search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107099"

    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்
    • தரையில் வண்ண ரங்கோலி கோலங்கள் வரையப்படுகிறது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருகிற 13-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது.

    அதையொட்டி திரிநேத்ரா விருந்தினர் மாளிகையில் கோவில் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டி தலைமை தாங்கி பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின்போது முக்கிய நிகழ்ச்சிகளாக ஆதி தம்பதிகளான சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம், கிரிவலம், தேர்த்திருவிழா ஆகியவை நடக்கின்றன. அந்த நாட்களில் அதிக பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். சாதாரண பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    ஸ்ரீகாளஹஸ்தி நகராட்சி, பஞ்சாயத்து ராஜ் துறையினர் ஒருங்கிணைந்து நகரம் முழுவதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். வாகன நிறுத்துமிடத்தில் அடிக்கடி கொசு மருந்து தெளிக்க வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்

    திருக்கல்யாண உற்சவம் அன்று நகரம் மற்றும் கிராமங்களில் குழந்தை திருமணங்கள் நடக்காமல் சமூக நலத்துறையினர், குழந்தைகள் நலத்துறையினர், போலீசார் தீவிர கவனம் செலுத்த வேண்டும். பக்தர்களுக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டால், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். தயார் நிலையில் 108 ஆம்புலன்சுகள் நிறுத்தி வைத்திருக்க வேண்டும். பக்தர்களின் வசதிக்காக அரசு பஸ்கள் கூடுதலாக இயக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி பேசுகையில், வாகனச் சேவையின்போது நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் தங்களின் அடையாள அட்டையை பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஏற்பாடு செய்யப்படும், என்றார்.

    கூட்டத்தில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, நிர்வாக அதிகாரி வி.சாகர்பாபு, திருப்பதி வருவாய் கோட்டாட்சியர் கனகநரசாரெட்டி மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    கோவிலின் 4 மாட வீதிகளில் ஊர்வலத்துக்காக பயன்படுத்தும் வாகனங்களுக்கும், கோவில் கோபுரங்களுக்கும் வா்ணம் பூசும் பணி நடக்கிறது. பக்தர்களை கவரும் வகையில் கோவில் வளாகம் முழுவதும் பல வண்ண மின்விளக்குகள் அலங்காரம் செய்யப்படுகிறது. தரையில் வண்ண ரங்கோலி கோலங்கள் வரையப்படுகிறது. அந்தப் பணிகளை கோவில் அதிகாரிகள் மேற்பார்வை செய்தனர்.

    • இன்று சனிக்கிழமை தேரோட்டம் நடக்கிறது.
    • இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    செய்யாறு டவுன் திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று காலை 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பள்ளி சிறுவர்களும், 63 நாயன்மார்கள் மற்றும் சிவன், பார்வதி, முருகன், விநாயகர் என பல்வேறு வேடங்களில் சாமிகளோடு உலா வந்தனர்.

    முன்னதாக 63 நாயன்மார்களுக்கு அலங்காரம், பாலகுஜாம்பிகை அம்மன் மற்றும் வேதபுரீஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மலர் தூவி அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • இந்த விழா பிப்ரவரி 11-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடக்கிறது.
    • 19-ந்தேதி கல்யாண உற்சவம் நடக்கிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 11-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடக்கிறது. முன்னதாக 10-ந்தேதி மாலை புற்றுமண் எடுத்தும், முளைப்பாரி விதைத்தும் அங்குரார்பணம் நடக்கிறது.

    பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் 11-ந்தேதி மீன லக்னத்தில் நடக்கிறது. மகா சிவராத்திரியையொட்டி 18-ந்தேதி நந்தி வாகன வீதிஉலா நடக்கிறது. 19-ந்தேதி கல்யாண உற்சவம், 20-ந்தேதி திரிசூல ஸ்நானம், கொடியிறக்கம் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடக்கிறது.
    • 31-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

    செய்யாறு டவுன் திருவோத்தூரில் பால குஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுதினம் கொடியேற்றத்துடன் ரதசப்தமி பிரம்மோற்சவ விழா மிகச் சிறப்பாக நடைபெறும்.

