search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105098"

    • இந்த மலையானது சுமார் 3400 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.
    • தமிழ்நாட்டின் தென் கைலாயம் என்ற பெயரும் இதற்கு உண்டு.

    உச்சிப்பிள்ளையார் கோவில் மலையானது மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு, மலையின் கீழ்ப்பகுதியில் மாணிக்க விநாயகர் தரிசனம் தருகின்றார். மலையின் நடுபகுதியில் தாயுமானவர் சுவாமிகள் தரிசனம் தருகின்றார். மலையின் உச்சியில் இருக்கும் பிள்ளையார் உச்சிப்பிள்ளையாராக காட்சியளிக்கின்றார். இதைத்தவிர பல்லவர் காலத்து குடைவரை கோயில்கள் பல ஆயிரம் நூற்றாண்டுகள் கழித்தும் இன்றும் அழியாமல் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மலையானது சுமார் 3400 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் தென் கைலாயம் என்ற பெயரும் இதற்கு உண்டு.

    மூன்று தலைகளை கொண்ட திரிசிரன் என்ற அசுர அரசன் இந்தப் பகுதியை ஆண்ட போது திரிசிரபுரம் என்று அழைக்கப்பட்டு பின்பு சிராப்பள்ளி என்று மாறி தற்சமயம் திருச்சிராப்பள்ளி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

    சுவாமி : உச்சி பிள்ளையார், தாயுமானசுவாமி, மாணிக்க விநாயகர்.

    அம்பாள் : மட்டுவார்குழலி.

    தீர்த்தம் : காவிரி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்.

    தலவிருட்சம் : வில்வம்

    தலச்சிறப்பு : இக்கோவிலில் பங்குனி மாதம் 3 நாட்கள் மாலையில் சிவலிங்கம் மீது, சூரிய ஒளி விழுகிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 69 வது தேவாரத்தலம் ஆகும். மலைக்கோட்டை உச்சியில் உச்சி விநாயகரும், மலையின் நடு பகுதியில் தாயுமானசுவாமியும், மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளியிருப்பது மிக சிறப்பு. பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.

    தல வரலாறு : அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப் பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக் கொண்டு விபீஷணன் தெற்கே வந்தான். எழில் வனப்புடன் மிகுந்த சோலை நடுவே அகண்ட காவிரியில் சற்று ஓய்வெடுக்க எண்ணிணான். அப்போது, அங்கு சிறுவன் உருவில் நின்று கொண்டிருந்த விநாயகரிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்து விட்டு சென்றான்.

    விநாயகர் சிறிது நேரம் பார்த்து விட்டு அச்சிலையை பூமியில் வைத்து விட்டு அருகில் இருந்த மலையில் போய் அமர்ந்து கொண்டார். திரும்பி வந்த விபீஷணன் சிறுவனைக் காணாமல் மலைத்து போனான். செய்வதறியாது பூமியில் இருந்த சிலையை எடுக்கப்பார்த்தும் அவனால் சிலையை நகர்த்த முடியவில்லை. இதனால் இலங்கைக்கு செல்ல இருந்த ரங்கநாதர், விநாயகரின் அருளால் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளினார். சிலையை கொடுத்த அந்த சிறுவன் மலையில் அமர்ந்திருப்பதை பார்த்த விபீஷணன் கோபமடைந்து, விநாயகர் தலையில் ஒரு குட்டு வைத்தான் என்பது வரலாறு.

    தாயுமானசுவாமி உருவான கதை : இப்பகுதியில் வாழ்ந்த இரத்தினாவதி என்ற பெண்மணி தாயாகும் பேறு பெற்றாள். காவேரி ஆற்றின் மறு கரையில் இருக்கும் தன் தாய்க்கு செய்தி சொல்லி விட்டு காத்திருக்கிறாள். ஆற்றில் வெள்ள பெருக்கு இருந்ததால் தாயால் வர முடியவில்லை. பிரசவ வேதனை அதிகமாக இம்மலையில் இருக்கும் ஈசனை வேண்டினாள்.ஈசனே தாய் வேடத்தில் அங்கு வந்து அவளுக்கு சுகப்பிரசவம் அடைய உதவினார்.நிஜ தாய் வந்த பின்பு தான்,இறைவனே வந்து பிரசவத்திற்கு உதவியது புரிந்தது.மட்டுவார் குழலம்மையுடன் இறைவன் அனைவருக்கும் காட்சி தந்தார். எனவே இறைவன் தாயுமானசுவாமி என அழைக்கப்படுகிறார்.

