search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைப்பு"

    சென்னை நகரில் தண்ணீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ளது. ஏரிகளில் நீர் இருப்பு குறைந்ததால் கடந்த மாதம் முதலே வீடுகளுக்கு சப்ளை செய்யப்பட்ட மெட்ரோ வாட்டர் பாதியாக குறைக்கப்பட்டது.
    சென்னை:

    கடந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கிய சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் முழுவதும் வறண்டு விட்டன. பூண்டி, புழல் ஏரிகளில் உள்ள தண்ணீரும் இன்னும் ஒரு வாரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

    இதனால் சென்னை நகரில் தண்ணீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ளது. ஏரிகளில் நீர் இருப்பு குறைந்ததால் கடந்த மாதம் முதலே வீடுகளுக்கு சப்ளை செய்யப்பட்ட மெட்ரோ வாட்டர் பாதியாக குறைக்கப்பட்டது.

    தற்போது பைப்புகளில் வினியோகிக்கப்படும் தண்ணீர் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். போர்வெல்களில் நீரும் இல்லாததால் லாரி, டிராக்டரில் சப்ளை செய்யப்படும் தண்ணீரையே எதிர்பார்த்து காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட வட சென்னை பகுதியில் பைப்புகளில் தண்ணீர் வருவது நின்று விட்டது.

    கொளத்தூர் பகுதியில் வாரத்துக்கு ஒருமுறை மட்டும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. பெருங்குடி பகுதியில் ஒருநாள் விட்டு ஒருநாள் நீர் சப்ளையாகிறது. அம்பத்தூரில் வாரத்துக்கு ஒருநாள் மட்டும் ½ மணி நேரமே தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

    கொட்டிவாக்கத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் 2 மணி நேரம், கோடம்பாக்கத்தில் 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வருகிறது.

    ராயபுரம், திருவொற்றியூர் பகுதியில் டேங்கர் லாரிகளில் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்து வருகிறார்கள். நங்கநல்லூரில் வாரத்துக்கு ஒருமுறை ¾ மணி நேரம் மட்டும் தண்ணீர் சப்ளையாகிறது.

    முறையாக குடிநீர் வராததால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பகுதி வாரியாக 800 லாரிகள் மூலம் 8 ஆயிரத்து 400 முறை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    ரெட்டேரி ஏரியில் இருந்து அடுத்த மாதம் முதல் தண்ணீர் எடுத்து வினியோகம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    மேலும் பெரும்பாக்கம், அயனம்பாக்கம் ஏரி தண்ணீரையும் குடிநீருக்கு பயன்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் நம்பி உள்ளனர்.

    நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை ஏமாற்றிய நிலையில் முல்லைப் பெரியாறு உள்பட அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர் திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி 170 கன அடியாக குறைக்கப்பட்டது. தற்போது பெரியாறு அணையின் நீர் மட்டம் 113.95 அடியாக குறைந்துள்ளது.

    மேலும் நீர் பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்து விட்டதால் அணைக்கு 32 கன அடி நீரே வருகிறது. இதனால் தண்ணீரை சேமிக்கும் பொருட்டு இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த நீர் தேனி மாவட்ட குடிநீருக்காக பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் திறப்பு குறைக்கப் பட்டதால் உத்தமபாளையம் பகுதியில் முல்லைப் பெரியாறு வறண்டு காணப்படுகிறது.

    வைகை அணை நீர் மட்டம் 45.12 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 34.05 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 96.26 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து கொண்டே வந்தது. இருந்தபோதும் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்திற்காகவும் வைகை அணையின் நீர் மட்டத்தை உயர்த்து வதற்காகவும் தொடர்ந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. முதல்போக சாகுபடி முடிவடைந்து 2-ம் போக சாகுபடியில் ஈடுபட்டுள்ள பள்ளத்தாக்கு விவசாயிகள் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இதனையடுத்து இன்று காலை முதல் பெரியாறு அணையில் இருந்து திறக்கும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. நேற்று வரை 467 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 300 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 118.25 அடியாக உள்ளது. நீர்வரத்து 48 கன அடி. இருப்பு 2312 மி.கன அடி.

