search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரடைப்பு"

    பாகிஸ்தான் நாட்டின் போதை பொருள் கட்டுப்பாட்டு துறை மந்திரியான சர்தார் அலி முகமது மஹர் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார்.
    லாகூர்:

    பாகிஸ்தானில் போதை பொருள் கட்டுப்பாட்டு துறை மந்திரியாக இருந்தவர் சர்தார் அலி முகமது மஹர் (52).  கடந்த 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை சிந்த் மாகாணத்தின் 25வது முதல் மந்திரியாகவும் இருந்தவர். சமீபத்தில் இவரது வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்தது.  இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

    இந்நிலையில், பஞ்சாப் மாகாணம் முசாபர்கார் மாவட்டத்தின் கான்கர் கிராமத்தில் வசித்து வந்த மஹர் திடீரென மாரடைப்பினால் இன்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் கான் இரங்கல் தெரிவித்தனர்.

    2018-ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.  இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதை தொடர்ந்து அவர் மந்திரியானது குறிப்பிடத்தக்கது.
    தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்கள் தச்சூர்-பொன்னேரி சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள தச்சூர் கூட்டுச்சாலையில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு பொன்னேரியை அடுத்த வேம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 46) வேலை செய்து வந்தார். நேற்று காலை பணியில் இருந்த ஆனந்த குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை தொழிற்சாலை நிர்வாகத்தினர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்லும்படி கூறி உள்ளனர். ஆனால், ஆனந்தகுமாருக்கு உரிய மேல்சிகிச்சை அளிக்காமல் நிர்வாகத்தினர் அவரை மீண்டும் தொழிற்சாலைக்கு அழைத்து வந்ததாகவும், அப்போது மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில், உரிய மேல்சிகிச்சை அளிக்காததாக புகார் கூறி தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று மாலை தொழிற்சாலை முன்பு தச்சூர்-பொன்னேரி சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் நேரில் வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். போராட்டம் காரணமாக அங்கு ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திருபுவனை அருகே நோய் கொடுமையால் மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருபுவனை:

    திருபுவனை அருகே குச்சிபாளையம்- திருக்கனூர் சாலையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவகி வயது (60). இவர்களுக்கு ஆனந்தன் என்ற மகன் உள்ளார். கால் ஊனமுற்ற தேவகி கடந்த சில மாதங்களாக கால் வலியினால் அவதி அடைந்து வந்தார். இதற்காக மருந்து- மாத்திரையும் சாப்பிட்டு வந்தார். ஆனால் வலி குறையவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகன் ஆனந்தன் ஆகியோர் கூலிவேலைக்கு சென்று விட்ட நிலையில் தேவகிக்கு நோய் கொடுமை அதிகமானதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த தேவகி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் அவர் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கினார்.

    மாலையில் வேலைமுடிந்து வீட்டுக்கு வந்த கிருஷ்ணமூர்த்தி அங்கு மனைவி தேவகி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, ஏட்டு ஜெயதேவன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் வில்லியனூர் மெயின்ரோடு கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது59. இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணவேணியின் மூத்த மகனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார். மூத்த மகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கிருஷ்ணவேணி மனவருத்தத்துடன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிருஷ்ணவேணி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினாயகம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பரமக்குடியில் சென்னை போலீஸ்காரருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

    ராயபுரம்:

    சென்னை ஆர்.கே.நகர் போலீசில் குற்றப்பிரிவு எழுத்தாளராக பணிபுரிந்தவர் பாலகிருஷ்ணன் (35). இவர் பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.

    அவரது அண்ணன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தங்கியுள்ளார். அவரைப் பார்க்க நேற்று புறப்பட்டு சென்றார். இரவு 9.30 மணி அளவில் பரமக்குடி சென்ற அவர் பஸ்சில் இருந்து இறங்கினார்.

    அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் மயங்கிய அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    மரணம் அடைந்த போலீஸ்காரர் பாலகிருஷ்ணனுக்கு பிரியா என்ற மனைவியும், விபேஸ்நாத் என்ற மகனும், தன்விகா என்ற ஒரு வயது மகளும் உள்ளனர்.

    கரிக்கலாம்பாக்கத்தில் அரசு பள்ளி ஆசிரியர் மயங்கி விழுந்து இறந்து போனார்.

