search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohit sharma"

    • இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது.
    • இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி இருந்தது.

    அமெரிக்கா மற்றும் கரீபியனில் நடைபெற இருக்கும் 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ராக்கோட்டில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை ஜெய் ஷா வெளியிட்டார்.

    கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவி கோப்பையை நழுவவிட்டது. இதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடரில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி இருந்து கொண்டே வந்தது.

     


    "2023 அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாம் உலகக் கோப்பை வெல்லவில்லை என்ற போதிலும், தொடரச்சியாக பத்து போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் நம் மனங்களை வென்றனர். 2024-ம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையில் இந்திய தேசிய கோடி உயர பறக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்," என்று ஜெய் ஷா தெரிவித்தார்.

    இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்த இருப்பது உறுதியாகி இருக்கிறது. 

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் மேக்ஸ்வெல் சதம் அடித்தார்.
    • இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அடிலெய்டு:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

    தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது, இதனால் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்தில் மேக்ஸ்வெல் சதம்(120) அடித்ததன் மூலம் ரோகித் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரோகித் (5 சதம்) சாதனையை மேக்ஸ்வெல் (5 சதம்) பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக சூர்யகுமார் யாதவ் ( 4 சதம்), பாபர் அசம் (3 சதம்), காலின் முன்ரோ (3 சதம்) ஆகியோர் உள்ளனர்.

    மேலும் நாட் அவுட் மூலம் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் முதல் இடத்திலும் ரோகித் 2-வது இடத்திலும் உள்ளனர். இதுபோக 4-வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் (117), பாப் டு பிளெசிஸ்(119) சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

    • ஐபிஎல் ஏலம் நடந்து முடிந்ததில் இருந்தே மும்பை இந்தியன்ஸ், ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா ஆகியோர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றனர்.
    • ரோகித்- பாண்ட்யா ஆகியோர் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடரவில்லை என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஐபிஎல் தொடர் ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெறும். அந்த வகையில் இந்த தொடரின் 17-வது சீசன் எப்போது நடக்கும் என்பதற்கான அதிகாரபூர்வ தேதி இன்னும் வெளியிடவில்லை. ஆனாலும் போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை எனபது சரியாக தெரியவில்லை.

    ஐபிஎல் ஏலம் நடந்து முடிந்ததில் இருந்தே மும்பை இந்தியன்ஸ், ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா ஆகியோர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றனர்.

    இந்நிலையில் மும்பை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ரோகித் கேப்டனாக செயல்படாதது குறித்து பேட்டியளித்தார். இதற்கு ரோகித்தின் மனைவி ரித்திகா எதிர்ப்பு தெரிவித்தது பல விமர்சனங்களை சந்தித்தது. இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு கூட ஆகாத நிலையில் ரோகித் - பாண்ட்யா ஆகியோர் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடரவில்லை என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இது தொடர்பான செய்தி வதந்தி எனவும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்ந்ததில்லை என்று சிலரும், ரோகித்தை பின்தொடர்வதை நிறுத்தியது ஹர்திக் தான் என்றும் சிலரும் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

    • காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து முகமது சமி விலகினார்.
    • முகமது சமியிடம் உலகில் சிறந்த கேப்டன் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி, காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். டெஸ்ட் போட்டிகளில் ஸ்விங் செய்து எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டும் அவர் இந்த தொடரில் இல்லாதது வருத்தமான விஷயம் தான்.

    இந்நிலையில் முகமது சமியிடம் உலகில் சிறந்த கேப்டன் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சமி கூறியது, இது மிகவும் கடினமான கேள்வி. சிறந்த கேப்டன் யார் என்று கூறுவது என்றால் மற்றவருடன் ஒப்பிடுவது போல இருக்கும். அது தவறாக மாறிவிடும். உலகில் வெற்றிகரனமான கேப்டன் யார் என்று கேட்டால் அது டோனி என்று சொல்லுவேன். அவரை போல யாரும் வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள் என்று சமி கூறினார்.

