search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 108818"

    • சுவாமி நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாணத் திருவிழா வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது.
    • தற்போது சேரன்மகாதேவி ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனிடம் திருவனந்தல் வழிபாட்டு குழு சார்பாக ஒரு மனு கொடுக்கபட்டுள்ளது.

    அதில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை டவுன் காந்திமதி அம்மன் உடனுறை சுவாமி நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாணத் திருவிழா வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை ) நடைபெற உள்ளது.

    காந்திமதி அம்மனுக்கு, சுவாமி காட்சி தரும் நிகழ்ச்சிக்காக 21-ந்தேதி அன்று காந்திமதி அம்பாள் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி பேட்டை ரோடு வழியாக கம்பை நதிக்கரை காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வார்.

    அதேபோல் 22-ந் தேதி காலை அம்பாளுக்கு காட்சி கொடுப்பதற்காக சுவாமி நெல்லையப்பரும் எழுந்தருளி பேட்டை ரோடு வழியாக காட்சி மண்டபத்திற்கு செல்ல வேண்டும். தற்போது சேரன்மகாதேவி ரோடு (பேட்டைரோடு) குண்டும் குழியுமாக உள்ளதால் சுவாமி சப்பரங்கள் செல்வதற்கும், பக்தர்கள் செல்வதற்கும் இடையூறாக உள்ளது. எனவே மாநகராட்சி சார்பில் போர்கால நடவடிக்கை எடுத்து சாலையை சீர்படுத்தி தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுடுகாட்டுப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு அளிக்கப்பட்டது.
    • மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன.

    இதில் ஆண்டிமடம் அருகே உள்ள மேலக்காடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், சுடுகாட்டிற்கு செல்லும் புதுப்பாதையினை, சிலர் பட்டா அவர்களின் பெயரில் இருப்பதாக கூறி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் சுடுகாட்டிற்கு செல்வதற்கு பெரும் இடையூறாக உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் இது குறித்து விசாரணை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்று கூறியிருந்தனர். அரியலூர் குருவிக்காரன் காலனியை சேர்ந்த ராமராஜன் அளித்த மனுவில், கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி போக்குவரத்து துறை அமைச்சரால் 34 நபர்களுக்கு கயர்லாபாத் கிராமத்தை சேர்ந்த லிங்கத்தடிமேடு அருகே பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை எங்களது நிலத்தை அளந்து ஒதுக்கீடு செய்யவில்லை. உடனடியாக ஒதுக்கீடு செய்தால் நாங்கள் அப்பகுதியில் குடியேறுவதற்கு வசதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    • சோலாா் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கும் நெட்வொா்க் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • எல்.டி.சி.டி. 3பி பிரிவில் நேரடி கட்டணமாக யூனிட்டுக்கு ரூ.1.15 உயா்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளா் சங்க நிா்வாகிகள் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் மனு அளித்தனா்.இது குறித்து அவா்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    மின் கட்டண உயா்வால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் கடுமையாக பாதித்துள்ளது. 24 மணி நேரமும் இயங்கக் கூடிய இத்தொழிலில், மின் நுகா்வு என்பது மற்ற துறைகளைக் காட்டிலும் மிக அதிகம்.

    எல்.டி.சி.டி. 3பி பிரிவில் நேரடி கட்டணமாக யூனிட்டுக்கு ரூ.1.15 உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், 8 மணி நேர பீக் ஹவா் கட்டணமாக யூனிட்டுக்கு ரூ. 7.50 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், யூனிட்டுக்கு மேலும் ரூ.1.88 உயா்த்தப்பட்டுள்ளது. இதுதவிர நிலையான கட்டணத்தை கிலோ வாட்டுக்கு ரூ.35இல் இருந்து ரூ.150ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

    ஹெச்.டி. இணைப்புக்கு நேரடி கட்டணம் யூனிட்டுக்கு 40 பைசாவும், பீக் ஹவா் கட்டணம் 8 மணி நேரமாகவும் உயா்த்தப்பட்டுள்ளது. நிலையான கட்டணம் ரூ. 350இல் இருந்து ரூ.550ஆக உயா்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணமானது யூனிட்டுக்கு 30 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்டுதோறும் 6 சதவீத கட்டண உயா்வு என்பது எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாது. இது போன்ற காரணங்களால் தொழில் மிகக் கடுமையான பாதிப்புக்கு தள்ளப்பட்டுள்ளது.

    சோலாா் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கும் நெட்வொா்க் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசைத்தறிகளைபோல, சிறு, குறு தொழில் வரிசையில் நாங்கள் உள்ளோம். எனவே மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சா் மு.பெ.சாமிநாதன், விரைவில் மின் துறை அமைச்சருடன் பேசி ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தாா்.

