search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்"

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே 3 குழந்தைகளுடன் தாய் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த வாய்மேடு கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது38). இவரது மனைவி சாந்தி(32). இவர்களுக்கு 6ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து கமலேஷ், ஹரீஸ், பிரியதர்சினி ஆகிய 3 குழந்தைகள் உள்ளன.

    இந்த நிலையில் சாந்தி தனது 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு முத்துப்பேட்டை அடுத்த ஜாம்பு வானோடை மேலக் காடு கிராமத்தை உள்ள தனது தாய் மாமன் ராஜேந்திரன் வீட்டிற்கு வந்து ஒருவாரம் தங்கினார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 3 குழந்தைகளுடன் சாந்தி மாயமானார்.

    இதனையடுத்து சாந்தி மற்றும் 3 குழந்தைகளையும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் ராஜேந்திரன், மாயமான சாந்தி மற்றும் 3 குழந்தைகளையும் கண்டு பிடித்து தருமாறு முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் ஜாம்பு வானோடை கொல்லக்காடு பகுதியை சேர்ந்த வீரையன் மகன் கார்த்தி என்பவர் 3 குழந்தைகளுடன் சாந்தியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மண்எண்ணெய் ஸ்டவ் வெடித்து தீப்பிடித்ததில் தாய் மற்றும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர். #StoveBursts
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள  பெருங்காப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா. இவர் இன்று காலை மண்எண்ணெய் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது ஸ்டவ் திடீரென வெடித்துச் சிதறி தீப்பிடித்தது. ரேகாவும், அவரது 10 மாத ஆண் குழந்தை நவீனும் நெருப்பில் சிக்கிக்கொண்டனர். இதில் பலத்த தீக்கயம் அடைந்த தாயும், குழந்தையும் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தனர்.



    இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். #StoveBursts
    சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா சிக்னல் அருகே தண்ணீர் லாரி மோதிய விபத்தில் தாய், மகன் பலியாயினர்.
    சென்னை:

    சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் பிளாசா சிக்னல் அருகே இன்று மதியம் தனியார் ஓட்டலுக்கு சொந்தமான தண்ணீர் லாரி வேகமாக சென்றது.

    அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிளில் மீது லாரி மோதியது. அதில் பயணம் செய்த 2 பேர் லாரியின் அடியில் சிக்கி உடல் நசுங்கி பலியானார்கள்.

    அவர்களது பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. இருவரும் தாய்-மகன் என்று கூறப்படுகிறது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ஜெயங்கொண்டம் தா.பழூர் அருகே நாய்குட்டிக்கு தாயாக மாறிய குரங்கை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே கூத்தங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் குட்டி போட்டு 5 நாட்களே ஆன கண் திறக்காத நாய்க்குட்டியை குரங்கு ஒன்று 3 நாட்களாக தூக்கி கொண்டு தனது குழந்தையை போல் பார்த்து கொள்கிறது. மேலும் அந்த குட்டியுடன் பல்வேறு இடங்களுக்கு செல்கிறது. அப்பகுதியில் உள்ள வீட்டு மாடி, ஓட்டு வீடுகளில் மேலே நாய்க்குட்டியை வைத்து கொண்டு, அந்த குரங்கு சுற்றி வருகிறது. மேலும் அந்த நாய் குட்டிக்கு குரங்கு பால் கொடுத்து, மடியில் போட்டு பேன் பார்க்கிறது. இதையடுத்து ஒரு குழந்தையை போல் நாய்க்குட்டியை தோளில் போட்டு தூங்க வைப்பதும், நாய்க்குட்டியை தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் சுற்றி திரிவது, மரங்களில் தாவி கொண்டிருக்கின்றது. மேலும் அந்த குரங்கு, நாய்க்குட்டியை பார்த்து கொள்ளும் பாவனைகளை மக்கள் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் பார்த்து வருகின்றார்கள்.

