search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிர்மலாதேவி"

    நிர்மலாதேவி வழக்கில் அவரிடம் பல்வேறு சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டியிருப்பதால் வருகிற 22-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Nirmaladevi #HCMaduraiBench
    மதுரை:

    அருப்புக்கோட்டை பேராசிரியை, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது.

    இந்த நிலையில் அரசு கூடுதல் வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன், மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு ஆஜராகி நிர்மலாதேவி வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    மேலும் அவருக்கு மதுரை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கும் போது ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என நிபந்தனை விதித்து உள்ளது.

    மேலும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிர்மலாதேவி வழக்கை விசாரிக்க இடைக்கால தடையும் உள்ளது.

    இந்த நிலையில், நிர்மலா தேவி பற்றிய செய்திகள் தமிழ் வார இதழில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. ஆகவே அந்த வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என முறையீடு செய்தார்.

    அதை கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே நிர்மலாதேவி நேரில் ஆஜராகி பல கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். அவரிடம் மேலும் பல சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க வேண்டி உள்ளதால் வருகிற 22-ந் தேதி மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் அறையில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். #Nirmaladevi #HCMaduraiBench
    கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி இன்று ஆஜரானார். #nirmaladevi

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

    ஓராண்டுக்குப்பின்னர் கடந்த 12-ந்தேதி மதுரை ஐகோர்ட்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

    இந்த நிலையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி ஆஜரானார். இதற்காக அவர் தனியாக காரில் வந்தார். செய்தியாளர்களை பார்த்தவுடன் “பேசக் கூடாது” என்று வாயில் கையை வைத்து சைகை செய்தபடி கோர்ட்டுக்குள் சென்றார்.

    பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓராண்டாக கோர்ட்டுக்கு அவர் அழைத்து வரப்பட்ட நிலையில் இன்று அவர் தனியாக காரில் வந்தது வித்தியாசமாக இருந்தது. நிர்மலாதேவி விடுதலையானபோதும் இதுவரை அவரை குடும்பத்தினர் யாரும் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. #nirmaladevi 

    மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவிக்கு, 11 மாதங்களுக்கு பிறகு ஜாமீன் கிடைத்ததையடுத்து சிறையில் இருந்து இன்று வெளியே வந்துள்ளார். #NirmalaDevi
    சென்னை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் 16ம் தேதி கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டதால் நிர்மலா தேவி வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் மிரட்டி தன்னிடம் வாக்குமூலம் பெற்றதாக நிர்மலா தேவி தெரிவித்திருந்தார்.

    முருகன், கருப்பசாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கிய, நிலையில், நிர்மலா தேவிக்கு கடந்த 12ம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமீன் வழங்கியது.



    இதையடுத்து, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் ஜாமீன் பொறுப்பு ஏற்றனர். அத்துடன், தலா 10 ஆயிரம் ரூபாய் சொத்து மதிப்பு பிரமாண பத்திரங்களை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து, நிர்மலா தேவி, இன்று ஜாமீனில் விடுதலையானார்.

    சிறையில் இருந்து வெளியே வந்துள்ள நிர்மலா தேவி, செய்தியாளர்களை சந்திக்க கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #NirmalaDevi
    பேராசிரியை நிர்மலா தேவியை ஜாமீனில் எடுக்க தேவையான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருவதால் அவர் விடுதலை ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. #NirmalaDevi
    மதுரை:

    அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கடந்த ஏப்ரல் 16-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நிர்மலாதேவிக்கு மதுரை ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    ஐகோர்ட்டு கடந்த 12-ந்தேதி ஜாமீன் வழங்கியும் இன்னும் நிர்மலாதேவி விடுதலை ஆவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அவரது வக்கீல் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது:-