    வைகை அணையின் நீர்மட்டம் 55.03 அடி. வரத்து 87 கன அடி. திறப்பு 860 கன அடி. இருப்பு 2724 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.20 அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 95.77 அடி.

    நீர்மட்டம் சரிந்து வருவதால் வைகை அணையில் தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    கடந்த 4 ஆண்டுகளாக மழைப்பொழிவு குறைவாக இருந்ததால் வைகை அணையின் நீர்மட்டம் உயரவில்லை. இந்த ஆண்டு பருவமழை மற்றும் கஜா புயலின் தாக்கத்தினால் பலத்த மழை பெய்தது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 2-வது முறையாக 69 அடியை எட்டியது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்ட விவசாய பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 69 அடியில் இருந்து சரியத் தொடங்கிய நீர்மட்டம் தற்போது 58.86 அடியாக உள்ளது. அணைக்கு 982 கன அடி நீர் வருகிறது. நேற்று வரை 560 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் அது 460 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.50 அடியாக உள்ளது. 531 கன அடிநீர் வருகிறது. 900 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது. 54 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. 64 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    தேக்கடி 1, கூடலூர் 1.2, சண்முகாநதி அணை 1, உத்தமபாளையம் 0.6, வீரபாண்டி 4, வைகை அணை 2, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
    நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததாலும் பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் வைகை அணையில் தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. #Vaigaidam
    கூடலூர்:

    நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததாலும் பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் வைகை அணையின் நீர் மட்டம் வேகமாக குறையத் தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 63.58 அடியாக உள்ளது.

    நேற்று நீர் திறப்பு 2,170 கன அடியாக குறைக்கப்பட்டது. இன்று தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு 1,560 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 913 கன அடி நீர் வருகிறது.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 129.60 அடியாக உள்ளது. 1,217 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 450 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் சுருளி ஆறு மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    மஞ்சளாறு அணை நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. வருகிற 100 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.50 அடியாக உள்ளது. 109 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மழை எங்கும் இல்லை. #Vaigaidam

    நீர்மட்டம் குறைந்து வருவதால் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. #VaigaiDam
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை இந்த மாதத்தில் முதல் வாரத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை குறிப்பிடப்படும் படியான மழை பெய்யவில்லை.

    மேலும் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் முழு கொள்ளளவை எட்டியிருந்த வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக 64 அடியாக குறைந்தது.

    மேலும் புயல் காரணமாக கடந்த சில நாட்களில் பரவலாக மழை பெய்ததால் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு இன்று காலை முதல் குறைக்கப்பட்டது.

    நேற்று 4520 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று 2170 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுகிறது. அணைக்கு 1452 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 64.11 அடியாக உள்ளது. நீர் இருப்பு 4434 மி. கன அடி.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.10 அடி. வரத்து 1720 கன அடி. திறப்பு 450 கன அடி. இருப்பு 4504 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. அணைக்கு வரும் 223 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை நீர்மட்டம் 126.50 அடி. முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் 109 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. #VaigaiDam

    டீசல் விலை ஏற்றத்தால் மீண்டும் போக்குவரத்து கழகங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #DieselPriceHike #MTC #ChennaiBus
    சென்னை:

    டீசல் விலை உயர்வால் தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.

    இதை சமாளிக்க போக்குவரத்து கழகங்களுக்கு அரசு டீசல் மானியம் அளித்து வந்தது. இந்த மானியத்தையும் அரசு குறைத்து விட்டது. இதனால் போக்குவரத்து கழகங்கள் மேலும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன.