     

    டோனி தனது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2020-ம் ஆண்டு ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த முடிவை இந்தியாவில் பல ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாமல் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள்.
    • கேப்டன் என்ற எந்த நெருக்கடியும் இல்லாமல் அவர் களத்தில் சாதாரண வீரராக விளையாடி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்.

    மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாத ரோகித் ரசிகர்கள் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தனர். அதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதள கணக்கை பின் தொடர்வதை நிறுத்தி விட்டார்கள்.

    இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்ட காரணத்தை மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பவுச்சர் கூறியதாவது:-

    இது முழுக்க முழுக்க கிரிக்கெட்டை வைத்து எடுக்கப்பட்ட முடிவு. பாண்டியாவை ஒரு வீரராக முதலில் நாங்கள் வாங்க நினைத்தோம். தற்போது அணி மாற்றத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் தான் நாங்கள் இருக்கிறோம். இதனால்தான் நாங்கள் புதிய கேப்டனை நியமித்துள்ளோம்.

    இந்த முடிவை இந்தியாவில் பல ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாமல் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். தற்போது கேப்டனாக இல்லாமல் வெறும் ஒரு வீரராக ரோகித் விளையாடினால் அவரின் பல திறமைகள் பேட்டிங்கில் நிச்சயம் வெளிப்படும். ரோகித் தற்போது களத்திற்கு சென்று எந்த நெருக்கடியும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்து ரன்களை சேர்க்க வேண்டும். அதுதான் முக்கியம். ரோகித் சர்மா ஒரு மிக சிறந்த நபர். மேலும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல ஆண்டு காலம் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து இருக்கிறார்.

    கேப்டன் என்ற எந்த நெருக்கடியும் இல்லாமல் அவர் களத்தில் சாதாரண வீரராக விளையாடி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். இருப்பினும் அவர் இந்திய அணிக்கு தொடர்ந்து கேப்டனாக இருக்கிறார். இதனால் அவருக்கான மவுசு என்றுமே குறையாது. ஐபிஎல் தொடருக்கு வரும் போது கேப்டனாக மேலும் அவருடைய நெருக்கடி அதிகரிக்கும். இந்த ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஆக ரோகித் சர்மாவை நாம் பார்க்க முடியும். அவருடைய முகத்தில் சிரிப்பு வரவேண்டும் என்பது எனது ஆசை.

    என்று மார்க் பவுச்சர் கூறியுள்ளார்.

    இதற்கு ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா இதில் பல தவறுகள் இருக்கிறது என பதிவிட்டார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இன்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது.
    • ரோகித் சகவீரர்களை மோசமாக திட்டிய ஒரு ஆடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கண்டனத்தை பெற்று வருகிறது.

    இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது தற்போது அதற்கு பழிதீர்க்கும் விதமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் 2-வது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் 253 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    பின்னர் தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 2-ம் நாள் ஆட்டம் நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக 171 ரன்கள் என்கிற முன்னிலையுடன் இந்திய அணி பலமான நிலையில் உள்ளது.

    இந்நிலையில் இன்றைய 2-நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சகவீரர்களை மோசமாக திட்டிய ஒரு ஆடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கண்டனத்தை பெற்று வருகிறது.

    இன்றைய போட்டியின் 31-வது ஓவருக்கு பிறகு அடுத்த ஓவர் வீசுவதற்கு முன்னதாக வீரர்களை பீல்டிங் செட் செய்து கொண்டிருந்த ரோகித் சக வீரர்கள் சிலரை நோக்கி தோட்டத்தில் நடந்து செல்வது போன்று போகாதீர்கள்.. வேகமாக செல்லுங்கள்.. என்று கூறி தாயை பழிக்கும் ஒரு வார்த்தை ஹிந்தியில் உபயோகித்து திட்டினார்.

    அவர் இப்படி சத்தமாக திட்டிய ஆடியோ ஸ்டம்ப் மைக் மூலம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 253 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்தது.

