search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிரவாதிகள்"

    • இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக 2019-ம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.
    • பயங்கரவாதி நஞ்கர்ஹர் மாகாணத்திலோ அல்லது குனார் மாகாணத்திலோ பதுங்கி இருக்கலாம்.

    ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் கடந்த 1994-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போலி ஆவணங்கள் மூலம் காஷ்மீரின் ஸ்ரீநகருக்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    1999-ம் ஆண்டு இந்தியாவின் பயணிகள் விமானத்தை கடத்தி சென்ற பயங்கரவாதிகள், சிறையில் இருந்த மசூத் அசார் உள்பட 3 பயங்கரவாதிகளை விடுவிக்க நிபந்தனைகள் விதித்தனர்.

    இதையடுத்து மசூத் அசார் உள்பட 3 பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டனர். அதன்பின் 2001-ம் ஆண்டு இந்திய பாராளுமன்றம் மீது தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார். இந்தியா, சர்வதேச நாடுகள் அழுத்தத்தால் மசூர் அசாரை பாகிஸ்தான் அரசு வீட்டு காவலில் வைத்தது.

    ஆனால் அவரை லாகூர் கோர்ட்டு விடுவித்தது. இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக 2019-ம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.

    அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி யது. ஆனால் மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை. குடும்பத்துடன் காணாமல் போய் விட்டார். அவரை தேடி வருகிறோம் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.

    இந்த நிலையில் மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இருப்பதாகவும், அவரை கண்டுபிடித்து கைது செய்யுமாறு ஆப்கானிஸ்தான் தலிபான் அரசுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது.

    ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச் சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருக்கிறார் என்று நம்புகிறோம். அவர் நஞ்கர்ஹர் மாகாணத்திலோ அல்லது குனார் மாகாணத்திலோ பதுங்கி இருக்கலாம். அவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து கைது செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இந்திய அதிகாரிகள் கூறும்போது, "உலகளாவிய பயங்கரவாத நிதியுதவி கண்காணிப்பு குழுவின் ஆணைக்கு இணங்கவும், அந்த அமைப்பின் சாம்பல் நிற பட்டியலில் இருந்து வெளியேறவும் பாகிஸ்தானின் முயற்சியாக இது இருக்கலாம்" என்றனர்.

    எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். நாங்கள்தான் புனிதமானவர்கள் என்று யாரும் சொல்ல இயலாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்யும்போது, “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. இவர் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றார். காந்தியின் மானசீக கொள்ளு பேரன் என்ற முறையில் நியாயம் கேட்க வந்துள்ளேன்” என்று கூறினார்.

    இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கமல்ஹாசனின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது. அவர் மீது தமிழ்நாடு முழுவதும் 74 போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோர்ட்டுகளிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. என்றாலும் கமல்ஹாசன் தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை.

    இதனால் நேற்று அவரை நோக்கி செருப்பு, முட்டை, சாணம் போன்றவை வீசப்பட்டன. இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் சூலூர் தொகுதியில் இன்று பிரசாரம் செய்ய இருந்ததை போலீசார் சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி தடுத்து உள்ளனர்.

    கமல்ஹாசன் கோவை பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- நீங்கள் அரவக்குறிச்சியில் பேசிய பேச்சுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் அந்த நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறீர்களே?

    பதில்:- ஆமாம். நான் சொன்னதில் தவறான கருத்து எதுவும் கிடையாது. அது பல வருடங்களாக சொல்லப்பட்டது. இப்போது அதை திடீரென்று கவனிப்பது அவர்களின் சவுகரியத்துக்காக கவனிப்பதுபோல் தோன்றுகிறது.

    இதே பரப்புரையை நான் மெரினாவில் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு முன்பு சொல்லி இருக்கிறேன். பாராளுமன்ற தேர்தல் கடைசி நாள் பிரசாரத்தின்போது மெரினா கடற்கரையில் இதே கருத்துகளை இதே வி‌ஷயங்களை நான் சொல்லி இருக்கிறேன்.

    அப்போது தன்னம்பிக்கையுடன் இருந்தவர்களுக்கு இப்போது நம்பிக்கை குறைந்தவுடன் எது கிடைக்கிறதோ அதை பிடித்துக் கொண்டு விவாதம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். மெரினாவில் நான் பேசியபோது எல்லா மதத்தினரும் இருந்தனர்.

