search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவுன்"

    ரெயில்வே ஊழியரின் மனைவியிடம் 5 பவுன் சங்கிலியை பறித்த வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பொன்மலைப்பட்டி:

    திருச்சி பொன்மலை தங்கேஸ்வரிநகரை சேர்ந்தவர் ஜான்பிரிட்டோ அல்மேரா. ரெயில்வே ஊழியரான இவருடைய மனைவி அனிதா மரியா (வயது 40). இவர் நேற்று காலை வீட்டில் இருந்து மொபட்டில் டி.வி.எஸ்.டோல்கேட் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அதில் பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர், திடீரென அனிதாமரியா கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். ஆனால் அதற்குள் வாலிபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இது பற்றி பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொன்மலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து வாலிபர்கள் தப்பி சென்ற பகுதியில் வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, 2 பேரும் யார்?. எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணை நடத்தி அவர்களை வலைவீசி தேடி வருகின்ற னர்.

    * திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை மத்திய பஸ் நிலையத்துக்கு வந்த ஒரு பஸ்சில் 50 வயது மதிக்கத்தக்க நபர் பயணம் செய்து வந்தார். மத்திய பஸ் நிலையம் வந்ததும் அந்த நபர் பஸ்சில் இருந்து கீழே இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை கண்ட அந்த பகுதியினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்தபோது, அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    *தமிழ்நாடு திருநங்கை நலவாரிய அலுவல் சாரா மாநில உறுப்பினர் கஜோல் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேற்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “கடந்த 13-ந் தேதி எங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசு அதிகாரி ஒருவரை சந்தித்து மனு அளித்தபோது, அவர் என்னை தகாத வார்த்தையால் திட்டி பேசினார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். ஆகவே அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.

    *திருச்சி புத்தூர் குளத்துமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (40). போலீஸ் காரரான இவர் தொட்டியம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய வீட்டின் அருகே வசித்து வருபவர் கார்த்திக்(27), எலக்ட்ரீசியன். இவர் தனது மோட்டார் சைக்கிளை மணிகண்டன் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தாராம். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் புத்தூர் மந்தை அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திக் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மணிகண்டன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    * திருச்சி கோட்டை பகுதியில் உள்ள இ.பி.ரோடு தேவதானத்தில் ஒரு தனியார் தண்ணீர் கம்பெனி அருகே முட்புதருக் குள் கேட்பாரற்ற நிலையில் 10 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. இதை அறிந்த கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாகனங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 
    காரைக்குடி அருகே பெண் அதிகாரி வீட்டில் 13 பவுன் நகை திருட்டு போனது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திரிபுரசுந்தரி (வயது 44). இவர் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்குவதற்கு முன்பு தனது நகைகளை கழற்றி மேஜையின் மீது வைத்து விட்டு அயர்ந்து தூங்கிவிட்டார்.

    காலையில் எழுந்து பார்த்த போது மேஜை மீது வைத்திருந்த 13 பவுன் நகைகளை காணவில்லை இரவில் யாரோ ஜன்னல் வழியாக அதனை திருடி சென்றிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து திரிபுரசுந்தரி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 
    பரமத்தி வேலூர் மற்றும் வேலகவுண்டம்பட்டி பகுதிகளில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 38½ பவுன் நகைகளை மீட்டனர்.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவுப்படி, பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி மேற்பார்வையில், பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி, நல்லூர் மற்றும் வேலகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்களை கண்டுபிடிப்பதற்காக பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் வேலகவுண்டம்பட்டி இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மரவாபாளையம் பஸ் நிறுத்தம் அருகில் பரமத்தி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதையடுத்து அவர்களை பிடித்து தீவிர விசாரணை மேற் கொண்டனர்.

    இதில் அவர்கள் கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி மகன் அசோக் (வயது20), அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் தினகரன் (23), பொன்னையன் மகன் பாரதிராஜா (28) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் கடந்த மார்ச் மாதம் 18-ம் தேதி நல்லூர் பகுதியில் செக்குபட்டி சாலையில் மொபட்டில் சென்ற வளர்மதி என்ற பெண்ணிடம் 4 பவுன் தங்க சங்கிலியையும், பரமத்தி அருகே உள்ள புளியம்பட்டி பகுதியில் மொபட்டில் சென்ற சுகந்தி என்ற பெண்ணிடம் 8½ பவுன் தாலிக்கொடியையும், கடந்த ஏப்ரல் மாதம் கரூர் மாவட்டம் ஏம்பூர் பெட்ரோல் பங்க் அருகே மொபட்டில் சென்ற ஒரு பெண்ணிடம் 7½ பவுன் தாலிக்கொடியையும், கரூர் மாவட்டம் குட்டக்காடு அருகே மொபட்டில் சென்ற ஒரு பெண்ணிடம் 6 பவுன் தாலிக்கொடியையும், கடந்த 4-ம் தேதி பரமத்தி அருகே காரைக்கால் பிரிவு சாலையில் மொபட்டில் சென்ற கணவன், மனைவியை கத்தியை காட்டி மிரட்டி 7½ பவுன் தாலிக்கொடி ஆகியவற்றை பறித்துச்சென்றதும் தெரிய வந்தது.

