search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதலை"

    சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் பழனியில் நடந்தது.

    பழனி:

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் பழனியில் நடந்தது.

    இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலாஜி தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக தபால் அட்டையில், 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதி பழனி தலைமை தபால் அலுவலகம் முன்புள்ள பெட்டியில் போட்டனர்.

    இதுகுறித்து மாவட்ட செயலாளர் கூறுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தின்படி தமிழக கவர்னருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது என்றார்.

    இதேபோல தேனியிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கவர்னருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முனீஸ்வரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கதிராமங்கலம் வழக்கை விசாரித்த கும்பகோணம் கோர்ட்டு நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். #ProfessorJayaraman #ONGC
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைத்திருந்த குழாய் பழுதடைந்தது.

    இந்த பழுதை நீக்க அந்த நிறுவனத்தினர் தனது ஊழியர்களுடன் சென்றனர். அங்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்தில் பேராசிரியர் ஜெயராமன், வக்கீல் கரிகாலன், ராஜி, தர்மராஜ், விஜயராகவன், சீனிவாசன், சேதுராஜா, கொளஞ்சிநாதன், கருணாநிதி, பிரபு ஆகிய 10 பேர் மீது ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஊழியர்களை பணி செய்யாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி புகார் அளித்தனர்.

    இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

    வழக்கை விசாரித்த கும்பகோணம் கோர்ட்டு நீதிபதி சண்முகப்பிரியா குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறினார்.  #ProfessorJayaraman #ONGC


    இலங்கை சிறையில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் விரைவில் சொந்த ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடந்த 13-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஒரு படகையும், அதில் இருந்த 11 மீனவர்களையும் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். பின்னர் அவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று அவர்கள் அனைவரும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நல்லெண்ண அடிப்படையில் 11 மீனவர்களையும் நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட 17 மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ளனர். தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 11 பேரையும் சேர்த்து 28 பேர் அங்கு உள்ளனர். அவர்கள் விரைவில் சொந்த ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இலங்கை சிறையில் இருந்து மேலும் 8 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
    ராமேசுவரம்:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து கடந்த 5-ந் தேதி குப்புசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சதீஷ், அஜீத், தர்மராஜ், ராமு ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அந்த 4 மீனவர்களையும், அவர்களது படகையும் சிறைபிடித்து சென்றனர்.

    இதேபோல அதே பகுதியில் இருந்து கடந்த 7-ந் தேதி கடலுக்கு சென்ற ஜோசப் என்பவருக்கு சொந்தமான படகையும், அதில் இருந்த மீனவர்கள் ரனீசன், ராஜா, விஜி, மணிகண்டன் ஆகிய 4 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இவர்கள் அனைவரும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று அந்த 8 மீனவர்களும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 8 மீனவர்களையும் விடுதலை செய்தார். ஆனால் சிறைபிடிக்கப்பட்ட இரு படகுகளின் உரிமையாளர்கள் வருகிற 28-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    விடுதலை செய்யப்பட்ட 8 மீனவர்களும் இன்னும் ஓரிரு நாளில் தமிழகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் நேற்று முன்தினம் சென்னை திரும்பிய நிலையில், நேற்று மேலும் 8 மீனவர்களை இலங்கை கோர்ட்டு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

    20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முத்திரைத்தாள் மோசடி வழக்கில் இருந்து காலம்சென்ற அப்துல் கரீம் தெல்கியை விடுதலை செய்து நாக்பூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #Telgi #Stamppaperscam
    மும்பை:

    நாட்டையே உலுக்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிலான முத்திரைத்தாள் மோசடி வழக்கில் மூளையாக இருந்ததாக கடந்த 2001-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டவர் அப்துல் கரீம் தெல்கி. இவருக்கு 30 ஆண்டு சிறை தண்டனையும் 202 கோடி ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட் உத்தரவிட்டது.

    இதையடுத்து, புனே நகரில் உள்ள எர்ரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். அவரது உடல்நிலையை காரணம் காட்டி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறைக்கு மாற்றப்பட்ட தெல்கி  11 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வந்தார்.



    பரப்பன அக்ரஹார சிறையில் அப்துல் கரீம் தெல்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா சமீபத்தில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, சிறையில் இருந்த அப்துல் கரீம் தெல்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    உயிர் காக்கும் உபகரணங்களின் துணையுடன் அங்கு சிகிச்சை பெற்றுவந்த அப்துல் கரீம் தெல்கி, உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் 26-10-2017 அன்று மரணம் அடைந்தார்.

