search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவாமிமலை"

    சுவாமிமலை அருகே சிறுவன் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலையை அடுத்த திம்மக்குடியைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது42) கொத்தனார். இவரது மனைவி சுபஸ்ரீ (38) இவர்களுக்கு அபிஷேக் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் கடந்த 11-ம் தேதி சுபஸ்ரீ அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி அறிந்த கார்த்தி தலைமறைவாகிவிட்டார். இதற்கிடையே அபிஷேக் நேற்று கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டான் அவனை மீட்டு உறவினர்கள் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது அபிஷேக் உடலில் வி‌ஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவனை தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலன் அளிக்காமல் அவன் இன்று காலை பரிதாபமாக இறந்தான்.

    இதுப்பற்றிய புகாரின் பேரின் சுவாமிமலைப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுவாமிமலையில் ஏ.டி.எம்மில் பணம் எடுத்து கொடுப்பது போல் பெண்ணை ஏமாற்றி ரூ.10 ஆயிரம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுவாமிமலை:

    பாபநாசம் தாலுக்கா திருவைக்காவூர் ஊராட்சி தேவனோடை களத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் காசிராஜன் மனைவி ஜோதி (வயது 42). இவர் இன்று காலை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உறவினரை பார்த்துவிட்டு வந்தார்.

    பின்னர் சுவாமிமலை சன்னதி தெருவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி அருகில் உள்ள ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு வாலிபரிடம் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.1500 பணம் எடுத்து தர கேட்டுக்கொண்டார்.

    பின்னர் அதற்கு ரசீது வரவில்லை என்று ஜோதி கூறியதால் மீண்டும் அவரிடமிருந்து ஏ.டி.எம்.கார்டை வாங்கிய வாலிபர் ரசீதை எடுத்து கொடுப்பது போல் போக்குகாட்டி அவரது கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக கார்டை கொடுத்துவிட்டு அவ்வழியே வந்த ஒருவரிடம் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு ஏறி சென்று விட்டாராம்.

    இதனால் சந்தேகம் அடைந்த ஜோதி சத்தம்போடவே அருகில் இருந்தவர்கள் வந்து விசாரித்த போது ஜோதியின் கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரத்தை வாலிபர் ஏமாற்றி எடுத்து சென்றது தெரியவந்தது.

    இதுபற்றி ஜோதி சுவாமிமலை போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ரேகா ராணி வழக்குப்பதிவு செய்து வங்கிஇன்றும் நாளையும் விடுமுறை என்பதால் திங்கட்கிழமை ஏ.டி.எம்.மில் உள்ள கேமிரா காட்சிகளை கைப்பற்றி தப்பி ஓடிய வாலிபர் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். பணத்தை பறிகொடுத்த ஜோதியின் கணக்கில் ரூ.15 ஆயிரம் மட்டும் இருந்தது. அதிலும் 10 ஆயிரம் பறிபோனதால் அவர் கதறி அழுதார்.

    இந்த வங்கியின் ஏ.டி.எம்.மில் காவலாளி இல்லை. இதே ஏ.டி.எம்.மில் இதுபோல 3 முறை பணம் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    சுவாமிமலை அருகே சுற்றுலா வந்த மலேசியா தொழிலதிபர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சுவாமிமலை:

    மலேசியா கோலாலம்பூர் பகுதியை சேர்ந்தவர் அரைக்காவூர் (வயது 53). இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற்காக தமிழகம் வந்தார்.

    அவர் சுவாமிமலையை அடுத்த சுந்தரபெருமாள் கோவிலில் உள்ள தனது நண்பரின் தங்கை செல்வி என்பவரது வீட்டில் தங்கி சுற்றுலா தலங்களை பார்வையிட்டு வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த 8-ந்தேதி மாரடைப்பு ஏற்பட்டது. அவரை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அரைக்காவூர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இவர் மலேசியாவில் பிரபல தொழிலதிபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுவாமிமலை அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். #Tasmac

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் சுவாமிமலையை அடுத்த திருவலஞ்சுழியில் கடந்த 30-ந் தேதி புதிதாக ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. திருவலஞ்சுழி அரசலாற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கடைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த கடையால் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும், அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் மாணவ- மாணவிளுக்கும் இடையூறு ஏற்படும் என்று அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கூறினர். ஆனால் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த சுவாமிமலை இன்ஸ்பெக்டர் ரேகாராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் டாஸ்மாக் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தால், அவரது உத்தரவின் பேரில் கடையை மூடுவோம் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இது குறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தீந்தமிழன் கூறியதாவது:-

