search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 116343"

    • 12 சிவாலயங்களில் ஓட்டமாகச் செல்வார்கள்.
    • இந்த ஓட்டம் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

    குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் சிவபெருமானின் அருள் வேண்டி இங்குள்ள 12 சிவாலயங்களில் நடையும், ஓட்டமு மாகச் சென்று வழிபடுவதே சிவாலய ஓட்டம் எனப்படுகிறது.

    இதற்காக பக்தர்கள் முன்சிறை அருகே உள்ள திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கி திக்குறிச்சி மகாதேவர், திற்பரப்பு வீரபத்திரர், திருநந்திக்கரை நந்தீஸ்வரர், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர், திருப்பன்னிப்பாகம் மகாதேவர், கல்குளம் நீலகண்டசுவாமி, மேலாங்கோடு மகாதேவர், திருவிடைக்கோடு மகாதேவர், திருவிதாங்கோடு மகாதேவர், திருப்பன்றிகோடு மகாதேவர், திருநட்டாலம் சங்கரநாராயணர் ஆகிய 12 சிவாலயங்களில் ஓட்டமாகச் செல்வார்கள். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் குமரி மாவட்டத்தில் பல நூற்றாண்டாக நடைபெறும் இந்த ஓட்டம் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

    சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி நாளில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். அப்போது இவர்கள் காலை, மாலை வேளைகளில் குளித்து சிவன் கோவில்களுக்கு சென்று சிவநாமத்தை உச்சரித்து பிரார்த்தனை செய்வதுண்டு. சைவ வகை உணவுகளை மட்டுமே உட்கொள்வார்கள். பின்னர் சிவராத்திரி தினத்திற்கு முந்தைய நாளில் காவி உடை அணிந்து விபூதி பூசி, கையில் விசிறியுடன் கோபாலா... கோவிந்தா... என்ற நாம கோஷத்துடன் திருமலை மகாதேவர் கோவிலில் தொடங்கி ஒவ்வொரு கோவிலாக ஓடியவாறு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். 110 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த நீண்ட ஓட்டத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்பார்கள்.

    இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கேற்க கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். பழங்காலத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களும் நடந்தும், ஓடியும் சென்றுள்ளனர். அண்மை வருடங்களாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே நடந்தும், ஓடியும் செல்கின்றனர். பெரும்பாலானோர் இரு சக்கர வாகனங்கள் மற்றும் வேன், பஸ் போன்ற வாகனங்களில் இந்த ஓட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் கோவிலில் உள்ள குளத்தில் குளித்து விட்டு சாமி தரிசனம் செய்ய வேண்டுமென்பதும் தங்கள் கையில் வைத்திருக்கும் விசிறியால் சுவாமிக்கு வீசிக் கொடுக்க வேண்டுமென்பது ஐதீகம்.

    சிவாலய ஓட்டத்திற்கான கதை

    சிவாலய ஓட்டம் தொடர்பாக பக்தர்கள் மத்தியில் 2 விதமான கதைகள் கூறப்படுகிறது. இதில் மகாபாரதத்துடன் தொடர்புடைய, தருமரின் யாகம் ஒன்றிற்கு புருஷா மிருகத்தின் பால் பெற பீமன் சென்ற கதை மற்றும் சூண்டோதரன் என்ற அரக்கன் தவம் செய்து சிவ பெருமானிடம் வரம் பெற்ற பின்னர் அந்த வரத்தை சிவபெருமானிடமே சோதித்து பார்க்க முயலும் போது சிவபெருமான் கோபாலா.. கோவிந்தா என்று கூறியவாறு ஓடியதும், இறுதியில் மோகினி அவதாரமெடுத்து வந்த விஷ்ணு சூண்டோதரனை அழிக்கும் கதை சொல்லப்படுகிறது.

    இதில் மகாபாரதத்துடன் தொடர்புடைய கதையில், புருஷா மிருகத்தின் பால் பெற சென்ற பீமன், கிருஷ்ணனின் உபதேசப் படி உத்திராட்ச கொட்டைகளை போட்ட இடங்களே சிவத் தலங்களாயிற்று என்றும், சூண்டோதரன் கதையில் சிவபெருமான் பதுங்கி மறைவாக இருந்த இடங்களே சிவத்தலங்களாயிற்று என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

    சிவாலய ஓட்டத்தின் முதல் கோவிலான முன்சிறை மகாதேவர் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம் வழங்கப்படுகிறது. ஓட்டம் நிறைவடையும் திருநட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் பிரசாதமாக விபூதி வழங்கப்படுகிறது.

    திருநட்டாலம் கோவிலில் சுவாமி சிவன்-விஷ்ணு என சங்கர நாராயணர் வடிவத்தில் எழுந்தருளியுள்ள நிலை சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக உள்ளது.

