search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவாகரத்து"

    மெக்சிகோவில் ஒரு நபர், விவாகரத்தான தன் மனைவி மீது சந்தேகமடைந்து அவரை வேவு பார்க்கப்போய் வசமாக மாட்டிக்கொண்டார். #MexicoMan
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் போர்டோ பெனஸ்கோ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்து வாழ்கிறார். இருந்தபோதும் தனது மனைவி மீதான சந்தேகப்பார்வை குறையவில்லை. இதனால் தனது மனைவி என்ன செய்கிறாள் என்பதை வேவு பார்க்க திட்டமிட்ட அவர், மனைவியின் வீட்டின் அடியில் துளையிட்டு உள்ளே நுழைய முயற்சித்துள்ளார்.

    அவரது உருவத்திற்கேற்ப துளையிடாததால் வசமாக மாட்டிக்கொண்ட அவர், உள்ளே நுழைய முடியாமலும் வெளியே வரமுடியாமலும் அவதிப்பட்டு உதவிக்கு சப்தமிட்டு அழைத்துள்ளார். தன் வீட்டிற்கு பின்புறம் இருந்து விசித்திரமான சத்தம் வருவதைக் கவனித்த அந்தப் பெண், பூனையாக இருக்கலாம் என நினைத்துள்ளார்.

    அதன்பின்னர் சத்தம் அதிகமாகவே, அந்தப்பெண் வீட்டின் பின்புறம் சென்று பார்த்துள்ளார். அப்போது, அங்கு தன் வீட்டின் அடியில் சுரங்கப்பாதை தோண்டியிருப்பதும், அதனுள் முன்னாள் கணவர் சிக்கிக்கொண்டிருப்பதையும் அறிந்தார்.

    இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை மீட்டனர். சுமார் 24 மணி நேரம் சுரங்கத்தில் மாட்டிக்கொண்டதால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பிறகு அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #MexicoMan
    பெற்றோர் தங்களுக்குள்ளான சண்டையால் குழந்தையிடம் பரிவாக பேசாமல், கவனிக்காமல், அவர்களின் தேவைகளை பார்த்துக்கொள்ளாமல் இருப்பதால் குழந்தைகள் தாம் தனிமைபடுத்தப்பட்டு இருப்பதுபோல உணர்கிறார்கள்.
    பெற்றோர்க்கு இடையிலான விவாகரத்து பிரச்சனையால் குழந்தைகள் மனதளவிலும், உடலளவிலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் பெற்றோர் தங்களுக்குள்ளான சண்டையால் குழந்தையிடம் பரிவாக பேசாமல், கவனிக்காமல், அவர்களின் தேவைகளை பார்த்துக்கொள்ளாமல் இருப்பதால் குழந்தைகள் தாம் தனிமைபடுத்தப்பட்டு இருப்பதுபோல உணர்கிறார்கள்.

    குழந்தைப் பருவ ஆரோக்கிய வளர்ச்சிக்கு பெற்றோரின் அரவணைப்பும், அன்பும் சரியாக கிடைக்காமல் தன்னை மாற்றுத்திறனாளிக்கு இணையாக நினைப்பதுடன், அச்சூழல் குழந்தைகளை வன்முறை குணம் கொண்டவர்களாகவும் மாற்றிவிடுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் தன் அம்மா-அப்பா இருவரிடமும் இருந்து அன்பான அரவணைப்பும், அச்சமில்லாத வளர்ப்பு முறையும் கட்டாயம் கிடைக்க வேண்டும்.

    எல்லா பிரச்னைகளும் மனம் விட்டுப் பேசித் தீர்க்கக் கூடியவையே. கணவன் - மனைவிக்கு இடையேயும் சண்டை வருவது இயல்புதான். அதனை ஆரம்பக் கட்டத்திலேயே குழந்தைகள் பார்வையில் இல்லாத வகையில், தங்களுக்குள் பேசித் தீர்த்து வன்மத்தை வளர்க்காமல் அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழ்கையை இன்பமாகக் கழிக்கலாம். குறிப்பாக ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ரோல்மாடல் தன் பெற்றோர்தான்.

