search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈஸ்வரன்"

    ரூ.1000,ரூ.2000க்கு ஆசைப்பட்டு தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி அறிவித்துள்ள திட்டங்கள் மூலம் ரூ.5 லட்சத்தை இழந்துவிடாதீர்கள் என்று ஈஸ்வரன் பேசியுள்ளார்.
    வேலாயுதம்பாளையம்:

    அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்  மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன்  வேலாயுதம் பாளையத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவிலேயே இலவச மின்சாரத்தை வழங்கி விவசாயத்தையும். அதேபோல் விவசாயிகள் வாங்கிய கடன் தொகை ரூ.7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்து விவசாயிகளையும் காப்பாற்றியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். இதன் மூலம் அதிக பயன் அடைந்தவர்கள் கொங்கு நாட்டு விவசாயிகள் தான். 

    அதேபோல் இந்த தேர்தலிலும் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வதாகவும். நிலமற்ற ஏழைத்தொழிலாளர்கள் வாங்கியுள்ள 5 பவுனுக்கு உட்பட்ட நகை கடனையும் தள்ளுபடி செய்வதாகவும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விவசாயிக்கு தான் விளை வித்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இடைத் தரகர்கள் பயன் பெறும் நிலை இருந்தது. அதை மாற்றுவதற்காக கருணாநிதி உழவர் சந்தை கொண்டு வந்தார். அவை மீண்டும் சரியாக செயல்பட தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். 

    இப்படி விவசாயிகளுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல் படுத்திய தி.மு.க., கொங்கு நாட்டில் வெற்றி பெற்றதில்லை என்ற நிலையை இனி மாற்றிக் காட்டுவோம். செந்தில் பாலாஜி அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்ததாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

    ஏழை மக்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய், சிலிண்டர் விலை மற்றும் கேபிள் கட்டணம் குறைப்பு,  கடன் தள்ளுபடி என்று தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி அறிவித்துள்ள  திட்டங்கள் மூலம் ரூ.5 லட்சம் வரை ஒரு குடும்பம் பயன்பெற உள்ளது. எனவேரூ.1000,ரூ.2000க்கு ஆசைப்பட்டு ரூ.5 லட்சத்தை இழந்துவிடாதீர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மதங்களுக்கிடையே பிரச்சனை வரும் வகையில் பேசியது கண்டனத்திற்குரியது என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு, மே. 15-

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஈரோட்டில் இன்று நிருபர் களுக்கு பேட்டியளித்தார்.

    மக்கள் நீதிமய்ய தலைவர் கமலஹாசன் மதங்களுக் கிடையே பிரச்சனை வரும் வகையில் பேசியது கண்ட னத்திற்குரியது.

    அரசியல் கட்சி தொடங்கிய ஒருவர் இப்படி பேசியது வருத்தமாக உள்ளது. நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பது அனைவரின் ஆசை. தேர் தலில் வாக்குகளை பெறும் நோக்கில் பேசியது ஏற்று கொள்ள கூடியது அல்ல.

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது கமல ஹாசன் பேசியதை விட குற்றம். ஊடகத்தின் கவனத் தை ஈர்க்க இவ்வாறு பேசி யுள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்டும் இவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும்.

    தேர்தலுக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சி யினருக்கும் தெரியும்.தமிழ கத்தில் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொண்டதால் தி.மு.க.வை கூட்டணிக்கு போட்டி போட்டு அழைக் கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    பாராளுமன்ற தேர்தலில் நாகரீகம் துளியும் இல்லாமல் பேர அரசியலில் ஈடுபடும் தேமுதிகவை கொ.ம.தே.க செயலாளர் சாடியுள்ளார். #dmdk #kmdk #parliamentelection

    ஈரோடு:

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளுடன் மற்ற அனைத்துக்கட்சிகளும் கூட்டணி அமைத்து வரும் நிலையில் தேமுதிகவை கூட்டணியில் கொண்டு வருவதற்கு அதிமுக- தேமுதிக இடையே பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடை பெறுவதை நாம் அறிவோம்.