    புதுச்சேரி:

    கரிக்கலாம்பாக்கம் சுபாஷ் நகரை சேர்ந்தவர் முருகையன் (வயது47). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் இசை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக குளித்துவிட்டு முருகையன் தயாராகி கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக முருகையனை அவரது குடும்பத்தினர் மீட்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகையன் பரிதாபமாக இறந்து போனார். திடீர் மாரடைப்பு காரணமாக முருகையன் இறந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வயது வித்தியாசமின்றி மனித குலத்தை அச்சுறுத்துவது மாரடைப்பு நோய். இந்த நோய் பற்றியும், அதன் விளைவுகள், சிகிச்சை முறை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
    இன்றைய சூழ்நிலையில் நமது உணவு பழக்க வழக்கம், இதர காரணிகளால் வயது வித்தியாசமின்றி மனித குலத்தை அச்சுறுத்துவது மாரடைப்பு நோய். மருத்துவ வளர்ச்சியால் இந்த நோய்க்கு உயர் சிகிச்சை முறைகள் வந்துவிட்டாலும், இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு நம்மில் பலருக்கு இல்லை என்பதே உண்மை.

    இந்த நோய் பற்றியும், அதன் விளைவுகள் மற்றும் சிகிச்சை முறை பற்றியும் விளக்குகிறார் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இதய சிகிச்சை பிரிவு நிபுணர் சிதம்பரம்.

    ரத்த நாளங்கள் இதயத்திற்கு வேண்டிய ரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை கொடுக்கின்றன. இதயம், இடைவிடாது துடிப்பதற்கு வேண்டிய சக்தியை ரத்தநாளங்கள் மூலமே பெறுகிறது. இதில் அடைப்பு ஏற்பட்டால், இதய தசைகளுக்கு தேவையான ரத்தமும், ஆக்ஸிஜனும் கிடைக்காது. இதனால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு, மாரடைப்பு உண்டாகிறது.

    நெஞ்சுவலி என்பது நீண்டகாலமாக இருக்கக்கூடிய நிலையான வலி என்றும் புதிய அல்லது சிறிது சிறிதாக அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையற்ற வலி என்றும் கூறலாம். மூன்றாவது வலியாக ரத்தநாளத்தை சுற்றியுள்ள தசையில் ஏற்படும் திடீர் சுருக்கத்தால் தோன்றும் மாறுபட்ட நெஞ்சுவலி ஆகும். ரத்த நாளத்தில் தோன்றும் ரத்த உறைகட்டிக்கும் இதற்கும் தொடர்பு இல்லை.

    முதல்வகை மருந்துகளின் மூலம் குணப்படுத்தலாம். 2-வது வகை வலி ஏற்பட்டால் ஆஸ்பத்திரியில் மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் சிகிச்சை பெற வேண்டும். மாறுபட்ட நெஞ்சுவலியின் அறிகுறிகள். உணர்ச்சி வயப்பட்ட அழுத்தம், குளிர் தாக்குதல், புகை பிடித்தல் ஆகிய காரணங்களால் கூட ஏற்படலாம். இந்த வலி சிறிது நேரமே இருப்பதோடு பொதுவாக உறக்கம் கலையும் விதத்தில் இரவு நேரத்தில் ஏற்படும். ரத்த ஒட்டம் தடைபடும் போது ஒழுங்கற்ற நாடித்துடிப்பும் ஏற்படலாம்.

    மாரடைப்பு நிகழ்கின்ற நேரத்தில் ரத்த ஓட்டத்தில் எந்தவிதமான அறிகுறியை கூட காட்டாமலும் இருக்க வாய்ப்பு உண்டு. இதில் ரத்த ஓட்டத்தில் குறைபாடு இருப்பவர்களுக்கு எவ்வித அறிகுறியும் தெரிவதில்லை. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நரம்புகள் பாதிப்படைவதால் வலியை உணரும் தன்மை குறைந்திருக்கும். சில சமயம் இருதயம் பாதிப்படைகின்ற போது உடல் அசதியும், படுக்கும் போது மூச்சுத்திணறலும் ஏற்படலாம்.