    இந்நிலையில் அந்த குரங்கிற்கும், கிராம மக்கள் தினமும் ரொட்டி மற்றும் சாதம் கொடுத்து ஆச்சரியமாக பார்த்து ரசித்து வருகின்றனர். விலங்குகளுக்குள் இருக்கும் நேயம் மனிதர்களிடத்தில் இருப்பதில்லை. தாயை பிரிந்து தவிக்கும் கண் திறக்காத நாய்க்குட்டியை அனைத்தபடி தாய்பால் மற்றும் பாசத்தையும் ஊட்டி வளர்க்கும் குரங்கு ஒன்று தா.பழூர் பகுதியில் சுற்றி வருவதை பொதுமக்கள் பார்த்து அதிசயித்து வருகின்றனர். குரங்கும், நாயும் எதிரிகளாக இருந்த காலம் மாறி தற்போது மனிதனுக்கு மாறாக மனித நேயத்துடன் இனக்கமாகவும் இருக்கின்றன. இதனை பார்த்த பின் மனிதர்கள் மத்தியில் சாதி, மதம், இனம் கடந்த மனித நேயம் காணப்படுமா? என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வியந்து பார்க்கின்றனர். 
    கேரளா மாநிலத்தில் மகன் இறந்த செய்தியை கேட்ட தாய் அதிர்ச்சியில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் காவுமடம் பாலா பகுதியை சேர்ந்தவர் மேத்யூ. இவரது மனைவி ஆனி அம்மா (வயது 65). இவர்களது மகன் பெபி மேத்யூ (48). திருமணமாகவில்லை.

    நேற்று மாலை பெபி மேத்யூக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிசிச்சை பலனின்றி பெபி மேத்யூ பரிதாபமாக இறந்தார். மகன் இறந்தசெய்தியை அங்கு நின்ற தாய் ஆனி அம்மாளிடம் டாக்டர் கூறினார். இதைகேட்டு அவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். உடனே ஆனி அம்மாளை அதே ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஆனி அம்மாளும் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகன் இறந்த அதிர்ச்சியில் தாய் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #tamilnews
    ஜப்பானில் உள்ள கங்வா என்ற இடத்தில் 5 வயது பெண் குழந்தையை தாயே பட்டினி போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    டோக்கியோ:

    ஜப்பானில் உள்ள கங்வா என்ற இடத்தை சேர்ந்த இளம்பெண் யூரி (வயது 25). இவர், வாலிபர் ஒருவருடன் வாழ்ந்து வந்தார்.

    அவர்களுக்கு யுவா என்ற பெண் குழந்தை பிறந்தது. பின்னர் யூரி அந்த வாலிபரை பிரிந்து புனாட்டோ (33) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    முதல் கணவருக்கு பிறந்த யுவாவையும் தன்னுடன் வைத்து வளர்த்து வந்தார். நாளடைவில் அந்த குழந்தை மீது யூரிக்கு வெறுப்பு ஏற்பட்டது. 2-வது கணவர் புனாட்டோவும் வெறுப்பை காட்டினார்.

    அவர்கள் இருவரும் குழந்தை யுவாவை கொடுமைப்படுத்தினார்கள். தற்போது அவளுக்கு 5 வயது ஆகி இருந்தது. தொடர்ந்து கொடுமைப்படுத்தியதுடன் உணவும் கொடுக்காமல் பட்டினி போட்டனர். இதில், அந்த குழந்தை இறந்து விட்டது.

    இதன் பிறகு போலீசுக்கு புனாட்டோ போன் செய்து தனது குழந்தை திடீரென மயங்கி விழுந்து விட்டதாகவும், இதய துடிப்பு இல்லை என்றும் கூறினார்.

    போலீசார் அங்கு வந்து பார்த்தனர். அந்த குழந்தை இறந்து கிடந்தது. 5 வயதில் குழந்தைகள் 20 கிலோ வரை எடை இருக்கும். ஆனால், இந்த குழந்தை 12 கிலோதான் எடை இருந்தது. மிகவும் ஒல்லியாக இருந்தது. எனவே, சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    யுவாவின் நோட்டு புத்தகத்தை பார்வையிட்டனர்.

    அப்போது ஒரு இடத்தில் தனது தாயும், வளர்ப்பு தந்தையும் தன்னை தினமும் கொடுமைப்படுத்துகிறார்கள். இதை யாராவது தடுத்து நிறுத்துங்கள் என்று எழுதப்பட்டு இருந்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய போது, கணவன் - மனைவி இருவருமே அந்த குழந்தைக்கு உணவு வழங்காமல் பட்டினி போட்டு கொன்றதாக கூறினார்கள். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். #Tamilnews
    கணவரின் குடி பழக்கத்தால் 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள பஞ்சம்பட்டியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவரது மனைவி டெய்சி மேரி (வயது27). இவர்களுக்கு மரியரீனா (8) என்ற மகளும், மரிய டெல்சன் (6) என்ற மகனும் உள்ளனர்.