    இவ்வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு எதிராக தெல்கி சார்பில் மேல்முறையீட்டு வழக்கு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், முத்திரைத்தாள் மோசடி தொடர்பாக தண்டிக்கப்பட்ட அப்துல் கரீம் தெல்கி உள்ளிட்டோரை விடுவித்து நாக்பூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.  #Telgi #Stamppaperscam  
    இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். #Rameswaramfishermen
    ராமேசுவரம்:

    கடந்த செப்டம்பர் 11-ந் தேதி ராமேசுவரம் தனுஷ்கோடியில் இருந்து வினோத், மகாராஜா ஆகிய 2 பேர் மிதவை மூலம் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.

    கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பலத்த காற்று வீசியதில் மிதவை கவிழ்ந்தது.

    இதனால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 2 மீனவர்களையும், அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

    இருவரும் இலங்கை மல்லாகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இது குறித்த வழக்கு இன்று மல்லாகம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தராஜ், 2 மீனவர்களுக்கும் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

    அதைத் தொடர்ந்து 2 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் மெரியானா முகாமுக்கு அழைத்துச் சென்றனர். ஓரிரு தினங்களில் அவர்கள் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Rameswaramfishermen

    இருமுடி கட்டுடன் சபரிமலை சென்றபோது கைதான கேரள மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் சுரேந்திரனை ஜாமினில் விடுதலை செய்யுமாறு திருவல்லா கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #SabarimalaTemple #KSurendran
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால், ஐயப்பன் கோவில் அமைந்திருக்கும் சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது

    இந்நிலையில், கடந்த 17-ம் தேதி கேரள மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் சுரேந்திரன் தனது காரில் மேலும் இருவருடன் ஐயப்பனை தரிசிப்பதற்காக இருமுடி கட்டுடன் சென்று கொண்டிருந்தார்.

    அவரை நிலக்கல் அருகே பத்தினம்திட்டா போலீஸ் சூப்பிரண்டு யாதிஷ் சந்திரா தடுத்து நிறுத்தினார். ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் கார் நுழைவுக்கான அனுமதி சீட்டும், தரிசனத்துக்காக கோவில் நிர்வாகத்திடம் ரசீதும் பெற்றிருக்கும் எங்களை ஏன் தடை செய்கிறீர்கள்? என்று போலீசாரிடம் சுரேந்திரன் வாக்குவாதம் நடத்தினார்.

    வாக்குவாதம் முற்றிய நிலையில் சுரேந்திரனை கைது செய்த போலீசார், பத்தினம்திட்டா மாவட்ட மாஜிஸ்திரேட் இல்லத்தில் மறுநாள் அதிகாலை சுரேந்திரனை ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து, சுரேந்திரன் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



    சுரேந்திரன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க.வினர் கடந்த இருநாட்களாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையில், சுரேந்திரனை ஜாமினில் விடுதலை செய்யுமாறு கோரி திருவல்லா நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி சுரேந்திரனுக்கு ஜாமின் அளித்து உத்தரவிட்டார். #SabarimalaTemple #KeralaBJPleader #KSurendran 
    தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அதிமுக பிரமுகர்கள் 3 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய கவர்னர் ஒப்புதல் அளித்ததையடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். #DharmapuriBusBurning #ADMK #TNGovernor #BanwarilalPurohit
    சென்னை:

    பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு கடந்த 2000ம் ஆண்டு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி புறநகரான இலக்கியம்பட்டியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பஸ் மீது அ.தி.மு.க.வினர் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தனர். இதில் ஹேமலதா, காயத்ரி, கோகிலவாணி ஆகிய 3 மாணவிகள் தீயில் கருகி பலியானார்கள். 16 மாணவிகள் காயம் அடைந்தனர்.

    இந்த வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர்கள் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பனின் மரண தண்டனையை கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆயுள் தண்டனையாக குறைத்தது.

    பின்னர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நீண்ட நாட்களாக சிறையில் உள்ள சுமார் 1800 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அந்த கைதிகள் பற்றிய விபரம் மற்றும் அவர்கள் எத்தனை ஆண்டுகளாக சிறையில் உள்ளனர் என்பன போன்ற தகவல்களை திரட்டி கோப்புகளாக தயாரித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அரசு அனுப்பியது.



    தமிழக அரசு அனுப்பிய கைதிகள் விடுதலை பரிந்துரை பட்டியலில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை பெற்ற நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றிருந்தன. ஆனால் அவர்கள் 3 பேரையும் முன்னதாகவே விடுதலை செய்ய அனுமதிக்க இயலாது என்று கவர்னர் கூறி விட்டார்.  3 பேரை விடுவிப்பதை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தி, அந்த ஆவணத்தையும் கவர்னர் திருப்பி அனுப்பி விட்டார்.