    ரத்த நாளத்தில் நிரந்தரமாகவோ, 30 நிமிடங்கள் முதல் 2 மணிநேரம் வரையோ அடைப்பு நீடித்தால் மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு ஏற்படும் போது, பொதுவாக 15 நிமிடங்கள் வரை கடுமையான நெஞ்சுவலியை ஏற்படுத்தும், சில நேரத்தில் எவ்வித அறிகுறியும் இல்லாமல் அமைதியாகவும் வரவும் வாய்ப்புண்டு. உடைந்த அல்லது விரிசலான ரத்த நாள கொழுப்பு கட்டிகள் இருக்கும் இடத்தில் ரத்த உறைவு, அடைப்பு ஏற்படுவதால் மாரடைப்பு வருகிறது. இந்த உறைக்கட்டியை கரைக்கும் மருந்துகளை மாரடைப்பு நோய் சிகிச்சை முறையின்போது பயன்படுத்துகிறோம்.

    இந்த நோயால் இருதய தசைகள் மீண்டும் செயல்படமுடியாத அளவுக்கு சேதமடைதல், நாடிதுடிப்புகளில் பாதிப்பு ஏற்படுவதாலும் மரணம் ஏற்படுகிறது. இருப்பினும் சிலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் மூலம் மரணத்திலிருந்து உயிர் பிழைத்து வருகிறார்கள்.

    கடுமையான மற்றும் நீண்ட நேரம் நீடிக்கக்கூடிய நெஞ்சுவலி, இடது தோளுக்கும், இடது பக்க முதுகுக்கும் சில சமயம் இடது தாடைக்கும் பரவும், வயிற்றின் மேல்பகுதியில் வலி, மூச்சுத்திணறல், மயக்கம், குமட்டல் மற்றும் வாந்தி, அதிகமாக வியர்த்தல், அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படும்.

    இந்த சூழ்நிலையில் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். முடிந்தால் மென்று சாப்பிடுகிற ஆஸ்ப்ரின் மாத்திரையையும், சப்பி சாப்பிடுகிற சார்பிட்ரேட் மாத்திரையையும் உடனே சாப்பிடவேண்டும்.

    நம்முடன் இருக்கும் நபருக்கு மூச்சு நின்றுவிட்டால், உடனே இருதய நுரையீரல் முதலுதவி செய்யவேண்டும். மூச்சுநின்ற சில விநாடிகள் மட்டுமே ஒருவர் உயிர்த்திருக்க முடியும். எனவே, இந்த குறுகிய நேரத்திற்குள் இதை செய்யவேண்டும். எனவே, அனைவரும் இதில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

    மாரடைப்பு ஏற்பட்ட ஒருமணி நேரத்திற்குள் மருத்துவ உதவி பெறுவது மிக, மிக அவசியம். அவ்வாறு செய்தால் உயிரைக்காப்பாற்றலாம்.

    இவ்வாறு டாக்டர் சிதம்பரம் கூறினார்.

    டாக்டர் சிதம்பரம்
    மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் அதன் விளைவு பயத்தினையே தருகின்றது. இதிலிருந்து மீண்டு வருங்காலத்தில் இவ்வாறு ஏற்படாதவாறு காத்துக் கொள்வதும் மிக மிக முக்கியம் ஆகின்றது.
    உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் அதன் விளைவு பயத்தினையே தருகின்றது. இதிலிருந்து மீண்டு வருங்காலத்தில் இவ்வாறு ஏற்படாதவாறு காத்துக் கொள்வதும் மிக மிக முக்கியம் ஆகின்றது.

    ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் இருதயத்திற்கு கிடைப்பது தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகின்றது. இதற்கு முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுவது இருதயத்திற்கு சக்தி தரும் ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புதான். இந்த அடைப்பில் கொழுப்பு, கால்ஷியம் மற்றும் சில பொருட்கள் கலந்து இருக்கலாம்.

    பொதுவாக மாரடைப்பு என்றாலே இடது தோள் வலி, நெஞ்சை அழுத்தி பிடிக்கும் உணர்வு, திடீரென பலமின்மை, சில சமயம் நினைவின்மை, மூச்சு வாங்குதல், வியர்த்து கொட்டுதல், வெளிர்ந்த சருமம், வயிற்றுப் பிரட்டல், வாந்தி, வலி, கால், கைகளில் வீக்கம் என பல அறிகுறிகளை காட்டி விடும். இன்று மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக நன்கு குணம் காண முடிகின்றது.

