search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர்கள்"

    பாராளுமன்ற தேர்தலில் இதர மாநிலங்களுக்கு மாறாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளுக்கு எதிராக தமிழக வாக்காளர்கள் தங்களது தீர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் பல மாநிலங்களில் பாஜக வேட்பாளர்கள் அபாரமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிமுகம் காட்டி வருகின்றனர். சில மாநிலங்களில் பாஜக கூட்டணி வேட்பாளர்களும் காங்கிரஸ் கூட்டணி மற்றும் அம்மாநிலங்களில் செல்வாக்கு பெற்ற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் சரிசமமான பலத்துடன் இறுதிச்சுற்று முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.

    ஆனால், இவற்றுக்கு எல்லாம் மாறாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளுக்கு எதிராக தமிழக வாக்காளர்கள் தங்களது தீர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

    இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.

    முன்னாள் மத்திய மந்திரிகள் தயாநிதிமாறன் (மத்திய சென்னை), டி.ஆர்.பாலு (ஸ்ரீபெரும்புதூர்), ஆ.ராசா (நீலகிரி), ஜெகத் ரட்சகன் (அரக்கோணம்), பழநிமாணிக்கம் (தஞ்சாவூர்) மற்றும் கனிமொழி (தூத்துக்குடி) ஆகிய முக்கிய பிரமுகர்கள் காலையில் இருந்தே அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.

    மேலும் மத்திய சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், திருவண்ணாமலைகள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், வடசென்னை, சேலம், கடலூர், பொள்ளாச்சி, தென்காசி ஆகிய தொகுதிகளில் லட்சத்துக்கும் அதிமான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

    தி.மு.க.வின் வெற்றிக் கணக்கில் முதல் வரவாக நீலகிரி தொகுதியில் மத்திய முன்னாள் மந்திரி ஆ.ராசா சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


    தி.மு.க. கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இந்த 2 தொகுதிகளிலும் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. பல வேட்பாளர்கள் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால் இவர்களின் வெற்றி உறுதியாகி விட்டதாக கருதப்படுகிறது.

    நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ், பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் முன்னிலையில் உள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சிவகங்கை, திருச்சி, ஆரணி, கிருஷ்ணகிரி, தேனி, கன்னியாகுமரி, விருதுநகர், திருவள்ளூர், கரூர், திருவள்ளூர் ஆகிய 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.

    சிவகங்கையில் முன்னாள் மத்திய மந்திரியின் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும், திருச்சியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும், ஆரணியில் விஷ்ணுபிரசாத்தும், கன்னியாகுமரியில் வசந்தகுமாரும் முன்னிலையில் உள்ளனர்.

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்தார். பின்னர் சற்று பின்தங்கி மாலை 6 மணி நிலவரப்படி சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.

    விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை வேட்பாளர் ரவிக்குமார் முன்னிலையில் உள்ளார். ஈரோடு தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி முன்னிலையில் உள்ளார்.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய 2 தொகுதியிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மதுரை, கோவை ஆகிய 2 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த கட்சி வேட்பாளர் நவாஸ்கனி தொடக்கத்தில் இருந்தே முன்னிலையில் உள்ளார்.

    அ.தி.மு.க. கூட்டணி ஒரே ஒரு தொகுதியான தேனியில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இங்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரும் தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகனுமான ரவிந்திரநாத் குமார் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

    தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

    இதேபோல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே புதுவையிலும் காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் கொடுத்து திமுக தில்லுமுல்லு செய்துள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

    கரூர்:

    கரூர் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்றிரவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. இந்த தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் தி.மு.க.வை சேர்ந்த செந்தில்பாலாஜி கார்வழி ஊராட்சியில் 2,000ரூபாயை ஜெராக்ஸ் எடுத்து வினியோகித்து விட்டு, பணம் மாலையில் கொடுப்போம் என கூறி தில்லுமுல்லு செய்துள்ளார். அரவக்குறிச்சியில் இதைவிட கேவலமாக வேலை செய்ய எதுவுமில்லை.

    நம்பர் எழுதி ஸ்டார் குறியீடு போட்டு டோக்கன், ரூ.2,000-ன் ஜெராக்ஸ் தாள் ஆகியவற்றை மஞ்சள் துண்டு போட்டிருந்தவர்களே (தி.மு.க.) வினியோகித்தனர். பச்சை துண்டுபோட்டிருந்த (அ.தி.மு.க.) எங்களது ஆட்கள் தான் அவர்களை பிடித்தனர். டோக்கன் கொடுப்பதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள்.