    கேள்வி:- உங்கள் கருத்து சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கும் என்பதுதானே அவர்களின் கருத்து?

    பதில்:- உருவாக்கினார்கள் என்பதுதான் எனது குற்றச்சாட்டு. உருவாகவில்லை. 3 நாட்கள் எதுவும் நடக்கவில்லை. கடைசியில் இவர்கள் உருவாக்கி விட்டதுதானே தவிர வேறொன்றும் இல்லை.



    பிரதமர் மோடிக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. சரித்திரம் பதில் சொல்லும். பிரதமர் மோடி அபார ஞானம் உள்ளவர் என்று பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவருக்கு பதில் சொல்வதற்கு சரித்திரமும், சரித்திர ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

    கேள்வி:- இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி இருக்கிறார்களே?

    பதில்:- தாக்குதல் அவர்கள் மீது நடக்கவில்லையே. அவர்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    கேள்வி:- உங்கள் பேட்டியில் நீங்கள் ஊடகங்களை குறை சொல்லி இருக்கிறீர்களே?

    பதில்:- என்னை குறை சொல்லும்போது நானும் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டி இருக்கிறது. வாலையும், தலையையும் கத்தரித்து போட்டீர்களேயானால் யாரும் யாரையும் திட்டுவது மாதிரி நாம் சித்தரித்து விட முடியும்.

    அதன் பிறகு அதை முழுதாக போட்டார்கள். அதை பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாம். பார்க்க முடியாதவர்கள், பார்க்க சகியாதவர்கள் அவர்கள் கூற்றை தொடர்ந்து பேசுவார்கள்.

    கட்சித் தலைவர்களோ, பிரசாரம் செய்பவர்களோ இனி இந்த வி‌ஷயத்தை பற்றி பேசக்கூடாது என்று மதுரை கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால் அதில் மடம் தலைவர்களுக்கு விதிவிலக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் மடத்தின் தலைவர்கள் சிலர் பேசி இருக்கிறார்கள்.

    அதை தூண்டி விடுபவர்கள் என்று சொன்னால் எங்கள் கட்சியில் இருந்து யாரும் அதைச் செய்யவில்லை. நாங்கள் அமைதியை காப்பதற்கான எல்லா வேலையையும் செய்கிறோம்.

    கேள்வி:- மத நல்லிணக்கத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடிய தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் யாருமே உங்கள் கருத்தை ஆதரிக்கவில்லையே?

    பதில்:- அப்படியா? அவர்களுக்கு அஜெண்டா இருக்கிறது. அதனால் ஆதரிக்காமல் இருந்து இருக்கலாம்.

    கேள்வி:- ஓராண்டுக்கு மேல் தீவிர அரசியலில் இருக்கிறீர்கள். ஆனால் இந்த வி‌ஷயத்தை பேசிய பிறகுதான் தீவிர அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்று சொல்கிறீர்களே?

    பதில்:- நீங்கள் உங்களுக்கு பிடித்த மாதிரி சொல்லிக் கொள்கிறீர்கள். நாங்கள் தீவிர அரசியலுக்கு வந்து விட்டோம் என்று சொன்னேன். அதை போன வருடத்தில் இருந்து என்று வைத்துக் கொள்ளுங்கள்.

    கேள்வி:- பா.ஜனதா சார்பில் காவல் நிலையங்களில் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் கைது செய்யப்படலாம் என்று கருதி முன் ஜாமீன் மனு தாக்கல் செய்து இருக்கிறீர்கள். அப்படியென்றால் நீங்கள் கைதுக்கு பயப்படுகிறீர்களா?

    பதில்:- கைதுக்கு பயப்படவில்லை. எனக்கு பிரசாரம் இருக்கிறது. அதை செய்ய வேண்டும் என்ற ஒரு ஆவல்தான். கைது பண்ணட்டும். எனக்கு ஒன்றும் இல்லை. கைது செய்தால் இன்னும் பதட்டம் அதிகரிக்கும். அது என்னுடைய வேண்டுகோள் இல்லை. அறிவுரை. அதை செய்யாமல் இருப்பது நல்லது.

    கேள்வி:- உங்கள் கருத்தை உங்கள் நண்பர்களும் திரையுலக சகாக்களும் ஆதரிக்கவில்லையே?