    இந்த வருடம் சிவராத்திரி தினம் வருகிற 18-ந் தேதியாக உள்ள நிலையில் மாவட்டத்தில் சிவாலயங்களுக்கு நடந்தும், ஓட்டமுமாகவும் செல்லும் பக்தர்கள் 17-ந் தேதி பிற்பகலில் ஓட்டத்தை தொடங்குகின்றனர். 19-ந் தேதி காலையில் சிவாலய ஓட்டத்தை பக்தர்கள் நிறைவு செய்வார்கள்.கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்றும் அச்சமும் மக்கள் மத்தியில் இருந்த நிலையில் சிவாலய ஓட்ட பக்தர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தநிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே சமயத்தில் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெருக்கடி இல்லாத சாலை வசதி, தடையற்ற மின்சாரம், தண்ணீர் மற்றும் கழிவறை வசதிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • வருகிற 20-ந்தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.
    • 20-ந் தேதி சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது.

    இந்துசமய அறநிலையத்துறையின் குமரி மாவட்ட திருக்கோவில்கள் (சுசீந்திரம்) நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களில் சென்னித்தோட்டம் கமுகண்ணூர் மகாதேவர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலின் 65-வது மகாசிவராத்திரி திருவிழாவும், இந்து சமய மாநாடும் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 20-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.

    முதல் நாள் திருவிழாவான இன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜையும், 8 மணிக்கு சுத்திகலச பூஜை, 10.30 மணிக்கு சமய வகுப்பு மாணவ- மாணவிகளின் பண்பாட்டு போட்டிகள், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது. மாலை 5 மணிக்கு கொடிப்பட்டம் வழங்கும் நிகழ்ச்சி, 6.30 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு கொடிமர பூஜை மற்றும் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    2-வது நாள் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, காலை 7 மணிக்கு மாபெரும் திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி நடக்கிறது. திருவாசக சித்தர் சிவ.தாமோதரன் திருவாசகம் முற்றோதுகிறார்.

    8.30 மணிக்கு கலசபூஜை, மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு பகவதி சேவை போன்றவை நடக்கிறது.

    இதேபோல் விழா நாட்களில் ஒவ்ெ்வாரு நாளும் கணபதி ஹோமம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், அன்னதானம், சாமி வாகன பவனி ஆகியவை நடக்கிறது. 8-வது நாள் திருவிழாவான 18-ந் தேதி மாலை 5 மணிக்கு சாமி ரிஷப ரதத்தை ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியும், உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் மாநில தலைமை ஆலோசகருமான பொன்மாணிக்கவேல் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார். அன்று நள்ளிரவு 12 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகரும், இசை அமைப்பாளருமான சென்னை ஸ்ரீகாந்த் தேவா மாபெரும் இன்னிசை விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.

    10-ம் நாள் திருவிழாவான 20-ந் தேதி காலையில் அபிஷேகம், சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஆறாட்டு பூஜையும் 6.30 மணிக்கு பஜனையை தொடர்ந்து கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • குருவின் அருளால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.
    • தர்மத்தைப் பின்பற்றினால் இறைவனின் தரிசனம் கிடைக்கும்.

    வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்புவாய்ந்தது. அந்த நாளில் நந்தி பகவானை வழிபடுவதன் மூலம் குருவருளையும் திருவருளையும் பெறலாம்.

    குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தில், சிவ பூஜை செய்வதும் விரதமிருந்து, ருத்ரம் ஜபித்தும் வழிபாடு செய்வதும் ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும்.

    சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒன்றான தட்சிணாமூர்த்தி திருவடிவத்தைக் கட்டாயம் வணங்க வேண்டிய நாள் வியாழக்கிழமை. அதோடு பிரதோஷம் சேர்ந்துவருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    நலமும் வளமும் தரும் பிரதோஷ பூஜையை தரிசிப்பதும் அப்போது சிவனாரை மனமொன்றிப் பிரார்த்தனை செய்வதும் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. மிகுந்த நன்மைகளை வாரிவழங்கக் கூடியது.

    நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம். சிவனோடு இருப்பவர். சிவ என்பதற்கு மங்களம் என்று பொருள். நந்தி என்பதற்கும் ஆனந்ததையும் மகிழ்ச்சியையும் தருபவர் என்றே பொருள். தகுதியில்லாதவர்கள் சிவ தரிசனம் பெறுவதைத் தடை செய்பவர் நந்தி. நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன. தர்மத்தைப் பின்பற்றினால் இறைவனின் தரிசனம் கிடைக்கும். இறைவனின் சந்நிதியில் நந்திக்குப் பின் நின்று வணங்க வேண்டும் என்பதன் தாத்பர்யமும் தர்மத்தைப் பின்பற்றி அதன் மூலம் இறைவனை வழிபட வேண்டும் என்பதுதான்.