    பேராசிரியை நிர்மலா தேவியை ஜாமீனில் எடுக்க அவரது ரத்த சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு தந்து வருகிறார்கள். நிர்மலா தேவியின் தாய்-தந்தை இறந்துவிட்ட நிலையில் அவரது சகோதரர் பெயரில் வீட்டு வரி ரசீது இல்லாததால் ஜாமீன் ஆவணங்கள் தயார் செய்வதில் ஓரிரு நாள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    வருகிற 18-ந்தேதி ஜாமீன் ஆவணங்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும். மறுநாள் (19-ந்தேதி) நிர்மலாதேவி நிச்சயம் விடுதலை ஆவார். அதற்கான சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வருகிற 19-ந்தேதி நிர்மலாதேவி விடுதலை ஆனால் ஜாமீன் கிடைத்தும் ஒரு வாரம் தாமதத்துடன் அவர் சிறையில் இருந்து விடுதலை ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. #NirmalaDevi
    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கைதான பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் இன்று ஜாமீனில் விடுதலையானார்கள். #NirmalaDevi
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அந்த கல்லூரியின் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.

    அவர் கொடுத்த தகவலின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள். 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    எனவே முருகன், கருப்பசாமி தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இருவருக்கும் ஜாமீன் வழங்கி கடந்த 12-ந்தேதி உத்தரவிட்டது.

    நிர்மலாதேவி தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கு கடந்த 14-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவு நகல் கிடைக்காததால் தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஜாமீன் உத்தரவு ஆவணங்கள் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. நீதிபதி (பொறுப்பு) சாய் பிரியா விசாரணை நடத்தி முருகன், கருப்பசாமி இருவருக்கும் தலா ரூ. 75 ஆயிரம் சொத்து மதிப்புள்ள 4 நபர்களை ஜாமீன்தாரர்களாக ஏற்றுக் கொண்டு ஜாமீனில் விட அனுமதி வழங்கினார்.

    நீதிபதி உத்தரவு தொடர்பான ஆவணங்கள் மதுரை சிறைத்துறை அதிகாரிகளிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    9 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுதலையான இருவரையும் உறவினர்கள் அழைத்துச் சென்றனர். சிறையில் இருந்து வெளியே வந்த முருகன் நிருபர்களிடம் கூறும்போது ‘என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அதனை சட்டப்படி சந்திப்பேன்’ என்றார். #NirmalaDevi #NirmalaDeviAudioCase
    சிறைக்கு வந்து என்னை உறவினர்கள் யாரும் இதுவரை சந்திக்கவில்லை. அது தனக்கு வருத்தம் அளிக்கிறது என்று நிர்மலாதேவி கூறினார். #NirmalaDevi
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் கல்லூரி மாணவிகள் சிலரை பாலியல் பேரத்திற்கு அழைத்து அவர்களை தவறாக வழிநடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். நிர்மலாதேவி உள்பட 3 பேர் மீதான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதைதொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து அவர்கள் 3 பேரும் பலத்த பாதுகாப்புடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அழைத்து வரப்பட்டு, மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். முடிவில் இந்த வழக்கை நீதிபதி லியாத் அலி, வருகிற 30-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    கோர்ட்டில் இருந்து வெளியே வந்த நிர்மலாதேவியிடம் “ஏற்கனவே கோர்ட்டில் ஆஜராக வந்தபோது, உறவினர்களை சந்திக்க விரும்புவதாக கூறினீர்கள். யாராவது உங்களை சிறையில் வந்து சந்தித்தார்களா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு நிர்மலாதேவி கூறும்போது, “சிறைக்கு வந்து என்னை உறவினர்கள் யாரும் இதுவரை சந்திக்கவில்லை. அது தனக்கு வருத்தம் அளிக்கிறது” என கூறினார். பின்னர் நிர்மலாதேவி உள்பட 3 பேரும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். #NirmalaDevi

    பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த இறுதி அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டு நீதிபதிக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #NirmalaDevi
    மதுரை:

    அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர்கள் சுகந்தி, மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    அதில், "அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவியை, அதே கல்லூரி மாணவிகள் சிலருக்கு பாலியல் அழைப்பு விடுத்த வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் மதுரை காமராஜர் கல்லூரி உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவத்தில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பலருக்கு தொடர்புள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை.


