search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விக்கிரமராஜா"

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மே 5-ந்தேதி ராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ. திடலில் நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடனும் விக்கிரமராஜா ஆலோசனை நடத்தி வருகிறார். #vikramaraja #vanigarsangam

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மே 5-ந்தேதி ராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ. திடலில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான வியாபாரிகள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடனும் மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா ஆலோசனை நடத்தி வருகிறார்.

    பேரமைப்பின் வட சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் மே 5 வணிகர் தின ஆலோசனை கூட்டம் கொளத்தூர் பேப்பர் மில்ஸ் ரோடு சண்முகா மஹாலில் மாவட்ட தலைவர் கொரட்டூர் த.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அனைத்து சங்கங்களும் முழு ஒத்துழைப்பு தந்து பேரமைப்பு நடத்தும் 36-வது மாநில மாநாட்டை வெற்றிகரமான மாநாடாக அமைய அனைவரும் பல்லாயிரக்கணக்கான வணிகர்களுடன் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    கூட்டத்தில் பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, மண்டலத் தலைவர் கே.ஜோதிலிங்கம், மாநில இணைச் செயலாளர் எஸ்.எம்.பி.செல்லத்துரை, மாவட்ட தலைவர்கள் சாமுவேல், ஆதி குருசாமி, ஜெயபால், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஜெ.சங்கர், பொருளாளர் ஜெய்சங்கர், அமைப்புச் செயலாளர் குணசேகரன்,

    மாவட்ட நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பால்ராஜ், செல்வக்குமார், லட்சுமண ராவ், ரவிசெல்வம், புருசோத்தமன், அன்னைபாபு, முருகேசன், செல்வராஜ் பங்கேற்றனர்.

    அனைவரையும் கொளத்தூர் பூம்புகார்நகர் வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் வி.பி.வில்லி யம்ஸ் வரவேற்க வி.சால மோன்ராஜா நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் கொரட்டூர் த.ராமச்சந்திரன் சிறப்பாக செய்திருந்தார்.

    முன்னதாக செரிமனி ஓட்டலில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 5-ந்தேதி 36-வது மாநில மாநாடு இந்திய வணிகர் எழுச்சி மாநாடாக நடைபெறுகிறது.

    வணிகர்களுக்கு பென்ஷன் தருவது, ரூ.10 லட்சம் விபத்து காப்பீட்டுத் திட்டம், வணிகர் நல வாரியம் அமைத்தல், பிணையில்லா ரூ.50 லட்சம் கடன் உதவித் திட்டம், வணிகர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அளிக்கும் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை எங்களது பேரமைப்பு வரவேற்கிறது.

    மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் இந்த திட்டங்களை உறுதியாக நிறைவேற்றிட பேரமைப்பு போராடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #vikramaraja #vanigarsangam

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தி உள்ளார். #vikramaraja #plasticbanned #tngovt

    சென்னை:

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிளாஸ்டிக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது. மாநில அரசுக்கு பிளாஸ்டிக் தடை விதிக்க அதிகாரமில்லை என்பதே முதன்மையான வழக்கு.

    இந்நிலையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் அறிவித்துள்ள பிளாஸ்டிக் தடை மீறல்களுக்கான தண்டனை, அபராதம் போன்றவை அதிகார அத்துமீறல் மட்டுமல்ல, நீதிமன்ற அவமதிப்பும் ஆகும்.

    இதுபோன்ற சிக்கலான நேரங்களில் வணிகர் அமைப்பின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும்.

    பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருள் அறிமுகப்படுத்தாத நிலையில் நிறைவேற்றப்பட உள்ள சட்ட முன்வடிவுகள் அதிகாரிகளின் அத்துமீறல்களுக்கு மட்டுமே வழி வகுக்கும். தினசரி வட்டிக்கு கடன் வாங்கி, அன்றாடம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிற லட்சக் கணக்கான சிறு, குறு வியாபாரிகளை இந்த சட்டம் வெகுவாக பாதிக்கும்.