    நந்திபகவான் பிரதோஷ நாளில் வேண்டும் வரம் தருபவராக விளங்குகிறார். இந்த நாளில் அவரை நினைத்து வழிபடுவது சிவ பெருமானின் பேரருளை நமக்குத் தரும். அதனால்தான் பிரதோஷ தினத்தில் நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    சிவபக்தர்களை ஓடிவந்து காக்கும் நந்தி தேவரை பிரதோஷ வேளையில் நினைத்து வழிபட, அவரே குருவாக இருந்து நமக்கு இறையருளைப் பெற்றுத் தருவார். இன்று மாலை (19/1/23) பிரதோஷ வேளையில் அனைவரும் வீட்டில் சிவபெருமானை நினைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சிவபுராணம் படியுங்கள்.

    வியாழக்கிழமை (இன்று) நாளில் நடைபெறும் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்றால் துன்பங்கள் நீங்கும் கஷ்டங்கள் காணாமல் போகும். தோஷங்களும் தீரும். திருமணத் தடைகள் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும். குருவின் அருளால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.

    • சிவபெருமான் சிலை அமைக்கும் பணி கலை நயத்துடன் நடந்து வருகிறது.
    • சிவன் சிலை பக்தர்களை கவரும் வகையில் நுட்பமாக அமைக்கப்படும்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்லும் பாதையில் அஞ்சூர் மண்டபம் அருகில் ராமாபுரம் நீர்த்தேக்கம் உள்ளது. அதில் கரையோரம் தாமரைப்பூக்கள் பூத்துக்குலுங்கும். அது, பக்தர்களை கவரும் வகையில் இருக்கும்.

    இந்தநிலையில் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த எம்.எம். வாடா பகுதியைச் சேர்ந்த பக்தர் மாத்தையா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது தந்தையின் நினைவாக அஞ்சூரு மண்டபத்தைச் சீர்படுத்தி, அங்கு அரசு அனுமதியோடு ராமாபுரம் நீர்த்தேக்கத்தில் சிவன், பார்வதி சிலைகளை நிறுவினார். அதில் சிவன் சிலை 7 அடி உயரமும், 15 அடி அகலமும் கொண்டதாகும். சிலைகளை நிறுவும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுகுறித்து பக்தர் மாத்தையா கூறியதாவது:-

    சிவபெருமான் சிலை அமைக்கும் பணி கலை நயத்துடன் நடந்து வருகிறது. சிவன் தலையில் இருந்து கங்கைநீர் அருவியாய் விழுவதுபோல் செயற்கை நீரூற்று அமைக்கப்படும். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இந்த நீர்த்தேக்கத்துக்கு வந்து சிவன் சிலையை தரிசிக்கலாம். சிவன் சிலை பக்தர்களை கவரும் வகையில் நுட்பமாக அமைக்கப்படும்.

    சிவன் சிலையைச் சுற்றிலும் கண்களை கவரும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்படும். இசை நீரூற்று ஏற்பாடு செய்யப்படும். தன்னால் இயன்ற சேவையை சிவபெருமானுக்கு செய்கிறேன்.

    கைலாசகிரி மலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்லும் பாதையை, தமிழகத்தில் திருவண்ணாமலையில் இருப்பதுபோல் சீரமைக்கப்படும். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் ஒத்துழைப்போடு சிவபெருமான் சிலையை அமைத்து வருகிறேன்.

    வரும் காலத்தில் தனக்கு அரசு அனுமதி அளித்தால் ராமாபுரம் நீர்த்தேக்கத்தில் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் படகு சவாரி செய்ய படகு குளம் அமைக்க ஏற்பாடு செய்வேன். நீர்த்தேக்கம் அருகில் பூங்காவை அமைப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இருள்மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.
    • ‘நமசிவாய’ என்னும் பஞ்சாட்சரத்தை சொல்லி வருவதன் மூலம் பாவங்கள் விலகும்.

    எல்லா உயிர்களுக்கும் அம்மையாகவும், அப்பனாகவும் விளங்கும் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட உகந்த நாட்களில் சிவராத்திரியும் ஒன்று. மகா சிவராத்திரி என்பது மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வருகின்றது. அன்றைய தினம் இரவு நான்கு சாமங்கள் சிவபூஜை செய்து விரதமிருந்தால் நாள் தோறும் நற்பலன்கள் நடை பெறும். சிவராத்திரி அன்று சிவபெருமானை வில்வ இலையால் அர்ச்சித்து வழிபடுவதன் மூலம் சிறப்புகள் அனைத்தும் வந்துசேரும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் நான்காவது சாமத்தில் பூஜையை முடித்து, அதிகாலையில் நீராடி, பின்னர் உணவருந்துவது உத்தமம்.

    திருவண்ணாமலையில் ஈசனின் அடி முடியைத் தேடி அலுத்துத் திரும்பிய பிறகு, அடிபணிந்த திருமாலுக்கும், பிரம்மனுக்கும் ஜோதி வடிவாய் காட்சிதந்தார் சிவபெருமான். அந்த நிகழ்வு நடைபெற்றது ஒரு சிவராத்திரி நாளில்தான்.