    சி.பி.சி.ஐ.டி. போலீசார் நியாயமாக விசாரிக்காமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே நிர்மலாதேவி வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசமிருந்து சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். அதுவரை ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிர்மலாதேவி வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், விசாரணையில் உயர் அதிகாரிகள் குறித்து எவ்வித விசாரணையும் நடைபெறவில்லை. நியாயமான முறையில் விசாரணை நடைபெறவில்லை என தெரிவித்தார்.

    அதற்கு அரசுத்தரப்பில், முறையாக விசாரணை நடைபெற்று, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையை சீலிட்ட கவரில் டிசம்பர் 3-ந் தேதிக்குள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டு நீதிபதிக்கு உத்தரவிட்டனர்.

    மேலும் வழக்கு விசாரணையை டிசம்பர் 10-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். #Nirmaladevi
    பாலியல் வழக்கில் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு குற்றப்பத்திரிகையில் போதிய முகாந்திரம் இல்லாததால் விடுதலை செய்யக்கோரி நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். #NirmalaDevi
    விருதுநகர்:

    கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜாமீன் கோரி 7 முறை தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இந்த நிலையில் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு குற்றப்பத்திரிகையில் போதிய முகாந்திரம் இல்லை. எனவே எங்கள் 3 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று இன்று விருதுநகர் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனு மீது விசாரணை நடைபெற உள்ளது. #NirmalaDevi
    மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்குடன் கம்யூனிஸ்டு கட்சி செயல்படுகிறது என்று ஜி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். #gramakrishnan #parliamentelection #bjp #communistparty

    நாகர்கோவில்:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும் முன்னாள் மாநில செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் சிறு, குறு தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட்டேலுக்கு ரூ.3 ஆயிரம் கோடி செலவில் மத்திய அரசு சிலை அமைத்துள்ளது. இதனை விளம்பர படுத்த ரூ.5 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளனர்.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி.வரிவிதிப்பு காரணமாக மக்களும், வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசு நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவித்து வருகிறது.

    தமிழகத்தில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டதாகவும், இதனால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும் தமிழக சட்டசபையில் அமைச்சரே தெரிவித்து உள்ளார். அந்த அளவுக்கு மத்திய அரசின் செயல்பாடு உள்ளது. திருப்பூரில் ஏற்றுமதி குறைந்துவிட்டது. தொழிற்சாலைகள் செயல்பட வில்லை.

    எனவே தான் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்குடன் கம்யூனிஸ்டு கட்சி செயல்படுகிறது.

    அடிமைகள் ஒருபோதும், தங்களை அடிமைகள் என்று ஒப்புக்கொள்வதில்லை. மத்திய அரசு தமிழகத்தில் நிறைவேற்ற துடிக்கும் மக்கள் விரோத திட்டங்களை இப்போதைய அரசு எதிர்ப்பதில்லை.

    அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை பலரும் ஊழல் வழக்கில் சிக்கி இருப்பதுதான் இதற்கு காரணமாகும். இந்த நிலை மாற வேண்டும். இப்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்தும் சோதனையில் அதிகாரிகள் சிக்கியிருப்பது இதற்கு எடுத்து காட்டாகும்.

    தமிழகத்தில் பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் கூடுதல் வரிவிதிப்பை அரசு அமல்படுத்தி உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத போது வரி விதிப்பை அமல் படுத்தியிருப்பது மக்கள் விரோத நடவடிக்கையாகும். இதனை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பேராசிரியை நிர்மலா தேவி வாக்குமூலம் இப்போது வெளியாகி இருக்கிறது. அதில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. வி.ஐ.பி.க்களை தப்ப வைக்க இந்த நடவடிக்கையா என்று எண்ண தோன்றுகிறது.