    பிளாஸ்டிக் பற்றிய அதீத விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமே தடை செய்யப்பட்ட பொருட்களை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதையும் கவனத்தில் கொண்டு, அதற்குரிய வகையில் அபராத தண்டனையை மறுபரிசீலனை செய்து தீர்வுகள் எட்டப்பட வேண்டும்.

    இவ்வாறு விக்கிரமராஜா அதில் கூறி உள்ளார். #vikramaraja #plasticbanned #tngovt

    28, 18 சதவீத ஜி.எஸ்.டி.யை முழுவதும் நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். #Vikramaraja #GST

    சேலம்:

    சேலம் லீ பசார் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    36-வது வணிகர் சங்க மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மகாலில் விரைவில் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி எங்களது கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற மாநாட்டில் வலியுறுத்தப்படும்.

    ஜி.எஸ்.டி. பாதிப்பில் இருந்து மீண்டு வர 28 மற்றும் 18 சதவீத வரிகளை முற்றிலும் நீக்க வேண்டும், ஜி.எஸ்.டி. மூலம் வசூல் செய்து எங்களுக்கு திருப்பி தர வேண்டிய 96 ஆயிரம் கோடியை திருப்பி தர வேண்டும், மத்திய, மாநில அரசுகள் வியாபாரிகளை புறந்தள்ளி வருகிறது.

    உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அதில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கோரிக்கைகளை உறுதி மொழியாக எழுதி கொடுப்பவர்களுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

    1 கோடிக்கும் அதிகமானோர் வியாபாரத்தை நம்பி உள்ளனர். 60 வயதை கடந்த வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், பிளாஸ்டிக் தடையில் அத்துமீறும் அதிகாரிகளை எதிர்த்து போராடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Vikramaraja #GST

    வரும் தேர்தலில் எந்த கட்சி தேர்தல் அறிக்கையில் வணிகர்களுக்கு சாதகமாக தேர்தல் அறிக்கை வெளியிடுகிறதோ அந்த கட்சிக்கு தான் வணிகர்கள் வாக்களிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று விக்கிரமராஜா கூறியுள்ளார். #Parliamentelection

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட வணிகர்களின் தொகுப்பு வெளியீட்டு விழா நடந்தது.

    இதில் அதன் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு தொகுப்பை வெளியிட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வணிகர்களுக்கு எந்தவித சலுகையும் அளிக்கப்படவில்லை. மாநில அரசு கொண்டு வந்துள்ள பிளாஸ்டிக் தடை விதிப்புக்கு வணிகர்கள் ஆதரவு தர வேண்டும்.

    மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து அதிகாரிகள் சோதனைக்கு வரும் போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    வணிகர்களை மிரட்டி வரும் அதிகாரிகள் தங்களது தவறை நிறுத்தி கொள்ளாவிட்டால் வணிகர்கள் சாலையில் இறங்கி போராடவும் தயாராக உள்ளனர். அதிகாரிகள் பணம் கேட்டு மிரட்டினால் அவர்களை தண்டிக்க பேரமைப்பின் உதவியை வணிகர்கள் நாட வேண்டும்.

    வணிகர் சங்கங்களின் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

    18 மற்றும் 28 சதவீத வரி விதிப்பை அறவே அகற்றப்பட வேண்டும். திருப்பி செலுத்தக்கூடிய வகையில் நிலுவையில் உள்ள 93 ஆயிரம் கோடி உள்ளீட்டு வரி பணத்தை அரசு திருப்பி அளிக்க வேண்டும்.

    ஆன்லைன் வர்த்தகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள தடை சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். ரூ.5 லட்சம் வரை முழுமையாக வரி விலக்கு கொடுக்கப்பட வேண்டும். 60 வயதை கடந்த வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.

