search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • தக்காளியின் பண்ணை விலை கிலோ ரூ.24 முதல் ரூ.27 வரை இருக்கும் என ஆய்வு முடிவின்படி அறியப்பட்டு உள்ளது.
    • கோடை காலம் என்பதால் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவை,

    கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் தக்காளி, கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் உற்பத்தி பயன்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் 3-வது முன் கூட்டிய மதிப்பீட்டின்படி 2021-22ல் தமிழகத்தில் தக்காளி சுமார் 0.54லட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப்பட்டு 16.18 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல் மற்றும் திருவண்ணாமலை ஆகியவை தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாக உள்ளது.

    தற்போது கோவை மொத்த விலை சந்தைக்கு தக்காளி ராயகோட்டை, கிருஷ்ணகிரி, கோவை சுற்றுவட்டார கிராமங்களான பெரியநாயக்கன்பாளையம், சாவடி, உடுமலை, தாராபுரம் மற்றும் கர்நாட மாநிலம் மைசூர் பகுதிகளில் இருந்து வருகிறது.

    மேலும் வேளாண்மை மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் 3-வது முன் கூட்டிய மதிப்பீட்டின் படி (2021-22) கத்திரி 0.24 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 3.13 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நாமக்கல், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் உற்பத்ததி செய்யப்பட்டுகிறது. வர்த்தக மூலங்களின்படி கோவை சந்தைக்கு தற்போதைய வரத்து மாதம்பட்டி, ஆலந்துறை, நாச்சிபாளையம், குப்பனூர், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வருகின்றது.

    இதேபோல வேளாண்மை மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் 3-வது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி (2021-22) வெண்டைக்காய் 0.25 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்ப்டு 24 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் தர்மபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், கோவை, மதுரை, வேலூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    வர்த்தக மூலங்களின்படி தற்போது கோவை சந்தைக்கு வெண்டைக்காய மாதம்பட்டி, ஆலந்துறை, நாச்சிபாளையம், குப்பனூர், தொண்டாமுத்தூர், மற்றும் பூலுவப்பட்டி பகுதிகளில் இருந்து வருகின்றது.

    இந்த நிலையில் விலை முன்னறிவிப்பு திட்டக்குழு ஒட்டன்சத்திரம் மற்றும் கோவை சந்தையில் கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்தரி மற்றும் வெண்டைக்காய் விலையில் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

    பொருளாதார ஆய்வு முடிவின்படி அறுவடையின் போது (மே 2023) தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோ ரூ.24 முதல் ரூ.27 வரையும், நல்ல தரமான கத்தரியின் விலை ரூ.22 முதல் ரூ.27 ஆகவும், வெண்டைக்காயின் விலை ரூ.26 முதல் ரூ.28 வரை இருக்கும் என அறியப்பட்டு உள்ளது. மேலும் கோடை காலம் என்பதால் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விவசாயிகள் அதற்கேற்ப சந்தை முடிவுகளை எடுக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மகேஸ்வரன், ஜெயக்குமார் மீது கட்டுப்பாடற்ற லாரி மோதியது.
    • 2 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

    கோவை,

    கோவை புலியகுளம் அருகே உள்ள வி.சி.காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது46). பெயிண்டர்.

    சம்பவத்தன்று இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (38) என்பவருடன் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டு இருந்த மகேஸ்வரன், ஜெயக்குமார் ஆகியோர் மீது மோதியது.

    இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு 2 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மகேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நேருநகரை சேர்ந்தவர் பெருமாள்சாமி (78), தர்மபுரியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (26). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் காளப்பட்டி ரோட்டை கடக்க முயன்றனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் 2 பேர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த பெருமாள்சாமி சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உயிருக்கு போராடிய ராஜலட்சுமியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிளை தேடி வருகிறார்கள்.

