search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தர்ணா"

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் வீட்டில் நடக்கும் வருமான வரி சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திரபாபு நாயுடு தர்ணாவில் ஈடுபட்டார். #ChandrababuNaidu
    அமராவதி:

    ஆந்திராவில், பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்களையொட்டி, உயர் அதிகாரிகளை தேர்தல் கமி‌ஷன் மாற்றி வருகிறது. தலைமை செயலாளர், உளவுப்பிரிவு டி.ஜி.பி. மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அடுத்தடுத்து இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு அமராவதி நகரில் தலைமை செயலகத்தில் உள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு சென்றார். தலைமை தேர்தல் அதிகாரி கோபால கிருஷ்ண திவிவேதியை சந்தித்தார்.

    அப்போது, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றத்துக்கு எதிராக புகார் மனு கொடுத்தார். எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் வற்புறுத்தலால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை தன்னிச்சையாக தேர்தல் கமி‌ஷன் மாற்றி வருகிறது என்று திவிவேதியிடம் தெரிவித்தார். தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் வீட்டில் நடக்கும் வருமான வரி சோதனைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு அளிக்க வேண்டிய புகார் கடிதம் ஒன்றையும் திவிவேதியிடம் சமர்ப்பித்தார். பின்னர், தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு எதிரே சந்திரபாபு நாயுடு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  ஆந்திர அரசின் கருத்தை கேட்காமல் ஒருதலைப்பட்சமாக அதிகாரிகளை தேர்தல் கமி‌ஷன் மாற்றி வருகிறது என குற்றம் சாட்டினார். #ChandrababuNaidu
    பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து மம்தா பானர்ஜி நாளை டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்துகிறார். #BJP #PMModi #MamataBanerjee

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ்குமாரை விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அழைத்தது.

    ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜர் ஆக மறுத்தார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தா சென்று அவரை கைது செய்ய முயன்றனர்.

    சி.பி.ஐ.யின் நடவடிக்கையால் கடும் கோபம் அடைந்த மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் மெட்ரோ ரெயில் நிலையம் எதிரே 3 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினார். மத்திய அரசு தூண்டி விட்டதன் பேரில் சி.பி.ஐ. இப்படி நடந்து கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

    கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்கவும், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும் வலியுறுத்தி அவர் போராட்டம் மேற்கொண்டார். ஆனால் சுப்ரீம்கோர்ட்டு இதை ஏற்க மறுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு ராஜீவ்குமார் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி தனது தர்ணா போராட்டத்தை கை விட்டார்.

    சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி தொடர்பாக மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் ஆவேசமாகி உள்ள மம்தா பானர்ஜி மீண்டும் தர்ணா போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளார்.

    இந்த தடவை அவர் தனது போராட்ட களத்தை டெல்லிக்கு மாற்றி உள்ளார். டெல்லியில் நாளை அவர் தர்ணா போராட்டத்தை தொடங்குகிறார்.

    டெல்லியில் 2 நாட்கள் தர்ணா போராட்டம் மேற்கொள்ள மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் செய்து வருகிறார்கள்.

    மம்தா பானர்ஜி நாளை போராட்டம் தொடங்கியதும் பல்வேறு கட்சி தலைவர்களும் அவர் இருக்கும் இடத்திற்கு சென்று ஆதரவு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற கூட்டத் தொடர் நாளை முடிவடையும் நிலையில் மம்தா போராட்டத்தை தொடங்கி இருப்பது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #BJP #PMModi #MamataBanerjee

    மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் கடந்த 3 நாளாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி இன்று நிறைவு செய்தார். #MamataDharna #CBIvsMamata
    கொல்கத்தா:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரிப்பதற்காக நேற்று முன்தினம் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென அவரது வீட்டுக்கு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கொல்கத்தா போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகளை வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று காவலில் வைத்து, பின்னர் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கும், மம்தா பானர்ஜி அரசுக்கும் மோதல் உருவாகி உள்ளது.

    போலீஸ் உயர் அதிகாரியிடம் மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.ஐ. விசாரிக்க முயற்சி செய்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார். அதோடு அரசியலமைப்பு சட்டத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாக்கப் போவதாக சொல்லி கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் எதிரில் நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினார். 