    வரும் தேர்தலில் எந்த கட்சி தேர்தல் அறிக்கையில் வணிகர்களுக்கு சாதகமாக தேர்தல் அறிக்கை வெளியிடுகிறதோ அந்த கட்சிக்கு தான் வணிகர்கள் வாக்களிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு விக்கிரமராஜா கூறினார். #Parliamentelection

    அமைச்சர் அனுமதி அளித்ததால் பிளாஸ்டிக் தடைகாலம் மேலும் 15 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். #vikramaraja #plasticban

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ளது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சிறுகுறு தொழில்முனைவோர், வணிகர்கள் அனைவரும் துன்புறுத்தலுக்கும், அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடந்த ஜனவரி 2-ம் தேதி முதலே பிளாஸ்டிக் தடை காரணமாக, அதிகாரிகளின் தொழில்வணிக விரோத நடவடிக்கைக்கு எதிராக துரிதமாக செயல்பட்டு, தமிழகத்தின் லட்சோப லட்ச வணிகர்களுக்கு ஆதரவாக கண்டனக்குரல் எழுப்பி வருகின்றது.

    நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும், தமிழ்நாடு அனைத்து பிளாஸ்டிக் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

    இப்போராட்டத்தைத் தொடர்ந்து அமைச்சர் கே.சி.கருப்பணனை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அவர் பிரைமரி பேக்கிங் செய்யக்கூடிய எல்.டி., பி.டி., எச்.எம்., போன்ற பேக்கிங் கவர்களை வைத்திருப்பவர்கள், நாளை முதல் கடைகளை திறந்து 15 நாட்களுக்கு வணிகம் செய்யலாம் என்றும், லைசென்ஸ் பெற்றுள்ள அனைத்து கவர் வகைகளையும் விற்பனை செய்யலாம் என்றும் தெரிவித்தார். தமிழக முதல்வர் பிளாஸ்டிக் சிறுகுறு தொழில்முனைவோர் வணிகர்களையும் அழைத்துச் பேசுவதாக உறுதியளித்துள்ளார். இது நமக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #vikramaraja #plasticban

    பிளாஸ்டிக் ஒழிப்பு விவகாரத்தில் அதிகாரிகளை கண்டித்து 3 நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். அதற்கான தேதியை விரைவில் அறிவிப்போம் என்று விக்கிமராஜா பேசியுள்ளார். #vikramaraja #plasticeradication

    வள்ளியூர்:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிளாஸ்டிக்கை ஒழிப்பது குறித்து அரசு முறையாக தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக வணிகர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அரசின் கடமையாகும்.

    கடைகளுக்கு வரும் பொதுமக்கள் இன்று வரை யாருமே துணிப்பையுடன் வருவதில்லை. ஆனால் வியாபாரிகள் பிளாஸ்டிக்கை ஒழிப்பது குறித்து முன் முயற்சி எடுத்து கொண்டிருக்கிறோம். இதனை விட்டுவிட்டு அரசு துறை அதிகாரிகள் வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து கடைகளுக்கு சீல் வைத்தாலோ அல்லது அபராதம் விதித்தாலோ தமிழகம் தழுவிய அளவில் 3 நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். அதற்கான தேதியை விரைவில் அறிவிப்போம்.

    ஆன்லைன் வர்த்தகத்தில் சட்ட விதிகளை ஒழுங்கு படுத்த இடைக்கால தடை விதித்துள்ளனர். இதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அது கண்துடைப்பாக இல்லாமல் வர்த்தக துறையில் இருந்து ஆன் லைன் வர்த்தகத்தை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவில்லை. குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் ஆதரவு யாருக்கு என்பதை எங்களது ஆட்சிகுழு உறுப்பினர்கள் கூடி முடிவு செய்வோம். அதே நேரத்தில், வியாபாரிகளை பழித்து கொண்டவர்கள் ஆட்சியில் இருக்க முடியாது என்பதை மட்டும் தெளிவாக தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #vikramaraja #plasticeradication

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றக்கோரி டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் 5 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்கிறார்கள் என்று விக்கிரமராஜா கூறியுள்ளார்.

