    ஏற்கனவே குளக்கரைத்திடல் குண்டும் குழியுமாக சேதமடைந்து கிடந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய அ.தி.மு.க எம்.எல்.ஏ பாஸ்கரின் முயற்சியால் குளக்கரைத்திடல் முழுவதும் சீரமைக்கப்பட்டு பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டு உள்ளது. நாமக்கல்லில் இந்த ஆண்டு, முப்பெரும் தேர்த்திருவிழா கடந்த வாரம் நிறைவு பெற்றுவிட்டது. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மெயின் ரோட்டில் உள்ள குளக்கரைத்திடலில், தற்காலிக தேர் கடைகள் அமைப்பதற்காக மற்றும் பந்தல் அமைப்பதற்காக பேவர் பிளாக் தளத்தில் குழிகள் தோண்டி பந்தல் கால் நடப்படுவதால் தரைத்தளம் சேதமடைகிறது. இதனால் பிற்காலத்தில் குளக்கரைத்திடல் மீண்டும் குண்டும் குழியுமாக மாறி, முழுமையாக சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தற்போது கடை அமைக்க ஒப்பந்தம் எடுத்துள்ளவர்கள் குளக்கரைத்திடலுக்குள் வாகனங்கள் வரக் கூடாது என்று தடை செய்துள்ளனர். இதனால் கடைவீதி மற்றும் மெயின் ரோடு பகுதிகளில் உள்ள கடைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் தங்களின் டூ வீலர்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த முடியால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலை ஒரு மாதம் வரை நீடித்தால் பொதுமக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பொதுமக்களின் நலன் கருதி தேர் கடையை, குளக்கரை திடலில் அமைக்காமல், பார்க் ரோட்டில் உள்ள பூங்கா பகுதியில் மாற்றியமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • முத்துப்பேட்டை பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்தனர்.
    • மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உள்பட 4 பேரை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவின்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுரையின்படி, நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் தலைமையில் காப்பக மீட்பு குழுவினர் விஜயா, சுபா, சரவணன், சங்கர், மைக்கேல் ஆகியோர் துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், துணை தலைவர் சிவக்குமார், முத்துப்பேட்டை வர்த்தக சங்க கழக தலைவர் கண்ணன், முன்னாள் தலைவர் மெட்ரோ மாலிக், பத்திரிக்கையாளர் முகைதீன் பிச்சை, வக்கீல் தீன் மற்றும் கவுன்சிலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆகியோர் இணைந்து முத்துப்பேட்டை பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உள்பட 4 பேரை மீட்டு சிகிச்சை அளிப்பதற்காக நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.

    இதனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
    • ரூ. 1 லட்சத்து 81 ஆயிரத்து 114 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்ட த்தில், பொது மக்கள் பட்டாமாறுதல், புதியகுடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 163 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

    பொதுமக்க ளிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 9 மாற்றுத்தினாளிகளுக்கு சுயதொழில் வங்கி கடன் மானியம் ரூ.178334 மற்றும் காதொலி கருவி வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு ரூ.2780 மதிப்பிலான காதொலி கருவி என மொத்தம் ரூ. 1 லட்சத்து 81 ஆயிரத்து 114 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், சமூக பாதுகாப்புத் திட்டம் தனிதுணை ஆட்சியர் லதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சமீப காலமாக பணியாளர் பற்றாக்குறை காரணமாக நாய்கள் பிடிக்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
    • சாலைகளில் நடந்து செல்வோரை துரத்தி சென்று நாய்கள் அச்சம் ஏற்படுத்தி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டுகளில் சுற்றி திரியும் நாய்களை கடந்த காலங்களில் பிடித்து சென்று கருத்தடை சிகிச்சை கொடுத்து மாற்று இடங் களில் விட்டுவிடும் பணி வழக்கமாக நடந்து வந்தது.

    ஆனால் சமீப காலமாக பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரண ங்களுக்காக சாலைகளில் சுற்றி திரியும் நாய்கள் பிடிக்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதன் காரணமாக மாநகரின் ஒவ்வொரு பகுதிகளிலும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து அவற்றின் தொந்தரவும் கூடி வருகிறது.

    இந்த நிலையில் நெல்லை மாநகராட்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் நாள்தோறும் சாலைகளில் சுற்றி தெரியும் நாய்களால் பொதுமக்கள் பலர் அவதிக்குள்ளா கின்றனர். சாலைகளில் நடந்து செல்வோர், இருசக்கர வாகனத்தில் செல்வோரை துரத்தி சென்று நாய்கள் அச்சம் ஏற்படுத்தி வருகிறது.

    மேலும் சாலைகளில் செல்வோரை வெறிநாய்கள் கடிக்கும் அவல நிலையும் நாள்தோறும் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சமீபத்தில் நெல்லை வண்ணார்பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் உள்ள உணவ கத்தில் உணவு வாங்கிக் கொண்டு வெளியே வந்த போது நாய்கள் அவரை துரத்திச் சென்று காலில் கடித்துவிட்டது.

    இதனால் காயமடைந்த அவரை மீட்டு அப்பகுதி மக்களால் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். இதே போல் பலரையும் சாலை களில் சுற்றித் திரியும் வெறி நாய்கள் கடித்து வருவ தாகவும், எனவே நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×