    எனவே இந்த வழக்கின் விசாரணையை வெளிப்படையாக நடத்த வேண்டும். அப்போது தான் உண்மை வெளிவரும்.

    கேரளாவில் நடந்து வரும் சபரிமலை விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சி அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல் படுத்தும் கேரள அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள்.

    அரசியலுக்காக போராடும் இவர்கள் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யாதது ஏன்? என்பதை விளக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியும் இதே நிலைப்பாட்டுடன்தான் போராடுகிறார்கள்.

    குமரியில் ஓகி புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்க இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. இங்கு கொண்டுவரப்பட்ட தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்.

    இம்மாவட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இம்மாத இறுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கோரிக்கை மாநாடு நடக்கிறது. டிசம்பர் மாதம் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியும் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் செல்லசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நூர்முகம்மது, லீமா ரோஸ் ஆகியோர் உடன் இருந்தனர். #gramakrishnan #parliamentelection #bjp #communistparty

    நிர்மலாதேவியுடன் பல்கலைக்கழக அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு இருந்தது. அவர்களை கைது செய்யாமல், தன் கணவரை முக்கிய குற்றவாளியாக காட்டுவது ஏன்? என பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா பேட்டி அளித்தார். #Nirmaladevi #DevangarCollege
    மதுரை:

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பல்கலைக்கழக பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் பேராசிரியர் முருகன் மனைவி சுஜா மதுரையில் நிருபர்களிடம் பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் எனது கணவர் முருகனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எனது கணவருக்காகத்தான் மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசியதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பொய் வாக்குமூலம் தயாரித்துள்ளனர்.

    நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக புத்தாக்க பயிற்சிக்கு வந்தபோது அவர் தங்குவதற்காக அறை ஒதுக்குவது பற்றி கேட்டுள்ளார். அப்போது கூட கருப்பசாமியிடம் சென்று உங்கள் கோரிக்கையை தெரிவிக்கலாம் என்று என் கணவர் கூறியிருக்கிறார்.

    பிரச்சினை பெரிதான போது தனக்கு உதவி செய்யுமாறு நிர்மலாதேவி என் கணவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டார். ஆனால் “யாருக்காக மாணவிகளிடம் நீங்கள் பேரம் பேசினீர்களோ. அவர்களிடம் போய் உதவி கேளுங்கள். என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று என் கணவர் கூறிவிட்டார்.

    சுஜா

    என் கணவர் எப்போதுமே நிர்மலாதேவிக்கு போன் செய்து பேசியதே கிடையாது. அப்படி இருக்கும்போது அவருடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாக என் கணவர் மீது போலீசார் கூறியுள்ளது தவறான குற்றச்சாட்டு. நிர்மலாதேவி என் கணவர் பெயரை போலீசில் சொல்லவே இல்லை. பிறகு அவரை ஏன் இதில் தொடர்புபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை?

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு நிர்மலாதேவி வந்தபோது அவரை வரவேற்கவும், வழி அனுப்பவும் பல்கலைக்கழகத்தின் முக்கிய அதிகாரியின் கார் பயன்படுத்தப்பட்டது. நிர்மலாதேவியுடன் பல்கலைக்கழக அதிகாரிகள் மேலும் சிலருக்கு தொடர்பு இருந்தது. அவர்களையெல்லாம் இந்த வழக்கில் போலீசார் ஏன் கைது செய்யவில்லை?. இந்த வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லாத என் கணவரை முக்கிய குற்றவாளியாக காட்டுவது ஏன்?

    கொலை, கொள்ளை வழக்குகளில் கைதானவர்களுக்கு கூட சில நாட்களிலேயே ஜாமீன் வழங்கப்படுகிறது. ஆனால் எந்த குற்றமும் செய்யாத என் கணவர் கைது செய்யப்பட்டு 7 மாதங்களாகியும் இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இதற்கு பின்புலமாக சில பிரபலங்கள் இருக்கிறார்கள். இந்த வழக்கில் 3 பேரை மட்டும் சிக்க வைத்துவிட்டு, மற்றவர்களை முக்கிய பிரமுகர்கள் தப்பிக்க வைத்துவிட்டனர்.

