search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஷ்பு"

    ஏப்ரல் 1-ந்தேதிக்கு பிறகு எல்லா மாநிலங்களிலும் காங்கிரசுக்கு ஆதரவாக தனது சுற்றுப்பயணத்தை தொடங்குவதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Congress #Kushboo
    சென்னை:

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு நட்சத்திர பேச்சாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மன்மோகன்சிங், அசாருதீன், சித்து, ஜோதிர் ஆதித்யா சிந்தியா, சச்சின் பைலட், குஷ்பு, நக்மா, விஜயசாந்தி, ராஜ்பப்பர் உள்பட 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் நேற்று அறிவித்தது.


    காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக எப்போது தேர்தல் பிரசாரத்தை தொடங்கப் போகிறீர்கள் என்று நடிகை குஷ்புவிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    வேட்புமனு தாக்கல் இன்றுதான் முடிகிறது. அதை தொடர்ந்து மனுக்கள் பரிசீலனை செய்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதனால் எனது தேர்தல் சுற்றுப்பயணத்தை இன்னும் முடிவு செய்யவில்லை.

    நான் கன்வீனராகவும் இருப்பதால் தலைமையில் கேட்டுதான் முடிவு செய்ய வேண்டும்.

    மேலும் தமிழகத்தில் மட்டும் நான் தேர்தல் பிரசாரம் செய்யவில்லை. எல்லா மாநிலங்களிலும் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய இருக்கிறேன். ஏப்ரல் 1-ந்தேதிக்கு பிறகு எனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Congress #Kushboo
    ஒடிசா மாநிலத்தில் 21 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 147 சட்டமன்ற தொகுதிகளுக்குமான தேர்தல் பிரசாரத்துக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை மாநில காங்கிரஸ் வெளியிட்டது.
    புவனேசுவரம்:

    ஒடிசா மாநிலத்தில் 21 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு தேர்தல் பிரசாரத்துக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை மாநில காங்கிரஸ் வெளியிட்டது.

    அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மன்மோகன்சிங், அசாருதீன், சித்து, ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட், குஷ்பு, நக்மா, விஜயசாந்தி, ராஜ்பப்பர் மற்றும் காங்கிரஸ் முதல்-மந்திரிகள், மாநில தலைவர்கள் என 40 பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்டளையிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். #Rahulgandhi #Kushboo

    சென்னை:

    திருச்சி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

    காங்கிரஸ் கலை இலக்கிய பிரிவு துணை தலைவர் மயிலை அசோக்குமார் குஷ்பு பெயரில் விருப்ப மனுவை கொடுத்தார்.

    இந்த தேர்தலில் குஷ்பு போட்டியிடுவார் என்று கடந்த ஒரு மாதமாகவே பேச்சு அடிபட்டது. தென் சென்னை தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் தென் சென்னை தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


    எனவே அவர் திருச்சி தொகுதியை விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த தொகுதியை பொறுத்தவரை அனைத்து சமூகத்தினரும் கலந்து வாழ்கிறார்கள். முக்கியமாக குஷ்புவுக்கு ரசிகர்கள் அதிகம் உள்ள பகுதி. அவர் திரையுலகில் புகழின் உச்சியில் இருந்த போது அவருக்கு கோயில் கட்டும் அளவுக்கு ரசிகர்கள் தீவிரமாக இருந்தார்கள். எனவே திருச்சி தனக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறார்.

    ஆனால் இதுபற்றி அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. திருச்சி தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் போட்டியிட விரும்புகிறார்.