    அவரை தி.மு.க. சார்பில் கனிமொழி, ஆம் ஆத்மி சார்பில் கெஜ்ரிவால், ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு தலைவர்கள் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.



    இதற்கிடையே, மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் தர்ணா நடத்தி வரும் மம்தா பானர்ஜியை தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநில முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு சந்தித்து இன்று ஆதரவு தெரிவித்துள்ளார். அப்போது பேசிய நாயுடு, எதிர்க்கட்சிகளின் முக்கிய தூணாக விளங்குபவர் மம்தா பானர்ஜி. வரும் பாராளுமன்ற தேர்தலில் 42 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.

    இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் கடந்த 3 நாளாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி இன்று நிறைவு செய்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளது. இதனால் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு காக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, தர்ணா போராட்டத்தை நிறைவு செய்கிறேன் என அறிவித்தார். #MamataDharna #CBIvsMamata
    பட்டா மாறுதல் செய்யாமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்த லாரி டிரைவர், குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட முயற்சி செய்ததால் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    நாமக்கல்:

    மோகனூர் அருகே உள்ள செவந்திப்பட்டி பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். லாரி டிரைவர். இவர் நேற்று தனது மனைவி சுமதி மற்றும் மகளுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு கொடுத்த கிருஷ்ணன், திடீரென 25 ஆண்டுகளாக பட்டா மாறுதல் செய்து தராமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக கூறி கோஷம் எழுப்பினர். இதனால் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் கிருஷ்ணனை குடும்பத்துடன் வெளியேற்ற போலீசாருக்கு உத்தரவிட்டனர். இருப்பினும் பட்டா மாறுதல் வழங்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு வந்த அவர்கள் கலெக்டர் அலுவலக பிரதான வாயில் அருகே படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து விசாரணைக்காக ஜீப்பில் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே கிருஷ்ணன் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- எனது தந்தை பழனியப்பன், தாத்தா பெரியண்ணன் ஆகியோர் கடந்த 1982-ம் ஆண்டு ராமனுஜம் வகையறாகளிடம் இருந்து கிரையம் பெற்று, தங்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்து அனுபவித்து வந்த சுமார் 8 ஏக்கர் நிலம், 1986-ம் ஆண்டு நிலஅளவை மேம்பாட்டு திட்டத்தில் குட்டை என மாறுதல் செய்யப்பட்டதால், எங்கள் வாழ்வாதாரம் முடங்கி விட்டது.

    எனது தந்தை பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், பட்டா மாறுதல் செய்யாததால், நாமக்கல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டது. இந்த தீர்ப்புக்கு பிறகும் அதிகாரிகள் எங்கள் பெயரில் நிலங்களை பட்டா மாறுதல் செய்யாமல் காலம் கடத்தி வருகிறார்கள். நானும் பலமுறை மனு கொடுத்தும் பட்டா மாறுதல் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி செவிந்திப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் என்னிடம் அந்த நிலங்களை எனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய இயலாது என்றும், சிவில் நீதிமன்றத்தில் தாங்கள் பெற்ற தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளதாகவும் கூறினார்.

    நாங்கள் சிவில் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்று 25 ஆண்டுகள் முடிந்து விட்டது. இந்த நிலையில் இவ்வழக்கை அரசு அப்பீல் செய்ய உள்ளதால், தொடர்ந்து வழக்கை நடத்த எங்களுக்கு வசதி இல்லை. மேலும் கடன் பிரச்சினையும் நிறைய உள்ளது. இதனால் நான் என் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அதில் கூறி இருந்தார். #tamilnews
    ரேசன் கார்டு கேட்டு குழந்தையுடன் பெண் நடுரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. #Rationcard

    சென்னை:

    சென்னையில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம், தர்ணா என்றால் நூறு பேராவது திரண்டு இருப்பதைத்தான் பார்க்க முடியும்.

    ஆனால் மைலாப்பூரில் இளம்பெண் ஒருவர் தனது குழந்தையுடன் நடுரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    தகவல் அறிந்து அந்த பெண்ணை அப்புறப்படுத்துவதற்காக போலீசார் விரைந்து வந்தனர்.

