search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிற்சாலை"

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தொழிற்சாலையில் இன்று இரவு திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. #ValluvarKottam #FireinFactory
    சென்னை:

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பொம்மை மற்றும் சிலைகள் செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று இரவு பயங்கர தீப்பற்றி எரிந்தது. 

    தகவலறிந்து தீயை அணைக்க 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. 20க்கு மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தொழிற்சாலையில் பற்றிய தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. தொழிற்சாலை அருகில் வசிப்போர் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டனர். தீ பர்வாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. #ValluvarKottam #FireinFactory
    சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் தொழிற்சாலை ஒன்றில் வாயு கசிவினால் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர். #factoryexplosioninChina
    பீஜிங்:

    சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உலோக தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இன்று காலை தொழிற்சாலையின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள உடைந்த உலோகங்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்த பகுதியில் வாயு கசிந்து வெடி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.  மேலும் 5 பேர் காயமடைந்தனர் என்றும், வெடிவிபத்து ஏற்பட்டது பற்றி விசாரணை நடந்து வருகிறது என்றும் செய்திகள் வெளியாகின.

    ஜியாங்சு மாகாணத்தில் கடந்த சில நாட்களில் ஏற்பட்டுள்ள 2வது மிகப்பெரிய வெடிவிபத்து இது. மார்ச் 21-ம் தேதி யான்செங் நகரில் ரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 78 பேர் பலியானது நினைவிருக்கலாம். #factoryexplosioninChina
    தூத்துக்குடி அனல் மின் நிலையம், குடிநீர் தேவை தவிர தாமிரபரணி தண்ணீரை தொழிற்சாலைகள் எடுக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. #SupremeCourt #ThamirabaraniRiver
    புதுடெல்லி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலம் தாமிரபரணி ஆற்றின் மூலமாக பாசன வசதி பெற்று வருகின்றன. இதேபோல் தாமிரபரணி ஆற்றின் குடிதண்ணீரை நம்பி லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர்.

    இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியில் இருந்து தூத்துக்குடியில் உள்ள 21 தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 9 கோடியே 20 லட்சம் லிட்டர் தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை எடுத்து வழங்கும் திட்டம் 2011-ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

    இதை எதிர்த்து தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து எந்த தொழிற்சாலைக்கும் தாமிரபரணி தண்ணீரை வழங்க கூடாது என்றும், அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.



    பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹேமந்த் குப்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஜோயல் தரப்பில் மூத்த வக்கீல் அனிதா செனாய் ஆஜரானார். தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாசன், அரசு வக்கீல் வினோத் கன்னா ஆஜரானார்கள்.

    இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் ‘ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கும், குடிநீர் தேவைக்கும் மட்டுமே தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். தாமிரபரணியில் இருந்து தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்தனர்.

    மேலும், இந்த வழக்கில் 21-ந்தேதிக்குள் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #SupremeCourt #ThamirabaraniRiver
    ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் அடிப்படை வருமானம் வழங்கும் திட்டத்திற்கான மத்திய அரசின் சில கட்டுப்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #CentralGovernment
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா முழுவதும் உள்ள ஏழைகளுக்கு அடிப்படை வருமானமாக மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம், குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வழங்கும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்திட்டங்கள் தனித்து செயல்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.



    ஆனால், இத்திட்டத்திற்கான சில கட்டுப்பாடுகள் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தான் கவலையளிக்கிறது. அடிப்படை ஊதியத் திட்டத்தைக் காரணம் காட்டி மதிய உணவுத் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவையும் ரத்து செய்யப்படக்கூடும். அவ்வாறு செய்யப்பட்டால் அது ஏழைக் குழந்தைகளின் கல்வியை பாதிப்பதுடன், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் அதிகரிக்கச் செய்யும். எந்த நோக்கத்திற்காக இத்திட்டம் கொண்டுவரப்படுகிறதோ, அதையே இது சிதைத்து விடும் என்பதை அரசு உணர வேண்டும்.

    அதேபோல், குறு உழவர்களுக்கு ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உர மானியம், இலவச மின்சாரம் ஆகியவை நிறுத்தப்படும். விவசாயத்திற்கான இடுபொருள் செலவுகளும், ஆள் கூலியும் அதிகரித்துவிட்ட நிலையில் அரசு சார்பில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உதவிகள் நிறுத்தப்பட்டால் அது பெரும் இழப்பை ஏற்படுத்தும்.