    இருகூர் அருகே உள்ள எல்.அன்டு.டி. பைபாஸ் ரோட்டில் 25 வயது மதிக்க தக்க வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் இருந்த ரெயில்வே பாலத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய வாலிபரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் இறந்த வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் பெண்களிடம் தவறாக நடக்க முயன்றார்.
    • பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து வடக்கிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன் புதூர் மீனாட்சி புரம் வீதி வண்டி காளியம்மன் கோவில் திருவிழா நேற்று இரவு நடந்தது. கோவிலுக்கு திருவிழாவை காண அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து இருந்தனர். அப்போது அங்கு குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் பெண்களிடம் தவறாக நடக்க முயன்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் சத்தம் போட்டனர்.

    இதனை கேட்ட அங்கு இருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்து வடக்கிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் (வயது 42) என்பது தெரிய வந்தது. இவர் வேட்டைக்காரன் புதூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

    பொதுமக்கள் தாக்கிய தில் பன்னீர் செல்வம் காயடைந்ததால் அவை போலீசார் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகி றார்கள்.

    • மலை ெரயிலில் பயணச் சீட்டு கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
    • தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ெரயில் இயக்கப்படுகிறது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம்- ஊட்டி, குன்னூர்- ஊட்டி இடையே கோடைகால சிறப்பு மலை ெரயில் சேவை இயக்கப்படுவது குறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ெரயில் நிலையத்தில் இருந்து தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ெரயில் இயக்கப்படுகிறது. இதில் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ெரயில் பாதையில் பசுமையான காடுகள், அருவிகள், வன விலங்குகள், பாறைகளால் குடையப்பட்ட ெரயில் குகைகள் உள்பட இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்க உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரைச் சேர்ந்த பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஆனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ெரயிலில் பயணச் சீட்டு கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். இதனால் ஆண்டுதோறும் கோடை விழாவையொட்டி சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையம்-ஊட்டி, குன்னூர்-ஊட்டி, ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான சிறப்பு ெரயில்கள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 14) முதல் ஜூன் 25-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளன. இந்த ெரயில்கள் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய கிழமைகளில் இயக்கப்படுகின்றன. குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு சிறப்பு ெரயில் புறப்பட்டு ஊட்டி ரயில் நிலையத்துக்கு காலை 9.40 மணிக்கு சென்றடையும். இதேபோல் ஊட்டி ெரயில் நிலையத்திலிருந்து மாலை 4.45 மணிக்கு சிறப்பு மலை ெரயில் புறப்பட்டு குன்னூர் ெரயில் நிலையத்துக்கு மாலை 5.55 மணிக்கு வந்தடையும். மேட்டுப்பாளையம் ெரயில் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 15 முதல் ஜூன் 24-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் ெரயில் நிலையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு சிறப்பு ெரயில் புறப்பட்டு ஊட்டிக்கு மதியம் 2.25 மணிக்கு சென்றடையும். இதேபோல் ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 16 முதல் ஜூன் 25-ந் தேதி வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கி ழமைகளில் சிறப்பு மலை ெரயில் இயக்கப்படுகிறது. இந்த ெரயில் ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து பகல் 11.25 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்துக்கு மாலை 4.20 மணிக்கு வந்தடையும்.

    மேலும், ஏப்ரல் 14 முதல் ஜூன் 25-ந் தேதி வரை ஊட்டி -கேத்தி இடையே சிறப்பு மலை ெரயில் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மின்கம்பங்கள் மாற்றப்பட்டு 10 நாட்களை கடந்தும், அதில் தெரு விளக்குகள் பொருத்தப்படவில்லை.
    • 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டு பகுதியில் உப்பு தண்ணீர், நல்ல தண்ணீர் குடிநீர் குழாய்கள் உடைந்து 3 மாதங்களாகிறது.

    பொதுமக்கள் சரி செய்ய கோரிக்கை விடுத்த பின்னர் சீரமைப்பு பணி நடந்தது. ஆனாலும் இதுவரை குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என தெரிகிறது.மேலும் அந்த வார்டில் உள்ள சாலைகளும் சீரமைக்கப்பட்டு வந்தன. இந்த பணியும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு தொடங்கியது. அந்த பணியும் இதுவரை முடியவில்லை.

    இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.மேலும் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் ஏ.ஜி நகர், ஆர்.வி நகர் பகுதிகளில் மின் கம்பங்கள் மாற்றப்பட்டு 10 நாட்களை கடந்தும், அதில் தெரு விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

    இப்படி எண்ணற்ற பிரச்சினைகள் இந்த வார்டில் உள்ளது. இது தொடர்பாக இந்த வார்டின் கவுன்சிலர் வனிதா சஞ்ஜீவ்காந்தி பலமுறை புகார் தெரிவித்தார். ஆனாலும் பணிகள் முடிவடையாமலேயே உள்ளன.

    இந்த நிலையில், 27-வது வார்டு உறுப்பினர் வனிதா சஞ்ஜீவ்காந்தி தலைமையில் 100-க்கு மேற்பட்ட பொதுமக்கள் மேட்டுப்பாளையம் நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளிடமும் மனு அளித்தனர். அப்போது அதிகாரிகள், உடனடியாக சம்மந்தப்பட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறினர். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பால்ராஜ் கூறுகையில், மேட்டுப்பாளையம்-கோவை சாலையில் 27-வது வார்டு பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனால் இந்த வார்டுக்கு தேவையான குடிநீர் குழாய், தெரு விளக்குகள் சீரமைப்பது தடை ஏற்பட்டது. எனவே இப்பகுதியில் விரைவில் பணிகளை முடித்து தர வேண்டுமென நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.

    • நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • 2 டன் பழங்களை கொண்டு, விநாயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    கோவை

    ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிறப்பான ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழகம் முழுவதும் தமிழ்புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி கோ வை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்க ளிலும் இன்று அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழ் புத்தாண்டை யொட்டி கோவை புலிய குளம் முந்தி விநாயகர் கோவில் நடை அதிகாலையி லேயே திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷே கங்களும், தீபாராதனையும் நடைபெற்றது.

    பின்னர் ஆப்பிள், ஆரஞ்சு உள்பட 2 டன் பழங்களை கொண்டு, விநாயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    புத்தாண்டையொட்டி காலையிலேயே முந்தி விநாயகர் கோவிலுக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்திருந்த னர். அவர்கள் நீண்ட வரி சையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    மருதமலை முருகன் கோவில் நடை அதிகாலை 5.30 மணிக்கு திறக் கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷே கங்கள் மற்றும் ஆராதா னைகள் நடை பெற்றது.

    புத்தாண்டு என்பதால், மருதமலை முருகன் கோவிலுக்கு கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை, ெபாள்ளாச்சி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    அவர்கள் மலைக்கோவிலுக்கு படிக்கட்டுகள் வழியாகவும், மலைப்பாதை வழியாகவும் கோவிலுக்கு சென்றனர். அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மலையடிவாரத்திலும் எங்கு பார்த்தாலும் பக் தர்கள் கூட்டமாகவே கா ணப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மேலும் அங்கு போலீசாரும் பாது காப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர்.

    காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மன் கோவிலில் புத்தாண்டையொட்டி, அம்மனுக்கு ரூ.6 கோடி மதிப்பில் பணம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல் தியாகி குமரன் மார்க்கெட் பிளேக் மாரியம்மன் கோவிலிலும் அம்மன் தங்க அங்கி அலங்காரத்திலும், பெரிய கடைவீதி மாகாளியம்மன் மலர் அலங்காரத்திலும், பொன்னையராஜபுரம் விக்னராஜ கணபதி மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    இதேபோல் கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில், மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உள்ள மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    • 3 நாட்களாக நாகராஜனின் வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர்.
    • நாகராஜன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    குனியமுத்தூர்,

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணா புரத்தை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 50). இவர் தமிழ் புத்தாண்டையொட்டி தனது வீட்டில் பெயிண்ட் அடித்து புதுப்பித்தார். பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக செல்வபுரம் அசோக் நகரை சேர்ந்த சஞ்சீவ்குமார் (26), ராஜேஸ்வரி நகரை சேர்ந்த சூர்யா (24) ஆகியோர் வந்து இருந்தனர். அவர்கள் கடந்த 3 நாட்களாக நாகராஜனின் வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர்.