    அதன்பிறகும் அவர்களை விடுவிக்கும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டது. இது தொடர்பாக கவர்னருக்கு புதிய ஆவணம் அனுப்பப்பட்டது. அதில், “பஸ் எரிப்பு திட்டமிட்டு நடந்தது அல்ல. உணர்ச்சி வேகத்தில் நடந்து விட்ட ஒன்று” என்று தமிழக அரசு குறிப்பிட்டது. தமிழக அரசின் இந்த புதிய விளக்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளார் கவர்னர் பன்வாரிலால் புரோகித். அத்துடன், 3 பேரையும் விடுவிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதையடுத்து நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரும் வேலூர் சிறையில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டனர். #DharmapuriBusBurning #ADMK #TNGovernor #BanwarilalPurohit

    பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஆசியா பீவி நெதர்லாந்துக்கு அழைத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. #AsiaBibi #AsiaBibiReleased #PakBlasphemy
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47) உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 31ம் தேதி விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசியல் கட்சிகள் மற்றும் மதவாத அமைப்புகள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. சாலைகளில் தடை அமைத்தும், டயர்களை கொளுத்தியும் அந்த அமைப்புகள் நடத்திய போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தீவிர மதபற்றாளர்கள் பலர், ஆசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
     
    மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, தெஹ்ரீ-இ-லப்பாயிக் பாகிஸ்தான் (டிஎல்பி) கட்சி போராட்டத்தை திரும்ப பெற்றது. முக்கிய கட்சியான டிஎல்பி போராட்டத்தைக் கைவிட்டதால் பாகிஸ்தானில் இயல்பு நிலை திரும்பியது.

    இந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு பிறகு முல்தானில் உள்ள பெண்கள் சிறையில் இருந்து ஆசியா பீவி விடுவிக்கப்பட்டார்.  ராவல்பிண்டியில்  உள்ள நூர் கான் விமான தளத்துக்கு அழைத்துச்செல்லப்படும் ஆசியா பீவி, அங்கிருந்து நெதர்லாந்து அழைத்துச் செல்லப்பட உள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.



    ‘ஆசியா பீவியை இம்ரான் கான் அரசு விடுதலை செய்துள்ளது. நெதர்லாந்து தூதர் மற்றும் அதிகாரிகள் முல்தான் சிறைக்கு சென்று விடுதலையை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து ஆசியா பீவியை நெதர்லாந்துக்கு அனுப்பி வைத்துள்ளனர் என டிஎல்பி கட்சி செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

    அதேசமயம் இஸ்லாமாபாத் மற்றும் ராவல் பிண்டியில் டிஎல்பி கட்சி தொண்டர்கள் திரண்டு, ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அரசு அனுமதிக்கக்கூடாது என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #AsiaBibi #AsiaBibiReleased #PakBlasphemy
     
    இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய ராஜபக்சே மகன் நமல், தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Rajapaksa #NamalRajapaksa
    கொழும்பு:

    2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான உச்சக்கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களை ராணுவம் கைது செய்தது. அதன்பிறகும் தேடுதல் வேட்டை என்ற பெயரில் ஏராளமான தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.

    குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில் இவர்கள் அனைவரும் தற்போது இலங்கையில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழர் கட்சிகள் கடந்த 9 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையையும் இலங்கை அரசு எடுக்கவில்லை.

    தற்போது, இலங்கையில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்சே பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 எம்.பி.க் களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதே நேரம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்போது ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக நேற்று முன்தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்தது.

    ராஜபக்சேவை அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சந்தித்து பேசியபோது, தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்குவதை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதிதர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு ராஜபக்சே ஒப்புக்கொள்ளாததால் அவருக்கு எதிராக வாக்களிக்கும் முடிவை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில்தான் இலங்கை சிறைகளில் உள்ள தமிழர்களை விடுதலை செய்யும்படி சிறை அதிகாரிகளுக்கு அதிபர் சிறிசேனா நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

    இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் ராஜபக்சேயின் மகனும், எம்.பி.யுமான நமல் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு புதிய நிபந்தனை விதித்தார். அவர் டுவிட்டரில் தமிழில் பதிவு செய்த தகவல் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பேரம் பேசுவதுபோல் அமைந்துள்ளது. அதாவது ஓட்டெடுப்பில் தனது தந்தைக்கு ஆதரவு தரவேண்டும் என்று அவர் மறைமுகமாக வலியுறுத்தி இருக்கிறார்.

    அதில், ‘தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். கூட்டமைப்பில் உள்ள சில தனி நபர்களின் சுயநல தேவைகளுக்காக ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் அடையாளமாக திகழும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சிலரிடம் அடகு வைப்பது தமிழ் சமூகத்தை ஏமாளிகள் ஆக்கும் செயல்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

    மற்றொரு பதிவில், ‘தமிழ் மக்களின் அடிப்படை சிக்கல்களை தீர்த்து வைக்கும் வகையில் கலந்துரையாடல்களை உருவாக்க எமது தரப்பு தயாராக உள்ளது. நீண்ட நாள் கைதிகளாக உள்ள முன்னாள் போராளிகள் தொடர்பில் அதிபர் மற்றும் பிரதமர் தொடர்ந்து கவனம் செலுத்தி விரைவில் தகுந்த முடிவை அறிவிப்பர்’ என்று கூறி இருக்கிறார்.