    நிர்மலாதேவியையும், எனது கணவரையும் மிரட்டி வாக்குமூல பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். மேலும் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். இதில் முழுக்க முழுக்க உள்நோக்கம் இருக்கிறது. எனவே என் கணவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என்பதை நிரூபிக்க வாய்ப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Nirmaladevi #NirmaladeviLuredGirls #DevangarCollege
    கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக கோர்ட்டில் ரகசிய விசாரணை நடத்தக்கோரிய மனுவுக்கு பேராசிரியை நிர்மலாதேவி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. #Nirmaladevi #NirmaladeviLuredGirls #DevangarCollege
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கை திறந்த நீதிமன்றத்தில் நடத்தக்கூடாது. ரகசியமாக விசாரணை நடத்த வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கருப்பசாமி, முருகன் தரப்பில் வழக்கை திறந்த நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என மனு செய்யப்பட்டது.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி லியாகத் அலி முன்பு நேற்று நடைபெற்றது. வழக்கு விசாரணைக்காக நிர்மலாதேவி மற்றும் கருப்பசாமி, முருகன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.



    இந்த வழக்கில் ஆஜரான நிர்மலாதேவி, முருகன் தரப்பு வக்கீல்கள், கற்பழிப்பு வழக்குகள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் தொடர்பான வழக்குகளைத்தான் ரகசியமாக நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகள் ரகசியமாக நீதிமன்றத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது பொருந்தாது. இதற்கு பல தீர்ப்புகள் முன்னுதாரணமாக உள்ளன. ஆனால், அதற்குரிய ஆதாரங்களை கொண்டு வருவதற்கு காலஅவகாசம் வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர்.

    இதனையடுத்து நீதிபதி லியாகத் அலி, அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யுங்கள் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

    முன்னதாக கோர்ட்டுக்கு கருப்பசாமியை போலீசார் அழைத்து வந்தபோது, “பத்திரிகையில் வந்த செய்திகள் அனைத்தும் தவறானது. அதை யாரும் நம்ப வேண்டாம். இதை கோர்ட்டில் சட்டப்படி சந்திப்பேன்” என கத்தியபடி சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #Nirmaladevi #NirmaladeviLuredGirls #DevangarCollege

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்? என்ற தகவல் சிபிசிஐடி போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் வாயிலாக தற்போது வெளியாகியுள்ளது. #Nirmaladevi #NirmaladeviLuredGirls #DevangarCollege
    சென்னை:

    கல்லூரி மாணவிகளை போன் மூலம் தொடர்பு கொண்டு தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி (வயது 46) கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    சிறையில் இருந்த நிர்மலா தேவியை ஏப்ரல் 25-ந் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 நாள் காவலில் எடுத்து, விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்களை நிர்மலா தேவி நீண்ட நெடிய வாக்குமூலமாக அளித்தார். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது.

    சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    எனக்கும், அருப்புக்கோட்டையை சேர்ந்த சரவண பாண்டியன் என்பவருக்கும் 1996-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 2003-ம் ஆண்டு எனது கணவர் சென்னையில் பணிபுரிந்தபோது, கிழக்கு தாம்பரத்தில் குடும்பத்துடன் வசித்துவந்தோம். அப்போது, பக்கத்து வீட்டு பெண்ணுடன் எனது கணவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால், எங்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.

    எனது உறவினர்கள், கணவர் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்கக்கூடாது என்று என்னை கண்டித்தனர். அதன்பிறகு, எனது கணவர் அவருடைய நண்பர்கள் சிலருடன் நெருக்கமாக பழக என்னை வற்புறுத்தினார். இதனால், எங்கள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது சமாதானம் செய்ய வந்த எனது உறவினருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் நெருங்கி பழகினோம்.