    தர்ணாவில் ஈடுபட்ட அந்த பெண்ணின் பெயர் மனோன்மணி (34). நொச்சிக் குப்பத்தைச் சேர்ந்தவர்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனோன்மணி அதே பகுதியில் வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

    இதையடுத்து தனது ரே‌ஷன் கார்டை புதிய முகவரிக்கு மாற்றித் தரும்படி கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார். அதற்கு தேவையான ஆவணங்கள், ஆதார் கார்டு எல்லாவற்றையும் சமர்ப்பித்து இருக்கிறார். அதிகாரிகளும் அதை சரி பார்த்து விட்டு விரைவில் கார்டு வந்து விடும் என்று கூறி இருக்கிறார்கள்.

    ரேசன் கடைகளில் பொருட்களை வாங்கி சாப்பிடும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மனோன்மணி ரேசன் கார்டு கிடைக்காததால் மிகவும் சிரமப்பட்டுள்ளார். பலமுறை குடிமைப் பொருள் வழங்கல் அலுவலகத்துக்கு அலைந்துள்ளார். ஒவ்வொரு முறையும் மழுப்பலான பதிலே கிடைத்துள்ளது.

    சில தினங்களுக்கு முன்பு சென்று கேட்டபோது இன்னும் கார்டு தயாராகவில்லை என்று கூறி இருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த மனோன்மணி இ.சேவை மையத்துக்கு சென்று கார்டு நிலவரத்தை விசாரித்துள்ளார். அப்போது கார்டு தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

    எல்லா தகவல்களும் சரியாக கொடுத்த பிறகும் ஏன் முடக்கி வைத்துள்ளார்கள் என்று புரியாமல் மனோன்மணி தவித்து இருக்கிறார்.

    ஏற்கனவே மனோன்மணி விண்ணப்பித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரும் விண்ணப்பித்து இருக்கிறார். அவர் இடைத்தரகர் ஒருவர் மூலம் ரூ.14 ஆயிரம் கொடுத்து உடனடியாக கார்டு பெற்றது தெரிய வந்தது.

    தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாததால்தான் மனோன்மணி இந்த தர்ணாவை கையில் எடுத்துள்ளார். தனது 3 வயது குழந்தையை எடுத்து மடியில் வைத்தபடி நடுரோட்டில் அமர்ந்து விட்டார்.

    நிலைமை விவகாரம் ஆன பிறகு விரைவில் கார்டு வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்து இருக்கிறார்கள். #Rationcard

    சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் உள்ள நக்கீரன் கோபாலை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் தர்ணாவில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டார். #NakkeeranGopal #MDMK #Vaiko
    சென்னை:

    நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டைக்கு அழைத்து வரப்பட்ட தகவல் அறிந்ததும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விரைந்து சென்றார்.

    அவரை போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. உடனே வைகோ வக்கீல் என்ற முறையில் என்னை உள்ளே சென்று நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    ஆனால் அவரது கோரிக்கையை போலீசார் நிராகரித்தனர். நக்கீரன் கோபாலிடம் விசாரணை நடந்து வருவதால் தற்போது அனுமதிக்க இயலாது என்று தெரிவித்தனர்.

    இதனால் வைகோ ஆவேசமானார். போலீஸ் உயர்அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். என்றாலும் போலீசார் அவரை அனுமதிக்கவில்லை.


    இதனால் மேலும் ஆவேசமாக வைகோ அந்த இடத்திலேயே போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    போலீஸ் அதிகாரிகள் அவரை சமரசம் செய்ய முயன்றனர். எழுந்து செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் வைகோ அதை ஏற்கவில்லை.

    இதைத் தொடர்ந்து 11.30 மணியளவில் வைகோ கைது செய்வதாக போலீசார் அறிவித்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் வேனில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டார். நக்கீரன் கோபால் கைதை கண்டித்து பத்திரிகையாளர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். #NakkeeranGopal #MDMK #Vaiko
    புதுவை கவர்னர் மாளிகை எதிரே மனைவிக்கு விடுமுறையை நீட்டிக்க கோரி அரசு ஊழியர் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
    புதுச்சேரி:

    புதுவை தேத்தாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகையன். பொதுப் பணித்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாலாம்பாள் (45). இவர், புதுவை நீதிமன்றத்தில் பல்நோக்கு ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    பாலாம்பாளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இதனால் பாலாம்பாளுக்கு விடுப்பை நீட்டிக்க கோரி அவர் பணியாற்றும் நீதிபதி இல்லத்தில் அவரது கணவர் முருகையன் கேட்டு இருந்தார். ஆனால், அவர்கள் விடுமுறையை நீட்டிக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் விடுமுறை அளிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலாம்பாளின் கணவர் முருகையன் தனது 2 குழந்தைகள் மற்றும் உறவினருடன் புதுவை கவர்னர் மாளிகை எதிரே திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பாலாம்பாளுக்கு விடுப்பை நீட்டிப்பு செய்ய வேண்டும், அவரை வேறு துறைக்கு பணி மாற்றம் செய்ய வேண்டும் என முருகையன் வலியுறுத்தினார்.