    பதில்:- அவர்களுக்கு வேறு கருத்து இருக்கலாம். ஜனநாயக நாடு.

    கேள்வி:- கோட்சே பற்றி பேச வேண்டிய தேவை இப்போது இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

    பதில்:- கண்டிப்பாக இருக்கிறது. நீங்கள் பாருங்கள். மறுபடியும் காந்தியைப் பற்றி நல்ல நல்ல வி‌ஷயங்கள் வெளியே வருகிறது. அதை வெளிக்கொண்டு வரவும் சரித்திரம் மீண்டும் நிகழாமல் இருக்கவும் சரித்திரத்தை நாம் நினைவு கொள்வது நல்லது.

    கேள்வி:- பிரசாரம் செய்யவிடாமல் அரசியல் குறுக்கீடு இருக்கிறது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கூறி இருக்கிறாரே?

    பதில்:- அரசியல் குறுக்கீடு எனக்கே இருக்கிறது. சூலூரில் எங்களுக்கு கடைசி நாள் பிரசாரம். இன்று எங்களுக்கு மிகவும் முக்கியமான பிரசார நாள். அதை இவர்கள் காரணம் காட்டி தடை செய்து இருக்கிறார்கள். பதட்ட சூழல் அங்கே நிலவும் பட்சத்தில் ஏன் சூலூரில் தேர்தலை தள்ளிப் போடக்கூடாது என்பது எங்களுடைய பரிந்துரை.

    கேள்வி:- உங்கள் நாக்கு அறுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளாரே?

    பதில்:- அது அவரது குணாதிசயத்தை காட்டுகிறது. அதற்கு நான் என்ன செய்ய முடியும்.

    கேள்வி:- சோனியாகாந்தி வருகிற 23-ந்தேதி பா.ஜனதா அணியில் இல்லாத கட்சிகளை அழைத்துள்ளார். உங்களுக்கு அழைப்பு வந்ததா?

    பதில்:- எனக்கு அழைப்பு வரவில்லை. நான் இப்போது தான் ஊருக்கு வந்தேன்.

    கேள்வி:- உங்களை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படுகிறதே?

    பதில்:- இது முதல் முறை இல்லை. வெவ்வேறு அமைப்புகள், வெவ்வேறு கால கட்டங்களில் எனக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்கள். அவையெல்லாம் தெளிவான போராட்டங்கள் இல்லை என்பது மக்களுக்கு புரிந்திருக்கும்.

    கேள்வி:- கட்சிகளை தாண்டி இந்துக்களின் மனது புண்பட்டிருந்தால்?

    பதில்:- இந்துக்கள் யார்? ஆர்.எஸ்.எஸ். யார்? என்பதை பிரித்து பார்க்க வேண்டும். மொத்தமாக நீங்கள் சொல்லக் கூடாது.

    அரசியலில் இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் புண்பட்டிருப்பார்கள். அரசியலில் இல்லாத மதம் சார்ந்தவர்கள் என்ன இப்படி சொல்லி விட்டார் என்று கொஞ்ச நேரம் யோசிப்பார்கள். புண்படுவது, கோபப்படுவது, தாக்கப்படுவது இதெல்லாம் தனிப்பட்ட அரசியல். சாதனங்களை கையில் எடுத்து விளையாடுகிறார்கள்.

    கேள்வி:- உங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதுகிறீர்களா?

    பதில்:- இல்லை. நல்ல பாதுகாப்பு எனக்கு இருந்தது. இங்கு கூட பாதுகாப்பை மீறி எதுவும் செய்ய வேண்டும் என்றால் யாரும் செய்யலாம். இதை செய்வது பெரிய கூட்டம் என்றால் பதட்டப்பட வாய்ப்பு உண்டு. இதில் 2 பேர், 4 பேர் ஏவப்பட்டவர்கள்.

    கேள்வி:- உங்களை நோக்கி செருப்பு வீசப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    பதில்:- அரசியலின் தரம் குறைந்து விட்டது. நாதுராம் கோட்சே பற்றி நான் சொன்ன கருத்துக்காக என்னை நோக்கி செருப்பு வீசியுள்ளனர். செருப்பு வீசுவதாலோ, கல் வீசுவதாலோ என்னை அச்சுறுத்தி பணிய வைத்து விட முடியாது.

    எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். நாங்கள்தான் புனிதமானவர்கள் என்று யாரும் சொல்ல இயலாது. மத நல்லிணக்கத்துக்காகவே நான் அவ்வாறு கருத்து தெரிவித்தேன். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அனைத்து மதத்தையும் நான் சமமாக கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவு பெற்ற தீவிரவாத இயக்கம் சதி திட்டம் தீட்டி உள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. #Srilankablast #TN
    சென்னை:

    நியூசிலாந்தில் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பழிவாங்கும் வகையிலேயே குறிப்பிட்ட தீவிரவாத இயக்கம் உலக நாடுகளின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்புவதற்காக இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. தேசிய புலனாய்வு முகமை வட்டாரங்கள் இந்த தகவலை தெரிவித்தன.

    தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்படுபவர்களை கண்காணிக்கும் பணியில் தேசிய புலனாய்வு பிரிவு படையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். கடந்த 6 மாதத்துக்கு முன்பு தமிழகத்தில் பிடிபட்ட ஐ.எஸ். ஆதரவாளர் ஒருவர் இலங்கையில் குண்டு வைத்துள்ள தீவிரவாத இயக்கம் பற்றி திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.



    கிறிஸ்தவ தேவாலயங்களை குறி வைத்து மிகப்பெரிய தாக்குதல் சம்பவத்துக்கு சதித்திட்டம் நடப்பதாகவும், இதற்காக தமிழகத்தில் இளைஞர்கள் சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வாலிபர் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் அசம்பாவித சம்பவங்களை நிகழ்த்துவது சாத்தியமில்லை என்று மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்கள் கைவிரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு தீவிரவாதிகள் குறிவைத்திருக்கும் திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக கடந்த 6 மாதத்துக்கு முன்பே என்.ஐ.ஏ. அமைப்பினர் எச்சரிக்கை விடுத்து அறிக்கையும் அளித்துள்ளனர். இதையடுத்து உளவுப்பிரிவு போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    புதிய தீவிரவாத அமைப்பின் இலக்கு, ஏதாவது ஒரு இடத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தாக்குதல் நடத்துவது தான் என்று கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் இலங்கையை தேர்ந்தெடுத்துள்ளனர்.

    அந்த நாட்டில் விடுதலைப் புலிகளின் பின்னடைவுக்கு பின்னர் இலங்கையில் திரும்பிய அமைதி மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை புதிய தீவிரவாத இயக்கம் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளது.

    இலங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சில சிறிய அளவிலான குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின. அப்போதே இந்திய உளவு துறை இலங்கையை உஷார்படுத்தியது. ஆனால் அந்த நாடு இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பாதுகாப்பு வி‌ஷயத்தில் கோட்டைவிட்டதாலேயே மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேர்ந்துள்ளது. #Srilankablast #TN

    உத்தரப்பிரதேசம் அருகே காலிந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் கழிவறையில் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. #KalindiExpress
    கான்பூர்:

    உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர்-பிவானி இடையே ஓடும் காலிந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 7.10 மணிக்கு பாரஜ் பூர் ரெயில் நிலையத்துக்கு வந்து நின்றது.

    அப்போது அந்த ரெயிலின் கழிவறையில் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் ரெயிலின் மேல் கூரையில் உள்ள பிளைவுட் சேதம் அடைந்தது.

    கழிவறையில் வெடித்ததால் பயணிகள் காயமின்றி தப்பினர். குண்டு வெடித்த சத்தம் கேட்டதும் ரெயில்வே போலீசாரும், அதிகாரிகளும் விரைந்து வந்து பார்வையிட்டனர். அது பட்டாசை விட சற்று சக்தி வாய்ந்தது என தெரிவித்தனர். இதனால் பயணிகள் தப்பினர்.

    குண்டு வெடித்ததும் புல்வாமா தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பெயரில் ரெயில் நிலையத்துக்கு மிரட்டல் வந்தது.

    சம்பவ இடத்துக்கு பயங்கரவாத தடுப்பு படை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சிறிது நேர தாமதத்துக்குப் பின் பலத்த பாதுகாப்புடன் ரெயில் புறப்பட்டுச் சென்றது. #KalindiExpress
    ஜம்மு காஷ்மீரில் 40 வீரர்கள் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, இதற்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசாருக்கு எதிராக ஐநா சபையில் பிரான்ஸ் தீர்மானம் கொண்டு வர உள்ளது. #JammuKashmir #CRPF #PulwamaAttack

    பாரீஸ்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அசார் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. தற்போது இவன் தலைமறைவாக இருக்கிறான்.