    கடந்த 2 ஆண்டுகளாக கும்பாபிஷேக பணிகள் மேற்கொண்டதால் பிரம்மோற்சவ விழா நடைபெறவில்லை. கடந்த ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.

    இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான ரதசப்தமி பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை கோவில் கொடி மரத்திற்கு அலங்காரம், ஆராதனை செய்து சிவாச்சாரியார் மந்திரங்கள் ஓத கொடியேற்றப்பட்டது. இதையடுத்து மகாதீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கிறது. முதல் நாளான நேற்று கற்பக விருட்ச காமதேனு வாகனத்தில் சாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இன்று (திங்கட்கிழமை) காலை சூரிய பிரபை உற்சவம், இரவு சந்திர பிரபை உற்சவமும், 24-ந் தேதி இரவு பூத வாகன சேவையும், 25-ந் தேதி இரவு பெரிய நாக வாகன சேவையும், 26-ந் தேதி காலை அதிகார நந்தி வாகன சேவை புறப்பாடும், இரவு பெரிய ரிஷப வாகனத்தில் பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் காட்சியளித்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.

    27-ந் தேதி காலை சந்திரசேகர சுவாமி அபிஷேகம், 63 நாயன்மார்கள் திருவீதி உலாவும், இரவு அம்மன் தோட்ட உற்சவம், திருக்கல்யாணமும், அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண யானை வாகன சேவை நடைபெறுகிறது.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 28-ந் தேதி நடைபெறுகிறது. 29-ந் தேதி காலை சந்திரசேகர் சுவாமி திருவீதி உலாவும், இரவு குதிரை வாகன சேவையும், 30-ந் தேதி அதிகார நந்தி வாகன சேவையும் நடைபெறுகிறது.

    பிரம்மோற்சவ விழாவின் இறுதி நாளான 31-ந் தேதி காலை நடராஜர் திருவீதி உலாவும், மாலை 3 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு கொடி இறக்கமும்,ராமேஸ்வர திருக்கைலாய சேவை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது.

    பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • 19-ந்தேதி கருட சேவை நடக்கிறது.
    • 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருவள்ளூர் வீரராகவர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு ஆண்டு தோறும் தை மற்றும் சித்திரை ஆகிய இரு மாதங்களில் பிரம்மோற்சவ விழா நடைபெறும். தை அமாவாசை அன்று சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் பெருமாள் காட்சி அளித்த தினம் என்பதால் தை மாத பிரம்மோற்வம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்களை அனுமதிக்காமல் பிரம்மோற்சவ விழா நடை பெற்றது. இந்த நிலையில் இந்த ஆண்டு தை மாத  பிரம்மோற்சவ விழா இன்று காலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தங்கச் சப்பரம் வீதி உலா நடை பெற்றது. இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி எழுந்தருள்கிறார்.

    பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான வருகிற 19-ந் தேதி காலை 5மணிக்கு கருட சேவையும், கோபுர தரிசனமும் நடைபெறுகிறது. 21-ந் தேதி (சனிக்கிழமை) தை அமாவாசையை முன்னிட்டு ரத்னாங்கி சேவையில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    விழாவின் 7-ம் நாளான வருகிற 23-ந் தேதி (திங்கள்கிழமை) காலை தேரோட்டமும், 26-ந்தேதி இரவு வெட்டிவோ் சப்பரத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார்.

    பிரம்மோற்சவ நாளில் தினமும் காலை, மாலை இரு வேளையிலும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதிஉலா வருகிறார்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். கொரோன கட்டுப்பாடுகள் தற்போது முழுவதும் தளர்த்தப்பட்டு உள்ளதால் பிரம்மோற்சவ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிரம்மோற்சவ விழா வருகின்ற 17-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது.

    திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    வீரராகவப் பெருமாள் கோவிலில் தை பிரம்மோற்சவ விழா வருகின்ற 17-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதி குறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் சப் கலெக்டர் மகாபாரதி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர்.