    திருவலஞ்சுழி டாஸ்மாக் கடையைமூடக்கோரி முற்றுகை போராட்டம் செய்தோம். டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதின் பேரில் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்க உள்ளோம். மாவட்ட நிர்வாகம் கடையை மூடாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து டாஸ்மாக் கடை மேலாளர் திருஞானம் கூறும்போது,

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 28-ந் தேதி 28 கடைகள் மூடப்பட்டு 15கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் கும்பகோணம் நகரத்தில் 5 கடைகளும், தாராசுரம் மற்றும் திருவலஞ்சுழி ஆகிய இரண்டு இடங்களில் புதியதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. திருவலஞ்சுழியில் டாஸ்மாக் கடை பிரச்சனை தொடர்பாக பேச்சு வார்த்தையில் தீர்வு காணப்பட்டது என்றார். #Tasmac

    காடுவெட்டி குரு மரணம் அடைந்ததால் மயிலாடுதுறை மற்றும் சுவாமிமலையில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    மயிலாடுதுறை:

    பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராகவும், வன்னியர் சங்க தலைவராகவும் இருந்து வந்தவர் காடுவெட்டி குரு (வயது 57).

    இவர் கடந்த 12-ந் தேதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு உடல்நிலை மோசமானதால் காடுவெட்டி குரு மரணம் அடைந்தார்.

    மரணம் அடைந்த காடுவெட்டி குரு, கடந்த 2001-ம் ஆண்டில் ஆண்டிமடம் தொகுதியிலும், 2011-ம் ஆண்டில் ஜெயங்கொண்டம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

    காடுவெட்டி குருவின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பா.ம.க. நிர்வாகிகள், கட்சியினர், மற்றும் கிராம மக்கள் காடுவெட்டி உட லுக்கு அஞ்சலி செலுத் தினர்.

    இந்த நிலையில் காடுவெட்டி குரு மரணம் அடைந்த செய்தியை அறிந்து பா.ம.க. வினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் மயிலாடுதுறை பகுதியில் இன்று அதிகாலை அரசு பஸ்சை கல்வீசி கண்ணாடிகளை தாக்கி உடைத்தனர்.

    மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சி பகுதியில் சிவபிரியா நகர் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஒரு அரசு பஸ் வந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் திடீரென அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

    பின்னர் அங்கிருந்து மர்ம கும்பல் தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் பற்றி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார், அரசு பஸ்சை உடைத்த மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.

    மயிலாடுதுறை நகரில் இன்று காலை 10 மணியளவில் திடீரென வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். காடுவெட்டி குரு மரண மடைந்ததையொட்டி கடை அடைக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மயிலாடுதுறை பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதையொட்டி அப்பகுதியில் பதட்டமான நிலை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கும்பகோணம் அருகே சுவாமி மலை பகுதியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன.

    சுவாமிமலை சன்னதி தெருக்கள், மற்றும் திருவையாறு மெயின் ரோடு பகுதிகளில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் சுவாமிமலை பகுதியில் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காடுவெட்டி குரு மரணம் அடைந்ததையொட்டி சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய இடங்களில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    சுவாமிமலை அருகே குடிபோதையில் தம்பி வீட்டை சூறையாடிய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம், சுவாமிமலை அருகே உள்ள மேலக்காவிரி அம்பேத்கார் நகரைச் சேர்ந்த குருநாதன் மகன் பாண்டியன் (வயது 35). இவரது அண்ணன் விநாயகமூர்த்தி (38).

    அண்ணன்- தம்பி அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று விநாயகமூர்த்தி மது குடித்துவிட்டு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். இதனால் கணவரிடம் இருந்து தப்புவதற்காக அவரது மனைவி அருகில் உள்ள பாண்டியன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இதைதொடர்ந்து விநாயகமூர்த்தி தனது தம்பி பாண்டியன் வீட்டிற்கு சென்று என் மனைவிக்கு நீ எப்படி அடைக்கலம் கொடுக்கலாம் என்று கேட்டு வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை உடைத்து சூறையாடி விட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பாண்டியன் சுவாமிமலை போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ் பெக்டர் ரேகாராணி வழக்கு பதிவு செய்து விநாயகமூர்த்தியை கைது செய்தார்.

    ×