search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 110612"

    • ஊட்டியில் நிலம் வாங்கிய அம்பலம்
    • அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில், மே.26-

    நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவில் முதலிமார் தெரு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் கார்த்திக் (வயது 34). நகை மதிப்பீட்டாளர். இவரது மனைவி பார்வதி (23). இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்கள் முதலிமார் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த மாதம் 12-ந்தேதி மகேஷ் கார்த்திக் வேலை விஷயமாக சென்னை சென்றார். இதையடுத்து மனைவியை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது மகேஷ் கார்த்திக் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

    வீட்டில் இருந்த 17 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அவர் வடசேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளையன் வீட்டின் மாடி வழியாக புகுந்து பூட்டை உடைப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றினார்கள். சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையன் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் வாத்தியார்விளையை சேர்ந்த ஆனந்த் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். போலீசார் தேடுவது அறிந்த ஆனந்த் தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆனந்தை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ஆனந்திடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனந்த் கொள்ளையடித்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். மேலும் அந்த பணத்தை பெண்களுக்கு ஜாலியாக செலவு செய்துள்ளார். ஊட்டி பகுதியில் அவர் நிலம் வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சின்ன சின்ன சந்தோஷத்திற்கு தடை போடாதீர்கள்.
    • மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

    வாழ்க்கை எனும் அழகான பயணத்தில் பொருளாதாரம், குடும்பம் அல்லது சூழ்நிலையின் காரணமாக நாம் விரும்பிய செயலையோ அல்லது வேலையையோ செய்ய முடியாமல் போகலாம். பலர் பொருளாதார மேம்பாட்டிற்காக தனக்கு பிடித்த, இயல்பாக வரக்கூடிய வேலையை செய்யாமல், வேறு வேலையை முழுமனம் இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறோம்.

    பல வருடங்கள் கழித்து, நாம் வாழ்ந்த வாழ்க்கையை யோசித்துப் பார்த்தால், நமக்கு பிடித்ததை செய்யவில்லையே, வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களையும் அனுபவிக்காமல் இருந்துவிட்டோமே என்ற கவலை ஏற்படும்.

    ஒருசில நேரங்களில் பொருளாதாரம் அல்லது சூழ்நிலைக்காக சில விஷயங்களை செய்யாமல் இருப்பதோ அல்லது தள்ளிப்போடுவதோ நல்லதுதான், ஆனால் எல்லா நேரத்திலும் அவ்வாறு செய்தால், ஒரு கட்டத்தில் 'ஏன் இந்த வாழ்க்கையை வாழ்ந்தோம்? யாருக்காக வாழ்ந்தோம்? என்ற கேள்வி தோன்ற ஆரம்பிக்கும்.

    வாழ்க்கையை உங்களுக்காக வாழ்வதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் செய்கிற வேலையை செய்தால், நாமும் அவர்களைப் போல மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களுடைய மகிழ்ச்சியை வேறு யாராலும் வரையறுக்க முடியாது.

    எது உங்களுக்கு திருப்தியானது அல்லது நிறைவானது என்று யாராலும் சொல்ல முடியாது. அதை உங்களால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். உங்களுக்கு எந்த வேலை பிடித்து இருக்கிறதோ, அந்த வேலையை தேர்ந்தெடுத்து முழுமையாக மன நிம்மதியுடன் செய்யுங்கள்.

    மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

    எப்போதாவது மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திப்பது நல்லது. ஆனால் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி தொடர்ந்து யோசிக்கக்கூடாது. நீங்கள் எப்படி இருந்தாலும், எவ்வளவு விசித்திரமாக இருந்தாலும், உங்களை நீங்களே பாராட்டுங்கள்! ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர்.

    பெண்களே உங்களுக்கு இருக்கும் தனித்துவத்தை முழுமையாக பயன்படுத்துங்கள். அவ்வப்போது பிடித்தவற்றை வாங்குங்கள். பிடித்த இடத்திற்கு சென்று வாருங்கள். பிடித்த உணவை பிடித்த இடத்தில் சாப்பிடுங்கள். இது போன்ற சின்ன சின்ன சந்தோஷத்திற்கு தடை போடாதீர்கள்.

    நீங்கள் இதுவரை பிடிக்காத வேலையை செய்து கொண்டிருந்தால், இனி உங்களுக்கு பிடித்தவாறு அதை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்று யோசியுங்கள். இடைவேளை நேரத்தில் உங்களுக்கு பிடித்த செயலில் உங்களை ஈடுபடுத்துங்கள். புதிய வேலையை செய்யத் தோன்றினால் தயக்கமின்றி செய்யுங்கள்.

    'வயதாகி விட்டது, இனி நாம் என்ன செய்து என்ன நடக்கப் போகிறது?' என்று எண்ணாதீர்கள். இதுவரை உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தீர்கள் என்பதை பற்றி யோசிப்பதை விடுத்து, இனி உங்களுக்கு பிடித்தவாறு எப்படி வாழலாம் என்று யோசியுங்கள்.

    • ஒரு பெண்ணால் பல பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
    • மக்கள் பணியாற்றும் பெண்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் உலக மகளிர் தின விழா மற்றும் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் மேல் வீதியில் உள்ள ஆர்.ஓ.ஏ. சங்க கட்டடத்தில் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார் ரசர்வதேச கலாம் அறக்கட்டளை மாவட்ட தலைவர் ராகவேந்திரன், வணிகர் சங்க தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க உறுப்பினர் தமிழரசன் வரவேற்றார்.

    ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் மகாலிங்கம், பிரதேச காங்கிரஸ் கமிட்டி மற்றும் அறம்செய் அறக்கட்டளை செயலாளர் மரகதவல்லி செந்தில் ஆகியோர் பேசினர். முன்னாள் மத்திய மந்திரி மணிசங்கர்அய்யர் கலந்துகொண்டு சாதனை படைத்த மகளிருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசுகையில்

    இந்தியாவில் அரசியில் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு தான் பெண்கள் வெளிஉலகத்திற்கு வரத்தொடங்கினர்.

    குறிப்பாக அரசியலில் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கி ஒரு தேர்தலில் பெண் நிற்கும்போது அவரை எதிர்த்து ஒருசில பெண்கள் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டு ஒரு பெண்ணால் பல பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

    பொதுவாழ்க்கைக்கு வந்து மக்கள் பணியாற்றும் பெண்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும். உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் பெண்கள் அவர்கள் பணியை அவர்களது கணவர்கள் மேற்கொள்வதை அனுமதிக்கக்கூடாது பெண்கள் தன்னிச்சையாக செயல்பட்டு மக்கள் பணியாற்ற வேண்டும் என்றார்.

    இதில் அஞ்சல் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சாமிகணேசன், கவிஞர் ராதாகிருஷ்ணன், கனகசபை, தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் முத்துக்குமார், அறம்செய் அமைப்பு சிவக்குமார், யுவா ஜெயின் சங்க தலைவர் மகாவீர்ஜெயின் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர்கள், மகளிர் திரளாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.
    • விவாகரத்து முடிவு எடுப்பது எந்த மனைவிக்கும் எளிதானது அல்ல.