    ஆனால் கடந்த சில நாட்களாக இரு கட்சிகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வை பார்க்கும் போது தமிழக மக்கள் அனைவரையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது. ஏதோ வியாபாரத்தில் இடைத் தரகர்கள் செய்யும் வியாபார உத்தியை போல கூட்டணி பேரத்தை தேமுதிக- அதிமுக 2 கட்சிகளும் மாறி மாறி அரங்கேற்றி வருவது தமிழக அரசியலுக்கும், தமிழக மக்களுக்கும் நல்லதல்ல.

    தேமுதிக தங்களுடைய கூட்டணி பேரத்தை அதிகரிக்க என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் எந்தவொரு கூச்சமும் இல்லாமல் செய்வார்கள் என்பதை கடந்த சில தினங்களாக நடக்கும் நிகழ்வு வெளி காட்டியிருக்கிறது.

    அரசியல் நாகரீகம் துளியும் இல்லாமல் பேர அரசியலை கொண்டு இவ்விரு கட்சிகளும் அமைக்கும் கூட்டணி எப்படி மக்கள் நலம் சார்ந்த கூட்டணியாக இருக்க முடியும்? தமிழக மக்களுக்கு போதிய அரசியல் விழிப்புணர்வு இல்லை என்று இவ்விரு கட்சிகளும் கருதுகிறார்களா? இந்த 2 கட்சிகளும் அமைக்கும் வியாபார அரசியல் கூட்டணிக்கு தேர்தலில் தமிழக மக்கள் தக்க பதிலடியை கொடுக்க தயாராகி விட்டார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. 

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.  #dmdk #kmdk #parliamentelection

    கூட்டணி பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று கொமதேக ஈஸ்வரன் கூறியுள்ளார். #Eswaran #Parliamentelection

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    தமிழகத்தை பொருத்த வரை தி.மு.க. கூட்டணி மற்றும் அ.தி.மு.க. கூட்டணி என இரு முக்கிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட தயாராகி வரும் நிலையில் 3-வது கூட்டணியாக சில கட்சிகள் இணைந்து போட்டியிடவும் தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் கொ.ம.தே.க. எந்த அணியில் இடம் பெற உள்ளது? என்று மதில்மேல் பூனையாக உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கொ.ம.தே.க. பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.

    இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் கொ.ம.தே.க. பாரதிய ஜனதா அணியுடன் கூட்டணி அமைக்குமா? அல்லது தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கூட்டணி அமையாதபட்சத்தில் கொ.ம.தே.க தனித்து போட்டியிட்டது. போட்டியிட்ட பகுதிகளில் கணிசமான அளவில் ஓட்டுகள் வாங்கினாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

    இப்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கொ.ம.தே.க. நிலைப்பாடு என்ன? என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரனிடம் கேட்டபோது, “தேர்தல் கூட்டணி பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. கூட்டணி பற்றி எதுவும் கூறுவதற்கு இல்லை. இன்னும் முடிவு எடுக்கவில்லை” என்று கூறினார். #Eswaran #Parliamentelection

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியோடு கூட்டணி என்பதை நாமக்கல்லில் நடைபெறும் மாநாட்டிற்குப் பின்னர் முடிவு செய்வோம் என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #eswaran #parliamentelection #kmdk

    மேட்டுப்பாளையம்:

    கோவை வடக்கு மாவட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் பொதுக்குழு கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர துணைத்தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் வக்கீல் பி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் திருமூர்த்தி வரவேற்றுப்பேசினார்.

    கூட்டத்தில் கட்சியின் பொது செயலாளர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியோடு கூட்டணி என்பதை நாமக்கல்லில் நடைபெறும் மாநாட்டிற்குப் பின்னர் முடிவு செய்வோம்.