    சஞ்சீவ்குமார், சூர்யா ஆகியோர் பெயிண்ட் அடிக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர். அப்போது நாகராஜன் பொருட்கள் வாங்குவதற்காக வெளியே சென்றார். இதனை சாதகமாக பயன்படுத்திய சஞ்சீவ்குமார், சூர்யா ஆகியோர் வீட்டில் இருந்த 2 கிராம் கம்மல், 1 கிராம் மூக்குத்தி, வெள்ளி கொலுசு, பித்தளை குடம், ரூ.6,500 ரொக்க பணம் உள்ளபட ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடி வெளியே மறைத்து வைத்தனர்.

    பின்னர் வழக்கம் போல மாலையில் வேலை முடிந்ததும் திருடிய பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றனர்.

    தனது வீட்டில் உள்ள பீரோவை நாகராஜன் பார்த்த போது அதில் இருந்த நகை, பணம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து அவர் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சஞ்சீவ்குமார், சூர்யா ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வேலைக்கு சென்ற வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டனர். பின்னர் போலீசார் அவர்களிடம் இருந்த திருடப்பட்ட பொருட்களை மீட்டனர்.இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கணேசன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    • தெய்வா சாணிப்பவுடரை குடித்து விட்டதாக கூறி மயங்கினார்.

    கோவை,

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்னவேடப்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி தெய்வா (வயது 46). இவரது கணவர் கோவை மாநகர போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் சஸ்பெண்டு செய்யப் பட்டார்.

    இதன் காரணமாக தெய்வா மிகுந்த மனவே தனை அடைந்து காணப் பட்டார். இதனால் அவரது உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த தெய்வா திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்தார். இதனை பார்த்த கணேசன் என்ன ஆச்சு என்று கேட்டார் அதற்கு தெய்வா சாணிப்பவுடரை குடித்து விட்டதாக கூறி மயங்கினார்.

    இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் தனது மனைவியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தெய்வா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிரவீன் பாண்டியன் சூலூர் பிரிவில் உள்ள தனியார் நிறுவ னத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
    • 3 பேர் மீது கொலை முயற்சி மற்றும் ஆள் கடத்தல் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

    சூலூர்,

    சூலூர் தாசில்தார் அலுவலகம் அருகே ஜி.கே.எஸ் நகரை சேர்ந்தவர் பிரவீன் பாண்டியன்.

    இவர் சூலூர் பிரிவில் உள்ள தனியார் நிறுவ னத்தில் ஊழியராக பணி யாற்றி வருகிறார்.இவர் சம்பவத்தன்று தன்னுடன் பணிபுரியும் தனது நண்பர்களான ஹரி ஹரனுடன், சூலூர் படகுத்து றையில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்தது. அவர்கள் பிரவீன் பாண்டியன் மற்றும் ஹரிஹரனிடம் பணம் கேட்டனர். அவர்கள் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், அவர்கள் 2 பேரையும் தாக்கி, ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றனர்.

    இந்த நிலையில் வேலைக்கு சென்ற அண்ணன் வெகுநேரமாக வராததால் சந்தேகம் அடைந்த பிரவீன் பாண்டியனின் சகோதரர் மோகன பாண்டியன் அவரை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் ஹரிஹரன் மற்றும் பிரவீன் பாண்டியனை ஒரு கும்பல் சூலூர் பெரிய குளம் அருகே தாக்கி கொண்டிருப்பதாக தகவல் வந்தது.