    ஆர்.கே.நகரில் இது போல் டோக்கன் வினியோகித்து ஒரு ஆளை ஜெயிக்க வைத்தனர். அந்த டோக்கன் எல்லாம் அரவக்குறிச்சியில் எடுபடாது. டோக்கன் விவகாரத்தை விடுத்து வேறு சில கருத்துக்களையும் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார். மின்சாரம் திருடியதாகவும், அதற்காக அபராதம் நாங்கள் செலுத்தியதாகவும் கூறியிருக்கிறார். இன்று அதன் விவர நகலை தருகிறேன். விவசாயத்துக்கு போகிற தண்ணீரை ஜெனரேட்டர் பழுதின் காரணமாக தண்ணீரை எடுத்ததற்காக அபராதம் விதித்தனர்.

    மின்சாரம் திருடி பிழைக்க வேண்டிய அவசியமில்லை. அந்த பரம்பரையில் நான் பிறக்கவும் இல்லை. இவர்களை மாதிரி திருட்டு சாராயம் காய்ச்சி பாட்டிலில் அடைத்து விற்கவில்லை. மின்சாரம் திருடியதாக இனி குற்றம்சாட்டினால், அது தவறு என்பதற்குரிய ஆதாரத்தை நான் தருகிறேன். டோக்கன் கொடுப்பது உள்ளிட்ட பல வேலைகளை இன்று செய்து விட்டார்கள். இதைவிட கேவலமாக அரசியல் செய்ய முடியாது. ஆள் கடத்தலில் கை தேர்ந்தவர் எதிர்க்கட்சி வேட்பாளர். கருத்து கணிப்பு இருக்கட்டும். நிச்சயமாக அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய பிரதேசத்தில் 19-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலில் ஓட்டுப்போட வரும் வாக்காளர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
    இந்தூர்:

    மத்தியபிரதேசத்தில் மொத்தம் உள்ள 29 பாராளுமன்ற தொகுதிகளில் 3 கட்டமாக 21 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துவிட்டது.

    மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் இந்தூர் தொகுதியும் ஒன்று. இங்கு வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

    விழிப்புணர்வு பிரசாரம் செய்தது மட்டுமின்றி ஓட்டுப் போடும் வாக்காளர்களுக்கு பரிசையும் அறிவித்துள்ளனர். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் 62 சதவீதம் மட்டுமே ஓட்டுகள் பதிவாகி இருந்தது. எனவே ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க செய்வதற்காக பிரத்யேகமாக செல்போன் செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

    அந்த செயலியை வாக்காளர்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து தங்களது விவரங்களை பதிவு செய்ததால், வாக்குப்பதிவு நாளன்று நினைவூட்டிக் கொண்டே இருக்கும். இதோடு வாக்காளர்களுக்கு பல்வேறு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சிறந்த ஆடை அணிந்து வாக்களிக்கும் ஆண், பெண், மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிக்கும் கர்ப்பிணி, மூத்த குடிமக்கள், வாக்களிக்கும் சிறந்த ஜோடி என பல்வேறு வகைகளில் வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் செய்துள்ளனர்.

    இதுதவிர ஓட்டுப்போட்ட பின் கைவிரலில் மையுடன் செல்லும் வாக்காளர்களுக்கு ஓட்டல்களில் 10 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி விலை, ஸ்வீட் கடைகள், தியேட்டர்களில் படம் பார்க்க செல்பவர்களுக்கு பாப்கார்ன் பரிசாக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், பென்சனர்கள், மாற்றுத்திறனாளிகள் பஸ்சில் இலவச பயணம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

    வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதை தவிர்க்க டோக்கன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    தேனி மாவட்டத்தில் மறுவாக்கு பதிவு நடைபெறும் இடங்களில் தண்டோரா மூலம் வாக்காளர்களுக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019

    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் கம்மவார் சரசுவதி நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடி எண் 67 மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடுகபட்டி சங்கர நாராயணன் நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடி எண் 167 ஆகிய 2 வாக்கு சாவடிகளிலும் வருகிற 19ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பாராளுமன்ற தேர்தலுக்கும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் மறு வாக்கு பதிவு நடத்தப்பட உள்ளது.