    இந்த நிலையில் மசூத் அசாரை ஐ.நா. சபையில் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க பிரான்ஸ் தீவிரமாக உள்ளது.

    அதற்காக ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டில் இங்கிலாந்து பிரான்ஸ் ஆதரவுடன் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.

    ஆனால் தனது ‘வீட்டோ’ சிறப்பு அதிகாரம் மூலம் சீனா தடுத்து விட்டது. எனவே அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தற்போது பங்கரவாதி மசூத் அசாருக்கு எதிராக 2-வது தடவையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்னும் சில நாட்களில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

    அதற்கான நடவடிக்கையில் பிரான்ஸ் அரசின் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீர்மானம் கொண்டு வருவது குறித்து பிரான்ஸ் அதிபர் மெக்ரானின் ஆலோசகர் பிலிப் எடின் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாவுடன் நேற்று டெலிபோனில் ஆலோசனை நடத்தினார்.

    இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். #JammuKashmir #CRPF #PulwamaAttack

    காஷ்மீரில் முன்னாள் போலீஸ் அதிகாரி பசரத் அகமதுவை கடத்தி சென்ற தீவிரவாதிகள் அவரை சுட்டுக்கொன்றனர். குண்டு துளைக்கப்பட்ட நிலையில் அவரது உடலை போலீசார் கண்டெடுத்தனர். #JK #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் கடந்த வாரம் 2 வாலிபர்களை தீவிரவாதிகள் கடத்தி கொன்றனர். இதில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் பாணியில் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டார்.

    இந்த நிலையில் காஷ்மீரில் முன்னாள் போலீஸ் அதிகாரியை தீவிரவாதிகள் கடத்தி கொன்றனர்.

    காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தை சேர்ந்தவர் பசரத் அகமது. முன்னாள் சிறப்பு போலீஸ் அதிகாரி. அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் இவரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். அவருடன் அதே பகுதியை சேர்ந்த சகத் அகமது, ரியாஸ் அகமது ஆகியோரும் கடத்தப்பட்டனர். இவர்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதில் பசரத் அகமதுவை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். குண்டு துளைக்கப்பட்ட நிலையில் அவரது உடலை போலீசார் கண்டெடுத்தனர்.

    கடத்தப்பட்ட சகித் அகமது, ரியாஸ் ஆகிய இருவரையும் தீவிரவாதிகள் விடுதலை செய்தனர். #JK #MilitantsAttack

    தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கருதி திருப்பதி ரெயில் நிலையம் அருகே உள்ள விடுதிகளில் நள்ளிரவில் போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

    சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்குவதற்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி மற்றும் திருமலையில் ஏராளமான தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

    இங்கு தங்க வரும் பக்தர்களின் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால் மட்டும் தங்க அனுமதி வழங்கப்படுகிறது.

    திருப்பதியில் வருகிற 16-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை குறைந்த அளவிலான பக்தர்களையே தரிசனத்திற்கு அனுமதிக்கின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 50 பேர் திருப்பதி வந்தனர். அவர்கள் உள்ளூர் போலீசாரின் துணையுடன் திருப்பதி ரெயில் நிலையம் அருகே உள்ள விஷ்ணு நிவாஸ் 2 மற்றும் 3 விடுதிகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது விடுதியில் இருந்து வெளியே செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. அதே போல் வெளியே இருந்து உள்ளே செல்லவும் அனுமதிக்கவில்லை.

    விடுதியை சுற்றி உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 4 மணி நேரம் தேசிய பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். இந்த திடீர் சோதனையால் திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    சோதனை குறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவல் ஏதுமில்லை. நள்ளிரவில் தீவிரவாதிகள் தடுப்பு ஒத்திகை நடத்தியதாக கூறினர்.
    காஷ்மீரில் தீவிரவாதிகள் மிரட்டலால் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டு தற்போது ராணுவ முகாமாக மாறியுள்ளது. #Kashmir #theater
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் பல்வேறு வகையில் அட்டூழியம் செய்து வருகிறார்கள். மக்கள் மீது பல்வேறு அடக்கு முறைகளை விதித்துள்ளனர்.