    அப்போது தேர் செல்லும் நான்கு மாட வீதிகளில் சாலை வசதி, மின் கம்பங்கள் சரியான உயரத்தில் இருக்கிறதா, மின் வயர்கள் உரசாத அளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறதா, சாலையோர கடைகள் இருந்தால் அதை அகற்றுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின் போது உதவி போலீஸ் சூப்பிரண்ட் விவேகானந்தர் சுக்லா, நகராட்சி ஆணையர் ராஜ லட்சுமி, நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன், நெடுஞ்சா லைத்துறை உதவி கோட்ட பொறியாளர் எஸ்.ஜே.தஸ்நேவிஸ் பெர்னாண்டோ, மின்வாரிய அதிகாரிகள் யுவராஜ், தட்சிணாமூர்த்தி, தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோ, டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, வருவாய் ஆய்வாளர் கணேஷ் வீரராகவர் கோவில் மக்கள் தொடர்பு அலுவலர் சம்பத் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

    • 19-ந்தேதி கருட சேவை நடைபெறுகிறது.
    • 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை மற்றும் சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்சவம் நடைபெறும்.

    தை அமாவாசை அன்று சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் பெருமாள் காட்சி அளித்த தினம் என்பதால் தை பிரம்மோற்வம் மிக முக்கியத்துவம் வாய்ந்த தாக கருதப்படுகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா தொற்று காரணமாக பக்தர்களை அனுமதிக்காமல் பிரம்மோற்சவம் நடைபெற்றது.

    கொரோனா தொற்று நீங்கிய நிலையில், இந்த ஆண்டு பிரம்மோற்சவம், வருகிற 17-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. தினமும் காலை, மாலை இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா வருவார்.

    இதனால் வீரராகவப் பெருமாள் எழுந்தருளும் திருத்தேர் உள்பட பல்வேறு வாகனங்களை கோவில் நிர்வாகம் சார்பில் சீரமைத்து வருகின்றனர்.

    அதைத் தொடர்ந்து பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான 19-ந்தேதி காலை கருட சேவையும் கோபுர தரிசனமும் நடைபெறுகிறது. தொடர்ந்து 5-வது நாளான 21-ந் தேதி (சனிக்கிழமை) தை அமாவாசையையொட்டி ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான 23-ந் தேதி (திங்கள்கிழமை) காலை தேரோட்டம் நடைபெறும். 10-வது நாளான 26-ந் தேதி வெட்டிவோ் சப்பரத்தில் இரவு 8 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்க உள்ளாா்.

    • இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
    • 16-ந்தேதி திருவூடல் உற்சவம் நடக்கிறது.

    சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சூரியன் பயணம் செய்யும் காலம் உத்திராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு சூரியன் தனது பயணத்தை தொடங்கும் காலத்தை சிவாலயங்களில் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம், தட்சிணாயண புண்ணியகால பிரம்மோற்சவம் ஆகியவற்றின் தொடக்கமாக சாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று கொடியேற்றத்துடன் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து விநாயகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் ஆகியோருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாமி சன்னதியில் இருந்து மேளதாளம் முழங்க தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

    பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 6.15 மணி அளவில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு 'அரோகரா' என்று பக்தி கோஷம் எழுப்பினர்.

    விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். நேற்று முதல் தொடர்ந்து 10 நாட்களும் காலை மற்றும் இரவில் விநாயகர், சந்திரசேகரர் மாட வீதி உலா நடைபெறுகிறது. 10-ம் நாளான வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. 16-ந்தேதி (திங்கட்கிழமை) அருணாசலேஸ்வரர் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவூடல் உற்சவமும், 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மறுவூடல் உற்சவமும் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • குளத்தில் நீராடுவதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
    • நாளை பத்மாவதி தாயார் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடைபெறுகிறது.