    இதுபற்றி குஷ்புவிடம் கேட்ட போது, நான் தேர்தலில் போட்டியிடுவது பற்றி எந்த முடிவும் செய்ய வில்லை. ராகுல் காந்தி என்ன சொல்கிறாரோ அதை செய்வேன். ஒரு வேளை நான் போட்டியிட வேண்டும் என்று ராகுல் கட்டளைவிட்டால் போட்டியிடுவேன் என்றார். #Rahulgandhi  #Kushboo

    பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி-திருவள்ளூர் தொகுதிகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இளங்கோவன், நடிகை குஷ்பு போட்டியிட மனு கொடுத்துள்ளனர். #kushboo #elangovan #parliamentelection

    சென்னை:

    காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கும் விருப்ப மனு கொடுப்பது இன்றுடன் முடிவடைகிறது. கடைசி நாளான இன்று ஏராளமானோர் மனு கொடுத்தனர். தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. என்றாலும் திருவள்ளூர், கன்னியாகுமரி ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் தான் போட்டியிட வாய்ப்பு கேட்டு அதிக எண்ணிக்கையில் மனு கொடுத்துள்ளனர்.

    கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட ராபர்ட் புரூஸ், பொன்ராபட்சிங், ரூபிமனோகரன், வசந்த குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ராமசுப்பு, ஊர்வசி அமிர்தராஜ், அசோகன், சாலமன், அனீசா பிரைட் உள்பட 26 பேர் மனு செய்துள்ளனர்.

    இதே போல் திருவள்ளூர் தொகுதிக்கும் கடும் போட்டி உள்ளது. இதுமட்டும்தான் தனி தொகுதி என்பதால் இதற்கும் கடும் போட்டி இருக்கிறது. முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், ராணி, முன்னாள் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, விக்டரி ஜெயக்குமார், ரஞ்சன் குமார், ஜான்சிராணி, ஜெயக்குமார் உள்பட 10 பேர் மனு கொடுத்துள்ளனர்.


    முன்னாள் மாநில தலைவர் இளங்கோவன் ஈரோடு தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிய வில்லை.

    இந்த நிலையில் அவர் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி அந்த மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட தலைவர்கள் 3 பேர் மற்றும் அகில இந்திய காங் கமிட்டி உறுப்பினர் ரகு உள்பட பலர் மனு கொடுத்தனர்.

    தேனி தொகுதியில் இளங்கோவன் போட்டியிடுவதற்காக சென்னையை சேர்ந்த சிவராமன், ரங்க பாஷ்யம், நாஞ்சில் பிரசாத் ஆகியோர் மனு கொடுத்தனர். இதுபோல் விருதுநகர், கரூர், திருச்சி ஆகிய தொகுதிகளில் அவர் போட்டியிடவும் மனு கொடுத்துள்ளனர்.

    ஆரணி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு, கரூர் தொகுதிக்கு ஜோதிமணி, திருச்சிக்கு பட்டுக்கோட்டை ராஜேந்திரன் உள்பட பலர் மனு கொடுத்தனர்.

    திருச்சி தொகுதியில் போட்டியிட முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பெயரில் அவருடைய மகன் ராமசந்திரன், மனு கொடுத்தார். இதே தொகுதியில் போட்டியிட நடிகை குஷ்பு பெயரில் காங்கிரஸ் கலைப்பிரிவு மாநில துணை தலைவர் மயிலை அசோக்குமார் மனு கொடுத்தார். இன்று மாலைவரை மனுக்கள் பெறப்பட்டன.  #kushboo #elangovan #parliamentelection

    ராகுலுக்கு பதில் சொல்ல முடியாமல் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் ஏற்பட்டுள்ளதால் ஏற்பட்ட வெறுப்பு, பயம் காரணமாக கல்லூரியை மிரட்டுகிறார்கள் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். #RahulGandhi #Kushboo
    சென்னை:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழக தேர்தல் பிரசாரத்துக்கு வந்த போது சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு சென்று மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

    ராகுலின் இந்த பயணத் திட்டம் மிகவும் ரகசியமாக இருந்தது. ஒருநாள் முன்பு தான் தமிழக காங்கிரஸ் கட்சிக்கே தெரியவந்தது.

    ஆனால் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சில நாட்களாவே நடந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

    தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது ராகுல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது ஏன்? என்று கல்லூரி கல்வித்துறை அந்த துறையின் இணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்தி மாணவிகளிடம் கலந்துரையாடியதில் எந்த தவறும் இல்லை.