    ஒரு துணையை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவது, பொது வெளியில் அவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பது போன்றவை கொடூர செயலகளாக கருதப்படுகின்றன. அதேபோல், பொதுவெளியில் தங்கள் துணையின் குணத்தை அவமானப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. பெரும்பாலான குடும்ப வன்முறை வழக்குகளில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக மனைவியைப் பழிவாங்கும் எண்ணம் இருப்பது ஒரு பொதுவான நடைமுறையாகி விட்டது.

    ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. விவாகரத்து முடிவு எடுப்பது எந்த மனைவிக்கும் எளிதானது அல்ல. ஆனால் அவர்கள் அந்த முடிவை எடுப்பதற்கு பின்னணியில் பல கஷ்டமான சூழ்நிலைகள் உள்ளன. பெண்கள் ஏன் விவாகரத்து முடிவு எடுக்கிறார்கள்? குறிப்பாக எவ்வளவுதான் நெருங்கிய உறவாக இருந்தாலும், ஏமாற்றினால் அந்த உறவு முறிந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. திருமணத்திற்கு புறம்பான உறவுகள் விவாகரத்துக்கான முக்கிய காரணமாகும். திருமணத்திற்குப் பிறகும் ஆண்கள் மற்ற பெண்களுடன் தொடர்பில் இருந்தால், அது தெரிய வரும் போது பெண்கள் விவாகரத்து முடிவுக்கு வருகிறார்கள். தன் வாழ்வில் பிறர் வந்திருப்பதை துளியும் விரும்பாத பெண்கள், இந்த முடிவை எடுக்கிறார்கள்.

    1. உடலாலும் மனதாலும் கொடுமைப்படுத்துதல்.

    2. திருமண உறவைத் தாண்டிய தவறான உறவு முறை.

    3. தகுந்த காரணமின்றி பிரிந்து செல்லுதல். அதாவது, கணவனோ அல்லது மனைவியோ பிரிந்துசென்று, இரண்டு ஆண்டுகள் வரை ஒன்றாக இணையவில்லையெனில், இந்தக் காரணத்தைக் கொண்டு விவாகரத்து கோரலாம்.

    4. திருமணம் செய்துகொள்ளும்போது, கணவனோ மனைவியோ தான் பின்பற்றிவந்த மதத்தைவிடுத்து, வேறு ஒரு மதத்தைப் பின்பற்றினால், மற்றொருவர் விவாகரத்து கோரலாம்.

    5. இருவரில் ஒருவருக்கு மனநலப் பாதிப்பு, மனநலம் சம்பந்தப்பட்ட நோய் ஆகியவை இருப்பின், விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதைப் போதிய காரணமாக சட்டம் ஏற்றுக்கொள்ளும்.

    6. தொழுநோய். (இதை ரத்துசெய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மேலவையில் நிலுவையில் உள்ளது.)

    7. இருவரில் ஒருவருக்கு எய்ட்ஸ் போன்ற குணப்படுத்த முடியாத பாலியல் தொற்றுநோய் இருப்பின், விவாகரத்து பெற முடியும்.

    8. உலக வாழ்வைத் துறந்து துறவு மேற்கொள்ளுதல்.

    9. கணவனோ அல்லது மனைவியோ எங்கு இருக்கிறார் அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பதுகூட ஏழு ஆண்டுகள் வரை கேள்விப்படாமல் இருக்கும்பட்சத்தில், அவர் இறந்திருக்கக்கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் விவாகரத்து செய்வது.

    10. தற்காலிக நீதிமன்றப் பிரிவை அல்லது சேர்ந்து வாழ்தலுக்கான மனுவின் மீதான தீர்ப்புக்குப் பிறகு, ஓர் ஆண்டுக்குமேல் ஒன்று சேராமல் இருத்தல் என்பது விவாகரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்படும் காரணம் ஆகும்.

    11. இந்தியச் சட்டத்தின்படி, ஏதாவது கிரிமினல் குற்றத்துக்காக ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றால், அதன்பொருட்டு விவாகரத்து பெறலாம்.

    12. ஆண்மையற்று இருந்தாலோ, திருமண உறவில் உடலுறவில் ஈடுபடாமல் இருந்தாலோ, அதற்காக விவாகரத்து கோரலாம்.

    13. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி, விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) போன்ற குற்றம் செய்தால், அதன் காரணமாக விவாகரத்து செய்ய மனைவிக்கு உரிமை வழங்கப்படுகிறது.

    • விவாகரத்தை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.
    • ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.

    இன்றைய அவசர உலகில் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் இளம் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலும், விட்டு கொடுத்து வாழத் தெரியாமலும், சிறிய விஷயங்களுக்கு எல்லாம் கோபப்பட்டு, சண்டை போட்டுக் கொண்டு விவாகரத்து வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் இந்த முடிவை எடுக்கின்றனர்.

    சாதி, மதம், இனம் என்று வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரும் விவாகரத்தை தேடிச்செல்கின்றனர்.

    சகிப்பு தன்மையும், புரிதலும் இல்லாததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

    கணவன்-மனைவி இருவருக்கும் விவாகரத்து பெறுவதற்கான சம உரிமை இருந்தாலும், விவாகரத்து கோருவதற்கு சில காரணங்கள் சட்டரீதியாக இருக்கின்றன என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

    அதுபற்றிய விவரத்தைக் காண்போம்.

    'மணம் என்ற சொல்லுக்குக் 'கூடுதல்' என்பது பொருள். இதன் வேர்ச்சொல் மண் என்பதாகும். இன்று பொது நிலையில் மணம் என்பது நறுமணத்தைக் குறிப்பிடுகிறது. சிறப்பான, மேன்மையான ஒன்றைக் குறிப்பிட 'திரு' என்ற அடைமொழி கொடுத்து அழைப்பது தமிழர் மரபு. அந்த வகையில் இல்லற வாழ்வின் அடிப்படையாக அமையும் மணம் ''திருமணம்'' என்று அழைக்கப்படுகிறது. திருமணம் என்றாலே அனுசரித்து வாழ்வது தான். இதில் தம்பதிகள் நம்முடைய வாழ்க்கை தத்துவமான ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வதன் மூலம் இல்லறம் நிலைத்து நிற்கும். இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று குடும்ப அமைப்பு. இவை சிதறாமல் பேணிக்காப்பது இன்றைய இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது. பொதுவாக பெண்கள் உணர்வு பூர்வமாகவும், ஆண்கள் அறிவு பூர்வமாகவும் சிந்திப்பார்கள். குடும்ப உறவுக்கு இவை இரண்டும் தேவைப்படுகிறது. அப்பாவின் அரவணைப்பும், அம்மாவின் அன்பும் தேவை. இதில் சுயநலம் என்பது இருக்க கூடாது. 'விட்டு கொடுப்பதால் கெட்டு போவதில்லை' என்பதற்கு ஏற்ப அனைவரும் வாழ்க்கையில் விட்டு கொடுத்து வாழ பழக வேண்டும்.

    'விவாகரத்துக்கு நிதி நிலைமை, சுதந்திரமாக இருக்க முடியாத நிலை முக்கியமான காரணியாக பார்க்கப்படுகிறது. அத்துடன் சமூக ஊடகங்களில் நிறைய விஷயங்களை பார்ப்பதன் மூலம் கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளாமல் பிறருடைய வாழ்க்கையை நம் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பேசுவது, வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளாதது போன்ற காரணங்களும் கூறப்படுகிறது. இதனால் எங்களிடம் வருபவர்களுக்கு முதலில் நாங்கள் கூறுவது பிறருடைய வாழ்க்கையை ஒப்பிட்டு பேச கூடாது. அத்துடன், தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, கிடைத்த வாழ்க்கையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு சண்டை சச்சரவுகள் இன்றி விட்டு கொடுத்து சந்தோஷமாக வாழ பழக வேண்டும்.

