search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கந்துவட்டி"

    நாகர்கோவிலில் இன்று கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி வஞ்சிமார்த்தாண்டம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). தொழில் அதிபர். இவர் வடசேரி-புத்தேரி சாலையில் பிஸ்கட், சிகரெட் மொத்த விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தி வந்தார்.

    இவரது வீடு 3 மாடி கொண்ட பங்களா வீடு ஆகும். இங்கு சுப்பிரமணி, அவரது தாயார் ருக்மணி (72), மனைவி ஹேமா (48), மகள் ஷிவானி (20) ஆகியோர் வசித்து வந்தனர்.

    வழக்கமாக சுப்பிரமணி காலையிலேயே கடையை திறந்து வியாபாரத்தை தொடங்கி விடுவார். இன்று காலை நீண்டநேரமாகியும் கடையை திறக்க செல்லவில்லை. இதனால் கடையில் வேலைபார்க்கும் ஊழியர் அவரை தேடி வீட்டுக்கு வந்தார். கதவை பலமுறை தட்டிப்பார்த்தும் திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர் சுப்பிரமணியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு வீட்டு படுக்கையறையில் சுப்பிரமணி, ருக்மணி, ஹேமா, ஷிவானி ஆகிய 4 பேரும் வாயில் நுரைதள்ளியபடி பிணமாக கிடந்தனர். இரவில் அவர்கள் குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து இருந்தது தெரியவந்தது.

    இதுபற்றி வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் 4 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


    குடும்பத்துடன் தற்கொலை செய்த தொழில் அதிபர் சுப்பிரமணி தொழிலுக்காக பலரிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தவர்கள் திருப்பிக்கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வேதனையில் சுப்பிரமணி, தானும் வி‌ஷம் குடித்து குடும்பத்தினருக்கும் கொடுத்து தற்கொலை செய்து இருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சுப்பிரமணியின் மகள் ஷிவானி, ஹோமியோ டாக்டருக்கு படித்து வந்தார். 

    தருமபுரியில் கந்து வட்டி கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் திருப்பூரில் உள்ள சாயப்பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மைதிலி (வயது 31).  பழைய பொருட்கள் வாங்கி விற்கும் வியாபாரம்

    இவர் சவுளூப்பட்டியில் பழைய பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்தார். இதற்காக அந்த பகுதியில் ஒரு குடோனில் தன்னுடைய பொருட்களை வைத்து இருந்தார்.

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அந்த குடோனில் தீப்பிடித்து பொருட்கள் அனைத்து எரிந்து நாசமானது.

    இந்த சம்பவத்தால் மனமுடைந்த அவர் மீண்டும் தொழிலை தொடங்குவதற்காக காந்தி நகரைச் சேர்ந்த பழனி என்பவரிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கினார். இதற்காக மைதிலி ஒரு வருடத்திற்குள் ரூ.12 ஆயிரமாக வட்டியுடன் செலுத்த வேண்டும் நிபந்தனையுடன் கந்து வட்டிக்கு கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

    வாரந்தோறும் அவரால் சரிவர அசலுடன் வட்டியையும் செலுத்த முடியாததால் திணறி வந்தார்.

    இதுகுறித்து அவரது தாயார் ராஜேஸ்வரியிடம் மைதிலி கூறினார். அவரும் தனது பங்குக்காக ரூ.20 ஆயிரம் மைதிலியிடம் கொடுத்து கடனை அடைக்க கூறினார்.. அந்த பணத்தை எடுத்து கொண்டு பழனியிடம் மைதிலி கொடுத்தபோது, இதுவரை வட்டியுடன் சேர்த்து அசல் தொகை ரூ.70 ஆயிரம் தரவேண்டும் என்று பழனி கூறினார்.

    சரிவர வட்டி பணத்தை மட்டும் கட்டி வந்த மைதிலி கடந்த சில மாதங்களாக பணம் எதுவும் தராமல் இருந்து வந்ததாக தெரிகிறது. பழனி நேற்று முன்தினம் இரவு மைதிலி வீட்டிற்கு சென்று வட்டியுடன் சேர்த்து அசல் பணத்தையும் கேட்டு மிரட்டினார்.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை மீண்டும் அவரது வீட்டிற்கு பழனி சென்று மைதிலியை ஆபாசமாக திட்டியும், பணத்தை கேட்டு மிரட்டியும் உள்ளார்.

    இதனால் மனமுடைந்த மைதிலி அங்கிருந்து புறப்பட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பின்புறம் உள்ள ஆசிரியர் காலனியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு வந்தார். அங்கு நடந்த சம்பவத்தை பற்றி கூறினார்.

    சிறிது நேரத்தில் மைதிலியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு தாயார் ராஜேஸ்வரி வெளியே சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மைதிலி தூக்குபோட்டு கொண்டார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து ராஜேஸ்வரி பார்த்தபோது மைதிலி தூக்கில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகள் உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.

