search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குமூலம்"

    திண்டுக்கல் துப்புரவு தொழிலாளி கொலையில் நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் சோலைஹால் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது45). துப்புரவு தொழிலாளி. நேற்று இரவு இவர் தனது உறவினருடன் நாகல்நகர் பகுதிக்கு வந்தார். பின்பு அவர் தனியாக வீட்டுக்கு திரும்பினார். நாகல்நகர் அரண்மனைக்குளம் அருகே சென்றபோது ஒரு மோட்டார்சைக்கிள் வந்தது. அதில் இருந்து இறங்கிய மர்மநபர்கள் 2 பேர் திடீரென ஆறுமுகத்தை கத்தியால் குத்தினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    ஆறுமுகம் கொலைக்கு காரணம் என்ன? முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் மது குடிக்கும் தகராறில் நண்பர்களே ஆறுமுகத்தை கொலை செய்தது தெரிய வந்தது. ஆறுமுகத்தின் நண்பர்கள் காளிதாஸ், மாரியப்பன். இவர்களும் ஆறுமுகத்துடன் துப்புரவு தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். மதுக்கடை பார்களில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகளை விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் 3 பேரும் மது குடிப்பது வழக்கம். சம்பவத்தன்று இது போல் பிளாஸ்டிக் கழிவுகளை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து மது குடித்தனர். அப்போது காளிதாஸ் ஆறுமுகத்திடம் ரூ.20 பணம் கேட்டார். அதற்கு ஆறுமுகம் மறுத்தாராம். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் 3 பேரும் மதுக்கடை பாரில் வைத்து கைகலப்பில் ஈடுபட்டனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். எனினும் காளிதாசுக்கு ஆத்திரம் தீரவில்லை.

    இந்நிலையில் பாரை விட்டு வெளியே வந்ததும் ஆறுமுகம் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது காளிதாசும் மாரியப்பனும் வந்து ஆறுமுகத்தை கத்தியால் குத்தி கொலை செய்தனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து காளிதாஸ், மாரியப்பன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் ரூ.20 பணம் கேட்டதற்கு ஆறுமுகம் தர மறுத்து தங்களை தாக்கியதால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மணிவண்ணன் நண்பர்கள் உள்பட மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். #PollachiCase #CBCID
    கோவை:

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், சதீஷ், வசந்த் குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    புகார் அளித்த மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் பார் நாகராஜ், செந்தில், மற்றொரு வசந்த குமார், பாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் (25) கடந்த 25-ந் தேதி கோவை கோர்ட்டில் சரணடைந்தார். அவரை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் கூடுதலாக மேலும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    இதில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. குறிப்பாக, மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததில் மணிவண்ணனுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை பாலியல் பலாத்கார வழக்கில் சேர்த்து கைது செய்தனர். இது தொடர்பான அறிக்கையை கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்

    பாலியல் வழக்கு தொடர்பாக மணிவண்ணனிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி 10 நாட்கள் அனுமதி கேட்டு கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவின் அடிப்படையில் மணிவண்ணனிடம் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி நாகராஜன் அனுமதி அளித்தார். இதையடுத்து நேற்று மணிவண்ணனை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலியல் வழக்கில் வேறு யார்-யாருக்கு தொடர்பு உள்ளது? திருநாவுக்கரசின் நெருங்கிய நண்பர்கள் யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தினர். மேலும், பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டதும் திருநாவுக்கரசு ஆந்திராவுக்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்தார். இதேபோல மணிவண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் அவரும் தலைமறைவானார்.

    இவர்கள் தலைமறைவான காலகட்டத்தில் சமூக வலை தளங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள் வெளியாகி இருந்தது. எனவே வீடியோக்கள் வெளியான சம்பவத்தில் மணிவண்ணனுக்கு தொடர்பு உள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது.

    சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு மணிவண்ணன் அளித்த பதில்களை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். நாளை (வெள்ளிக்கிழமை) போலீஸ் காவல் முடிந்து மணிவண்ணன் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்.

    அதன்பிறகு இவ்வழக்கில் அவரது நண்பர்கள் உள்பட மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதில் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறியதாவது:-

    மணிவண்ணன் மீது அடிதடி வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் அவரது செல்போன் தொடர்பு, பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் தொடர்புகள் மூலம் விசாரணை நடத்தியதில் இவருக்கும் பாலியல் வழக்கில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியது. இதையடுத்து பாலியல் வழக்கிலும் மணிவண்ணனை கைது செய்துள்ளோம். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #PollachiCase #CBCID



    திருப்பூரில் ரூ. 300 தகராறில் பனியன் தொழிலாளியை கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர்:

    பல்லடம் அவரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. இவரது மகன் கார்த்திக் (28). திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வீரபாண்டி திருவள்ளுவர் நகரில் நடந்து சென்றார். அப்போது அவரை வழி மறித்த 6 பேர் கும்பல் உருட்டுக்கட்டையால் தாக்கியது. இதில் கார்த்திக் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார்.

    இது குறித்து வீரபாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. கார்த்திக் கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    அதில் சரவணன், ராஜா, வெங்கடேஷ், முத்துக்குமார் மற்றொரு ராஜா ஆகிய 5 பேரை கைது செய்தனர். கைதானவர்கள் போலீசில் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது-

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாங்கள் ஒரு அணியாகவும், கார்த்திக் ஒரு அணியாகவும் ரூ. 300 பந்தயம் கட்டி கிரிக்கெட் விளையாடினோம்.