    வாய்ப்பும் நேரமும்

    விவாகரத்து என்பது தம்பதிகள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமே இல்லை. அவர்களுக்கு பெற்றோர்கள், குழந்தைகள் இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்டதாகும். மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே குடும்பத்தினரையும் தாண்டி விவாகரத்து என்ற முடிவை எடுப்பார்கள். விவாகரத்தை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். 'விவாகரத்து' என்ற வார்தையை சண்டை போடும்போது மிரட்டுவதற்கான கருவியாக பயன்படுத்த வேண்டாம். நாளடைவில் இந்த வார்த்தைகள் நம் மனதில் ஆழமாக பதிந்து அதனை செய்வதற்கு தூண்டலாம். சின்ன, சின்ன விஷயத்துக்கு எல்லாம் விவாகரத்து என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருக்கலாம். 'குரங்கில் இருந்து மனிதன் வந்தான்' என்பது நமக்கு கற்று தந்த பெரிய விஷயம் என்னவென்றால், மனிதன் மாறுவான் என்பதுதான். எனவே மனிதன் நிலையாக இருப்பதில்லை. எனவே விவாகரத்து என்ற முடிவை தம்பதிகள் எடுக்காமல் மாறுவதற்கான வாய்ப்பையும், நேரத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

    விவாகரத்து வழக்குகள் குறித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல் தேவி நட்ராஜ் கூறும்போது, 'ஒரு துணையை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவது, பொது வெளியில் அவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பது போன்றவை கொடூர செயலகளாக கருதப்படுகின்றன. அதேபோல், பொதுவெளியில் தங்கள் துணையின் குணத்தை அவமானப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. பெரும்பாலான குடும்ப வன்முறை வழக்குகளில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக மனைவியைப் பழிவாங்கும் எண்ணம் இருப்பது ஒரு பொதுவான நடைமுறையாகி விட்டது.

    ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. விவாகரத்து முடிவு எடுப்பது எந்த மனைவிக்கும் எளிதானது அல்ல. ஆனால் அவர்கள் அந்த முடிவை எடுப்பதற்கு பின்னணியில் பல கஷ்டமான சூழ்நிலைகள் உள்ளன. பெண்கள் ஏன் விவாகரத்து முடிவு எடுக்கிறார்கள்? குறிப்பாக எவ்வளவுதான் நெருங்கிய உறவாக இருந்தாலும், ஏமாற்றினால் அந்த உறவு முறிந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. திருமணத்திற்கு புறம்பான உறவுகள் விவாகரத்துக்கான முக்கிய காரணமாகும். திருமணத்திற்குப் பிறகும் ஆண்கள் மற்ற பெண்களுடன் தொடர்பில் இருந்தால், அது தெரிய வரும் போது பெண்கள் விவாகரத்து முடிவுக்கு வருகிறார்கள். தன் வாழ்வில் பிறர் வந்திருப்பதை துளியும் விரும்பாத பெண்கள், இந்த முடிவை எடுக்கிறார்கள்.

    குறிப்பாக தன் கணவர் குணத்தை சந்தேகிப்பது, அலுவலகத்திற்குச் செல்வது, அவர்களுடன் சண்டை போடுவது, சக ஊழியர்களுடன் பாலியல் உறவு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுவது ஆகியவை இந்து திருமண சட்டப் பிரிவின் கீழ் வருவதால் இத்தம்பதிக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. இந்தச் செயல்கள் கணவரின் நற்பெயருக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று கோர்ட்டு கூறுகிறது. அத்துடன், மனைவி தனது தாலியை கழற்றுவது கணவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் செயலாக கருதலாம் என்று கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. தாலியை அகற்றுவது திருமண உறவைத் தொடர்வதில் விருப்பமின்மையை வெளிப்படுத்துகிறது என்பதை கோர்ட்டு தெளிவாக தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விவாகரத்து பெற்றுத்தரப்படுகிறது. ஆனால் இப்படியே போகாமல் வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து வாழ்வதன் மூலம் குடும்ப உறவை மேம்படுத்த முடியும். இதற்கு தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சிறப்பாக வாழ வேண்டும்' என்றார்.

    • உதயப்பிரகாசுடன் சேர்ந்து ஆஷா வாழ்ந்து வந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன் ஆஷா வைப்பிரிந்து உதயபிரகாஷ் வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டார்.
    • தனிமையில் வாழ்ந்துவந்த ஆஷாவுக்கு வாழ்க்கையில் வெறுப்படைந்து வாழ்வதை விட சாவது மேல் என அடிக்கடி அவரது தாயார் பேபி சுலோச்சனாவிடம் புலம்பிவந்தார்

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள மேக்காமண்டபத்தை அடுத்த விராலிக்காட்டு விளை யைச்சேர்ந்தவர் ஆஷா (வயது 27). இவருக்கு ஷாஜி என்பவருடன் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர்கள் இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளில் இருவரும் பிரிந்தனர். பின்னர் திண்டுக் கல்லை சேர்ந்த உதயப்பிர காசுடன் சேர்ந்து ஆஷா வாழ்ந்து வந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன் ஆஷா வைப்பிரிந்து உதயபிரகாஷ் வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டார்.

    இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மேக்காமண்டபம் அருகே கைசாலவிளையில் உள்ள வாடகை வீட்டில் மகளுடன் தனியாக வசித்து வந்தார். தனிமையில் வாழ்ந்துவந்த ஆஷாவுக்கு வாழ்க்கையில் வெறுப்படைந்து வாழ்வதை விட சாவது மேல் என அடிக்கடி அவரது தாயார் பேபி சுலோச்சனாவிடம் புலம்பிவந்தார். மன உளைச்சலில் இருந்து வந்த ஆஷா நேற்று வீட்டின் சமையலறை யில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் பிணத்தைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஆஷாவின் தாயார் பேபிசுலோச்சனா கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

    • 37 பவுன் நகைகளை, அடல்தாஸ் மற்றும் அமல் பஸ்வான் ஆகியோரிடம் கொடுத்து குறிப்பிட்ட நகை கடையில் கொடுத்து வரும்படி கூறியுள்ளார்.
    • தனிப்படையினர் விரைந்து சென்று அடல்தாசை கைது செய்தனர். வழக்குப்பதிவு செய்து 1½ ஆண்டுகளுக்கு பிறகு அவர் கைது செய்ய ப்பட்டு உள்ளார்.

    நாகர்கோவில் :

    வட மாநிலங்களைச் சேர்ந்த பலரும், தமிழகத்தில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அவர்கள் செய்து வருகின்றனர்.

    மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அடல்தாஸ் என்ற சுஜய் (வயது 32) மற்றும் அமல்பஸ்வான் ஆகியோர், குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வடக்கு தெருவில் உள்ள ஒரு நகைப்பட்டறையில் வேலை பார்த்துள்ளனர்.