    3 ஆயிரம் மாணவிகள் மத்தியில் ராகுல் சளைக்காமல் பேசினார். அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் கூறினார். இந்த தைரியம் மோடிக்கு வருமா?



    ராகுல் கேட்ட எந்த கேள்விக்கும் மோடியால் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் ஏற்பட்ட கோபம், மக்கள் மத்தியில் ராகுலுக்கு நல்ல பெயர் ஏற்பட்டுள்ளதால் ஏற்பட்ட வெறுப்பு, பயம் காரணமாக கல்லூரியை மிரட்டுகிறார்கள்.

    பா.ஜனதா போல் நாங்கள் பணம் கொடுத்து கூட்டத்தை திரட்டுவது கிடையாது. மக்கள் ராகுல் பக்கம் திரளுகிறார்கள். அதனால் ஏற்பட்ட பொறாமையால் இந்த மாதிரி செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

    நான் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுக்கவில்லை. காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளை முடிவு செய்துள்ளனர். யார்-யார் வேட்பாளர் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்து இரண்டொரு நாளில் அறிவிக்கும்.

    வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு பிரசாரம் பற்றி முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #RahulGandhi #Kushboo #Congress
    பா.ஜனதா அரசுக்கு பூஜ்யத்துக்கு கீழ் மதிப்பெண் அளித்ததை மறந்து இன்று ராமதாஸ் அந்த பூஜ்யத்துடன் இணைந்து விட்டார் என்று குஷ்பு கூறினார். #Congress #Kushboo #Ramadoss #ADMK #BJP
    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் வருமாறு:-

    கேள்வி:- அ.தி.மு.க.- பா.ஜ.க.-பா.ம.க. கூட்டணி பற்றிய உங்கள் பார்வை என்ன?

    பதில்:- கேவலமான கூட்டணி. நீட் தேர்வு விலக்கு, காவிரி விவகாரம் உள்ளிட்ட தமிழக பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தாத பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜனதா அரசுக்கு பூஜ்யத்துக்கு கீழ் மதிப்பெண் அளித்தவர் ராமதாஸ். இன்று அவரும் அந்த பூஜ்யத்துடன் இணைந்து விட்டார்.



    தமிழக மக்களின் எதிர் காலத்தை மோடியிடம் அடகுவைத்து விட்டு பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது.

    கே:- தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி 35 இடங்களை கைப்பற்றும் என கூறியிருக்கிறீர்கள், 40 தொகுதிகளை கைப்பற்றும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லையா?

    ப:- நம்பிக்கை இல்லாமல் இல்லை. 40 தொகுதிகளையும் எங்கள் கூட்டணி தான் கைப்பற்றும். 35 தொகுதி என எதற்கு கூறினேன் என்றால், சரி 4 பேராவது எதிர்தரப்பில் வெற்றிபெற்று மத்தியில் அமையவுள்ள காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நிர்வாகத்தை பார்க்கட்டுமே என்றுதான். எதிர்தரப்பே இருக்கக் கூடாது என நினைக்கக் கூடாது அல்லவா.

    கே:- தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரியின் செயல்பாடு எப்படி உள்ளது?

    ப:- கே.எஸ்.அழகிரி அருமையாக செயல்படுகிறார். அனைத்து தொண்டர்களையும் சந்திக்கிறார், நிர்வாகிகளை அரவணைக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக விட்டுக்கொடுத்து செல்கிறார். இன்னும் சொல்லப்போனால் நீண்ட நாட்களாக கே.எஸ்.அழகிரி போல் ஒரு தலைவர் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு வர வேண்டும் என ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

    கே:- தமிழகத்தில் நடக்கும் காங்கிரஸ் பொதுக் கூட்டங்களில் உங்களை அதிகம் பார்க்க முடியவில்லையே?

    ப:- ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், நான் இப்போதும் கட்சிப்பணிகளில் தீவிரமாக செயல்பட்டு தான் வருகிறேன். தமிழகத்தை மட்டும் மனதில் வைத்து கேள்வி கேட்காதீர்கள். பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன்.

    தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு இதற்கு முன்னர் தலைவராக இருந்தவர் என்னை பொதுக்கூட்டங்களுக்கு அழைத்ததில்லை. அதற்கு என்ன காரணம் என்று அவரிடம்தான் கேட்க வேண்டும். தேர்தல் நெருங்கிவிட்டதால் இனி பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்ட மேடைகளில் என்னை காணலாம்.

    கே:- மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குஷ்பு மத்திய மந்திரி ஆக வாய்ப்பு இருக்கிறதா?

    ப:- (சிரிப்பு) யாருக்கு தெரியும், தேர்தலில் போட்டியிடுவேனா என்பதே எனக்குத் தெரியாது. அப்படி இருக்கும் போது இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்ல முடியும். யாருக்கு என்ன செய்ய வேண்டும், என்ன கொடுக்க வேண்டும் என்பது பற்றி ராகுல்காந்தி தான் முடிவெடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Kushboo #Ramadoss #ADMK #BJP
    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவை களம் இறக்க ராகுல்காந்தி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து குஷ்பு விருதுநகரில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள். #Kushboo
    சென்னை:

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இதில் 9 தொகுதிகளில் தமிழ்நாட்டிலும், ஒரு தொகுதியில் புதுச்சேரியிலும் காங்கிரஸ் போட்டியிட உள்ளது.

    காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், ஈரோடு, திருவள்ளூர், சிவகங்கை, ஆரணி, சேலம் ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 9 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக செல்வாக்கும், வெற்றி வாய்ப்பும் உள்ள தொகுதிகள் ஆகும்.

    இதனால் இந்த 9 தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் தலைவர்களிடம் கடும் போட்டி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்களே இந்த 9 தொகுதிகளில் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவை களம் இறக்க ராகுல்காந்தி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் முக்கிய தொகுதி ஒன்றில் நிறுத்தி குஷ்புவை பாராளுமன்றத்துக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று ராகுல் வியூகம் வகுத்து இருப்பதாக டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    இதையடுத்து தமிழ்நாட்டில் குஷ்பு எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அனேகமாக குஷ்பு விருதுநகரில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்.

    இதுபற்றி குஷ்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருப்பது கடந்த சில பேட்டிகளில் அவர் அளித்த பதில்கள் மூலம் உணர முடிகிறது.

    பெரும்பாலான தடவை அவர், “நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இதுவரை சீட் கேட்கவில்லை. ஒருவேளை தலைவர் ராகுல்காந்தி என்னை தேர்தலில் போட்டியிட சொன்னால் மறுக்க மாட்டேன். நிச்சயம் போட்டியிடுவேன்.

    இல்லை என்றாலும் நான் கவலைப்படப்போவது இல்லை. தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு தீவிர பிரசாரம் செய்வேன். எனது திட்டத்தில் மாற்றம் இல்லை” என்று கூறியுள்ளார்.

    எனவே விருதுநகரில் குஷ்பு களம் இறங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. #Congress #Kushboo
    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 35 தொகுதிகளை கைப்பற்றும் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். #kushboo #vijayakanth #mkstalin #bjp

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா, பா.ம.க. கூட்டணி அமைத்து இருப்பதை தலைவர்கள் விரும்பலாம். மக்கள் விரும்ப மாட்டார்கள். மோடி அரசு சரி இல்லை என்று 4 நாட்களுக்கு முன்பு வரை தம்பித்துரை விமர்சனம் செய்து வந்தார்.

    நாங்கள் ஏற்கனவே சொல்லி வந்தோம். அ.தி.மு.க. அரசை பா.ஜனதா தான் இயக்குகிறது என்று. அரசியல் சதுரங்கத்தில் அ.தி.மு.க. வெறும் சிப்பாய் தான். மத்தியில் என்ன சொன்னார்களோ அதைத் தான் எடப்பாடி அரசு செய்து வந்தது.

    இப்போது எப்படியாவது நாற்காலியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்கள்.


