search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஸ்பெண்ட்"

    நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #RadhaRavi #MKStalin #DMK
    சென்னை:

    கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசும்போது, நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



    இதனையடுத்து அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டார். அவர் தனது அறிக்கையில், நடிகர் ராதாரவி கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக கூறியிருந்தார்.

    இந்நிலையில், நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார். #RadhaRavi #MKStalin #DMK
    ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆயிரத்து 111 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. #JactoGeo
    சென்னை:

    பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தில் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மறியலில் ஈடுபட்டவர்கள், வேலைக்கு செல்பவர்களை தடுத்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இவர்கள் மீது துறைரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதற்கிடையே, ஜாக்டோ-ஜியோ போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. முதல்வரின் கனிவான வேண்டுகோளை ஏற்றும், மாணவர்களின் நலன் கருதியும் எந்தவிதமான தொடர் போராட்டத்திலும் ஈடுபடப் போவதில்லை. மேலும், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என்று சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆயிரத்து 111 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. #JactoGeo
    நாளை பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுத்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. #JactoGeo #Teachers #SchoolEducation
    சென்னை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. 

    6-வது நாளாக தொடரும் போராட்டத்தால் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு  உள்ளனர்.

    தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையிலுள்ள 400க்கு மேற்பட்ட ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

    இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், நாளை பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுத்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விடுத்துள்ள அறிக்கையில், பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுப்பவர்கள் மீது காவல் துறையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் புகார் அளிக்க வேண்டும். ஆசிரியர்களிடம் இருந்து புகார்கள் வந்தால் காவல் நிலையத்தில் பதிவுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. #JactoGeo #Teachers #SchoolEducation
    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. #JactoGeo #Teachers #SchoolEducation
    சென்னை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. 

    இந்த போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்தது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே, தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் உள்ள 400க்கு மேற்பட்ட ஆசிரியர்களை சஸ்பெண்ட செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.



    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை விடுத்துள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். நாளைக்குள் பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை இருக்காது.

    அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் பணியை தொடரலாம். அப்படி வர தவறினால் புதிய இடத்தில் பணியமர்த்தப்படுவார்கள். ஜனவரி 28ம் தேதிக்கு பிறகு தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #JactoGeo #Teachers #SchoolEducation
    பல்வேறு மாவட்டங்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் உள்ள ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. #TNGovt #JactoGeo
    சென்னை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. 

    இந்த போராட்டம் இன்று 5-வது நாளாக நீடித்தது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் உள்ள 14 ஆசிரியர்கள் உட்பட 15 பேரை சஸ்பெண்ட செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதேபோல், திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்ட 6 ஆசிரியர்களும், நாமக்கல் மாவட்டத்தில் 57 ஆசிரியர்களும், விருதுநகரில் 22 ஆசிரியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். #TNGovt #JactoGeo
    சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரம் தொடர்பாக ரத்த வங்கி ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். #HIV #HIVBlood
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 24 வயதுடைய மனைவி 2-வது முறையாக கர்ப்பமானார். இவர் சாத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் கர்ப்பிணியை சோதனை செய்தபோது அவருக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு ரத்தம் ஏற்றவேண்டும் என்று அறிவுறுத்தினர்.

    2 வாரங்களுக்கு முன்பு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கியில் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது. ரத்தம் ஏற்றிய நாளில் இருந்து அவர் சோர்வாகவே காணப்பட்டார். குடும்பத்தினரும் இதனை கண்டு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த பெண் அதே தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது.



    இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு நடைபெற்ற சோதனையிலும் எச்.ஐ.வி. உறுதி செய்யப்பட்டது.

    கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததே இதற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து விருதுநகர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மனோகரன், துணை இயக்குநர் பழனிச்சாமி ஆகியோர் சம்பந்தப்பட்ட ரத்த வங்கி பொறுப்பாளர்களிடம் விசாரணை நடத்தினர். 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் ரத்த வங்கி ஊழியர் வளர்மதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  #HIV #HIVBlood
    விசாரணை நடத்திய அதிகாரிகளை மிரட்டுவதற்காக மது குடித்து விட்டு வி‌ஷம் குடித்ததாக போலீஸ் ஏட்டு நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 40). இவர் தலைவாசல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி புரிந்து வருகிறார்.

