search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓஎன்ஜிசி"

    ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று ஜெயராமன் கூறியுள்ளார்.

    திருவாரூர்:

    தமிழர் தன்மான பேரவை சார்பில் முள்ளிவாய்க்கால் பேரழிவு 10-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் ஜெயராமன் கலந்து கொண்டு பேசினார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டும். கருத்து தெரிவித்தால் மட்டும் போதாது. களத்தில் இறங்கி போராட வேண்டும். மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மூலம் 2013-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்து வருகிறது. ஆனால் மத்திய அரசு , காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் நோக்கத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை காவிரி டெல்டாவில் 3 சுற்றுகளாக செயல்படுத்த போகிறார்கள். புதுச்சேரிக்குட்பட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டிப்பாக அனுமதிக்க முடியாது என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறிவிட்டார். ஆனால் தமிழக அரசு தனது நிலைப்பாடு பற்றி இதுவரை தெளிவாக கூறவில்லை. இந்த பிரச்சினையின் தீவிரத்தை அறியாமலேயே பலர் அமைதியாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.

    2016-க்கு முற்பட்ட அனைத்து கிணறுகளும் ஒற்றை உரிமத்தின் கீழ்கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அப்படியானால் ஓட்டுமொத்த காவிரிபடுகையும் காணாமல் போய்விடும்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட மத்திய அரசை கேட்டு கொள்கிறோம். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு பேராசிரியர் ஜெயராமன் கூறினார்.

    சீர்காழி அருகே கெயில் நிறுவனம் சார்பில் லாரிகளில் வந்த இரும்பு குழாய்களை இறக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் 20க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு எடுக்கப்படும் திரவ நிலையிலான எரிவாயு வர்த்தக நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல வேட்டங்குடி, எடமணல், திருநகரி ஊராட்சிகள் வழியாக தரங்கம்பாடி தாலுக்கா மேமாத்தூருக்கு 27 கிலோ மீட்டர் தொலைவுக்கு விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்கும் பணி கெயில் நிறுவனத்தால் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 

    வேம்படி கிராமத்தில் விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்தபோது விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் வேம்படி கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேட்டங்குடி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கெயில் நிறுவனம் சார்பில் லாரிகளில் கொண்டு வந்த 26 இரும்பு குழாய்களை 50-க்கும் மேற்பட்ட போலீசார் உதவியுடன் லாரியிலிருந்து இறக்கும் பணியில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது வேட்டங்குடியைச் சேர்ந்த நஞ்சை, புஞ்சை விவசாயிகள் சங்கத்தலைவர் வில்வநாதன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அங்குதன் மற்றும் விவசாயிகள் சம்பவ இடத்திற்கு வந்து இரும்பு குழாய்களை இறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். 

    இதையடுத்து பேச்சு வார்த்தை நடத்தி பின்னர் இது குறித்து முடிவு செய்வதாக கூறி இரும்பு குழாய்கள் இறக்கப்படாமல் லாரிகளிலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    காவிரி படுகை பகுதியில் இருந்து எரிவாயு நிறுவனங்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேராசிரியர் ஜெயராமன் கூறியுள்ளார். #professorjayaraman #ongc
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்கும் திட்டங்கள் எதுவும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திடம் இல்லை என்று மேலாளர் மிஸ்ரா  தெரிவிப்பது உண்மைக்கு புறம்பான செயல். அதுபோன்றே எண்ணெய் எரிவாயு எடுப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் கூறியுள்ளதும் தவறானது.

    தமிழ்நாட்டில் 9 பிளாக்குகளில் ஷேல் கேஸ் எடுக்க ஓ.என்.ஜி.சி. அனுமதி பெற்றது. முதற்கட்ட கிணறுகள் அமைப்பு அனுமதியை 2015 -ம் ஆண்டிலேயே  மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வழங்கியது ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது ஷேல் மீத்தேன், ஷேல் ஆயில் உள்ளிட்ட அனைத்து வகை எண்ணை எரிவாயுவை எடுக்கும் திட்டம் ஆகும் . அபாயகர நீரியல் விரிசல் முறையை பயன் படுத்தித்தான் ஹைட்ரோ கார்பன்களை எடுக்க முடியும்.

    முதல் சுற்று ஏலத்தில் காவிரிப் படுகையில் 5094 சதுர கிலோ மீட்டர் பரப்புடைய பெரிய நிலப்பரப்பை மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை ஓ.என்.ஜி.சி. மற்றும்  வேதாந்தா நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்துள்ளன.  நிலப்பரப்பில் 731 சதுர கிலோ மீட்டர் பரப்பை ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.யும் மீதியுள்ள ஆழமற்ற கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனமும் உரிமம் பெற்றுள்ளன. இந்த உண்மையை ஓ.என்.ஜி.சி. மறைக்கின்றது. 

    காவிரிப்படுகையில் பெரும் நிலப்பரப்பில் ஷேல் கேஸ் எடுக்க முயற்சி செய்யும் ஓ.என்.ஜி.சி. யை எதிர்த்தும், உள்ளே நுழைய முயற்சிக்கும் தனியார் நிறுவனங்களை எதிர்த்தும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் மக்களிடம் கருத்துக் கேட்பே இல்லாமல் எரிவாயுக் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி. முயற்சிக்கிறது. இதை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. 