    சிவபெருமான் வீற்றிருந்து அருள்வழங்கும் கோவில் ஒன்றில், எலி ஒன்று அங்கும் இங்கும் ஓடியது. அங்கு கருவறையில் ஏற்றப்பட்டிருந்த விளக்கின் தீபம் அணையும் தருவாயில் இருந்தது. எலிக்கோ விளக்கில் ஊற்றப்பட்டிருந்த நெய்யின் வாசம் மூக்கைத் துளைத்தது. இதனால் அது விளக்கின் அருகில் சென்று, அணையும் நிலையில் இருந்த விளக்குத் திரியில் தன் மூக்கை வைத்து உரசியது. இதில் விளக்கில் இருந்து வெளிப்பட்ட திரியில், தீ நன்றாக பிடித்து விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. அந்த எலியை, மறு பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக இறைவன் பிறக்கச் செய்தார். எலி, விளக்கைத் தூண்டி விட்டதும் ஒரு சிவராத்திரி நாள் என்று புராணம் சொல்கிறது.

    ஒரு முறை உமாதேவி விளையாட்டாக சிவபெருமான் கண்களைத் தன்னுடைய கரங்களால் மூடியதால் உலகமே இருள்சூழப்பெற்றது. அந்த நாளே 'சிவராத்திரி' என்று புராணங்கள் சொல்கின்றன. அந்த இரவில் ஒளி வேண்டித் தவித்தவர்களுக்கெல்லாம் ஒளி கொடுக்க, சிவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். எனவே இருள்மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

    சிவராத்திரி அன்று நள்ளிரவு 11.30 மணி முதல் 1 மணி வரை லிங்கோத்பவர் காலமாகும். அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்குக் கிடைக்கும். சிவராத்திரி அன்று, சிவலிங்கத் திருமேனியை வலம்புரி சங்கால் அபிஷேகித்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்து, சுத்த அன்னத்தை நைவேத்தியமாக படைத்து, 'நமசிவாய' என்னும் பஞ்சாட்சரத்தை சொல்லி வருவதன் மூலம் பாவங்கள் விலகும்.

    அன்றைய தினம் சனிப்பிரதோஷமும் இணைந்து வருவதால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இந்த வருட மஹா சிவராத்திரி விளங்குகிறது,

    'ஜோதிடக் கலைமணி' சிவல்புரி சிங்காரம்

    • இந்தநாளில், மாலையில் சிவ தரிசனம் செய்யுங்கள்.
    • நமசிவாய மந்திரம் சொல்லி மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.

    மார்கழி மாதத்தின் கடைசி சோம வாரம் இன்று. இந்த நன்னாளில்,விரதம் இருந்து சிவ புராணம் பாராயணம் செய்தும் நமசிவாய மந்திரம் சொல்லியும் சிவனாரை தரிசிப்போம். அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அம்பாளையும் சிவபெருமானையும் தரிசித்து பிரார்த்திப்போம்.

    மார்கழி மாதம் என்பது சிறப்பான மாதம். மார்கழி மாதம் என்பது பக்திக்கு உரிய மாதம். மார்கழி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். மார்கழி மாதம் புதிதாக ஜபங்களையும் கலைகளையும் கற்றுக்கொள்ளும் மாதம். இந்த மாதத்தில் வழிபாடுகளிலும் பூஜைகளிலும் ஆத்மார்த்தமாக ஈடுபட்டால், இறைவனின் பேரருளைப் பெறலாம்.

    'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்று மகாபாரதத்தில், பகவான் கிருஷ்ணர் தெரிவித்துள்ளார். மார்கழி மாதம் விரதம் இருந்து முழுவதும் சிவ வழிபாடு செய்வதும் பெருமாள் வழிபாடுகள் மேற்கொள்வதும் மும்மடங்குப் பலன்களைத் தரவல்லது.

    மார்கழி மாதத்தில் திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை முதலானவற்றைப் பாராயணம் செய்தும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் ஆலயத்துக்கு செல்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள்.

    மார்கழி மாதத்தில் வைஷ்ண திருத்தலங்களில் தினமும் காலையும் மாலையும் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும்.

    அதேபோல், மார்கழி மாதத்தில் ஆண்டாளைக் கொண்டாடும் வகையில் கூடாரவல்லித் திருநாள் கொண்டாடப்படுகிறது.

    சிவன் கோயில், பெருமாள் கோயில் என்றில்லாமல், மார்கழி மாதம் முழுவதுமே எல்லா ஆலயங்களிலும் காலையும் மாலையும் விசேஷ வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

    மார்கழி மாதத்தில் சோமவாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையில் விரதம் இருந்து சிவனாரை வழிபடுவதும் சிவ பூஜை மேற்கொள்வதும் சிறப்புக்கு உரியது. மார்கழி மாதத்தின் கடைசி திங்கட்கிழமை இன்று. இந்தநாளில், மாலையில் சிவ தரிசனம் செய்யுங்கள். குளிர்ந்த வேளையில், சிவனாரை தரிசியுங்கள். நமசிவாய மந்திரம் சொல்லி மனதார பிரார்த்தனை செய்யுங்கள். நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் களைந்து அருளுவார் சிவனார். சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்தருளுவார்.

