search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிக்கை"

    மதுரை மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #MaduraiGovernmenthospital #HighCourt
    மதுரை:

    மதுரையில் நேற்று முன்தினம் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் மின் இணைப்பு துண்டானது. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 5 பேர் இறந்தனர்.

    மின்தடை ஏற்பட்டதும் ஜெனரேட்டர் உடனே இயக்கப்படாததால் தான் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் இறந்துள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், இதனை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது.

    அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 5 நோயாளிகள் ஏற்கனவே கவலைக்கிடமாக இருந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி தான் அவர்கள் இறந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், மதுரை மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

    மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து நிபுணர் குழு அமைப்பது குறித்தும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

    தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #MaduraiGovernmenthospital #HighCourt
    சின்னதம்பி யானை நடமாட்டம் குறித்து விரிவான அறிக்கையை வனத்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ChinnathambiElephant #HC
    சென்னை:

    சென்னை ஐகோர்டில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

    அதில், ‘கோவை மாவட்டத்தில் அண்மை காலமாக ஏராளமான காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவது அதிகரித்துள்ளன. கோவை மாவட்டம், தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள செங்கல் சூளைகளில் இருந்து வெளியாகும் நச்சுப்புகை தான் இதற்கு காரணம். தற்போது, சின்னதம்பி என்ற யானை ஊருக்குள் புகுந்து, காட்டுக்குள் செல்லாமல் ஊரை சுற்றி வருகிறது.

    எனவே இந்த செங்கல் சூளைகளை இழுத்து மூட வேண்டும். சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.



    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர், சின்னதம்பி யானை நடமாட்டம் குறித்து விரிவான அறிக்கையை வனத்துறை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம் என்று உத்தரவிட்டனர். #ChinnathambiElephant #HC
    சபரிமலை கோவிலில் தரிசனம் செய்த இளம்பெண்கள் குறித்து கேரள அரசு தாக்கல் செய்த பட்டியலில் முரண்பாடு இருப்பதாக ஐயப்ப பக்தர்கள் தெரிவித்தனர். #Sabarimalatemple #SC
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.

    அவர்களை கட்டுப்படுத்தி சபரிமலைக்கு சென்ற பெண்களை போலீசார் சன்னிதானம் அழைத்துச் சென்றனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்த இளம்பெண்கள் குறித்த தகவலை கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்தது. அதில், சபரிமலையில் கோவில் நடைதிறந்த பின்பு 51 பெண்கள் தரிசனம் செய்துள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்படி கேரள அரசு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

    மேலும் கோவிலில் தரிசனம் செய்த 51 பெண்களின் பெயர் பட்டியலையும் தாக்கல் செய்தனர்.

    கேரள அரசு தாக்கல் செய்த பட்டியலில் முரண்பாடு இருப்பதாக ஐயப்ப பக்தர்கள் தெரிவித்தனர். சமூக ஊடகங்களும் இதுபற்றி ரகசிய ஆய்வு செய்தனர். மேலும் பட்டியலில் இடம் பெற்றவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் வயது விவரங்களை கேட்டனர்.

    அதில், பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த வயதும், அவர்களின் உண்மையான வயதிலும் வித்தியாசம் இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக சென்னையைச் சேர்ந்த ஷீலா என்ற பெண் சபரிமலையில் தரிசனம் செய்ததாகவும், அவருக்கு 48 வயது என்றும் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதுபற்றி கேரள ஊடகங்கள் சென்னையில் இருந்த ஷீலாவை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவர், சபரிமலை செல்ல ஆன்லைனில் பதிவு செய்ததாக கூறினார். அப்போது இன்டர்நெட் மையத்தில் விவரங்களை பதிவு செய்தபோது, வயதை 52 என்பதற்கு பதில் 48 என்று குறிப்பிட்டு விட்டனர்.

    இதனை நான், உடனே கண்டுபிடித்து இன்டர்நெட் ஊழியர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் கோவிலுக்கு செல்லும்போது ஆதார் அட்டையை காட்டுங்கள் என்று கூறிவிட்டனர். நான், கோவிலுக்கு சென்றபோது அங்கிருந்த போலீசாரிடம் வயது விவரம் குறித்து தெரிவித்தேன். மேலும் உண்மையான வயதை குறிப்பிட ஆதார் அட்டையையும் காண்பித்தேன். போலீசார் ஆன்லைன் விவரங்களை மட்டுமே பதிவு செய்து கொண்டனர் என்றார்.