    கேரள மாநிலம் திருச்சூ ரைச் சேர்ந்த மனோஜ் என்பவர் இந்த பட்டறையை நடத்தி வந்தார். இவர் சம்பவத்தன்று 37 பவுன் நகைகளை, அடல்தாஸ் மற்றும் அமல் பஸ்வான் ஆகியோரிடம் கொடுத்து குறிப்பிட்ட நகை கடையில் கொடுத்து வரும்படி கூறியுள்ளார்.

    ஆனால் அவர்கள் நகை யுடன் மாயமாகி விட்டனர். இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர், மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் அடல்தாஸ் மற்றும் அமல்பஸ்வானை தேடினர். அவர்களது சொந்த ஊர் சென்று தேடிய போது அவர்கள் அங்கு இல்லை.

    தலைமறைவான 2 பேரை யும் பிடிக்க, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினிஸ்பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் ரகசிய மாக கண்காணித்து வந்த னர். இந்த நிலையில் அடல் தாஸ், மேற்கு வங்கா ளத்தில் உள்ள தனது சொந்த ஊரான மொத்த லாவிற்கு வந்திருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து தனிப்படையினர் விரைந்து சென்று அடல்தாசை கைது செய்தனர். வழக்குப்பதிவு செய்து 1½ ஆண்டுகளுக்கு பிறகு அவர் கைது செய்ய ப்பட்டு உள்ளார்.

    கைதான அடல்தாசை போலீசார் மார்த்தாண்டம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவரிடம் நகை கள் எதுவும் இல்லை. இது பற்றி கேட்ட போது, திருடிச் சென்ற நகைகளை விற்று, உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். இதுபற்றி விசாரணை நடத்தும் போலீசார், வழக்கில் தொடர்ந்து தலைமைறைவாக உள்ள அமல் பஸ்வானை தேடி வருகின்றனர்.

    • ஈகோ கொண்ட கணவர்மார்களிடம் மன்னிப்பை எதிர்பார்க்கக்கூடாது.
    • எந்தவொரு காரியத்தையும் துணையிடம் அனுமதி கேட்டுவிட்டு செயல்படுவதில் தவறில்லை.

    கணவன் - மனைவி இருவரிடமும் ஒருமித்த கருத்தும், புரிதலும் இருந்தால்தான் இல்லறம் நல்லறமாக அமையும். ஒரு சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். அதில் யாருடைய கருத்து சரியானது என்பதை நிதானமாக சிந்தித்து அதன்படி செயல்படுவதுதான் சிறப்பானது. 'நீ சொல்வதை நான் கேட்க வேண்டுமா?' என்ற எண்ணம் மனதில் கூட தோன்றுவதற்கு இடம் கொடுக்கக்கூடாது. அது 'ஈகோ'வுக்கு வழிவகுத்துவிடும்.

    ஏனெனில் ஈகோ புகுந்துவிட்டால் துணையின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கு மனம் ஒப்புக்கொள்ளாது. ஏதேனும் ஒரு விஷயத்தை மனைவி சிறப்பாக செய்து முடிக்கும்போது கணவர் மனம் திறந்து பாராட்ட வேண்டும். அவர்தான் சிறந்த வாழ்க்கை துணையாக இருக்க முடியும். அதை விடுத்து, ஈகோவுக்கு இடம் கொடுத்து, மட்டம் தட்டி பேசுவது மனைவியை மனம் நோக செய்துவிடும். மற்ற சமயங்களில் அன்பும், ஆதரவும் காட்டும் கணவர் ஒரு சில விஷயங்களுக்கு மட்டும் ஈகோ பார்த்தால் அவரது சுபாவத்தை சரி செய்து விடலாம்.

    மற்றவர்கள் முன்னிலையில் துணை தன்னை விட சிறந்தவராக வெளிப்பட்டுவிடுவாரோ என்ற எண்ணம்தான் ஈகோவுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. எந்தவொரு சூழலிலும் மனைவி தன்னை விட்டுக்கொடுக்கமாட்டார் என்ற நிலைப்பாட்டில் கணவர் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு சில விஷயங்களில் மனைவி தன்னை விட சிறப்பாக செயல்படுவதை கணவர் பார்க்கும்போது அவருக்குள் தாழ்வு மனப்பான்மை எட்டிப்பார்க்கும்.

    தானும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உந்துதலையும் ஏற்படுத்தும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார். அதனை மனைவி புரிந்து கொண்டு கணவரின் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். சிறப்பாக செயல்படும்போது பாராட்ட வேண்டும். அதனைதான் கணவர் எதிர்பார்ப்பார். தன்னுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப மனைவி நடக்காதபோது அவருக்குள் ஈகோ தலைதூக்க தொடங்கும்.

    பொதுவாகவே ஈகோ கொண்ட மனிதர்களுக்கு அவர்களை புகழ்வதும், பாராட்டுவதும் ரொம்ப பிடிக்கும். அவரிடம் நல்ல குணாதிசயங்கள் வெளிப்படும்போது அந்த நிமிடமே மனமார பாராட்டுங்கள். அவரை ஊக்கப்படுத்தும் விதமான வார்த்தைகளை பேசுங்கள். அது அவருக்கு பிடித்து போய் விட்டால் அது போன்ற செயல்பாடுகளில் அடிக்கடி ஈடுபடுவார். மனைவி தன்னிடம் நல்ல எண்ணத்துடனே பழகுகிறார். அவருக்குள் ஈகோ இல்லை என்பதை உணர்ந்துவிடுவார். அதற்காக எல்லாவற்றிற்கும் பாராட்டக்கூடாது. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் பாராட்டை எதிர்பார்ப்பார். அதனால் அதிகமாகவும் பாராட்டிவிடக்கூடாது.

    சில சமயங்களில் துணையின் செயல்பாடுகள் பிடிக்காமல் போகும்போது அதனை நேரடியாக வெளிப்படுத்தாமல் வார்த்தைகளால் காயப்படுத்தக்கூடும். அப்படி மன காயத்திற்கு ஆளாக நேர்ந்தால் வெளிப்படையாக பேசிவிடுவது நல்லது. மனைவியின் உணர்வுகளுக்கு கணவர் நிச்சயம் மதிப்பு கொடுப்பார். இல்லாவிட்டால் அப்படி பேசுவதையே வழக்கமாக்கிவிடக்கூடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது.

    ஈகோ கொண்ட கணவர்மார்களிடம் மன்னிப்பை எதிர்பார்க்கக்கூடாது. அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவும் தயங்கக்கூடாது. அந்த சமயத்தில் கோபம் கொள்வதில் தவறு இல்லை. அது அவர்கள் செய்த தவறுகளை புரிய வைக்கும் விதமாக வெளிப்பட வேண்டும். அவர்களே தவறுகளை உணரும்போது மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது.

    எந்தவொரு காரியத்தை செய்வதற்கு முன்பும் ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்து செயல்படுவதுதான் நல்லது. துணையிடம் அனுமதி கேட்டுவிட்டு செயல்படுவதில் தவறில்லை. 'இதையெல்லாம் அவரிடம் கேட்க வேண்டுமா?' என்ற எண்ணம்தான் ஈகோ தோன்றுவதற்கு இடம் கொடுத்துவிடும் என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

    • தம்பதியர் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும்.
    • மன்னிப்பு கேட்கவும், சமாதானம் செய்யவும் தயங்கக்கூடாது.