    அதன்படி தன் பெற்றோரைப் போலவே என் வாழ்க்கையும் மகிழ்ச்சியும், முடிந்தவரையில் பிறருக்குப் பயன்தரும் வகையிலும் அமைய வேண்டும் என ஒரு குழந்தை நினைக்க வேண்டும். மாறாக தன் பெற்றோரின் சண்டை, வன்மத்தைப் பார்த்து வளர்ந்து, அதுப்படியே தன் வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளக் கூடாது.

    குழந்தைகள் மனித வளத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. அவர்கள் இருக்கும் இடத்தை மிகவும் மகிழ்ச்சியானதாக மாற்றிவிடுவார்கள். அந்த மகிழ்ச்சி பெற்றோர்கள், தாத்தா-பாட்டி, உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், சமூகத்தினர் என எல்லோர் வாயிலாகவும் கிடைக்க வேண்டும். அதில் முதலானவர்களும் முடிவானவர்களும் பெற்றோரே.

    உங்கள் குழந்தை பலர் போற்றும் வண்ணம் இன்பமாய் வாழவேண்டுமா அல்லது தங்களால் வாழ்க்கையையே இழக்க வேண்டுமா என்பது பெற்றோராகிய நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
    உலகிலேயே அதிக அளவில் ரூ.2½ லட்சம் கோடியை தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுக்கிறார் அமேசான் நிறுவன தலைவர். #Amazon #JeffBezos #MacKenzie #Divorce
    நியூயார்க் :

    உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த பில்கேட்சை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (வயது 55). இவரது தற்போதைய சொத்து மதிப்பு 136 பில்லியன் டாலர் ஆகும்.

    ஜெப் பெசோஸ் அமேசான் நிறுவன தலைவராகவும், பெரிய கோடீஸ்வரராகவும் ஆவதற்கு முன்பே, நாவலாசிரியரான மெக்கின்சியை (48) காதலித்து, திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் 1993 செப்டம்பரில் நடந்தது. அதன்பின்னர் 1994-ம் ஆண்டு ஜூலை மாதம் அமேசான் நிறுவனத்தை ஜெப் பெசோஸ் தொடங்கினார்.

    இந்நிறுவனம் உலகம் முழுவதும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றதால் லாபத்தை அள்ளிக்குவித்தது. இதன் மூலம் ஜெப் பெசோஸ் உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.

    ஜெப் பெசோஸ்-மெக்கின்சி தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. அத்துடன் ஒரு பெண் குழந்தையை அவர்கள் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்துவந்த ஜெப் பெசோஸ் மற்றும் மெக்கின்சி ஆகிய இருவரும் கடந்த ஜனவரி மாதம் தங்களது விவாகரத்து முடிவை அறிவித்தனர். அதன்படி நேற்று இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.

    அமெரிக்க சட்டப்படி விவாகரத்தின் போது கணவனின் சொத்தில் 50 சதவீதம் வரை மனைவி ஜீவனாம்சமாக பெற முடியும். அதன்படி அமேசான் நிறுவனத்தில் ஜெப் பெசோஸ் வைத்துள்ள 16 சதவீத பங்குகளில் பாதியளவான 8 சதவீத பங்குகளை மெக்கின்சிக்கு கொடுக்க வேண்டும். இதன் மூலம் அவர் 68 பில்லியன் டாலர் சொத்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.



    ஆனால் 4 சதவீத பங்குகளை மெக்கின்சிக்கு இழப்பீடாக அளிக்க ஜெப் பெசோஸ் ஒப்புக்கொண்டார். இந்த பங்குகளின் மதிப்பு 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி) ஆகும்.

    மெக்கின்சி இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். அத்துடன் ‘வா‌ஷிங்டன் போஸ்ட்’ மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘பூளு ஆர்ஜின்’ ஆகிய நிறுவனங்களில் தனக்கு இருக்கும் பங்குகளை கணவருக்கு விட்டுக்கொடுப்பதாக மெக்கின்சி தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து இருவரும் விவகாரத்து சொத்து உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இந்த தகவலை இருவரும் தனித்தனியாக தங்களின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தனர்.

    ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடியை மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுப்பதன் மூலம் உலகிலேயே அதிக தொகையை ஜீவனாம்சமாக கொடுத்தவர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகிறார் ஜெப் பேசோஸ்.

    தனது மொத்த சொத்து மதிப்பில் 25 சதவீதத்தை மனைவிக்கு கொடுத்தாலும் உலகின் முதல் பணக்காரராக ஜெப் பேசோஸ் தொடர்கிறார்.

