search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohit sharma"

    • முதல் 2 ஆட்டங்களில் வென்றதால் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
    • நாங்கள் எதை நோக்கி செல்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும்.

    ராஜ்கோட்:

    ராஜ்கோட்டில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி யில் இந்தியா தோல்வி அடைந்தது. முதல் 2 ஆட்டங்களில் வென்றதால் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    இப்போட்டிக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    நான் பார்முக்கு திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த 8 ஒரு நாள் போட்டிகளில் வெவ்வேறு சூழ்நிலைகளில் நாங்கள் நன்றாக விளையாடினோம். வெவ்வேறு சமயங்களில் சவாலுக்கு ஆளானோம். அந்த சவாலை ஏற்றுக் கொண்டு விளையாடினோம். துரதிஷ்டவசமாக நாங்கள் வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த ஆட்டத்தை அதிகம் பார்க்க போவதில்லை.

    உலக கோப்பைக்காக 15 பேர் கொண்ட அணியை பற்றி பேசும்போது, எங்களுக்கு என்ன தேவை, யார் சரியாக இருப்பார்கள் என்பதில் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் குழப்பமடையவில்லை. நாங்கள் எதை நோக்கி செல்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும்" என்றார்.

    • ரோகித் தலைமையில் ஆசிய கோப்பையை இந்தியா 2-வது முறையாக வென்றுள்ளது.
    • அதிக ஆசிய கோப்பைகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற சச்சின், டோனி உட்பட வேறு யாரும் படைக்காத சாதனை படைத்துள்ளார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் தலைமையில் ஆசிய கோப்பையை இந்தியா 2-வது முறையாக வென்றுள்ளது.

    ரோகித் 2008-ம் ஆண்டு முதல் முறையாக ஆசிய கோப்பையில் விளையாடினார். அதன் பின் 2010, 2016 ஆகிய தொடர்களிலும் விளையாடினார். மேலும் 2018 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு ஆசிய கோப்பையை கைப்பற்றினார்.

    அந்த வகையில் 2008, 2010, 2016, 2018, 2023* ஆகிய 5 தொடர்களில் விளையாடியுள்ள அவர் வரலாற்றில் அதிக ஆசிய கோப்பைகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற சச்சின், டோனி உட்பட வேறு யாரும் படைக்காத சாதனை படைத்துள்ளார்.

    அதே போல ஆசிய கோப்பை வரலாற்றில் 2 சாம்பியன் பட்டங்களை (2018, 2023) வென்ற இந்திய கேப்டன் என்ற முகமது அசாருதீன் மற்றும் எம்எஸ் டோனி ஆகியோரது சாதனைகளையும் ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.

    அத்துடன் 2022 ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் ரோஹித் தலைமையில் 10 விக்கெட் வித்யாசத்தில் வென்ற இந்தியா இந்த தொடரில் நேபாளுக்கு எதிரான போட்டியிலும் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த நிலையில் நேற்று 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதால் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 முறை 10 வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற யாராலும் தொட முடியாத சாதனை ரோகித் படைத்துள்ளார்.

    ஏனெனில் இதற்கு முன் சீனிவாசன் வெங்கட்ராகவன், சுனில் கவாஸ்கர், சவுரவ் கங்குலி, முகமது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், டோனி, கேஎல் ராகுல் ஆகியோர் தலைமையில் தலா 1 முறை மட்டுமே 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது.

    இது போக கடந்த ஜனவரியில் இதே இலங்கைக்கு எதிராக திருவனந்தபுரத்தில் 317 ரன்கள் வித்தியாசத்தில் ரோகித் தலைமையில் வென்ற இந்தியா நேற்று 6.1 ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்து வென்றது.

    இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் (317) வித்தியாசத்திலும் அதிக பந்துகள் (263) வித்தியாசத்திலும் அதிவேகத்தில் சேசிங் செய்தும் (6.1 ஓவர்களில்) வெற்றியை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற 3 சரித்திரத்தையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.