    இந்த சம்பவம் குறித்து மைதிலியின் அண்ணன் கார்த்திக் தருமபுரி டவுன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் கந்து வட்டிக்காரரான பழனியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மைதிலியின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திண்டுக்கல் அருகே கந்துவட்டி கொடுமையால் விவசாயி வி‌ஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை ஈ.பி.காலனியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி டெய்சிராணி. இவர்களுக்கு சொந்தமான 3 செண்ட் இடத்தில் வீடுகட்டியுள்ளனர். கணவரின் சகோதரர் தேவராஜ் என்பவர் தேவைக்காக அதேபகுதியை சேர்ந்த சிலரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கி இருந்தனர்.

    அதற்கு மாதந்தோறும் வட்டி கொடுத்து வந்த நிலையில் மேலும் ரூ.50 லட்சம் கொடுத்தால்தான் வீட்டு பத்திரத்தை திருப்பித்தர முடியும் என அவர்கள் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர்.

    போலீசார் அவர்களை தடுத்து கலெக்டரிடம் மனுஅளிக்க அறிவுறுத்தினர். அதன்பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்காத தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமதுரை காந்திசிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.

    இருந்தபோதும் பிரச்சினை தீராததால் சேகர் கடும் மனஉளைச்சலில் இருந்தார். இன்று வீட்டிலேயே வி‌ஷம் குடித்து மயங்கினார். இதைப்பார்த்து அவரது மனைவி டெய்சிராணி அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய சேகரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கும்பகோணத்தில் கந்துவட்டிகாரர்கள் கொடுமையால் வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே திருநீலக்குடி, சீனிவாச நல்லூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவர் தனது நண்பர் ஒருவர் கந்துவட்டிகாரர்களிடம் கடன் வாங்கும்போது ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளார்.

    இந்நிலையில் அவரது நண்பர் கடந்த 2 மாதம் முன்பு இறந்துவிட்டார். இதனால் கந்துவட்டி காரர்கள் ரமேசிடம் சென்று பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் அவர் கடந்த 2 மாதமாக வேறு சிலரிடம் பணம் வட்டிக்கு வாங்கி மாதம் ரூ.2½ லட்சம் வட்டி கட்டி வந்துள்ளார்.

    கடந்த மாதம் வட்டி கட்ட முடியாமல் இருந்தபோது கந்துவட்டிகாரர்கள் மீண்டும் நெருக்கடி கொடுத்ததால் அவர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி உள்ளனர்.

    இந்நிலையில் கடன்வாங்கி இறந்த தனது நண்பர் வீட்டுக்கு கந்துவட்டி காரர்களை ரமேஷ் அழைத்து சென்றுள்ளார். அப்போது நண்பரின் மனைவி தனது கணவர் வாங்கிய கடனை சொத்துக்களை விற்று கட்டி விடுவதாக கூறியுள்ளார். அதற்கு சில காலமாகும் என்று கூறியுள்ளார். ஆனால் கந்துவட்டிகாரர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் நேற்று மீண்டும் ரமேசிடம் நீதான் பணத்தை உடனடியாக திருப்பி தரவேண்டும். இல்லையென்றால் மாதம் தவறாமல் ரூ.2½ லட்சம் தர வேண்டும் என்று டார்ச்சர் செய்யதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த ரமேஷ் நேற்று மாலை வீட்டில் இருந்தபோது வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை கண்ட நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி மற்றும் உறவினர்கள் ரமேசை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் ரமேசுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தண்டையார்பேட்டையில் கந்துவட்டி கொடுமையால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை வினோபா நகரைச் சேர்ந்தவர் துரைமுருகன். இரும்பு வியாபாரி. இவர் தொழிலுக்காக சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார்.

    இதற்காக வாரம் தோறும் ரூ.25 ஆயிரம் வட்டி கட்டி வந்தார். கடன் வாங்கிய பணத்துக்கு அதிகமாக வட்டி கட்டினார். ஆனால் அவரிடம் கந்து வட்டிக்காரர்கள் இன்னும் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தனர்.

    இதுகுறித்து துரைமுருகன் கடந்த மார்ச் மாதம் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

    இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது துரைமுருகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து துரைமுருகன் உடலை கைப்பற்றினர். அப்போது அவரது சட்டை பையில் கடிதம் ஒன்று இருந்தது.

    அதில், “என் தொழிலுக்காக சிலரிடம் கடன் வாங்கி இருந்தேன். வாங்கிய தொகைக்கு அதிகமாக வட்டி கட்டி விட்டேன். ஆனாலும் இன்னும் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். மேலும் என்னை அவமானப்படுத்தி பேசினார்கள். இதனால் இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை. கந்து வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி 3 பேரின் பெயரை குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×