    அதன்பிறகு, 2008-ம் ஆண்டு எனது கணவருக்கு பணி மாறுதல் ஏற்பட்டதால், நான் குழந்தைகளுடன் அருப்புக்கோட்டையில் உள்ள மாமனார் வீட்டில் தங்கினேன். அப்போது, எனது கணவர் முயற்சியால் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் உதவி பேராசிரியர் பணி கிடைத்தது. 2009-ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு எனது கணவர் வேலை பார்க்க சென்றார். அவருக்கு அந்த பணி பிடித்திருந்ததால் தொடர்ந்து அங்கேயே இருந்தார்.

    நான் பணிபுரிந்த தேவாங்கர் கலை கல்லூரியின் நிர்வாக குழுவில் நிறைய பிரச்சினைகள் இருந்தது. 2011-ம் ஆண்டு எனது கணவரின் தம்பி மகனுக்கு மொட்டை போடுவதற்காக சங்கரன்கோவில் சென்றபோது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை இருந்தது.

    நான் அவருடன் நெருக்கமாக பழகினேன். இது எனது கணவருக்கும் தெரியும். எனக்கு அவர் வாங்கிக் கொடுத்த செல்போனை எனது கணவர் தான் வைத்திருந்தார். அவர் என்னை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால், எங்கள் இருவருக்கும் இடையே இருந்த தொடர்பால் அவருக்கு பணிபுரிந்த இடத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், அவர் சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில், 2016-ம் ஆண்டு எனது கணவர் சரவண பாண்டியன், சவுதி அரேபியாவில் இருந்து அருப்புக்கோட்டைக்கு வந்து, அங்கேயே நகராட்சி ஒப்பந்தபணிகளை எடுத்து செய்து வந்தார். அதில், அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. கடும் பண நெருக்கடி உண்டானது. இந்த நேரத்தில், எங்கள் கல்லூரியின் முன்னாள் செயலாளருடன் நான் நெருங்கிப்பழக ஆரம்பித்தேன். அவர் எனக்கு அவ்வப்போது பணம் கொடுப்பார்.

    அதன்பிறகு, எனது கணவர் கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சப்-காண்டிராக்ட் எடுத்து தொழில் செய்து பார்த்தார். அதிலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. இதனால், எனக்கும், எனது கணவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. பிரச்சினையை தீர்த்து வைக்க எனது கணவரின் நண்பர்கள் ராஜூ, ராமச்சந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் சிலர் வந்தனர். அவர்களுடனும் எனக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இந்த விஷயத்தை தெரிந்துகொண்டதால், எனது கல்லூரியில் வேலைபார்ப்பவர்கள் யாரும் என்னுடன் சரியாக பேசுவது கிடையாது. நானும் எந்த விஷயத்திலும் தலையிடமாட்டேன்.

    இந்த சூழ்நிலையில், எனது கணவர் என்னை அடித்து துன்புறுத்தத் தொடங்கினார். இதனால், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி நான் சென்னை வந்துவிட்டேன். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியை மீண்டும் சந்தித்தேன். திருப்பதி, சென்னை என்று பல இடங்களுக்கு சென்றேன். 24 நாட்களுக்கு பிறகு அருப்புக்கோட்டை வீட்டுக்கு திரும்பிவிட்டேன்.

    அருப்புக்கோட்டையில் சொக்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து நாங்கள் பராமரித்து வந்தோம். அதில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ராமநாதனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்து பேசினேன். எங்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, உல்லாசமாக இருந்தோம். அருப்புக்கோட்டையில் நகைக்கடை அதிபர் ஒருவருடனும் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. அவருடனும் நான் உல்லாசமாக இருந்தேன்.