    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அ.தி.மு.க.வுக்கு பூஜியத்துக்கு கீழ்தான் மதிப்பு கொடுக்க முடியும் என்றார். சூடு, சொரணை இல்லாதவர்கள் தான் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைப்பார்கள் என்று அன்புமணி சொன்னார். இப்போது எதுவும் இல்லாமல் கூட்டணி வைத்து, விருந்தும் வைக்கிறார்கள்.

    முரண்பட்ட இந்த கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    தமிழ்நாட்டில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று பா.ஜனதா முயற்சிக்கிறது. அதனால் தான் பா.ம.க.வை விட குறைவாக இருந்தாலும் கூட பரவாயில்லை என்று கூட்டணி சேர்ந்து இருக்கிறார்கள்.

    கோட்டா கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை. நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்கினாலும் பரவாயில்லை. எப்படியாவது தமிழகத்தில் நுழைய வேண்டும் என்பதுதான் அவர்களது குறிக்கோள்.

    முன்பு தாம்பரத்தை தாண்டினால் தாமரையை தெரியாது என்றேன். இப்போதும் சொல்கிறேன் தமிழகத்தில் எங்குமே தாமரை மலரப் போவதில்லை.

    தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்தை சேர்ப்பது பற்றி தி.மு.க.தான் முடிவு செய்ய வேண்டும். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். ஒரு தலைவர் இந்த மாதிரி சூழலில் இருக்கும் போது தலைவர்கள் போய் பார்ப்பார்கள். எல்லாவற்றையும் அரசியல் கோணத்தில் பார்க்க கூடாது.

    எந்த கூட்டணியில் சேருவது என்பதை விஜயகாந்த் முடிவு செய்வார்.

    எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி. இந்த கூட்டணி 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும்.

    தேர்தலில் நான் போட்டியிடுவேனா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் நான் போட்டியிட போவதாக இப்படித்தான் தேர்தல் நேரத்தில் பரபரப்பு கிளம்பி விடும். அதேபோல் தான் இப்போதும் கிளப்பி விட்டுள்ளார்கள்.

    நான் எப்போதும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பதில்லை. ராகுல் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்பேன். போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன். பிரசாரம் மட்டும் செய்ய சொன்னால் பிரசாரம் செய்வேன்.

    எங்கள் கூட்டணிக்கு தமிழகத்தில் 35 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.

    குறிப்பிட்ட தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற வேண்டும் என்பதல்ல. அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.

    இவ்வாறு அவர் கூறினார். #kushboo #vijayakanth #mkstalin #bjp

    பிரதமர் என்ற முறையில் மோடி நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்? என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார். #Kushboo #PMModi
    கோவை:

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் என்ற முறையில் மோடி நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்?. அதை தான் நாங்கள் கேட்டு வருகிறோம். அதற்கு பதில் தரவில்லை என்பதால் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.



    2-ஜி ஸ்பெக்ட்ரம் பற்றி மட்டும் தான் 2014-ல் பேசினர். ஆனால் அதில் ஊழல் இல்லை என கோர்ட்டு கூறி விட்டது. 1,76,000 கோடியில் எத்தனை சைபர் இருக்கிறதோ அத்தனை போஸ்டர் அடித்து ஜெயித்திருக்கிறார்கள். இனியும் மக்கள் ஏமாற தயாராக இல்லை.

    தமிழகத்தில் நாங்கள் யாரும் கோஷ்டி பார்க்கவில்லை. காங்கிரசில் எல்லாருக்கும் ராகுல் காந்தி மட்டும் தான் தலைவர். இளம் தலைமுறையினருக்கு கட்சியில் உயர்பதவி அளித்தது நல்ல வி‌ஷயம்.

    ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சியினர் யாரும் ஏற்க மாட்டோம் என்று சொல்லவில்லை. உரிய நேரத்தில் கூட்டணி கட்சிகள் பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்வார்கள்.

    கடந்த 2012-ம் ஆண்டு முதல் ராபர்ட் வதேரா மீது குற்றம் சொல்லி வருகின்றனர். நிரவ் மோடி, லலித் மோடி, விஜய் மல்லையா போல் அவர் ஓடிப்போகவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக பா.ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கும் போதும் ராபர்ட் வதேரா இங்கு தான் உள்ளார்.