    • கடந்து ஒன்றரை ஆண்டுகளாக நான் என்னுடைய பந்துவீச்சில் பெரிய அளவில் முன்னேற்றத்தை கண்டு வருகிறேன்.
    • நான் இவ்வளவு சிறப்பாக பந்து வீச ரோஹித் சர்மாவும் ஒரு காரணம்.

    ஆசிய கோப்பை தொடரின் இறுதிபோட்டியில் இந்தியா இலங்கை மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 6.1 ஓவரில் 51 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இஷான் கிஷன் 23 ரன்களும், சுப்மன் கில் 27 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் இந்த போட்டியில் ஒரு ஓவர் வீசிய சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 1 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இந்த போட்டியில் அவருக்கு விக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் இந்த தொடர் முழுவதுமே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு இந்த ஆசிய கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.


    இந்த போட்டி முடிந்து பரிசளிப்பு விழாவின் போது பேசிய தொடர் நாயகன் குல்தீப் யாதவ் கூறியதாவது:-

    கடந்து ஒன்றரை ஆண்டுகளாக நான் என்னுடைய பந்துவீச்சில் பெரிய அளவில் முன்னேற்றத்தை கண்டு வருகிறேன். அதற்காக கடினமாக உழைத்தும் வருகிறேன். தற்போது நான் மேலும் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் வகையில் பந்துவீசி வருவதாக நினைக்கிறேன்.

    டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை லென்த் மிகவும் முக்கியம். அதேபோன்று ஒருநாள் போட்டிகளிலும் லென்த் மிகவும் முக்கியமான ஒன்று. இப்போது எல்லாம் நான் விக்கெட்டைப் பற்றி யோசிக்காமல் என்னுடைய லைன் மற்றும் லென்த்தில் கவனம் வைத்து அப்படியே பந்துவீசி வருகிறேன். மேலும் என்னுடைய இந்த சிறப்பான பந்துவீச்சுக்காக நான் பெரிய அளவில் பயிற்சி செய்து வருகிறேன்.

    இன்று நான் இவ்வளவு சிறப்பாக பந்து வீச ரோஹித் சர்மாவும் ஒரு காரணம். அவரின் என்கரேஜ்மென்ட் தான் என்னுடைய பந்துவீச்சில் என்னுடைய வேகத்தை மாற்றி அமைக்க உதவியது. எப்போதுமே வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டியின் ஆரம்பத்திலேயே இரண்டு விக்கட்டுகளை எடுத்துக் கொடுத்தால் ஸ்பின்னர்களுக்கு இன்னும் அது உதவிகரமாக இருக்கும் என குல்தீப் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • எங்களிடம் உள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் வெவ்வேறு திறமையுடன் வித்தியாசமாக பந்து வீசக்கூடியவர்கள்.
    • ஸ்லிப்பில் நின்றபடி முகமது சிராஜ் பந்து வீசிய விதத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    இது போன்று வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசுவதை பார்க்கும் போது எனக்கு மிகவும் மனநிறைவை தருகிறது. எங்களிடம் உள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் வெவ்வேறு திறமையுடன் வித்தியாசமாக பந்து வீசக்கூடியவர்கள். ஸ்லிப்பில் நின்றபடி முகமது சிராஜ் பந்து வீசிய விதத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒட்டுமொத்தத்தில் இது ஒரு அற்புதமான செயல்பாடு. அதுவும் இறுதிப்போட்டியில் இது மாதிரி அசத்துவது நீண்ட காலம் மனதில் நிலைத்து நிற்கும்.

    சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேலுக்கு லேசான தசைகிழிவு தான். ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு ஆட்டங்களில் ஆடுவது சந்தேகம் தான். ஸ்ரேயாஸ் அய்யர் நன்றாக இருக்கிறார். பயிற்சியில் ஈடுபடுகிறார். கிட்டத்தட்ட அவர் 99 சதவீதம் உடல்தகுதியை எட்டிவிட்டார்' என்றார்.

