search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டசபை"

    • இளைஞர்களின் வேலை வாய்ப்பில், கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும்.
    • இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு மீண்டும் முன்னோடி மாநிலமாக நின்றிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

    தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து சட்டசபையில் இன்று அரசின் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    இந்த தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார். தீர்மானம் குறித்து அவர் பேசியதாவது:-

    மத்திய அரசின் உள்துறை அமைச்சராகவும், அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்ற குழுத் தலைவராகவும் உள்ள அமித்ஷா தலைமையிலான குழு சமீபத்தில் ஜனாதிபதியிடம் அளித்துள்ள அறிக்கை இன்று நாடு முழுவதும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

    குறிப்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலும், இந்த நாட்டின் பிரதமராக இருந்த நேரு அளித்த வாக்குறுதிக்கு முரணாகவும் பல பரிந்துரைகளை அளித்துள்ளது.

    அந்த பரிந்துரைகளில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்க ளில் ஆங்கிலத்திற்கு பதில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். இந்தியை பொது மொழியாக்கிடும் வகையில், தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழியே பயிற்சி மொழியாக ஆக்கப்பட வேண்டும்.

    இளைஞர்களின் வேலை வாய்ப்பில், கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவையும் அடங்கும்.

    இந்தியின் அடிப்படையில் நாட்டை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

    இப்படி ஆங்கிலத்தை புறந்தள்ளி, அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள இந்தி பேசாத மாநில மக்களின் 22 மாநில மொழிகளையும் அடியோடு ஒதுக்கி வைத்து, எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கும் வகையில், அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரான, நம் நாட்டின் பன்மொழிக்கட்டமைப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ள இந்த பரிந்துரைகளை ஏற்க கூடாது. நடைமுறைப்படுத்த கூடாது என பிரதமருக்கு கடந்த 16-ந்தேதி அன்று தமிழக அரசால் கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

    இந்த மாபெரும் அவையில் அண்ணா கொண்டு வந்து நிறைவேற்றிய இரு மொழிக் கொள்கை தீர்மானத்திற்கு எதிராக பிரதமராக இருந்த நேரு இந்தி பேசாத மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக, 1968 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதன் அடிப்படையில், ஆங்கில மொழிபயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதற்கும் எதிராக, இப்போது அளிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற குழுவின் பரிந்துரைகள் அமைந்திருப்பது கவலைக்குரியதாக இப்பேரவை கருதுகிறது.

    அன்னைத் தமிழ் மொழியைக் காத்திட, ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடர்ந்திட, ஏன் அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அழியாது காத்திட, இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு மீண்டும் முன்னோடி மாநிலமாக நின்றிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

    அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழு தலைவரால் கடந்த 9.9.2022 அன்று ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்டு உள்ள அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டு உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய அரசினை இந்த பேரவை வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த தீர்மானத்தின் மீது ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். அதன்பிறகு இந்தி திணிப்புக்கு எதிரான தனித் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

    அரசு துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதிக்க சட்டசபை ஜூன் மூன்றாம் வாரத்தில் கூட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கியது. அன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    அதைத் தொடர்ந்து பிப்ரவரி 11, 12, 13-ந் தேதிகளில் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு பிப்ரவரி 14-ந் தேதியன்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துப் பேசினார்.

    அனைத்து அலுவல்களும் முடிந்ததைத் தொடர்ந்து, சட்டசபை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் பிப்ரவரி 14-ந் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

    பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக அரசு துறைகளின் மானியக் கோரிக்கைகள், விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி மானியக் கோரிக்கைகள் தொடர்பான நிகழ்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. சட்டசபை மரபுப்படி 6 மாதங்களுக்குள் மீண்டும் சட்டசபை கூட்டம் கூடவேண்டும். அதாவது அக்டோபர் 13-ந் தேதிக்குள் மீண்டும் சட்டசபை கூட்டப்பட வேண்டும்.

    இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஆளும் கட்சியான அ.தி.மு.க. மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தாலும், ஆட்சியை தக்க வைத்துள்ளது.

    சட்டசபையை மீண்டும் கூட்டுவதற்கு அதிக நாட்கள் இருந்தாலும், ஜூன் 2 அல்லது 3-ம் வாரத்தில் கூட்டத் தொடரைத் தொடங்க வாய்ப்பிருப்பதாக சட்டசபை வட்டாரம் தெரிவித்தது.



    இந்த கூட்டத்தொடரில் சபாநாயகர் ப.தனபால் மீது தி.மு.க. கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மிக முக்கிய நிகழ்வாக இருக்கும்.

    எனவே தி.மு.க.வின் தீர்மானத்தை முறியடிக்க பல்வேறு முயற்சிகளில் அரசு இறங்கியுள்ளது.

    4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக முழு ஆதரவு அளிப்பதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். #ADMK #DMDK #Vijayakanth

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற அ.திமு.க. வேட்பாளர்களுக்கு தே.மு.தி.க. முழு ஆதரவை அளிக்கிறது.


    சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தே.மு.தி.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவு தந்து பணியாற்றி, வேட்பாளர்களின் வெற்றிக்கு கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அயராது பாடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். #ADMK #DMDK #Vijayakanth

    கோவா சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றது. #GoanewCM #Goafloortest #PramodSawant
    பனாஜி:

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து, புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கான கூட்டம் பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார். 
     
    கோவாவின் புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் நேற்று அதிகாலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

    முன்னதாக, கோவா முதல் மந்திரி காலமானதால் சட்டசபையில் ஆளும்கட்சியின் பலம் குறைந்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து கடிதம் அளித்திருந்தனர்.

    இதற்கிடையே, முதல் மந்திரியாக பதவியேற்ற பிரமோத் சாவந்த், ‘என்னுடன் 2 துணை முதல் மந்திரிகளாக விஜய் சர்தேசாய், சுதின் தவில்கர் ஆகியோர் விரைவில் பதவி ஏற்கவுள்ளனர். இந்த அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் சட்டசபையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறும். அதில் பா.ஜ.க. அரசு வெற்றி பெறும் என தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில்,  கோவா சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது.

    கோவா சட்டசபையில் ஆட்சி அமைக்க மொத்தம் 19 உறுப்பினர்களின் ஆதரவு தேவையான நிலையில், பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு 20 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. அவருக்கு எதிராக 15 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றது. #GoanewCM #Goafloortest  #PramodSawant
    தமிழகத்தில் மதுரை உள்பட 20 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக தேசிய பெண்கள் கட்சி அறிவித்துள்ளது. #Parliamentelection

    மதுரை:

    இந்தியாவில் முதன் முறையாக பெண்களின் பங்களிப்புடன் கூடிய தேசிய பெண்கள் கட்சி மதுரையில் தொடங்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்வேதா ஷெட்டி, நிருபர்களிடம் கூறும்போது, பாராளுமன்றத்தில் ஆணுக்கு இணையாக பெண்களும் அமர வேண்டும் என்பதே கட்சியின் முக்கிய குறிக்கோள்.

    எங்கள் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் மதுரை, வேலூர், மத்திய சென்னை, காஞ்சிபுரம் உள்பட 283 பாராளுமன்ற தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்த உள்ளோம்.

    தமிழகத்தில் மட்டும் 20 தொகுதிளில் போட்டியிடுவோம். இதற்கான வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது.

    வேட்பாளர் தேர்வில் வக்கீல், சமூக ஆர்வலர்களுக்கு முன்னுரிமை தரப்படும். எங்கள் இயக்கத்தின் கொள்கையுடன் ஒத்துப்போகும் ஆண்களை வேட்பாளராக நிறுத்த உள்ளோம்.