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் மேட்டுப்பாளையம் தாலுகாவில் விடுபட்ட பகுதிகளையும் இணைத்து பழைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாமக்கல்லில் வருகிற 3-ந் தேதி நடைபெறும் 2-வது உலக கொங்கு தமிழ் மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. #eswaran #parliamentelection #kmdk

    மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் வெற்று அரசியல் செய்து வருகின்றனர் என ஈஸ்வரன் தெரிவித்தார். #eswaran #mekedatuissue #karnatakagovt

    பழனி:

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் பழனியில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட பின் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பழனி கோவில் வருமானத்தில் ஒரு பகுதியை நகரின் வளர்ச்சிக்கு ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளை ஒன்றிணைத்து பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும். அப்போது தான் கல்வியின் தரம் உயரும். அத்துடன் கோவில் நகரமான பழனியை தலைமையிடமாக கொண்டு புதிதாக மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.

    நல்லதங்காள் அணை, பச்சையாறு அணை உள்ளிட்ட திட்டங்கள் பழனி பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு மிகவும் அத்யாவசியமானது ஆகும். ஆனால் அந்த திட்டங்கள் தற்போது வரை கிடப்பில் போடப்பட்டது வேதனை அளிப்பதாக உள்ளது. அந்த திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். விடுதலை போராட்ட வீரரான தீரன் சின்னமலைக்கு பழனி பஸ் நிலைய வளாகத்தில் சிலை வைக்க வேண்டும்.

    நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை தி.மு.க.வுடன் கொங்குநாடு நாடு மக்கள் தேசிய கட்சி கூட்டணியாகவே செயல்படும். 2014-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தேசிய நதிநீர் இணைப்பையும், கங்கை- காவேரி இணைப்பையும் நடத்தி காட்டுவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் அவை கடற்கரை மணலில் எழுதிய வாசகம் போலவே ஆகிவிட்டது.

    இதன் காரணமாக தமிழகத்தில் பா.ஜ.க. மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது. சுற்றுலா தளமான பழனியில் இருந்து ஈரோடு, சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளுக்கான ரெயில் சேவை திட்டம், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்ட உடன் கூட்டணி கட்சியான தி.மு.க. தலைமையில் நிறைவேற்றப்படும். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. செயல்பாடு மக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.

    எனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி நீடிக்காது. மேகதாது அணை பிரச்சினையில் தமிழகத்தின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது. இது தெரிந்திருந்தும் கர்நாடகத்தை சேர்ந்த கட்சியினர் வெற்று அரசியல் செய்யவே தீவிரம் காட்டி வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார். #eswaran #mekedatuissue #karnatakagovt

    ராகுல் பிரதமராக முக ஸ்டாலினால் முன்மொழியப்பட்டு இருக்கிறார். நாங்கள் கூட்டணி கட்சி என்ற வகையில் திமுக எடுத்த முடிவிற்கு ஆதரவு அளிப்பதாக ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #Eswaran #MKstalin #Rahulgandhi
    அந்தியூர்:

    அந்தியூரில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இரண்டு மாதங்களுக்கு முன்னர் காவிரியிலும் பவானியிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் தற்போதுவரை கொங்கு மண்டலம் முழுவதும் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை.

    தமிழக அரசு குடிமராமத்து பணிகள் மூலம் நிலத்தடி நீர் மேம்பட்டு இருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவ்வாறு அல்லாமல் நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்று கொண்டுதான் இருக்கிறது. குடி தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்சனை வராத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற நிலையில் விவசாயிகளுக்கு எதிரானது மத்திய அரசு என விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு இருக்கிறது.

    வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் விசாரணையின்றி கைது செய்யலாம் என சட்ட திருத்தம் கொண்டு வந்திருப்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

    இந்த இரண்டு காரணங்களால் தான் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி தோற்றதற்கு காரணம், இதனை அதன் தலைவர்களும் தற்போது உணர்ந்திருக்கின்றனர்.