    விசாகப்பட்டினம்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் குவித்திருந்தது. இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் அஸ்வின் 20 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து குல்தீப் யாதவ் களம் இறங்கினார். மறுமுனையில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அவர் 277 பந்துகளில் 201 ரன்கள் அடித்து அசத்தினார். இதில் 18 பவுண்டரி மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும். தொடர்ந்து ஆடிய ஜெய்ஸ்வால் 209 ரன்களில் அவுட் ஆனார்.

    இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 112 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷிர் மற்றும் ரெஹன் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனையடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். இவர்களில் டக்கெட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய முந்தைய ஆட்டத்தின் நாயகன் ஒல்லி போப் இந்த முறை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 23 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழந்தார். இதனையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜாக் கிராலி 78 பந்துகளில் 76 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து களமிறங்கிய வீரர்களில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தவிர மற்றவர்களில் ஜோ ரூட் 5 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோவ் 25 ரன்களிலும், பென் போக்ஸ் 6 ரன்களிலும் விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். நிலைத்து விளையாடிய ஸ்டோக்சும் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    முடிவில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 55.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் இந்திய அணி 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் அடித்திருந்தபோது 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜெய்ஸ்வால் 15 ரன்களுடனும், ரோகித் சர்மா 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி இதுவரை 171 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

    • இதை இரட்டை சதமாக மாற்றி கடைசி வரை அணிக்காக விளையாட விரும்புகிறேன்.
    • தற்போதைய நிலைமையிலிருந்து நாளை இன்னும் இந்திய அணியை சிறப்பாக மீட்க விரும்புகிறேன்.

    இந்தியா - இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதன் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 179 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்நிலையில் இந்த இன்னிங்சை கடைசி வரை நின்று பெரியதாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை ராகுல் சார் மற்றும் ரோகித் பாய் எனக்கு கொடுத்துள்ளனர் என ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் ஒவ்வொரு செஷனாக விளையாட விரும்பினேன். அவர்கள் நன்றாகப் பந்துவீசும்போது, நான் அந்த ஸ்பெல்லைக் கடக்க விரும்பினேன். ஆரம்பத்தில், விக்கெட் ஈரமாக இருந்தது மற்றும் ஸ்பின் மற்றும் பவுன்ஸ் இருந்தது. சிறிது சீம் இருந்தது. அதில் நான் சுமாரான பந்துகளை அடித்து கடைசி வரை விளையாட முயற்சித்தேன். இதை இரட்டை சதமாக மாற்றி கடைசி வரை அணிக்காக விளையாட விரும்புகிறேன்.

    குறிப்பாக தற்போதைய நிலைமையிலிருந்து நாளை இன்னும் இந்திய அணியை சிறப்பாக மீட்க விரும்புகிறேன். காலையில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்த பிட்ச் பின்னர் செட்டிலானது. இந்த இன்னிங்சை கடைசி வரை நின்று பெரியதாக மாற்றச் சொன்னார்கள். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருங்கள் என ராகுல் சார் மற்றும் ரோகித் பாய் எனக்கு நம்பிக்கை அளித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 179 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
    • இங்கிலாந்து அணி தரப்பில் ரெஹான், பஷிர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. ரஜத் படிதார் முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆனார். மேலும் முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். ரோகித் சர்மா 14 ரன்களிலும், அடுத்து வந்த சுப்மன் கில் களம் 34 ரன்களிலும் ஷ்ரேயஸ் அய்யர் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெய்ஸ்வால் தனது 2-வது சதத்தை விளாசினார்.