    பிரியங்கா காந்தி என்கிற சிங்கம் களத்தில் இறங்கி உள்ளது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய 2 பேரும் சேர்ந்து நல்ல செயல்பாட்டை தருவதன் மூலம் புது இந்தியா பிறக்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kushboo #PMModi
    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். #Kushboo #Congress

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் நடிகை குஷ்புவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் குழு உறுப்பினர், பிரசார குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    கூடுதல் பொறுப்புகளை ஏற்றுள்ள குஷ்பு தேர்தல் பிரசார வியூகங்களை எவ்வாறு வகுக்கபோகிறார் என்பது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    பிரசார வியூகம் என்ன என்பதை தனிப்பட்ட முறையில் என்னால் எதுவும் சொல்ல முடியாது அதற்காக எங்கள் குழு கூடி ஆலோசித்து முடிவுசெய்யும்.

    காங்கிரசை பொறுத்த வரை இத்தனை ஆண்டு காலம் நாட்டிற்கு என்னென்ன செய்தது என்பதை தண்டோராபோட்டு விளம்பரம் தேடியது கிடையாது. ஏனெனில் அது எங்கள் கடமை. ஆனால் பா.ஜனதா கட்சி பொய், பொய், பொய் எதற்கெடுத்தாலும் பொய். சொல்லி மக்களை ஏமாற்ற தண்டோராபோட்டு விளம்பரப்படுத்துகிறார்கள்.

    காங்கிரஸ் கட்சி 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தை கொண்டு வந்த போது மோடி எதிர்த்தார். ஆனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தான் சாமானிய மக்களை காப்பாற்றியது. இப்போது அந்த திட்டத்திலும் சுமார் 30 முதல் 35 நாட்கள் வரை மட்டுமே வேலை கொடுத்து விட்டு மிகப்பெரிய முறைகேடு செய்து வருகிறார்கள்.

    ஆட்சிக்கு வந்த போது ஊழல் இல்லாத அரசை தருவேன். வறுமையை ஒழிப்பேன் என்று சொன்னாரே செய்தாரா? அடிமட்ட மக்களுக்கு உருப்படியான நல்ல திட்டங்கள் ஏதாவது செய்தாரா? ஏசி அறையில் அமர்ந்திருப்பவர்களுக்கு விவசாயிகளுக்கு கொடுக்கும் ரூ. 6000 பெரிதாக தெரியாது என்று மோடி காங்கிரஸ் தலைவர்களை விமர்சிக்கிறார்.

    காந்தி முதல் நேரு தொடங்கி ராஜீவ் காந்தி வரை பல தலைவர்கள் தங்கள் சொகுசான வாழ்க்கையையும், உயிரையும் நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள். ஆனால் காந்தியை கொன்ற கோட்சேவை மகாத்மா என்று நீங்கள் தான் கொண்டாடுகிறீர்கள்.

    உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ரூ.72 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் மோடி அரசு விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது 16 கோடி மக்களை வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்து மீட்டோம். ஆனால் இப்போது வெறும் 56 இன்ஞ் நெஞ்சு இருப்பதாக மார்தட்டினால் போதாது. நாங்கள் உண்மையைத்தான் பேசுவோம். மக்களிடம் உண்மையைத்தான் சொல்வோம்.

    இன்று முத்ரா வங்கி திட்டம் என்று மூலைக்கு மூலை பேசுகிறீர்களே. இந்திரா காந்தி காலத்திலேயே வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டது. நீங்கள் சொல்லும் டிஜிட்டல் இந்தியா என்பதும், ராஜீவ் கண்ட கனவும் அத்தனையும் காங்கிரஸ் விதை போட்டு வளர்த்தது. நீங்கள் இப்போது வெறுமனே ரிப்பன் வெட்டி கைதட்டு பெறுகிறீர்கள்.