    அதே போல் கணவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி பெற்றதன் மூலம் மெக்கின்சி, உலகின் 3-வது மிகப்பெரிய பெண் பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். #Amazon #JeffBezos #MacKenzie #Divorce 
    செய்யாறு அருகே மனைவியை மண்எண்ணை ஊற்றி தீவைத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

    செய்யாறு:

    செய்யாறு அருகே கீழ்புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 40). இவரது மனைவி நதியா (33). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. தம்பதிக்கு குழந்தை இல்லை. இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்று பார்த்திபன் தனது மனைவி நதியாவிடம் உனக்கு இனிமேலும் குழந்தை பிறக்காது. எனவே இந்த வெள்ளை காகிதத்தில் கை எழுத்து போடுமாறு கேட்டு சண்டை போட்டுள்ளார். அதற்கு நதியா மறுப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த பார்த்திபன் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து நதியாவின் மீது ஊற்றி தீவைத்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் நதியாவை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்ைக்காக சென்னை அரசு ஆபத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து நதியாவின் உறவினர்கள் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து பார்த்திபனை கைது செய்தனர்.

    இந்தியாவில் தனிநபர் சட்டத்தின்கீழ் விவாகரத்து கோரும் சட்டவிதியில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்கும் சட்டத்திருத்த மசோதா இன்று பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. #PersonalLawsAmendmentBill #LokSabha
    புதுடெல்லி:

    மலட்டுத்தன்மை, தீராத நோய் பாதிப்பு ஆகியவற்றை காரணம்காட்டி கணவனோ, மனைவியோ விவாகரத்து கோரும் முறை நமது நாட்டில் நடைமுறையில் உள்ளது.



    இந்த தீராத நோய்கள் பட்டியலில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்க இந்திய தனிநபர் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய மந்திரிசபை கடந்த ஆண்டு தீர்மானித்தது.

    இந்நிலையில், தனிநபர் சட்டத்தின்கீழ் விவாகரத்து கோரும் சட்டவிதியில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்கும் சட்டத்திருத்தம் பாராளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. #PersonalLawsAmendmentBill #LokSabha
    வெளிநாட்டு மாப்பிள்ளை எனக்கூறி சில மாதங்கள் சுகம் அனுபவித்துவிட்டு விவாகரத்து செய்யும் கணவர்களை நாடு கடத்தி இந்தியாவில் வழக்கு தொடர தனிச்சட்டம் தேவை என பாதிக்கப்பட்ட பெண்கள் வலியுறுத்துகின்றனர். #Agonisedwomen #NRIhusbands
    புதுடெல்லி:

    எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய பிரபல நாவல்களில் ஒன்று ‘47 நாட்கள்’. பிரான்ஸ் நாட்டில் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டு தாம்பத்தியம் நடத்திவரும் கதாநாயகன், இந்தியாவுக்கு வந்து ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்ணான விஷாலியை திருமணம் செய்துகொண்டு பிரான்சுக்கு அழைத்து செல்கிறான்.

    இரண்டாவதாக கட்டிய மனைவியான இந்தியப்பெண்ணை தனது சகோதரியாக நடிக்குமாறு வலியுறுத்தும் அவன், அவள் கண்ணெதிரே தனது முதல் மனைவியுடன் கும்மாளம் அடிக்கிறான். சிகரெட்டால் சுட்டும், ஸ்டவ் அடுப்பில் வைத்து உள்ளங்கையை எரித்தும் விஷாலியை கடும் சித்திரவதைக்கும் உள்ளாக்குகிறான்.

    அவளை பைத்தியமாக மாற்றும் அளவுக்கு கொடுமைப்படுத்தும் அந்த வஞ்சகனிடம் இருந்து கதாநாயகி எப்படி தப்பிக்கிறார்? அவர் தனது தாய்நாடான இந்தியாவுக்கு திரும்பிவர முடிந்ததா, இல்லையா? என்பதுதான் ‘47 நாட்கள்’ நாவலின் கதைக்களம். திருமணமான 47 நாட்களில் கதாநாயகி சந்தித்த அனுபவங்களின் கோர்வைதான் கதையின் முழுப் பயணமும்.

    இந்த நாவலை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இதே பெயரில் திரைப்படமாக எடுத்திருந்தார். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இந்தப்படம் ‘வெளிநாட்டு மாப்பிள்ளை மோகம்’ என்னும் வறட்டு கவுரவத்தை சற்று அசைத்துப் பார்த்தது எனலாம்.