    இதுபோல சென்னையைச் சேர்ந்த பரஞ்ஜோதி என்ற 47 வயது பெண்ணும் சபரிமலையில் தரிசனம் செய்ததாக கேரள அரசு தாக்கல் செய்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.



    சபரிமலையில் தரிசனத்திற்கு சென்ற பரஞ்ஜோதியின் பெயர் ஆண் என்றும், பெண் என்றும் டிக்கெட்டில் பதிவாகி இருப்பதை காணலாம்.


    ஆனால் பரஞ்ஜோதி பெண் அல்ல, ஆண் என்பது தெரிய வந்துள்ளது. இதுபோல ஆந்திராவைச் சேர்ந்த வசந்தி உள்பட பலரும் தங்களது வயது 50-க்கு மேல் என்று கூறி உள்ளனர்.

    கேரள அரசு தாக்கல் செய்த அறிக்கையில் 10-க்கும் மேற்பட்டோரின் வயது குறித்த விவரங்களில் தவறு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி கேரள அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-

    சபரிமலைக்கு சென்ற இளம்பெண்கள் யாரும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள தயங்குகிறார்கள். பாதுகாப்பு கருதி குடும்ப உறுப்பினர்களும், மறுப்பு தெரிவித்திருக்கலாம். சபரிமலையில் நடந்து வரும் போராட்டம் காரணமாக அவர்கள் இவ்வாறு கூறி இருக்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பா.ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு தாக்கல் செய்த அறிக்கை போலியானது. தரிசனத்திற்கு ஆன்லைனில் பதிவு செய்த கம்யூனிஸ்டு பெண் ஆர்வலர்களின் பெயர்களை பட்டியலில் குறிப்பிட்டுள்ளனர்.

    இதனால் சபரிமலை வழக்கின் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணைக்கு பாதிப்பு இருக்காது என்றார்.  #Sabarimalatemple #SC
    கஜா புயல் சேதம் குறித்த அறிக்கையை மத்திய குழு தாக்கல் செய்த ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #GajaCyclone #CentralCommitte #MaduraiHighcourt
    மதுரை:

    கஜா புயல் நிவாரணம் தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருகிறது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதி, கஜா புயல் பாதிப்புகளில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த ஆய்வு முடித்த இரண்டு நாட்களில் மத்திய குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என கஜா புயல் பாதிப்பு பகுதிக்ளில் ஆய்வு செய்யும் மத்திய குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மத்திய குழு அறிக்கையை தாக்கல் செய்த ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

    புயல் பாதித்த பகுதிகளில் மின்சாரம் 100 சதவீதம் வழங்கப்பட்டு விட்டதா என்பதை டிசம்பர் 6-ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

    மீட்பு நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #CentralCommitte #MaduraiHighcourt
    கஜா புயலால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் தொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் 27-ந்தேதி மத்திய குழுவினர் தாக்கல் செய்கின்றனர். #GajaCyclone #CentralCommittee
    திருச்சி:

    புயல் சேதத்தை ஆய்வு செய்வதற்காக விமானம் மூலம் திருச்சிக்கு வந்த மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட சேத விவரங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் ஒரு விளக்க அறிக்கை கொடுத்திருக்கிறார். மாநில அரசு சார்பில் புயல் நிவாரணமாக ஒரு குறிப்பிட்ட தொகை கேட்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவினர் ‘கஜா’ புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து ஒரு சேத விவரப்பட்டியல் தயார் செய்துள்ளனர். தற்போது எனது தலைமையிலான குழுவினர் அதில் உள்ளபடி, என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று ஆய்வு செய்ய இருக்கிறோம். அதன் பிறகே ஒட்டு மொத்தமான ஒரு மதிப்பீடு கிடைக்கும்.