    அன்னிய நேரடி ஒதுக்கீடு பற்றி காங்கிரஸ் ஆட்சியின் போது பேசப்பட்டதாகவும், குஜராத் முதல்-மந்திரியாக இருந்த மோடி அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம். என் பிணத்தின் மீது தான் அது முடியும் என்றும் கூறினார். ஆனால் இப்போது செய்வது என்ன? 100 சதவீதம் அன்னிய முதலீட்டை தானே அனுமதிக்கிறார்.

    தான் ஆட்சிக்கு வந்த 50 நாட்களுக்குள் மாற்றத்தை தருவேன் என்றார். 5 வருடமாகியும் எந்த மாற்றமும் தெரியவில்லையே. ஏதோ சுதந்திரம் கிடைத்தது போல் பண மதிப்பு நடவடிக்கையையும், ஜி.எஸ்.டி வரித் திட்டத்தையும் நள்ளிரவில் அறிவித்தார். அதனால் மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது.

    ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்றீர்கள். எத்தனை பேருக்கு வேலை கொடுக்கப்பட்டது என்ற புள்ளி விவரத்தை ஏன் வெளியிட மறுக்கிறீர்கள். உங்கள் ஏமாற்று திட்டங்களை எல்லாம் மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம்.

    எங்களுடைய பிரசாரம் நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும். தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி மட்டுமல்ல கூட்டணி கட்சிகளின் தொகுதிகளிலும் பிரசாரம் செய்வேன். என்னை பொறுத்தவரை வெளிப்படையாக பேசுவேன். சரி என்றால் சரி என்பேன். தவறு என்றால் தட்டிக்கேட்கவும் தயங்கமாட்டேன்.

    திருநாவுக்கரசருக்கும், எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. கட்சியில் சில செயல்பாடுகள் சரியாக படவில்லை. அதைத்தான் நான் கூறினேன். இப்போதும் ஒரே குழுவில்தான் நாங்கள் பணியாற்றப்போகிறோம். தேர்தலில் நான் போட்டி போடுவேனா என்பது தெரியாது. யார் போட்டியிட வேண்டும். யார் சரியான வேட்பாளர் என்பதை எல்லாம் ராகுல்காந்திதான் முடிவு செய்வார்.

    நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். எத்தனை தொகுதிகள் என்பது பற்றி எல்லாம் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்க வில்லை. அந்த பணிகளெல்லாம் முடிந்த பிறகுதான் எந்த தொகுதிக்கு யார் வேட்பாளர் என்பது பற்றி ராகுல்காந்தி முடிவு எடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தீவிர அரசியலில் இறங்கியுள்ள பிரியங்காவை கண்டு பா.ஜனதா விமர்சனம் செய்வது ஏன்? என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். #kushboo #bjp #congress #Priyanka

    சென்னை:

    பிரியங்கா காந்தி காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தீவிர அரசியலில் இறங்குகிறார்.

    இதையடுத்து பிரியங்கா குறித்து பா.ஜனதாவினர் பல்வேறு விமர்சனங்களை கூறி வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு அளித்த பதில் வருமாறு:-

    பிரியங்கா காந்தி எத்தனையோ ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பணியில் ஈடுபட்டு வருகிறார். பல முறை தேர்தல் பிரசாரங்களும் செய்துள்ளார்.

    எங்கள் கட்சியில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு பெண் முன்னேறி இருக்கிறார். அவரும் வரட்டுமே. பா.ஜனதாவினர் ஏன் பயப்பட வேண்டும்.

    அவர்களுடைய விமர்சனத்தின் மூலமே, பிரியங்காவை கண்டு அவர்கள் பயந்து நடுங்குவது தெரிகிறது. உத்தரபிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியின் பொறுப்பு மட்டும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில்தான் மோடி தொகுதியும், யோகி ஆதித்யநாத் தொகுதியும் வருகிறது. எங்கே நாம் தோற்று விடுவோமோ என்று பயந்து நடுங்குகிறார்கள். ஒரு மாநிலத்தின் பொறுப்புக்கு வந்ததும், நாடு முழுவதும் பா.ஜனதாவினர் பிரியங்காவை விமர்சிப்பது ஏன்?