    இந்தநிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி வெள்ளையனும் ஓய்வில்லாமல் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த வெள்ளையன், இன்ஸ்பெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் தகராறில் ஈடுபட்டார். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. விசாரித்து அறிக்கை தரும்படி எஸ்.பி. அலுவலகத்தில் கூறியதால் விசாரணைக்கு ஆஜராகும் படி இன்ஸ்பெக்டர் கூறினார்.

    இதனால் நேற்று காலை போலீஸ் நிலையத்திற்கு வந்த வெள்ளையனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பாதியில் வெளியேறிய அவர் மீண்டும் மாலையில் போலீஸ் நிலையத்திற்கு குடிபோதையில் தள்ளாடியபடி வந்தார்.

    அப்போது வி‌ஷம் குடித்து விட்டதாக கூறிய அவர் திடீரென தரையில் விழுந்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சையை ஏற்க மறுத்ததால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அதிக அளவில் வெள்ளையன் மது குடித்திருந்ததும் வி‌ஷம் குடித்ததாக நாடகமாடியதும் தெரிய வந்தது.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அதிகாரிகளை மிரட்ட வெள்ளையன் வி‌ஷம் குடித்ததாக கூறியது தெரிய வந்தது. இதையடுத்து குடி போதையில் இருந்த அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே சங்ககிரி போலீஸ் நிலையத்தில் பணி புரிந்த போது உயர் அதிகாரிகளுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால் 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தலைவாசல் போலீஸ் நிலையத்திற்கு வெள்ளையன் மாற்றப்பட்டார். தற்போதும் அங்கும் அவர் உயர் அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டதால் சஸ்பெண்டு செய்யப்படுவார் என கூறப்படுகிறது. #tamilnews
    ஊழல் வழக்கில் சிக்கியுள்ள சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். #CBIDSP #DevenderKumar #CBIcustody #DevenderKumarsauspended
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
     
    இந்த வழக்கில் தொடர்புடைய சி.பி.ஐ. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் நேற்று கைது செய்யப்பட்டார். ராகேஷ் அஸ்தானா மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தேவேந்திர குமார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தன்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கூடாது என சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இன்று டெல்லி நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவின் மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி, இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மாவின் முடிவு என்ன? என்பது தெளிவாகும் வரை ராகேஷ் அஸ்தானா மீதான குற்றச்சாட்டின் பேரில் மேல்நடவடிக்கை எடுக்க தடை விதித்து, மறுவிசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    நேற்று கைதான தேவேந்திர குமார் வீட்டில் நடைபெற்ற சோதனையில் பிரபல மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர் மொயீன் குரைஷி என்பவர் தொடர்பான வழக்கை விசாரித்த அதிகாரியாவார்.

    இன்னொரு தொழிலதிபரான சத்தீஷ் சனா என்பவர் மீதான வழக்கு விசாரணையை நீர்த்துப்போகச் செய்வதற்காக தேவேந்திர குமார் உள்ளிட்டவர்கள் முயற்சித்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

    தேவேந்திர குமாரை இன்று பிற்பகல் கோர்ட்டில் ஆஜர்படுத்திய அதிகாரிகள் அவரிடம் மேற்கொண்டு விசாரிக்க வேண்டியுள்ளதால் விசாரணை காவலில் ஒப்படைக்குமாறு நீதிபதியை கேட்டுக் கொண்டனர். அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், அலுவலக நடைமுறைகளின்படி தேவேந்திர குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக சி.பி.ஐ. தலைமையகம் இன்று மாலை அறிவித்துள்ளது. #CBIDSP #DevenderKumar #CBIcustody #DevenderKumarsauspended
    கோவை அரசு கலை கல்லூரியில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த நாள் நிகழ்ச்சி நடத்தியதற்காக கல்லூரியில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். #Malathi #BhagatSingh
    கோவை:

    கோவை அரசு கலை கல்லூரியில் எம்.ஏ. வரலாறு பிரிவில் முதலாமாண்டு படித்து வருபவர் மாணவி மாலதி.

    இவர் கடந்த 28-ந் தேதி சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த நாள் நிகழ்ச்சி நடத்தியதற்காக கல்லூரியில் இருந்து ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளார்.