    இந்த தேர்தல் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் அனைத்து வேட்பாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல இந்த வாக்கு சாவடி பகுதிகளில் ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு தண்டோரா மூலம் அறிவிப்பு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மறுவாக்கு பதிவு நடப்பதை முன்னிட்டு ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் ஏற்கனவே பணியில் உள்ள பறக்கும் படை குழுக்களுடன், தலா 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2 வாக்கு சாவடிகளிலும் மறுவாக்கு பதிவுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளது.


    மறுவாக்கு பதிவு பகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 1950 என்ற தொலைபேசி எண்ணிலும், சி-விஜில் என்ற செல்போன் ஆப் மூலமாகவும் தெரிவிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார். #LokSabhaElections2019

    தேர்தலில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டதால், சர்கார் சினிமா பாணியில் நேற்று பலரும், தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர். #LokSabhaElections2019
    சென்னை:

    முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘சர்கார்’ படத்தில் தன்னுடைய ஓட்டை இன்னொருவர் போட்டு விட்டார் என்று வாதாடி ஜெயிப்பது போன்று கதை அமைக்கப்பட்டு இருந்தது.

    இதில் கூறப்பட்ட 49பி என்ற சட்டப்படி நமது ஓட்டை இன்னொருவர் போட்டுவிட்டாலும் கூட 17 பி படிவம் மூலம் நாம் நமது வாக்கை அளிக்கலாம். இந்த பட காட்சிகளையும் வசனங்களையும் பயன்படுத்தி தேர்தல் ஆணையம் விளம்பரங்கள் வெளியிட்டது. இது நேற்றைய தேர்தலில் எதிரொலித்தது. கள்ள ஓட்டுகள் போடப்பட்டதால், சர்கார் சினிமா பாணியில் நேற்று பலரும், தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர்.



    சென்னை, தாம்பரத்தை அடுத்த முடிச்சூரைச் சேர்ந்தவர், கோபிநாத், தனியார் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர். நேற்று காலை 11 மணிக்கு, முடிச்சூரில் உள்ள தனியார் பள்ளிக்கு, ஓட்டளிக்க வந்தார். அவரது ஓட்டு, ஏற்கனவே, பதிவானதாக, ஓட்டுப்பதிவு மைய அலுவலர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த கோபிநாத், ஓட்டுச்சாவடி ஊழியர்களுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    தனக்கு, டெண்டர் ஓட்டு எனப்படும், ஆய்விற்குரிய ஓட்டு பதிய அனுமதிக்குமாறு, ஓட்டுச்சாவடி ஊழியர்களிடம் கோரிக்கை வைத்தார். இதை தொடர்ந்து சர்கார் பட பாணியில், ‘49 பி’ விதியின்படி, ‘17 பி’ படிவத்தில் கையெழுத்து பெறப்பட்டு, ‘17 ஏ’ படிவத்தில், அவரது ஓட்டை, கோபி நாத் பதிவு செய்தார்.

    இதேபோல், முடிச்சூரைச் சேர்ந்த, ராஜாஜி என்பவரின் ஓட்டும், கள்ள ஓட்டாக பதிவானது. அவருக்கும், ‘49 பி’ விதியின் கீழ் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டது. இதுகுறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-

    கோபிநாத்தின் ஓட்டை, கள்ள ஓட்டாக பதிவிட்டவர், ‘பான் கார்டு’ ஆவணம் காண்பித்துள்ளார். எங்கள் ஆவணங்களில், பான் கார்டின் கடைசி மூன்று இலக்க எண்களே பதிவாகி உள்ளன. ஓட்டுச்சாவடி முகவர்களுக்கும், கள்ள ஓட்டு பதிவு செய்தவர் குறித்து, எந்த சந்தேகமும் எழவில்லை. கோபிநாத் வந்து விசாரித்த பின் தான், கள்ள ஓட்டு போடப்பட்டது தெரிந்தது. ‘சிசிடிவி’ கேமரா இல்லாததால், கள்ள ஓட்டு போட்டவரின் முகம் பதிவாகவில்லை. இது குறித்து, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    கடலூர் மாவட்டம், சிதம்பரம் தொகுதி, காட்டுமன்னார்கோவில், பருவ தராஜ குருகுல பள்ளி ஓட்டுச்சாவடியில், வினோத் வெங்கடேசன் (32), என்பவரது ஓட்டும் அதிகாலையே, கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டது. இதனால், அவர், டெண்டர் ஓட்டை பதிவு செய்து, சீலிட்ட கவரை, ஓட்டுச்சாவடி அதிகாரியிடம் கொடுத்தார்.

    குமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பிலாங்காலை எனுமிடத்தில் உள்ள, ஓட்டுச் சாவடியில் அஜின் மற்றும் ஷாஜி ராஜேஷ் ஆகியோரும், நேற்று, ‘49 பி’ விதியின் கீழ் வாக்களித்தனர். நெல்லை, பேட்டையில், ஆயிஷா சித்திகா, 38, என்ற பெண்ணின் ஓட்டும், கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டிருந்ததால், அவருக்கும், ‘49 பி’ ஓட்டுரிமை வழங்கப்பட்டது.

    நெல்லை பேட்டை கே.ஓ.பி. 2-வது தெருவைச் சேர்ந்தவர் ஜாபர்சாதிக் இவரது மனைவி ஆயிஷா சித்திகா (வயது 33). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி 178-வது வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார்.

    அவரது வாக்கு ஏற்கனவே பதிவாகி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வாக்குச்சாவடி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவருடன் யாராவது இறந்து போனவரின் வாக்கினை செலுத்துமாறு வாக்குச்சாவடி அலுவலர்கள் கூறினர்.

    அதற்கு மறுப்பு தெரிவித்த ஆயிஷா சித்திகா தனக்கு வாக்களிக்க வாய்ப்பு தரவேண்டும் என வாதாடினார். அதற்காக ரூ.2 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து கொடுத்தார். பின்னர் அவர் வாக்களித்தார். இந்த வாக்கிற்காக சுமார் 2 மணி நேரம் போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பணகுடியைச் சேர்ந்தவர் மணிகண்டன். பணகுடி அஸ்ஸே உயர்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள 48-வது வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்தார். அப்போது அவரது வாக்கினை ஏற்கனவே வேறுநபர் பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் முறையிட்டார்.

    இதையடுத்து வாக்குப்பதிவு அலுவலர் முருகன், தாசில்தார் செல்வம் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து மணிகண்டனுக்கு சேலஞ்ச் வாக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தனது வாக்கினை செலுத்தினார். #LokSabhaElections2019

    இமாச்சல பிரதேசத்தில் 48 வாக்காளர்களுக்காக பனி நிறைந்த பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடியாகும். #LokSabhaElections2019

    மணாலி:

    இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தசிகங்க் என்ற இடம் ஆண்டு முழுவதும் பனி பொழிவு அதிகமாக இருக்கும் பகுதியாகும்.

    கடல் மட்டத்தில் இருந்து 15 ஆயிரத்து 256 அடி உயரத்தில் இந்த பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு பொதுவாக மக்கள் யாரும் அதிகம் செல்வதில்லை.

    தசிகங்க் பகுதியில் 48 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அங்கு மே 19-ந்தேதி இறுதி கட்ட பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 48 வாக்காளர்களுக்காக அருகில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் வாக்குச்சாவடி அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

    ஆனால் அந்த பள்ளிக் கூடம் மிக மிக பழமையான பள்ளிக்கூடம் ஆகும். அந்த பள்ளிக்கூடம் எந்த நேரத்திலும் இடிந்து விடலாம் என்பதால் அங்கு வாக்குச் சாவடி அமைக்கும் முடிவு கைவிடப்பட்டது.

    தசிகங்க் நகரில் வாக்குச்சாவடி அமைக்க முடிவு செய்யப்பட்டது.


    இதையடுத்து தசிகங்க் நகரில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தசிகங்க் மற்றும் கேட் ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த 48 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    இந்த 48 வாக்காளர்களில் 30 பேர் ஆண்கள், 18 பேர் பெண்கள் ஆவார்கள். இவர்களுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி என்ற சாதனையை படைத்துள்ளது.

    தசிகங்க் பகுதியை இணைக்கும் சாலை தற்போது மிக மிக மோசமாக உள்ளது. பனி பொழிவால் அந்த சாலை இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டது.