    விவசாயிகளை வாழ வைக்கின்ற வகையில் எந்த ஒரு முயற்சியும் மத்திய அரசு எடுக்காதது வேதனையளிக்கிறது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரையிலும் எந்த ஒரு நிதியையும் மத்திய அரசு அறிவிக்காமல் இருக்கிறது.

    மேகதாது அணை அதேபோல் கேரளாவில் புதிய அணை கட்ட ஆய்வு நடத்துவதற்கு அனுமதி அளித்து அதன் மூலம் மத்திய அரசு தமிழகத்திற்கு எதிரான அரசாகவே செயல்படுகிறது.

    எனவே விவசாயிகள் வாழ வைக்கின்ற வகையிலும் தமிழகம் பயன்பெறும் வகையிலும் மத்திய அரசு முடிவு எடுக்கவில்லை என்றால் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் மிக குறைவான வாக்குகளை பெறும்.

    ராகுல் பிரதமராக ஸ்டாலினால் முன்மொழியப்பட்டு இருக்கிறார். நாங்கள் கூட்டணி கட்சி என்ற வகையில் திமுக எடுத்த முடிவிற்கு ஆதரவு அளிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Eswaran #MKstalin #Rahulgandhi
    கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய இயக்குனர் ரஞ்சித்தை கைது செய்ய வேண்டும் என்று ஈஸ்வரன் கூறியுள்ளார். #eswaran #DirectorRanjith

    கோவை:

    கோவையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கருத்து சுதந்திரம் என்ற பெயரில் யார், யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டு மானாலும் பேசலாம் என்ற நிலை உள்ளது.

    அம்பேத்கார் உருவ படம் முன்பாக இளைஞர்கள் சில சமுதாய பெண்களை கொச்சை படுத்தி பேசியது அச்சமுதாயத்தினை கொதிப்படைய செய்துள்ளது.


    திரைப்பட இயக்குநர் ரஞ்சித் தேச தந்தை காந்தி இல்லை எனவும், அம்பேத்கர் என்றும் பேசுகிறார். கலவரத்தை தூண்டும் வகையில் சினிமா இயக்குநர் ரஞ்சித் சினிமா பாணியில் பேசுகிறார். அரசாங்கம் வேடிக்கை பார்க்காமல் அவரை கைது செய்ய வேண்டும். இல்லையேல் மிகப்பெரிய அளவில் கலவரம் உருவாகி சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறது.

    மேகதாது அணை விவகாரத்தில் மாநில கட்சிகள் தேசிய கட்சிகளை உடன் வைத்து போராடுவது சங்கடமான வி‌ஷயம். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுக்கு கர்நாடகா அரசியல் தான் முக்கியம்.

    மேகதாது பிரச்சினையில் தமிழக முதல்-அமைச்சர் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்த கூடாது. அவர் கர்நாடக பிரதிநிதிகள் யாரையும் சந்திக்க கூடாது. நீதிமன்றம் மூலமாக மட்டுமே தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #eswaran #DirectorRanjith

    மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதியளித்தது கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு மேலும் ஒரு பேரிடி என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #MekedatuDam #Eswaran
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    காவிரி தண்ணீர் தமிழகத்திற்குள் வரவிடாமல் தடுக்க கர்நாடக அரசு தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாதென்று தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒருமித்த குரலுடன் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையில், கர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவது ஏற்புடையதல்ல.

    மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு தமிழகத்திலிருக்கும் கொஞ்சநெஞ்ச விவசாயமும் முற்றிலும் அழிந்துவிடும். கஜா புயல் பாதிப்பில் செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும், தமிழகத்திற்கும் இந்த செய்தி பேரிடியாக அமைந்திருக்கிறது.

    எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு கொடுக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #MekedatuDam #Eswaran
    புயல் எச்சரிக்கை ஏற்பாட்டை அனைத்து தலைவர்களும் பாராட்டியதால் அரசு மெத்தனமாக இருந்து விட்டது என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #TNGovt #Gajacyclone #Eswaran
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கஜா புயல் வருவதற்கு முன் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சிறப்பாக இயங்கிய தமிழக அரசு, புயலுக்கு பின் நடக்கின்ற நிவாரண பணிகளில் கவனம் செலுத்தாதது வேதனைக்குரியது.

