search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூறைக்காற்று"

    நாங்குநேரி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால், கூந்தன்குளம் சரணாலயத்தில் மரங்கள் முறிந்து வெளிநாட்டு பறவைகள் பலியாகின. #Rain #KoonthankulamSanctuary
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி அருகே கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு வெளிநாட்டை சேர்ந்த ஏராளமான பறவைகள் வந்து செல்கின்றன. இதனை பார்ப்பதற்காக கூட்டம் கூட்டமாக சுற்றுலா பயணிகளும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் அவ்வப்போது வந்து செல்கிறார்கள். தற்போது வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்துக்காக இங்கு வந்துள்ளன. மரக்கிளைகளில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து வருகின்றன.



    இந்த நிலையில் நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி வட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பலத்த சூறைக்காற்றும் வீசியது. மூலக்கரைபட்டியில் 16 மில்லி மீட்டர் மழையும், நாங்குநேரியில் 10 மில்லி மீட்டர் மழையும், களக்காட்டில் 2.2 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.

    இதில் கூந்தன்குளம் ஊருக்குள்ளும், சரணாலயம் பகுதியிலும் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள், வேப்ப மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் மரக்கிளை கூடுகளில் இருந்த 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவை குஞ்சுகள் கீழே விழுந்து பரிதாபமாக செத்தன. மேலும் ஏராளமான தாய் பறவைகளும், மரக்கிளை இடிபாடுகளுக்குள் சிக்கி காயம் அடைந்தன. சில பறவைகள் கீழே விழுந்து மயக்கம் அடைந்தன. மேலும் சில பறவைகள் இறந்து போனது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் திருமால், வனச்சரக அலுவலர் கருப்பையா மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களுடன் பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மரக்கிளைகளுக்கு இடையே சிக்கி காயம் அடைந்த பறவைகளை மீட்டனர்.

    பின்னர் வனத்துறையினர் அந்த பறவைகளை சிகிச்சைக்காக கால்நடை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். பலத்த சூறைக்காற்றில் ஏராளமான பறவை குஞ்சுகள் கீழே விழுந்து இறந்து போனது சோகத்தை ஏற்படுத்தியது.

    பலத்த மழையால் கூந்தன் குளம் ஊருக்குள் தெருக்களில் மழைநீர் தேங்கியது. மேலும் பலத்த சூறைக்காற்று வீசியதில் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள இளையார்குளத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (வயது 65) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 800 வாழைகள் சாய்ந்து நாசமாயின.

    இதுபோல நாங்குநேரி பகுதியிலும் ஏராளமான விவசாயிகளின் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.

    நெல்லை மாவட்டம் சிவகிரி பகுதியிலும் நேற்று 8 மில்லி மீட்டர் மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் 8 மில்லி மீட்டர், ஸ்ரீவைகுண்டத்தில் 6 மில்லி மீட்டர், ஓட்டப்பிடாரத்தில் 5 மில்லி மீட்டரும் மழைபெய்துள்ளது. குமரி மாவட்டத்திலும் பெரும்பாலான இடங்களில் நேற்று மழை பெய்தது.  #Rain #KoonthankulamSanctuary

    திருவட்டார் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக அவ்வை ஏலாக்கரை பகுதியில் வாழைகள் ஒடிந்து விழுந்து நாசமானது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு அனல் காற்று வீசியது.

    இந்த நிலையில் கோடை காலமும் தொடங்கியதால் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. கடந்த 18-ந்தேதி ஓட்டுப்பதிவின்போதும் வெயில் அதிகமாக இருந்ததால் வாக்காளர்கள் காலையிலேயே ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று ஓட்டுப் போட்டனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குமரியின் மேற்கு மாவட்டத்தில் தொடங்கிய மழை மாவட்டம் முழுவதும் பெய்ததால் பொதுமக்கள் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பித்தனர்.