    விளையாட்டில் எங்கள் அணி தோல்வி அடைந்து விட்டது. அதற்கான பணத்தை கார்த்திக் கேட்டார். ஆனால் நாங்கள் கொடுக்கவில்லை. இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. எங்கள் பகுதிக்கு வந்த கார்த்திக் எங்களை தரக்குறைவாக பேசினார். இதனால் அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. நாங்கள் அவரை உருட்டுக்கட்டையால் தாக்கினோம். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. லேசான காயம் தான் என நினைத்து இருந்தோம். ஆனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட வழக்கில் உறவினரை போலீசார் கைது செய்தனர். திருமணம் நிச்சயமானதால் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். #PollachiIssue
    பொள்ளாச்சி:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைசாமி, பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி (வயது 20). இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பிர கதிக்கு நாட்டுதுரை என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

    இவர்களுக்கு வருகிற ஜூன் மாதம் 13-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. உறவினர்கள், நண்பர்களை திருமணத்திற்கு அழைக்க பத்திரிகையும் அச்சடிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி கல்லூரியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட பிரகதியை காணவில்லை. அவரது உறவினர்கள் அவரை தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து கோவை காட்டூர் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் கல்லூரி மாணவி மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் காணாமல் போன பிரகதி நேற்று முன்தினம் பொள்ளாச்சி அருகே பூசாரிபட்டியில் ரோட்டோரத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கோமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆடைகள் கலைந்து இருந்ததால் அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா நேற்று காலை பூசாரிபட்டிக்கு வந்து கல்லூரி மாணவியின் உடல் கிடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    குற்றவாளிகளை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாடசாமி தலைமையில் துணை சூப்பிரண்டுகள் சிவக்குமார் (பொள்ளாச்சி), பாலமுருகன் (பேரூர்), இன்ஸ்பெக்டர்கள் வைரம், வெற்றிவேல்ராஜன், பாலமுரளிசுந்தரம் ஆகியோர் கொண்ட 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் துப்பு துலங்கியது. பரபரப்பு தகவல்களும் வெளியாயின. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    மாணவி பிரகதி காணாமல் போனதை தொடர்ந்து கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், மாணவி பிரகதியை ஒரு வாலிபர் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    மேலும் பிரகதியின் செல்போனில் பதிவாகி இருந்த எண்களை ஆய்வு செய்தபோது, இந்த கொலையில் முக்கிய துப்பு கிடைத்தது. பிரகதியின் உறவினர் சதீஷ்குமார் (30) என்பவர் தான் இந்த கொலைக்கு காரணம் என்பதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். தலைமறைவான அவரை போலீசார் பல இடங்களில் தேடி ஒட்டன்சத்திரம் பகுதியில் நேற்று மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

    பிரகதி பள்ளியில் படிக்கும் போது இருந்து அவருக்கும், சதீஷ்குமாருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் சதீஷ்குமார், பிரகதியை முறைப்படி பெண் கேட்டுள்ளார். ஆனால் பிரகதியின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்து விட்டனர். ஆனாலும் பிரகதியும், சதீஷ்குமாரும் ஒருவரை ஒருவர் விரும்பி உள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் சதீஷ்குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்துக்கு பின்னர் கேரள மாநிலம் பாலக்காடு அருகே கொடுவாயூரில் சதீஷ்குமார் அடகு கடை நடத்தி வந்தார். கோவையில் பிரகதி கல்லூரியில் படித்து வந்ததால், மனைவிக்கு தெரியாமல் அவர், பிரகதியை அடிக்கடி வந்து சந்தித்துள்ளார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மாணவி பிரகதியை சந்திப்பதற்காக சதீஷ்குமார் காரில் வந்துள்ளார். பிரகதி அவருடன் காரில் சென்றார். இருவரும் பொள்ளாச்சி பகுதியை நோக்கி சென்றுள்ளனர். அப்போது, தனக்கு திருமணம் நிச்சயமான விவரத்தை மாணவி பிரகதி கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார், கத்தியால் பிரகதியின் கழுத்தில் குத்தி கொலை செய்து பிணத்தை பூசாரிப்பட்டி பகுதியில் போட்டுவிட்டு காரில் தப்பிச்சென்றுவிட்டார். கோவை காட்டூர் போலீசார் மாணவி காணாமல் போனது குறித்து, முதலில் மாணவியின் பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் சதீஷ்குமாரை போனில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். சதீஷ்குமார் மனைவி, குழந்தையுடன் கோவை காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு வந்து, பிரகதி காணாமல் போனது தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

    இதனால் அவரை போலீசார் சந்தேகப்படாமல் விட்டு விட்டனர். பின்னர்தான் அவர் பிரகதியை கொலை செய்தது தெரியவந்தது. கொலை செய்துவிட்டு, போலீஸ் நிலையத்துக்கு குடும்பத்துடன் வந்து சதீஷ்குமார் நாடகமாடியது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மாணவியின் உடல் கிடந்த பகுதியான கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படையினர் சதீஷ்குமாரை தேடியபோது, அவர் செல்போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி நேற்று அவரை கைது செய்தனர். மாணவியை அழைத்து செல்ல பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    கைதான சதீஷ்குமார் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நெல்லுக்குழிகாடு பகுதியை சேர்ந்தவன். என்னுடைய தந்தை தங்கராஜ். ரூ.40 லட்சம் கடன் இருந்ததால் என்னுடைய தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். நான் பிரகதியை விரும்பினேன். பிரகதியும் என்னை விரும்பினார். ஆனால் எனக்கு பிரகதியை திருமணம் செய்து கொடுக்க அவளுடைய பெற்றோர் மறுத்துவிட்டனர்.