    இதேபோல நேற்று வேலகவுண்டம்பட்டி இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் மணியனூர் பிரிவு சாலை அருகே வாகன சோதணையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திண்டுக்கல் போஜனம்பட்டி வடமதுரை பகுதியைச் சேர்ந்த தாசப்பன் மகன் செக்குராஜா (42), அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் சுந்தர்ராஜன் (25) என்பதும், இவர்கள் இருவரும் கடந்த மார்ச் மாதம் 11-ம் நல்லூர் செம்மண்குழிகாடு அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடியையும், கடந்த மார்ச் மாதம் 18-ம் தேதி நல்லூர் அருகே செக்குபட்டி சாலையில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து பரமத்தி, நல்லூர் மற்றும் வேலகவுண்டம்பட்டி பகுதியில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட அசோக், தினகரன், பாரதிராஜா, செக்குராஜா மற்றும் சுந்தர்ராஜன் ஆகிய 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சுமார் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 38½ பவுன் நகைகளையும் மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் கைதான 5 பேரையும் போலீசார் சேலம் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
    வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    மங்களமேடு:

    மங்களமேட்டையை அடுத்துள்ள சின்னாறு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 32). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இவரும், இவரது குடும்பத்தினரும் நேற்று முன்தினம் மதியம் துறையூரில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்கநிகழ்ச்சிக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை கோவிந்தராஜ் வீட்டின் அருகே உள்ளவர்கள் கோவிந்தராஜின் வீட்டை பார்த்தபோது அதன் முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    மேலும் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டனர். இதுகுறித்து அவர்கள், கோவிந்தராஜிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்த நிலையில், பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ் இதுகுறித்து மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    காரிமங்கலம், அரூரில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் நகை, பணத்தை திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மல்லிக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 60). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு நேற்று வீட்டுக்கு வந்தார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.

    இதேபோல் பொம்மஅள்ளி எம்.ஜி. ஆர். நகர் மேட்டுப் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (32). பெட்டிக்கடைக்காரர். நேற்று முன்தினம் மர்ம ஆசாமிகள் இவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ.28,500 திருடி சென்றுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் 2 பேரும் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    அரூர் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவர் திரு.வி.க. நகரில் ஐஸ்கிரீம் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை கண்ணன், அவருடைய மனைவி ஜீவா ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்று விட்டனர். மதியம் சாப்பிடுவதற்காக அவர்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 6 பவுன் நகை, ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கண்ணன் அரூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
    நாமக்கல்லில் ஆவின் பாலக விற்பனையாளரின் வீட்டில் நகைகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல்-திருச்செங்கோடு சாலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 48). இவர் நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 7-ந் தேதி கணேசன் பால் விற்பனை பணத்தை வங்கியில் செலுத்த சென்றிருந்தார். அவரது மனைவி மல்லிகா ரேஷன் கடைக்கு சென்று இருந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டு போனது.

    இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின்பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் தாரமங்கலத்தை சேர்ந்த மாதேஸ் மகன் ரமேஷ் (25) என்பவர் கணேசனின் வீட்டில் 10 பவுன் நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று ரமேஷை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 10 பவுன் நகைகளை மீட்டனர். மேலும் திருட்டுக்கு அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ரமேஷ் மீது தாரமங்கலம், நாமக்கல் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 
    குடவாசல் அருகே ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் 5½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    குடவாசல்:

    குடவாசல் அருகே உள்ள மணக்கால் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய மனைவி மஞ்சுபாரதி (வயது 33). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ஸ்கூட்டரில் வடகண்டம் பாலம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், மஞ்சுபாரதி கழுத்தில் கிடந்த 5½ பவுன் சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுபாரதி, திருடன், திருடன் என்று கத்தினார். இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து மஞ்சுபாரதி குடவாசல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தானமேரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
    அதியமான்கோட்டை அருகே ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    நல்லம்பள்ளி:

    தர்மபுரியை அடுத்த அதியமான்கோட்டை சத்யா நகரை சேர்ந்தவர் தனபால் (வயது 34). இவர் தொப்பூர் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (30). இவர் எலுமிச்சனஅள்ளி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் வீட்டை பூட்டை பூட்டி விட்டு பள்ளிகளுக்கு சென்று விட்டனர். மாலை தனபால் வீட்டுக்கு வந்த போது பீரோவில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை பார்த்த போது அதில் வைத்திருந்த 5 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் மொட்டை மாடி வழியாக உள்ளே சென்று நகையை திருடிச்சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டு போன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.
    பெரம்பலூரில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அண்ணாமலையார் தெருவை சேர்ந்தவர் வரதராஜ். இவருக்கு விக்டோரியா மகாராணி (வயது 40) என்கிற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றிய வரதராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். விக்டோரியா மகாராணி பெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    கணவர் இறந்து விட்டதால் தனது மகன்களுடன் அண்ணாமலையார் தெருவில் உள்ள தனக்கு சொந்தமான 2 தளங்களை கொண்ட வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி விக்டோரியா மகாராணி வீட்டை பூட்டிவிட்டு பள்ளியில் இருந்து கல்வி சுற்றுலாவிற்கு தனது மகன்களையும் அழைத்து கொண்டு சென்று விட்டார். பின்னர் சுற்றுலா முடிந்து நேற்று அதிகாலை தான் அவர்கள் திரும்பினர்.

    அதிகாலை நேரம் என்பதால் விக்டோரியா மகாராணி மகன்களுடன் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கினார். இதையடுத்து நேற்று காலையில் அவர் தனது வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு விக்டோரியா மகாராணி அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறைகளின் கதவுகள் அனைத்தும் திறந்து கிடந்தது. மேலும் அறைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. ஒரு அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 4½ பவுன் நகை மற்றும் ரூ.23 ஆயிரம் திருட்டு போயிருந்தது.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் விரல்ரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் விரல் ரேகைகள் தெரியாமல் இருப்பதற்காக, அதனை தண்ணீர் ஊற்றி அழித்து விட்டு தப்பி சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அந்தப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருட்டு சம்பவம் நடந்த வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களும் சிதறி கிடந்தன. மேலும் குளிர்சாதன பெட்டியும் திறந்திருந்தும், அதில் வைக்கப்பட்டிருந்த கேக் ஆகியவை காணாமல் போயிருந்தது. கியாஸ் அடுப்பை பற்ற வைத்தற்கான அறிகுறிகளும் காணப்பட்டது. எண்ணெய் கீழே தரையில் கொட்டியிருந்தது.

    இதனால் மர்ம நபர்கள் நகை-பணத்தை திருடிவிட்டு வீட்டில் சமைத்து சாப்பிட்டு சென்றிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    இளையான்குடி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய்-மகளிடம் நகைகளை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
    இளையான்குடி:

    இளையான்குடி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (வயது 57). இவர்களது மகள் அனிதா (28). இவரது கணவரும், தந்தை கேசவனும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். இதனால் அனிதா தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு நிவேதா என்ற மகள் உள்ளாள்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு தமிழ்ச்செல்வி, தனது மகள், பேத்தியுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகை மற்றும் அனிதா அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்தனர். அப்போது கண்விழித்த 2 பேரும் நகையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு திருடர்கள் என்று கூச்சல் போட்டனர். இதனால் அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்ம ஆசாமிகள் நகைகளை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.

    மர்ம ஆசாமிகள் நகைகளை பறித்ததில் தாயும், மகளும் பலத்த காயமடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் பறித்த நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இளையான்குடி பகுதியில் சமீப காலமாகவே வழிப்பறி, நகை பறிப்பு, வீடுபுகுந்து திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

    எனவே திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
    திருச்சி அருகே வீட்டிற்குள் புகுந்த 20 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கே.கே.நகர்:

    திருச்சி சுப்பிரமணியபுரம் ஹைவேஸ் காலனியை சேர்ந்தவர் ஜார்ஜ் கிரிபெமன்தாஸ். இவர் சம்பவத்தன்று இரவு சாப்பிட்டு முடித்துவிட்டு வீட்டில் குடும்பத்துடன் தூங்கினார். பின்னர் மறுநாள் அதிகாலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் படுக்கை அறையில் வைத்து இருந்த அவருடைய தாயாரின் கைப்பை திருட்டு போய் இருந்தது. அந்த பையில் 20 பவுன் தங்க நகைகள் இருந்தன.

    உடனே இது குறித்து அவர் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்கு பதிவு செய்து, வீட்டுக்குள் புகுந்து கைப்பையில் இருந்த 20 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். 
    தேவகோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 16 பவுன் நகையை திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை காந்தி ரோட்டில் வசிப்பவர் அசன்மைதீன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரசிதாபானு. இவர் தந்தை இறந்து விட்டதால், வீட்டை பூட்டி விட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்பு வீட்டிற்கு வந்த ரசிதாபானு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த பொருட்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தது.

    மேலும் அதில் இருந்த 16 பவுன் நகைகள் திருடு போயிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அவர் தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.
    ×