    இந்தப் படத்தின் கதாநாயகியாக ஜெயப்பிரதாவும், கொடுமைக்கார கணவனாக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் தங்களது கதாபாத்திரங்களை கனக்கச்சிதமாக செய்திருந்தனர்.

    எனினும், எல்லோருக்கும் இதேபோல் ஆகி விடுமா? இப்படி எல்லாம் நடக்குமா? என்னும் இருதரப்பு வாதத்துக்கு இந்தப்படம் திரி கொளுத்திப் போட்டது.

    ஆனால், 40 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இந்த விவாதத்தின் தீர்ப்பு 50-50 ஆக உள்ளதாக தெரியவந்துள்ளது. வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செய்யப்படும் இதுபோன்ற திருமணங்களில் சரிபாதி அளவுக்கு திருப்திகரமாக அமையாமல், ஏதோ ஒரு வகையில் விரக்தியிலும், சோகத்திலும், தோல்வியிலும் முடிவதாகதான் கருத வேண்டியுள்ளது.

    இந்நிலையில், வெளிநாட்டு மாப்பிள்ளை எனக்கூறி திருமணம் செய்து அழைத்துச் சென்று தங்களிடம் சில மாதங்கள் சுகம் அனுபவித்துவிட்டு, வேறொருத்தியை திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்தில் விவாகரத்து செய்யும் கணவர்களை நாடு கடத்தி இந்தியாவில் வழக்கு தொடர தனிச்சட்டம் தேவை என பாதிக்கப்பட்ட பல பெண்கள் பலமாக வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.

    47 நாட்கள் படத்தின் கதைக்களம்கூட சற்று நீளமானது என்னும் அளவுக்கு சில பெண்களின் வாழ்க்கையில் தங்களது கணவர்களுடனான திருமண பந்தம் 40 நாட்களுக்குள் முடிந்துள்ளது.

    டெல்லியை சேர்ந்த 19 வயது இளம்பெண் பரமிந்தர் கவுர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஏராளமான பணத்தை வரதட்சணையாக தந்து பரமிந்தர் கவுரை அவரது பெற்றோர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆசை கனவுகளுடன் தொடங்கிய இல்லற வாழ்க்கை பரமிந்தர் கவுருக்கு ஆரம்பத்தில் தேனாக இனித்தது.

    இந்நிலையில், அவரது கணவர் திருமணமான நாற்பதாவது நாளில் மேல்படிப்புக்காக கனடா சென்றார். அதன் பின்னர், மாமனார்-மாமியாரின் வசைபாடல்களுக்கும், அடி, உதை,சித்ரவதைக்கும் இலக்கானார், பரமிந்தர் கவுர்.

    நாங்கள் உன்னை வைத்துக்கொண்டு சாப்பாடு போட வேண்டும் என்றால் உன் பெற்றோரிடம் இருந்து மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாயை வாங்கிவர வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் வீட்டில் இருக்கக்கூடாது என்று விரட்டி விட்டனர்.

    நிற்க நிழலில்லாமல் தாய்வீட்டில் அவர் ஒதுங்கி இருந்த வேளையில் மாமனாரும் மாமியாரும் ரகசியமாக கனடாவுக்கு பறந்து விட்டனர். சில நாட்களில் பரமிந்தர் கவுரை அங்கிருந்தபடியே ஒருதலைபட்சமாக விவாகரத்து செய்த அவரது கணவர் சில மாதங்களுக்கு பின்னர் மற்றொரு திருமணம் செய்து கொண்டார்.

    இதேபோல், ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்துவந்த ஷில்பா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் கடந்த 2010-ம் ஆண்டில் அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டு, பல்லாயிரம் எதிர்கால கனவுகளுடன் புதுக்குடித்தனம் நடத்துவதற்காக கணவருடன் கலிபோர்னியா நகருக்கு சென்றார்.

    ஆனால், அங்குபோய் சேர்ந்ததும் ஷில்பாவிடம் இருந்த பணத்தையும் சில முக்கியமான ஆவணங்களையும் பறித்துக்கொண்ட அவரது கணவர், ஒரு செக்ஸ் அடிமையைவிட மோசமான முறையில் தனது உடல் சுகத்துக்கு பயன்படுத்தி கொண்டார்.