    சென்னை:

    அகில இந்திய வணிகர் சம்மேளனம் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 19-ந் தேதி டெல்லியில் பேரணி நடத்த உள்ளனர்.

    இந்த பேரணியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 5 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இதுகுறித்து பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு தடை விதிக்க கோரியும், ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வலியுறுத்தியும், உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர்கள் போராடி வருகிறார்கள்.

    மத்திய - மாநில அரசுகள் வணிகர்களின் கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்றவில்லை. இதை கண்டித்து நாடு தழுவிய அளவில் டெல்லி ஜந்தர் மந்தரில் மாபெரும் பேரணி 19-ந்தேதி நடைபெறுகிறது.

    இதில் தமிழ்நாட்டில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் சென்று பங்கேற்கிறார்கள். புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, அந்தமான், லட்சத் தீவு ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்கின்றனர்.

    எங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தென்மண்டல கூட்டம் நடத்தப்பட்டு 3 நாள் தொடர் கடை அடைப்பு போராட்டத்திற்கான தேதி அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடையை ரத்து செய்யாவிட்டால் 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துவோம் என்று விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். #vikramaraja

    சென்னை:

    பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வருகிற 1-ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    50 மைக்ரான் எடைக்கு குறைவான பிளாஸ்டிக் பை, ஸ்டிரா, பேப்பர்களை விற்றாலோ பயன் படுத்தினாலோ அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இன்று சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார்.

    பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு 1-ந்தேதி முதல் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. எங்களை பொறுத்த வரை மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடையில் இருந்து அரசு விதிவிலக்கு அளிக்க வேண்டும். இந்தியா முழுவதும் 2022-ல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்க போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    வெளிநாட்டு நிறுவனங்களின் பிஸ்கட், சாக்லேட் போன்ற பல்வேறு பொருட்கள் பிளாஸ்டிகில் வருகிறது. அதற்கு அரசு தடை செய்யாமல் உள்நாட்டு நிறுவனங்களின் பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் அரசு தடை விதிப்பது பாரபட்சமாக உள்ளது.

    எனவே தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடையை மறு பரிசீலினை செய்யாவிட்டால் 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மூடாதே மூடாதே, பிளாஸ்டிக் தொழிலை மூடாதே, மறுசுழற்சி செய்யும் பிளாஸ்டிக்கை தடை செய்யாதே என்று கோ‌ஷமிட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பேரமைப்பு பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு, கூடுதல் செயலாளர்கள் வி.பி.மணி, ராஜ்குமார், மண்டலத் தலைவர் கே.ஜோதிலிங்கம், மாவட்ட பொருளாளர் ஆர்.எம்.பழனியப்பன், செயலாளர் சுப்பிரமணி, நடராஜன், செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், அயனாவரம் கே.ஏ.மாரியப்பன், கொளத்தூர் ரவி, அருணா சலமூர்த்தி, ஜெயராமன், ரமேஷ், ஜெயக்குமார், பழம்பொருள் அணி தலைவர் பூவை ஜெயக்குமார், துணைத் தலைவர் சரவணகுமார், அம்பத்தூர் ஹாஜி முகம்மது மேல ஜெயதேவ் உள்பட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர். #vikramaraja

    பிளாஸ்டிக் தடை சட்டத்தை எதிர்த்து சேப்பாக்கத்தில் நாளை விக்கிரமராஜா தலைமையில் வியாபாரிகள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை சட்டம் வருகிற 1-ந் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது.