    மனதில் நிம்மதியையும் அமைதியையும் தந்து ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும் சிவனாரை வழிபடுவோம்!

    • சிவாலயம் சென்று, நடராஜரையும், சிவகாமி அம்மனையும் வணங்க வேண்டும்.
    • இரவில் எளிமையான உணவை உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

    திருவாதிரை அன்று, நடராஜ பெருமானுக்கு களி நைவேத்தியமாக படைக்கப்படும். 'திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி' என்பது முன்னோர் வாக்கு. இறைவனுக்கு களி படைப்பதற்கான கதை ஒன்றும் உள்ளது. முன் காலத்தில் சேந்தன் என்ற சிவபக்தர் இருந்தார். விறகு வெட்டி கிடைக்கும் சிறிய வருவாயில் வாழ்க்கை நடத்தி வந்தார். இருப்பினும் தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பிறகே, அவர் உணவருந்துவார். ஒரு நாள் கடும் மழை பெய்தது.

    அதனால் விறகுகள் ஈரமாகி விட்டன. அதனால் விறகுகளை விற்க முடியாமல் வருவாய் பாதிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் சேந்தன் வீட்டிற்கு ஒரு சிவனடியார் வருகை தந்தார். அவருக்கு எப்படி உணவளிப்பது என்று சேந்தன் கவலைகொண்டார். அவரது மனைவி, வீட்டில் அரிசி மாவும், சிறிது வெல்லமும் இருப்பதாகவும், அதைக் கொண்டு அடியாருக்கு களி செய்து கொடுக்கலாம் என்று கூறினார். அதன்படியே சிவனடியாருக்கு களியை உணவாக படைத்தனர்.

    அதை உண்ட சிவனடியார் மகிழ்வுடன் புறப்பட்டார். அதற்கு மறுநாள் திருவாதிரையாகும். நடராஜரை தரிசிக்க, சேந்தனும் அவரது மனைவியும் சிதம்பரம் சென்றனர். அங்கு சிவபெருமானின் வாய்ப் பகுதியில் களி உண்டதற்கான அடையாளமாக சிறிது களி ஒட்டிக்கொண்டிருந்தது. தன் வீட்டிற்கு வந்து களி சாப்பிட்டது ஈசன் என்று அறிந்ததும் சேந்தனும், அவரது மனைவியும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இதை அறிந்த ஊர் மக்களும், சேந்தனின் பக்திக்கு தலை வணங்கினர். அன்று முதல் திருவாதிரை அன்று இறைவனுக்கு நைவேத்தியமாக களி படைக்கும் வழக்கம் வந்தது.

    சிவபெருமான் பிறப்பும், இறப்பும் இல்லாதவராக போற்றப்படுகிறார். ஆனால் அவருக்குரிய நட்சத்திரமாக 'திருவாதிரை' இருக்கிறது. பகவத் கீதையில், 'மாதங்களில் நான் மார்கழி' என்று கூறும் கிருஷ்ணர், 'நட்சத்திரங்களில் நான் திருவாதிரையாக இருக்கிறேன்' என்கிறார். தெய்வங்களை வழிபடுவதற்கான மாதமாக கருதப்படும் இந்த மார்கழியில்தான், திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் ஆருத்ரா தரிசனமும் வருகிறது. இந்த ஆருத்ரா தரிசனம், நடராஜ பெருமானுக்கு உகந்த வழிபாட்டு தினமாகும். இந்த நாளில் அனைத்து சிவாலயங்களிலும் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். சிதம்பரம் நடராஜர் கோவில், திருவாரூர் தியாகராஜ பெருமான் ஆலயங்களில் இந்த நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    ஒரு முறை திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த மகாவிஷ்ணு, திடீரென்று "ஆகா.. அற்புதம்" என்று சத்தம் போட்டு கூறினார். அவர் அப்படி பரவசம் அடைந்ததற்கான காரணம் என்ன என்று, மகாவிஷ்ணுவின் பாதத்தில் அமர்ந்திருந்த மகாலட்சுமிக்கும், மகாவிஷ்ணுவை தாங்கியபடி இருந்த ஆதிசேஷனுக்கும் புரியவில்லை. அவர்கள் இருவரும், திருமாலின் பரவச நிலைக்கு என்ன காரணம் என்பதுபற்றி அவரிடமே கேட்டனர். அதற்கு மகாவிஷ்ணு, "திருவாதிரை நாளான இன்று, சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தை ஞானக் கண்ணால் பார்த்தேன். அதுதான் என் பரவசத்திற்கு காரணம்" என்றார்.

    ஈசனின் ஆனந்தத் தாண்டவம் பற்றி திருமால் சொல்லச் செல்ல, ஆதிசேஷனின் உடல் சிலிர்த்தது. அவருக்கும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை காண வேண்டும் என்ற ஆவல் உருவானது. ஆதிசேஷனின் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்ட மகாவிஷ்ணு, "ஆதிசேஷா.. உன் மனம் நினைப்பதை நான் அறிவேன். பூலோகத்தில் பிறந்து ஈசனை நினைத்து தவம் இருந்தால், உனக்கு அந்த ஆனந்தத் தாண்டவ தரிசனம் கிடைக்கும், போய் வா" என்று அருளினார்.