    ‘ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’ என்பதுபோல் தனது ஆசையும், மோகமும் தீர்ந்த பின்னர் மூன்று மாதங்களுக்கு பிறகு வீட்டிலிருந்து விரட்டி விட்டார். எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியுடனும் 8 வயது பெண் குழந்தையுடனும் தற்போது டெல்லியில் பெற்றோர் வீட்டில் வாழ்ந்துவரும் ஷில்பா, முன்னர் தனது கணவர்மீது டெல்லி போலீசில் புகார் அளித்திருந்தார்.

    ஆனால், அவர் இதுவரை ஒருமுறைகூட இந்தியாவுக்கு வராததால் ஷில்பாவின் புகார் கிணற்றில் போட்ட கல்லாக காவல் நிலையத்தில் புதைந்து கிடக்கிறது. தன்னை கைவிட்ட கணவர் சமீபத்தில் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட விபரத்தை சமூக வலைத்தளம் மூலம் அறிந்த ஷில்பாவை போல பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

    இதுபோல் மனைவிக்கு துரோகம் செய்து இன்னொருத்திக்கு ஆசைப்பட்டு விவாகரத்து செய்யும் கணவர்கள்மீது இன்றுவரை பெண்களை கொடுமைப்படுத்தும் இ.பி.கோ.498A மற்றும் 406 (நம்பிக்கை துரோகம்) ஆகிய சட்டப்பிரிவின்கீழ் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் அளிக்கவோ, வெளிநாடுகளில் இருந்தபடி விவாகரத்து செய்துவிட்டு, அங்கேயே பதுங்கியவாறு உல்லாசமாக வாழ்ந்துவரும் நபர்களை நாடுகடத்தி இந்தியாவுக்கு அழைத்துவந்து சட்டரீதியாக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவோ தகுந்த சட்டங்கள் ஏதும் இதுவரை உருவாக்கப்படவில்லை.

    கற்பழிப்பு, கொலை செய்யும் முயற்சியுடன் மூர்க்கத்தனமாக தாக்குவது, மோசடி ஆகிய கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் இதைப்போன்ற கயவர்களை தண்டிக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டுகளின்படி வழக்கு தொடர்ந்தால் அவர்களை சுலபமாகவும், விரைவாகவும் இந்தியாவுக்கு அழைத்துவந்து தண்டிக்க முடியும் என பாதிக்கப்பட்டவர்கள் விரும்புகின்றனர்.

    சில கடுமையான நிபந்தனைகளுடன் வெளிநாடுவாழ் இந்தியர்கள் திருமண சட்டம் தொடர்பாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் புதிய மசோதா முன்வைக்கப்படும் என மத்திய அரசின் மகளிர் மட்டும் குழந்தைகள் நல அமைச்சகம் முன்னர் தெரிவித்திருந்தது.

    ஆனால், அப்படி எந்த மசோதாவும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் புலம்புகின்றனர்.

    இவர்களின் குமுறல்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர், இப்படி பாதிக்கப்படும்பெண்களைப்பற்றி மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. மனைவிகளை கைவிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 33 பேரின் பாஸ்போர்ட்களை வெளியுறவுத்துறை அமைச்சகம் முடக்கி வைத்துள்ளது. 8 பேரை தேடப்படும் நபராக அறிவித்து நோட்டீஸ்கள் விட்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

    மேலும், வெளிநாடுவாழ் இந்தியர்கள் தொடர்பான திருமண சட்டத்திலும் சில மாற்றங்களை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருமணமான ஒருவாரத்துக்குள் கட்டாயமாக அந்த திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். அப்படி பதிவு செய்ய தவறினால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட பரிந்துரைகள் மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    ஆனால், பெண்ணுரிமைவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்து வேறுவிதமாக உள்ளது. பெண்கள் தொடர்பான விவகாரங்களை கையாளுவதில் மத்திய அரசு வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இஸ்லாமிய பெண்களை முத்தலாக் முறையில் திடீரென்று விவாகரத்து செய்வதை தடுக்கும் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியே தீருவோம் என்று முரண்டுபிடிக்கும் மத்திய அரசு, வெளிநாடுவாழ் கணவர்களால் விவாகரத்து செய்யப்படும் எங்களைப்போன்ற பெண்கள் விவாகரத்தில் எந்த அக்கறையும் காட்டாதது ஏன்? என அவர்கள் கொந்தளிக்கின்றனர்.

