search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு"

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே குடும்ப தகராறு காரணமாக மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊத்துக்குளி ரோட்டில் உள்ள காந்தி நகரில் வசிப்பவர் சக்தி நாதன். பெயிண்டராக வேலை பார்க்கிறார்.

    இவரது மனைவி உமா மகேஸ்வரி (35). மகன் யுவராஜ் (14). 8-ம் வகுப்பு முடித்து 9-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றிருந்தார். மகள் பெயர் பூஜா (12). 6-ம் வகுப்பு முடித்து 7-ம் வகுப்பு செல்கிறார்.

    கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் உமா மகேஸ்வரி மன உளைச்சலில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் உமா மகேஸ்வரி தனது 2 பிள்ளைகளுக்கு வி‌ஷம் கொடுத்தார். பிறகு தானும் வி‌ஷம் குடித்தார்.

    சிறிது நேரத்தில் 3 பேரும் வாயில் நுரை தள்ளிய படி மயங்கி விழுந்தனர். ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய தாய் மற்றும் குழந்தைகளையும் மீட்டு ஈரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உமாமகேஸ்வரி, மகன் யுவராஜ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிறுமி பூஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த பரிதாப சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தற்கொலை செய்து கொண்ட உமா மகேஸ்வரியின் சொந்த ஊர் கரூர் அடுத்த நத்தமேடு ஆகும். இவரது முதல் கணவர் சுந்தர் ராஜன். இவர் உமா மகேஸ்வரியை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

    இவர்களது வீட்டில் சக்தி நாதன் குடியிருந்து வந்தார். கணவர் பிரிந்து சென்றதும் சக்திநாதனை 2-ம் திருமணம் செய்து கொண்டு சென்னி மலையில் உமா மகேஸ்வரி புதிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் தான் 2-வது கணவருடனும் ஏற்பட்ட தகராறில் உமா மகேஸ்வரி இந்த விபரீத முடிவை எடுத்து உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்த தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே மோட்டார் சைக்கிளில் கார் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் முத்தூர் ரோட்டை சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் கார்த்திகேயன் (வயது 18). இவரது நண்பர் முகிலன் (18). கொடுமுடியை சேர்ந்த முத்தரசன் என்பவரின் மகன்.

    இவருவரும் பிளஸ்-2 முடித்து தேர்ச்சி பெற்றிருந்தனர்.

    நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பவானி வந்தனர். பிறகு அவர்கள் சித்தோடு அருகே டெக்ஸ்வேலி பக்கம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை கார்த்திகேயன் ஓட்டி சென்றார். அப்போது ஒரு டீ கடையில் டீ குடிப்பதற்காக கார்த்திகேயன் திடீர் பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் மீட்கப்பட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் சிகிச்சை பலன் பெறாமல் கார்த்திகேயன் இன்று காலை பரிதாபமாக இறந்தார். முகிலனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ஈரோடு அருகே மகன் கண் முன்னே தந்தை பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு, சம்பத் நகர் ஹவுசிங் யுனிட் பகுதியை சேர்ந்தவர் விஜயசேகரன் (வயது52). தனியார் நிறுவனத்தில் கேஷியராக பணி புரிந்து வந்தார்.

    நேற்று விஜயசேகரன் தனது மகன் பிரேம்குமாருடன் மோட்டார்சைக்கிளில் திண்டல் அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது கோவையில் இருந்து ஈரோடு நோக்கி ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக தனியார் பஸ்சும், விஜயசேகரன் வந்த மோட்டார்சைக்கிளிலும் மோதி கொண்டன.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த விஜயசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மகன் பிரேம்குமார் படுகாயம் அடைந்தார்.

    அந்த வழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்த பிரேம்குமாரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்தில் உயிரிழந்த விஜயசேகரன் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ஈரோட்டில் அடுத்தடுத்து 2 வீடுகளில் 37 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே தண்ணீர்பந்தல்பாளையம், கணபதி நகரை சேர்ந்தவர் பிலிப்மேத்யூ(வயது65). ஜவுளி வியாபாரி.

