search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேதம்"

    பெரம்பலூர் வாரச்சந்தையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கொட்டகைகள் நேற்று திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் நாசமாயின.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்- வடக்கு மாதவி சாலையோரத்தில் உழவர் சந்தை அருகே வாரச்சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம். இதில் வியாபாரிகள் கீற்று கொட்டகை அமைத்து, அதில் தக்காளி, வெங்காய கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்டவையை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் அந்த வாரச்சந்தையில் உள்ள ஒரு கீற்று கொட்டகை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தினர் தீயை அணைப்பதற்காக வீட்டில் இருந்து தண்ணீரை எடுத்து ஓடி வந்தனர்.

    ஆனால் அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைப்பதற்குள், அருகில் உள்ள கொட்டகைகளுக்கும் தீ மள, மளவென பரவியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கொட்டகைகள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து வாரச்சந்தை கொட்டகைகளில் பிடித்த தீயை அணைத்தனர். ஆனால் அந்த கொட்டகைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. நேற்று வாரச்சந்தை இல்லாததால் அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படவில்லை. கொட்டகையில் எப்படி தீ பிடித்தது? யாரும் அந்த கொட்டைகையில் அமர்ந்து பீடி அல்லது சிகரெட் புகைத்து விட்டு, அணைக்காமல் போட்டு சென்றதால் தீ பிடித்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக பெரம்பலூர் வடக்குமாதேவியில் ராஜூ என்பவருக்கு சொந்தமான சோளக்காட்டில் தீப்பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    பாகிஸ்தானில் பிரசித்தி பெற்ற இந்து கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், கோவிலை அடித்து நொறுக்கி தீ வைத்து சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. #Hindutemplevendalised
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவிலில் நுழைந்த மர்ம நபர்கள், கோவிலை  சேதப்படுத்தினர். மேலும் அங்கிருந்த  புனித நூல்களுக்கும், சிலைகளுக்கும் தீ வைத்தனர். இச்சம்பவம் கைர்புர் மாவட்டத்தில் உள்ள கும்ப் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அத்துடன், குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறை அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற செயல்கள் குரானின் போதனைகளுக்கு எதிரானது எனவும் தெரிவித்தார்.

    கோவிலை சேதப்படுத்திய குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த கோவில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இருப்பதால், பாதுகாப்புக்கு யாரையும் நியமிக்கவில்லை. இந்த சம்பவத்திற்கு பின்னர் அப்பகுதியில் உள்ள இந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து பாகிஸ்தான் இந்து கவுன்சில் ஆலோசகர் ராஜேஷ் குமார் ஹர்தாசனி கூறுகையில், இந்து கோவில்களின் பாதுகாப்புக்காக ஒரு சிறப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இந்த தாக்குதல்கள்  இந்து சமூகத்தின் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மத நல்லிணக்கத்தை அவமதிக்கும் வகையில் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன எனவும் கூறினார்.

    இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. முஸ்லீம் நாடான பாகிஸ்தானில் 220 மில்லியன் மக்களில், 2 சதவீதம் இந்து மக்கள் வாழ்கின்றனர். இதில் பெரும்பாலானோர் சிந்து மாகாணத்தில் வசிப்பது குறிப்பிடத்தக்கது. #Hindutemplevendalised

    அமெரிக்காவில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், சிலைகளை அவமதித்து, பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. #USHindutemplevendalised
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கென்டக்கி மாநிலம், லூயிஸ்வில்லே நகரில் பிரசித்தி பெற்ற சுவாமி நாராயணன் கோவில் உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் இந்த கோவிலுக்குள் நுழைந்து, கோவிலின் சிலைகள் மற்றும் கலைநயம் வாய்ந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.

