search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூலிப்படை"

    தஞ்சை அருகே தொழிலாளியை எரித்து கொன்ற மகன் மற்றும் மருமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் வல்லம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வல்லம்:

    தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே உள்ள வல்லம் புதூர் கூத்தக்குடி ஏரி வடிகால் பாசன வாரியில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுபற்றிய புகாரின்பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? அவர் எந்த ஊரை சோந்தவர்? இறந்து கிடந்தவரின் இடது கை முறிந்திருந்ததால் அவரை யாரோ அடித்து கொலை செய்து உடலை தீவைத்து எரித்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள இ.பி.காலனியை சேர்ந்த போர்வெல் தொழிலாளி அருள்ராஜ் (வயது 55) என தெரிய வந்தது.

    இதையடுத்து அருள் ராஜை கொலை செய்தவர்கள் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர். இதில் அருள்ராஜை அவரது மகன், மருமகன் ஆகியோர் கூலிப்படையுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

    அருள்ராஜிக்கும், அவரது மனைவி சின்னம்மாளுக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருள்ராஜ், மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சின்னம்மாள், சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார்.

    இதுபற்றிய தகவல் அருள்ராஜின் மகன் சியாம் இன்பென்ட்ராஜ் (19), மருமகன் சபரிநாதன் (37) ஆகியோருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர்.

    இதனால் சம்பவத்தன்று இரவு அருள்ராஜை நைசாக இருவரும் பேசி வீட்டுக்கு வரவழைத்தனர். பின்னர் அங்கு வைத்து அவரை சரமாரியாக இருவரும் தாக்கினர். மேலும் கூலிப் படையை சேர்ந்த விளார் சேக் அப்துல்லா (26), ரெட்டிபாளையம் கணேசன் (34) ஆகியோரும் அருள் ராஜை தாக்கினர். அவர்கள் தொடர்ந்து தாக்கியதில் அருள்ராஜ் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அருள்ராஜை உடலை வல்லம் புதூர் கூத்தக்குடி ஏரி வடிகால் பாசன வாரிக்கு கொண்டு சென்று அங்கு பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர். பிறகு அங்கிருந்து அவர்கள் 4 பேரும் தப்பி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் அருள்ராஜை கொலை செய்த அவரது மகன் சியாம் இன்பென்ட்ராஜ், மற்றும் கூலிப்படையை சேர்ந்த சேக் அப்துல்லா, கணேசன் ஆகிய 4 பேரையும் வல்லம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகிறார்கள்.

    தொழிலாளியை, அவரது மகன், மருமகன் ஆகியோர் கூலிப்படை உதவியுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் வல்லம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சேதுபாவாசத்திரம் அருகே சொத்து தகராறில் கூலிப்படையை ஏவி தி.மு.க. பிரமுகரை வெட்டி கொன்ற உறவினர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் கோபால் சங்கர் (வயது 45). தி.மு.க. பிரமுகர். பள்ளத்தூர் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர். இவருக்கும், அவரது அண்ணன் மனைவி உஷாராணி, அக்காள் வள்ளியம்மையின் கணவர் அன்பரசு ஆகியோருக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக பட்டுக்கோட்டை கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று கோபால் சங்கர் மோட்டார் சைக்கிளில் பட்டுக்கோட்டை கோர்ட்டுக்கு சென்று ஆஜரானார். பின்னர் அங்கு விசாரணை முடிந்ததும் ஆண்டிக்காடு புறப்பட்டார். அவர் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அருகில் சென்ற போது அவரை பின் தொடர்ந்து ஒரு மர்ம கார் வந்தது. அந்த கார் திடீரென கோபால் சங்கர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நின்றது. இதைத்தொடர்ந்து காரில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய கும்பல் கோபால் சங்கரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதைத்தொடர்ந்து அவரை கொலை செய்த கும்பல் காரில் ஏறி தப்பி சென்று விட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சேதுபாவாசத்திரம் போலீசர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையுண்ட கோபால் சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சொத்து தகராறு காரணமாக கோபால் சங்கரை அவரது அண்ணன் மனைவி உஷாராணி, அக்காள் வள்ளியம்மை கணவர் அன்பரசு ஆகியோர் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசை கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட உஷாராணி மற்றும் கூலிப்படையினரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொலையுண்ட கோபால் சங்கருக்கு ஜான்தேவி (32) என்ற மனைவியும், நிவேதா (8) ஹரிணி (3) ஆகிய 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    முன்னாள் தி.மு.க. கவுன் சிலரை சொந்த அக்காள் கணவர் தூண்டுதலின் பேரில் கூலிப்படையினர் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திசையன்விளை அருகே கூலிப்படையை ஏவி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அப்புவிளையை சேர்ந்தவர் கணபதி பாண்டியனின் மகன் சந்தோஷ் ராஜா (வயது 32). இவர் திருப்பூரில் உள்ள ஒரு நண்பருடன் சேர்ந்து குளிர்பான ஏஜெண்டு எடுத்து நடத்தி வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி கவிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.