    இதன்படி 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. கடைக்காரர்கள் பொதுமக்களுக்கு இதை வழங்கினால் கடை உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் காகித அட்டைகளை பயன்படுத்த வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    அரசின் இந்த அறிவிப்புக்கு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மறுசுழற்சி பயன்பாடு கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதையொட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறுகையில் வியாபாரிகளை அழைத்து அரசு பேச வேண்டும். பிளாஸ்டிக்கில் எத்தனையோ வகைகள் உள்ளன. இதில் எந்தெந்த பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்தலாம், எதை உபயோகப்படுத்த கூடாது என்பதை முதலில் அரசு தெளிவுபடுத்த வேண்டும். அதன் பிறகு நடைமுறை படுத்த வேண்டும்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் நாளை காலையில் எனது தலைமையில் வியாபாரிகள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் சதக்கத்துல்லா, சென்னை மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம், மாவட்டத் தலைவர்கள் என்.டி.மோகன், எஸ்.சாமுவேல், ஆதிகுரு சாமி, ரவி, அம்பத்தூர் ஹாஜி முகம்மது, ஆர்.எம்.பழனியப்பன், சுப்பிரமணியன், கே.ஏ.மாரியப்பன் உள்பட ஏராளமான பேர் பங்கேற்கிறார்கள். பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களும் திராளாக பங்கேற்கிறார்கள்.

    பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக விக்கிரமராஜா கூறியுள்ளார்.
    சேலம்:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் சேலம் பிளாஸ்டிக் வியாபாரிகள், தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் பிளாஸ்டிக் தடை பற்றிய ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்நாட்டு வணிகத்தை முடக்குவதற்காகவே அடுத்தாண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இதனால் கடன் வாங்கி தொழில் தொடங்கிய வணிகர்கள் உள்பட ஏராளமானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எந்தெந்த பொருட்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை என்பதை அரசு அறிவிக்காததால் வணிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். 2020-ம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படாத நாடாக மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இதேபோல் தமிழக அரசும் 2020-ம் ஆண்டு வரை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கால அவகாசம் கொடுக்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இதுதொடர்பாக வருகிற 15-ந் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி அறிவிக்க உள்ளோம்.

    இதுதவிர பட்டாசு வெடிப்பதற்கு தடை மற்றும் உணவு பொருட்களில் உள்ள பல்வேறு சட்ட விதிகளை மாற்றக்கோரி வருகிற 19-ந் தேதி டெல்லியில் பேரணி நடத்த உள்ளோம். சேலம் செவ்வாய்பேட்டை மேம்பாலத்தை விரைவில் கட்டக்கோரி கோரிக்கை விடுத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் வணிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    டெங்கு காய்ச்சலை ஒழிக்க பழைய இரும்பு பொருள்களை வியாபாரிகள் அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Swineflu #Dengue

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்குவால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் விழிப்புணர்வு முகாம்கள் அரசு சார்பிலும் நடைபெற்று வருகின்றன.

    வணிகர்களாகிய நாமும் நமது பங்களிப்பாக, அனைத்து வியாபாரிகளும் ஒத்துழைப்பு அளித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அரசிடம் இருந்து நிலவேம்பு பொடிகளை வாங்கி கஷாயம் வைத்து பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும்.

    குறிப்பாக பழைய இரும்பு, பழைய பிளாஸ்டிக், பழைய டயர் விற்பனை செய்யும் வியாபாரிகள் அனைவரும் தேவையற்ற பொருட்களை அகற்றி, தங்கள் பகுதியை தூய்மையாகவும், பழைய பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டு, கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதேசமயம் அரசு அதிகாரிகளும், சுகாதாரக் குறைகள் பற்றிய விழிப்புணர்வை, வணிக வளாகங்களுக்கு முறையான அறிவிப்புகள் வழங்கி, மறுமுறை அதே நிலை நீடித்தால் மட்டுமே அபராதம் என்ற நிலைக்கு செல்லவேண்டும் எனவும், தேவையற்ற அபராத விதிப்புகளுக்கு அதிகாரிகள் துணைபோக அரசு அனுமதிக்கக்கூடாது.

    இவ்வாறு விக்கிரமராஜா கூறி உள்ளார். #Swineflu #Dengue

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மண்டல வாரியாக உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது.

    சென்னை:

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடை பெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு சென்னை மண்டலத் தலைவர் கே.ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார். மத்திய சென்னை தலைவர் எஸ்.சாமுவேல் வரவேற்றார்.