    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கடந்த 19-ந் தேதி அங்குரார்பணமும், 20-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

    இதையடுத்து தினமும் காலை, மாலை என இருவேளையில் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்தார். நேற்று காலை ரத உற்சவமும், மாலை அம்ச வாகன ஊர்வலம் நடந்தது.

    பிரம்மோற்சவ நிறைவு நாளான இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதனை கண்டுகளிக்க தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்சானூரில் குவிந்தனர்.

    காலை 7 மணிக்கு பல்லக்கு உற்சவமும், 11.20 மணி முதல் 11.50 மணி வரை பஞ்சமி தீர்த்த குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

    முன்னதாக அச்சர்கள் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் செய்து கோவிலில் இருந்து தீர்த்தவாரி குளத்திற்கு கொண்டு வந்தனர். குளத்தை சுற்றிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.

    குளத்தில் நீராடுவதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் தீர்த்தவாரி முடிந்தவுடன் குளத்தில் புனித நீராடினர்.

    இதையடுத்து மாலை குதிரை வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இரவு 9.30 மணியிலிருந்து 10.30 மணிக்குள் கொடி இறக்கம் நடைபெறுகிறது. நாளை மாலை பத்மாவதி தாயார் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடைபெறுகிறது.

    • இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
    • இன்று இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 7.10 மணியில் இருந்து காலை 10 மணிவரை தேரோட்டம் நடந்தது. தேரில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    அதைத்தொடர்ந்து மதியம் 12 மணியில் இருந்து ரத மண்டபத்தில் பத்மாவதி தாயாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், பாலாடைக்கட்டி, பல்வேறு வகையான பழங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊஞ்சல் சேவை நடந்தது.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை குதிரை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை கோவில் புஷ்கரணியில் பஞ்சமி தீர்த்தம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    • இன்று சூரிய பிரபை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.
    • உற்சவருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை 'வெண்ணெய் ஸ்ரீகிருஷ்ணர்' அலங்காரத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து தாயாரை வழிபட்டனர். மதியம் 12 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து மாலை 4.20 மணியில் இருந்து மாலை 5.20 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயார் தங்கத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் குழுமியிருந்த திரளான பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்து அருள் பாலித்தார். இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பத்மாவதி தாயார் கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.

    • இன்று இரவு கருட வாகன வீதிஉலா நடக்கிறது.
    • 28-ந்தேதி பஞ்சமி தீர்த்தம் நடக்கிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று தங்க யானை வாகன வீதிஉலா நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) இரவு கருட வாகன வீதிஉலா நடக்கிறது.

    நேற்றும், இன்றும் வாகனங்களில் எழுந்தருளும் உற்சவர் பத்மாவதி தாயாருக்கும், மூலவருக்கும் அலங்காரம் செய்வதற்காக, திருமலையில் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படும் தங்க லட்சுமி காசு மாலை பலத்த பாதுகாப்போடு திருமலையில் இருந்து திருச்சானூருக்கு கொண்டு செல்லப்பட்டது. காசு மாலைைய திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஒரு பெட்டியில் வைத்து வழியனுப்பி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    2 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் நிறைவுநாளான 28-ந்தேதி பஞ்சமி தீர்த்தம் நடக்கிறது. அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

    தாயாருக்கு விருப்பமான கஜ வாகனச் சேவைக்காக திருமலையில் சிறப்புப்பூஜைகள் செய்து தங்கக் காசு மாலையை திருமலையில் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து திருச்சானூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருமலையில் நடந்த நிகழ்ச்சியில் பறக்கும்படை அதிகாரி பாலிரெட்டி, பேஷ்கார் ஸ்ரீஹரி ஆகியோர் பங்கேற்றனர்.

    திருச்சானூரை அடைந்த காசு மாலை அங்குள்ள மஞ்சள் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தங்க காசுமாலையை இணை அதிகாரி வீரபிரம்மனிடம் வழங்கினார்.

    அங்கு தங்கக் காசு மாலைக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு மங்கல வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மூலவர் பத்மாவதி தாயாருக்கும், தங்க யானை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கும் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

    ×