    இருப்பினும் அந்த பயம் பாதித்தவருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் இருந்து கொண்டே இருக்கின்றது. முறையான மருந்தும், குறிப்பிட்ட காலந்தவறாத மருத்துவ செக்-அப்களும் இருந்தால் இயல்பான வாழ்க்கை என்பது நிச்சயம் சாத்தியமே.

    * ஆனால் வருமுன் காப்பது மிக மிக நல்லது அல்லவா. ஆகவே உங்கள் கொலஸ்டிரால் அளவினை நன்கு கண்காணித்துக் கொள்ளுங்கள். நல்ல கொலஸ்டிரால் குறையவும் கூடாது. கெட்ட கொலஸ்டிரால் கூடவும் கூடாது.

    * உங்கள் ரத்த அழுத்தத்தினை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள். கெட்டகொழுப்பு உயர் ரத்த அழுத்தத்தினையும் ஏற்படுத்தும் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.

    * கண்டிப்பாய் புகை பிடிப்பதனை நிறுத்துங்கள். இது உயர் ரத்த அழுத்தத்தினை ஏற்படுத்தும். ரத்த குழாய் அடைப்புகளை ஏற்படுத்தும்.

    * ஊறுகாய், அப்பளம், உப்பு சேர்த்த சாதம் இவை வேண்டாமே. பொதுவில் உப்பின் அளவினைக் குறையுங்கள்.

    * நிதானமாய் உடற்பயிற்சியினை ஆரம்பித்து நன்கு முடியும் வரை செய்யுங்கள்.

    * மன அழுத்தம் இதயத்தினை வெகுவாய் பாதிக்கும்.
    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகநாதன் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

    திருச்சி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 1991-96 வரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சண்முகநாதன் (வயது 58).

    வக்கீலாக பணியாற்றி வந்த அவர் தற்போது திருச்சி நெ.1 டோல்கேட் மேனகா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சண்முகநாதன் கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

    அவ்வப்போது ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. வீட்டில் இருந்த அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் முன்பே அவர் இறந்து விட்டார்.

    மரணம் அடைந்த சண்முக நாதனுக்கு சசிகலா என்ற மனைவியும், என்ஜினீயரிங் படிக்கும் ஒரு மகனும் உள்ளனர். சண்முகநாதன் உடலுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை அவரது உடல் அடக்கம் நடக்கிறது.

    கருணாநிதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிசிச் பெற்று வருகிறார். இந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் ஈரோடு மாவட்டத்தில் 2 பேர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். #karunanidhi #dmk

    ஈரோடு:

    தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தி.மு.க தொண்டர்கள் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டி கொண்டிருக்கிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஆயிகாரன்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 47). தீவிர தி.மு.க. தொண்டர்.

    கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதிலிருந்தே இவர் சரியாக சாப்பிடாமல் இருந்தார். மேலும் சகநண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டு கொண்டே இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கிய ஜனார்த்தனன் இன்று எழுந்திருக்கவே இல்லை.

    அருகே சென்ற அவரை பார்த்தபோது மாரடைப்பு ஏற்பட்டு ஜனார்த்தனன் இறந்தது தெரியவந்தது.

    ஈரோடு கனிராவுத்தர் குளம் காந்தி நகர் முதல் வீதியை சேர்ந்தவர் கணேஷ் இவரது மனைவி ராஜேஸ்வரி (33). கூலி தொழிலாளியாக வேலை பார்க்கிறார்.

    இவர்களுக்கு நந்தினி, செம்பருத்தி என்ற 2 மகள்களும் குருமூர்த்தி என்ற ஒரு மகனும் உள்ளனர்.

    ராஜேஸ்வரி தி.மு.க. மகளிர் அணியில் உறுப்பினராக உள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது மிகுந்த பற்று கொண்டவர் கடந்த 2 நாட்களாக கருணாநிதி உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததை டி.வி.யில் பார்த்து ராஜேஸ்வரி மிகவும் வேதனையுடன் காணப்பட்டார்.

    நேற்று இரவு கருணாநிதி உடல்நிலை திடீர் பின்னடைவு என்ற செய்தியை கேட்டதும் மிகவும் உடைந்து போனார்.