    எங்கள் இயக்கத்துக்கு தேசிய அளவில் மிகுந்த வரவேற்பு உள்ளது. எனவே கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியோடு கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை. அது மாநில அளவில் இயங்கி வரும் கட்சி. அதே நேரத்தில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா கலந்து கொண்டார்.  #Parliamentelection

    சட்டசபையில் பூஜ்ஜிய நேரத்தின் போது ரூ.10 லட்சம் திருடு போனது தொடர்பாக சமாஜ்வாடி எம்.எல்.ஏ. கல்ப்நாத் பஸ்வான் கண்ணீருடன் கோரிக்கை வைத்தார். #SamajwadiMLA #KalpnathPaswan
    லக்னோ:

    பொதுவாக தங்கள் தொகுதியை சேர்ந்த மக்களின் நலனுக்காக அந்தந்த தொகுதிகளின் பிரதிநிதிகள் அரசிடம் கோரிக்கை வைப்பதைதான் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகள் பார்த்து வருகின்றன. ஆனால் மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்க வேண்டிய எம்.எல்.ஏ. ஒருவரே, பெரும் நெருக்கடியில் சிக்கி தன்னை மீட்குமாறு கேட்டுக்கொண்ட சம்பவம் உத்தரபிரதேச சட்டசபையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    அங்குள்ள அசாம்கார் மாவட்டத்தின் மேநகர் தொகுதியில் சமாஜ்வாடி சார்பில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கல்ப்நாத் பஸ்வான். இவர் நேற்று சட்டசபையில் பூஜ்ஜிய நேரத்தின் போது கண்ணீருடன் கோரிக்கை ஒன்றை வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

    என் வாழ்நாளில் ரூ.10 லட்சத்தை நான் கண்ணால் பார்த்தது இல்லை. ஆனால் நான் வீடு கட்டுவதற்காக வங்கியில் இருந்து ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு அசம்காரில் உள்ள ஓட்டலுக்கு சென்றேன். பின்னர் ஓட்டலில் இருந்து வெளியே வந்த போது பணம் வைத்திருந்த சூட்கேசில் பணம் இல்லை. அதை யாரோ திருடிச் சென்று இருக்கின்றனர்.

    இது குறித்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. நான் ஒரு பரம ஏழை. அந்த பணம் திரும்ப கிடைக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன். எனவே நான் உங்களை கைகூப்பி கேட்கிறேன். இங்கிருந்தும் நீதி கிடைக்கவில்லை என்றால் நான் எங்கே போவேன்?

    இவ்வாறு பஸ்வான் கூறினார்.

    எம்.எல்.ஏ. கண்ணீர் விட்டு அழுவதை பார்த்த சக உறுப்பினர்களும் வருத்தமடைந்தனர். அப்போது சட்டசபை விவகாரத்துறை மந்திரி சுரேஷ் குமார் கன்னா எழுந்து, எம்.எல்.ஏ. பஸ்வானை அமைதிப்படுத்தினார். இது தொடர்பாக விசாரணை நடத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்படும் எனக்கூறிய மந்திரி, அந்த பணத்தை விரைவில் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிளித்தார்.

    இதைத்தொடர்ந்தே கல்ப்நாத் எம்.எல்.ஏ. அமைதியானார்.
    ஓசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதற்கான சட்டமசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. #TNAssembly
    சென்னை:

    தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள் உள்ளன. இந்நிலையில் ஓசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதற்கான சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

    உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி தாக்கல் செய்த சட்டமசோதாவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து இருந்தார்.

    இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் கோவை மாநகராட்சி சட்டத்தின் வரைமுறைகளை தழுவி ஒரு சிறப்பு சட்டத்தை இயற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதன்படி மாநகராட்சியாக நாகர்கோவில் செயல்படும்போது நகராட்சி மன்றத்தால் விதிக்கப்பட்டு வந்த அனைத்து வரிகள், கட்டணங்கள், தீர்வைகள் இந்த சட்டத்தின் கீழ் வந்து முறைப்படி மாநகராட்சியால் விதிக்கப்பட்டதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

    இதேபோல் ஓசூர் நகராட்சியை மாநகராட்சி ஆக்குவதற்கும் சட்டமசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஓசூர் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஓசூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

    அந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் கோவை மாநகராட்சி சட்டத்தை தழுவி ஒரு சிறப்பு சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன்மூலம் தமிழ்நாட்டில் மாநகராட்சியின் எண்ணிக்கை 14 ஆக உயர்கிறது. மாநகரட்சிகள் விவரம் வருமாறு:-

    1. சென்னை
    2. மதுரை
    3. கோவை
    4. சேலம்
    5. நெல்லை
    6. வேலூர்
    7. திருச்சி
    8. தூத்துக்குடி
    9. ஈரோடு
    10. தஞ்சாவூர்
    11. திருப்பூர்
    12. திண்டுக்கல்
    13. நாகர்கோவில்
    14. ஓசூர் #TNAssembly

    டிசம்பர் மாதம் வரை சென்னைக்கு தினமும் 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சட்டசபையில் அமைச்சர் கூறியுள்ளார்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குடிநீர் வழங்குவது குறித்து ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:-

    இந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிக குறைவான தண்ணீரே இருக்கிறது.

    கோடை காலத்தில் குடிநீர் வழங்குவதற்காக ரூ.157 கோடி நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இது யானைப்பசிக்கு சோளப்பொரி வழங்குவது போன்றது.

    சென்னையில் மட்டு மல்லாமல் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 110-விதி கீழ் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது.

    அந்த திட்டங்கள் என்ன ஆனது? வருகிற கோடை காலத்தில் குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே கருத்தை காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி வலியுறுத்தினார்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் வேலுமணி கூறியதாவது:-

    அம்மாவின் இந்த அரசு குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 142 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை மிக குறைவாக பெய்து இருக்கிறது. எனவே மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    இதற்காக பணிகளை கண்காணிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தி குடிநீர் வழங்குவதற்கான பணிகளை தூரிதப்படுத்தி வருகிறார்.

    சென்னைக்கு 22 கல்குவாரிகளில் இருந்து தினமும் 30 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வீராணம் ஏரிக்கு மீண்டும் மேட்டூரில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பல்வேறு நீர்நிலைகளில் இருந்தும், ஆழ்துளை கிணறுகள் மூலமும், விவசாய கிணறுகள் மூலமும் குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    கிருஷ்ணா நதிநீர் கடந்த 12-ந் தேதி முதல் மீண்டும் கொண்டு வந்து இருக்கிறோம். குழாய் தண்ணீர் செல்லாத இடங்களுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. தேவைப்படும் இடத்தில் குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்படுகின்றன.

    சென்னை நகருக்கு வருகிற டிசம்பர் மாதம் வரை தினமும் 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    இதே போல் மற்ற மாவட்டங்களிலும் குடிநீர் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

    கடல் நீர் குடிநீராக்கும் 5 திட்டங்களில் இரண்டு திட்டங்களை தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் கடன் உதவியுடன் இது செயல்படுத்த இருக்கிறது. மற்ற திட்டங்களையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #TNPlasticBan #PlasticBanBill
    சென்னை:

    சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    அதேநேரம், பிளாஸ்டிக் தடையில் இருந்து பால், தயிர், எண்ணெய் பாக்கெட்டுகள், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

    பேப்பர் கப்புகளை பொறுத்தவரை, பிளாஸ்டிக் இழையின் அளவு 6 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைத்து உற்பத்தி செய்தால், விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.



    தடை செய்யப்பட்ட இந்த பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என அரசு கூறியிருந்தது.