    ஜெய்வாலுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடிய ராஜத் பட்டிதார் 32 ரன்னில் பரிதாபமாக ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அக்ஷர் படேல் (27) மற்றும் பரத் (17) கட் ஷாட் ஆட முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் பஷிர், ரெஹான், 2 விக்கெட்டும் ஆண்டர்சன், டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பர்றினர். ஜெய்ஸ்வால் 170 ரன்களுடனும் அஸ்வின் 5 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    ஆட்ட நேர முடிவில் இந்திய அணி வீரர்கள் தேவையில்லாமல் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு அவுட் ஆனது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்மிழந்து ஏமாற்றம் அளித்தார்.
    • ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் சுப்மன் கில் 34 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. முதல் டெஸ்டில் விளையாடிய ஜடேஜா, கேஎல் ராகுல், முகமது சிராஜ் ஆகியோர் இந்த டெஸ்டில் இடம் பெறவில்லை.

    ரஜத் படிதார் முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆனார். மேலும் முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் ஜேக் லீச், மார்க் வுட் இடம் பெறவில்லை. சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம் பிடித்தனர்.

    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் 15 ஓவர் வரை விக்கெட் இழக்கவில்லை. இதனால் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 18-வது ஓவரில் ரோகித் சர்மா 41 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பஷீர் அறிமுக போட்டியிலேயே இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது இந்தியா 40 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து சுப்மன் கில் களம் இறங்கினார். இவர் ஜெய்ஸ்வால் உடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் சுப்மன் கில் 46 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆண்டர்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 89 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். ஜெய்ஸ்வால் 30-வது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரிகள் விளாசி அரைசதம் கடந்தார். மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 31 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.

    ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    • 2023-ம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இடம் பிடித்துள்ளார்.
    • தென் ஆப்பிரிக்கா அணியில் 2 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    2023 காலண்டர் வருடத்தில் ஒருநாள் போட்டிகளில் அசத்திய 11 பேர் கொண்ட கனவு அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக இந்தியாவின் ரோகித் சர்மாவை ஐசிசி அறிவித்துள்ளது.

    கடந்த வருடம் 1255 ரன்களை 52 என்ற சராசரியில் குவித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு முக்கிய பங்காற்றிய ரோகித்தை தங்களுடைய அணியின் கேப்டன் மற்றும் முதல் துவக்க வீரராக ஐசிசி அறிவித்துள்ளது.

    ரோகித்தின் தொடக்க ஜோடியாக இந்தியாவின் சுப்மன் கில் தேர்வாகியுள்ளார். 3-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், 4-வது இடத்தில் விராட் கோலி உள்ளார். உலகக் கோப்பையில் மட்டும் 765 ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருது வென்ற அவர் சச்சினை முந்தி 50 ஒருநாள் சதங்கள் அடித்த முதல் வீரராக வரலாறு படைத்ததை மறக்க முடியாது என ஐசிசி கூறியுள்ளது.

    5-வது இடத்தில் நியூசிலாந்தின் டாரில் மிட்செல் மற்றும் 6-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஹென்றி கிளாசனும் (விக்கெட் கீப்பர்) 7-வது இடத்தில் அதே அணியின் ஆல் ரவுண்டர் மார்கோ யான்சென் இடம் பிடித்துள்ளனர். 8-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஜாம்பா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    9, 10, 11-வது இடங்கள் முறையே இந்தியாவின் முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி தேர்வாகியுள்ளார்.

    ஐசிசி ஒருநாள் அணி:

    ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், டிராவிஸ் ஹெட், விராட் கோலி, டார்ல் மிட்சேல், ஹென்றிச் க்ளாஸென், மார்கோ யான்சென், ஆடம் ஜாம்பா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி

    • சர்வதேச டி20 போட்டியில் அதிக வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார்.
    • 3-வது டி20 போட்டியில் இந்தியா வென்றதன் மூலம் டோனி சாதனையை ரோகித் சர்மா முறியடித்தார்.

    பெங்களூரு:

    சர்வதேச டி20 போட்டியில் அதிக வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டனாக எம்.எஸ்.டோனி இருந்தார். அவரது தலைமையில் இந்திய அணி 41 போட்டிகளில் (72 ஆட்டம்) வெற்றி பெற்றிருந்தது.

    இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் டோனியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

    ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 42 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 12 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

    ×