    திருச்சி பெயர்க்காரணம் : திரிசிரன் என்ற மூன்று தலையுடைய அசுர மன்னன் இப்பகுதியை ஆண்டதாக சொல்லப்படுகிறது.அதனால் இப்பகுதியை திரிசிரபுரம் என்று வழங்கப்பட்டு அதுவே மருவி சிராப்பள்ளி என்றும் திருச்சிராப்பள்ளி என்றும் வழங்கி வருகிறது என்று வரலாறு கூறுகிறது.

    தரிசன நேரம்: காலை 6.30AM 8PM திங்கட்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் இந்தக் கோவில் திறந்திருக்கும்.

    முகவரி:

    அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவில்,

    திருச்சிராப்பள்ளி 620 002.

    தொலைபேசி எண் +91-431- 270 4621.

    • சதுர்த்தி விழா 22-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடக்கிறது.
    • 31-ந்தேதி தீர்த்தவாரி, பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 29-ந்தேதி விநாயகருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் ஸ்ரீவெயிலுகந்த விநாயகர் கோவில் உள்ளது. ராமபிரானால் பூஜை செய்து வழிபாடு நடத்திய சிறப்பு பெற்ற கோவிலாகும். அதுபோல ஆண்டுதோறும் இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவின் முதல் நாளான 22-ந் தேதி காலை 9 மணிக்கு கோவிலின் முன் மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

    அன்று இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. திருவிழாவின் 8-வது நாளான 29-ந்தேதி விநாயகருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி மற்றும் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் திருவாடானை சரக அலுவலக பொறுப்பாளர் பாண்டியன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • விநாயகருக்கு எண்ணெய், பால், தயிர், மஞ்சள் பொடி, மாபொடி, பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, தேன், நெய், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் பரசுராமர் விநாயகர் கோவில் அமைந்துஉள்ளது.

    இந்த கோவிலில் சங்கடகர சதுர்த்தி விழா நேற்று மாலை நடந்தது.

    இதையொட்டி விநாயகருக்கு எண்ணெய், பால், தயிர், மஞ்சள் பொடி, மாபொடி, பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, தேன், நெய், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பிறகு சந்தனகாப்பு அலங்காரத்துடன் விநாய கருக்கு சிறப்பு அலங்கார தீபாரதனையும் விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

    அவருடன் இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வ ரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸீம், ஒன்றிய அவைத் தலை வர் தம்பித்தங்கம், பேரூர் கழகச் செயலா ளர்கள்தாமரை தினேஷ், குமார், ராஜபாண்டியன், லீபுரம்ஊராட்சிஅ.தி.மு.க. செயலாளர் கே. லீன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தகவல் தொழில்நுட்பபிரிவு செயலாளர் குமரகுரு, வடக்கு தாமரைகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பார்த்தசாரதி,

    ஒன்றிய இலக்கிய அணிசெயலாளர் பகவதியப்பன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • இன்று விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கை.
    • இன்று விநாயகரை வழிபாடு செய்யும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லலாம்.

    கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

    கணபதி என்றிடக் காலனும் கைதொழும்

    கணபதி என்றிடக் கருமம் ஆதலால்

    கணபதி என்றிடக் கவலை தீருமே

    எனக்கு வேண்டும் வரங்களை

    இசைப்பேன் கேளாய் கணபதி

    மனதிற் சலனமில்லாமல்

    மதியில் இருளே தோன்றாமல்

    நினைக்கும் பொழுது நின் மவுன

    நிலை வந் திடநீ செயல் வேண்டும்

    கனக்குஞ் செல்வம் நூறு வயது

    இவையும் தரநீ கடவாய்…

    • சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்குபவர்களுக்கு சந்திர தோஷம் ஏற்படாது.
    • இன்று விநாயகரை விரதம் இருந்து வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்..

    சதுர்த்தி தினத்தில் சந்திரனை ஆட்டிப் படைத்தவர் விநாயகப் பெருமான். எனவே சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வணங்குபவர்களுக்கு சந்திர தோஷம் ஏற்படாது என்பது நம்பிக்கை.

    தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்று அதாவது நமக்கு ஏற்படக்கூடிய சங்கடங்கள் அனைத்தையும் போக்கும் சதுர்த்தி என்று போற்றுகின்றன ஞானநூல்கள். அன்றைய நாளில் விரதம் இருந்து செய்யும் விநாயகர் வழிபாடு நம் சங்கடங்கள் எல்லாவற்றையும் போக்கும் என்பது நம்பிக்கை. சங்கடஹர சதுர்த்திகளில் தலையாயது மகா சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் தேய்பிறை சதுர்த்தியையே நாம் மகாசங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கிறோம்.

    இன்று (திங்கட்கிழமை) மகா சங்கடஹர சதுர்த்தி தினமாகும். இன்று விநாயகரைக் கட்டாயம் விரதம் இருந்து வழிபட வேண்டும். ஓராண்டு முழுவதும் வரும் 11 சங்கட ஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்ய இயலாதவர்கள் இன்று மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருப்பது விசேஷம். அவ்வாறு விரதம் இருந்தாலோ மாலையில் விநாயகரை வழிபட்டாலோ ஓராண்டு முழுவதும் சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும்.

    மகாசங்கடஹர சதுர்த்தி நாளில் செய்யும் விநாயகர் விரத வழிபாடு பல்வேறு வரங்களை வழங்கும். குறிப்பாகக் கடன் பிரச்சினைகளில் திண்டாடுபவர்கள் மகாசங்கடஹர சதுர்த்தி அன்று மாலை சந்திர உதயநேரத்தில் வீட்டிலேயே விநாயகப்பெருமானை நினைத்து ஒரு மலர் சாத்தி விநாயகப் பெருமானுக்குப் பிரியமான விநாயகர் அகவல் போன்ற துதிகளைப் பாடிப் போற்றினால் வீட்டில் வறுமை நீங்கிச் செல்வ வளம் சேரும் என்பது நம்பிக்கை.

    • 108 கணபதி ஸ்தலங்களுள் 81-வது ஸ்தலமான உன்னதபுரம் என்கிற மெலட்டூரில் தனிக்கோவில் கொண்டு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    • திருக்கல்யாண வைபத்தில் திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு தெட்சணா மூர்த்தியிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் விரைவில் திருமணம் கைகூடிவரும் என்பது நம்பிக்கை.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூரில் எழுந்தருளியிருக்கும் சித்தி புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் விவாஹ வரம் தந்து அருளக்கூடியவர். இங்கு நடைபெறும் 10 நாள் பிரமேற்சவத்தில் ரீசித்திபுத்தி தெட்சணாமூர்த்தி விநாயகருக்கு நடைபெறும் திருக்கல்யாண வைபத்தில் திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு தெட்சணா மூர்த்தியிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் விரைவில் திருமணம் கைகூடிவரும் என்பது நம்பிக்கை.

    மெலட்டூர் ரீசித்திபுத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோவில் ஞானபுரத்தில் ஸ்ரீகர்க மஹரிஷியால் வர்ணிக்கப்–பட்டிருக்கின்ற 108 கணபதி ஸ்தலங்களுள் 81-வது ஸ்தலமான உன்னதபுரம் என்கிற மெலட்டூரில் தனிக்கோவில் கொண்டு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் இந்த கோவில் தஞ்சாவூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் மெலட்டூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் மெலட்டூரை சேர்ந்த எம்.எஸ்.ராதா கிருஸ்ண அய்யர், வீ.கணேச அய்யர், எம்.ஆர்.சிவராம அய்யர் ஆகியோரால் நிர்மானிக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்க ப்பட்டு வருகிறது.

    இங்கு வருடந்தோறும் விநாயகர் சதுர்த்திவிழா 10 நாட்கள் பிரமோற்சவமாக நடந்து வருகிறது. இந்த நாட்களில் சித்திபுத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் பலவித வாகனங்களில் காலையும், மாலையும் வீதியுலா வருவது சிறப்பாகும். தவிர பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7வது நாள் ;நிகழ்ச்சியன்று நடைபெறும் ரீவிநாயகர் திருக்கல்யாண நிகழ்ச்சி மிக அரிதான நிகழ்ச்சியாகும்.