    2016-ம் ஆண்டு நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்றபோது, அங்கு இருந்த அதிகாரியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்தோம். நான் 1992-1994-ம் ஆண்டுகளில் பானு சத்திரிய கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் படித்த காலத்தில், வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தவர் எனக்கு தெரியும். அவரது தொலைபேசி எண்ணை 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் வாங்கி பேசினேன். அன்று முதல் அவருடன் தொடர்பில் இருந்து வந்தேன்.

    தற்போது, அவர் வெளி கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராக வகுப்புகள் நடத்தி வருகிறார். நானும் அவரைப்போல் கவுரவ விரிவுரையாளராக ஆசைப்பட்டு, அவரிடம் உதவி கேட்டேன். இது தொடர்பாக, அடிக்கடி அவருடன் போனில் பேசுவேன். வாட்ஸ்-அப்பிலும் தகவல்களை பரிமாறிக்கொள்வேன். அப்போது, அவர் ஏதாவது கல்லூரிக்கு கவுரவ விரிவுரையாளராக சென்றால், அதை போட்டோ எடுத்து எனக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்புவார். அவர் 2017-ம் ஆண்டு 2 முறை எனது வீட்டிற்கு வந்து என்னுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

    2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தாக்கப் பயிற்சியில் சேருவது சம்பந்தமாக அவரை சந்தித்து பேசினேன். அப்போது அவர் அதே பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக உள்ள முருகன் என்பவரை தொடர்புகொள்ளுமாறு எனக்கு அவரது செல்போன் எண்ணை கொடுத்தார். நானும் உடனே முருகனை செல்போனில் தொடர்பு கொண்டு என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, புத்தாக்கப் பயிற்சியில் சேர வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொண்டேன். அதன் பிறகு அவரை நேரில் சந்தித்தும் பேசியிருக்கிறேன்.



    நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் தேவாங்கர் கலைக் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு விடைத்தாள்களை நான் திருத்திக்கொண்டிருந்தபோது முருகனிடம் இருந்து எனக்கு போன் வந்தது. அன்று அவர் அருப்புக்கோட்டைக்கு வந்திருப்பதாகவும், என்னை சந்திக்க முடியுமா? என்றும் கேட்டார். நானும் விடைத்தாள் திருத்தி முடித்தவுடன் மாலை 3 மணிக்கு மேல் காந்திநகர் பஸ் நிலையத்துக்கு வருவதாக கூறினேன். அவரும் அங்கு எனக்காக காத்திருந்தார். நான் காரில் சென்று அவரை எனது வீட்டிற்கு அழைத்து வந்தேன். அப்போது, என்னுடன் அவர் உல்லாசமாக இருந்தார்.

    அதன்பிறகு, எனது மகளின் சடங்கு ஆல்பத்தை அவருக்கு காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு உன்னுடைய மகளும் வருவாளா? என்று என்னிடம் கேட்டார். நான் அதற்கு அவள் ஒப்புக்கொள்ளமாட்டாள் என்று சொல்லிவிட்டேன். அதற்கு அவர், உங்கள் சொல்படி கேட்டு ஒத்துழைப்பு கொடுக்கின்ற கல்லூரி மாணவிகள் யாராவது இருக்கின்றார்களா? என்று என்னிடம் கேட்டார். அவர் கல்லூரி மாணவிகளுடன் உல்லாசமாக இருக்கத்தான் கேட்கிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன். அதற்கு நான் எங்களது கல்லூரி நிலவரம் தற்போது சரியில்லை. இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

    இந்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கான அழைப்பு உத்தரவு எனக்கு வந்தது. கல்லூரி செயலாளர் அனுமதியுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நான் வந்தேன். அந்த சமயத்தில் நான் அங்கிருந்த முருகனை சென்று சந்தித்து, வழிநடத்துவது விஷயமாகவும், புத்தாக்கப் பயிற்சி விஷயமாகவும் அவரிடம் ஞாபகப்படுத்திவிட்டு வந்தேன்.