    இதையடுத்து தேர்தலுக்காக புதிய சாலை அமைக்க இமாச்சலபிரதேச பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்து இருக்கிறார்கள். இது தவிர வாக்குச் சாவடி மையத்துக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டு இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி சவுத்ரி தெரிவித்தார். #LokSabhaElections2019

    வாக்குச்சாவடிகளுக்கு செல்போன்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை என்று தேர்தல் அதிகாரி விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவுகள் நடைபெறுகிறது. வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்குள் வாக்களிக்க செல்லும்போது செல்போன் மற்றும் கேமரா போன்ற மின்னணு சாதனைங்களை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. 

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தளம், உதவியாளருடன் கூடிய சக்கர நாற்காலி வசதி, பார்வை குறைபாடு உடையவர் வாக்களிக்க தன்னுடன் ஓர் உதவியாளரை அழைத்து செல்லும் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கும், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் வாக்களிப்பதில் முன்னுரிமையும், ஆண், பெண் வாக்காளர்களுக்கென தனித்தனி வரிசைகளும் அமைக்கப்படும். இவ்வரிசையில் வரும் வாக்காளர்களில் ஒரு ஆண் வாக்காளர் வாக்களிக்க அனுமதிக்கப்படும்போது, 2 பெண் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    மதுரையில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த வாக்காளர் பட்டியல், ரூ.7,610 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
    மதுரை:

    பாராளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க மதுரை பாராளுமன்ற தொகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பறக்கும் படையினரின் கண்காணிப்பு பணி 24 மணி நேரமும் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 81-ம் வார்டு செயலாளர் கோபிநாத் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கீழ அண்ணா தோப்பு பகுதியில் மர்ம நபர் ஒருவர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்துக் கொண்டு இருந்தார். கோபிநாத் அவரை கையும், களவுமாக பிடித்து திலகர் திடல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    போலீஸ் விசாரணையில், அவர் கீழ அண்ணாத்தோப்பைச் சேர்ந்த எம்.என்.பத்மநாபன் என்பதும், அ.தி.மு.க. பிரமுகராக இருப்பதும் தெரியவந்தது.

    அவரிடம் இருந்த வாக்காளர் பட்டியல், ரூ.7,610 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து திலகர்திடல் போலீசார் பத்மநாபனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை நாராயணபுரம் பாங்க் காலனியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 21 பேர் வாக்காளர்களுக்கு வீடு, வீடாகச் சென்று பணம் வழங்குவதாக புகார் வந்தது. இதையடுத்து மதுரை கிழக்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுரேஷ் பேட்ரிக் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேர் பிடிபட்டனர். அதிகாரிகளின் விசாரணையில், அவர்கள் தல்லா குளத்தைச் சேர்ந்த பாண்டியராஜ், அர்ஜூன் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக தல்லா குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #LokSabhaElections2019

    உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பேண்டு வாத்தியம் முழங்க மலர் தூவி வாக்காளர்களை வரவேற்றது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. #LokSabhaElections2019 #WelcomeVoters
    லக்னோ:

    மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சட்டமன்றத் தேர்தல்  நடைபெறும் 4 மாநிலங்களில் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. ஒடிசாவில் சில சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்தவண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பாக்பக் மாவட்டம், பராவ்த் நகரில் உள்ள பூத் எண் 126-ல் வாக்காளர்களை மேளதாளத்துடன் மலர் தூவி வரவேற்றனர். வாக்குச்சாவடி நுழைவு வாயிலில் என்சிசி மாணவர்கள் நின்றுகொண்டு, பேண்டு வாத்தியம் முழங்க மலர் தூவி வாக்காளர்களை வரவேற்றனர். மாணவர்களின் இந்த செயல் வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்தது.



    வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கச் செய்வதற்காக தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.  குறிப்பாக முதல் முறை வாக்காளர்கள் தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. அதேபோல் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் சிரமம் இன்றி வாக்களிக்க  விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #LokSabhaElections2019 #WelcomeVoters

    மக்களவைத் தேர்தல் தொடங்கி உள்ள நிலையில், வாக்காளர்கள் தவறாது வாக்களிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். #LokSabhaElections2019 #Modi #IndiaElections2019
    புதுடெல்லி:

    17-வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.