    அன்றைய தினம் காலையில் ரீ தெட்சணா மூர்த்தி விநாயகருக்கு சித்தி புத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெறும். இது தமிழ்/நாட்டிலேயே மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். திருமணம் ஆகாதவர்களும், திருமணம் காலதாமதமாகும் ஆண்களும், பெண்களும் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்து ரீசித்தி புத்தி சமேத தெட்சணாமூர்த்தியை தரிசித்து பிரார்த்தனை செய்து மலர் மாலையும், மஞ்சள் கயறும் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு பிரமோற்சவம் அடுத்த மாதம் 21ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்க உள்ளது. 4ம்நாள் நிகழ்வாக காலை சுவாமி வெள்ளி பல்லக்கில் வீதியுலாவும், 5ம் நாள் நிகழ்ச்சியாக ஓலை சப்பரத்தில் வீதியுலாவும் நடைபெறுகிறது. 7ம் நிகழ்ச்சியாக 28ம்தேதி காலை 9.30 மணியளவில் பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி, அம்பாள் சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் வைபவமும், 30ம்தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது. திருக்கல்யாண வைபவம் மற்றும் பிரமோற்சவ ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி எஸ்.குமார் மற்றும் பக்தர்கள் உதவியால், கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.

    • மேலூரில் 1008 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • இந்து மகா சபா அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் ரமேஷ் பாண்டியன் தலைமையில் நடந்தது.

    மேலூர்

    மேலூர் கூத்தப்பன்பட்டி ரோட்டில் உள்ள இந்து மகா சபா அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் ரமேஷ் பாண்டியன் தலைமையில் நடந்தது. மாநில துணைத்தலைவர் பெரி செல்லத்துரை கலந்து கொண்டார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    மதுரை மாவட்டத்தில் உள்ள சிதிலமடைந்த கோவில்களை புனரமைக்க வேண்டும், அதற்குண்டான நிதியை உடனடியாக அரசு வழங்க வேண்டும், கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ள கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

    இந்துக்களின் ஆலய சொத்து, ஆலய வருமானம் முழுவதும் இந்துக்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமே பயன்பட வேண்டும், வருகிற 31-ந்ேததி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவதை முன்னிட்டு முதல் நாள் 30-ந்தேதி தேதி மேலூர் நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஒரு அடி முதல் 9 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் 1008 இடங்களில் பிரதிஷ்டை செய்து 3 நாள் பூஜை விழா நடத்தி 1-ந்தேதி மாலை வழக்கம்போல் ஊர்வலமாக சென்று மண் கட்டி தெப்பக்குளத்தில் சிலைகளை கரைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    இதில் மாவட்ட அர்ச்சகர் பேரவை தலைவர் தெய்வேந்திரன், நிர்வாகிகள் வெள்ளைத்தம்பி, கார்த்திகேயன், ரவிச்சந்திரன், ராஜா, ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விநாயகரை ஒரு முறை வலம் வந்து வழிபடுவதே சிறப்பு.
    • விநாயகப் பெருமான், பிரணவ மந்திரமான ஓம்காரத்தின் உருவமாகத் திகழ்கிறார்.

    காரியத் தடைகளை விலக்கி, நாம் தொடங்கும் செயல்களை வெற்றியாக்கித் தருபவர் விநாயகர். அவரைப்பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

    விநாயகரை வழிபடும் முறைக்கு 'காணாபத்யம்' என்று பெயர். இதனை ஒரு பிரிவாக ஏற்படுத்தியவர், ஆதிசங்கரர்.

    விநாயகப் பெருமானுக்கு தும்பிக்கையுடன் சேர்த்து ஐந்து கரங்கள் உண்டு. தும்பிக்கையில் தண்ணீர் குடம் தாங்கியும், பின் இரண்டு கரங்களில் அங்குசம், பாசம் ஏந்தியும், முன் வலது கரத்தில் தந்தம், முன் இடது கரத்தில் மோதகமும் வைத்திருப்பார்.

    விநாயகரை ஒரு முறை வலம் வந்து வழிபடுவதே சிறப்பு.

    மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல, விநாயகர் எழுதினார்.

    விநாயகருக்கு மூஷிகம் (எலி) வாகனத்தைத் தவிர, மயில், காளை, சிங்கம், யானை, குதிரை, பூதம் ஆகியவையும் வாகனங்களாக உள்ளன.

    வெள்ளிக்கிழமை தோறும் அருகம்புல், தேங்காய் கொண்டு பூஜிப்பதோடு, கணபதி ஹோமம் செய்து வந்தால் நீண்ட ஆயுளும், செல்வமும் வந்துசேரும்.

    'ஓம் ஹம் கணபதியே நமஹ' என்ற விநாயகர் மந்திரத்தை, காலையும், மாலையும் 108 முறை சொல்லி வந்தால், சகல நன்மைகளும் உண்டாகும்.

