search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிளி"

    நெல்லையில் வளர்த்த கிளியை பறக்க விட்டதால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள கண்டியப்பேரி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன்கள் ராஜகுரு (வயது24), விஜயகுமார் (22). இவர்கள் இருவரும் நெல்லையில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். 

    ராஜகுரு ஓய்வு நேரங்களில் பொழுது போக்கிற்காக ஒரு கிளி வளர்த்து வந்தார். இதற்கு அவரது தம்பி விஜயகுமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கிளியை அடைத்து வைக்க கூடாது என்றும் பறக்க விடுமாறும் அண்ணனிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார்.
    இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுரு வேலைக்கு சென்ற போது வீட்டில் இருந்த அவரது தம்பி விஜயகுமார் கிளியை கூண்டில் இருந்து பறக்க விட்டார். வீடு திரும்பிய ராஜகுருவுக்கு கிளி இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் தனது தந்தையிடம் புகார் கூறினார். அவர் இதை கண்டு கொள்ளவில்லை.

    இதனால் மனமுடைந்த ராஜகுரு தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்த பெற்றோரும், உறவினர்களும் கதறி துடித்தனர். இது தொடர்பாக பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவையில் வளர்த்தவர் ‘போ’ என்று கூறியதால் அம்மனிடம் தஞ்சம் அடைந்த ‘கிளி’ 2 நாட்களுக்கு பின் பறந்து சென்றது.
    கோவை:

    கோவை பாப்பநாயக்கன் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 40). பிட்டர். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    முருகேசன் தனது வீட்டில் 1 வருடமாக ஸ்ரீ என்ற பச்சை கிளியை வளர்த்து வந்தார். இந்த கிளியை முருகேசனின் மகனின் நண்பர் பரிசளித்து இருந்தார். வீட்டில் உள்ள அனைவரிடமும் பாசமாக பழகும் இந்த கிளி முருகேசனின் மனைவி விஜயலட்சுமியை பப்பு என்று அழைக்கும்.

    பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருகேசன், அவரது மனைவி, மகன்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது வீட்டின் மேல் பகுதிக்கு சென்று கிளி அமர்ந்து கொண்டது. கிளியை முருகேசனின் மகன் மிரட்டும் வகையில் போ என்று கூறி உள்ளார். இதில் கோபம் அடைந்த கிளி பறந்து சென்றது. நீண்ட நேரம் ஆகியும் கிளி வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் கிளியை முருகேசன் அக்கம் பக்கத்தில் தேடினார்.

    அப்போது கிளி அந்த பகுதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் இருப்பது தெரிய வந்தது.

    அங்கு சென்று முருகேசன் பார்த்தபோது கிளி கோவிலில் உள்ள அம்மன் சிலையின் வலது தோளில் அமர்ந்து இருந்தது. கிளியை முருகேசன் ஸ்ரீ வா வா என்று பல முறை அழைத்தார். ஆனால் கிளி வரவில்லை. மேலும் கடந்த 2 நாட்களாக கிளி அம்மன் சிலையை விட்டு கீழே இறங்கவில்லை.

    இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் வேகமாக பரவியது. கிளியை பார்க்க அங்கு ஏராளமானோர் திரண்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மனின் வலது கையில் கிளி அமர்ந்து இருப்பது போல இந்த கிளியும் அமர்ந்து இருந்ததால் பொதுமக்கள் கிளியை அதிசயத்துடன் பார்த்து சென்றனர்.

    இது குறித்து கிளியின் உரிமையாளர் முருகேசன் கூறும்போது

    ஸ்ரீ எப்போதும் வீட்டை விட்டு வெளியே செல்லாது. மிளகாய் பழம், கொய்யா பழம் ஆகியவற்றை விரும்பி சாப்பிடும். பேசும், கோபம் வந்தால் யாரிடமும் பேசாமல் இருக்கும். என் மகன் போ என்று கோபமாக கூறியதால் கோபித்துக்கொண்டு பறந்து சென்ற கிளி அம்மன் மேல் அமர்ந்துள்ளது. எவ்வளவு அழைத்தும் வரவில்லை. எனவே கிளியை அம்மனுக்கே காணிக்கையாக வழங்குகிறேன் என்றார்.

    கடந்த 2 நாட்களாக அம்மன் சிலையின் மீது அமர்ந்து இருந்த கிளி இன்று காலை பறந்து சென்றது.

    ஆரணி கோவில் உற்சவத்தில் மீனாட்சியம்மன் கையில் அமர்ந்து கிளி அருள்பாலித்த காட்சி பக்தர்களை பரவசமடைய செய்தது. #MeenakshiAmman

    ஆரணி:

    ஆரணியில் அரியாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரி விழா விமரிசையாக நடந்து வருகிறது. 5-ம் நாள் விழாவான நேற்று இரவு அரியாத்தம்மன் உற்சவர் சிலை மதுரை மீனாட்சியம்மனை போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    அப்போது, அம்மனின் வலது கையில் உள்ள பழத்தின் மேல் உண்மையான பச்சைக்கிளி திடீரென வந்து உட்கார்ந்து அருள்பாலித்தது. கிளி பழத்தை கொத்தி கொத்தி கொத்தி சாப்பிட்டு சத்தமிட்டது.


    பக்தர்கள் அம்மன் கையில் அமர்ந்த கிளியை பார்த்து பரவசமடைந்தனர். இதையடுத்து, மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பூஜையின்போது மீனாட்சியம்மன் முகத்தில் கிளி கொஞ்சி விளையாடியது. அருள்பாலித்த கிளியை ரசித்த பக்தர்கள் மெய் மறந்து மீனாட்சியம்மனை வழிபட்டனர். #MeenakshiAmman

    ×