    பிலிப்மேத்யூவுக்கு சொந்த ஊர் கேரள மாநிலம் கோட்டயம் ஆகும். ஈரோட்டுக்கு வந்து ஜவுளி வியாபாரம் செய்து இங்கு வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் பிலிப் மேத்யூ கேரளாவில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் கேரளா சென்று விட்டார்.

    இதற்கிடையே மேத்யூ பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் மேத்யூ வீட்டின் முன் பக்க கதவு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து மேத்யூவுக்கு போனில் தகவல் கொடுத்தார்.

    திடுக்கிட்ட மேத்யூ கேரளாவில் இருந்து தண்ணீர்பந்தல் பாளையத்தில் உள்ள வீடுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவை உடைத்து அதில் இருந்த 28 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

    இதே போன்று அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    தண்ணீர்பந்தல் பாளையம், கணபதி நகரை சேர்ந்தவர் பழனிசாமி. சாயபட்டறை உரிமையாளர். இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். பழனிசாமி திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்துக்காக தனது குடும்பத்துடன் சென்று இருந்தார்.

    இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் பழனிசாமி வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 9 பவுன் நகையையும், மகன் கல்வி கட்டணத்திற்காக வைத்திருந்த ரூ.60 ஆயிரத்தையும் கொள்ளையர்கள் அள்ளி சென்றனர்.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் கைரேகை நிபுணர்களும் தடயங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

    இரு கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டது ஓரே கும்பலாக இருக்க கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் கொள்ளை நடந்த வீட்டின் அருகே வைக்கபட்டுள்ள சி.சி.டி.வி.கேமிரா பதிவுகளையும் போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள்.

    தொடர்ந்து அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த இது துணிகர கொள்ளையால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். நேற்றும் இதேபோல் மொடக்குறிச்சி அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பது குறிப்பிட்டத்தக்கது. #tamilnews
    ஈரோடு அருகே அடுத்தடுத்து நடந்த 2 முகமூடி கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ளது கஸ்பாபேட்டை. இதையடுத்துள்ள நாதகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50).

    இவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லலிதாராணி (38). கணவரும், மனைவியும் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அதிகாலை 1 மணி அளவில் மர்ம ஆசாமிகள் 2 பேர் வீட்டின் பின்னால் உள்ள காம்பவுண்டு சுவர் ஏறி குதித்தனர்.

    வீட்டின் சமையல் அறை கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பிறகு வீட்டுக்குள் இருந்த பீரோவையும் நைசாக திறந்தனர். சத்தம் கேட்டு லலிதா ராணி எழுந்தார்.

    இதில் ஒருவன் லலிதா ராணி கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி செயினை பறித்தான். லலிதாராணி அலறினார். சத்தம் கேட்டு எழுந்து வந்த சிவகுமார் தடுக்க முயன்றார்.

    7 பவுன் நகையை பறிகொடுத்த லலிதாராணி.

    அப்போது ஒரு கொள்ளையன் அவரை 3 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பியால் ஓங்கி அடித்தான். இதில் அவர் நிலை குலைந்தார்.

    பிறகு அவரது முகத்தில் கொள்ளையன் டார்ச் லைட்டால் அடித்தான். இதில் அவர் கண் கூசியது. இதை பயன்படுத்தி சிவக்குமார் கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினையும் பறித்தான்.

    பின்னர் கொள்ளையர்கள் 2 பேரும் அங்கிருந்து வீட்டின் பின்புறம் வழியாக ஓடி தப்பிவிட்டனர். கொள்ளையர்கள் 2 பேருக்கும் 30 வயது இருக்கும். ஆஜானு பாகு தோற்றத்தில் இருந்தார்கள்.

    அவர்கள் பெர்முடாஸ் அணிந்திருந்தனர். 2 பேரும் முகத்தை மறைத்து முகமூடி அணிந்திருந்தனர்.

    இதேபோல கஸ்பாபேட்டை அரசு போக்குவரத்து நகரிலும் முகமூடி கொள்ளை நடந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (47). பெருந்துறை அரசு போக்குவரத்து கழக நிறுவனத்தில் டெக்னீசியனாக வேலை பார்த்தார்.