    குறிப்பாக காஷ்மீரில் கேளிக்கைகளை தடை செய்தனர். இதன் காரணமாக கடந்த 1990-ம் ஆண்டு முதல் காஷ்மீரில் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 12 தியேட்டர்களே இருந்தன. அவை மூடப்பட்டதால் எந்த சினிமா படங்களும் திரையிடப்படவில்லை.



    மாநில அரசு ஸ்ரீநகரில் மட்டும் சில தியேட்டர்களை திறக்க நடவடிக்கை எடுத்தது. ஆனால் பயத்தால் யாரும் தியேட்டருக்கு படம் பார்க்கவரவில்லை. இதையடுத்து திறக்கப்பட்ட தியேட்டர்களும் மூடப்பட்டன. இந்த நிலையில் இந்த தியேட்டர்களை பாதுகாப்பு படையினர் கைவசம் எடுத்துக் கொண்டு அதை ராணுவ முகாமாக மாற்றினர்.

    தற்போது பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு தங்கி உள்ளனர். #Kashmir #theater
    இந்திய போர்கப்பல்களை தகர்க்க ஆழ்கடலில் தீவிரவாதிகள் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசுக்கு உளவுத்துறை தகவல் கொடுத்து எச்சரித்துள்ளது. #IndianNavy
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய இரு தீவிரவாத இயக்கங்களும் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

    கடந்த 2008-ம் ஆண்டு மும்பைக்குள் ஊடுருவிய 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் 166 பேரை கொன்று குவித்தனர். அதே போன்று பெரிய தாக்குதலை நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்தனர்.

    தீவிரவாதிகளின் சதி திட்டங்கள் அனைத்தையும் உளவுத்துறை தகவல்கள் உதவியுடன் இந்திய பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்தப்படி உள்ளனர். கடந்த 6 மாதங்களில் மட்டும் காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற சுமார் 200 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். என்றாலும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவும் நோக்கத்துடன் சுமார் 300 தீவிரவாதிகள் காத்து இருக்கின்றனர்.

    தரை வழியாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவதை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் தடுப்பதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளனர். இதன் காரணமாக பாகிஸ்தான் தீவிரவாதிகள், வேறு வழிகளில் இந்திய ராணுவ நிலைகளை தகர்க்க திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் தீவிரவாதிகளின் பார்வை இந்திய கடற்படை மீது திரும்பியுள்ளது.

    இந்திய கடற்படை சமீப ஆண்டுகளில் மிகவும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நீர் மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தும் தொழில் நுட்பத்தில் இந்திய கடற்படை மிகுந்த முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியாவிடம் தற்போது ஐ.என்.எஸ். அரிகண்ட், ஐ.என்.எஸ். அகாட், ஐ.என்.எஸ். சக்ரா எனும் 3 நீர் மூழ்கி கப்பல்கள் உள்ளன.

    இவற்றை பாகிஸ்தான் ராணுவம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக கருதுகிறது. எனவே இந்திய போர் கப்பல்களை குறி வைத்து தாக்குதல் நடத்தும்படி தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தான் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய போர் கப்பல்களை தகர்க்க, பாகிஸ்தான் கடல் பகுதியில் உள்ள ஆழ்கடலில் தீவிரவாதிகள் ரகசிய பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் கடந்த 6 மாதமாக இந்த பயிற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. நீண்ட தொலைவுக்கு கடலுக்கு அடியில் நீந்தி சென்று, கப்பல்களை குண்டு வைத்து தகர்க்கும் வகையில் அவர்கள் பயிற்சி பெறுவதை உளவுத்துறை மோப்பம் பிடித்துள்ளது.

    டெல்லியில் உள்ள உளவுத்துறை பல்முனை ஒருங்கிணைப்பு மையரிம் இதை உறுதி செய்தது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய கடற்படை தளங்களை தாக்கும் வகையிலும் ஒத்திகை நடத்தி இருப்பதையும் உளவுத்துறை கண்டறிந்துள்ளது. இதுபற்றி மத்திய அரசுக்கு தகவல் கொடுத்து உளவுத்துறை எச்சரித்துள்ளது.