    எனக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் நடைபெற்றது. இருந்தாலும் தொடர்ந்து பிரகதியுடன் பழகினேன். கோவையில் கல்லூரியில் படித்து வந்த பிரகதிக்கு பரிசு பொருட்கள், சேலை, நகைகள் வாங்கி கொடுத்துள்ளேன். ஏற்கனவே 10 பவுன் தங்கநகை வாங்கி கொடுத்தேன்.

    இதற்கிடையே மீண்டும் 10 பவுன் தங்க நகை வாங்கி தருமாறு என்னிடம் கேட்டாள். வேறு ஒருவருடன் பிரகதிக்கு திருமணம் நடைபெறுவது எனக்கு பிடிக்கவில்லை. திருமணம் ஆனாலும் என்னுடன் பழகுவேன் என்று பிரகதி கூறினாள். ஆனாலும் பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது என்று கருதினேன். வழக்கமாக பிரகதியை கோவையில் இருந்து பல்லடம் வரை அழைத்து சென்று விடுவேன்.

    கடந்த வெள்ளிக்கிழமை (5-ந் தேதி) காரில் பல்லடத்துக்கு அழைத்து செல்லாமல் கோமங்கலத்துக்கு அழைத்து சென்றேன். காரில் இருவரும் சந்தோஷமாக இருந்தோம். இந்த நிலையில் நான் ஏற்கனவே தயாராக வைத்து இருந்த கத்தியால் பிரகதியின் நெஞ்சு மற்றும் கழுத்தில் குத்தி கொலை செய்துவிட்டு உடலை பூசாரிபட்டி பகுதியில் வீசி சென்றேன். போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

    பிரகதியின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் 3 மணி நேரம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாணவியின் கழுத்து மற்றும் நெஞ்சில் கத்திக்குத்து காயமும், கையால் தடுத்ததால் அவரின் கைவிரல் அறுபட்டு இருந்ததும் தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    கல்லூரி மாணவியை, உறவினரே கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் கோவையில் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #PollachiIssue
    கோவை அருகே மது குடிக்க பணம் தராததால் தந்தையை கொலை செய்தேன் என்று மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    கோவை:

    கோவை இருகூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது70).

    இவர் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பத்மாவதி.

    இவர்களது மகன் செந்தில் குமாருக்கு(40) கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்துவேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.இதனால் செந்தில்குமார் பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி பெற்றோருடன் தகராறு செய்துள்ளார்.

    நேற்று மாலை பத்மாவதி வெளியே சென்றிருந்தார். அப்போது செந்தில்குமார் தனது தந்தையிடம் குடிக்க பணம் கேட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்ததோடு, மகனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த செந்தில்குமார் கத்தியால் சுப்பிரமணியின் நெஞ்சு, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையை கொலை செய்த சுப்பிரமணி அப்பகுதியில் சுற்றித்திரிந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரது கையில் காயங்கள் இருந்தது. அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

    செந்தில்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் கூறியதாவது:-

    நான் மதுகுடிப்பதற்காக எனது தந்தையிடம் பணம் கேட்டேன். ஆனால் அவர் பணம் தரவில்லை. மாறாக, எந்த வேலைக்கு செல்லாமல் இவ்வாறு சுற்றுகிறாயே என என்னை கண்டித்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே வீட்டில் இருந்த கத்தியால் அவரை குத்தினேன். இதில் அவர் இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதனை வாக்கு மூலமாக போலீசார் பதிவு செய்தனர்.

    இன்று அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    தவறான நடத்தையை கைவிடாததால் தனது மனைவியை கொன்றதாக உதவி இயக்குனர் வாக்குமூலம் அளித்துள்ளார். #BodyPartsInDumbyard #WomanKilled
    கைதான சினிமா இயக்குனர் பாலகிருஷ்ணன் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    சிறு வயதில் இருந்தே எனக்கு சினிமா ஆசை அதிகமாக இருந்தது. இதனால் இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்து வந்தேன். சந்தியாவை திருமணம் செய்த பிறகு 2 குழந்தைகள் பிறந்தன.

    மகன், மகள் இருவரும் தூத்துக்குடியில் எனது பெற்றோரின் அரவணைப்பில் படித்து வருகிறார்கள்.

    சென்னை வந்து ஜாபர்கான்பேட்டையில் நான் வசித்து வந்தேன். என்னுடன் சண்டை போட்டு விட்டு தாய் வீட்டுக்கு சென்ற சந்தியா சென்னையில் தங்கியிருந்து வெளியில் ஊர் சுற்றுவதாக கேள்விப்பட்டேன். இதற்காக அவளை அழைத்து கண்டித்தேன். சினிமா தொடர்பு காரணமாக சந்தியாவின் நடத்தை மாறியது. அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால் பலமுறை எச்சரித்தேன். இருப்பினும் சந்தியா நான் சொல்வதை கேட்கவில்லை. இஷ்டப்படி வெளியில் செல்வது, எப்போதும் போனில் பேசுவது என இருந்தார்.