    • தீபாவளி அன்று தற்காலிக பட்டாசு கடை வ.உ.சி திடலில் அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
    • வ .உ. சி. திடலை சுற்றி சுமார் 50-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் தள்ளுவண்டி கடைகள் மற்றும் கடை அமைய உள்ளது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் சப்-கலெக்டர் அமித்யிடம் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு மனு அளித்தார். மனுவில் வருகின்ற தீபாவளி அன்று தற்காலிக பட்டாசு கடை வ.உ.சி திடலில் அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. வ .உ. சி. திடலில் பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த நகராட்சி நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்ட இடம் ஆகும். வ .உ. சி. திடலை சுற்றி சுமார் 50-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் தள்ளுவண்டி கடைகள் மற்றும் கடை அமைய உள்ளது. பின்புறம் எண்ணை குேடான்கள் உள்ளது.

    இந்த இடத்தில் பட்டாசு கடை அமைக்க பொருத்தமான இடம் இல்லை. இந்த இடம் அதிகமாக போக்குவரத்து ஏற்படும் இடமாகும்.

    திண்டிவனத்தில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பஸ் அனைத்தும் இந்த வழியாக தான் செல்லும் பயணிகள் அதிகளவில் நின்று செல்லும் இடமாக இது உள்ளது. வ.உ.சி. திடலில் பின்புறம் 3 ஹோட்டல்கள் உள்ளன திடீரென ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் மிகப்பெரிய அளவில் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

    எனவே இந்த இடத்தில் தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க அனுமதி தரக் கூடாது என இந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • ஓய்வூதியர்கள் மனு அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது
    • குறைதீர்க்கும் கூட்டத்திற்கு முன்பாக

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே, ஓய்வூதியர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) கலெக்டர் அலுவலகத்தில் 2 பிரதிகளுடன் விண்ணப்பித்து, குறை தீர்க்கும் கூட்டத்திலும் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது."

    • திருமுருகன் பூண்டி சம்பவங்கள் போல் மீண்டும் நடைபெறாமல்தடுக்க தகுந்த நடவடிக்கை செய்ய வேண்டும்.
    • மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து பொதுதொழிலாளர் நல அமைப்பின் பொது செயலாளர் ஈ.பி.அ.சரவணன் மனு அளித்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருப்பூர் அவினாசி சாலையிலுள்ள திருமுருகன் பூண்டிபகுதியிலுள்ள விவேகானந்தா சேவாலயத்தில் பரிதாபமாக 3பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனைஅளிக்கிறது.

    மேலும் இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில்திருப்பூர் பகுதி முழுவதும் இயங்கி வரும் பள்ளி மாணவ -மாணவிகள்தங்கும் விடுதிகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.

    திருமுருகன் பூண்டி சம்பவங்கள் போல் மீண்டும் நடைபெறாமல்தடுக்க தகுந்த நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை மனுக்களாக அளிக்கலாம்.
    • தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;-

    மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், வருவாய் வட்டாட்சியர்கள், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர்கள், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள், இணை இயக்குநர் சுகாதாரபணிகள் ஆகிய துறைகளை கொண்டு மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வருகின்ற 13.10.2022 அன்றுகாலை 11 மணிஅளவில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகவளாகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாற்றுத்தி றனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

    மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவையை மனுக்களாக அளிக்கலாம்.

    மேலும் இது நாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தாங்கள் மாற்றுத்தி றனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் மருத்துவ சான்றுநகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் அளிவிலான தற்போதைய போடடோ 1, கைப்பேசி எண், ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தந்தை சாவில் சந்தேகம் உள்ளது என்று மகன் போலீஸ் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.
    • விபத்தில் இறந்ததாக தகவல் தெரிவித்தனர்

    கரூர்:

    கரூர் மாவட்டம், ஜெகதாபி அடுத்த அல்லாளி கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் இன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

    எனது தந்தை வேலுசாமி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக கரூர் மாவட்டம், க.பரமத்தி வெங்கடரமணசுவாமி புளூ மெட்டல் என்ற கல்குவாரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்திலையில் க.பரமத்தி காவல்நிலைய காவலர் எங்களை தொடர்பு கொண்டு, எனது தந்தை இன்று திருச்சி அரசு, மருத்துவமணையில் இறந்து விட்டதாகவும், அவர் கரூர் காருடையாம்பாளையம் அருகில் கடந்த மாதம் 21-ந் தேதி விபத்து ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமணையில் இறந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், வேறு எந்தவிதமான விரங்களையும் கூறவில்லை

    எனவே எனது தந்தையின் இறப்பில் எனக்கும், என் குடும்பத்தாருக்கும் சந்தேகம் உள்ளது. என் அப்பா பணிபுரிந்த நிறுவனத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தெரிவித்திருந்தார்.

    • ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறி 11 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இது தொடர்பாக கலெக்டரிடம் குடும்பத்தினர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள கழநீர் மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். அவருடன் உறவினர்கள் 11 பேரை கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்து அவர்களுக்கு பொது கண்மாயில் குளிக்கவும், குடிநீர் குழாயை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டதாம். இதுகுறித்து சிக்கல் காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் 11 பேரும் தங்களது வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கலெக்டரிடம் குடும்பத்தினர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

    • ஊராட்சியில் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
    • மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    அப்போது கடுகூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், கடுகூர் ஊராட்சியில் ரூ.5.25 லட்சம் வரை எலக்ட்ரிக்கல், பிளீச்சிங் பவுடர் வாங்கியதாக முறைகேடு நடந்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு காண்பிக்கப்படவில்லை, பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்படவில்லை. மேலும் குடிநீர் வினியோகமும் முறை செய்யப்படுவதில்லை. எனவே மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் கடுகூர் ஊராட்சியில் கணக்குகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

    • மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14-ந் தேதி சி.பி.ஐ. விசாரணை தொடரலாம் என உத்தரவிட்டது.
    • குழுவினர் மைக்கேல்பட்டி பள்ளி மற்றும் விடுதிக்கு வந்து தங்கள் விசாரணையை தொடர்ந்தனர்.

    பூதலூர்,:

    திருக்காட்டுப்பள்ளி -கண்டியூர் சாலையில் மைக்கேல் பட்டியில் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பள்ளி விடுதியில் தங்கி 12ம்வகுப்பு படித்து வந்தவர் அரியலூர் மாவட்டம் வடுதபாளையம் சேர்ந்த முருகானந்தம் என்பவர் மகள் லாவண்யா (17).

    மாணவி லாவண்யா கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி விஷம்குடித்த நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஜனவரி 19ஆம் தேதி உயிரிழந்தார்.

    மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டு ப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த சூழ்நிலையில் விடுதி வார்டன் மற்றும் பள்ளி காப்பாளர் தன்னை மதம் மாற வலியுறுத்தியதால் விஷம் குடித்ததாக லாவண்யா பேசியதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும் லாவண்யாவின் தந்தை முருகானந்தம் மதுரைஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    கடந்த ஜனவரி 31ஆம் தேதி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தினர் மைக்கேல் பட்டி பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர் அன்றைய தினம் மதுரைஐகோர்ட் இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி சிபிஐ விசாரணை தொடரலாம் என கூறியது.

    இதனை அடுத்து சிபிஐ தரப்பில் 24 பக்கம் கொண்ட முதல் தகவலறிக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

    கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி சிபிஐ துணை இயக்குனர் வித்தியா குல்கர்னி தலைமையிலான குழுவினர் மைக்கேல்பட்டி பள்ளி மற்றும் விடுதிக்கு வந்து தங்கள் விசாரணையை தொடர்ந்தனர்.

    அதனைத் தொடர்ந்து பல்வேறு நாட்களில் சிபிஐ அதிகாரிகள் குழு, பள்ளி விடுதி பள்ளி மற்றும் வடுகர்பாளையம் ஆகிய இடங்களிலும், தஞ்சை மருத்துவக் கல்லூரியிலும் விசாரணையை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் குழு துணை சூப்பிரண்ட் சந்தோஷ் குமார், இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் மைக்கேல் பட்டி மேல்நிலைப் பள்ளியில் மீண்டும் விசாரணையை மேற்கொண்டனர்.

    பள்ளியில் படிக்கும் மாணவியர், மாணவியின் பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொ ண்டதாக கூறப்படுகிறது.

    நேற்று பகல் 12 மணிக்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழு 2 மணிக்கு திரும்பி சென்று விட்டு, மீண்டும் மாலை 3 மணிக்கு வந்து விசாரணை தொடர்ந்து 5 மணிக்கு திரும்பி சென்றனர்.

    உச்ச நீதிமன்ற உத்தரவின் படி நடைபெற்று வரும் சிபிஐ விசாரணை இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

    • முத்துநகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்திளர்கள் வசித்து வருகின்றனர்.
    • பூங்கா அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.

    சீர்காழி:

    சீர்காழியில் முத்துநகர் உள்ளது.

    இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்திர்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் பூங்கா அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட வருடமாக வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பூங்கா அமைக்க வலியுறுத்தி சீர்காழி ஆர்.டி.ஓ அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, நகராட்சி ஆணையர் (பொ) செல்வபாலாஜி ஆகியோரை நேரில் சந்தித்து முத்துநகர் தலைவர் சி.அமுதராஜன், செயலாளர் முபாரக் அலி, பொருளாளர் சுரேஷ், 1வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நகர் நிர்வாகிகள் மனுக்கள் அளித்தனர்.

    ×