search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார்"

    • மத்திய பட்ஜெட்டில் பீகாருக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு.
    • பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்த திட்டமும் இல்லை.

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு அடுத்தபடியாக தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும் வென்று முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக உள்ளன.

    இந்நிலையில் 2024- 25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

    அப்போது, மத்திய பட்ஜெட்டில் பீகாரில் புதிய சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

    பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று நேற்று தெரிவித்த மத்திய அரசு தற்போது பீகார் மாநிலதிக்ரு சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

    இந்நிலையில், பட்ஜெட் தொடர்பாக பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், "தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என்று நான் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்தேன். எங்கள் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று கோரினேன்.

    பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் முன்னரே அது கிடைக்காது என்று பலரும் பேசினார்கள். இப்போது பீகார் மாநிலத்திற்கு சிறப்பு நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது" என்று பேசியுள்ளார்.

    • பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்பது நிதிஷ்குமாரின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
    • பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று மத்திய நிதி இணையமைச்சர் கூறியுள்ளார்.

    இந்தியாவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்து மோடி மூன்றாவது முறையாக பிரதமரானார். இந்த கூட்டணியில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

    பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்பது கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.

    இந்நிலையில், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று மத்திய நிதி இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பாராளுமன்றத்தில் இன்று எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.

    மத்திய அரசின் இந்த முடிவை பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில், நிதிஷ்குமார் மற்றும் அவரது கட்சியின் தலைவர்கள் மத்திய அரசின் அதிகாரத்தை அனுபவித்து கொண்டு, சிறப்பு அந்தஸ்து கோரிக்கை தொடர்பான பாசாங்குத்தனமான அரசியலை தொடரலாம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    அருணாச்சலப் பிரதேசம், அசாம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 11 மாநிலங்களுக்கு இதுவரை சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அம்ஹாரா கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பர்மான் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்தது.
    • பீகாரில் ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த 15வது பாலம் இதுவாகும்.

    பீகார்:

    பீகாரில் பாலங்கள் இடிந்து விழுவது தொடர்கதையாகியுள்ளது. அவ்வகையில் நேற்று மாலை மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது.

    அம்ஹாரா கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பர்மான் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்தது.

    2008ல் கட்டப்பட்ட இந்த பாலம், 2017ல் ஏற்பட்ட வெள்ளத்தில் முற்றிலும் சேதமடைந்து மக்கள் பயன்படுத்த தகுதியற்றது என அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2021ல் புனரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

    பீகாரில் ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த 15வது பாலம் இதுவாகும். ஏற்கனவே பாலம் விபத்துகள் தொடர்பாக 15 பொறியாளர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். 

    • பீகார் மாநிலத்தில் 12 சதவீதம் மக்களை உள்ளடக்கிய OBC பிரிவில் உள்ள சமூகத்தை சேர்ந்த முகேஷ் சஹானி அம்மாநில அரசியலில் முக்கிய புள்ளியாக பார்க்கப்படுகிறார்.
    • கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளத்துறை அமைச்சராக முகேஷ் சஹானி பொறுப்பு வகித்தவர் ஆவார்.

    பீகாரில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற விகாஷீல் இன்சான் கட்சியின் [VIP] தலைவர் முகேஷ் சஹானியின் தந்தை வீடு புகுந்து மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் 12 சதவீதம் மக்களை உள்ளடக்கிய OBC பிரிவில் உள்ள சமூகத்தை சேர்ந்த முகேஷ் சஹானி அம்மாநில அரசியலில் முக்கிய புள்ளியாக பார்க்கப்படுகிறார்.

     

    கடந்த 2020 ஆம் ஆண்டு நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சியில் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளத்துறை அமைச்சராக முகேஷ் சஹானி பொறுப்பு வகித்தவர் ஆவார். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் இருந்த சஹானி அங்கு ஏற்பட்ட விரிசலைத் தொடர்ந்து இந்தியா கூட்டணிக்கு வந்தார்.