    அதன்படியே ஆதிசேஷன், பூமியில் பதஞ்சலி முனிவராக பிறந்தார். இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே பாம்பு தோற்றமும் கொண்டவராக, அவரது உருவம் இருந்தது. பலகாலம் பூமியில் தவம் இருந்ததன் பலனாக, பதஞ்சலி முனிவருக்கு சிதம்பரம் ஆலயத்தில் இறைவனின் ஆனந்தத் தாண்டவத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. அவருக்கு சிவபெருமான் தன்னுடைய ஆனந்தத் தாண்டவத்தைக் காட்டி அருளினார். அப்போது பதஞ்சலி முனிவர், "இறைவா.. இந்த திருக்காட்சியை பூலோக மக்களுக்கும் காட்டி, அவர்கள் முக்தியடைய வழிகாட்ட வேண்டும்" என்று வேண்டினார். அதன்படியே, ஆண்டுதோறும் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில், ஆருத்ரா தரிசனம் நடைபெற்று வருகிறது.

    விரதம் இருக்கும் முறை

    ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாக பிரித்துள்ளனர். அதில் ஆடி முதல் மார்கழி வரையான தட்சிணாயன புண்ணியகாலத்தின் கடைசி மாதமாக இருப்பது, மார்கழி. இந்த மாதம் தேவர்களின் அதிகாலைப் பொழுதாகும். அதாவது அவர்களின் பிரம்ம முகூர்த்த நேரம் என்றும் இந்த மாதத்தை சொல்வார்கள். இந்த மாதத்தில் வரும் பவுர்ணமியுடன் கூடிய திருவாதிரை நட்சத்திர நாளில்தான், திருவாதிரை நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து நீராடி, சிவநாமம் உச்சரித்து உடல் முழுவதும் திருநீறு தரிக்க வேண்டும்.

    பின்னர் சிவாலயம் சென்று, நடராஜரையும், சிவகாமி அம்மனையும் வணங்க வேண்டும். காலையில் ஆலயத்தில் நடைபெறும் தாண்டவ தீபாராதனையைக் காண வேண்டும். பின்னர் வீட்டிற்கு வந்து இறைவனுக்கு திருவாதிரை களி படைத்து, அதை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். பகலில் உணவருந்தக் கூடாது. அன்று முழுவதும் சிவபுராணம் எனப்படும் திருவாசக பாடல்கள், தேவாரம் போன்றவற்றை பக்தியுடன் பாராயணம் செய்ய வேண்டும். இரவில் எளிமையான உணவை உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

    திருவாதிரை விரதத்தை மார்கழி திருவாதிரையில் தான் அனைவரும் கடைப்பிடிப்பர். ஆனால் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நட்சத்திர தினத்திலும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். தொடர்ச்சியாக ஒரு வருடம் திருவாதிரை நோன்பு இருப்பவர்களுக்கு, வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பெரும் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    • திருவாதிரை விரதம் தீர்க்க சுமங்கலி வரம் தரும் விரதமாக கடைபிடிக்கப்படுகிறது.
    • சிறப்பு வாய்ந்த ஆருத்ரா தரிசனம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை. திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில், உபவாசம் இருந்து நோக்கும் விரதத்திற்கு மகிமை உண்டு. அது மட்டுமல்ல மாதங்களில் சிறப்பு மிக்க மாதம் மார்கழி. அந்த மார்கழி மாதம் வரும் திருவாதிரை நாளில் மாங்கல்ய நோன்பு இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது காலம் காலமாக கடைபிடித்து வரும் ஐதீகம். திருவாதிரை விரதம் தீர்க்க சுமங்கலி வரம் தரும் விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து தாலி சரடு மாற்றி சிவபெருமானை வழிபடுவதன் மூலம் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மார்கழி மாதம் திருவாதிரை திருநாளில் இந்த விரதம் இருப்பது கொங்கு மண்டலத்தில் சிறப்பானதாகும். பெண்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காக சோமவார விரதம் இருப்பார்கள். ஆவணி மாதத்தில் வரலட்சுமி நோன்பு விரதம் இருந்து கணவனுக்காக அம்மனிடம் வேண்டிக்கொள்வார்கள். அதேபோல் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக பெண்கள் மாசி மாதத்தின் இறுதி நாளில் காரடையான் நோன்பு இருந்து இறைவனை வழிபடுகின்றனர். அதுபோலவே மார்கழி மாதம் திருவாதிரை நாளான, இன்று (வியாழக்கிழமை) முழுநிலவும் இணைந்திருக்க விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவதன் மூலம் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    மாங்கல்ய விரதம்