    இல்லற வாழ்க்கையில் இனிமையையும், மன நிம்மதியையும் தக்க வைத்துக்கொள்வதற்கு தம்பதியரிடையே புரிதல் இருக்க வேண்டும். ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் இருவருக்குமிடைய கருத்து மோதல், வாக்குவாதம் எழக்கூடும். அந்த சமயத்தில் சாதுர்யமாக செயல்படாவிட்டால் சின்ன மனஸ்தாபம், கருத்து வேறுபாடு கூட பெரும் சண்டைக்கு அடித்தளம் அமைத்துவிடும்.

    கருத்து மோதல் தலைதூக்கும்போது ஒருசில வார்த்தைகளை உச்சரிப்பதை அறவே தவிர்த்துவிட வேண்டும். ஒருவருக்கு சாதாரணமாக தோன்றும் வார்த்தை மற்றொருவருக்கு மன வேதனையை உண்டாக்கக்கூடும். அதனால் தம்பதியர் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும்போது வார்த்தை பிரயோகத்தை கவனமாக கையாள வேண்டும்.

    'உன்னால் என்ன செய்ய முடியும்? நான் சொல்வதை நீ கேட்டுத்தான் நடந்தாக வேண்டும்' என்ற ரீதியில் வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. அது துணையின் கோபத்தை அதிகரிக்கச் செய்துவிடும். அவருடைய ஆழ்மனதில் அந்த வார்த்தை ஆழமாக பதிந்துவிடும். அது ஆறாத மன காயமாக மாறிவிடவும் கூடும். அதனால் தன்னை சார்ந்திருந்துதான் ஆக வேண்டும் என்ற ரீதியில் வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது. அது ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாகவும் அமைந்துவிடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது.

    எதிர்பாராதவிதமாக நிகழும் தவறுக்கு துணை காரணமாக இருக்கலாம். அது அவருக்கு தெரியாமலேயே நடந்திருக்கலாம். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை அவர் முன்கூட்டியே அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால் செய்த தவறுக்காக அவர் நிச்சயம் வருத்தப்படுவார். அதனை வெளிக்காட்டிக்கொள்ளாவிட்டாலும் கூட 'தன்னால் இப்படியொரு தவறு நடந்துவிட்டதே' என்ற வேதனை அவரை ஆட்கொண்டிருக்கும். அதனை புரிந்து கொள்ளாமல் 'நீதான் காரணம்' என்று துணை மீது குற்றம் சாட்டக்கூடாது. அது மோதல் போக்கை உண்டாக்கிவிடும். தவறை திருத்துவதற்கு முயற்சி மேற்கொள்வதற்கு பதிலாக திசை திருப்பும் நடவடிக்கையாக மாறிவிடும்.

    எதேச்சையாக தவறுகள் நடக்கும்போது 'நீ ஒரு முட்டாள், உன்னால் அதற்கேற்பத்தான் செயல்பட முடியும்', 'நீ எதற்கும் பிரயோஜனம் இல்லாதவள்' என்பன போன்ற வார்த்தைகளை உபயோகித்து திட்டுவது துணையின் தன்மானத்தை சீண்டுவதாக அமையும். அவரது சுய கவுரவத்தை சிதைப் பதாகவும் அமைந்துவிடும். நன்றாக ஆராய்ந்து பார்த்தால் துணையை விட கணவர் அதிக தவறுகளை செய்திருக்கக்கூடும். அவரது தவறான வழி நடத்தல்தான் தவறுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்திருக்கும். அதனால் தவறுகள் நிகழும் பட்சத்தில் இருவரும் நிதானம் இழக்காமல் அதனை திருத்துவதற்கான முயற்சியில்தான் கவனம் செலுத்த வேண்டும். துணை வருத்தப்படும் அளவிற்கு சம்பவம் நிகழ்ந்திருந்தால் மன்னிப்பு கேட்கவும், சமாதானம் செய்யவும் தயங்கக்கூடாது.

    அதேபோல் தவறு நிகழும்போது, 'நீ கடந்த முறையும் அப்படித்தானே செய்தாய்? இதுவே உனக்கு வாடிக்கையாகி விட்டது' என்றும் பேசக்கூடாது. அது உறவுக்குள் விரிசலை அதிகப்படுத்திவிடும். கணவர் தன் மீது எப்போதும் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தை துணையிடம் விதைத்து விடும். குடும்ப மகிழ்ச்சியையும் சிதைத்துவிடும்.

    மேலும் தவறு நடந்துவிட்டால், 'எதனால் அந்த தவறு நிகழ்ந்தது?' என்பதை கண்டறி வதற்கே நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். அதனை புரிந்து கொள்ளாமல் 'ஏன் இப்படி நடந்தது. எனக்கு உடனே பதில் சொல்' என்று கடுமையாக திட்டுவதும் கூடாது.

    நடந்த தவறை நினைத்து துணை வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதை உணராமல், 'ஏன் எதுவும் பேசாமல் 'உம்'மென்று இருக்கிறாய்? வாயை திறந்து பதில் சொல்' என்று கட்டாயப்படுத்தக்கூடாது. அதற்குப் பதிலாக ''நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக கேள். இருவரும் உட்கார்ந்து பேசி முடிவெடுப்போமா?" என்று சொல்லிப் பாருங்கள்.

    துணை முக மலர்ச்சியுடன் செயல்பட தொடங்கிவிடுவார். தவறுகளையெல்லாம் திருத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார். தேவையற்ற கருத்து மோதல்கள் எழுவதற்கு இடமிருக்காது. இல்லற வாழ்வில் நிம்மதியும் குடிகொள்ளும்.

    • தன்னம்பிக்கை கொண்டவர்கள் முதலில் தன்னை நம்ப வேண்டும்.
    • சுய நம்பிக்கை என்பது நம் வாழ்க்கைக்கு கவசம்.

    வாழ்க்கை, சாதாரணமான பயணம் இல்லை. மிக சிறந்த பயணமாகும். இந்த கோடை காலத்தில் பெரும்பாலும் பயணம் மேற்கொள்வோம். அதற்கான திட்டமிடுதலும், அக்கறையும், முன்னேற்பாடும் அப்பப்பா! சாதாரணமாக மேற்கொள்ளும் இப்பயணத்திற்கு இவ்வளவு திட்டமிடல் என்றால் வாழ்க்கை பயணத்திற்கு?!

    காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை அன்றாடம் நாம் செய்யும் செயல்களைக் கொஞ்சம் அலசிப் பார்ப்போம்! நாம் பேசுவதையும் செய்வதையும் நாமே கண்காணிக்கின்றோமா? அதாவது, சுயமதிப்பீடு செய் கிறோமா? என்றால் கேள்விக்குறியே?

    நம்முடைய செயல்களை நாம் ஒரு போதும் சுயமதிப்பீடு செய்வதில்லை. 'இன்று நாம் என்னென்ன காரியங்கள் செய்தோம்? அவை நல்லவையா? கெட்டவையா? நம் செயல்களால் யாருக்கேனும் இழப்புகள் ஏற்பட்டனவா? யாருக்கேனும் நன்மைகள் செய்தோமா? இழப்பு ஏற்பட்டிருந்தால் அதற்குச் செய்யவேண்டிய பரிகாரம் என்ன? யாருடைய மனதையாவது புண்படுத்தினோமா? யாருடைய உரிமைகளையாவது பறித்தோமா?' -இப்படி ஒவ்வொரு நாளும் சுய மதிப்பீடு செய்யும் வழக்கம் இருந்தால், நம் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்பட்டுவிடும்.

