search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாளை"

    பாளை அருகே கல்லூரி மாணவர் கொலையில் சந்தேகப்படும்படியாக உள்ள 19 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    பாளையங்கோட்டை அருகே உள்ள முன்னீர்பள்ளம் மருதம் நகரை சேர்ந்தவர் உஜயகுமார். இவர் முக்கூடலில் உள்ள இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராஜா (வயது19). இவர் அந்த பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கல்லூரி முடிந்து மாணவர் ராஜா, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

    முன்னீர்பள்ளம் சிவன் கோவில் அருகே வந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா, மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு, கால்வாய் கரை வழியாக தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜா ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த ராஜாவின் உறவினர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து ராஜாவின் உடலை சுற்றி அமர்ந்து கதறி துடித்தனர். சம்பவ இடத்துக்கு முன்னீர்பள்ளம் போலீசார் விரைந்து வந்து கொலையான ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றனர்.

    ஆனால் பொதுமக்கள் ராஜாவின் உடலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தினர். அவரது உடலை ஏற்ற வந்த ஆம்புலன்ஸ் வேனையும் முற்றுகையிட்டு சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் முன்னீர்பள்ளம் மெயின் ரோட்டுக்கு திரண்டு வந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. பஸ்கள் மற்றும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

    உடனடியாக சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார், சேரன்மகாதேவி உதவி சூப்பிரண்டு ஆசிஸ் ராவத் மற்றும் உயர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கற்களை எடுத்து வீசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டத்தை தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் கழித்து கொலை செய்யப்பட்ட மாணவர் ராஜா உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனை செய்ய நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். பொதுமக்களும் மறியல் போராட்டத்தை கைவிட்டதால், போக்குவரத்து சீரானது.

    கொலையாளிகளை கைது செய்ய முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது கொலைக்கான காரணம் குறித்து ‘திடுக்’ தகவல்கள் கிடைத்தன. அதன் விபரம் வருமாறு:-

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட ராஜாவின் உறவினர் இயற்கை மரணம் அடைந்தார். அவரது உடலை இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லும்போது, ராஜாவும் அவரது நண்பர்களும் பூக்களை வீதியில் வீசி சென்றனர்.

    அப்போது மாற்று சமுதாயத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் பூ விழுந்துள்ளது. அந்த பூக்களை வேண்டும் என்றே வீசியதாக 2 தரப்பினரும் வாய் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ராஜாவுக்கும், சிலருக்கும் தகராறு ஏற்பட்டது.

    உடனடியாக இருதரப்பு பெரியவர்களும் பேசி சமரசம் செய்து வைத்தனர். இந்த பிரச்சினை காரணமாக ராஜாவை, மற்றொரு தரப்பினர் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார், கொலையில் ஈடுபட்டது யார்? யார்? என்று அந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகப்படும்படியாக உள்ள 19 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் கொலையில் ஈடுபட்டது யார்? யார்? என்றும், அவர்கள் எங்கு தலைமறைவாக உள்ளனர் என்றும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்றும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ராஜாவின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், அந்த பகுதி பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    அவர்களுக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், கட்சி நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்து நெல்லை அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட ராஜாவின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இந்த பிரச்சினை காரணமாக முன்னீர்பள்ளம் பகுதியில் இன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



    பாளை அருகே இன்று காலை சுற்றுலா வேன் மீது லாரி மோதி 19 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    குமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்த 24 பேர்கள் ஒரு வேனில் அன்னை வேளாங்கன்னி கோவிலுக்கு சென்று விட்டு ஊர்திரும்பினர். இன்று அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் வந்த வேன் பாளை ரெட்டியார்பட்டி 4 வழிச்சாலையில் வந்தது.

    அப்போது வேனில் வந்தவர்கள் சிறுநீர் கழிப்பதற்காக வேனை ஓரமாக நிறுத்தினார்கள்.

    அப்போது வேனுக்கு பின்னால் வேகமாக வந்த லாரி வேன் மீது மோதியது. இதில் வேனில் இருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து வெளியே தூக்கி வீசப்பட்டனர். வேனின் பின்பகுதி நொறுங்கியது.