    • இலங்கை 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
    • இலங்கை அணியின் கேப்டன் சனாகா வந்த முதலே அதிரடியாக விளையாடினார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 213 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து ஆடிய இலங்கை 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இந்நிலையில் அடுத்து வந்த கேப்டன் சனாகா வந்த முதலே அதிரடியாக விளையாடினார். ரவீந்திர ஜடேஜா வீசிய 26-வது ஓவரின் முதல் பந்திலேயே ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    அப்போது இந்திய வீரர்கள் அதை கொண்டாட துவங்கிய நிலையில் விராட் கோலி ஓடிவந்து ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்து கொண்டாடியது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. குறிப்பாக கேப்டன்ஷிப் விவாகரத்தில் இருவருக்கும் சண்டை விரிசல் என கடந்த காலங்களில் பலமுறை ஊடகங்களில் செய்தி வந்த நிலையில் அதை அவர்கள் தொடர்ந்து மறுத்து வந்தனர். அதை மேலும் மறுக்கும் வகையில் இந்த தருணம் அமைந்தது என்றே சொல்லலாம்.


    இந்திய பேட்டிங் துறையின் இரு துருவங்களாகவும் முன்னாள் இந்நாள் கேப்டன்களாகவும் திகழும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மிகவும் அன்பாக கட்டுப்படுத்தி வெற்றியை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்த போட்டியில் ரோகித் சர்மா 53 ரன்னில் அவுட் ஆனார்.
    • விராட் கோலி 3 ரன்னில் வெளியேறினார்.

    சூப்பர்4 சுற்றின் 4-வது ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் நேற்று மல்லுகட்டின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 5 விக்கெட், சரித் அசாலங்கா 4 விக்கெட், மகேஷ் தீக்சனா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி 41.3 ஓவரில் 172 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டி தகுதி பெற்றது.

    இந்நிலையில் ரோகித் - விராட் கோலி ஜோடி பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ஆட்டத்தில் 2-வது விக்கெட்டுக்கு இந்தியாவின் ரோகித் சர்மா, விராட் கோலி ஜோடி 10 ரன் எடுத்தது. இதையும் சேர்த்து அவர்கள் பார்ட்னர்ஷிப்பில் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர். 86 ஒருநாள் போட்டி இன்னிங்சில் இதை எட்டி சாதனை படைத்து இருக்கிறார்கள். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் கார்டன் கிரீனிட்ஜ் டெஸ்மான்ட் ஹெய்ன்ஸ் ஜோடி 97 இன்னிங்சில் 5 ஆயிரம் ரன்களை எட்டியதே அதிவேகமாக இருந்தது.

    மேலும் இந்திய தரப்பில் டெண்டுல்கர் சவுரவ் கங்குலி, ஷிகர் தவான் ரோகித் சர்மா ஆகியோருக்கு பிறகு 5 ஆயிரம் ரன்களை கடந்த ஜோடியாகவும் ரோகித்- கோலி திகழ்கிறார்கள்.

    • இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
    • ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 213 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து விளையாடிய இலங்கை அணி 172 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    இந்த போட்டியில் ரோகித் சர்மா 22 ரன்கள் எடுத்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    இந்நிலையில் ரோகித் சர்மாவின் இந்த வளர்ச்சிக்கு டோனிதான் காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டோனியால்தான் இன்று ரோகித் சர்மா ரோகித் சர்மாவாக உள்ளார். ரோகித்தின் கேரியரில் இந்த திருப்புமுனை ஒரே ஒரு மனிதனால் மட்டுமே சாத்தியமானது. அவர்தான்எம்எஸ் டோனி. ரோகித் வாழ்க்கையின் முதல் ஆறு ஆண்டுகள் கடினமான நேரத்தில் டோனி அவரை ஆதரித்தார். 2013 சாம்பியன்ஸ் டிராபியில் தொடக்க வீரராக களமிறங்குமாறு ரோகித்திடம் டோனி கேட்டு கொண்டார்.