    நேற்று இவர் பணிக்கு சென்றிருந்தார். வீட்டில் அவரது மனைவி அம்பிகா (40), தந்தை ஆறுமுகம் (68), தாய் பாப்பாத்தி (62) மற்றும் உறவினர்கள் இருந்தனர்.

    இரவில் அவர்கள் தூங்கிக் கொண்டு இருந்தனர். வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 2 பேர் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் முகமூடி அணிந்திருந்தனர்.

    வீட்டில் இருந்த பாப்பாத்தியின் கழுத்தில் கிடந்த செயினை கொள்ளையன் ஒருவன் பறித்தான். அந்த செயின் கவரிங் செயின் ஆகும்.

    தடுக்க முயன்ற அவரது கணவர் ஆறுமுகம் தலையில் இரும்பு கம்பியால் ஒருவன் ஓங்கி அடித்தான். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    வலியால் ரத்தம் சொட்ட சொட்ட அவர் துடித்தார். பிறகு கொள்ளையர்கள் வீட்டின் பின் பக்கம் வழியாக தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த 2 கொள்ளை சம்பவம் குறித்தும் ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இரு சம்பவத்திலும் ஒரே கொள்ளை கும்பல்தான் கைவரிசை காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நடந்த இந்த 2 முகமூடி கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    ஈரோட்டில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் நடந்தது.

    ஈரோடு:

    ஈரோட்டில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் நடந்தது.

    ஈரோடு மரப்பாலத்தில் தெருமுனை பிரச்சாரம் தொடங்கியது. மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தெரு முனை பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கினார்.

    மண்டல தலைவர்கள் ஆயுப்அலி, திருச்செல்வம், விவேகானந்தன், ஜாபர்சாதீக், துணை தலைவர்கள் ராஜேஸ் ராஜப்பா, கோதண்டபாணி, பாபு என்கிற செங்காடச்சலம், மாவட்ட பொது செயலாளர்கள் கண்ணப்பன், ஆறுமுகம். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், துணை தலைவர் பாட்ஷா, சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து சூரம்பட்டி நால் ரோடு, சூளை பஸ் நிறுத்தம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடந்தது. இது குறித்து மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி கூறியதாவது.-

    மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மக்களை வஞ்சித்து வருகிறது. இதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரச்சாரம் செய்ய வேண்டும் என தலைவர் ராகுல்காந்தி அறிவுறுத்தி இருந்தார். அதன்படி இந்த தெருமனை பிரச்சாரம் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சத்தியமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளும் டிராக்டரும் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    சத்தியமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் ரகீம்ஷேட். இவரது மகன் முகமது அனாஸ் (வயது 22).

    ஈரோடு பெருந்துறை ரோடு, கே.சி.பி. தோட்டத்தை சேர்ந்தவர் ‌ஷகின் அலி. இவரது மகன் முகமது மசூத் அலி (21). இவர்கள் 2 பேரும் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு மாணவர்கள்.

    இவர்கள் நேற்று மோட்டார் சைக்கிளில் கல்லூரியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை முகமது மசூத் அலி ஓட்டினார்.

    சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் உள்ள தனியார் மண்டபம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த டிராக்டரும், மோட்டார் சைக்கிளும் மோதின.

    இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் முகமது அனாஸ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ஈரோடு மாவட்டத்தில் 50 சதவீத கடைகள்அடைக்கப்பட்டிருந்தன. போலீசார் பாதுகாப்புடன் பஸ்கள் அனைத்தும் ஓடின.
    ஈரோடு:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. ஈரோடு மாவட்டத்தை பொருத்த வரை 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    மீதி 50 சதவீத கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன. டீக்கடைகள், ஓட்டல்கள் மற்றும் மருந்து கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. ஈரோடு கடை வீதிகளிலும் பாதிக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் பழ வியாபாரிகள் அனைவரும் கடைகளை அடைத்திருந்தனர்.

    அதே சமயம் பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல் ஓடியது. ஈரோடு பஸ் நிலையத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் அனைத்தும் ஓடியது. பஸ்களில் அதிகளவில் கூட்டம் இல்லை. மேலும் ஈரோடு நகரின் முக்கிய பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர். இதே போல் ஈரோடு ரெயில் நிலையத்திலும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    மாவட்டத்தில் முக்கிய ஊர்களான கோபி, சத்திய மங்கலம், பெருந்துறை, பவானி, கொடுமுடி, அந்தியூர் போன்ற அனைத்து ஊர்களிலும் 50 சதவீத கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன.