    வாழ்க்கை பயணத்தில் மிக முக்கியம் நம் தனிப்பட்ட உடல் நலம் மற்றும் நம் வேலைக்கான இலக்கினை அடைவதற்கான வழி. நம்முடைய பிரார்த்தனைகள் கூட உண்மையான நம்மைக் காண்பிப்பதில்லை. ஆனால் நம்முடைய ஆழ்ந்த விருப்பங்கள் மற்றும் லட்சியங்களே நாம் யார் என்பதைச் சொல்லி விடுகின்றன.

    நமது வாழ்க்கைப் பயணத்தில் புதிதாய் பிறப்பது என்பது மிக அவசியம். புதிதாய் பிறப்பது என்பது ஒவ்வொரு நாளும் நடக்க வேண்டும். ஒவ்வொரு நொடியும் அது நிகழ வேண்டும். பிறப்பது என்பது வெறும் நிகழ்வு அல்ல. அது ஒரு புதிய பரிணாமம் ஆகும். இறக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே பிறக்கவும் முடியும். நம் உள்ளத்தில் இருக்கின்ற எதிர்மறை எண்ணங்கள் இறந்தால் தான் நாம் புதிதாய் பிறக்க முடியும்.

    இன்று புதிதாகப் பிறப்போம் என்று சொன்னால், இதுவரை இருந்த பழையவற்றை எல்லாம் கழற்றி எறிந்து விட்டு புதிய சிந்தனையோடு புறப்பட்டு வருவது என்று அர்த்தம். புதிதாகப் பிறக்கின்ற போது "தான்" என்கின்ற தன்மை அழிந்து போகின்றது. புதிய உலகம் , புதிய வானம் , புதிய காற்று , புதிய செயல்கள், புதிய மனிதர்கள் என்று தன்னை விரிவுப்படுத்திக் கொள்பவர்கள் முதுமை அடைவதே இல்லை .

    லட்சியம் மிகுந்த எல்லாமே இளமை ததும்பும் அழகோடு மிளிர்கின்றன. நாம் நம் வாழ்க்கையிலும் தனித்தன்மையிலும் முழுமையை என்றும் நாட வேண்டும், அது நெஞ்சை விட்டு நீங்காத கொள்கையாக இருக்க வேண்டும். தனக்கு எந்த வகையிலும் கடவுள் குறை வைக்கவில்லை என்பதை உணர வேண்டும், கடவுளோடு நாம் ஒன்றித்திருக்கிறோம். அவர் நமக்கு அளித்திராத பரிசுகளே இல்லை என்கின்ற எண்ணப் போக்கே நாளடைவில் நம்முடைய வாழ்க்கையை உயரத்திற்கு கொண்டு செல்லும்.

    வாழ்க்கையில் எல்லோருக்குமான தேவைகளும் ஒரே மாதிரிதான் இருந்துகொண்டிருக்கின்றன. ஆரோக்கியம், பொருளாதார பாதுகாப்பு மற்றும் உறவுகளின் மேம்பாடு இவைகள்தான் எல்லோருக்குமான அடிப்படை தேவைகள்.

    தன்னம்பிக்கை கொண்டவர்கள் முதலில் தன்னை நம்ப வேண்டும். 'நமக்கு நோய் வந்து விட்டதே, நம்மால் இனி எதுவும் செய்ய முடியாதே!' என மனந்தளரக் கூடாது. 'நமக்கு நோயே இல்லை. எந்த நோயாலும் நம்மை வெல்லமுடியாது!' என்று நம்பிக்கை கொள்ளவேண்டும். மனதில் நம்பிக்கைகொள்ளும் இந்த எண்ணத்தில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது. நம் கண்முன்னே மாற்றம் ஏற்படும் ஒரு யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

    நமது உடலிலும் மனதிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி நோயில்லாத வாழ்க்கையை நாம் அனுபவிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நம்மை நாமே நோய்க்கு அடிமையாக்கிக்கொண்டு, அடிமை வாழ்க்கை வாழக்கூடாது. நோய் என்ற கூண்டிற்குள் நம்மைநாமே சிக்கவைக்கக்கூடாது. உடலை நன்றாக வைத்திருப்பது நமது அடிப்படை உரிமை. உடலை நன்றாக வைத்திருப்பது என்பது அழகாக தோன்றுவதிலோ, மற்றவர்கள் முன்னால் பகட்டாய் தோன்றுவதிலோ இல்லை. ஆரோக்கியத்தில்தான் இருக்கிறது. நம் வாழ்க்கையில் உடல் ஒரு தடைக் கல்லாய் இல்லாமல் படிக்கல்லாக இருக்கவேண்டும். உடல் தடையாக மாறினால், வாழ்க்கை சுமையாகிவிடும்.

    சுய நம்பிக்கை என்பது நம் வாழ்க்கைக்கு கவசம். இது இருந்தால் வாழ்க்கையில் ஏற்படும் பற்பல கவலைகளிலிருந்து நாம் எளிதாக விடுபட்டுவிடலாம். சுய நம்பிக்கை இல்லாதவர்கள் கவலைகளிலே உழல்கிறார்கள். சுய நம்பிக்கை கொண்டவர்களுக்கு அறிவு துணை செய்யும். ஆற்றல் துணை நிற்கும். வாழ்க்கை இன்பமயமானது. அதை ரசிக்காமல், நேசித்து வாழாமல் 'எனக்கு மட்டும் ஏன் இப்படி? 'என்று நொந்து துன்பமயமாக்கிக்கொண்டு வாழ்க்கையை அனுபவிக்காமல் தோல்வியை வம்பாக விலைக்கு வாங்குகின்றோம்.

    நாம் சாதனைகள்புரிய சுதந்திரம் மிக அவசியம். பயம், பதற்றம், கவலை அல்லது நிச்சயமற்ற நிலை போன்றவை ஒருவரை இயல்பான திறனோடு பணியாற்றவிடாது. மூளையின் அதிகபட்ச ஆற்றலை வெளிப்படுத்த முழுமையான சுதந்திரம் மிகவும் அவசியம்.

    எப்போதுமே நம்மிடம் சுய மனத்தடைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் . 'நம்மால் முடிந்தது இவ்வளவுதான், இதற்கு மேல் நம்மால் எதுவும் செய்ய இயலாது', 'நம் தலையெழுத்து இதுதான்', 'வேறு வழியில்லை, எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான்' என்பன போன்ற சுய மனத்தடைகள் நம்மை வாழ்க்கைப் பயணத்தில் தோற்கடித்துவிடும். அதனால் அந்த தடைகளை தகர்த்திடுவது மிக அவசியம்.

    முந்தைய தவறுகளின் தாக்கம் நமக்கு மட்டுமே சொந்தமானது. நடந்துமுடிந்துவிட்ட அந்த தவறை பெரிதாக்கி, 'தன்னைத் தவிர யாருமே தவறு செய்வதில்லை. தான் எது செய்தாலும் அது தவறாகவே முடிகிறது' என்று நினைத்துக்கொண்டு, அடுத்த அடி எடுத்துவைக்க தயங்கிவிடக்கூடாது.

    உறவுமுறைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் எத்தனையோ விதங்கள் உண்டு. உடல் சார்ந்து, உணர்வு சார்ந்து, சமூகம் சார்ந்து, பொருளாதாரம் சார்ந்து, உலகியல் சார்ந்து மனிதனுக்கு எவ்வளவு தேவைகள் உண்டோ அவ்வளவு உறவுகள் உருவாகுவது இயற்கை. ஒரு குறிப்பிட்ட உறவுமுறை அதற்குரிய தேவையை நிறைவு செய்யாத பட்சத்தில் அந்த உறவு செயலிழக்கிறது.

    நமக்கு இருக்கும் மிகப் பெரிய தடை- பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ, ஏளனம் பேசுவார்களோ என்பதுதான். முதலில், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி நாம் வருத்தப்பட வேண்டாம். அவர்களது மனதின் தரம் அவர்களைப் பொறுத்தது. நம் மனதின் தரத்தைப் பற்றித்தான் நாம் கவலைப்பட வேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று வருத்தப்பட்டால் நமது மனநலன் சீர்கெட்டுப்போகும். ஒரு செயல், செய்யத் தகுதியானது என நாம் நினைக்கும் பொழுது, அதனை செய்துவிட வேண்டும். மற்றவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. பெரும்பாலும் நமக்கான தொல்லைகளை நாமே உருவாக்கிக்கொள்கிறோம். பிறர் விஷயங்களில் தலையிடாமல் நம் சொந்த வேலையில் மட்டுமே கவனத்தை செலுத்தினால் போதும் வாழ்க்கை இன்பமயம் தான்.

    நம் வாழ்க்கை நமது விருப்பத்திற்கேற்ப அமையவேண்டும், அது உறவாகட்டும், தொழிலாகட்டும்..! நம் விருப்பத்திற்கேற்ப அனைத்தும் நிகழ வேண்டுமென்றால் எல்லோரையும், எல்லாவற்றையும் நம் புரிதலுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பைத்தியம் போல் இருந்தாலும் அதையும் கடந்து அவர்களை உணர்ந்துகொள்ளும் அளவிற்கு நம் புரிதலின் தன்மை உயர வேண்டும்.

    நம்மை சார்ந்த அனைவரையும் நாம் புரிந்துெகாள்ளவேண்டும். அந்த பக்குவத்தை மூலதனமாக்கிக்கொண்டு நமக்காக மகிழ்ச்சியாக வாழவேண்டும். நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மட்டுமே, நம்மை சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வாழவைக்க முடியும்.

    வாழ்க்கை ஒரு ஜாலியான பயணம். அதற்கு கவலை போன்ற வேலிகளை போடவேண்டாம்!

    கட்டுரை:

    ஆ.ஆண்டனி ரோஸ்லின்,

    சமூக ஆர்வலர்,

    மதுரை.

    • பெண்கள் தைரியமானவர்களாக இருந்தாலும், அவர்களுடைய சமூக அந்தஸ்து குறைந்துவிடும்.
    • பெண்கள்தான் விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
    • மணவாழ்க்கையை முறித்துக்கொள்ளாமல், பொருந்திப்போவதே சிறந்தது.

    மனிதர்களின் அடிப்படை குணாதிசயங்களில் இருந்து இந்த நூற்றாண்டில் காணாமல்போன விஷயங்கள் மூன்று. அவை: பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை. இவைகள் இல்லாமல் போனதால்தான், கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்ற நிலை சமூகத்தில் ஏற்பட்டிருக்கிறது. விவாகரத்துக்கு மாற்றாக வேறு எதையும் அவர்கள் கருத்தில்கொள்வதில்லை. முறித்துக்கொள்வது மட்டுமே முடிவானது என்று கருதுகிறார்கள்.

    ஆணும், பெண்ணும் சரி சமம் என்று தலைநிமிர்ந்து நிற்கும் இன்றைய தலை முறையினரிடம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எந்த சிக்கலுக்கும் சரியான தீர்வு காணும் பொறுமை இல்லை. பொறுமையின்றி, நிதானமின்றி அதிரடியும் ஆவேசமுமாக களத்தில் இறங்கி சண்டையிட்டுக்கொண்டு விவாகரத்து வாங்கிவிடுகிறார்கள். ஆனால் விவாகரத்துக்குப் பிறகு வாழும் வாழ்க்கை மிகவும் கொடுமையானது. அதைப் பற்றி பலரும் யோசிப்பது இல்லை. கையில் பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற மனோபாவத்தில் விவாகரத்து முடிவு எடுக்கப்படுகிறது. ஆனால் இழந்த எதையும் பணத்தால் வாங்கமுடியாது என்பதை உணரும்போது அவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கும், விரக்திக்கும் உள்ளாகிவிடுகிறார்கள்.

    மனிதர்கள் எல்லோருமே தவறு செய்யக்கூடியவர்கள்தான். அதை திருத்திக்கொள்ளும் முயற்சிதான் வாழ்க்கை. திருமணத்துக்கு முன்பு செய்யும் தவறுகளுக்காக பெற்றோர் பிள்ளைகளை தூக்கி எறிவது இல்லை. ஆனால் திருமணத்துக்கு பிறகு செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவரை தூக்கி எறியும் முடிவுக்கு இன்னொருவர் வந்துவிடுகிறார்.

    திருமணத்துக்கு முன்பு - திருமணத்துக்கு பின்பு என்று ஒருவருடைய வாழ்க்கையை இரண்டாக பிரித்துப் பார்த்த காலம் போய், இப்போது விவாகரத்துக்கு முன்பு - பின்பு என்று பிரித்துப் பார்க்கிறார்கள். அதில் பிந்தைய காலம் அநேகமாக பெண்களுக்கு இருண்ட காலம் ஆகிவிடுகிறது.

    விவாகரத்துக்கு பிறகு ஆண்களும் அதிகமான மனநெருக்கடிக்கு உள்ளாகி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தொழில் பாதிப்படைகிறது. 'தன்னைப் பற்றி தனக்கு பின்னால் என்ன பேசிக்கொள்வார்களோ!' என்ற எண்ணம் அவர்களுடைய நட்பு வட்டாரத்தை குறைக்கிறது அல்லது சிதைக்கிறது. அப்போது, தான் செய்யும் சின்னச் சின்ன தவறுகள் கூட, பெரிதாகி தன் கண்முன்னே வந்து நின்று மிரட்டும். அந்த நேரத்தில் தன் மீதே தனக்கு கோபமும், வருத்தங்களும் ஏற்பட்டு மன அழுத்தம் எல்லைமீறும். இதனால் காரை வேகமாக ஓட்டி தாறுமாறாக செல்வது, மது அருந்துவது, உறவுகளை புறக்கணிப்பது என்று முரண் பாடான பாதையில் அவர்கள் பயணிக்க தொடங்கிவிடுவார்கள்.

    அதனால் அவர்களது மாண்பும், மரியாதையும் சிறிது சிறிதாக அவர்களுடைய வாழ்க்கை யில் இருந்து விடைபெற்று சென்றுகொண்டே இருக்கும். இந்த இழப்பை பணத்தாலும், பதவியாலும் ஈடு செய்ய முடியாது என்பதை உணரும்போது, வாழ்க்கையில் தவறு செய்துவிட்டதை புரிந்துகொள்வார்கள்.