    மிடில் ஆர்டர் பேட்டராக இருந்து தொடக்க ஆட்டக்காரராக மாறிய பிறகு ரோகித்தின் கேரியர் முற்றிலும் மாறிவிட்டது. இன்று அவர் எல்லா காலத்திலும் சிறந்த ஒயிட்-பால் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
    • கங்குலி, எம்எஸ் டோனி, விராட் கோலி உட்பட வேறு எந்த இந்திய கேப்டனும் இந்த சாதனையை படைத்ததில்லை.

    ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4போட்டியில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இந்த மிகப்பெரிய வெற்றியால் கூடுதல் ரன் ரேட்டை பெற்றுள்ள இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உறுதியாகியுள்ளது.

    முன்னதாக 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நடைபெற்ற கடைசி போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். அந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்தது.

    அந்த நிலையில் இந்த போட்டியில் 228 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் (228) வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்த முதல் இந்திய கேப்டன் என்ற தனித்துவமான சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

    இதற்கு முன் கங்குலி, எம்எஸ் டோனி, விராட் கோலி உட்பட வேறு எந்த இந்திய கேப்டனும் 2 வெவ்வேறு ஒருநாள் போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்ததில்லை. சமீப காலங்களாகவே கேப்டன்ஷிப் பற்றி விமர்சனங்களை சந்தித்து வரும் ரோகித் சர்மா இந்த சாதனைகளுடன் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    • ரோகித் முதல் ஓவரில் 1 பவுண்டரி உள்பட 5 ரன்கள் எடுத்தார்.
    • ரோகித் 23 ரன்கள் எடுத்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ஷர்துல் தாகூருக்கு பதில் அக்ஷர் படேல் இடம் பெற்றார்.

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் - சுப்மன் கில் களமிறங்கினர். ரோகித் முதல் ஓவரில் 1 பவுண்டரி உள்பட 5 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய ரோகித் 22 ரன்கள் எடுத்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    மேலும் குறைந்த போட்டியில் 10 ஆயிரம் ரன்கள் குவித்த சச்சின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். ரோகித் 241 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். சச்சின் 259 போட்டிகளில் இதனை கடந்தார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் விராட் கோலி உள்ளார். இவர் 205 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார்.

    இந்திய வீரர்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது வீரராக ரோகித் உள்ளார். முதல் 5 இடங்களில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, கங்குலி, டிராவிட், டோனி ஆகியோர் உள்ளனர்.

    • போட்டிக்கு மைதானத்தை தயார்படுத்துவது என்பது சாதாரண விசயம் கிடையாது.
    • எங்களுடைய அணி சார்பாக நாங்கள் கொழும்பு மைதான ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி 10-ம் தேதி கொழும்பு நகரில் துவங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

    அதன்பின்னர் மீண்டும் மழை நிற்காததால் அன்றைய நாளில் போட்டி கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று மீண்டும் விட்ட இடத்தில் இருந்து துவங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் குவித்தது.

    357 ரன்கள் அடித்தால் வெற்றி இன்று இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் கொழும்பு மைதான ஊழியர்களுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் நன்றி தெரிவித்துள்ளது ரசிகர்ளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாம் இந்த மைதான ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். ஏனெனில் மைதானம் முழுவதும் இருக்கும் கவரை அகற்றி போட்டிக்கு மைதானத்தை தயார்படுத்துவது என்பது சாதாரண விசயம் கிடையாது. எங்களுடைய அணி சார்பாக நாங்கள் கொழும்பு மைதான ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இந்த போட்டியில் மீண்டும் நாங்கள் பேட்டிங் செய்ய ஆரம்பிக்கும் போதும் மழையின் தாக்கம் இருந்ததால், மைதானத்தின் தன்மையை கணித்து விளையாடுவது சற்று சவாலாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனாலும் கே.எல் ராகுல், விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அதனை சமாளித்து மிகச் சிறப்பாக விளையாடினார்கள்.

    அதே போன்று பும்ரா கடந்த 8 முதல் 10 மாதங்களாக சரியான முறையில் பயிற்சி மற்றும் சிகிச்சையை மேற்கொண்டு அணிக்கு திரும்பி உள்ளார். அவரது பந்துவீச்சும் அசத்தலாக இருந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் என அனைத்துமே பாசிட்டிவாக இருந்தது.