    திருமணமாகி புகுந்த வீட்டிற்கு சென்ற பெண்களை பிறந்த வீட்டுக்கு அழைத்து தம்பதி சமேதராக விருந்து படைத்து வாழ்த்தி திருவாதிரை களி கொடுத்து தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றனர். முதல் நோன்பு பெண் வீட்டில் தான் விஷேசமாக கடைபிடிப்பார்கள். இதில் மஞ்சளில் விநாயகர் செய்து அருகம்புல் சாற்றி, விபூதி, சந்தனம், குங்குமம், இட்டு விநாயகர் முன், ஒரு தட்டில் மாங்கல்ய சரடுகள் வைக்கப்படும். மேலும் அரசாணிக்காய், பாகற்காய், அவரைக்காய் உள்ளிட்ட முக்கியமான 18 வகை காய்கறிகள் சமைத்து, திருவாதிரை களி, பச்சரிசி அடையும் சேர்த்து விநாயகருக்கு படைத்து வழிபட்டு அதன்பின் உள் கழுத்து சரடு எனும் மாங்கல்ய சரடை அணிந்து நோன்பு நிறைவு பெறும்.

    இதில் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய கயிறு, வளையல், மஞ்சள், பூ, குங்குமம் உள்ளிட்டவை கொடுப்பது வழக்கம். அதேபோல சிறுவர்கள், ஆண்கள் தங்களது கைகளில் மஞ்சள் கயிறு கட்டி அவர்களும் மாங்கல்ய நோன்பில் பங்கெடுத்து மகிழ்வர். இதையடுத்து, திருவாதிரை நட்சத்திரத்தன்று (இன்று) இரவு சிவாலயங்களில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்து, மறுநாள் ஆருத்ரா தரிசனம் கோலகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் அனைவரும் பங்கேற்று, சிவன் பார்வதி அருள்பெறுவர். இச்சிறப்பு வாய்ந்த ஆருத்ரா தரிசன விழா சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. சிறப்பு வாய்ந்த ஆருத்ரா தரிசனம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    • சிவபெருமானுக்கு பிரதோஷம் மிகவும் உகந்த நாளாகும்.
    • இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும்.

    மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள் மிகவும் சிறப்பானது. அப்பிரதோஷ தினங்களின் சிறப்பு என்ன என்பதையும், அப்பிரதோஷ வழிபட்டால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதமே மார்கழி மாதம் ஆகும். ஜோதிட சாஸ்திரப்படி தனுசு ராசியின் அதிபதியாக குரு பகவான் இருக்கிறார். எனவே இம்மாதத்தில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    புத பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாள், புதன்கிழமை. இந்தநாளில் வரும் பிரதோஷ தினமான இன்று வழிபாடு செய்யும் மிதுனம், கன்னி ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும், புதன் தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும். புதன் நீச்சம் பெற்றதால் வரும் கெடுபலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிப்பில் ஆா்வம் இல்லாதவர்கள் கூட நன்றாக படிப்பார்கள்.

    அப்படியான பிரதோஷ தினத்தன்று மாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோயிலுக்கு சென்று, பிரதோஷ தினத்தில் செய்யப்படும் சோம சூக்த வலம் வந்து நந்தி பகவானையும், சிவனையும், சண்டிகேஸ்வரரையும் வணங்க வேண்டும். பின்பு கோயிலில் உள்ள நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானை வணங்கி, பிறகு சிவனுக்கான பிரதோஷ வழிபாடுகள் செய்து கோயிலை மூன்று முறை வளம் வந்து வணங்கி இல்லம் திரும்ப வேண்டும்.

    "பொன்" எனப்படும் தங்கத்திற்கு அதிபதி குரு பகவான் ஆவார். எனவே மார்கழி மாதத்தில் புதன் கிழமையில் வரும் சிறப்பான இன்றைய பிரதோஷத்தின் போது குரு பகவானையும், சிவபார்வதியையும் வணங்குவதால் உங்களுக்க பொன்னாபரணங்களின் சேர்க்கை உண்டாகும். வறுமை நிலை நீங்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். பிறருடனான பகை நீங்கும்.

    புதனை வலிமைப்படுத்த இன்று பச்சை பயிறு, சுண்டல் தானம் செய்யுங்கள்.

    • சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும்.
    • மாங்கல்ய தோஷம், களத்திரதோஷம், நீங்கும்.

    சோமவாரம் என்பது திங்கள் கிழமையை குறிக்கிறது. 16 திங்கள் கிழமைகள் சிவபார்வதியை நினைந்து விரதமிருந்து பிரார்த்தனை செய்தால் எவ்வளவு மன கஷ்டங்களும் உங்களிடம் இருந்து சுலபமாக நீங்கி விடும்.

    சாபத்தினால் ஒளியிழந்த சோமனான சந்திரன் சோமாவார விரதம் இருந்தபோது எம்பெருமான் காட்சியளித்ததோடு தேய்ந்து கீழே விழும் சந்திரனை தன்னுடைய இருகாரங்களாலும் காப்பாற்றி பிறைச்சந்திரனாக தலையில் சூடிக்கொண்டார் எம்பெருமான். பிறகு, சந்திரன் வளரும் நிலையையும் பெற்றான். அதுவே, தற்போது பௌர்ணமி, அமாவாசை என்றழைக்கப்டுகிறது.