    தற்போது கன்னியாகுமரி முதல் லட்சத்தீவு வரையிலான வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக குமரி மாவட்டத் தில் அதிக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட் களாக நீடிக்கும் இந்த மழை காரணமாக அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    நேற்று குலசேகரம், திருவட்டார் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது. தற்போது விடுமுறை காலம் என்பதால் அதிக அளவு சுற்றுலா பயணிகள் அங்கு சென்று நீராடி மகிழ்கிறார்கள்.

    அதே போல பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை பெய்தது. அதேசமயம் நாகர்கோவில் நகரில் மழை பெய்யவில்லை. வானில் கருமேகங்கள் திரண்டு இடி இடித்தது. ஆனால் குளிர்ந்த காற்று மட்டுமே வீசி சற்று ஆறுதல் அளித்தது.

    திருவட்டார் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக அவ்வை ஏலாக்கரை பகுதியில் வாழைகள் ஒடிந்து விழுந்து நாசமானது. இந்த பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சரிந்தன. இந்த வாழைகளில் பெரும்பாலானவை குலை தள்ளிய நிலையில் இருந்ததால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. வாழைகள் சரிந்ததால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளனர். தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-20, பெருஞ்சாணி-9.2, சிற்றாறு 1-15.2, சிற்றாறு 2-6, அடையா மடை-4, கோழிப் போர்விளை-10, புத்தன் அணை-10.4, திற்பரப்பு-10.8.

    மழை காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 2.10 அடியாக இருந்தது. அணைக்கு 140 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 62 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணையில் 20.65 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 29 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.




    பெய்ட்டி புயல் தீவிர புயலாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #MeteorologicalCenter #beitycyclone #heavyrain
    சென்னை:

    பெய்ட்டி புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து வடகிழக்கு திசையில் 300கி.மீ தொலைவில் உள்ள பெய்ட்டி புயல் தீவிரப் புயலாக மாறியது. 26 கி.மீ வேகத்தில் நகரும் பெய்ட்டி புயல் நாளை பிற்பகல் காக்கிநாடா அருகே கரையை கடக்கும்.

    பெய்ட்டி புயல் கரையை கடக்கும்போது 70-90 கி.மீ முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும். சென்னையை பொறுத்தவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆந்திரா-புதுச்சேரி மாநிலத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  #MeteorologicalCenter #beitycyclone #heavyrain
    அமெரிக்காவின் புளோரிடா, விர்ஜினியா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா ஆகிய மாநிலங்களை சூறையாடிய மைக்கேல் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. #HurricaneMichael #Michaelkills30
    நியூயார்க்:

    அமெரிக்காவின் பல பகுதிகளில் சமீப நாட்களாக புதுப்புது புயல்கள் மற்றும் சூறாளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. 

    அவ்வகையில், கடந்த வாரம் புதிதாக உருவான ‘மைக்கேல்’ புயல் மணிக்கு சுமார் 250 கிலோமீட்டர் வேகத்தில் புளோரிடா மாகாணத்தை கடந்தபோது கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்து மெல்ல நகர்ந்து விர்ஜினியா மாநிலத்துக்குள் நுழைந்த  ‘மைக்கேல்’ அங்கும் பெரும் சேதம் உண்டாக்கியது. 

    பின்னர், வடக்கு கரோலினா, ஜார்ஜியா ஆகிய மாநிலங்களை சூறையாடிய மைக்கேல் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

    இதில் அதிகப்படியாக புளோரிடாவில் 20 பேர் உயிரிழந்தனர். விர்ஜினியாவில் 6 பேரும், வடக்கு கரோலினாவில் 3 பேரும், ஜார்ஜியா மாநிலத்தில் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #HurricaneMichael #Michaelkills30 
    நாகர்கோவில் பகுதியில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக கன்னியாகுமரி அருகே மயிலாடியில் 11 மி.மீ.மழை பதிவாகி இருந்தது.