    பாதிக்கப்பட்ட பெண்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்தான் என இந்த அரசு கருத வேண்டும். அவர்களை அரசும் கைவிட்டு விடக்கூடாது.

    இதைப்போன்ற பெண்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் இந்திய அரசும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களும் இணைந்து செயலாற்றி, குற்றம் செய்தவர்களை இங்கு அழைத்துவந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் அனைத்து நாடுகளுக்கும் பொருந்துமாறு பலமான தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என அவர்கள் தீவிரமாகவும் பலமாகவும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். #Agonisedwomen #NRIhusbands
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகர்களுள் ஒருவரான விஷ்ணு விஷால் சட்டப்பூர்வமாக தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். #VishnuVishal #Divorce
    ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானர் விஷ்ணு விஷால். குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ராட்சசன் படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இவர், நடிகரும், இயக்குநருமான கே.நட்ராஜ் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற ஒரு மகன் உள்ளார்.



    இந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சில மாதங்களுக்கு முன்பு கோர்ட்டில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்தனர். இப்போது அவர்களுக்கு கோர்ட்டு விவாகரத்து வழங்கி உள்ளது. இதுகுறித்து விஷ்ணு விஷால் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    “நானும், ரஜினியும் ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்கிறோம். இப்போது எங்களுக்கு சட்டபூர்வமாக விவாகரத்து கிடைத்துள்ளது. எங்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு நல்ல பெற்றோர்களாக இருப்பது எங்களின் முக்கிய கடமையாகும். அவனுக்கு நல்லதை செய்வோம். நாங்கள் சில சந்தோஷமான ஆண்டுகளை ஒன்றாக கழித்து இருக்கிறோம். இனிமேலும் நல்ல நண்பர்களாக இருப்போம். ஒருவரையொருவர் மதிப்போம். எங்கள் மகன் மற்றும் இரு குடும்பங்களின் நலன் கருதி எங்களுடைய தனிப்பட்ட சுதந்திரத்துக்கு மதிப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார். #VishnuVishal #RajiniNatraj #Divorce

    லாலு பிரசாத்தின் மூத்த மகன் திருமணம் ஆன 6 மாதத்தில் மனைவியிடம் இருந்து விவாகரத்து அளிக்கும்படி கோரி மனு தாக்கல் செய்துள்ளார். #TejPratapYadav
    பாட்னா:

    பீகார் முன்னாள் முதல்-மந்திரிகள் லாலு பிரசாத்-ராப்ரி தேவி தம்பதியினரின் மூத்த மகன் தேஜ் பிரதாப். இவருக்கும், முன்னாள் முதல்-மந்திரி தரோகா பிரசாத் ராயின் பேத்தி ஐஸ்வர்யாவுக்கும் இந்த ஆண்டு மே மாதம் 12-ந்தேதி பாட்னா நகரில் திருமணம் நடந்தது.



    இந்த நிலையில் தேஜ் பிரதாப் நேற்று பாட்னாவில் உள்ள சிட்டி சிவில் கோர்ட்டில் மனைவியிடம் இருந்து விவாகரத்து அளிக்கும்படி கோரி மனு தாக்கல் செய்தார். அதில், ‘ஐஸ்வர்யாவுடன் தொடர்ந்து வாழ்வதற்கு விரும்பவில்லை. ஏனெனில் இருவருக்கும் இணக்கமாக செல்வதில் பிரச்சினை உள்ளது. எனவே விவாகரத்து அளிக்கும்படி வேண்டுகிறேன்’ என்று கூறப்பட்டு உள்ளது.

    கோர்ட்டில் மனு தாக்கல் செய்த பின்பு ராஞ்சி நகரில் உள்ள ஆர்.ஐ.எம்.எஸ். மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் தந்தை லாலு பிரசாத்தை, தேஜ் பிரதாப் சந்தித்து பேசினார். மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள லாலு பிரசாத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #TejPratapYadav
    கோத்தகிரி அருகே மாடு மேய்த்து கம்யூட்டர் படிக்க வைத்த மனைவி விவாகரத்து கேட்ட வேதனையில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தர்மோனா பகுதியை சேர்ந்தவர் டேனியல் (வயது 32). மாடு வளர்த்து வருகிறார். இவருக்கும் மந்தாடா பகுதியை சேர்ந்த ‌ஷர்மிளா (27) என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.