    சோமவார விரதத்தை மேற்கொள்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த திங்கட் கிழமையிலும் துவங்கலாம். திங்கட்கிழமை அன்று அதிகாலையில் நீராடி மாலை வரை விரதம் இருந்து சிவபார்வதி பூஜைகள் மேற்கொள்ள வேண்டும். இதனால் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் சூழ்நிலைகளை இந்த விரதம் மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

    மேலும் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர மனதை ஒருநிலைப்படுத்தி 21 திங்கள் கிழமை விரதம் இருந்தால் மனம் மாறி இல்லறம் நல்லறமாக மாறும். மேலும் மாங்கல்ய தோஷம், களத்திரதோஷம், நீங்கும். இவ்விரதமுறையில் பெரியவர்களின் ஆசீர்வாதம் மிக முக்கியமானதாாகும்.பெற்றோரிடமோ அல்லது மாமனார் மாமியாரிடமோ அல்லது வயதான தம்பதியரிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ளலாம்.

    திங்கட்கிழமையில் சிவபெருமான் பார்வதி தேவியுடன் இணைந்த படத்திற்கு வில்வ அர்ச்சனை செய்து லிங்காஷ்டகம் படிக்கலாம். அல்லது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு உரிய மந்திரங்களை ஜபிக்கலாம். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரத்தை உணவாக எடுத்துக் கொள்ளலாம். பழச்சாறுகள், பால், பழம் போன்றவற்றை உட்கொண்டு விரதம் மேற்கொள்ளலாம்.

    நைவேத்தியமாக பழங்களையும் உங்களால் முடிந்த பாயாசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற ஏதாவது ஒரு நிவேதனத்தையும் படைக்கலாம். இது போல் தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொண்டு சிவ பார்வதியை வணங்கினால் நிச்சயம் நம்முடைய வேண்டுகோள்கள் நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.

    • ஒவ்வொரு மாதமும் வரும் மாத சிவராத்திரிக்கு ஒரு சிறப்பு உண்டு.
    • ஒவ்வொரு மாத சிவராத்திரி வழிபாடும் ஒவ்வொரு தெய்வத்தால் வழிபடப்பட்டதாகும்.

    பெருமானுக்குரிய விரதங்களில் ஒன்று சிவராத்திரி விரதம். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி தினத்தில் வருவதை மகா சிவராத்திரி என்கிறோம். மாசி மாதம் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி அன்று அமாவாசைக்கு முந்தைய நாள் அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரி தான் மகா சிவராத்திரி என்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    மகா சிவராத்திரியில் விரதம் இருப்போருக்கு நினைத்த காரியங்கள் கைகூடும். பொருளாதார முன்னேற்றம் அடைந்து சகல வளங்களும் வெகு விரைவில் கிட்டும். வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் தடையின்றி நிறைவேறும். அனைத்து பாவங்களும் நீங்கி இறுதியில் சிவபெருமானின் திருவடியை அடைந்து மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    விரதம் கடைபிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணைசெய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

    தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் வரும் மாத சிவராத்திரிக்கு ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு மாத சிவராத்திரி வழிபாடும் ஒவ்வொரு தெய்வத்தால் வழிபடப்பட்டதாகும். அதன் முழு விபரத்தை இங்கே பார்க்கலாம்.

    சித்திரை மாதம் - உமாதேவியால் வழிபடப்பட்டது.

    வைகாசி மாதம் - சூரிய பகவானால் வழிபடப்பட்டது.

    ஆனி மாதம் - ஈசனால் வழிபடப்பட்டது.

    ஆடி மாதம் - முருகனால் வழிபடப்பட்டது.

    ஆவணி மாதம் - சந்திரனால் வழிபடப்பட்டது.

    புரட்டாசி மாதம் - ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.

    ஐப்பசி மாதம் - இந்திரனால் வழிபடப்பட்டது.

    கார்த்திகை மாதம் - சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.

    மார்கழி மாதம் - லட்சுமியால் வழிபடப்பட்டது.

    தை மாதம் - நந்தி தேவரால் வழிபடப்பட்டது.

    மாசி மாதம் - தேவர்களால் வழிபடப்பட்டது.

    பங்குனி மாதம் - குபேரனால் வழிபடப்பட்டது.

    மாத சிவராத்திரி நாளில், சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், சிவ நாமங்களை சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம். மாத சிவராத்திரியில் சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத் திருமேனியையும் நந்திதேவரையும் வழிபட வேண்டும். சிவனாருக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்தால் பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து வைப்பார் சிவபெருமான்.

    • சிவபெருமானின் கண்களை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது.
    • பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள்.

    திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள்.

    ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான், அண்ணாமலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.

    அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது 'மலையை இடதுபுறமாக சுற்றிவா' என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    ×