    பஞ்சபூதத்தோடு தொடர்புடையவராகவும் விநாயகர் இருக்கிறார். இவர் அரச மரத்தடியில் ஆகாய வடிவமாகவும், வாதநாராயண மரத்தடியில் வாயு வடிவமாகவும், நெல்லி மரத்தடியில் நீர் வடிவமாகவும், ஆலய மரத்தடியில் மண் வடிவமாகவும், வன்னி மரத்தடியில் நெருப்பு வடிவமாகவும் விளங்குகிறார்.

    விநாயகப் பெருமான், பிரணவ மந்திரமான ஓம்காரத்தின் உருவமாகத் திகழ்கிறார்.

    விநாயகரின் உருவத்தில் அனைத்து கடவுள்களும் வாசம் செய்கின்றனர். நாபி (தொப்புள்)- பிரம்மதேவர், முகம்- விஷ்ணு, கண்- சிவன், இடப்பாகம்- சக்தி, வலப்பாகம்- சூரியன் உள்ளனர்.

    விநாயகருக்கு அனைத்து விதமான அபிஷேகங்களையும் விட தேங்காய் எண்ெணய் காப்புதான் பிரியமானது.

    'விநாயகர்' என்ற சொல்லுக்கு 'இவரை விட மேலானவர் இல்லை' என்று பொருள்.

    வைணவக் கோவில்களில் வீற்றிருக்கும் விநாயகர், 'தும்பிக்கையாழ்வார்' என்று அழைக்கப்படுகிறார்.

    விநாயகருக்கும், சனி பகவானுக்கும் பிரியமானது, வன்னி மரம். இந்த மரத்தின் இலைகளால் விநாயகரை பூஜித்து வழிபட்டால் சனி பகவான் தோஷம் நம்மை நெருங்காது.

    • விநாயகர் சதுர்த்தி இம்மாதம் 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • இதன் எடை 20 கிராம் உள்ளது.

    லண்டன் :

    விநாயகர் சதுர்த்தி இம்மாதம் 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இங்கிலாந்தில் உள்ள ராயல் தங்கசாலை, விநாயகர் உருவம் பொறித்த 24 காரட் சுத்த தங்கத்தில் தங்க கட்டியை வெளியிட்டுள்ளது. விநாயகர் காலடியில் தட்டு நிறைய லட்டுகள் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதன் எடை 20 கிராம் உள்ளது. விலை 1,110.80 பவுண்டு (ரூ.1 லட்சத்து 8 ஆயிரம்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த தங்க கட்டி, ராயல் தங்க சாலையின் இணையதளத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டு, லட்சுமி உருவம் பொறித்த தங்கக்கட்டியை ராயல் தங்கசாலை வெளியிட்டு இருந்தது.

    மேற்கண்ட 2 கடவுள்களின் உருவங்களும் வேல்ஸ் பகுதியில் உள்ள சுவாமி நாராயணன் கோவிவிலை சேர்ந்த நிலேஷ் கபாரியா ஆலோசனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    • பிள்ளையார் கோவில்களில் வேறெங்குமே இல்லாத வண்ணம் இங்கு மட்டும் பள்ளியறை உண்டு
    • மகாகவி பாரதியார் பாடிய திருத்தலம் என்னும் பெருமையும் இந்தத் தலத்திற்கு உண்டு.

    புதுச்சேரியில் அமைந்துள்ளது மணக்குள விநாயகர் திருக்கோவில். மிகவும் பிரபலமான ஆன்மீக மற்றும் சுற்றுலா தலம். ஒரு வித பிரஞ்ச் சாயலுடன் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோவில் இது. வங்காள விரிகுடா கடலுக்கு 400 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த கோவில். தென் சென்னையிலிருந்து 165 கி.மீ தொலைவில் இந்த கோவிலை அடையலாம்.

    இந்த கோவிலின் மூலவர் பிள்ளையார் ஆவார். கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். கடற்கரை சாலைக்கு அருகில் இருப்பதால் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடமாக இக்கோவில் உள்ளது. 2015 ஆம் ஆண்டில் புணரமைக்கபட்ட கோவில் இது. 500 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கோவில் இங்கே அமைதுள்ளது. இந்த கோவிலுக்கான பெயர் காரணம் மணல் மற்றும் குளம் மணல் நிறைந்த குளத்தருகே அமைந்த விநாயகர் என்பதே காலப்போக்கில் மருவி மணக்குள விநாயகராக ஆனதாக நம்பிக்கை நிலவுகிறது.