    எனவே, ஏழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இப்போது வழங்கப்பட்டு வரும் மானியங்கள், சேவைகள் உள்ளிட்ட அனைத்தையும் தொடரச் செய்து, அத்துடன் கூடுதலாக ஏழைகளுக்கு அடிப்படை வருமானம் வழங்கும் திட்டத்தையும், விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். அத்துடன், அடிப்படை ஊதியம் ஆண்களிடம் வழங்கப்படும் போது அதை அவர்கள் ஓரிரு நாட்களில் தவறான வழிகளில் செலவழித்துவிட்டால் குடும்பம் வறுமையில் வாடும் என்பதால், அரசு வழங்கும் அடிப்படை ஊதியம் குடும்பத்தலைவிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss #CentralGovernment
    டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய வகையில் சுகாதாரமற்ற முறையில் பராமரித்ததற்காக 5 தொழிற்சாலைகளுக்கு 2 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. #DenguFever
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் துப்புரவு மற்றும் சுகாதாரப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காக்களூர் தொழிற்பேட்டையில் இன்று காலை மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன் தலைமையில் அதிகாரிகள் டெங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

    தொழிற்சாலைகளில் உள்ள குடோன், தண்ணீர் தொட்டிகளில் அதிரடி ஆய்வு செய்தனர். அப்போது டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய வகையில் சுகாதாரமற்ற முறையில் பராமரித்ததற்காக 5 தொழிற்சாலைகளுக்கும் 2 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள 350 தொழிற்சாலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    அபராதம் விதித்த தொழிற்சாலைகள் சீர் செய்யாவிட்டால் மேலும் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும்.

    தமிழக அரசின் ஆவின் பால் தொழிற்சாலையில் ஆய்வில் டெங்கு உற்பத்தியாகக் கூடிய வகையில் இல்லாவிட்டாலும், தூய்மையாக வைத்திருக்க நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

    ஆய்வின் போது வட்டாட்சியர் தமிழ் செல்வன், திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லதா, விஜயகுமாரி மண்டலா துணை அலுவலர் சபாநாயகம் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் உடன் இருந்தனர். #DenguFever
    காலாப்பட்டில் சுனாமி குடியிருப்பில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாக வந்த புகாரை தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி அங்கு சென்று தொழிற்சாலைக்கு எச்சரிக்கை விடுத்தார்.

    சேதராப்பட்டு:

    காலாப்பட்டில் சுனாமி குடியிருப்பில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாக வந்த புகாரை தொடர்ந்து கடந்த வாரம் கவர்னர் கிரண்பேடி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை பார்வையிட்டார்.

    மேலும் குடிநீர் பற்றாக்குறைக்கு அங்குள்ள தனியார் தொழிற்சாலை தான் காரணம் என்றும் அங்கு அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் அந்த தொழிற்சாலையை பார்வையிட்டு கவர்னர் கிரண்பேடி ஆய்வு செய்தார்.

    அப்போது தொழிற் சாலையில் எவ்வளவு நீர் பயன்படுத்தப்படுகிறது என்ற தகவலை கவர்னர் கேட்ட போது, அது பற்றிய விவரங்கள் அங்கிருந்த அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தெரியவில்லை.

    இதையடுத்து கவர்னர் கிரண்பேடி அடுத்த முறை வரும் போது, சரியான விவரங்களை அளிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து சென்றார்.

    இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் கவர்னர் கிரண்பேடி பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை, சுற்றுச்சூழல் துறை, அறிவியல் தொழில் நுட்பத்துறை அதிகாரிகளுடன் காலாப்பட்டு தனியார் தொழிற்சாலைக்கு சென்றார். அங்கு மாத்திரை உற்பத்தி செய்யும் பிரிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கிருந்த தொழிற்சாலை அதிகாரிகளிடம் இந்த தொழிற்சாலை எப்போது தொடங்கப்பட்டது? மழைநீர் சேகரிப்பு எந்த ஆண்டில் இருந்து செயல்படுத்தப்படுகிறது. என்று அடுக்கடுக்கான கேள்விகளை கவர்னர் கேட்டார்.

    நிலத்தடி நீரை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    மேலும் மக்களுக்கு பணத்தை கொடுத்து செலவு செய்வதை விட மழைநீரை சேமிக்க பெரிய குளமோ, குட்டையோ ஏற்படுத்த வேண்டும் என தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தினார். மேலும் இதனை வருகிற 29-ந் தேதி பார்வையிட வருவதாகவும் கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்தார்.

    கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியிடும் தொழிற்சாலைகளை முற்றுகையிடும் போராட்டத்தை விரைவில் நடத்த இருப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
    நாமக்கல்:

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. எதிர்க்கட்சியினர் ஆளும்கட்சி மீதும், ஆளும்கட்சியினர் எதிர்க்கட்சியினர் மீதும் குற்றம்சாட்டி வருகின்றனர். உளவுத்துறையின் தோல்வி, சமூக விரோதிகள் ஊடுருவல் என்று விவாதம் நடைபெற்று வருகிறது. ஆனால் உண்மை குற்றவாளி மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்பது யாராலும் பேசப்படுவது இல்லை.

    மாசு கட்டுபாட்டு வாரியம் ஆலைக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்குகிறது. ஆனால் அந்த நிபந்தனை பின்பற்றப்படுகிறதா? என கண்துடைப்புக்கு மட்டுமே ஆய்வு செய்கிறார்கள்.

    மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் லஞ்சம் பெருகி விட்ட காரணத்தால் கழிவு பொருட்களால் நிலத்தடிநீர், காற்று மாசுபடுகிறது. இதனால் புற்றுநோய் மற்றும் தோல்நோய் வந்து அழியபோவது பொதுமக்கள் என்பதை உணர வேண்டும். இந்த விஷயத்தில் தவறு செய்யும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொங்குநாட்டில் சாயக்கழிவுகள் மற்றும் தோல் கழிவுகள் நேரடியாக நீர்நிலைகளில் கலக்கப்படுகிறது. இதனால் நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் கொங்குநாடு மக்கள் வாழ தகுதி இல்லாத இடமாக மாறிவிடும். இதேபோல் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளும் கழிவுகளை நேரடியாக நீர்நிலைகளில் கலக்கின்றன. கொங்கு மண்டலத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியிடும் தொழிற்சாலைகளை முற்றுகையிடும் போராட்டம் விரைவில் நடத்தப்படும்.

    சட்டசபையில் நடைபெறும் மானிய கோரிக்கைகள் குறித்த விவாதத்தில் எதிர்க்கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி உள்ளோம். அவரும் பரிசீலனை செய்வதாக கூறி உள்ளார். சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்வதை மக்கள் விரும்பவில்லை. ஆக்கபூர்வமாக விவாதம் செய்வதையே விரும்புகின்றனர்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. அது தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் அமைப்பாக இருக்க வேண்டும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பெருவாரியான மக்கள் செய்து வரும் பெண்கள் பூப்பெய்தும் நிகழ்ச்சியை கொச்சைப்படுத்தி பேசி இருப்பது கண்டனத்துக்கு உரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து நடைபெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் ஈஸ்வரன் பேசினார். அந்த கூட்டத்தில் ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவி கமலிக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கான காசோலை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இதில் கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை தலைவர் தேவராசன், மாநில இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் துரை, செல்வம், சின்ராஜ், விவசாய அணி துணை செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், துணை செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் செல்வராஜ், கொள்கை பரப்பு செயலாளர் கந்தசாமி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
    மொடக்குறிச்சியில் தொழிற்சாலையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வட மாநில வாலிபர்களை மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள சோலார்புரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 40).

    இவர் அந்த பகுதியில் கிரானைட் கற்களுக்கு பாலீஸ் தீட்டும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு ஏராளமான தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர்.

    வழக்கமாக இரவு நேரத்தில் வேலை முடிந்ததும் தொழிற்சாலையை மூடி விட்டு உரிமையாளர் இளங்கோவனும் தொழிலாளர்களும் சென்று விடுவது வழக்கம்.

    ஆனால் நேற்று இரவு வேலை முடிந்ததும் சில தொழிலாளர்கள் சென்று விட்டனர். தொழிற்சாலைக்குள் இளங்கோவன் உள்பட 10 பேர் படுத்து தூங்கினர்.

    இன்று அதிகாலை 5 மணி அளவில் தொழிற்சாலையின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. உரிமையாளர் இளங்கோவன் எழுந்த வந்து கதவை திறந்தார்.

    அப்போது அங்கு வட மாநில வாலிபர்கள் 5 பேர் நின்றனர். அவர்கள் இளங்கோவனிடம் தண்ணீர் கேட்டனர். எனவே அவர்களை இளங்கோவன் தொழிற்சாலைக்குள் அனுமதித்தாக தெரிகிறது.

    தொழிற்சாலைக்குள் வந்த அந்த வட மாநில வாலிபர்கள் அங்கு இளங்கோவன் மட்டுமே இருக்கிறார் என்று அவர்கள் நினைத்தனர். எனவே இளங்கோவனினை அவர்கள் மிரட்டி பணம் கேட்டனர்.

    மேலும் அங்கு கொள்ளையடிக்க முயன்றதாகவும் தெரிகிறது. இதை எதிர்பாராத இளங்கோவன் சத்தமிட்டார். அவரது சத்தம் கேட்டு அங்கு தூங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் ஓடி வந்தனர்.

    அவர்களை பார்த்ததும் அந்த வட மாநில வாலிபர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை இளங்கோவனும் தொழிலாளர்களும் துரத்தி சென்றனர். அக்கம் பக்கத்தினர் சிலரும் அங்கு வந்து அந்த வட மாநில வாலிபர்களை பிடிக்க முயன்றனர்.

    அந்த வாலிபர்களில் 2 பேர் மட்டுமே பொது மக்களிடம் சிக்கினர். மற்ற 3 வாலிபர்கள் அங்கிருந்த தப்பி ஓடிவிட்டனர்.

    பிடிபட்ட வட மாநில வாலிபர்களிடம் பொதுமக்கள் விசாரித்தனர். ஆனால் அந்த வாலிபர் எந்த தகவலையும் கூறவில்லை.

    ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பிடிபட்ட 2 வாலிபர்களையும் அங்க ஒரு மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    திருட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படைக்கு நியமிக்கப்பட்ட ஈரோடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் அங்கு வந்தார்.

    பொதுமக்களிடம் இருந்து அந்த 2 வாலிபர்களையும் மீட்ட போலீசார் அவர்களை ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.#tamilnews
    ×