    புயல் சேத பகுதிகளை 3 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு டெல்லி திரும்பு முன்பு மத்திய குழுவினர் நாளை மாலையோ அல்லது செவ்வாய்க்கிழமை காலையோ சென்னை திரும்புகின்றனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரை மீண்டும் அவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

    இதைத்தொடர்ந்து இக் குழுவினர் கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் வருகிற 27-ந்தேதி தாக்கல் செய்கின்றனர். #GajaCyclone #CentralCommittee
     
    கஜா புயலால் ஏற்பட்ட சேதத்தை பேரிடராக அறிவிக்க கோரிய வழக்கில் மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #GajaCyclone #GajaCycloneRelief #MaduraiHC
    மதுரை:

    ராமநாதபுரத்தைச் சேர்ந்த வக்கீல் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் அவசர வழக்காக தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    வங்கக்கடலில் மையம் கொண்ட கஜா புயல் கடந்த 16-ந் தேதி கரையை கடந்தது. இந்த புயலால் தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 45-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

    புயலால் 82 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்து விட்டன. ஏராளமான கால்நடைகள் பலியாகி விட்டன. 1.17 லட்சம் வீடுகளும், 88 ஆயிரத்து 102 ஹெக்டேர் பரப்பளவில் வாழை, நெல், தென்னை உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் அழிந்து விட்டன.

    எனவே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்.

    மத்திய அரசின் புயல் மறுசீரமைப்பு நிவாரண முகாம்களை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அமைக்க வேண்டும். புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.



    பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் இணைப்பை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மீட்பு பணியில் முப்படையினரையும், துணை ராணுவப்படையினரையும் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு கடந்த 20-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது கஜா புயல் பாதிப்பு குறித்து விரிவான அறிக்கையை 4 மாவட்ட கலெக்டர்களும் தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை இன்று (22-ந் தேதி) ஒத்தி வைத்தனர்.

    அதன்படி இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிழக அரசு சார்பில் கஜா புயல் பாதிப்பு மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக தமிழக அரசு இதற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கி உள்ளது. தேவைப்படும் பட்சத்தில் மத்திய அரசிடம் இருந்து உதவி கோர உள்ளோம். விரைவில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், புயலால் பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சீரமைப்பு பணிகள் நகரங்களில் மட்டுமே நடந்து வருகிறது. அதுவும் மெதுவாகத்தான் நடக்கிறது.

    கிராமப்புறங்களில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. அங்கு இயல்புநிலை திரும்ப எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சாலைகள் படுமோசமாக உள்ளன. கிராமப் புறங்களில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

    விசாரணை முடிவில் நீதிபதிகள், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் ஒட்டுமொத்த பணிகளுக்கான விவரங்கள் மட்டுமே உள்ளன. சாலைப்பணிகள், மின்சாரம் சீரமைப்பு என தனித்தனியாக புள்ளி விவரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை.

    எனவே கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் குறித்து தனித்தனியாக புள்ளி விவரங்களை விரிவான அறிக்கையாக வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) தாக்கல் செய்ய வேண்டும்.

    மேலும் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு என்னென்ன உதவிகள் கேட்டுள்ளன என்பதையும் மனுவாக அன்றைய நாளில் தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #GajaCyclone #GajaCycloneRelief #MaduraiHC

    தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்து அதன் அறிக்கைகளை நாளை முதல்வரிடம் வழங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #GajaCyclone #MinisterSengottaiyan
    தஞ்சாவூர்:

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் அதிக சேதமடைந்துள்ளது. இதற்காக அனைத்து துறை அதிகாரிகளும், அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு நிவாரண உதவிகள் மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே தஞ்சை மாவட்டத்தில் நிவாரண பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதா கிருஷ்ணன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோரை நியமித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு, கடம்பூர்ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், பாரதிமோகன், எம்.எல்.ஏ.க்கள் சி.வி.சேகர், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், ஒரத்தநாடு ராமச்சந்திரன், சாக்கோட்டை அன்பழகன், கோவி.செழியன் மற்றும் அ.தி.மு.க முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால், பால்வள தலைவர் காந்தி, அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது நாங்கள் தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்து அதன் அறிக்கைகளை கணக்கெடுத்து முதல்- அமைச்சர் நாளை சேத பகுதிகளை பார்வையிட வரும் போது அவரிடம் சமர்பிப்போம்.


    இந்த புயலால் அதிக அளவில் தென்னை மரங்கள், வாழை மரங்கள், மின்கம்பங்கள், நெற்பயிர்கள், வெற்றிலை போன்றவை சேதமடைந்துள்ளது. மேலும் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகள் அதிக அளவில் சேதமடைந்துள்ளது.