    இந்நிலையில் டேனியல் மாடு வளர்த்து பால் கறந்து மனைவியை கம்ப்பூட்டர் கோர்ஸ் படிக்க வைத்தார். கம்ப்யூட்டர் படிப்பு முடிந்ததும் நீங்கள் மாடு மேய்க்கிறீர்கள், நான் கம்ப்யூட்டர் படித்து விட்டேன். எப்படி பொருந்தும் என்று ‌ஷர்மிளா கூறினார். இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ‌ஷர்மிளா கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்து விவாகரத்து கேட்டு கணவருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

    இது குறித்தான வழக்கு விசாரணை கோத்தகிரி கோர்ட்டில் கடந்த மாதம் தொடங்கியது. இன்று (5-ந்தேதி) மீண்டும் விசாரிக்க இருந்தது.

    இந்நிலையில் மனைவி விவாகரத்து கேட்ட அதிர்ச்சியிலும் சோகத்திலும் இருந்த டேனியல் நேற்று இரவு வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். வெகுநேரம் ஆன பின்னர் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது டேனியல் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    முதல் மனைவியை விவாகரத்து செய்வதாக கூறி தஞ்சை பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த ஏட்டு மீது போலீசில் புகார் செய்துள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கும், கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக அந்த பெண் அஜித்குமாரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து முதல் மனைவியை விவாகரத்து செய்ய போவதாக கூறி அஜித்குமார் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தஞ்சை ஜெபமாலை புரத்தை சேர்ந்த கோகிலா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் கோகிலாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது அவர் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதற்கிடையே அஜித்குமார் தனது முதல் மனைவியிடம் சமரசம் பேசி அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதுபற்றி அறிந்த கோகிலா மற்றும் அவரது உறவினர்கள் அஜித்குமாரிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். அதற்கு அஜித்குமார் முதல் மனைவியுடனும் சேர்ந்து வாழ்வேன் என்று கூறியுள்ளார்.

    இதுபற்றி 2-வது மனைவி கோகிலா வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் அஜித்குமார் முதல் மனைவியை விவாகரத்து செய்து விடுவேன் என்று தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக கூறியுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விவாகரத்து செய்ய விரும்புகிறவர்களும், விவாகரத்து செய்து கொண்டவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. அவற்றை பற்றி பார்க்கலாம்.
    விவாகரத்து செய்யவிரும்புகிறவர்களும், விவாகரத்து செய்து கொண்டவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

    * விவாகரத்து செய்துதான் ஆகவேண்டும் என்ற முடிவுக்கு நீங்கள் வந்தாலும், சக மனிதர்களிடம் நடப்பதுபோல் உங்கள் துணை யிடமும் மதிப்பாக நடந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். கோபம், குரோதத்தால் கண்டபடி பேசிவிட வேண்டாம். அவதூறுகளையும் பரப்பவேண்டாம். உங்கள் கண்முன்னே துணை அழிந்துபோய்விட வேண்டும் என்று கருதாமல், பெருந்தன்மையையுடன் நடந்து கொள்வதற்கு முடிந்த அளவு முயற்சி செய்யுங்கள். முடியாவிட்டால் அமைதியாக இருங்கள்.

    * துணையை பிடிக்காவிட்டால், அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் இகழ்ந்து பேசாதீர்கள். உங்களுக்கு பிடிக்காத இணையாக இருந்தாலும் அவரது குடும்பத்தோடு இருக்கும் தொடர்புகளை எல்லாம் அறுத்தெறிந்துவிட வேண்டாம்.

    * விவாகரத்து செய்வதற்கு முன்பு கோப தாபங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, ஒருசில முறை தனியாக அமர்ந்து இருவரும் மனம்விட்டு பேச முயற்சி செய்யுங்கள். அப்படி பேசினாலும் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்று கருதினாலும், மென்மையாக உங்கள் தரப்பு கருத்துகளை அழுத்தம் திருத்தமாக எடுத்துவைக்க அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அது நிச்சயம் என்றாவது ஒருநாள் பலன் தரும்.