    தற்போது முகேஷ் சஹானி மும்பை சென்றுள்ளார். அவரது தந்தை ஜிதன் சஹானி பீகாரின் தார்பங்கா மாவட்டத்தில் சுபால் பஜார் பகுதியில் தனது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஜிதன் சஹானியை கட்டிலில் வைத்து கூர்மையான ஆயுதங்களால் குத்திக் கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர்.

     

    அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்த நிலையில் அங்கு வந்த போலீசார் கட்டிலில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜிதன் சஹானியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இந்த கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். அரசியல்  காரணங்களால் இந்த கொலை நடந்துள்ளதா அல்லது முன்விரோதம் காரணமாகவா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    • போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஜே.பி. கங்கா பாதை திட்டத்தின் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • ஐ.ஏ.எஸ். அதிகாரி, ‘ஐயா தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்’ என்று பதற்றத்துடன் கூறினார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஜே.பி. கங்கா பாதை திட்டத்தின் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதி பணிகள் முடிந்ததைத்தொடர்ந்து, அந்த சாலைகளை அர்பணிக்கும் நிகழ்ச்சி பாட்னாவில் நேற்று நடந்தது.

    நிகழ்ச்சியில் முதல்-மந்திரி நிதிஷ்குமார், துணை முதல்-மந்திரிகள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா, ரவிசங்கர் பிரசாத் எம்.பி. மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பேசும்போது, 'மாநிலத்தின் நலனுக்காக சாலைப்பணிகளை விரைந்து முடியுங்கள். நீங்கள் விரும்பினால் உங்கள் கால்களில்கூட விழுகிறேன்' என்று கூறியபடி அங்கிருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை நோக்கி நெருங்கினார் நிதிஷ்குமார்.

    இதனால் மேடையில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சுதாரித்துக்கொண்ட அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, பல சில அடிகள் பின்வாங்கி, 'ஐயா தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்' என்று பதற்றத்துடன் கூறினார்.

    இது தொடர்பான வீடியோ வைரலாகியது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ், தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பலம் குறைந்த முதல்-மந்திரியால் இதைத்தான் செய்யமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.


    • மத்திய பட்ஜெட்டை வரும் ஜூலை 23ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
    • 3வது முறையாக மோடி பிரதமரான பிறகு செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும்.

    2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் ஜூலை 23ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

    வரும் ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வரும் 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 3வது முறையாக மோடி பிரதமரான பிறகு செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும்.

    இந்நிலையில், நடப்பு பட்ஜெட்டில் பீகார் மாநில திட்டங்களுக்காக ரூ.30,000 கோடியை ஒதுக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். அப்போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    இதற்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநில திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி கேட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்து மோடி 3 ஆவது முறையாக பிரதமராகினார். ஆதலால் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    • புதிய பாலங்களை புனரமைக்க நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அரசும் உத்தரவிட்டுள்ளது.
    • குற்றவாளிகளாக கண்டறியப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது கட்டுமான செலவு விதிக்கப்படும்.

    பீகாரில் கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 12 பாலங்கள் இடிந்து விழுந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து, 14 பொறியாளர்களை பணி இடைநீக்கம் செய்து அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

    மேலும், புதிய பாலங்களை புனரமைக்க நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசும் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளாக கண்டறியப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது கட்டுமான செலவு விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பொறியாளர்களின் அலட்சியம் மற்றும் கண்காணிப்பு பலனளிக்காததே பாலங்கள் இடிந்து விழுந்ததற்கு முக்கிய காரணம் என பறக்கும் படையினர் அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    மாநில நீர்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சைதன்ய பிரசாத், பொறியாளர்கள் சரியாக கண்காணிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

    முன்னதாக, பீகாரின் சரண் மாவட்டத்தில் நேற்று மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்ததால், கடந்த 17 நாட்களில் இதுபோன்ற சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

    இச்சம்பவங்கள் குறித்து பேசிய ஊரகப் பணித் துறை (ஆர்டபிள்யூடி) செயலர் தீபக் சிங், "அராரியாவில் பக்ரா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம் ஜூன் 18ஆம் தேதி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

    பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மாநில மற்றும் மத்திய குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாம்பு கடித்ததால் ஆவேசமடைந்த சந்தோஷ் லோகர் உடனே அந்த பாம்பை பிடித்து கடித்தார்.
    • சத்தம் கேட்டு சக தொழிலாளர்களும் அங்கு திரண்டனர்.