    வாக்குப்பதிவு துவங்கியுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், ‘மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி உள்ளது. முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள மக்கள் சாதனை படைக்கும் அளவில் பெரிய எண்ணிக்கையில் வந்து வாக்கினை பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக முதல் முறை வாக்களிக்க உள்ள இளைஞர்கள், அதிக அளவில் வந்து வாக்களிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். #LokSabhaElections2019 #Modi #IndiaElections2019
    பாராளுமன்ற தேர்தலில் முதல்கட்டம் மற்றும் 2-ம் கட்ட தேர்தலுக்கு தேவையான 20 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு, தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. #Parliamentelection #IndelibleInk
    மைசூரு:

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஜுரம் தொற்றிக்கொண்டுள்ளது. கட்சிகள் கூட்டணி, தொண்டர்கள் ஆரவாரம், தலைவர்கள் பிரசாரம், ஆட்டோக்களில் பிரசாரம், கட்சிகளின் பொதுக்கூட்டம் என நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. இந்த நிலையில் தேர்தலின்போது ஓட்டுப்பதிவு அன்று வாக்காளர்களின் விரல்களில் அழியாத மை வைக்கப்படுவது வழக்கம். இது காலம்காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.



    இந்த அழியாத மை தயாரிக்கும் அரசு தொழிற்சாலை கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ளது. நாடு முழுவதும் 543 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுதேர்தலுக்காக 10 மில்லி லிட்டர் அளவில் 26 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்க இந்த நிறுவனத்துக்கு கடந்த ஜனவரி மாதம் தேர்தல் கமிஷனிடம் இருந்து உத்தரவு வந்தது. உடனடியாக அழியாத மை தயாரிக்கும் பணிகள் தொடங்கின.

    இதற்காக இதுவரை ரூ.66 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டம் மற்றும் 2-ம் கட்ட தேர்தலுக்கு தேவையான 20 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு, தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  #ParliamentElection #IndelibleInk
    தமிழகம் முழுவதும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. குமரியில் மொத்த வாக்காளர்கள் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர் விபரங்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டார். #Finalvoterslist
    நாகர்கோவில்:

    தமிழ்நாடு முழுவதும் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முடிவடைந்த நிலையில் இன்று புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, பத்மநாபபுரம், குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

    இத்தொகுதிகளில் உள்ள மொத்த வாக்காளர்கள் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர் விபரங்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே இன்று வெளியிட்டார்.

    அதன்படி குமரி மாவட்டத்தில் மொத்தம் 14 லட்சத்து 77 ஆயிரத்து 161 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 45 ஆயிரத்து 626.

    பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 31 ஆயிரத்து 387. இதர வாக்காளர்கள் 148.

    குமரி மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் கன்னியாகுமரி தொகுதியிலேயே அதிக வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 2 லட்சத்து 75 ஆயிரத்து 508 பேர் உள்ளனர்.

    பத்மநாபபுரம் தொகுதியில் குறைந்த பட்சமாக 2 லட்சத்து 23 ஆயிரத்து 964 வாக்காளர்கள் உள்ளனர்.

    வாக்காளர் பட்டியிலில் 37 ஆயிரத்து 731 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 17 ஆயிரத்து 382 பேர். பெண்கள் 20 ஆயிரத்து 344.

    நீக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 7,671 பேர். ஆண் வாக்காளர்கள் 3,903 பேரும், பெண் வாக்காளர்கள் 3,763 பேரும் இதர வாக்காளர்கள் 5 பேரும் நீக்கப்பட்டு உள்ளனர்.

    புதிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியதாவது:-

    1-1-2019-ம் தேதி 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். அதற்கு அவர்கள் 1950 என்ற இலவச தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறியலாம்.

    மேலும் இந்த தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு நபரும் விடுபடக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிய வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, சப்- கலெக்டர்கள் பவன்குமார் கிரியப்பனார், சந்தியா அரி மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இவர்களுடன் அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் சந்துரு, தி.மு.க. சார்பில் வக்கீல் லீனஸ், காங்கிரஸ் சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அமுதன் உள்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் ஆண், பெண் மற்றும் இதரர் குறித்த வாக்காளர்கள் விவரம் வருமாறு:-

    தொகுதி                   ஆண்    பெண்   இதர   மொத்தம்

    கன்னியாகுமரி     138236   137206    66        275508

    நாகர்கோவில்        124264   125651    13        249928

    குளச்சல்           129265 122131 14   251410

    பத்மநாபபுரம்      114687     109257      20       223964

    விளவங்கோடு      118003        121164    20     239187

    கிள்ளியூர்                 121171        115978    15    237164

    மொத்தம்                   745626        731387  148  1477161

    ×