    அதன்பிறகு, மார்ச் 7-ந் தேதி புத்தாக்கப் பயிற்சியில் நான் சேர்வதற்கான உத்தரவு கல்லூரி அலுவலகத்திற்கு வந்தது. அந்த தகவலை பார்த்துவிட்டு, முருகனிடம் நான் செல்போனில் தெரிவித்தேன். நான் அங்கு வரும்போது அவரை நேரில் சந்திப்பதாகவும் கூறினேன். மார்ச் 9-ந் தேதி காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்று புத்தாக்கப் பயிற்சியில் சேர்ந்தேன். மதிய உணவுக்காக அங்குள்ள கேண்டீனுக்கு சென்றபோது, முருகனுக்கு போன் செய்து, அவரை பார்க்க விரும்புவதாக கூறினேன். அவரது துறை அலுவலகத்துக்கு வரச்சொன்னதால், அங்கு சென்றேன்.

    அப்போது முருகன் என்னிடம், “என்னம்மா இப்போது நிலைமை சரியாகிவிட்டதா?. கல்லூரி மாணவிகளிடம் பேசி ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று மீண்டும் கேட்டார். “நான் சில மாணவிகளின் விவரங்களை தெரிந்துவைத்துள்ளேன். அவர்களிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினேன். அதன்பிறகு, கருப்பசாமி என்பவரின் செல்போன் எண்ணை முருகன் என்னிடம் கொடுத்து, பல்கலைக்கழகத்தில் எந்த உதவி வேண்டுமானாலும் அவரை தொடர்பு கொள்ளுமாறு என்னிடம் கூறினார். கருப்பசாமியை நான் நேரில் சந்தித்து பேசினேன்.

    மார்ச் 12-ந் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நான் இருந்தபோது, கருப்பசாமி எனக்கு போன் செய்து, தொலைதூர கல்வி அலுவலகத்துக்கு வரும்படி கூறினார். உடனே, நான் அங்கு சென்றேன். அங்கு கருப்பசாமி இயக்குனரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவருடைய பெயர் எனக்கு தெரியாது.

    அங்கிருந்து புறப்பட்டபோது, நானும் உங்களுடன் காரில் வருகிறேன் என்று கருப்பசாமி கூறியதால் அவருக்காக காத்திருந்தேன். அவர் வந்தவுடன் கருப்பசாமியின் சொந்த ஊரான திருச்சுழிக்கு எனது காரில் கிளம்பினோம். போகும் வழியில் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, காரில் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். அங்கிருந்து புறப்பட்டபோது, கருப்பசாமி என்னிடம், அடுத்தவாரம் சென்னை செல்வதாகவும், அந்த சமயத்தில் கல்லூரி மாணவிகளை ரெடி பண்ணி தருவீர்களா? என்று கேட்டார். நானும், முயற்சி செய்து பார்க்கிறேன் என்று சொன்னேன். ஆனாலும், தொடர்ந்து அவர் இதே விஷயத்தை என்னிடம் வலியுறுத்தினார். அதன்பிறகு, அவரை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு, நான் எனது வீட்டிற்கு வந்துவிட்டேன்.

    முருகன் மற்றும் கருப்பசாமி இருவரும் என்னிடம் தொடர்ந்து நேரிலும், போனிலும் கேட்டுக்கொண்டதால், மார்ச் 12-ந் தேதி இரவு முதலே நான் என்னுடைய செல்போனில் இருந்து, எங்கள் கல்லூரி கணிதத்துறையில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு சூசகமாக பல எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். இந்த விஷயத்தை உடன் படிக்கும் மேலும் 3 மாணவிகளுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டேன்.

    இவ்வாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த நிர்மலா தேவி, தொடர்ந்து பல அதிர்ச்சிகரமான தகவல்களையும் தெரிவித்துள்ளார். அது என்னவென்பது, நாளை(புதன்கிழமை) வெளியாகும். #Nirmaladevi
    #NirmaladeviLuredGirls #DevangarCollege
    ×