    கோவிலின் உட்புற சிலைகள் மற்றும் சுவர்களின் மீது கருப்பு நிற சாயம் அடித்து, சில வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன. மேலும் அங்கிருந்த நாற்காலி ஒன்றின் மீது கத்தி குத்தப்பட்டிருந்தது. பின்னர் ஜன்னல், கதவுகள் உடைக்கப்பட்டு, அலமாரி காலியாக இருந்தது. இச்சம்பவம் இந்திய-அமெரிக்க மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது மத வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக இருந்ததாக பலரும்  குற்றம்சாட்டி உள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மேயர் கிரெக் பிஷ்ஷர், கண்டனம் தெரிவித்துள்ளார். சேதமடைந்த கோவிலை பார்வையிட்ட அவர், இது குறித்து மேலும் பேசுகையில், “இதுபோன்ற கோழைத்தனம் நம் சமூகத்திற்கு தீங்கானது. நம் நாடு இரக்கம் மற்றும் ஒற்றுமையை மட்டுமே வலியுறுத்துகிறது. நாம் ஒரு நகரம், ஒரு நாடு எனும் வகையில், சமத்துவத்துடன் அனைவருக்கும் மரியாதை செலுத்தும் விதமாக வாழ வேண்டும்" என கூறினார்.

    எந்த மதத்தை சார்ந்திருந்தாலும் இவ்வாறு செய்திருக்கக்கூடாது எனவும், நாம் அமைதியான முறையில் வழிபாட்டிற்காக வந்துள்ளதால் மகிழ்ச்சியாக கடவுளை வழிபட வேண்டும் எனவும் அப்பகுதியைச் சேர்ந்த ராம் படேல் கூறினார். இச்சம்பவம் மிகவும் வருந்தக்கூடியது எனவும், அக்கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் லூயிஸ்வில்லே காவல் துறை அதிகாரி ஸ்டீவ் கான்ராட் தெரிவித்துள்ளார்.

    கென்டக்கியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்க பிரதிநிதி நிமா குல்கர்னி கூறுகையில், "இந்த சம்பவம் எங்கள் நம்பிக்கை மற்றும் சமூகத்தை பலவீனப்படுத்துவதற்கான அச்சுறுத்தல்" என்றார். கடந்த காலங்களில் இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #USHindutemplevendalised

    தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை சீரமைப்பது தொடர்பாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Edappadipalaniswami
    சென்னை:

    கஜா புயலால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

    பின்னர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மின்சாரத்துறை, பேரிடர் மற்றும் மீட்புத்துறை, சுகாதாரத்துறைகளின் பணிகளை முடுக்கி விட வேண்டும்.


    கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கவும்,  புயலால் பாதிக்கப்பட்டோர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை செய்யவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  #GajaCyclone #Edappadipalaniswami
    அமெரிக்காவின் புளோரிடா, விர்ஜினியா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா ஆகிய மாநிலங்களை சூறையாடிய மைக்கேல் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. #HurricaneMichael #Michaelkills30
    நியூயார்க்:

    அமெரிக்காவின் பல பகுதிகளில் சமீப நாட்களாக புதுப்புது புயல்கள் மற்றும் சூறாளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. 

    அவ்வகையில், கடந்த வாரம் புதிதாக உருவான ‘மைக்கேல்’ புயல் மணிக்கு சுமார் 250 கிலோமீட்டர் வேகத்தில் புளோரிடா மாகாணத்தை கடந்தபோது கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்து மெல்ல நகர்ந்து விர்ஜினியா மாநிலத்துக்குள் நுழைந்த  ‘மைக்கேல்’ அங்கும் பெரும் சேதம் உண்டாக்கியது. 

    பின்னர், வடக்கு கரோலினா, ஜார்ஜியா ஆகிய மாநிலங்களை சூறையாடிய மைக்கேல் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

    இதில் அதிகப்படியாக புளோரிடாவில் 20 பேர் உயிரிழந்தனர். விர்ஜினியாவில் 6 பேரும், வடக்கு கரோலினாவில் 3 பேரும், ஜார்ஜியா மாநிலத்தில் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #HurricaneMichael #Michaelkills30 
    சேலத்தில் 2 செல்போன் கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன.