    இந்நிலையில், பிளாஸ்டிக் தடையை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், விற்பனை செய்தல், கொண்டு செல்லுதல், பகிர்ந்து அளிக்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு முதல் முறை 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 2வது முறை தவறு செய்தால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை பிடிபட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதன்பின்னரும் தவறு செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

    இதேபோல் பிளாஸ்டிக் தடையை மீறும் மளிகை கடைகள் மற்றும் மருந்துக் கடைகளுக்கு 1000 முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். சிறு வணிகர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TNPlasticBan #PlasticBanBill

    பாராளுமன்ற தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். #Parliamentelection #Mutharasan

    சிதம்பரம்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 22-வது மாநாடு பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவை மீட்போம், தமிழகத்தை காப்போம் என்கிற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு கோவையில் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர்ரெட்டி, மாநில துணை செயலாளர் சுப்பராயன், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, திராவிடர் கழக தலைவர் வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ம.தி. மு.க. தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறர்கள்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. 45 ஆண்டுகளுக்கு முன் இல்லாத அளவில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலை தருவதாக மோடி தெரிவித்தார். இதை நம்பி வாக்களித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.

    தற்போது சென்னையில் 14 துப்புரவு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதற்கு 10 ஆயிரம் பேர் விண்ணப்பத்திருந்தனர். அதில் அதிகமானவர்கள் பட்டதாரிகளே. இதுபோன்ற நிலைமை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களை பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி, வாக்குறுதிகள் வழங்குவதில் மன்னர். அவர் மக்களையும் பாராளுமன்றத்தையும் ஏமாற்றிவருகிறார்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலின் போது, தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தவேண்டும். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இருக்கவேண்டும், அடிமையாக இருக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார். #Parliamentelection #Mutharasan

    பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டுவதை தடுக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். #EdappadiPalaniswami #ADMK #TNAssembly

    சென்னை:

    சட்டசபையில் இன்று நந்தகுமார் (தி.மு.க.) பேசுகையில், “பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டி வருகிறது. 21 தடுப்பணைகளை புதுப்பிக்க ரூ.43 கோடி ஒதுக்கி உள்ளது. மேலும் 30 தடுப்பணைகளை புதிதாக கட்டப்போவதாகவும் அதிகாரப்பூர்வமாக தகவல் அனுப்பி உள்ளன. 500 மீ.க்கு ஒரு தடுப்பணை கட்ட உள்ளதால், இதை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.

    இதே கருத்தை பிரின்ஸ் (காங்.) வலியுறுத்தி பேசினார்.

    இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசியதாவது:-

    1892-ம் ஆண்டைய மதராஸ்-மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும்.

    சித்தூர் மாவட்டத்தில், குப்பம் எனும் பகுதியில், பாலாற்றின் குறுக்கே ஒரு அணையினை ஆந்திரா அரசு கட்ட உள்ளதாக அம்மாவின் ஆட்சிக்காலத்தில், செய்தி வந்தபோது தமிழ்நாடு அரசு 10.2.2006 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இவ்வாறு வழக்கு தாக்கல் செய்ததன்பேரில், அணைக் கட்டும் பணிகள் தடுக்கப்பட்டன.

    இந்த வழக்கில், தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசு சாட்சியாளர்களின் குறுக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து, உச்சநீதிமன்றத்தால் இவ்வழக்கு ஜூலை 2019-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

     


    ஆந்திர அரசு, 1892-ம் ஆண்டைய ஒப்பந்தத்தை மீறும் வகையிலும், தமிழ் நாட்டின் முன் அனுமதி பெறாமலும் தன்னிச்சையாக பாலாறு மற்றும் அதன் கிளை நதிகளின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்தியும், புதியதாக தடுப்பணைகள் கட்டியதும் ஒப்பந்தத்திற்கு முரணானது எனவும், அவைகளை முன்பிருந்த நிலைக்கே கொண்டு வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று, தமிழ்நாடு அரசு 18.7.2016 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தது.

    மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் 7.5.2018 அன்று பாலாறு பிரச்சனை குறித்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

    பாலாற்றின் குறுக்கே சம்மந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவு பெறாமல் புதிய தடுப்பணை களை கட்டுவதற்கு முனையக்கூடாது எனவும், இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு பிறப்பிக்கும் வரையில் ஆந்திர அரசு தடுப்பணைகளின் உயரத்தை மேலும் உயர்த்தக்கூடாது எனவும், மத்திய நீர் வள ஆதார துறை செயலாளர் இக்கூட்டத்தின் முடிவில் தெரிவித்தார்.

    மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும், எனவும் மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார்.

    இதற்கிடையில், ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகளின் பழுதுபார்ப்பு மற்றும் மறு கட்டமைப்பிற்காக 41.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணையிட்டதாக செய்தித் தாள்களில் தகவல்கள் வெளியானது.

    இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு 13.11.2018 அன்று ஆந்திர அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், தடுப்பணைகளுக்கான விவரங்களை தமிழ்நாட்டின் பரிசீலனைக்காக அளிக்க வேண்டியும் மற்றும் தமிழ்நாடு அரசு அதன் கருத்துக்களை அளிக்கும் வரையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதை நிறுத்தி வைக்க வேண்டியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    மேலும், மத்திய அரசினையும், இதுகுறித்து ஆந்திர அரசுக்கு உரிய அறிவுரைகள் வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    ஆந்திர அரசிடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ பதில் ஏதும் வரப்பெறாத நிலையில், பாலாற்றின் குறுக்கேயுள்ள 21 தடுப்பணைகளின் பழுதுபார்ப்பு மற்றும் மறு கட்டமைப்புப் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஒரு மனு ஒன்றை 19.11.2018 அன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது.

    ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே மேலும் 30 புதிய தடுப்பணைகளை கட்ட உத்தேசித்திருப்பதாக 5.2.2019 அன்று செய்தி வந்ததையடுத்து, இத்தடுப்பணைகள் கட்டுவதற்கான அனுமதியை வழங்கக்கூடாது எனவும், உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரையில் தடுப்பணைகள் கட்டப்படக்கூடாது எனவும், அவ்வரசின் நீர்வள ஆதாரத் துறைக்கு அறிவுரை வழங்குமாறு 6.2.2019 அன்று ஆந்திர அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    பாலாறு நதிநீர் பிரச்சனையில், இந்த அரசு மிக உன்னிப்புடனும், கவனத்துடனும், சட்டரீதியாகவும், பிரச்சனையை தொடர்ந்து அணுகி வருகிறது. தமிழ் நாட்டின் உரிமையை நிலை நாட்டுவதற்கு அம்மா அரசு அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #ADMK #TNAssembly

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று கலெக்டர் ராமன் கூறினார்.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்வது (விவிபேட்) குறித்து விழிப்புணர்வு மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்த தொகுதி அளவிலான பயிற்றுனர்கள் மற்றும் விளக்க அலுவலர்களுக்கு செயல் விளக்க பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பயிற்சி வகுப்பை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் 4 வாக்குச்சாவடிகளை தேர்வு செய்து அங்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்திட வேண்டும். இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் 6 முதல் 7 குழுக்கள் ஏற்படுத்த வேண்டும். அதில் 5 பணியாளர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு வாகனம் ஏற்பாடு செய்திட வேண்டும். ஒரு தொகுதிக்கு 7 வாகனங்கள் வீதம் 13 தொகுதிகளுக்கு 91 வாகனங்கள் இருத்தல் அவசியமாகும்.

    மாதிரி வாக்குச்சாவடியை அரசு அலுவலகம் அல்லது சமுதாய கூடங்களில் மட்டுமே நடத்த வேண்டும். தனியார் இடங்களில் நடத்தக்கூடாது. பணி முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்களை தாலுகா அலுவலகத்தில் சேர்க்க வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மாதிரி வாக்குப்பதிவு குறித்து ஒரு தொகுதிக்கு 10 பேர் வீதம் 130 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் மற்ற வாக்குச்சாவடிகளுக்கு சென்று அங்கு பணிபுரிபவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    இதில், தேர்தல் தாசில்தார் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×