    முன் எச்சரிக்கை நடவடிக்கைகளோடு பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு எந்திரத்தில் போர்க்கால நடவடிக்கைகள் இப்போதைய அவசியம். விழிப்புணர்வு ஏற்படுத்தியதை எதிர்க்கட்சி தலைவர் உள்பட அனைத்து கட்சிகளும் பாராட்ட தான் செய்தார்கள்.

    தமிழக அரசிடமிருந்து எவ்வளவு முதற்கட்ட உடனடி இழப்பீடு வேண்டுமென்ற கோரிக்கை இதுவரை மத்திய அரசுக்கு தமிழக அரசு வைக்காததே அரசு செயல்பாடுகளின் சுணக்கத்தை எடுத்துரைக்கிறது. பிரதமரையோ அல்லது மத்திய அமைச்சர்களையோ அழைத்து வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டிருக்க வேண்டும்.

    இதுவரை மத்திய அரசின் சார்பில் சேதங்களை மதிப்பிட பார்வையாளர்கள் குழுவை நியமித்ததாக கூட அறிவிப்பு இல்லை. எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாக பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. தமிழக அரசின் சார்பில் கூட மீட்பு பணிகளை மேற்கொள்ள நிதி இதுவரை ஒதுக்கப்பட்டதாக தெரியவில்லை.


    தேவையான நிதியை உடனடியாக ஒதுக்காமல் அமைச்சர்களும், முதலமைச்சரும் அரசு அதிகாரிகள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று அறிவிப்பது ஏற்புடையதல்ல. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போய் இருக்கின்ற புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வெறுப்பையும், கோபத்தையும் தமிழக அரசு சம்பாதித்து கொண்டிருக்கிறது.

    உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவில்லை என்றால் வி‌ஷக் காயச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்ற தமிழகம், கஜா புயலால் அழிவை சந்தித்திருக்கின்ற பகுதிகள் எதிர்பாராத அளவிற்கு உயிரிழப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

    தென்னை, மக்கா சோளம், கண்வலி விதை போன்ற அனைத்து விவசாய பயிர்களும் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரைமட்டமாயிருக்கிறது. அதை பற்றி தமிழக அரசிடமிருந்து எந்த இழப்பீடு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படாததால் விவசாயிகளின் வேதனையின் அளவு அதிகரித்திருக்கிறது.

    அனைத்து கட்சி தலைவர்களும் முதல் நாளில் பாராட்டியதை கேட்டு தமிழக அரசு கொஞ்சம் அசந்துவிட்டதோ... என்ற சந்தேகம் எழுகிறது. விழித்தெழுங்கள் கடமையை செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNGovt #Gajacyclone #Eswaran
    உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தினால் இன்றைக்கு டெங்கு போன்று காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியாத ஒரு சூழ்நிலை நிலவுவதாக ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். #DengueFever
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி கொ.ம.தே.க. ஆலோசனை கூட்டம் அந்தியூரில் நடந்தது.

    இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தகுந்த நேரத்தில் தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குவதுதான் பொது மக்களுடைய உரிமைகளை பாதுகாப்பதாகும். தமிழகத்தில் எந்த தேர்தலாக இருந்தாலும் அது சுயநலத்தோடு தள்ளிப்போடப்படுகிறது என்ற ஐயம் இன்றைக்கு மக்களிடையே இருக்கிறது.

    ஆண்டுக்கணக்கில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது, திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்கள் மழையை காரணம் காட்டி ஒத்தி வைத்திருப்பது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற தொகுதிகளில் ஓராண்டு ஆகப்போகிறது ஆனால் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை, மக்கள் பிரதிநிதிகள் இல்லாமலேயே அந்த தொகுதி மக்கள் அரசால் ஏமாற்றப்படுகிறார்கள் .

    உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தினால் இன்றைக்கு டெங்கு போன்று காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியாத ஒரு சூழ்நிலை நிலவுகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் இடமில்லாத அளவுக்கு இன்றைக்கு நோயாளிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

    உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால் இது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும். அந்த வகையிலே நாம் ஏமாற்றப்படுகிறோம்.

    உள்ளாட்சி தேர்தலை எந்த தாமதமும் இல்லாமல் உடனடியாக தமிழக அரசு நடத்த வேண்டும், 20 சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தலை தாமதப்படுத்தாமல் உடனடியாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.

    சிவகாசியில் அனைத்து பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கிறது. தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். அரசு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தாலும் ஒரு நிரந்தரமான தீர்வு கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறது. அடுத்த வருடம் என்ன நடக்கும், சிவகாசி தொழிற்சாலைகள் பட்டாசுகளை உற்பத்தி செய்வதா? வேண்டாமா? என்று எந்தவிதமான தெளிவும் இல்லாமல் இன்றைக்கு தொழிற்சாலையை மூடுகின்ற நிலைக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள்.

    தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் போடப்பட்ட வழக்குகள் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு இந்தியா முழுவதும் இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வழக்கு போடப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் பட்டாசு வெடித்ததற்காக 2,400 பேர் மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது

    பவானி ஆற்றில் கலக்கின்றன சாயக்கழிவு தொடர்ந்து கலந்து கொண்டே இருக்கிறது.

    இவ்வாறு ஈஸ்வரன் கூறினார். #DengueFever
    சினிமாவில் பேசுகின்ற வசனங்களை பார்த்து ஒரு பெரிய கட்சி பயப்படுவது வேடிக்கையாக உள்ளது என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #Eswaran #Sarkar
    ஈரோடு:

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:-

    சினிமாவில் பேசுகின்ற வசனங்களை பார்த்து ஒரு பெரிய கட்சி பயப்படுவது வேடிக்கையாக உள்ளது. இவர்கள் இப்படி பேசி பேசியே அந்த படங்களை விளம்பரப்படுத்துகின்றனர்.

    இதற்கு முன்னரும் விஜய் நடித்த மெர்சல் படம் பற்றி விமர்சனம் செய்து அந்த படம் பிரபலமானது.

    தமிழகம் முழுவதும் தீபாவளி அன்று தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

    ஏனென்றால் பட்டாசு வெடித்தவர்கள் சாதாரண மக்கள்தான். நேர கட்டுப்பாட்டால் ஏற்கனவே பட்டாசு வியாபாரிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

    கோமாரி நோயால் ஆடு மாடுகள் தாக்கப்படுவது அதிகமாக உள்ளது. கோமாரி நோயால் தாக்கப்பட்டு இறந்த கால்நடைகளுக்கு முறையாக இழப்பீடு தொகை வழங்கப்படுவதில்லை.

    உலக முதலீட்டாளர் மாநாடு ஜனவரியில் நடைபெற முயற்சி நடந்து வருகிறது. அதேசமயம் தற்போது செயல்பட்டு வரும் பல தொழில்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் அரசு தனி குழு அமைக்க வேண்டும்.

    மாசு ஏற்படுகிறது என்று சொல்லிதான் தீபாவளிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆனால் வாகன மாசு, தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்படும் மாசு ஆகியவற்றை பற்றி கண்டு கொள்வதில்லை.


    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு கொங்கு மண்டல சாயக் கழிவுகளை அகற்றும் வகையில் ரூ. 700 கோடி மதிப்பில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் குழாய் அமைத்து நடுக்கடலில் விடப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.

    ஆனால் இன்றுடன் 7ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த வாக்குறுதி என்ன ஆனது? உடனடியாக இந்த திட்டத்தை அரசு செயல்படுத்த முன்வர வேண்டும்.

    இவர் அவர் கூறினார். #Eswaran #Sarkar
    ×