    இதுபற்றி தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கூறுகையில், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் டீசல் விலை ஏற்றத்தாலும், மாநில அரசின் டீசல் மானியம் குறைக்கப்பட்டதாலும் போக்குவரத்து கழகங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் பஸ் சர்வீஸ் குறைக்கப்பட்டது. அதன் பிறகு பயணிகள் வருகை அதிகரித்த நிலையில் டீசல் விலை ஏற்றத்தால் மீண்டும் போக்குவரத்து கழகங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    சென்னைக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் போக்குவரத்து கழகங்கள் புறநகர் பஸ்களின் எண்ணிக்கையை 1000 வரை குறைத்து விட்டன. இதேபோல் சென்னையில் மாநகர பஸ்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு உள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


    போக்குவரத்து கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து லிட்டருக்கு ரூ.16 வரை அதிகரித்து இருப்பதால் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.100 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களுக்கு ஆகும் செலவில் 27 சதவீதம் டீசலுக்கு செலவிடப்படுகிறது.

    செலவினங்களை கட்டுப்படுத்துவதற்காக தற்போது மாநகர பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. சில வழித்தடங்களில் சிறிய அளவிலும், நஷ்டத்தில் இயங்கும் வழித்தடங்களில் பாதி அளவுக்கும் பஸ்கள் குறைக்கப்பட்டுள்ளது.

    இதனால் பஸ்கள் செல்லும் இடைவெளி நேரம் அதிகரித்துள்ளது. 30 நிமிடத்துக்கு மேல்தான் பஸ்கள் வருகின்றன. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்படுகிறார்கள்.

    டீசல் விலை ஏற்றத்தால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணங்கள் உயர்ந்த நிலையில், பஸ்களின் எண்ணிக்கை குறைப்பு பயணிகளை மேலும் சிரமத்துக்கு ஆளாக்கியுள்ளது.

    நாட்டிலேயே தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள்தான் எரிபொருள் சேமிப்பில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.

    அரசு பஸ்கள் சீராக இயக்கப்படுவதால் லிட்டருக்கு 5 கி.மீ.க்கு மேல் கிடைக்கிறது. தனியார் பஸ்களில் லிட்டருக்கு 4 கி.மீ. அளவில் தான் ஓடுகிறது. அரசு பஸ் ஓட்டுனர்களால்தான் சாதனை இலக்கை எட்ட முடிகிறது என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. #DieselPriceHike #MTC #ChennaiBus
    கடந்த 2 நாட்களில் சேர்வலாறு அணையில் மட்டும் 16 அடி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பழுதுபார்க்க குறைக்கிறார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் தெரியவில்லை.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பு நிலையை விட அதிக அளவு பெய்தது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் 9 அணைகள் நிரம்பின. இதைத்தொடர்ந்து பிரதான கால்வாய்களின் நேரடி பாசன விவசாயம் நடைபெற்று வருகிறது.

    வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கும். ஆனால் ஆவணி இறுதியிலேயே நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத்தொடங்கி விட்டது. கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே சாரல்மழை பெய்தது. நேற்று நெல்லை மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழையும் மிதமான மழையும் பெய்தது.

    கொடுமுடியாறு பகுதியில் அதிகபட்சமாக 45 மில்லிமீட்டரும் அம்பையில் 28 மில்லிமீட்டர் மழையும் பாபநாசத்தில் 20 மில்லிமீட்டர் மழையும் சேரன்மகாதேவியில் 16 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளது. மற்ற இடங்களில் குறைந்த அளவு மழை பெய்துள்ளது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 672 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து பாசன கால்வாயில் வினாடிக்கு 20 கனஅடி தண்ணீரும், கீழ்அணையில் இருந்து ஆற்றில் 1004 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 105.50 அடியாக இருந்தது. அது இன்று சற்று உயர்ந்து 106 அடியாக அதிகரித்துள்ளது.