    சேலம்:

    சேலம், அழகாபுரம் நகரமலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 37). இவர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே வீரபாண்டியார் வணிக வளாகத்தின் பின்புறத்தில் இரண்டு செல்போன் கடைகள் வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துக்கொண்டு 2 செல்போன் கடையையும் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று அதிகாலை 4 மணிக்கு திடீரென செல்போன் கடையில் இருந்து குபு, குபுவென புகை மூட்டம் கிளம்பி வெளியே வந்தது.

    இதை பார்த்ததும் அருகே டீக்கடை வைத்திருந்தவர் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் கடைமுழுவதும் தீ பரவி கொளுந்து விட்டு எரிந்தது.

    சிறிது நேரத்தில் தீ பக்கத்தில் உள்ள மற்றொரு செல்போன் கடைக்கும் பரவியது. கடைக்குள் இருந்த செல்போன்கள், ஏ.சி., மின் விளக்குகள் தீயின் தாக்கம் தாங்காமல் டமார்... டமார் என வெடித்து சிதறியது. மேலும் பொருத்தப்பட்டிருந்த மின்வயர்கள், மின்விசிறி போன்றவை தீயில் கருகியது.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்து 2 கடைகளிலும் தண்ணீரை குழாய் மூலம் பீய்ச்சி அடித்தனர். எனினும் தீ உடனடியாக அணைய வில்லை. இதையடுத்து 4 புறமும் நின்று தீயின் மீது சுற்றி சுற்றி தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் தீ கொஞ்சம், கொஞ்சமாக அணைய தொடங்கியதையடுத்து வீரர்கள் உள்ளே சென்று தண்ணீர் மற்றும் ரசாயண பொருட்களை செலுத்தி தீயை அணைத்தனர். தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சுமார் 2 மணி நேரம் வீரர்கள் போராடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே உரிமையாளர் நவீன்குமார் தனது 2 கடைகளும் தீப்பிடித்து எரிவதை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். பல லட்சம் மதிப்பிலான செல்போன் மற்றும் அதன் உதிரி பாகங்கள், மெமரி கார்டு, பென் டிரைவ் மற்றும் இதர எலக்ட்ரானிக் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

    பள்ளப்பட்டி போலீசார் இந்த விபத்து மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர் அருகே சூறாவளி காற்றில் 1,000 வாழைகள் முறிந்து சேதம் அடைந்தன. இதனால் மிகுந்த நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. காலையில் வெயிலும், மதியவேளைக்கு பிறகு மழையும் காணப்படுகிறது. இந்த நிலையில் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாலம்வயல் அருகே அரிகோடுவயல் பகுதியை சேர்ந்த உபேஷ், ரெதிஷ், ரவி, ரியாஷ் ஆகியோர் அதே பகுதியில் விவசாய நிலத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு குத்தகை எடுத்தனர்.

    பின்னர் 5 ஆயிரம் நேந்திர வாழைகளை பயிரிட்டு பராமரித்து வந்தனர். காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் இரவு பகலாக கண்காணித்து வாழைகளை வளர்த்து வந்தனர். மேலும் உரமிட்டு பராமரித்ததால் வாழை மரங்கள் நன்கும் வளர்ந்து, வாழைத்தார்கள் காணப்பட்டன. இன்னும் சில வாரங்களில் வாழைத்தார்களை அறுவடை செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6½ மணிக்கு தேவர்சோலை பகுதியில் திடீரென சூறாவளி காற்று வீசியது. இதில் உபேஷ், ரெதிஷ், ரவி, ரியாஷ் ஆகியோரின் வாழைகள் காற்றில் முறிந்து விழுந்தது. இதில் சுமார் 1,000 வாழைகள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆகவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-

    5 ஆயிரம் வாழைகளை நட்டு பராமரித்து வந்த நிலையில் சூறாவளி காற்று வீசி ஆயிரம் வாழைகள் சேதம் அடைந்து விட்டது. வழக்கமாக காட்டு யானைகள் சேதப்படுத்தி விடும் என எதிர்பார்த்து இரவு பகலாக கண்காணித்து வந்தோம். ஆனால் காட்டு யானைகளுக்கு பதிலாக சூறாவளி காற்று எங்களது பொருளாதாரத்தை பாதித்து விட்டது. எனவே அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மிகுந்த நஷ்டத்துக்கு ஆளாகி விட்டோம். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    நாகை புதிய கடற்கரையில் உள்ள பூங்காவில் இருக்கைகளை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நம்பியார்நகர் மீனவ கிராமம் அருகே புதிய கடற்கரை உள்ளது. இதில் சிறுவர் பூங்கா, கலை நிகழ்ச்சிகள் நடை பெறும் கலையரங்க மேடை உள்ளிட்டவைகள் உள்ளன. இது நாகை மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக விளங்கி வருகிறது.