    அப்போது அங்கு 3 பேர் கத்தி, மரக்கட்டை இரும்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொண்டிருந்தனர். இதையடுத்து மோகன பாண்டியன் விரைந்து சென்று, அந்த கும்பலை மடக்கி பிடித்து சூலூர் போலீசில் ஒப்படைத்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில், வாலிபர்களை தாக்கியது, சிங்காநல்லூர் கள்ளிமடை காமராஜர் நகரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(27), பள்ளபாளையம் கன்னியாத்தா தோப்பை சேர்ந்த மணி விக்னேஷ்(20), பீளமேட்டை சேர்ந்த பாலாஜி(24) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் கொலை முயற்சி மற்றும் ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • ஏப்ரல் 16-ந் தேதி ஒருங்கிணைந்த ராணுவத் தேர்வுகள் (தொகுதி-1) நடத்தப்படுகிறது.
    • 162 அறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    கோவை,

    கோவையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த ராணுவத் தேர்வை 6 மையங்களில் 1,939 பேர் எழுத உள்ளனர் என்று கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஏப்ரல் 16-ந் தேதி ஒருங்கிணைந்த ராணுவத் தேர்வுகள் (தொகுதி-1) நடத்தப்படுகிறது. இத்தேர்வை, கோவை மாவட்டத்தில் 6 மையங்களில் 1,939 பேர் எழுகின்றனர்.

    தேர்வைக் கண்காணிக்க மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கலெக்டர் தலைமையில், துணை கலெக்டர் நிலையில் இரண்டு உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வை யாளர்கள், தாசில்தார் நிலையில் தலா ஒரு தேர்வு மைய ஆய்வு அலுவலர், துணை தாசில்தார் நிலையில் 8 தேர்வு மைய உதவி கண்காணிப்பாளர்கள், 162 அறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், தேர்வைப் பார்வையிடும் வகையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் செயலர் நிலையில் ஒரு அலுவலரும் நியமிக்கப்பட் டுள்ளார். அனைத்து தேர்வு மையங்களிலும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரி களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளைம், சூலூர் மற்றும் பொள்ளாச்சி பஸ் நிலையங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ் வசதிகள் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளன.

    தேர்வர்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் நுழைவு சீட்டுடன், தேர்வரின் புகைப்படத்துடன் கூடிய மத்திய, மாநில அரசுகளால் வழங்கப் பட்டுள்ள அடையாள அட்டை (ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு, கடவுச்சீட்டு),ஒரு கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஆண்டுதோறும் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
    • இறுதியாக 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது.

    கோவை,

    கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 11 ஆண்டுக்கு பின், மீண்டும் மலர் கண்காட்சியை வருகிற ஆகஸ்டு மாதம் நடத்த பல்கலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    முன்பு ஆண்டுதோறும் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். உள்நாட்டில் அனைத்து ரக மலர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் மலர்கள் வரவழைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும். இக்கண்காட்சியில் பல்வேறு அரிய மலர்களை காணமுடியும்.பல்கலைக்கழகத்தில் இறுதியாக 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. மலர் கண்காட்சி நடத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்நிகழ்ச்சிக்கு அப்போதைய துணைவேந்தர்கள் பெரிதாக ஆர்வம் காட்டாமல் நிறுத்தப்பட்டது.

    தற்போது மீண்டும் மலர் கண்காட்சி பிரமாண்டமாக நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கவும், மலர்கள் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இக்கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிக்காக பல்கலைக்கழகத்தில் பல்ேவறு பணிகள் நடந்து வருகின்றன.

    துணைவேந்தர் கீதா லட்சுமியிடம் கேட்டபோது பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்டு மாதம் மலர் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்றார்.

    • பஸ் நிலையங்களில் இன்று கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • விஷேச தினங்களில் கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    கோவை,

    நாளை 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. மேலும் அதன் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுைற வருகிறது.

    இதன் காரணமாக கோவையில் தங்கி வேலை பார்த்து வரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இவர்கள் கோவையில் இருந்து செல்லும் பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணிக்க தயாராகி வருகின்றனர்.

    இதனால் பஸ் நிலையங்களில் இன்று கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷேச தினங்களில் கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    அந்த வகையில், தமிழ்புத்தாண்டையொட்டி இன்று முதல் கோவையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, ராஜபாளையம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 110 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோல கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு மார்க்கமாக பிற ஊர்களுக்கு செல்ல 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மொத்தமாக கோவையில் இருந்து 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    மேலும் பயணிகளின் வருகை ஏற்றபடி பஸ்களின்எண்ணிக்கை அதிகரிக்கவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

    ×