    ஆனால் சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 99 அடியாக இருந்தது. அது நேற்று 91.70 அடியாக குறைந்தது. இன்று மேலும் குறைந்து 84.91 அடியாக உள்ளது. கடந்த 2 நாட்களில் சேர்வலாறு அணையில் மட்டும் 16 அடி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பழுதுபார்க்க குறைக்கிறார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் தெரியவில்லை.

    மணிமுத்தாறு அணையில் 84.95 அடியும், கடனாநதியில் 68.80 அடியும், ராமநதி 55.25, கருப்பாநிதி-58.89, குண்டாறு-33.38, வடக்கு பச்சையாறு -20, நம்பியாறு-20, கொடுமுடியாறு-37.50, அடவிநயினார்-97.75 அடியாகவும் உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த ஒரு நாள் மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    அம்பை - 28.4
    சேரன்மாதேவி - 15.8
    மணிமுத்தாறு - 14.4
    பாளை - 4.2
    நெல்லை - 3.2
    ராதாபுரம் - 2.2
    சிவகிரி - 1
    மேட்டூர் அணையில் இருந்து 14ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 6ஆயிரத்து 800 கனஅடியாக குறைக்கப்பட்டது. #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இதனால் அந்த அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பும் படிப்படியாக குறைக்கப்பட்டது.

    கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து இன்று காலை 2ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் மட்டுமே காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 15ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 8ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து 14ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 6ஆயிரத்து 800 கனஅடியாக குறைக்கப்பட்டது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்பு உள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 13ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 10ஆயிரம் கனஅடியாக குறைந்தது. ஒகனேக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஒகேனக்கல்லில் மெயின் அருவி சேதம் அடைந்திருப்பதாக கூறி, அதில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மற்ற அருவிகளிலும், காவிரி கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குளித்து வருகிறார்கள்.

    வழக்கமான பாதையில் பரிசல் இயக்கப்படுகிறது. இதனால் உற்சாகமாக சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி சென்று மகிழ்ந்தனர். #MetturDam
    வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரியை 100 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. #TNGovt
    சென்னை:

    சமீபத்தில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இந்த வரி உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் சார்பில் கண்டனங்கள் வலுத்தது. உயர்த்தப்பட்ட சொத்து வரியை வாபஸ் பெறக்கோரி  வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    அதே சமயம் சொத்து வரி உயர்வு மூலம் சுமார் ஆயிரத்து 160 கோடி ரூபாய் கிடைக்கும் என தமிழக அரசு எதிர்ப்பார்த்துள்ளது.

    இந்நிலையில், சொத்து வரி தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், சொத்து வரி சீராய்வு 2018-19 ஆம் ஆண்டின் முதலாம் அரையாண்டு முதலே நடைமுறைக்க்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், புதிய வரிவிகிதத்தின் படி, முன் தேதியிட்டு வரி செலுத்த தேவையில்லை எனவும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வாடகை குடியிருப்புகளுக்கு விதிக்கப்பட்ட 100 சதவிகித வரியை 50 சதவிகிதமாக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வரிவிகிதம் உரிமையாளர் குடியிருப்பு மற்றும் வாடகைதாரர் குடியிருப்பு ஆகிய இரண்டுக்கும் ஒரே விகிதத்தில் இருக்கும் எனவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TNGovt
    தூத்துக்குடியில் முழு அமைதி திரும்பினாலும் ஒரு நபர் ஆணைய விசாரணை முகாம், சிபிசிஐடி விசாரணை நடந்து வருவதால் குறைந்த எண்ணிக்கையிலான போலீசாரை தொடர்ந்து இருக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கலெக்டர் அலுவலகம் நோக்கி அவர்கள் பேரணியாக சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது.