    இதனை கண்டிக்கும் நேரங்களில் எல்லாம் என்னுடன் சண்டை போட்டார். விவாகரத்து செய்து விடுவேன் என்றும் மிரட்டினார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    இது தொடர்பாக எனக்கும் சந்தியாவுக்கும் பிரச்சினை வெடித்தது. இருவரும் வீட்டுக்குள்ளேயே கடுமையாக சண்டை போட்டோம். அப்போது சந்தியா என்னை வாய்க்கு வந்தபடி பேசினார்.

    நான் சொல்கிறபடி ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நான் திரும்ப திரும்ப கூறினேன். ஆனால் சந்தியாவோ எனது விருப்பப்படிதான் வாழ்வேன் என்று கூறினார். இதன் காரணமாக எனக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது.

    இதனால் சந்தியாவை கொலை செய்து அவள் உடலை 4 துண்டுகளாக துண்டித்தேன். ஆடு வெட்டும் கத்தியால் தலையை தனியாக வெட்டி எடுத்து பார்சல் போட்டேன். இடுப்புக்கு கீழே முழங்கால் வரையில் தனியாக துண்டித்து இன்னொரு பார்சல் போட்டேன்.

    கழுத்துக்கு கீழ் இடுப்பு வரையிலான உடல் பாகத்தையும், இடது கையையும் மற்றொரு பார்சலாக கட்டினேன். இரண்டு கால்களையும், வலது கையையும் தனியாக பார்சல் போட்டேன்.

    19-ந்தேதி கொலை செய்து விட்டு ஒருநாள் முழுவதும் என்ன செய்வது என்று தெரியாமல் காத்திருந்தேன். அதன் பிறகு மறுநாளே கத்தியால் உடலை துண்டித்தேன்.

    கொலையில் இருந்து தப்பிப்பதற்காக 20-ந்தேதி இரவில் உடல் பாகங்களை தனித்தனியாக வீசினேன்.

    அனைத்தையும் வெளியில் மோட்டார் சைக்கிளிலேயே கொண்டு சென்று 2 கால்கள், ஒரு கையை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் வீசினேன். அதுதான் பெருங்குடியில் போலீசிடம் சிக்கி கொண்டது.

    உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி வீசியதால் போலீசாரால் என்னை கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்தேன். எப்போதும் போல எனது பணிகளில் ஈடுபட்டு வந்தேன்.

    இவ்வாறு பாலகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #BodyPartsInDumbyard #WomanKilled
    வில்லியனூரில் பைனான்ஸ் அதிபரை கொன்றது ஏன் என்பது குறித்து கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் கணுவா பேட்டைய சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 55). பைனான்ஸ் அதிபர்.

    இவர் நேற்று முன்தினம் இரவு வில்லியனூர் கோட்டைமேடு சுடுகாட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை அவரது நண்பர்கள் ராஜா, சக்திவேல், சபரி, நடராஜன் ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    கொலையாளி ராஜா போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    ராமலிங்கம் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நானும் அவருடன் சேர்ந்து வட்டிக்கு பணம் கொடுத்தேன். இந்த நிலையில் எனக்கு வேண்டிய சிலருக்காக ராமலிங்கத்திடம் இருந்து ரூ.10 லட்சம் வாங்கி கடனாக கொடுத்திருந்தேன்.

    ஆனால் அதை வாங்கியவர்கள் அசலையும், வட்டியையும் தரவில்லை. எனவே ராமலிங்கம் என்னிடம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். இதனால் அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

    இதற்காக எனது நண்பர்கள் சக்திவேல், சபரி, நடராஜன் ஆகியோர் உதவுவதாக தெரிவித்தனர். எனவே ராமலிங்கத்தை கொல்வதற்கு திட்டத்தை உருவாக்கினோம்.

    நேற்று முன்தினம் மதியம் அவரை வில்லியனூரில் உள்ள மதுபாருக்கு அழைத்து சென்று நன்றாக குடிக்க வைத்தோம். அதன்பிறகு தியேட்டருக்கு சென்று சினிமா பார்த்தோம். இரவு மீண்டும் அவரை குடிக்க அழைத்து அங்கு வைத்து கொல்வது என்று திட்டமிட்டோம்.

    நாங்கள் இரவு நேரத்தில் கோட்டைமேடு சுடுகாட்டு பகுதியில் அமர்ந்து மது குடிப்பது வழக்கம். ராமலிங்கத்தை கொல்ல வேண்டும் என்பதற்காக இரும்பு குழாய் ஒன்றை எடுத்து சென்று அங்கு தயாராக வைத்திருந்தோம்.

    இரவு 9 மணி அளவில் ராமலிங்கத்தை அழைத்துக் கொண்டு நான் அங்கு சென்றேன். மற்ற 3 பேரும் பின்னர் வந்தனர். நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதுகுடித்தோம். அப்போது சக்திவேல், ராஜாவிடம் ஏன் பணம் கேட்டு தொல்லை கொடுக்கிறாய் என்று கூறி ராமலிங்கத்தை அடித்தார்.