    இந்நிலையில் 1-ந் தேதி இரவு சந்தோஷ் ராஜாவின் வீட்டிற்கு ஒரு காரில் 5 பேர் கும்பல் வந்தது. அப்போது வீட்டில் சந்தோஷ் ராஜா மட்டும் இருந்தார். உடனே அந்த கும்பல் அவரை வலுக்கட்டாயமாக தூக்கி காரில் ஏற்றி சாத்தான்குளம் நோக்கி கடத்திச்சென்றது. வழியிலேயே அவரை 5 பேரும் சரமாரியாக தாக்கினர். பின்னர் படுகாயத்துடன் அவரை சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு தப்பி சென்று விட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ் ராஜா உயிரிழந்தார்.

    இந்த கொலை தொடர்பாக கணபதி பாண்டியன் திசையன்விளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகநேரியை சேர்ந்த சிவராமன், தூத்துக்குடியை சேர்ந்த விக்னேஷ், சங்கரமூர்த்தி, பூவேஸ், பாலா ஆகிய 5 பேரை பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருப்பமாக, கள்ளக்காதல் விவகாரத்தில் சந்தோஷ் ராஜா கொலை செய்யப்பட்ட பரபரப்பு தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

    கொலை செய்யப்பட்ட சந்தோஷ் ராஜாவின் அத்தை வீடு ஆறுமுகநேரியில் உள்ளது. இதனால் அவர் ஆறுமுகநேரிக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான ராதாகிருஷ்ணன் என்பவரின் அலுவலகத்தில் வேலை பார்த்த ஒரு பெண்ணுடன் சந்தோஷ் ராஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அந்த பெண்ணுடன் முகநூலிலும் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் ராதாகிருஷ்ணனுக்கு தெரியவந்தது. உடனே அவர் சந்தோஷ் ராஜாவை செல்போனில் தொடர்பு கொண்டு பலமுறை எச்சரித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் ராஜா, ராதாகிருஷ்ணன் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக தெரிகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் மற்றும் சிலர் சேர்ந்து சந்தோஷ் ராஜாவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.

    இதற்கு ஏதுவாக சந்தோஷ் ராஜாவின் பெற்றோர் நெல்லையில் உள்ள இளைய மகனின் வீட்டில் தங்கியிருந்தது அவர்களுக்கு தெரியவந்தது. எனவே வீட்டில் தனியாக இருந்த சந்தோஷ் ராஜாவை கூலிப்படையை ஏவி காரில் கடத்திச்சென்று கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திசெல்வி மற்றும் போலீசார் கூலிப்படையைச் சேர்ந்த சிவராமன் உள்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலரை பிடிக்க இன்ஸ்பெக்டர் சந்திசெல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ரியல் எஸ்டேட் அதிபரான ராதாகிருஷ்ணன் மற்றும் இதில் தொடர்புடைய சிலரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த ராதாகிருஷ்ணனை இன்று காலையில் போலீசார் கைது செய்தனர். அவரை உவரி போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தோஷ் ராஜா கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews
    ×