    அப்போது நடந்த‌ துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டார்கள். ஏற்கனவே ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாகி வந்தபோதே தூத்துக்குடியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தார்கள். 22-ந் தேதி போராட்டம் நடைபெறுவதற்கு இரு நாட்களுக்கு முன்பே கூடுதலான போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

    சம்பவம் நடைபெற்ற அன்று ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. துப்பாக்கி சூடு சம்பவம் எதிரொலியாக ஏற்பட்ட பதட்ட நிலையினால் வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டிருந்தனர். தூத்துக்குடி நகரம் மற்றும் மாவட்ட பகுதிகள் முழுவதும் 41 கம்பெனிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் நகர் முழுவதும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தார்கள்.

    இந்தநிலையில் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் முழு அமைதி திரும்பியுள்ளது.

    இதையடுத்து தாளமுத்து நகர் பகுதியில் தங்கியிருந்த திருச்சி, தஞ்சை, திண்டுக்கல் மாவட்ட போலீசார் திருப்பி அனுப்பப்பட்டனர். தற்போதைய சூழலில் வெளிமாவட்டங்களை சேர்ந்த 10 கம்பெனிகள் போலீசார் மட்டுமே பாதுகாப்பில் உள்ளார்கள். அவர்களும் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். மேலும் தூத்துக்குடியில் நிறுத்தப்பட்டிருந்த 6 வஜ்ரா வாகனங்கள், 4 வருண் வாகனங்கள் உள்ளிட்ட 70 போலீஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களும் படிப்படியாக திரும்பப் பெறப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே முழு அமைதி திரும்பினாலும் ஒரு நபர் ஆணைய விசாரணை முகாம், சி.பி.சி.ஐ.டி விசாரணை நடந்து வருவதாலும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாலும் குறைந்த எண்ணிக்கையிலான போலீசாரை தூத்துக்குடியிலேயே தொடர்ந்து இருக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ் நேற்று தூத்துக்குடியில் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடி பகுதியில் தற்போது நிலவி வரும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    ராஜ்தானி மற்றும் சகாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகளுக்கான உணவு அளவு குறைப்பு திட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளது. #IRCTC #Rajdhani #ShatabdiTrains
    புதுடெல்லி:

    ரெயில்களில் வழங்கப்படும் உணவு குறித்து அடிக்கடி புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

    உணவின் தரம் போதுமான அளவுக்கு இல்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இதை மாற்றி அமைக்க ரெயில்வே இலாகா பல்வேறு புதிய ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகளுக்கு உணவு வழங்கும் பொறுப்பை இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் மேற்கொண்டுள்ளது. சைவம், அசைவம் இரு வகை உணவுகளையும் பயணிகளுக்கு வழங்கி வருகிறார்கள்.

    பொதுவாக பயணிகளுக்கு 750 கிராம் உணவு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சராசரியாக 900 கிராம் உணவுகளை வழங்கி வருகிறது.

    இதன் காரணமாக பயணிகளுக்கு வழங்கப்படும் உணவில் இழப்பு ஏற்படுவதாக ஐ.ஆர்.சி.டி.சி. கூறுகிறது. அதாவது ஒரு மதிய உணவுக்கு ரூ.112 வசூல் செய்கிறார்கள். ஆனால் அதற்கான செலவு ரூ.150 வரை ஆகிறது.


    என்றாலும் உணவு வகைகளில் தரம் இல்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறது. இந்த குறையை நிவர்த்தி செய்ய அளவை குறைத்து தரத்தை உயர்த்த ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி இனி உணவு வகைகளில் தற்போது வழங்கப்படும் 150 கிராம் பருப்பை 100 கிராமமாக குறைக்க முடிவு செய்துள்ளனர். இதுபோல எலும்பு இல்லாத கோழிக்கறி அளவையும் குறைக்க உள்ளனர்.

    இதற்கான ஒப்புதல் கிடைத்ததும் முதல் கட்டமாக 27 ராஜ்தானி மற்றும் சகாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் உணவு அளவு குறைப்பு திட்டம் அமலுக்கு வர உள்ளது. #IRCTC #Rajdhani #ShatabdiTrains
    ×