    அப்போது மறைத்து வைத்திருந்த இரும்பு குழாயை எடுத்து ராமலிங்கத்தின் தலையில் பலமுறை ஓங்கி அடித்தோம். இதில் மண்டை உடைந்து அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். உடனே நாங்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டோம். நல்லூர் பகுதியில் பதுங்கி இருந்த எங்களை போலீசார் கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு ராஜா வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    கைதானவர்களிடம் சூப்பிரண்டு ரங்கநாதன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் விசாரணை நடத்தி இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #tamilnews
    காதலை கைவிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்த தாயார் உயிரோடு இருந்தால் காதலனுடன் சேரமுடியாது என்பதால் அவரை கொலை செய்ததாக கல்லூரி மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். #StudentArrested
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த காக்களூரை சேர்ந்தவர் திருமுருகன். இவருடைய மனைவி பானுமதி (வயது 50). இவர்களது 2-வது மகள் தேவிபிரியா (19). பட்டாபிராம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    தேவி பிரியாவுக்கும் ஆந்திர மாநிலம் தடா பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு ‘பேஸ்புக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு மணிக்கணக்கில் பேசினர். நாளடைவில் இது காதலாக மாறியது.

    சுரேஷ் செங்குன்றம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வேலைக்காக தினமும் சென்னைக்கு வந்தபோது மின்சார ரெயிலில் தேவி பிரியாவை அடிக்கடி சந்தித்து வந்தார்.

    இந்த காதல் விவகாரம் தேவி பிரியாவின் தாய் பானுமதிக்கு தெரியவந்ததும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். காதலை கைவிடும்படி மகளை வற்புறுத்தி வந்தார்.

    ஆனால் இதனை தேவி பிரியா கண்டுகொள்ளவில்லை. தேவிபிரியாவுக்கும் சுரேசுக்கும் பேஸ்புக் மூலம் தஞ்சாவூரைச் சேர்ந்த அஜித்குமார், கும்பகோணத்தைச் சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் நண்பர்களாக இருந்தனர்.

    அவர்கள் தங்களது காதலுக்கு உதவுமாறு விக்னேஷ், அஜித்குமாரிடம் கேட்டு இருந்தனர். மேலும் தாய் பானுமதியை கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேற தேவிபிரியா திட்டமிட்டு இருந்தார்.

    இதற்காக கடந்த 15-ந் தேதி தேவிபிரியாவும், காதலன் சுரேசும் முன் கூட்டியே திட்டமிட்டனர். தடா பகுதியில் இருவரும் சந்தித்து பேசி தங்களது திட்டத்தை வகுத்தனர்.

    அதன்படி நேற்று மாலை தேவிபிரியா பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகிய அஜித்குமார், விக்னேஷ் ஆகியோரை வீட்டுக்கு வரவழைத்தார்.

    அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த தேவிபிரியாவும், நண்பர்கள் அஜித்குமார், விக்னேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து பானுமதியை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

    அங்கிருந்து தப்பி ஓட முயன்ற அஜித்குமார், விக்னேசை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவர்களை திருவள்ளூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.

    தேவிபிரியா, அஜித்குமார், விக்னேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் தாய் பானுமதியை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து தேவி பிரியா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    காதலன் சுரேஷ்

    கல்லூரிக்கு மின்சார ரெயிலில் செல்லும்போது சித்தூரை சேர்ந்த சுரேசுடன் காதல் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தோம். ஆனால் இதனை அறிந்த தாய் பானுமதி எங்களது காதலை கைவிடுமாறு தொடர்ந்து கூறி வந்தார்.

    அவர் இருந்தால் காதலனுடன் சேர முடியாது என்று நினைத்தேன். இதுபற்றி சுரேசிடம் கூறி வந்தேன். இதற்கிடையே ‘பேஸ்புக்’ மூலம் தஞ்சாவூரை சேர்ந்த அஜித்குமார், கும்பகோணத்தை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் எங்களுக்கு அறிமுகம் ஆனார்கள்.

    அவர்களிடம் எங்களது காதல் நிலைமை குறித்து தெரிவித்தோம். இதையடுத்து அவர்கள் காதலுக்கு உதவுவதாக கூறினார்கள். இதுபற்றி காதலன் சுரேசிடம் கூறி நாங்கள் 4 பேரும் தாய் பானுமதியை தீர்த்துக்கட்டி விடலாம் என்று முடிவு செய்தோம். இதற்காக பேஸ்புக் நண்பர்களான அஜித்குமார், விக்னேஷ் மூலம் வீட்டில் கொள்ளை நாடகம் நடத்தி தாய் பானுமதியை கொலை செய்ய திட்டமிட்டோம்.

    இதுபற்றி அவர்களிடம் கூறியபோது ஒப்புக் கொண்டனர். திட்டமிட்டபடி நேற்று காலை அஜித்குமாரும், விக்னேசும் திருவள்ளூர் வந்தனர். வீட்டில் தாய் பானுமதியும், அக்காள் சாமுண்டீஸ்வரியும் இருந்தனர். மதியம் சாப்பிட்டு விட்டு தாய் பானுமதி அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். மற்றொரு அறையில் அக்காள் சாமுண்டீஸ்வரி இருந்தார். இதனை சாதகமாக பயன்படுத்தி அஜித்குமாரையும் விக்னேசையும் வீட்டுக்குள் வரவழைத்தேன்.