    இந்த விபத்தில் வேன் டிரைவர் ஈச்சங்காடு நாராயணன் (50), முட்டத்தைச் சேர்ந்த ஜெரால்ட் (49), அவரது மனைவி மேஜிரூபா (40), அம்மா தங்கம் (55), ரீகன் (35), சஸ்ரோஸ் (53) உள்பட 19 பேர் காயம் அடைந்தனர். அவர்களை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்னபாஸ், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாளையில் இன்று ரெயில் மோதி ஆசிரியர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    பாளை பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது48). இவர் திருக்குறுங்குடியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுபாஷினி (40), ஆலங்குளம் அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு வர்ஷினி (15) என்ற 10-ம் வகுப்பு படிக்கும் மகளும், விக்னேஷ் (12) என்ற 7-ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். ஆசிரியர் முருகன் தினமும் காலை ‘அரை டவுசர், டீசர்ட்’ அணிந்து வாக்கிங் செல்வார்.அதுபோல் இன்று பெருமாள்புரத்தில் இருந்து ரெயில்வே பீடர் ரோடு வழியாக மகாராஜநகர் வரை ‘வாக்கிங்’ சென்றார்.

    பின்பு அவர் அன்புநகர் மகாராஜநகர் இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து மறுபுறம் செல்ல முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திருச்செந்தூர் சென்ற ‘செந்தூர் எக்ஸ்பிரஸ்’ ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆசிரியர் முருகன் மீது மோதியது. இதில் முருகன் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். ரெயில் என்ஜின் டிரைவர் இதை கவனித்து உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

    சம்பவ இடத்துக்கு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீலியஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    முருகன் உடல் வைக்கப்பட்டுள்ள நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த அவரது மனைவி சுபாஷினி மற்றும் குழந்தைகள், உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விபத்து காரணமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் ½ மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. அதுவரை தியாக ராஜ நகர் ரெயில்வே கேட் திறக்கப்படாததால் ஏராளமான வாகன ஓட்டிகளும் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

    பாளை அருகே குடும்ப தகராறு காரணமாக தீக்குளித்த கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள திருவேங்கடநாதபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் சங்கரன் (வயது38). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரத்தினம் (32). இவர்களுக்கு அதிசயா (9), சுபஸ்ரீ (6) என்ற இரு மகள்கள் உள்ளனர்.

    சங்கரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்தார். நேற்று அவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். மதுபோதையில் இருந்த அவர் மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் கணவன் -மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த சங்கரன் திடீரென அங்கிருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. உடனே மனைவி ரத்தினம் அவரை காப்பாற்ற முயன்றார். இந்த சம்பவத்தில் இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் சங்கரன் பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த ரத்தினத்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் ரத்தினம் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன்-மனைவி தீயில் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    பாளை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நெல்லை:

    பாளையை அடுத்த தியாகராஜநகர் அருகேயுள்ள டி.வி.எஸ்.நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியாக உள்ளார். இவரது மனைவி அந்தோணியம்மாள்(வயது 79). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

    அவர்களில் ஒரு மகன் பால்பிரான்சிஸ் அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக உள்ளார். இவர் பாளை கே.டி.சி.நகரில் வசித்து வருகிறார். ஞானப்பிரகாசமும், அந்தோணியம்மாளும் டி.வி.எஸ்.நகரில் வசித்து வந்தனர். நேற்று இரவு ஞானப்பிரகாசம் பணிக்கு சென்றுவிட்டார். அந்தோணியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது மகன் பால் பிரான்சிஸ் தனது தாய்க்கு போன் செய்தார். வெகுநேரம் போன் அடித்தும் போனை எடுக்கவில்லையாம். இதனால் சந்தேகம் அடைந்த பால் பிரான்சிஸ் வீட்டுக்கு வந்து பார்த்தார். அங்கு அந்தோணியம்மாள் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி பெருமாள்புரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) தில்லைநாகராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தோணியம்மாளை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவத்தின்போது அந்தோணியம்மாள் கழுத்தில் கிடந்த நகைகள் கொள்ளை போகவில்லை. இதனால் நகைக்காக கொலை நடக்கவில்லை என போலீசார் உறுதி செய்தனர். நிலத்தகராறு அல்லது வேறு பிரச்சினைகளில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடக்கிறது. கொலை பற்றி விசாரணை நடத்தவும், கொலையாளிகளை பிடிக்கவும் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் பாளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×