    அதி நவீன எந்திரங்களுடன் மின் இணைப்புகளை சரி செய்து கொண்டு இருக்கிறோம். மேலும் சில பகுதிகளில் இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர். அப்போது எங்களுக்கு எரிபொருள் தேவை என்கின்றனர். அவர்களுக்கு தேவையான எரிபொருள் உடனடியாக அனுப்பப்படும். மேலும் அவர்கள் செய்த செலவு தொகையும் அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MinisterSengottaiyan
    லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணை அறிக்கையை சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கு அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #CBI #CVC #AlokKumar #CBIDirector
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    அலோக் வர்மா சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்ட நிலையில் தன்னை பதவி நீக்கம் செய்ததை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


    ராகேஷ் அஸ்தானா

    அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நீதிபதி பட்நாயக் மேற்பார்வையில் மத்திய ஊழல் தடுப்பு குழு ஒன்றை நியமித்து கடந்த 26-10-2018 சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இரண்டு வாரங்களுக்குள் விசாரணையை முடித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும் என காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.

    விசாரணை அறிக்கையை ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவின் வழக்கறிஞர் துஷார் மேத்தா கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையை பதிவு செய்துகொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வு மறுவிசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.

    இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது விசாரணை அறிக்கையின் நகலை சீலிட்ட உறையில் வைத்து அலோக் வர்மாவிடம் வழங்குமாறு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று உத்தரவிட்டது.

    இதுவரை பெறப்பட்ட விசாரணை அறிக்கையில் காணப்படும் சில விபரங்கள் திருப்திகரமாகவும், சில அதிருப்தியான வகையிலும் காணப்படுவதால் மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த அறிக்கை தொடர்பான தனது பதிலை தெரிவிக்குமாறு அலோக் வர்மாவை அறிவுறுத்தி, மறுவிசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    தனக்கும் இந்த விசாரணை அறிக்கையின் நகலை அளிக்க வேண்டும் என்ற  ராகேஷ் அஸ்தானாவின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். #CBI #CVC #AlokKumar #CBIDirector

    தமிழக சிறைகளில் கைதிகளை விலங்குகளைவிட மோசமாக நடத்துவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #MadrasHC
    சென்னை:

    நாடு முழுவதும் சிறைகளில் அடைக்கப்பட்ட கைதிகளுக்கு அடிப்படை உரிமைகள், வசதிகள் மறுக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அனைத்து மாநில ஐகோர்ட்டுகளும் தாமாக முன் வந்து பொது நல வழக்கு பதிவு செய்ய வேண்டும். சிறை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இதன்படி சென்னை ஐகோர்ட்டு முன் வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிகுமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்து வருகிறார்கள்.

    கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஐகோர்ட்டுக்கு உதவும் நபராக, மூத்த வக்கீல் ஆர்.வைகை நியமிக்கப்பட்டார். இவரை தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    இதன்படி, கடந்த அக்டோபர் 15-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை வேலூர், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் உள்ள மத்திய சிறை சாலையையும், சிவகங்கையில் உள்ள சிறை சாலையையும் வக்கீல் வைகை பார்வையிட்டார். இது குறித்து ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    4 சிறைச்சாலைகளும் கைதிகளுக்கு கொடூர நரகமாக உள்ளது.


    இங்குள்ள கைதிகள் மிருகங்களைவிட கேவலமாக நடத்தப்படுகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகள், மருத்துவ உதவி உள்ளிட்ட சேவைகள் செய்து கொடுக்கப்படுவதில்லை. மனித உரிமைகள் முற்றிலும் மறுக்கப்படுகிறது.

    சிறையில் உள்ள கழிவறைகள் அசுத்தமாகவும், நோய்களை பரப்பும் விதமாகவும் உள்ளது. இந்த கழிவறை பூமியில் உள்ள பயங்கர நரகம் போல் காட்சி அளிக்கிறது. மூன்றில் ஒரு பங்கு கைதிகள் மனஅழுத்தத்தில் உள்ளனர். இவர்களுக்கு முறையான மனநல நிபுணர்களின் மூலம் சிகிச்சை அளிக்கப்படவில்லை.

    உடல் நலம் பாதிக்கப்பட்டு பலர் வேதனையில் தவித்து வருகிறார்கள். வயதானவர்களும் உடல் நலம் குன்றி இருக்கிறார்கள். உதாரணமாக சொல்லப் போனால் பால்ராஜ் என்ற 78 வயது ஆயுள் கைதி இரண்டு கண்களிலும் பார்வை இழந்து சிறையில் தவிக்கிறார். வேலூர் ஜெயிலில் 85 வயது சரஸ்வதி என்ற பெண்ணுக்கும் கண்பார்வை இல்லை.