    அவர்கள் வீட்டில் இருந்த நகையை எடுப்பதுபோல் நாடகமாடினார்கள். நானும் பயந்ததுபோல் கூச்சலிட்டேன். இதனைக் கேட்ட தாய் பானுமதி அறைக்குள் வந்ததும் கத்தியால் குத்தி கொன்றோம்.

    பின்னர் அஜித்குமாரும், விக்னேசும் வெளியே தப்பி ஓடினார்கள். இதற்குள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு விட்டனர். ரத்தக்கறையுடன் இருந்த அவர்கள் 2 பேரையும் பிடித்து விட்டனர். இதனால் நானும் சிக்கிக் கொண்டேன். போலீசார் எங்கள் 3 பேரையும் கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பானுமதி கொலைக்கு தேவிபிரியாவின் காதலன் சுரேஷ் மூளையாக செயல்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. டி.எஸ்.பி. கங்காதரன் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று ஆந்திரா சென்றனர். அவர்கள் தடா பகுதியில் பதுங்கி இருந்த சுரேசை கைது செய்தனர்.

    இன்று அதிகாலை அவரை திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கொலையை அரங்கேற்ற சுரேஷ் வராதது ஏன்? என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    கைதான தேவிபிரியா, காதலன் சுரேஷ், பேஸ்புக் நண்பர்கள் விக்னேஷ், அஜித்குமார் ஆகிய 4 பேரையும் இன்று மாலை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கிறார்கள்.

    தேவிபிரியா காதலில் விழுந்தது முதல் கல்லூரிக்கு சரிவர செல்லவில்லை என்று தெரிகிறது. கடந்த 6 மாதமாக அவர் காதலனுடன் ஜாலியாக ஊர் சுற்றி இருக்கிறார். இதனை அறிந்த பின்னரே தாய் பானுமதி மகளை கண்டித்தார்.

    தனது கண்டிப்பு மூலம் மகளை திருத்தி விடலாம் என்று முடிவு செய்த அவர் கணவர் திருமுருகனிடம் இதுபற்றி கூறாமல் இருந்தார்.

    பானுமதி கொலை செய்யப்பட்ட பின்னரே திருமுருகனுக்கு மகளின் காதல் விவகாரம் தெரியவந்தது. அவர் மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. #StudentArrested

    அப்பல்லோ மருத்துவமனை ஊழியர் வாக்குமூலத்தால், ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மைதானா? என்ற புதிய குழப்பம் மீண்டும் உருவாகி உள்ளது. #JayalalithaaDeath #Jayalalithaa #ArumugasamyCommission
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் தொற்று நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் ராமகோபாலகிருஷ்ணன், நரம்பியல் பிரிவு டெக்னீசியன் யுவஸ்ரீ, தீவிர சிகிச்சை பிரிவு டெக்னீசியன் பஞ்சாபிகேசன் ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகினர்.



    ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நோய் தொற்றுக்கு 22.9.2016, 23.9.2016 ஆகிய தேதிகளில் அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் ராமசுப்பிரமணியன் சிகிச்சை அளித்து வந்துள்ளார். 24.9.2016 முதல் 1.10.2016 வரை அவர் வெளிநாட்டில் இருந்த போது அவருக்கு பதிலாக மருத்துவர் ராமகோபாலகிருஷ்ணன் நோய் தொற்றுக்காக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையை மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கி உள்ளார்.

    அவர் தனது வாக்குமூலத்தில், ‘15.11.2016 அன்று ஜெயலலிதாவுக்கு நோய் தொற்று முழுமையாக சரியாகி விட்டது’ என்று கூறி உள்ளார்.

    நோய் தொற்றினால் இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டு ஜெயலலிதா இறந்ததாக அப்பல்லோ மருத்துவமனை அளித்த இறப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை நோய் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஆனால், நோய் தொற்று தொடர்பாக மருத்துவர் ராமகோபாலகிருஷ்ணன் அளித்த வாக்குமூலம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக விரிவாக விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.

    ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த தீவிர சிகிச்சை பிரிவு அறையில் பஞ்சாபிகேசன் டெக்னீசியனாக பணியாற்றி உள்ளார். இதனால், ஜெயலலிதா இருந்த அறை குறித்து அவரிடம் ஆணையம் தரப்பு வக்கீல் எஸ்.பார்த்தசாரதி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், ‘ஜெயலலிதா இருந்த அறையின் ஜன்னல் கண்ணாடி திரைச்சீலையால் மூடப்பட்டிருக்கும்’ என்று கூறி உள்ளார்.

    இதுதொடர்பாக அப்பல்லோ தரப்பு வக்கீல்கள் அவரிடம் குறுக்கு விசாரணை செய்த போது, ‘திரைச்சீலை சில சமயங்களில் திறந்து விடப்படும். அப்போது அறைக்கு வெளியே மரங்கள் இருப்பது தெரியும்’ என்று பதில் அளித்துள்ளார்.

    மேற்கண்ட தகவலை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோ அவரது மரணத்துக்கு பின்னர் வெளியானது. அதில், அவர் தங்கி இருந்த அறையின் ஜன்னல் கண்ணாடியில் திரைச்சீலை இருக்காது, அந்த கண்ணாடி வழியாக மரம் மற்றும் செடிகள் தெரியும்.

    ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோ அவர் தங்கி இருந்த அறையில் எடுக்கப்பட்டது தானா? என்ற குழப்பம் ஏற்கனவே இருந்து வரும் நிலையில் டெக்னீசியன் பஞ்சாபிகேசனின் வாக்குமூலம் மீண்டும் புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.  #JayalalithaaDeath #Jayalalithaa #ArumugasamyCommission
    சென்னை ரெயில் கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், ஏற்கனவே காஷ்மீரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை தீர்த்துக் கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. #SalemTrainRobbery #TrainRobbery #Demonetisation
    சென்னை:

    சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஓடும் ரெயிலில் மேற்கூரையில் துளை போட்டு ரூ.5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் துப்பு துலக்கி மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மோஹர் சிங், ருசி பார்தி, மகேஷ் பார்தி, காவியா, பில்டியா ஆகிய 5 கொள்ளையர்களை கைது செய்தனர்.

    இவர்கள் அனைவரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் காவல் முடிந்ததும் அனைவரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    போலீஸ் விசாரணையில் ரெயில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அதிபயங்கரமான கொள்ளையர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கொள்ளை சம்பவங்களில் குடும்பத்தினரோடு ஈடுபடுவதை இக்கும்பல் வழக்கமாக வைத்துள்ளது.

    ரெயில் கொள்ளையில் முக்கிய குற்றவாளியான மோஹர் சிங்கின் குடும்பத்தினர், கடந்த 2006-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொடூரமாக கொலை செய்தவர்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மோஹர் சிங்கின் உறவினரான கிரண் 2012-ம் ஆண்டு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இன்னொரு உறவினரான சங்காராமுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    ரெயில் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான கும்பல் தலைவன் மோஹர் சிங்கின் தந்தையின் சகோதரருக்கு பிறந்தவன் தான் கிரண். போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு கிரண் இரையான பின்னரே மோஹர் சிங், கொள்ளை கூட்டத்துக்கு தலைவனாகி உள்ளான்.

    தனது குற்றச்செயல்கள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த மோஹர்சிங், கடந்த 2015-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் 2 பேரை சுட்டுக் கொன்றான். இந்த கொலை வழக்கில் மோஹர் சிங்கின் மனைவி பன்வாரா, சகோதரர்கள் மற்றும் சகோதரி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து போலீஸ் பிடி இறுகியதால் மோஹர் சிங்கும் அவனது கூட்டாளிகளும் தென் இந்தியாவுக்கு தப்பி வந்தனர். ஆந்திரா, கர்நாடகாவில் வியாபாரிகள் போல் தங்கி இருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த ஆண்டு மோஹர் சிங் தனது கூட்டாளிகளுடன் தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். விழுப்புரம், திண்டிவனம், விருத்தாசலம், சேலம், அரக்கோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் ரெயில் நிலையங்களை ஒட்டி உள்ள பகுதிகளில் இக்கொள்ளை கும்பல் தங்கியது. அப்போது தான் சேலம் செல்லும் ரெயிலில் பணம் எடுத்து செல்லப்படுவது இவர்களுக்கு தெரிய வந்தது.

    கோப்புப்படம்

    சென்னை ரெயிலில் பணம் எடுத்து செல்லப்படுவதை முன் கூட்டியே தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் அதில் பயணம் செய்து ஒத்திகை பார்த்தனர்.

    கொள்ளை கும்பல் தலைவன் மோஹர் சிங் மற்றும் கூட்டாளிகள் காலியா ருசி, பில்டியா ஆகியோர் அயோத்தியா பட்டினம் மற்றும் விருத்தாசலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயிலில் பயணம் செய்து நோட்டமிட்டனர்.

    சின்ன சேலம்- விருத்தாசலம் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 45 நிமிடங்கள் ரெயில் நிற்காமல் செல்வதை தெரிந்து கொண்டு அந்த நேரத்தில் கொள்ளையடிக்க திட்டம் போட்டனர்.

    இதன்படி சின்ன சேலம் ரெயில் நிலையத்தில் வைத்து 4 பேரும் பணம் இருந்த பெட்டியில் ஏறி கூரையை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் மரப் பெட்டியை உடைத்து 6 லுங்கிகளில் கொள்ளையடித்த பணத்தை மூட்டை கட்டி மேலே ஏறினார்கள்.

    பின்னர் வயலூர் மேம்பாலம் அருகே இந்த மூட்டைகளை வீசினர். அங்கு ஏற்கனவே காத்திருந்த மோஹர் சிங்கியின் கூட்டாளிகள் பணமூட்டைகளை பத்திரமாக எடுத்து கொண்டு தப்பினர். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய கொள்ளையர்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர். அனைவரும் சொந்த ஊருக்கு சென்று பணத்தை பங்கு போட்டனர். சினிமாவை மிஞ்சும் வகையில் திட்டம்போட்டு வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். #SalemTrainRobbery #TrainRobbery #Demonetisation
    ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் ரெயிலில் கொள்ளையடித்த ரூ.2 கோடியை எரித்ததாக கைதான கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். #SalemTrainRobbery #TrainRobbery #Demonetisation
    சென்னை:

    சேலத்தில் இருந்து சென்னை வந்த எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி ரூ.5 கோடியே 78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