    இங்கு நடைபெறும் விழாக்களில் முக்கியமானது பிரம்மோட்ஷவம். 24 நாட்கள் பெரும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. இந்த கோவிலின் அதிசயம் யாதெனில், பிள்ளையார் கோவில்களில் வேறெங்குமே இல்லாத வண்ணம் இங்கு மட்டும் பள்ளியறை உண்டு. இங்கே அவருடன் தாயார் உள்ளார். இவர் பள்ளியறை நீங்குவதை உணர்த்தும் வகையில் உற்சவ மூர்த்தியாக செல்வது பாதம் மட்டுமே. மூலவரான விநாயகர் திருவுருவம் அமைந்திருக்கும் பீடம் அமைந்திருப்பதே ஒரு கிணறு அல்லது குளத்தின் மீது தான் என்பது நம்பிக்கை. இந்த பீடத்திற்கு அருகில் ஒரு சிறு குழி உண்டு. இந்த குழி முழுவதும் நீர் மட்டுமே நிரம்பியிருக்கிறது. அந்த குழியின் ஆழத்தை ஒருபொதும் கணக்கிட முடிந்ததில்லை.

    இங்கிருக்கும் மற்றொரு அதிசயம் தங்க தேர். இது முழுக்க முழுக்க பக்தர்களின் நன்கொடையால் உருவானது. இந்த தேருக்காக பயன்படுத்தப்பட்ட தங்கம் 7.5 கிலோவாகும். 10 அடி நீளமும், 6 அடி அகலமும் கொண்டது இந்த தேர். மேலும் இந்த இடத்தில் தான் 300 ஆண்டுகளுக்கு முன்பு தொள்ளை காது சித்தர் முக்தி அடைந்து சமாதியானார் என்பது வரலாறு. பிறந்த குழந்தைகளை முதன் முறையாக இந்த கோவிலுக்கு அழைத்து வரும் பழக்கம் இதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக உண்டு. பாரதியும் அரவிந்தரும் வந்து வழிபட்ட தலம் கூடுதல் சிறப்பு.

    தடங்கல் ஏற்பட்டு திருமணம் தள்ளிக்கொண்டே இருப்பவர்களுக்கு இவரை தரிசனம் செய்தால் திருமணம் வெகுவிரைவில் கூடும். மகாகவி பாரதியார் பாடிய திருத்தலம் என்னும் பெருமையும் இந்தத் தலத்திற்கு உண்டு.

    தரிசனம் நேரம்:

    காலை 5.45 முதல் 12.30 மணி வரை.

    மாலை 4.00 முதல் 09,30 மணி வரை.

    அமைவிடம் :

    புதுவை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது . புதுவை ரயில் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது .

    • இன்று விநாயகர் வழிபாடு மற்றும் விரதத்திற்குரிய மிக சிறந்த தினம்.
    • சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபடுபவர்களுக்கு புதன் கிரக தோஷங்கள் நீங்கும்.

    ஆனி மாதம் தெய்வ வழிபாடு, விரதங்கள், பூஜைகள் மேற்கொள்வதற்கு ஒரு சிறந்த மாதமாக இருக்கிறது. இந்த ஆனி மாதத்தில் ஆனி பௌர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வரும் நாள் ஆனி தேய்பிறை சதுர்த்தி அல்லது மாத சங்கடஹர சதுர்த்தி தினம் எனப்படுகிறது. விநாயகர் வழிபாடு மற்றும் விரதத்திற்குரிய மிக சிறந்த தினம் இந்த ஆனி சங்கடஹர சதுர்த்தி. இந்த தினத்தில் விநாயகப்பெருமானை விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சிறப்பான நன்மைகள் ஏற்படும்.

    ஆனி தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் மற்றும் வசமிக்க பூக்கள், அபிஷேக பொருட்கள் தந்து, ஆராதனை பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.

    ஆனி மாத தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் போக மிக காலமாக திருமணம் ஆகாமல் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். வீடு கட்டுவது, சொத்துக்கள் வாங்கல் போன்ற முயற்சிகளில் தடைகள் நீங்கி, வெற்றிகள் உண்டாகும். நீதிமன்றங்களில் இருக்கும் வழக்கங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வர வழிவகை செய்யும் ஆனி மாதம் மிதுன ராசியில் பிறப்பதால் இந்த சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபடுபவர்களுக்கு புதன் கிரக தோஷங்கள் நீங்கும்.

    ×