    இதையடுத்து இந்திய கடற்படை போர் கப்பல்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நீர் முழ்கி கப்பல்களுக்கும், விமானம் தாங்கி கப்பல்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அதுபோல விசாகப்பட்டினம், கொச்சி, மும்பை உள்ளிட்ட கடற்படை தளங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #IndianNavy
    வேறு மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்களை ஒடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

    நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டரங்கம் முன்பு மத்திய அரசின் 4 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவற்கு தடையாக இருப்பது அரசியல் கட்சியினர் அல்ல. வன்முறை, கலவரம் போன்றவற்றை உருவாக்க வேண்டும், அதன்மூலம் திட்டத்தை தடுக்க வேண்டும் என செயல்பட்டு வருபவர்களைத்தான் நான் எதிர்க்கிறேன்.

    ஏற்கனவே தமிழகத்தில் பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்கள் அமைத்து செயல்படுவதாக நான் கூறி வந்தேன். இதுதொடர்பாக தமிழக அரசை பலமுறை எச்சரித்தும் தீவிரவாதத்தை தடுக்க அரசு தவறி விட்டது. இதனால் தீவிரவாதிகளின் செயல்பாடு தற்போது அதிகரித்து வருகிறது.

    மீத்தேன் திட்டம், நியூட்ரின் திட்டம், கெய்ல் எரிவாயு திட்டம், ஸ்டெர்லைட் ஆலை ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் கூட பயங்கரவாதிகள் ஊடுருவி தான் பிரச்சினை ஏற்படுத்தி உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் முன்பே அதற்கு எதிராக நான் 5 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தேன். அப்போது என்னை வலுக்கட்டாயமாக போலீசார் அப்புறப்படுத்தினர். தற்போது ஸ்டெர்லைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கலவரத்தின் பின்னணியில் பயங்கரவாதிகள் தொடர்பு இருப்பதாக போலீசார் கருதுகிறார்கள்.

    எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தில் நக்சலைட்டுகளை ஒழிக்க போலீஸ் அதிகாரி தேவாரத்துக்கு முழு அதிகாரம் கொடுத்தார். அதன் விளைவாக நக்சலைட்டுகள் ஒழிக்கப்பட்டனர். இங்கிருந்து ஓடி ஆந்திரா மற்றும் மற்ற மாநிலங்களுக்கு சென்றனர்.

    ஆனால் இன்று அந்த நிலை வேறு. வேறு மாநிலங்களில் இருந்து நக்சலைட்டுகள் தமிழகத்துக்குள் ஊடுருவி வருகிறார்கள். அவர்கள் தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த சதி செய்துள்ளனர். தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதால் அதை பயன்படுத்தி இளைஞர்களை தீவிரவாதிகள் மூளைச்சலவை செய்கிறார்கள். தீவிரவாதிகள் விவகாரத்தில் வேடிக்கை பார்க்காமல் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



    விவசாயத்தை அழிப்பது மத்திய அரசின் இலக்கல்ல. ஏனெனில், எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.11 லட்சம் கோடியை விவசாயிகளுக்கு வங்கி கடனாக மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், விவசாயிகளுக்கான இழப்பீடு தொகையையும் பலமடங்கு உயர்த்தி உள்ளது. விவசாயிகளை உயர்த்தவேண்டும் என்றால் அவர்களின் உற்பத்தி பொருளை சந்தைப்படுத்த வேண்டும். அதற்கான வழியை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். அதை மனதில் கொண்டே மத்திய அரசு திட்டங்களை வகுத்து செயல்படுத்துகிறது. 150 ஆண்டு கால காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு தந்தது பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுதான்.

    இதுதவிர ஆண்டுக்கு 3 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் கோதாவரி ஆற்றுநீரை தமிழகத்துக்கு கொண்டுவரவும் திட்டம் வகுத்துள்ளது. இதற்கான கூட்டம் ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திரமோடி, தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, வீணாக கடலில் கலக்கும் கோதாவரி ஆற்று நீரை தமிழகத்துக்கு தரவேண்டும் என வலியுறுத்தினார்.

    இந்த கூட்டத்தில், அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறும்போது ‘தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை‘ என்றே கூறினார். இதில் இருந்தே தமிழக விவசாயிகளின் மீது மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளதை அறிந்துகொள்ளமுடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சத்துணவு முட்டை வினியோகத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக பத்திரிகையாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு நான் பதிலளித்தபோது ‘முட்டை வினியோக ஊழல் தொடர்பாக தகுந்த விசாரணை நடத்த வேண்டும்‘ என்று கூறினேன்.