    அகில இந்திய வணிகர்கள் சம்மேளன தேசிய பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். இதில் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா பேசும்போது கூறியதாவது:-

    மத்திய-மாநில அரசுகள் பல கோடி ரூபாய் வரி வசூலித்து தரும் வணிகர்களை முழுமையாக புறக்கணித்து வருவது மிகவும் கண்டனத்துக்குரியது.

    சில்லறை வணிகத்தை கைப்பற்ற நினைக்கும் வால்மார்ட் நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி கூறி உள்ளோம். ஆனால் மத்திய அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை. உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் உள்ள சட்ட விதிகளை எளிமைப்படுத்த சொன்னோம். அதையும் செய்யவில்லை. ஜி.எஸ்.டி. வரி சட்ட விதிகளை எளிமைப்படுத்தி 28 சதவீதம், 18 சதவீத வரி விதிப்புகளை முற்றிலும் திரும்ப பெற வலியுறுத்தி மனு கொடுத்துள்ளோம்.

    தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை என்ற அறிவிப்பை பயன்படுத்தி அதிகாரிகளின் அத்துமீறல்களை அரசுக்கு எடுத்து கூறினோம். பிளாஸ்டிக் தடையை திரும்ப பெறக்கோரி மனு கொடுத்தோம். இதே போல் எங்களது 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு மத்திய- மாநில அமைச்சர்களை சந்தித்து மனு கொடுத்தோம். தமிழக முதல்-அமைச்சரையும் சந்தித்து பேசினோம்.

    ஆனால் இதுவரை மத்திய-மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வணிகர்களை புறக்கணித்து வருகிறது.

    இதனால் பேரமைப்பு சார்பில் கடந்த செப்டம்பர் 28-ந்தேதியன்று கறுப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதன் பிறகும் அரசு மவுனமாக இருப்பதால் இன்று மண்டல வாரியாக உண்ணாவிரதம் நடத்துகிறோம்.

    பேரமைப்பு நிர்வாகிகளை அழைத்து மத்திய- மாநில அரசுகள் பேசி தீர்வு காண வேண்டும்.இல்லையென்றால் காலவரையற்ற கடையடைப்பு, வரி வசூல் மறுப்பு, சட்டமன்ற முற்றுகை போராட்டம் என அறிவிப்புகள் வெளியிடும் கட்டாயம் ஏற்படும். எனவே அரசு உரிய தீர்வுகளை விரைந்து காண வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உண்ணாவிரதத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், பேரமைப்பு மாநில கூடுதல் செயலாளர் கள் வி.பி.மணி, பேராசிரியர் ராஜ்குமார், மாவட்டத் தலைவர்கள் என்.டி.மோகன், ஜெயபால், ரவி, ஆதிகுருசாமி, நந்தன், கிருஷ்ணன், ராதா கிருஷ்ணஷா, பால்ஆசீர், இ.எம்.ஜெயக்குமார்.

    ஆவடி அய்யார் பவன் அய்யாத்துரை, ஆர்.கே.எம். துரைராஜன், வேலுசாமி, மனோகரன், அம்பத்தூர் ஹாஜி முகம்மது, தங்கதுரை, மீரான், தேசிகன், சின்னவன், ஆர்.எம். பழனி யப்பன், சுப்பிரமணியன், கந்தன்சாவடி தொழில் அதிபர் வில்சன், கர்ணன், செந்தில், கே.ஏ.மாரியப்பன், ஷேக் முகைதீன் உள்பட பல்வேறு வணிக சங்க தலைவர்கள் பங்கேற்றனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற உண்ணா விரதத்தை இன்று மாலை புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் முடித்து வைக்கிறார்.

    கன்னியாகுமரியில் நடந்த உண்ணாவிரதத்தில் மாநில பொருளாளர் ஏ.எம். சதக்கத்துல்லா, செய்தி தொடர்பாளர் பாண்டிய ராஜன் மற்றும் மண்டல மாவட்ட தலைவர்கள், நிர் வாகிகள் பங்கேற்றனர்.

    ×