    போலீஸ் பற்றாகுறை இருப்பதால் இதுபோன்ற கைதிகளை வெளியே உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க முடியவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகளே கூறுகிறார்கள். இன்னும் பல கைதிகள் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு நரகத்தில் வாழ்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.  #MadrasHC
    ஸ்விட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற சுகாதார கருத்தரங்கில், காற்று மாசுபாடு காரணமாக 2016-ம் ஆண்டு மட்டும் 6 லட்சம் குழந்தைகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #WHO #AirPollutionKills
    பென்:

    உலகம் முழுவதும் காற்று, நீர் போன்றவற்றின் மாசுபாடு தற்போதைய மனித வாழ்வை அச்சுறுத்தும் மிகப்பெரிய ஒன்றாக இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டின் அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், வரும் தீபாவளியில் ஏற்படும் காற்று மாசுபாடை கட்டுப்படுத்த, பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் காற்று மாசுபாடு மற்றும் உடல்நலம் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் காற்றில் கலந்துள்ள நஞ்சை சுவாசிப்பதால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.



    அதாவது உலக அளவில் ஏற்படும் காற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாடு குழந்தைகள் இறப்புக்கான மிக முக்கிய பிரச்சனையாக இருப்பதாகவும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 10-ல் 1 குழந்தைக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டு உயிரிழப்பதாகவும் தெரியவந்தது.

    இந்த ஆய்வில் 2016-ம் ஆண்டில் மட்டும் உலக அளவில் 6 லட்சம் குழந்தைகள் சுவாச கோளாறினால் உயிரிழந்துள்ளதாகவும் அந்த கருத்தரங்கில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. #WHO #AirPollutionKills
    ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த ஒப்பந்த நடைமுறைகள் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. #RafaleDeal #RafaleScam #SupremeCourt
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனை மத்திய அரசு மறுத்து வரும் நிலையில், ரபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அதில், ரபேர் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதால், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என எம்எல் சர்மா கூறியிருந்தார்.

    இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரபேல் போர் விமானங்களை சராசரி விலையை விட கூடுதல் விலைக்கு வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருப்பதாக மனுதாரர் வாதாடினார்.

    ஆனால் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டியதில்லை என்றும், ராணுவ ரகசியம் சார்ந்த விஷயம் என்பதால் இதை விசாரிக்கக்கூடாது என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.



    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அதாவது ரபேல் தொடர்பாக முடிவெடுக்கும் நடைமுறைகள் தொடர்பான அறிக்கையை சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 29-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். #RafaleDeal #RafaleScam #SupremeCourt
    பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் - டசால்ட் நிறுவனம் செய்துகொண்ட ஏற்பாடுகளுக்கும் இந்திய அரசுக்கும் எந்த தொடர்பு இல்லை என ராணுவ அமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது. #Hollande #RafaleDeal #DefenceMinistry
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன.

    ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்த்தை மாற்றி அமைத்து கடந்த 2015-ம் ஆண்டில் பாரதிய ஜனதா ஆட்சியில் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

    பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்படும் போர் விமானங்களை பராமரிக்கும் பொறுப்பை இந்திய அரசுக்கு சொந்தமான எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு வழங்காமல் விமானத்துறையில் முன் அனுபவம் இல்லாத அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்துக்கு அளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும், அதிக தொகை கொடுத்து விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

    இதற்கிடையே, ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் அம்பானி நிறுவனத்தை நுழைத்தது இந்திய அரசின் நிர்பந்தத்தால்தான் என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே நேற்று குறிப்பிட்டிருந்தார்.



    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ராணுவ அமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

    அதில், ரிலையன்ஸ் பாதுகாப்பு மற்றும் டசால்ட் விமான தயாரிப்பு நிறுவனங்கள் செய்துகொண்ட ஒப்பந்தம் முற்றிலுமாக அவ்விறு நிறுவனங்களுக்கும் இடையிலான விவகாரம் என்றும், இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தை எந்த வகையிலும் இந்திய அரசு தேர்ந்தெடுத்து டசால்ட் நிறுவனத்திடம் முன்மொழியவில்லை, இதில் அரசுக்கு எந்த பங்களிப்பும் கிடையாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், பிரான்ஸ் முன்னாள் அதிபரின் பத்திரிகை பேட்டியை வைத்து தேவையில்லாத சர்ச்சைகள் எழுப்பப்படுவதாகவும் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Hollande #RafaleDeal #DefenceMinistry
    ×