    225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் தற்போதைய நிலையில் ராஜபக்சேவை 100 எம்.பி.க்களும், ரனில் விக்ரமசிங்கேவை 103 எம்.பி.க்களும் ஆதரிக்கின்றனர்.

    மீதமுள்ள 22 எம்.பி.க்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் ஏற்கனவே ராஜபக்சே அணிக்கு தாவி விட்டார். இன்னும் 4 எம்.பி.க்களின் ராஜபக்சே பக்கம் தாவலாம் என்று கூறப்படுகிறது. இவர்களின் ஆதரவு கிடைத்தாலும் கூட ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 9 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.

    இதனால் மீதமுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் 11 எம்.பி.க்கள், மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் 6 உறுப்பினர்கள், இன்னொரு சிறு கட்சியின் ஒரு எம்.பி.யின் ஆதரவுடன் விக்ரமசிங்கே எளிதில் 113 என்னும் பெரும்பான்மை இலக்கை எட்டி விடுவார் என்று கருதப்படுகிறது.

    இதன் காரணமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ராஜபக்சே மகன் மறைமுக பேரத்தில் ஈடுபட்டு உள்ளார் என்று இலங்கையின் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். #Rajapaksa #NamalRajapaksa
    ஏறத்தாழ ஓராண்டு சிறைவாசத்துக்கு பின் சவுதி இளவரசர் காலித் பின் தலால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. #SaudiPrince #KhaledBinTalal
    ரியாத்:

    சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மன்னர் சல்மான் ஊழலை தடுப்பதற்காக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் சிறப்பு குழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழுவுக்கு ஊழல் தடுப்பு வழக்குகளில் விசாரணை நடத்தவும், கைது வாரண்டுகள் பிறப்பிக்கவும், பயண தடை விதிக்கவும், நிதி பரிமாற்றங்களை தடுக்கவும், வங்கி கணக்குகளை முடக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த குழு உடனடியாக அங்கு பல இளவரசர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.

    அப்படி சிறையில் அடைக்கப்பட்ட இளவரசர்களில் ஒருவர், காலித் பின் தலால். இவர் மன்னர் சல்மானின் நெருங்கிய உறவினர் ஆவார். இவர் சிறையில் அடைக்கப்பட்டு ஏறத்தாழ ஓராண்டு ஆன நிலையில் இப்போது விடுதலை செய்யப்பட்டு விட்டார். இவரது சகோதரர் அல்வாலீத் பின் தலாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர்.

    பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலையால், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரச குடும்பத்தின் ஆதரவினை முழுமையாகப் பெறுகிற விதத்தில்தான் இப்போது இளவரசர் காலித் பின் தலால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    விடுதலை செய்யப்பட்டுள்ள இளவரசர் காலித் பின் தலால் குடும்பத்தினருடன் காணப்படுகிற படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

    அவர் கைது செய்யப்பட்டபோதும், இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளபோதும் அதற்கான காரணத்தை சவுதி அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  #SaudiPrince #KhaledBinTalal 
    இலங்கையில் துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் மந்திரி அர்ஜூனா ரணதுங்கா ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். #SrilankaShooting #ArjunaRanatunga
    கொழும்பு:

    முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் தீவிர ஆதரவாளரும், இலங்கை பெட்ரோலிய வனத்துறை முன்னாள் மந்திரியுமான அர்ஜூனா ரணதுங்க நேற்று மாலை தனது அலுவலகத்துக்கு பாதுகாவலர்களுடன் சென்றார். அங்கு சில கோப்புகளை எடுத்துச் செல்ல முயன்றார். ஆனால் அங்கிருந்த சில ஊழியர்கள் அர்ஜூனா ரணதுங்கவை சிறைப்பிடிக்க முயற்சித்தாக கூறப்படுகிறது.

    அப்போது இரு தரப்பினருக்கு இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசம் அடைந்த மந்திரியின் பாதுகாவலர்கள் ஊழியர்களை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயமடைந்த ஊழியர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.



    இந்நிலையில், பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஊழியர் ஒருவர் பலியானது தொடர்பாக பெட்ரோலிய துறை முன்னாள் மந்திரி அர்ஜூனா ரணதுங்கவை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் மந்திரி அர்ஜூனா ரணதுங்கா ரூ.5 லட்சம் ஜாமினில் கொழும்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. #SrilankaShooting #ArjunaRanatunga
    ×