    கூலி வேலை பார்த்து வரும் வேளாங்கண்ணி குடிபழக்கத்திற்கு அடிமையானவர். தினமும் குடித்து விட்டு மனைவியிடம் வீட்டு செலவுக்கு பணம் தராமல் இருந்து வந்தார். மேலும் போதையில் மனைவியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார்.

    இதனால் டெய்சிராணி தற்கொலை செய்ய முடிவு செய்தார். தான் இறந்தபிறகு குழந்தைகளை யாரும் கவனிக்க மாட்டார்கள் என நினைத்து அவர்களுக்கும் வி‌ஷத்தை கொடுத்து தானும் குடித்தார். இன்று அதிகாலை 3 பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

    இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து சின்னாளபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    நாகர்கோவிலில் தனது மகள் விபசார கும்பலிடம் சிக்கியதாக அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் தாயார் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

    அதில் எனது மகளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருடன் திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் நடத்தினோம். ஆனால் எனது மகள் திடீரென திருமணம் வேண்டாம் என கூறி விட்டு எங்கள் வீட்டில் இருந்து வெளியேறி விட்டாள். தற்போது அவள் விபசார கும்பலின் பிடியில் சிக்கி உள்ளார். அவரை மீட்டு என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    மேலும் அவரது மகள் சில வாலிபர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் மனுவுடன் சேர்த்து கொடுத்திருந்தார். அந்த மனுவில் கல்லூரி மாணவிகளின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களை ஒரு கும்பல் விபசாரத்தில் ஈடுபடுத்துவதாகவும், அந்த கும்பலிடம் தான் தனது மகள் சிக்கியிருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

    இதனால் இந்த புகார் குறித்து விரைந்து விசாரிக்க போலீஸ் சூப்பிரண்டு, அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தாகுமாரி அதிரடி விசாரணையில் இறங்கினார்.

    மாணவி தங்கியிருக்கும் அவரது உறவினர் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது அந்த மாணவி, தாயார் அளித்த புகாரை மறுத்ததோடு, தாயார் பற்றி பரபரப்பு தகவல்களை தெரிவித்தார்.

    எனது தாயாருக்கும், எனக்கு பார்த்த மாப்பிள்ளைக்கும் ஏற்கனவே கள்ளத்தொடர்பு உள்ளது. அவர்கள் சந்தோ‌ஷமாக இருக்க என்னை பகடை காயாக்க முயல்கிறார்கள். எனது தாயாரும், ஆட்டோ டிரைவரும் உல்லாசமாக இருப்பதை நானே பல தடவை நேரில் பார்த்துள்ளேன்.

    எனவே தான் திருமணம் வேண்டாம் என்று கூறினேன். அவர்களின் தொல்லையில் இருந்து தப்பிக்கவே எனது உறவினர் வீட்டிற்கு வந்தேன். ஆனால் என் தாயாரும், அவரது கள்ளக்காதலன் குடும்பத்தினரும் என்னை அவர்கள் வழிக்கு கொண்டு வர அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள்.

    எனது தாயார் கூறும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. இது வேண்டுமென்றே கூறப்பட்ட பொய் புகார். நான் என் தாயாருடன் செல்லமாட்டேன்.

    நான் ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்தேன். அவருடன் சேர்ந்து சில புகைப்படங்கள் எடுத்துள்ளேன். அந்த புகைப்படங்கள் என் செல்போனில் இருந்தது. அந்த படங்களைதான் என் தாயார் ஆபாச படங்கள் என்று கூறி கொடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த மாணவி அவரது தாயார் பற்றி இதே புகாரை தெரிவித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அந்த புகாரை விசாரித்த போலீசார், மாணவியை தாயாரிடம் இருந்து பிரித்து உறவுப்பெண்ணுடன் அனுப்பி வைத்திருந்தனர். இந்தநிலையில் மாணவி விபசார கும்பலிடம் சிக்கி இருப்பதாக அவரது தாயார் தெரிவித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாணவியின் தாயார் மற்றும் அவருக்கு ஆதரவாக இருக்கும் பெண் ஆகியோரிடமும் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அப்போது மாணவியுடன் வாலிபர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளது.#tamilnews
    வாடிப்பட்டி அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக தாய்- கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம், இவரது மனைவி உமாராணி (வயது 29) இவர்களுக்கு ஒரு மகள் உள்ளாள். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் உமா ராணிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிவமூர்த்தி (22) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. சிவமூர்த்தி உமாராணியின் மகளையும் பாலியல் தொந்தரவு செய்ய தொடங்கினார். இதனால் சிறுமி தனது அத்தை நல்லம்மாள் தேவியிடம் நடந்த சம்பவங்களை கூறி அழுதாள்.