    இதையடுத்து அங்கு வந்த பெரியக்கடை போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட முருகையனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். #tamilnews
    கடலூர் அருகே திருமணம் செய்ய மறுத்ததால் காதலன் வீட்டு முன்பு அமர்ந்து காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகள் சிவகலா (வயது 25). கடலூர் அருகே உள்ள கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (30). விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். ராஜ்குமாரும் சிவகலாவும் காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் சிவகலாவுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். இதனால் சிவகலா தனது காதலன் ராஜ்குமாரிடம் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினார். ஆனால் அவர் திருமணம் செய்ய முடியாது என்று கூறி மறுத்து விட்டார். தன்னை காதலித்து விட்டு ராஜ்குமார் திருமணம் செய்ய மறுக்கிறாரே என்று எண்ணி சிவகலா மனம் வருந்தினார்.

    இது குறித்து சிவகலா கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், நானும், ராஜ்குமாரும் கடந்த 2010-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வந்தார். இப்போது என்னிடம் பேச கூட மறுக்கிறார் என்று தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு வருமாறு ராஜ்குமாருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் விசாரணைக்கு வரவில்லை.

    இதையடுத்து சிவகலா நேற்று ராமாபுரத்தில் உள்ள தன் காதலன் ராஜ்குமார் வீட்டுக்கு சென்றார். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து காதலன் வீட்டின் முன்பு அமர்ந்து சிவகலா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் இரவு வரை தர்ணா செய்தார். இந்த சம்பவம் ராமாபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோவையில் கணவருடன் சேர்த்து வைக்க கோரி நள்ளிரவு வரை போலீஸ் நிலையத்தில் பட்டதாரி பெண் தர்ணாவில் ஈடுபட்டனர்.
    கவுண்டம்பாளையம்:

    சென்னை கே.கே. நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் வித்யா (30). எம்.ஏ. பட்டதாரி. இவரும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.பின்னர் அவர்கள் சென்னையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கணவன் -மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.இது குறித்து வித்யா சென்னை பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே மணிகண்டன் கோவை சங்கனூர் வந்து விட்டார். இங்கு பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இந்த தகவல் கிடைத்ததும் வித்யா சென்னையில் இருந்து கோவை வந்தார். தன்னை கணவருடன் சேர்த்து வைக்க கோரி துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் சுகன்யா, பாக்கியலட்சுமி ஆகியோர் இது குறித்து விசாரணை நடத்தினார்கள். மணிகண்டனையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.

    அவர் தன் மீது சென்னை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இருப்பதாகவும், விவாகரத்து வழக்கு நடைபெற்று வருவதாலும் வித்யாவுடன் சேர்ந்து வாழ முடியாது என தெரிவித்தார்.பின்னர் போலீஸ் நிலையத்தில் இருந்து அவர் புறப்பட்டார். அவரை பின் தொடர்ந்து சென்ற வித்யா தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கெஞ்சினார். ஆனால் மணிகண்டன் மனம் இறங்கவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த வித்யா போலீஸ் நிலையத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். திடீரென மேட்டுப்பாளையம் சாலையிலும் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அவரை மகளிர் போலீசார் சமாதானப்படுத்தினார்கள்.நள்ளிரவு 1 மணி வரை வித்யா தனது போராட்டத்தை தொடர்ந்தார். பின்னர் தர்ணாவை கைவிட்டு கோவையில் உள்ள தனது தோழி வீட்டுக்கு சென்றார். #tamilnews
    சத்துணவு அமைப்பாளர் பணியை தனக்கு தரக்குகோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கணவருடன் இளம்பெண் திடீரென உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தனிச பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). இவரது மனைவி ரேவதி (32). இன்று காலை கணவனும் மனைவியும் கடலூர் புதிய கலெக்டர் அலவலகம் வந்தனர்.

    பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து திடீரென்று உண்ணாவிரதம் இருந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுநகர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உண்ணாவிரதம் இருந்த ரேவதி மற்றும் பாஸ்கரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ரேவதி போலீசாரிடம் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் தனிசபாக்கத்தில் வசித்து வருகிறோம். இந்த பகுதி அண்ணாகிராமம் ஒன்றியத்துக்கு உட்பட்டதாகும். கடந்த பிப்ரவரி மாதம் அண்ணாகிராம ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்காக நேர்முக தேர்வு நடைபெற்றது. இதில் நான் கலந்து கொண்டேன்.

    என் கணவர் தலையில் அடிப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னுடன் நேர்முகதேர்வு எழுதிய பலருக்கு வேலை கிடைத்துவிட்டது. ஆனால் எனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இந்த பகுதியில் உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியை எனக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் ரேவதியை கலெக்டர் அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர். பின்னர் அவர் அங்கிருந்த அதிகாரியிடம் தனது கோரிக்கை மனுவை கொடுத்தார். 

    மக்கள் திட்டங்களை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவர்னர் வீட்டில் படுத்து தூங்கி தர்ணாவில் ஈடுபட்டார். #AnilBaijal #CMArvindKejriwal
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ரேசன் பொருட்களை வீடு தேடி சென்று வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவை திட்டங்களை கொண்டுவந்தார்.

    இந்த திட்டங்களை அமல்படுத்திட சம்பந்தப்பட்ட துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் கெஜ்ரிவால் உத்தரவை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புறக்கணித்தனர்.

    இந்நிலையில், மக்கள் திட்டங்களை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவர்னர் வீட்டில் படுத்து தூங்கி தர்ணாவில் ஈடுபட்டார்.

    இதுதொடபாக அவர் நேற்று இரவு துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை சந்திக்க அவரது இல்லம் சென்றார். ஆனல் அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் கவர்னர் வீட்டின் வரவேற்பாளர் அறையில் பல மணி நேரம் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை துவக்கினார். அவருடன் மாநில மந்திரிகளும் உடனிருந்தனர். 

    இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில், அரசின் திட்டங்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிறைவேற்ற மறுக்கின்றனர். சட்டசபையில் டில்லிக்கு மாநில அரசு அந்தஸ்து அளிக்கும் தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது. மத்திய அரசின் கைப்பாவையாக துணை நிலை கவர்னர் செயல்படுவது சரியல்ல என தெரிவித்தார். #AnilBaijal #CMArvindKejriwal
    தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னை தலைமைச் செயலகத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். #sterliteprotest #DMK
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று சபாநாயகர் தலைமையிலான பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தை திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் புறக்கணித்தனர்.

    மேலும், முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உட்பட திமுக எம்.எல்.ஏக்கள் பலர் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து முதல்வர் தரப்பிலிருந்து அனுமதி ஏதும் அளிக்கப்படாத நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறை முன்பு அமர்ந்து திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு காவல்துறையே காராணம் என திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டபடி தர்ணா செய்தனர்.

    இதேபோல, தலைமை செயலகத்திற்கு வெளியே திமுகவினர் சாலையை மறித்து அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

    இதனை அடுத்து, ஸ்டாலினை குண்டுக்கட்டாக தலைமை செயலகத்தில் இருந்து போலீசார் வெளியே தூக்கி வந்தனர். பின்னர், வெளியே வந்த ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் சாலையில் அமர்ந்து மறியல் நடத்தினர்.

    சிறிது நேரத்திற்கு பின்னர், போலீசார் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். 



    முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின், சீருடை அணியாத காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியது பற்றி விசாரணை தேவை என்றும், துப்பாக்கிச்சூடு பற்றி பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற வேண்டும் எனவும், துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்காக டிஜிபியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    மேலும், 3 நாட்களாக தூத்துக்குடி மாவட்டமே கொந்தளிப்புடன் காணப்படும் நிலையில், முதல்வர் பழனிசாமி நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூட கூறவில்லை என்றும், துப்பாக்கிச்சுடு பற்றி நடவடிக்கை எடுக்காமல் ஒப்புக்காக ஆட்சியர், எஸ்.பி., போன்றோரை மாற்றம் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். #sterlilteprotest #DMK
    ×