    குடும்ப அரசியல் என்கிறார்கள். பா.ஜனதாவில் குடும்ப அரசியல் இல்லையா. 44.4 சதவீதம் எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள், ஏதோ ஒரு வகையில் அரசியல் தலைவர்களின் பின்புலத்தில் வந்த வாரிசுகள் தான். எனவே பா.ஜனதாவினருக்கு குடும்ப அரசியல் பற்றி பேச தகுதி இல்லை.


    தமிழக காங்கிரசில் நிலவும் குழப்பம் குறித்து டெல்லி மேலிடத்திடம் புகார் செய்வதற்காக எல்லோரும் சென்றதாக கூறுகிறார்கள். இது தவறு. ஒவ்வொரு வரும் தனிப்பட்ட அரசியல் பணிகளுக்காக எல்லோரும் ஒரே சமயத்தில் டெல்லி சென்று இருந்தோம். தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

    காங்கிரசை ராகுல் காந்தி கட்சி என்று சொல்ல மாட்டார். இயக்கம் என்றுதான் கூறுவார். அந்த இயக்கத்தில் இருக்கும் அனைவரும் அவரது பாணியிலேயே செயல்பட வேண்டும். அதை விட்டு விட்டு நானே ராஜா, நானே மந்திரி என்பது போல் நடந்து கொள்ளக் கூடாது.

    இவ்வாறு குஷ்பு கூறினார். #kushboo #bjp #congress #Priyanka

    பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக தமிழக காங்கிரசில் முகுல்வாஸ்னிக் தலைமையில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. #congress #parliamentelection #mukulwasnik

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியில் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் பணிக்குழு, பிரசார குழு, விளம்பர குழு, ஊடக தொடர்பு குழு மற்றும் நிர்வாக குழுக்களை அமைக்கும்படி ராகுல் காந்தி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி தமிழகத்திலும் இந்தகுழுக்களை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சஞ்சய் தத் முன்னிலையில் கடந்த வாரம் நடந்தது.

    ஆனால் ஒருமித்த முடிவு எதுவும் எடுக்கப்படாததால் டெல்லியில் முகுல்வாஸ்னிக் தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் குழுக்களுக்கான பட்டியல் தயாராகி இருக்கிறது.

    ஒருங்கிணைப்பு குழு முகுல்வாஸ்னிக் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் குமரிஅனந்தன், இளங்கோவன், மற்றும் ப.சிதம்பரம், தங்கபாலு, கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், மாணிக் தாகூர் உள்பட 10 பேர் பெயர் இடம் பெற்றுள்ளது.

    தேர்தல் பணிக்குழுவில் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த 10 பேர் மற்றும் அகில இந்திய செயலாளர்கள் செல்லக்குமார், சி.டி.மெய்யப்பன், நடிகை குஷ்பு, ஆரூண், பீட்டர் அல்போன்ஸ், யசோதா, கோபிநாத் உள்பட 20 பேர் பெயர் இடம் பெற்றுள்ளது.

    பிரசார குழு தலைவர் பதவிக்கு இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விளம்பர குழுவுக்கு வசந்தகுமார், தங்கபாலு, ஆகியோரது பெயரும் தகவல் தொடர்பு குழுவுக்கு கோபண்ணா, அழகிரி, விஜய தரணி, ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் 5 பேர் கொண்ட நிர்வாககுழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இது தவிர தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, விஜயதரணி, அமெரிக்க நாராயணன், எம்.ஜோதி, இதயதுல்லா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, உள்பட 10 பேர் கொண்ட பெயர் பட்டியலும் தயாராகி இருக்கிறது.

    இந்த பெயர் பட்டியல்கள் அனைத்தும் ராகுல் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ராகுல் காந்தி 22-ந்தேதி டெல்லி திரும்புகிறார். அவர் ஒப்புதல் அளித்ததும் அதிகாரப்பூர்வமாக பட்டியல் வெளியாகும். என்று கூறப்படுகிறது. #congress #parliamentelection #mukulwasnik

    ×