    கலைஞர் ஐயா.. நம்மை விட்டு போய் விடுவாரோ. என சத்தம் போட்டபடி நேற்று இரவு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.  #karunanidhi #dmk

    கேரள மாநிலம் கோட்டயத்தில் ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டதால் 43 பயணிகளை சாதுர்த்தியமாக காப்பாற்றி டிரைவர் உயிர் விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #DriverMadhu
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் மது (வயது 48). தனியார் பஸ் டிரைவர். நேற்று இரவு கோட்டயத்தில் இருந்து மலப்புரம் மாவட்டம் புத்தன் அத்தானி என்ற இடத்திற்கு 43 பயணிகளுடன் புறப்பட்டார்.

    இந்த வழிச்சாலை 10 அடி முதல் 100 அடி வரை பள்ளம் உள்ள மலைப்பகுதிபோன்று இருக்கும். பஸ் வேகமாக கோட்டைக்கல் என்ற இடம் வந்தபோது டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. நெஞ்சை பிடித்தவாறு பஸ்சை ஓட்டினார். இருந்தாலும் பஸ் தாறுமாறாக ஓடியது. இதனால் பயணிகள் அலறி சத்தம்போட்டனர்.

    ஒரு புறம் கிடுகிடு பள்ளம், எதிர்புறம் ராட்சத மரம். பயணிகளை காப்பாற்ற வேகத்தை குறைத்த டிரைவர் உடனே ஹேண்ட் பிரேக்கை பிடித்து பஸ்சை நிறுத்தினார். ராட்சத மரத்தில் மோதாமல் பஸ் பத்திரமாக நின்றது. பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    டிரைவரை பார்த்தபோது ஸ்டேரிங்கில் நெஞ்சை பிடித்தவாறு படுத்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த பயணிகள் அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    உயிர்போகும் நிலையில் சாதுர்த்தியமாக பஸ்சை நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்றியது தெரியவந்தது. பயணிகள் டிரைவர் மதுவின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    இது குறித்து கோட்டைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #DriverMadhu
    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கத்தில் திருமண விழா விருந்தில் பிரியாணி சாப்பிட்ட வாலிபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    சீர்காழி அருகே உள்ள கன்னியாகுடி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன்கள் கார்த்திக் (25), பிரபாகரன். இவர்கள் சென்னையில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கத்தில் நேற்று இரவு நடைபெற்ற நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கார்த்திக்கும், பிரபாகரனும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரியாணி மற்றும் அசைவ உணவுகள் விருந்தில் பரிமாறப்பட்டது.

    பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்த கார்த்திக்கிற்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்து கீழே சாய்ந்தார். உடனடியாக அவரை செங்குன்றத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கார்த்திக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. மாரடைப்பால் உயிரிழந்த கார்த்திக்கிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. #Tamilnews
    இதய நோய் உண்டாகுவதற்கு உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புகையிலை பொருட்கள் பயன்பாடு ஆகியவை முக்கிய காரணங்கள்.
    இதய நோய் உண்டாகுவதற்கு உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புகையிலை பொருட்கள் பயன்பாடு ஆகியவை முக்கிய காரணங்கள். ரத்த அழுத்தமும், உடல் பருமன் பிரச்சினையும் பலரை பாதித்துள்ளது. கெட்ட கொழுப்பு உடலில் சேரும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. அது இதயத்தை பலவீனப்படுத்துகிறது.

    உணவில் உப்பு அதிகம் சேர்ப்பதும் ரத்த அழுத்தம் அதிகரிக்க காரணமாகிவிடுகிறது. இறுதியில் இதய செயலிழப்பு ஏற்படுகிறது. தினமும் 2.3 கிராம் சோடியம்தான் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்கிறது. ஆனால் நாம் இரண்டு மடங்குக்கு அதிகமான உப்பை உணவில் பயன்படுத்துகிறோம். சமீபகாலமாக இதய நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 17 மில்லியன் மக்கள் இதய நோய் பாதிப்புக்குள்ளாகி மரணமடைகிறார்கள். இந்த எண்ணிக்கை 2030-ம் ஆண்டில் 23 மில்லியன் ஆக உயரும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 25 சதவீதம் பேர் 40 வயதுக்குள்ளாகவே மாரடைப்புக்கு ஆளாகிறார்கள். 
    ×