    இந்நிலையில சிவமூர்த்தி அந்த சிறுமியை திருமணம் செய்யவும் முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு உமாராணியும் உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து கேட்டதற்கு நல்லம்மாள் தேவியை சிவமூர்த்தியும் உமாராணியும் மிரட்டினர்.

    இதுகுறித்து வாடிப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரெஜினா, போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாய் உமாராணி, கள்ளக்காதலன் சிவமூர்த்தி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.#tamilnews
    அரக்கோணத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்ட மகனுடன் வி‌ஷம் குடித்த தாய் உயிரிழந்தார். அரசு ஆஸ்பத்திரியின் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் ரத்தினம் தெருவை சேர்ந்தவர் வள்ளி (வயது 48). கணவரை இழந்தவர். இவருடைய மகன் நாகராஜன் (வயது 28). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்தார். அப்போது, கம்பெனியில் ஏற்பட்ட ஒரு விபத்தில் நாகராஜனுக்கு முதுகெலும்பு முறிந்ததுடன், உடல் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    அவரை குணப்படுத்த அந்த நிறுவனம் ரூ.95 லட்சம் மருத்துவ செலவை ஏற்றது. தீவிர சிகிச்சை அளித்தும் நாகராஜனை குணப்படுத்த முடியவில்லை. இதனால் நாகஜராஜனும், அவர் தாயும் மனமுடைந்தனர். நேற்றிரவு வீட்டில் இருந்த நாகராஜனும், அவரது தாயும் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    வி‌ஷம் குடித்ததில் வாயில் 2 பேருக்கும் வாயில் நுரை தள்ளியது. வள்ளி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். நாகராஜன் மயக்க நிலையில் கிடந்தார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம், பக்கத்தினர் சந்தேகமடைந்து வள்ளி வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

    அப்போது, வி‌ஷம் குடித்த நிலையில் கிடந்த 2 பேரையும் பார்த்து அதிர்ந்து போயினர். உடனடியாக அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். அங்கு பரி சோதித்த டாக்டர்கள், வள்ளி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். நாகராஜன் கவலைக்கிடமாக இருந்தார்.

    இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


    சுரண்டையில் தாய் இறந்த துக்கத்தில் மகனும் பரிதாபமாக இறந்தார். அன்னையர் தினமான நேற்று ஒரே இடத்தில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.
    சுரண்டை:

    நெல்லை மாவட்டம் சுரண்டையை சேர்ந்தவர் கமலா மிஷியர் (வயது 69). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 3-வது மகனான குட்வின் (40) வெளிநாட்டில் கப்பல் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கமலா மிஷியர் இவர் மீது அதிக பாசம் வைத்து இருந்தார். குட்வினும், தாயாரிடம் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குட்வின் விடுமுறையில் ஊருக்கு வந்தார். இந்த நிலையில் கமலா மிஷியருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே நேற்று முன்தினம் நெல்லையில் உள்ள ஒரு ஸ்கேன் மையத்துக்கு குட்வின் தனது தாயாரை காரில் அழைத்து சென்றார். அங்கு ஸ்கேன் எடுத்த பிறகு ஊருக்கு புறப்பட தயாரானார்கள்.

    அப்போது கமலா மிஷியர் திடீரென மயங்கி விழுந்தார். டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டதாக கூறினர்.

    பின்னர் கமலா மிஷியர் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. தாயார் உடலை பார்த்து அழுதபடியே குட்வின் இருந்தார். அவர் உடல் சோர்ந்து காணப்பட்டார்.

    இதற்கிடையே கமலா மிஷியர் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. திடீரென குட்வின் மயங்கி விழுந்தார். உடனே அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தாய் இறந்த துக்கம் தாங்காமல் குட்வின் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.

    தாய்-மகன் இருவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது. அன்னையர் தினமான நேற்று தாய்- மகன் இருவரது உடல்களும் ஒரே இடத்தில் அருகருகே அடக்கம் செய்யப்பட்டன.

    இறந்த குட்வினுக்கு மனைவியும், 3 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். #tamilnews
    ×