    இந்த கடற்கரை நகராட்சி கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது இந்த கடற்கரை பெரும் சேதமடைந்தது. சிறுவர் பூங்காவில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கலையரங்க மேடை உள்ளிட்டவைகள் பேரலையில் இழுத்து செல்லப்பட்டன.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள் பங்களிப்புடன் மீண்டும் கடற்கரையை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.

    இதையடுத்து நாகை புதிய கடற்கரைக்கு நாள்தோறும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். மேலும், காலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்டவைகளுக்காக வந்து செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் அமருவதற்காக கருங்கற்களாலான இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கடற்கரையில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடைவிழா நடத்தப்பட்டது. கோடைவிழாவை முன்னிட்டு புதிய கடற்கரையில் உள்ள பூங்கா உள்ளிட்டவைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு புதுப்பொழிவுடன் காட்சியளித்தன.

    இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். இந்த நிலையில் விழா முடிந்த மறுநாள் இரவில் மர்ம நபர்கள் சிலர் புதிய கடற்கரை பூங்காவில் உள்ள அனைத்து இருக்கைகளையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

    நேற்று காலை பொதுமக்கள் வழக்கம் போல் நடைபயிற்சிக்காக கடற்கரைக்கு சென்றபோது இருக்கைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், புதிய கடற்கரையில் இருக்கைகளை உடைத்து சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும், நாகையில் உள்ள ஒரே பொழுதுபோக்கு அம்சமாக விளங்கும் நாகை புதிய கடற்கரையில் சுழற்சி முறையில் போலீசார் நியமித்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    தோல்விக்கான காரணம் குறித்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரபல டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா டென்னிஸ் பேட் மூலம் நடுவரின் இருக்கையை சேதப்படுத்தியுள்ளார். #Pliskovalostcool #italianopentennis #blacklistforever
    உலகின் முதல் 5 டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவராக வலம் வருபவர் கரோலினா பிளிஸ்கோவா. இவர் நேற்று நடைபெற்ற இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் 3-6, 6-3, 7-5 என்ற நேர்செட் கணக்கில் மரியா சக்காரி என்பவரிடம் தோல்வியை தழுவினார்.

    மூன்றாவது செட்டில் பிளிஸ்கோவா அடித்த பந்து சரியான கோட்டிற்குள் விழுந்துள்ளது. ஆனால், கோட்டிற்கு வெளியே விழுந்ததாக கூறி நடுவர் தனது முடிவை அறிவித்ததால், பிளிஸ்கோவா தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக நடுவர் மார்தாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிளிஸ்கோவா, போட்டி முடிந்தபிறகு தனது பேட் மூலம் நடுவரது நாற்காலியை தாக்கி சேதப்படுத்தினார்.

    பிளிஸ்கோவாவின் சகோதரியும் டென்னிஸ் வீராங்கணையுமான கிரிஸ்டினா தனது டுவிட்டர் பக்கத்தில், நடுவர் மார்தா குறித்த கருத்துக்களை பதிவிட்டிருந்தார். அந்த டுவிட்டர் பதிவில், ‘நான் பார்த்த நடுவர்களில் மிகவும் மோசமான நடுவர் மார்தா. எனக்கும் எனது சகோதரிக்கும் இனி வரும் போட்டிகளில் மார்தா நடுவராக வரமாட்டார் என நம்புகிறேன்’ என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவில், ‘மார்தாவை முழுவதுமாக தடை செய்ய வேண்டும்’ என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்திருந்தார். #Pliskovalostcool #italianopentennis #blacklistforever
    ×