    பெண்கள்தான் விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். என்னதான் மனதளவில் பெண்கள் தைரியமானவர்களாக இருந்தாலும், அவர்களுடைய சமூக அந்தஸ்து குறைந்துவிடும். அதற்குதக்கபடி பெண்கள் தங்கள் மனதை பக்குவப்படுத்திக் கொள்ளாவிட்டால், மனதளவில் உடைந்துபோவார்கள். அப்போது தங்களுக்கு முன்னால் இருக்கும் உலகம் வேறு, தங்களுக்கு பின்னால் இயங்கும் உலகம் வேறு என்பதை உணர்வார்கள்.

    அப்படி உணர்கிறபோது அவர்களுக்குள் இன்னொரு கேள்வி எழும். அது, 'நாம் மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறோமோ?' என்ற கேள்வி! அப்போது விவாகரத்து என்பது தான் எடுத்த தவறான முடிவு என்ற குற்ற உணர்வு தோன்றும். தனது எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கவலையும் தோன்றும். தன் வயதை ஒத்தவர்கள் வாழும் சந்தோஷ வாழ்க்கையும் கண்களை உறுத்தி, கண்ணீர் வரச்செய்யும். அதனால் மணவாழ்க்கையை முறித்துக்கொள்ளாமல், பொருந்திப்போவதே சிறந்தது.

    • இளமை பருவத்தில் புதிய விஷயங்களை முயற்சித்து பார்ப்பதற்கு வயது தடையாக இருக்காது.
    • இளமை பருவ நாட்கள் பலவும் நண்பர்களுடன்தான் கழியும்.

    வயது என்பது வெறும் எண் மட்டுமே. முதுமையிலும் இளமை துடிப்போடு செயல்பட்டு பலரும் அதனை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் இளமை பருவத்தில் புதிய விஷயங்களை முயற்சித்து பார்ப்பதற்கு வயது தடையாக இருக்காது. இளமை பருவத்தை பூர்த்தி செய்வதற்குள் திருமணம், குடும்ப பொறுப்பு, குழந்தை வளர்ப்பு, தொழில், நிதி நிலைமை போன்ற பல்வேறு விஷயங்களை எதிர்கொண்டு குடும்ப வாழ்வியலுக்குள் முழுமையாக தங்களை அர்ப்பணிக்க வேண்டியிருக்கும். அந்த பந்தத்திற்குள் நுழைவதற்கு முன்பு இளமை பருவத்திற்கே உரித்தான வாழ்வியலையும், அவை கற்றுத்தரும் பாடங்களையும் பலரும் தவறவிட்டுவிடுகிறார்கள். வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கு 20 வயதில் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கு...

    தனிமை பயணம் மேற்கொள்ளுங்கள் :

    இளமை பருவ நாட்கள் பலவும் நண்பர்களுடன்தான் கழியும். குழுவாக ஒன்று சேர்ந்து சாகச பயணங்களை மேற்கொண்டு பலரும் பொழுதை போக்குவார்கள். அத்தகைய பயணங்களுக்கு நடுவே தனிமை பயணங்களை மேற்கொள்வதும் அவசியமானது. 20களின் பிற்பகுதியில் தொழில், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், மனதை தெளிவுபடுத்தவும், வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டத்தை வழங்கவும் தனிமை பயணம் உதவும். நெருக்கடியான காலகட்டத்தில் தன்னிச்சையாகவும், தைரியமாகவும் முடிவெடுக்கும் ஆற்றலையும் வழங்கும்.

    வெவ்வேறு மொழிகளை பேச கற்றுக்கொள்ளுங்கள் :

    எந்த விஷயத்தையும் கற்றுக்கொள்வதற்கு வயது தடையில்லை. மொழிக்கும் இது பொருந்தும். 20 வயதில் இளமை துடிப்பும், சுறுசுறுப்பும், உற்சாகமும் குறையாமல் இருக்கும். எதையும் ஆர்வமாக கற்றுக்கொள்ளவும் மனம் தயாராக இருக்கும். உலக விஷயங்களை தெரிந்து கொள்ளவும், ஒவ்வொரு பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலை புரிந்து கொள்ளவும் தொடர்பு சாதனமாக மொழி விளங்கும். அதனால் எந்தவொரு மொழியையும் கற்றுக்கொள்வதற்கு தயக்கம் கொள்ளக்கூடாது. படிப்பை முடிக்கும்போதோ, எதிர்காலத்திலோ ஏதாவதொரு வகையில் கற்றுக்கொண்ட மொழி பயன்படலாம்.

    முகாமிடுங்கள் :

    நண்பர்களுடன் குழுவாகவோ, தனியாகவோ வருடத்திற்கு ஒருமுறையாவது மலையேற்ற பயணங்களை மேற்கொள்ளுங்கள். வீடு, அலுவலகம் என இரண்டுவிதமான சூழலில் மட்டுமே வாழ்க்கையை நகர்த்துபவர்கள் அதில் இருந்து சில நாட்கள் விலகி இயற்கையுடன் ஒன்றிணைவதற்கு மலையேற்றம் உதவும். அமைதியான சூழல், சுத்தமான காற்று, என இயற்கை பின்னணியுடன் ஓர் இரவையாவது செலவிட வேண்டும். அங்கு முகாமிட்டு இரவில் தெளிவான வானத்தையும், அதில் மின்னும் நட்சத்திரங் களையும் ரசித்தபடி 'பயர் கேம்பிங்' எனப்படும் நெருப்பின் அரவணைப்பில் நண்பர்களுடன் உற்சாகமாக பொழுதை போக்கலாம். மனதிற்கு பிடித்தமான இசையை கேட்டு மகிழலாம்.

    சாலை மார்க்கமாக செல்லுங்கள்:

    இருசக்கர வாகனத்தில் நீண்ட தூர சாலை பயணங்களை மேற்கொள்வதும் புது அனுபவத்தை கொடுக்கும். மனதில் தேங்கி இருக்கும் எல்லாவிதமான கவலைகளை போக்கவும். பதற்றமான மன நிலையில் இருந்து விடுபடவும் சாலை பயணங்கள் கைகொடுக்கும். 20களில் செய்யக்கூடிய முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று. வருடத்திற்கு ஒருமுறையாவது தனியாகவோ, நண்பர்களுடனோ இருசக்கர வாகனத்தில் சாலை பயணம் மேற்கொள்ள மறக்காதீர்கள்.

    ஆரோக்கியத்தை பேணுங்கள் :

    இளமையாக இருக்கும்போது பலரும் உடல் ஆரோக்கியம் மீது அக்கறை கொள்ளாமல் புறக்கணித்துவிட்டு, பின்பு வருந்துகிறார்கள். 20 வயதுக்கு பிறகு உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழத் தொடங்கும். நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும் வரை எந்த பிரச்சினையும் வெளியே தெரியாது. வயது அதிகரிக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைய தொடங்கும். சிலருக்கு 30 வயதை நெருங்குவதற்குள்ளாகவே கடுமையான உடல்நல பிரச்சினைகள் எட்டிப்பார்க்க தொடங்கிவிடும். அதனை தவிர்க்க இளம் வயதிலேயே உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை மேற்கொள்வதும் அவசியமானது.

    ×