    நவாடா:

    பாம்பு கடித்து இறந்தவர்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கடித்த பாம்பை வாலிபர் ஒருவர் திருப்பி கடித்ததில் அந்த பாம்பு இறந்துள்ளது. இந்த வினோத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    பீகார் மாநிலம் நவாடாவில் உள்ள ராஜவுலி வனப்பகுதியில் ரெயில்வே பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியில் ஜார்கண்ட் மாநிலம் லதேஹர் மாவட்டத்தில் உள்ள பாண்டுகா பகுதியை சேர்ந்த சந்தோஷ் லோகர் (வயது 35) என்ற வாலிபரும், அப்பகுதியை சேர்ந்த சில தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 2-ந்தேதி இரவு சந்தோஷ் லோகர் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் வேலை முடிந்து அப்பகுதியில் உள்ள தங்களது முகாம்களுக்கு சென்று தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு பாம்பு சந்தோஷ் லோகரை கடித்தது. இதனால் திடுக்கிட்டு எழுந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    பாம்பு கடித்ததால் ஆவேசமடைந்த சந்தோஷ் லோகர் உடனே அந்த பாம்பை பிடித்து கடித்தார். மூன்று முறை அவர் பாம்பை தொடர்ந்து கடித்ததால் அந்த பாம்பு இறந்துபோனது.

    இதற்கிடையே சத்தம் கேட்டு சக தொழிலாளர்களும் அங்கு திரண்டனர். அவர்கள் பாம்பு கடிபட்ட சந்தோஷ் லோகரை அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர் சதீஷ் சந்திரசிங்கா சிகிச்சை அளித்தார். தீவிர சிகிச்சைக்கு பின் சந்தோஷ் லோகர் வீடு திரும்பி உள்ளார்.

    பாம்பு கடித்தால், கடித்த பாம்பை திருப்பி 3 முறை கடிக்க வேண்டும் என்று தங்களது கிராமத்தினர் கூறுவதாகவும், அதன்படியே பாம்பை கடித்ததாகவும் சந்தோஷ் லோகர் கூறி உள்ளார்.

    • மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்கே இதுபோன்ற கதைகள் புரியும்.
    • படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் மகாபாரதக் கதைகளை படத்தில் திரித்துக் கூறியுள்ளார்.

    பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப் போடு போட்டு வருகிறது. எட்டே நாட்களில் 700 கோடியைத் தாண்டி வசூல்  வேட்டை நடத்தி வருகிறது.

    நாக் அஸ்வின் இயக்கிய இந்த படத்தில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகர் பட்டாலமே நடித்துள்ளது. பேன்டஸி பிக்சனாக உருவாகியுள்ள இப்படத்தின் கதை மகாபாரதம், கிருஷ்ணர், கலியுகம், கல்கியின் பிறப்பு ஆகியவற்றை சுற்றி நிகழ்கிறது.

    இந்நிலையில் ரஜினி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் படத்தை பாராட்டி வரும் வேளையில் 90 ஸில் பிரபல தொடரான சக்திமான் தொடரின் சக்திமானாக நடித்த முகேஷ் கண்ணா கல்கி 2898 ஏடி படம் குறித்த சர்ச்சைக்குரிய விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

     

    கல்கி 2898 ஏடி குறித்து அவர் கூறியதாவது, இந்த படம் மேற்கத்திய ரசிகர்களுக்கு மட்டுமே புரியும் அளவுக்கு மிகவும் அதிபுத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்கே இதுபோன்ற கதைகள் புரியும். ஒடிசா, பீகார் மாநிலங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் இது புரியாது.