    பகத்சிங் பற்றி கல்லூரியில் அனைத்து பிரிவு மாணவ, மாணவிகளும் தெரிந்து கொள்ளும் வகையில் பிறந்த நாள் நிகழ்ச்சி நடத்துவதற்கு, கல்லூரி முதல்வரிடம் அனுமதி கேட்டேன். அதற்கு மறுப்பு தெரிவித்த முதல்வர் துறை தலைவர் அனுமதி பெற்று எனது துறையில் மட்டும் நடத்துமாறு கூறினார்.

    துறை தலைவர் விடுமுறையில் இருந்ததால் வகுப்பாசிரியரிடம் அனுமதி கேட்ட போது அவர் மறுத்துவிட்டு, இனிப்பு மட்டும் வழங்கி கொள் என கூறினார். பகத்சிங் பற்றி அனைத்து பிரிவு மாணவ, மாணவிகளுக்கும் தெரிய வேண்டும் என கருதி நான் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை திரட்டி நிகழ்ச்சி நடத்தினேன்.

    இதற்காக 1-ந் தேதி நான் சஸ்பெண்டு செய்யப்பட்டதாக ஆசிரியர் கூறினார். ஆனால் முறைப்படி எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. சஸ்பெண்ட் கடிதமும் தரவில்லை. இதுகுறித்து கேட்ட போது எனது வீட்டு முகவரிக்கு சஸ்பெண்டு உத்தரவு அனுப்பியிருப்பதாக கூறினார்கள். ஆனால் அதுவும் வரவில்லை.

    இதனால் 9-ந் தேதி நான் வகுப்புக்கு சென்றேன். அப்போது நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக கூறி முதல்வர் அலுவலகத்தில் இருந்து சஸ்பெண்ட் உத்தரவு நகலை எடுத்து வந்து காட்டினர்.

    அந்த உத்தரவில் 1-ந் தேதியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கை பெறும் வரை இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.

    நான் பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தில் பொறுப்பில் உள்ளேன். நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்தற்கான காரணம் இதுவரை எனக்கு முறைப்படி தெரிவிக்கவில்லை. விசாரணை குறித்தும் இதுவரை எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அதோடு உத்தரவு நகலை ரேஸ்கோர்ஸ் போலீசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இது தவறானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவி மாலதி மீதான நடவடிக்கை குறித்து கல்லூரி முதல்வர் சித்ரா கூறியதாவது:-

    கல்லூரியில் தனிப்பட்ட மாணவி கூறியதற்காக அனைத்து பிரிவு மாணவர்களையும் அழைத்து நிகழ்ச்சி நடத்த முடியாது. அவ்வாறு செய்தால் ஒவ்வொரு பிரிவிலும் யாராவது நிகழ்ச்சி நடத்த வேண்டும் என கேட்பார்கள். எனவே தான் துறை தலைவர் அனுமதி பெற்று அந்த துறையில் மட்டும் நடத்துமாறு கூறினேன்.

    ஆனால் மாலதி அனுமதி பெறாமலேயே பிற மாணவ, மாணவிகளை அழைத்து கூட்டம் கூட்டி, பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளார். இதனாலேயே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    வருகிற 22-ந் தேதி ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடைபெற உள்ளது. அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சஸ்பெண்ட் உத்தரவு நகல் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறைதான்.

    இவ்வாறு அவர் கூறினார். #Malathi #BhagatSingh
    மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு கூடுதல் மார்க் வழங்கியது தொடர்பாக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். #AnnaUniversity
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் அனைத்துப் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

    கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதம் நடந்த செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் கூடுதல் மார்க் பெற லஞ்சம் கொடுத்துள்ளதாக புகார் எழுந்தது.

    மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் ரூ.10 ஆயிரம் பெற்று அவர்களுக்கு கூடுதல் மார்க் வழங்கியதாக, அப்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும் தற்போதைய ஐடி துறை பேராசிரியையுமான உமா மற்றும் மண்டல அதிகாரிகள் விஜயகுமார், சிவகுமார் மற்றும் விடைத்தாள் திருத்திய 7 ஆசிரியர்கள் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



    இந்நிலையில், லஞ்சம் பெற்றுக் கொண்டு கூடுதல் மார்க் வழங்கிய விவகாரம் தொடர்பாக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    அண்ணா பல்கலைக்கழகம் விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபணமானதால் அவரை இடைநீக்கம் செய்து அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா நடவடிக்கை எடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழகம் விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபணம் ஆகியுள்ளது. அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். #AnnaUniversity
    ×