    இவை அனைத்தும் பழைய மற்றும் கிழிந்த நோட்டுகள். சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் இருந்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ரெயில் வரும் வழியில் மேற்கூரையில் துளையிட்டு அந்தப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்குப்பின் துப்பு துலங்கிய இந்த கொள்ளை தொடர்பாக மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த மோகர்சிங், கிருஷ்ணா, மகேஷ்பாரதி மோகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

    இவர்களில் 5 பேரை போலீசார் நேற்று விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர், அயோத்தியாபட்டிணம், வாழப்பாடி, சேலம் ஜங்‌ஷன், செவ்வாய்ப்பேட்டை ரெயில்வே குட்ஷெட் ஆகிய இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது கொள்ளையர்கள் எப்படி கொள்ளையடித்தோம் என்பதை நடித்து காட்டினார்கள். அவற்றை போலீசார் வீடியோ எடுத்தனர்.

    இந்த கொள்ளையில் மொத்தம் 16 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். தற்போது 7 பேர் பிடிபட்டுள்ளனர். மேலும் 9 பேரை தேடிவருகிறார்கள். 16 பேரும் பல்வேறு குழுக்களாக தமிழகம் வந்து 4 மாதம் தங்கி திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    சின்ன சேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை ரெயில் தண்டவாளத்தில் பாலம் அமைக்கும் பணி நடப்பதால் அந்த இடத்தில் ரெயில் மெதுவாக செல்லும் இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அந்த இடத்தில் ரெயில் சென்றபோது கட்டர் மூலம் துளையிட்டு பணத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளது தெரிய வந்தது. 4 பேர் மட்டும் ரெயிலின் மேல் கூரையில் ஏறி துவாரம் போட்டுள்ளனர்.


    கொள்ளையடிக்கப்பட்ட 5.78 கோடியை கொள்ளையர்கள் அனைவரும் சரிசமமாக பங்குபோட்டு உல்லாசமாக செலவு செய்தனர். சொந்த ஊரில் நிலம் மற்றும் சொத்துக்களையும் வாங்கியுள்ளனர். மீதம் உள்ள ரூ.2 கோடியை வங்கியில் டெபாசிட் செய்ய முடியாததாலும் செலவழிக்க முடியாமலும் பதுக்கி வைத்து இருந்தனர்.

    இந்தநிலையில் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததால் கொள்ளையர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவற்றை கிழித்து போட்டு யாருக்கும் தெரியாமல் தீவைத்து எரித்து விட்டதாக போலீசில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

    7 கொள்ளையர்களின் 13 நாள் போலீஸ் காவல் நாளையுடன் முடிவடைவதால் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். #SalemTrainRobbery #TrainRobbery
    இளநீர் விற்ற பணத்தை பங்கு வைக்கும் தகராறில் ஒர்க்ஷாப் தொழிலாளியை கொலை செய்தோம் என்று கைதான நண்பர்கள் 3 பேர் போலீசில் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (30). இவர் கருமத்தம் பட்டியில் உள்ள ஒர்க்ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 25-ந் தேதி மங்கலம் அருகே உள்ள கல்லப்பாளையம் காட்டு பகுதியில் மகேந்திரன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் முத்துசாமி, சரோஜினி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மகேந்திரனை அவரது நண்பர்கள் குமார் (31), செந்தில் குமார் (28)பாண்டியன் (28) ஆகிய 3 பேரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.


    அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசில் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது-

    நாங்கள் 4 பேரும் அடிக்கடி மது குடிப்போம். இதற்கு பணம் தேவைப்பட்டால் மங்கலத்தில் உள்ள குளத்தில் மீன் பிடித்து அதனை விற்பனை செய்து மது அருந்துவோம்.

    மேலும் இரவு நேரங்களில் மங்கலம் பகுதிகளில் உள்ள தென்னை மரத்தில் இளநீர்களை திருடி பகலில் விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் மது குடித்து வந்தோம்.

    நாங்கள் 3 பேரும் தென்னை மரத்தில் ஏறி இளநீர் வெட்டுவோம். அதனை மகேந்திரன் தான் விற்பனை செய்து வந்தார். அதில் கிடைக்கும் பணத்தை பிரிப்பதில் எங்களுக்குள் தகராறு இருந்து வந்தது.

    மகேந்திரன் அதிக பணத்தை எடுத்து விடுவார். இதனை பல முறை அவரிடம் கேட்டு வந்தோம். சம்பவத்தன்று இரவு இளநீர் திருட சென்றோம். அப்போது மது அருந்தினோம். அந்த சமயத்தில் மகேந்திரனிடம் நீ மட்டும் பணத்தை அதிகமாக எடுத்து கொள்கிறாயே? என கேட்டோம்.

    அதற்கு அவர் நீங்கள் இளநீரை பறித்து மட்டும் தான் கொடுக்கிறீர்கள். நான் தான் ஊர்? ஊராக சென்று விற்று வருகிறேன். அதனால் தான் அதிக பணத்தை எடுத்து கொள்கிறேன் என்றார்.

    இதில் எங்களுக்குள் தகராறு உருவானது. ஆத்திரம் அடைந்த நாங்கள் இளநீர் வெட்டும் அரிவாளால் மகேந்திரனை துரத்தி சென்று வெட்டி கொன்றோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    ×