    ‘தமிழக மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்‘ என்பதைத்தான் ‘மொட்டை அடிக்கப்படுகிறார்கள்‘ என்றேன். எனவே நான் பேசியதன் கருத்தை புரிந்துகொண்டு அமைச்சர் ஜெயக்குமார் பேச வேண்டும். தமிழகம் ஊழல் மயமாக மாறிவிட்டது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஊழலில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan
    ராமேசுவரம் கோவிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக கோவில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய பாதுகாப்புதுறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் இந்துக்களின் புனித தலமாகும். மேலும் 12 ஜோதிலிங்க கோவில்களில் 11 ஜோதி லிங்கம் கோவில்கள் வட மாநிலத்தில் உள்ளது. தென் மாநிலத்தில் உள்ள ஒரே ஜோதி லிங்கம் அமைந்துள்ள தலம் ராமேசுவரம் கோவிலாகும்.

    ஆதலால்தான் இந்த கோவிலுக்கு வட மாநில பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

    இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோவிலுக்குள் சுவாமி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் செல்போன், பேக் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்ல தடையும் விதிக்கப்பட்டு, அனைவரையும் மெட்டல் டிடெக்கர் கருவி மூலம் கண்காணித்து கோவிலுக்குள் செல்ல போலீசார் அனுமதி அளித்து வருகின் றனர்.

    இந்த நிலையில் கோவில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய பாதுகாப்புதுறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவிலில் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்துவதற்காக மத்திய பாதுகாப்புதுறையின் கமாண்டர் ஜெகநாதன் தலைமையில் 4 பேர் குழுவினர் கோவிலுக்கு வருகை தந்தனர்.

    இவர்கள் ராமேசுவரம் மத்திய உளவுப்பிரிவு போலீசார் மற்றும் ராமேசுவரம் கோவில் காவல் நிலைய போலீசார் மற்றும் கோவில் பொறியியல் பிரிவு அலுவலர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி பின்னர் கோவிலின் உள்பகுதிக்கு சென்றனர்.

    அங்கு கோவில் மூன்றாம் பிரகாரம், ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன் சன்னதி மற்றும் 2-ம் பிரகாரம் ஆகிய பகுதிகளையும், கோவிலின் மேல்தளத்திற்கு சென்று ராஜகோபுரம் மற்றும் இதர கோபுரங்களையும், கோவிலை சுற்றியுள்ள வீடுகள், வணிக கட்டிடங்கள், கோவில் கோட்டை சுவர் மீது இணைக்கப்பட்டுள்ள வீடுகள் மற்றும் விடுதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது கோவில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி,கோட்ட பொறியாளர் மயில் வாகணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    தீவிரவாதிகள் யார்? என்பதை நாட்டுக்கு ரஜினிகாந்த் அடையாளம் காட்டவேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் புதுச்சேரியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது, போராட்டங்களால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று ரஜினிகாந்த் கூறியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்து கூறியதாவது:-

    நானும் அதை தொலைக்காட்சியில் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரையிலும், அது அவருடைய சொந்த குரலா? என்பது ஒரு சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. இதன் பின்னணி குரலாக, ஏற்கனவே பா.ஜ.க. சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க.வும் இதை சொல்லிக்கொண்டிருக்கிறது.

    எனவே, அந்த குரலாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு வந்திருக்கிறது. எது எப்படி இருந்தாலும், அவர் சூப்பர் ஸ்டார். அவரே தீவிரவாதிகள் எனக்கு தெரியுமென்று சொல்லியிருக்கின்ற காரணத்தால், அந்த தீவிரவாதிகள் யார்? என்பதை நாட்டுக்கு அடையாளம் காட்டினால், நாட்டுக்கு அது நல்லதாக அமையும். அதை அவர் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    அதுமட்டுமல்ல வாழ்க்கையே ஒரு போராட்டம் தான். போராட்டம் இல்லாமல் எந்தவொரு காரியத்தையும் நம்மால் சாதிக்க முடியாது. இந்தி எதிர்ப்பு போராட்டமாக இருந்தாலும் சரி, சுதந்திர போராட்டமாக இருந்தாலும் சரி, ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போராட்டமாக இருந்தாலும் சரி எல்லாமே போராட்டங்கள் நடத்தியே காரியங்கள் சாதிக்கப்பட்டிருக்கின்றன என்பது அவருக்கு தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×