    அதே சமயம் பஸ் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை வழக்கம் போல் ஓடியது.

    தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் வக்கீல்கள் இன்று ஒரு நாள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர். மாவட்டம் முழுவதும் 1500 வக்கீல்கள் கோர்ட்டுக்கு செல்லவில்லை.



    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து ஈரோட்டில் இன்று 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஈரோடு:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை புரட்சிக்கர இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயப் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி, மாநகர செயலாளர் அம்ஜத் கான், செய்தி தொடர்பாளர் பைசல் அகமது, இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜாபர் சாதிக், சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் துப்பாக்கி சூட்டை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இதேபோல் சூரம்பட்டி நால் ரோட்டில் அருந்ததியர் விடுதலை இயக்கம் சார்பில் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    தமிழ்நாடு ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    ஈரோட்டில் கோடை வெயில் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த நிலையில், நேற்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சில் உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து மக்களையும், விவசாயிகளையும் மகிழ்வித்து வருகிறது.

    பகலில் கோடை வெயில் சுட்டெரித்தாலும் மாலை 5 மணிக்கு மேல் மேகக் கூட்டங்கள் சூழ்ந்து வெயிலை விரட்டியடித்து விட்டு மழை பெய்த வருகிறது. நேற்றும் பகலில் வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருந்தாலும் மாலையில் அந்த வெயில் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

    மாலை 6 மணிக்கு மேல் ஈரோடு மாவட்டம் முழுவதும் லேசாக பெய்யத் தொடங்கிய மழை இரவில் வெளுத்து வாங்கியது. கடும் சூறைக்காற்றுடன் பலத்த இடி-மின்னலுடன் பொது மக்களை பயமுறுத்தியபடி இந்த மழை பெய்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான மொடச்சூர், பாரியூர், கொளப்பலூர், ஒத்தக்குதிரை, கரட்டடிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இரவு 8.15 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை 9.45 மணி வரை கொட்டி தீர்த்தது.

    கோபி பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 71 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதே சமயம் கோபியில் சூறைக்காற்று வீசவில்லை. இடி-மின்னலுடன் மழை கொட்டியது.

    ஈரோட்டில் நேற்று இரவு 7 மணிக்கு மேல் சுழட்டி... சுழட்டி... காற்று அடித்து கன மழை பெய்தது. பலத்த காற்றால் பன்னீர்செல்வம் பார்க், மேட்டூர் ரோடு, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, கொல்லம்பாளையம் ரவுண்டானா, கரூர் பைபாஸ் ரோடு உள்பட முக்கிய இடங்களில் உள்ள விளம்பர பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் என எதையும் காற்று விட்டு வைக்கவில்லை. அனைத்தும் தூக்கி வீசப்பட்டன.

    ஈரோடு கருங்கல்பாளையம், அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, மேட்டூர் ரோட்டில் உள்ள பெரிய பெரிய விளம்பர பேனர்கள் காற்றில் பறந்து உயரழுத்த மின் பாதை கம்பியில் விழுந்தன. இதனால் ஈரோடு நகரம் முழுவதும் மின் தடை ஏற்பட்டது.

    பொதுமக்கள் பலர் தங்கள் தூக்கத்தை இழந்தனர். பல இடங்களில் மின்சாரம் விட்டு விட்டு வந்தது. ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்த பழமையான மரம் முறிந்து விழுந்தது.

    ஈரோடு சி.எம்.சி. கல்லூரி மைதானத்தில் பலத்த காற்றுக்கு ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. பெருந்துறை ரோடு குமலன்குட்டையில் ஒரு மரம் முறிந்து கார் மீது விழுந்தது. இதில் கார் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 2 மரங்கள் முறிந்து விழுந்தன.

    கலெக்டர் அலுவலகம் அருகில் ஒரு மரம் முறிந்து விழுந்தது. சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஓ. காலனி, கொல்லம் பாளையம், வாய்க்கால் மேடு, ஆனைக்கல்பாளையம் உள்பட ஈரோடு நகர பகுதிகளில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தன.