    * சந்தர்ப்ப சூழ்நிலைகளால் என்ன தவறு நடந்திருந்தாலும் ‘நடத்தை கெட்டவள்’ என்று பெண்ணையோ, ‘நம்பிக்கைத் துரோகி’ என்று ஆணையோ பேசவேண்டாம். திட்டமிட்டு கேவலமான தகவலை பரப்பிக்கொண்டிருக்கவும் வேண்டாம்.



    * மூன்றாம் நபர்களிடம் பேசும்போது, ‘ஏதோ எங்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் பிரிந்து வாழலாம் என்று நினைக்கிறோம்’ என்று மட்டும் சொல்லுங்கள். துணையை பற்றி குறை சொல்லி உங்களை நியாயப்படுத்த முயற்சிக்காதீர்கள்.

    * விவாகரத்து செய்தே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும், உடனே அதை நிறைவேற்றாமல் 6 மாதங்கள் தனித்தனியாக பிரிந்து வாழுங்கள். ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் தனியாக வாழ்ந்து பாருங்கள். அந்த தனிமை வாழ்க்கை கூட உங்களுக்கு நல்ல பாடங்களை கற்றுத் தரலாம். மாற்றத்தை ஏற்படுத்தவும் செய்யலாம்.

    * விவாகரத்து செய்த தம்பதிகள் ‘காலம் முழுக்க இனி நீதான் எனக்கு முதல் எதிரி’, என்பதுபோல் கங்கணம்கட்டிக்கொண்டு, விரோதத்தையும், வன்மத்தையும் வளர்க்காதீர்கள். ‘பிரிந்துவிட்டோம். அதோடு நமக்குள் இருந்த பிரச்சினை முடிந்துவிட்டது’ என்று அமைதி காத்திடுங்கள். அவரவர் வேலையில் கவனத்தை செலுத்துங்கள்.

    * குழந்தைகள் இருந்தால், தந்தையை பற்றி தாயோ- தாயை பற்றி தந்தையோ குந்தைகளிடம் தரக்குறைவாக பேசவேண்டாம். நல்ல விஷயங்கள் இருந்தால் மட்டும் பேசுங்கள் அல்லது அமைதி காத்திடுங்கள். மன அமைதிக்கு தியானம், மியூசிக் தெரபி போன்றவைகளில் ஈடுபடுங்கள்.

    * மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்பதை உணருங்கள். உங்கள் வாழ்க்கையில் மீண்டும் மாற்றங்கள் ஏற்படலாம். மீண்டும் கணவன்-மனைவி என்ற உறவை புதுப்பிக்கும் கட்டாயத்தை காலம் உருவாக்கும் என்பதை உணர்ந்து, மிக மோசமான தருணங்களில்கூட நிதானமாக நடந்துகொள்ளுங்கள். அவரவர் சுயமரியாதைக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    - விஜயலட்சுமி பந்தையன் 
    பாகிஸ்தான் நாட்டில் முதல்முறையாக சிந்து மாகாணத்தில் இந்து மதத்தை சேர்ந்த விவாகரத்தான, விதவைப் பெண்கள் மறுமணத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. #divorcedHinduwomen
    இஸ்லாமாபாத்:

    இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் விவாகரத்து பெறவும், விவாகரத்தான பெண்கள் மற்றும் கணவரை இழந்த விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்ளவும் அனுமதி அளிக்கும் வகையில் இந்து திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் நந்த்குமார் என்பவர் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாண சட்டசபையில்  மசோதா ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

    திருமண பருவத்தை எட்டாத வயதுள்ள சிறுமிகளை திருமணம் செய்யவும் தடை விதிக்க கோரிய இந்த சட்டதிருத்தம் சிந்து மாகாண சட்டசபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கவர்னரின் கையொப்பத்துக்கு பிறகு கடந்த வாரம் இந்த சட்டம் அமலுக்கு வந்தது.

    இந்த புதிய சட்டத்தின்படி திருமணமான  இந்து மதத்தை சேர்ந்த ஆண், பெண் இருவரும் இனி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகலாம். விவாகரத்தான பெண் மற்றும் அவரது குழந்தைகளுக்கு பொருளாதார பாதுகாப்பு வழங்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது.

    பாகிஸ்தானில் இதற்கு முன்னதாக  விவாகரத்து கோரி இந்து பெண்கள் நீதிமன்றங்களை நாட முடியாத நிலை நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. #HinduwomeninSindh #divorcedHinduwomen #Hinduwomenallowedtoremarry
    ×