    நாகர்கோவில் பகுதியில் இன்று காலை வெயில் அடித்தது. பகல் 12 மணி அளவில் திடீரென சீதோஷ்ணம் மாறியது. வானில் கருமேகங்கள் திரண்டன. இரவாகி விட்டதோ என்றும் எண்ணும் அளவுக்கு நகரம் இருளில் மூழ்கியது.

    வானம் இருண்டு காணப்பட்ட சிறிது நேரத்தில் மழை கொட்ட தொடங்கியது. அது மெல்ல, மெல்ல தீவிரம் அடைந்தது. அப்போது இடியும் மின்னலும் காணப்பட்டது. அதோடு சூறாவளி காற்றும் சுழன்றடித்தது.

    இம்மழை காரணமாக நாகர்கோவில் நகரில் மீனாட்சிபுரம் சாலை, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கோட்டார், செட்டிக்குளம் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. கோட்டார் பகுதியில் மழை வெள்ளத்துடன் கழிவுநீரும் கலந்து ஓடியது.

    இந்த திடீர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இருச்சக்கர வாகன ஓட்டிகள் சிக்கி தவித்தனர். கனரக வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி மழை வெள்ளத்தில் மிதந்து சென்றது. மழை வெள்ளத்தில் சிக்கி பல வாகனங்கள் நடுரோட்டில் நின்றுவிட்டன. இதனால் நகரின் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    நாகர்கோவிலில் பெய்த மழை போல கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், மயிலாடி, கொட்டாரம், சாமிதோப்பு, தென்தாமரைகுளம் பகுதிகளில் இன்று பகல் 11.30 மணி முதலே கனமழை பெய்தது.

    இதுபோல குமரி மேற்கு மாவட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. மார்த்தாண்டம், குழித்துறை, திருவட்டார், குலசேகரம்,பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார், கன்னிமார், பூதப்பாண்டி, கடுக்கரை, தெரிசனங்கோப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக குமரி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களிலும் சூறை காற்றுடன் கன மழை பெய்தது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான அனைத்து கடற்கரை கிராமங்களிலும் இந்த மழை பெய்தது.

    தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் 70 கி.மீ. வேகத்துக்கு மேல் காற்று வீசுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் தனுஷ் கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    தென்மேற்கு பருவ மழை தொடங்கியதையொட்டி தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    மேலும் தெற்கு அரபிக் கடல், வங்க கடலில் அதிக காற்று வீசி வருவதால் கடலோர மாவட்டமான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காணப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் காற்றின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தொண்டி, பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 4 நாட்களாக தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் பனைமர உயரத்துக்கு அலைகள் எழுகின்றன. இதன் காரணமாக நேற்று சுற்றுலா பயணிகள் தனுஷ் கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. 5-வது நாளாக இன்றும் அதே நிலைமை தொடர்கிறது.

    தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் 70 கி.மீ. வேகத்துக்கு மேல் காற்று வீசுகிறது. இதனால் ராமேசுவரம் முதல் பாம்பன் சாலையில் இருந்த பழமையான மரங்கள் முறிந்து விழுந்தன.

    காற்றின் வேகம் காரணமாக பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் ஊர்ந்து செல்கின்றன.

    அரிச்சல்முனை, முகுந்த ராயர் சத்திரம், தனுஷ்கோடி சாலை காற்றின் காரணமாக மணலால் மூடப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    தலைநகர் டெல்லியை இன்று மாலை மீண்டும் புழுதிப்புயல் தாக்கியதால் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. #Duststorm
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று காலை முதல் உக்கிரமான வெயில் தாக்கியது. மாலை வானிலை முற்றிலுமாக மாறி, வானம் மேகமூட்டமாக தென்பட்டது. சுமார் 4.30 மணியளவில் மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் பல பகுதிகளில் புழுதிப்புயல் தாக்கியது.

    இதன் எதிரொலியாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், தெலுங்கானா, ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள், கர்நாடக மாநிலத்தின் உள்பகுதிகள், தமிழ்நாடு, புதுச்சேரி கேரளா ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. #tamilnews #Duststorm
    ×