    மேலும் ஈரோட்டில் கொல்லம்பாளையம் ரவுண்டானா பகுதியில் 5-க்கும் மேற்பட்ட டெலிபோன்கம் பங்கள் சாய்ந்தன. இதனால் டெலிபோன் கம்பிகள் தாழ்வாக தொங்கி கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த வாகனங்கள் மின்கம்பி தொங்கியதால் மெதுவாக ஊர்ந்து வந்தன.

    கொல்லம்பாளையத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் பெரிய கம்பால் தொங்கிய மின் கம்பிகளை உயரே தூக்கி பிடித்து வாகனங்களுக்கு உதவி செய்தனர். இதே போல் மின் கம்பங்களும் சாய்ந்தன.

    மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்த இடங்களில் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். விடிய விடிய ரோட்டில் முறிந்து விழுந்த மரங்களை ஊழியர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர். ஈரோடு நகரில் 54 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    சத்தியமங்கலம், பவானிசாகர், பெருந்துறை, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை, அரச்சலூர், கொடுமுடி உள்பட ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று இரவு கோடை மழை கொட்டி தீர்த்தது.
    ஈரோடு மாவட்டம் கோபி அருகே நிதி நிறுவன அதிபரை சரமாரி கத்தியால் குத்திய 5 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    கோபி:

    கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்த வாலிபர்கள் கவுதம் (வயது 18). கார்த்திக் (21). பிரவீன் (19). விக்னேஷ் (19), பில்கிளிண்டன் (20).

    இவர்கள் 5 பேரும் நண்பர்கள். இவர்களில் நேற்று கார்த்திக் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருடன் அவரது நண்பர்களும் சேர்ந்து கார்த்திக்கின் பிறந்த நாளை கொண்டாடி கொண்டிருந்தனர்.

    அப்போது கார்த்திக் தனது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் குஷியுடன் சென்று கொண்டிருந்தார். வளைந்து... வளைந்து பைக்கை ஓட்டினாராம்

    இதை கண்ட அப்பகுதியை சேர்ந்த நிதி நிறுவன அதிபரான நந்தீஸ்வரன் (31) என்பவர், “ஏன் தம்பி இப்படி பயமுறுத்துவது போல் வண்டி ஓட்டுகிறாய்?” என்று கேட்டார்.

    இது தொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. பிறகு அது மோதலாக வெடித்தது.

    இந்த மோதலில் ஆத்திரம் அடைந்த கார்த்திக் மற்றும் பில் கிளிண்டன் ஆகிய 2 பேரும் நந்தீஸ்வரனை சரமாரியாக கத்தியால் குத்தினார்களாம்.

    இதில் அவருக்கு இடுப்பு கழுத்தில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் துடித்தார். அவரை தாக்கிய 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்களாம். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த நிதிநிறுவன அதிபர் நந்தீஸ்வரன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோபி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தலை மறைவான 5 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள். #Tamilnews
    ஈரோட்டில் கந்து வட்டி கொடுமையால் பால் கம்பெனி ஊழியர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 31). பால் கம்பெனி ஊழியர். இவரது மனைவி நந்தினி (25).

    குடும்ப சூழ்நிலை காரணமாக சம்பத்நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 15 ஆயிரம் கடன் பெற்றார்.

    அதில் பாதி பணத்தை பெருமாள் கொடுத்து விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் ஸ்கூட்டரில் பெருமாள் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் அங்கு வந்து கந்து வட்டி கேட்டதாக தெரிகிறது. பணம் கேட்டு பெருமாளை அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    நிதி நிறுவனத்துக்கு பெருமாளை தூக்கி சென்று தாக்கி மிரட்டல் விடுத்ததாகவும், ஆபாசமாக பேசியதாகவும் தெரிகிறது.

    இதனால் பெருமாள் மன விரக்தியில் இருந்தார். வீட்டில் இருந்த அவர் வி‌ஷம் குடித்தார். இதை பார்த்த அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் பெருமாளை மீட்டனர்.

    பின்னர் அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு பெருமாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×