    இவ்வாறு ரோகித் கூறினார்.

    • இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு பிரகாசமாகி விடும்.
    • இன்றைய ஆட்டத்தின் போதும் மழை குறுக்கிட வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் மோதுகின்றன.

    மாற்றுநாளுக்கு தள்ளிவைக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முந்தைய நாள் இரவு 11 மணி வரை விளையாடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் ஓய்வின்றி உடனடியாக களம் இறங்க வேண்டி உள்ளது. சோர்வின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது தெரியவில்லை. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு பிரகாசமாகி விடும்.

    இதே போல் சூப்பர்4 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்த தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிக்கும் இந்த ஆட்டம் முக்கியமானதாகும். தொடர்ச்சியாக 13 ஒரு நாள் போட்டிகளில் வெற்றிகளை குவித்து வீறுநடை போடும் இலங்கை அதே உத்வேகத்துடன் அடியெடுத்து வைக்கிறது.

    பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அங்கு இன்றைய ஆட்டத்தின் போதும் மழை குறுக்கிட வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • காயத்தில் இருந்து மீண்டு வந்த நிலையில், முதல் போட்டியிலேயே சதம் விளாசினார் ராகுல்
    • விராட் கோலியுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தார்

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு மழை அச்சுறுத்தலாக இருந்த போதிலும் நேற்று முன்தினம், நேற்று என இரண்டு நாட்களில் போட்டி நடைபெற்று முடிந்தது. இதில் இந்தியா இமாலய வெற்றியை ருசித்தது. இந்தியா 356 ரன்கள் குவித்த போதிலும், பாகிஸ்தான் 128 ரன்னிலேயே சுருண்டது.

    228 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    மழை குறுக்கிட்ட நிலையில் சிறப்பாக விளையாடி முடித்ததற்கு, மைதான ஊழியர்கள் (groundsmen) முக்கிய காரணமாகும். தார்ப்பாய்களால் மைதானத்தை மூடுவது, பின்னர் நீக்குவது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். ஒட்டுமொத்த அணியுமான நாங்கள் அவருக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டம்.

    நாங்கள் போட்டியை தொடங்கியபோது, இது சிறந்த விக்கெட் என்பது எங்களுக்கு தெரிந்தது. மழைக்கு ஏற்றபடி எங்களை மாற்றிக் கொண்டோம். கே.எல். ராகுல், விராட் கோலி ஆகிய இருவரும் அனுபவ வீரர்கள். அவர்கள் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு, அதன்பின் ஆட்டத்தை கொண்டு செல்வார்கள் என்பது நாங்கள் அறிந்ததே.

    பும்ரா சிறப்பாக பந்து வீசினார். இரண்டு வழிகளிலும் பந்தை ஸ்விங் செய்தார். கடந்த 8 முதல் 10 மாதங்கள் கடினமாக உழைத்துள்ளார். கே.எல். ராகுல் ஆடும் லெவனில் இடம்பெறுவது டாஸ் போடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் முடிவானது. காயத்திற்குப் பிறகு நீண்ட நாட்கள் கழித்து, களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது வீரரின் மனநிலை என்பதை காட்டிவிட்டார்.

    இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.

    பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தோல்வி குறித்து கூறுகையில் "காலநிலை (Weather) நமது கையில் இல்லை. இருந்த போதிலும் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தோம். பந்து வீச்சு, பேட்டிங் ஆகிய இரண்டிலும் எங்களது சிறந்ததை கொடுக்க முடியவில்லை.

    எங்களது பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய தொடக்க வீரர்கள் சிறப்பாக திட்டம் தீட்டி, ஆட்டத்தை தொடங்கினர். விராட் கோலி, கே.எல். ராகுல் தொடர்ந்து அதை எடுத்துச் சென்றனர். முதல் 10 ஓவர்களில் சிராஜ் அற்புதமாக பந்து வீசினார். இருந்த போதிலும் எங்களது பேட்டிங் சரியாக அமையவில்லை'' என்றார்.

    ×