    தமிழக அரசு காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட  வேளாண் மண்டலமாக அறிவித்து, எண்ணை எரிவாயு நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும். தமிழகத்தின் காவிரிப் படுகை முதல் ராமநாதபுரம் வரை நீரையும் நிலத்தையும் சுற்றுச் சூழலையும் தமிழகத்தின் உணவு உறுதிப் பாட்டையும் காக்க, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #professorjayaraman #ongc
    கதிராமங்கலம் போராட்ட வழக்கு கும்பகோணம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. பேராசிரியர் ஜெயராமன் நேரில் ஆஜரானார். #kathiramangalamprotest #professorjayaraman

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த ஆண்டு விளைநிலங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எரிவாயு குழாய்களை பதித்தது.

    இந்த குழாய்களால் விளைநிலங்கள் பாதிப்படைவதாக கூறி மயிலாடு துறையை சேர்ந்த மீத்தேன் எதிர்ப்பு கூட்டடைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர்.

    இதையடுத்து பேராசிரியர் ஜயராமன் உள்பட சிலர் மீது 6 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்குகள் இன்று கும்பகோணம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. பேராசிரியர் ஜெயராமன் நேரில் இன்று ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு வழக்கை வருகிற 8-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தவிட்டார். மீதி 5 வழக்குகளை மார்ச் மாதம் 1-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த பேராசிரியர் ஜெயராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. காவிரி படுகையில் மீத்தேன் எடுக்க விளைநிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிப்பது கண்டிக்கதக்கது.

    வரும் பிப்ரவரி மாதம் மீத்தேன் எதிர்ப்பு இயக்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி மயிலாடுதுறையில் மாநாடு நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #kathiramangalamprotest #professorjayaraman

    நாட்டிலேயே முதன் முறையாக பன்னாட்டு நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டம் (சிஎஸ்ஆர்) நிதியின் மூலம் கும்பகோணம் பகுதியில் உள்ள வாய்க்கால்கள் தூர் வார முடிவு செய்யப்பட்டுள்ளது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுப்பணித்துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் விவசாயிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு தலைமை வகித்து உதவி கலெக்டர் எம்.பிரதீப்குமார் கூறியதாவது:-

    ஓ.என்.ஜி.சி நிறுவனம் தனது சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ. 1 கோடி நிதியை வழங்கியுள்ளது. இந்த நிதியின் மூலம் கும்பகோணம் கோட்டத்தில் பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய தாலுகாவில் உள்ள 39 அ பிரிவு வாய்க்கால்கள் 213 கி.மீட்டர் தூரத்துக்கு தூர்வாரப்பட உள்ளது.

    சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நாட்டிலேயே முதன்முறையாக வாய்க்கால்கள் தூர்வாரப்படுவது இதுவே முதல் முறை. இதில் விவசாயிகள் எந்தந்த வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என ஏற்கனவே விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    அதன்படி அடுத்த வாரத்தில் இந்த தூர்வாரும் பணி தொடங்கவுள்ளது. தூர்வாருவதற்கு தேவையான எந்திரங்கள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள எந்திரங்களை பயன்படுத்தப்படும். அங்கு இல்லாத பட்சத்தில் தனியார் வாகனங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

    இந்த பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரி இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை முடித்த பிறகு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் ரூ. 20 லட்சம் மதிப்பில் மற்ற எஞ்சிய வாய்க்கால்கள் தூர்வாரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சுந்தரவிமலநாதன் கூறியதாவது: தூர்வாரும் பணியை வாய்க்காலின் இறுதி பகுதியிலிருந்து தொடங்கினால் தான் தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்லும். வாய்க் காலின் இருகரையையும் அளவீடு செய்து, கரைகளை பலப்படுத்தி அதில் பனைமரக்கன்றுகளை நட வேண்டும். முன்மாதிரியாக அனுதிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் எவ்வித முறைகேடுகளும் இல்லாமல் இருக்க விவசாயிகள் ஒத்துழைப்பை தருவோம் என்றார். #ONGC
    தமிழகத்தில் மூன்று இடங்கள் உள்ளிட்ட மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனம், ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்களுடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. #HydrocarbonProject #Vedanta
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கான நிறுவனங்களையும் தேர்வு செய்தது. இதன்படி தமிழகத்தில் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து 55 இடங்களிலும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு டெண்டர் கோரப்பட்டு, ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

    இந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான ஒப்பந்தம் இன்று டெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்தானது. 

    இந்த டெண்டரில் வேதாந்தா நிறுவனத்துக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் இரண்டு இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும், ஒரு இடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் கிடைத்துள்ளன. 

    தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டங்களைக் கைவிட வேண்டும் என காவிரி டெல்டா விவசாயிகள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ஹைட்ரோகார்பன் எடுக்கும் அனுமதி வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதற்கிடையே நாகை மாவட்டம் காமேஸ்வரத்தில், காவரி கடைமடை பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காமேஸ்வரம் தபால் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #HydrocarbonProject #Vedanta
    ×