    அதுமட்டுமின்றி படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் மகாபாரதக் கதைகளை படத்தில் திரித்துக் கூறியுள்ளார். பகவான் கிருஷ்ணர், அஸ்வத்தாமாவின் நெற்றியில் உள்ள கல்லை சாபம் காரணமாக நீக்குவார். ஆனால் படத்தில் வேறு மாதிரியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க் க்ளிக் செய்யவும்.

    • பீகார் மாநிலத்தில் கடந்த 15 நாட்களில் 9 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.
    • பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சியில் இருப்பதால் கோடி மீடியாக்கள் இந்த விவகாரத்தை பற்றி பேசுவதில்லை.

    பீகார் மாநிலம் சிவன் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஒரே நாளில் 2 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாலம் இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த 2 பாலங்களும் எம்பி பிரபுநாத் சிங் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பீகார் மாநிலத்தில் கடந்த 15 நாட்களில் 9 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது. இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

    இந்நிலையில் பீகாரில் தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழுந்து வருவதை அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார். 

    அதில், "பா.ஜ.க கூட்டணியில் ஊழல் ஆட்சியில், பீகார் மாநிலத்தில், கடந்த 15 நாட்களில் 9 பாலங்களில் இடிந்து விழுந்துள்ளன. குறிப்பாக, இன்று (03.07.24) மட்டும், 3 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.

    இந்த விவகாரத்தில் யார் குற்றவாளி என்பதை 18 ஆண்டுகால தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சொல்ல வேண்டும். ஆனால் பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சியில் இருப்பதால் கோடி மீடியாக்கள் இந்த விவகாரத்தை பற்றி பேசுவதில்லை.

    ஆனால், 6 கட்சிகள் அடங்கிய இரட்டை இயந்திர ஆட்சிக்கு 15 நாட்களில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான 10 பாலங்கள் இடிந்து விழுந்த பிறகும், எதிர்க்கட்சிகளை குறை சொல்ல எந்த சாக்குபோக்கும் கிடைக்காமல் இருப்பது விசித்திரமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    • பாலம் இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
    • இடிந்து விழுந்த 2 பாலங்களும் எம்பி பிரபுநாத் சிங் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது.

    பீகார் மாநிலம் சிவன் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஒரே நாளில் 2 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலத்தில் கடந்த 15 நாட்களில் 6 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் 2 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.

    பாலம் இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த 2 பாலங்களும் எம்பி பிரபுநாத் சிங் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

    இதற்கிடையில் ஜார்கண்ட் மாநிலத்திலும் நேற்று கனமழையால் கிரிதிக் மாவட்டத்தில் உள்ள ஆர்கா நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

    • பீகாரில் கடந்த அடுத்தடுத்து 5 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்துவிழுந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
    • இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

    பீகாரில் கடந்த நாட்களில் அடுத்தடுத்து 5 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்துவிழுந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கடந்த 10 நாடிகளில் இடிந்த 6 வது பாலம் இதுவாகும். கனமழையால் பீகார் மாநிலம் கிசான்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தாக்கூர்கஞ்ச் நகரின் பண்ட் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்ததால் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் ஒரு திடீரென கீறல்கள் விழுந்து ஒரு பகுதி கீழ் இறங்கியதால் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. சில நாடுகளுக்கு முன்புதான் பீகாரில் மதுபானி பகுதியில் கட்டப்பட்டுவந்த 75 மீட்டர் நீளமுடைய பாலம் இடிந்து விழுந்துள்ளது.

    முன்னதாக கடந்த வாரம் கிஷன்கஞ்ச் நகரில் 2011 ஆம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 70 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட பாலம், தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இடிந்து விழுந்தது. அதற்கு முன்னர் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், படேதா - கரோலி கிராமங்களை இணைக்கும் சிறிய பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையில் ஜார்கண்ட் மாநிலத்திலும் நேற்று கனமழையால் கிரிதிக் மாவட்டத்தில் உள்ள ஆர்கா நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. 

     

    ×