search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரக்தி"

    கணவர் குடிப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மதுரை:

    மதுரை எழுமலை சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிச்சைப்பாண்டி மனைவி பாரதி (வயது 28). பிச்சைப்பாண்டிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.

    இதனால் குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இந்த நிலையில் பிச்சைப்பாண்டி சமீபத்தில் மனைவியிடம் நான் இனிமேல் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தாராம். அதன்படி கடந்த 4 மாதங்களாக குடிக்காமல் இருந்து வந்தார். திடீரென்று பிச்சைப்பாண்டி சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பாரதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பாரதி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மனைவி பிரிந்து சென்றதால் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற ஆசிரியர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை வம்பா கீரப்பாளையம் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் ஒரு வாலிபர் பிணம் கரை ஒதுங்கி கிடந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ஒதியஞ்சாலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் உப்பளம் தமிழ்த்தாய் நகரை சேர்ந்த ஜாய் ஜூலியா (வயது 33) என்பதும், பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இவர் பிரான்சு நாட்டில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரான்சில் இருந்து புதுவை திரும்பிய ஜாய் ஜூலியாவுக்கும், நாகர்கோவிலை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், சில நாட்களில் அந்த பெண் ஜாய் ஜூலியாவை விட்டு பிரிந்து சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் ஜாய் ஜூலியா விரக்தியுடன் இருந்து வந்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த ஜாய் ஜூலியா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சம்பவத்தன்று கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடன் தொல்லையாலும், மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாத ஏக்கத்திலும் பாப்ஸ்கோ ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் புதுநகர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). பாப்ஸ்கோ ஊழியர்.

    இவருக்கு காமாட்சியம்மாள் என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்த நிலையில் இளைய மகளும் திருமண வயதில் உள்ளார்.

    இந்த நிலையில் 2 மகள்களுக்கு கடன் வாங்கி திருமணம் செய்து வைத்திருந்த நிலையில் சம்பளம் வழங்கப்படாததால் ராமச்சந்திரன் அந்த கடனை அடைக்க முடியாமல் திண்டாடி வந்தார்.

    அதோடு இளைய மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமே என்ற கவலையில் இருந்து வந்தார். மேலும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு ராமச்சந்திரனை வலியுறுத்தி வந்ததால் விரக்தியில் இருந்து வந்தார்.

    இதனால் மனமுடைந்த ராமச்சந்திரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குபோட்டு தொங்கினார்.

    அக்கம் பக்கத்தினர் ராமச்சந்திரனை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே ராமச்சந்திரன் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சம்பளம் வழங்கப்படாததாலும், கடன் தொல்லையாலும் வில்லியனூர் வசந்தம் நகரை சேர்ந்த கூட்டுறவு நூற்பாலை ஊழியர் கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இதேபோன்று சம்பளம் வழங்கப்படாததால் கடன் தொல்லையில் பாப்ஸ்கோ ஊழியர் ராமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வில்லியனூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    துடியலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை துடியலூர் தொப்பம்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் கவுதம் (வயது 20). இவர் அங்குள்ள ஒரு கம்பெனியில் சூப்பர்வைசராக இருந்தார்.

    கம்பெனியில் இருந்து சரியாக சம்பளம் கிடைக்க வில்லை. மாற்று வேலையும் உடனே கிடைக்கவில்லை. இதனால் கவுதம் விரக்தியில் இருந்தார்.

    இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவுதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேட்டூர் அணை திறக்கப்படாததால் காவிரி பாசன பகுதிகளில் இந்த ஆண்டும் தொடர்ந்து 7-வது ஆண்டாக குறுவை சாகுபடி செய்ய இயலாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். #metturdam #deltafarmers
    தஞ்சாவூர்:

    காவிரி பாசன பகுதியில் வழக்கமாக சாகுபடி பணிகள் மேற்கொள்ள மேட்டூர் அணையில் இருந்து இன்று (12-ம் தேதி) தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் கல்லணைக்கு 16-ம் தேதி வந்து சேர்ந்து கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படும்.

    இதைத்தொடர்ந்து காவிரி ஆற்றின் துணை ஆறுகள், கிளை வாய்க்கால் வழியாக 2லட்சத்து 6 ஆயிரத்து 267 ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும். வெண்ணாறு பாசன பகுதியில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 422 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும்.

    கல்லணை கால்வாய் பகுதியில் 87 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும். கடந்த 6 ஆண்டுகளாக குறித்த தேதியான ஜூன் 12-ல் மேட்டூர் அணை தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்து போனது. இதனால் காவிரி வெண்ணாறு கல்லணை கால்வாய் பாசன பகுதியிலில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மிகுந்த துயரத்திற்கு உள்ளாயினர். 1934-ல் மேட்டூர் அணை கட்டப்பட்டு முறையாக பாசன பகுதிகளுக்கு தண்ணீர் விட தொடங்கியதில் இருந்து ஜூன் 12-ம் தேதி 15 முறைதான் திறக்கப்பட்டதாக பொதுப்பணித்துறை பதிவுகள் தெரிவிக்கின்றன. ஜூன் 12-க்கு முன்னராக 11 முறை திறக்கப்பட்டதாக பொதுப்பணித்துறை பதிவுகள் தெரிவிக்கின்றன.

    பொதுப்பணித்துறை பதிவுகள் இப்படி இருந்த போதிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் விளைவாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பின்னர் ஜூன் 1-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிப்பு முறையாக அரசிதழில் வெளியிடப்பட்டது.

    இந்த நடவடிக்கைகளால் காவிரி பாசன விவசாயிகள் மத்தியில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

    குட்டை போல் காட்சி அளிக்கும் மேட்டூர் அணை

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டால் அணைகளை இந்த ஆணையம் தன் வசம் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீர் பெற்றுத் தரும் என்று விவசாயிகள் நம்பினார்கள். தற்போதய சூழலில் மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு வெறும் 38 அடியாக உள்ளது. கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பு நிலை குறித்து தெளிவான தகவல்கள் ஏதும் இல்லை. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாக தகவல்கள் வந்து கொண்டுள்ளன. தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலையாளர்கள் தெரிவித்தனர்.

    தென்மேற்கு பருவ மழையால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி தலைப்பில் மழை பெய்து கர்நாடகாவின் அணைகளை தாண்டி இன்னமும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வந்து சேரவில்லை.

    காவிரி பாசன பகுதிகளில் இந்த ஆண்டும் தொடர்ந்து 7-வது ஆண்டாக குறுவை சாகுபடி செய்ய இயலாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

    குறுவை சாகுபடி இல்லாததால் விவசாயிகள் மட்டும் அல்லாமவ் விவசாய தொழிலாளர்களும் வேலை இல்லாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். காவிரி ஆணையம் வந்துவிட்டது. விடிவு காலம் பிறந்துவிட்டது என்று எண்ணிய விவசாயிகள் மீண்டும் இயற்கையிடம் சரண் அடைவதை தவிர வேறு வழியில்லை என்று கூறுகின்றனர்.

    மழை பெய்தால் மட்டுமே மேட்டூர் அணை நிரம்பி காவிரி பாசன விவசாயம் வசப்படும். இனி வருண பகவான் கருணை இருந்தால் மட்டுமே பிழைக்கலாம் என்று கருதுகின்றனர். #metturdam #deltafarmers

    ×