search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 125869"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுவுக்கு அடிமை, மாதுவுக்கு அடிமை, புகைக்கு அடிமை, சூதாட்டத்துக்கு அடிமை என்று நாம் இதுவரை பார்த்து வந்த அடிமைகளுடன் நவீன இணையதள அடிமையும் இணைந்து வருகிறது.
    • அடிமையாகாமல் மாற வேண்டியதும், மாற்ற வேண்டியதும் நம் கைகளில்தான் உள்ளது.

    சென்னை:

    செல்.... செல்...

    என்று செல்பவர்களே ஒரு நிமிடம் நில்லுங்கள்...

    பொதுவாக ஆஸ்பத்திரிகளில் இதயவியல், சிறுநீரகவியல், நரம்பியல் துறை, முட நீக்கியல், பல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண், தோல் என்று பலவகையான நோய் சார்ந்த துறைகளை பார்த்து இருப்போம்.

    ஆனால் இங்கு மட்டும் இணையதள சார்பு மீட்பு மையம் என்று ஒருதுறை தனியாக செயல்படுகிறது. இங்கு சிகிச்சை அளிக்க தனியாக மருத்துவர்களும் இருக்கிறார்கள்.

    இணையதள சார்பு என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. சுருக்கமாக சொன்னால் வாழ்க்கையே இணையத்தோடு இணைந்து விட்டது. அதிலும் இவ்வளவு ஆபத்து இருக்கிறது என்பது இங்கு சென்று பார்த்ததும் அதிர்ச்சி அளிக்கிறது.

    சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி இருக்கைகளில் அமர்ந்து இருந்த இளம்பெண்களை பார்த்ததும் பார்ப்பதற்கு லட்சுமிகரமாக நன்றாகத்தான் இருந்தார்கள்.

    ஆனால் ஒவ்வொருவரிடமும் கேட்ட போதுதான் இன்றைய தலைமுறை எவ்வளவு பெரிய ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறது என்பதை புரிய முடிந்தது.

    தயவுசெய்து பெயர்களை வெளியிடாதீர்கள். எங்களால் நாலுபேர் திருந்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் சொல்கிறோம் என்றார்கள். இதனால் அவர்கள் பெயர் விபரம் வெளியிடப்படவில்லை.

    ஒருவர் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர், நர்சிங் படித்து வருகிறார். அவர் கூறியதாவது:-

    படிப்பதற்கு, செல்போன் உதவிகரமாக இருக்கும் என்றுதான் ஆசைப்பட்டு வாங்கினேன். ஏதோ அவசர தேவைகளுக்கும், தேடலுக்கும் மட்டுமே என்றிருந்த நிலை மாறி விட்டது. தோழிகள், நண்பர்கள் மெசேஜ் அனுப்ப தொடங்கினார்கள்.

    அதன்பிறகு சாட்டிங், அப்புறம் முகநூல், இன்ஸ்டாகிராம் என்று இணையத்தின் இனிமையான பக்கங்கள் ஒவ்வொன்றும் என்னை கவர்ந்தன.

    மெல்ல மெல்ல இணையத்தோடு இணைந்து பொழுதெல்லாம் இணையத்தின் வசமானேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

    செல்லும் கையுமாகத்தான் எப்போதும் இருப்பேன். வீட்டில் திட்டத்தான் செய்தார்கள். ஆனாலும் எப்போதும் செல்போனைத்தான் நோண்டி கொண்டிருப்பேன்.

    குறைந்தபட்சம் தினமும் 12 மணி நேரம் செல்போன் பார்த்தேன். பார்க்கும் போது ஜாலியாகத்தான் தெரிந்தது.

    ஒரு கட்டத்தில் எதற்கெடுத்தாலும், கோபம், எரிச்சல் வந்தது. யாரை பார்த்தாலும், எதற்கெடுத்தாலும் கோபம்... கோபம்... எதற்குதான் இப்படி கோபம் வருகிறது என்று எனக்கே தெரியவில்லை. அதன்பிறகுதான் சிகிச்சை பெற வந்தேன் என்றார்.

    மற்றொரு இளம்பெண் கல்லூரி மாணவி கூறும்போது, "நான் கொஞ்சம் கொஞ்சமாக செல்லுக்கே அடிமையாகி விட்டேன் என்பது எனக்கே புரியவந்தது.

    எப்போது செல்போனில் அதிகமாக மூழ்க தொடங்கினேனோ அதன் பிறகு எனது படிப்பும் மூழ்க தொடங்கியது. அரியர் விழ தொடங்கியது. கேரியர் கேள்விக்குறியானது.

    செல்போனால் சீரழிகிறோம் என்பது தெரிந்தும் அதில் இருந்து மீள முடியாமல் தவித்தேன். அதன்பிறகுதான் இந்த மையத்தை நாடி வந்தேன் என்றார்.

    இந்த மருத்துவ மையத்தை சேர்ந்த டாக்டர் மலர் மோசஸ் கூறியதாவது:-

    இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட் அவசியமான தீமையாகவே இருக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் வகுப்பு, குடும்ப உறுப்பினர்களிடம் கூட ஆன்லைன் உரையாடல் என்று எல்லாமும் இணையத்தை சுற்றியே சுழல்கிறது. இயற்கையான மனித சுபாவங்கள், உணர்வுகள், மகிழ்ச்சி எல்லாமே மழுங்கடிக்கப்படுகிறது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இணையத்தின் அடிமையாகிவிட்டால் தங்கள் சமூக வாழ்க்கை, கல்வி, தொழில், தூக்கம் எல்லாவற்றையும் துறந்து செல்போனிலேயே நேரத்தை செலவிடுகிறார்கள். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியம் சீர்குலைந்து உடல் பருமன் என்று பல நோய்களுக்கு ஆளாகி விடுகின்றனர். அவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை கொடுப்போம்.

    ரிலாக்ஸ் தெரபி, குரூப் தெரபி ஆகியவற்றை கொடுப்போம். குரூப் தெரபி என்பது ஏற்கனவே சிகிச்சை பெற்று மீண்டவர்கள் மூலம் அவர்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வைப்போம். இதன் மூலம் அவர்களுக்கும் நம்பிக்கை பிறக்கும்.

    யோகா பயிற்சி உண்டு. தேவைப்பட்டால் மட்டும் மருந்து வழங்குவோம்.

    சமூகத்தில் ஏற்பட்டுள்ள இந்த நவீன மாற்றங்கள் வளரும் தலைமுறைக்கு ஏமாற்றங்களை தருவதாகவும் மாறி இருப்பது ஆரம்பத்திலேயே தடுக்கப்பட வேண்டியது. சரியான நேரத்தில் திட்டமிட்டு இந்த மையம் உருவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருப்பதால், அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்வர் டாக்டர் ஜெயந்தி ஆகியோரது வழிகாட்டுதல்படி இந்த மையம் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்றார்.

    மதுவுக்கு அடிமை, மாதுவுக்கு அடிமை, புகைக்கு அடிமை, சூதாட்டத்துக்கு அடிமை என்று நாம் இதுவரை பார்த்து வந்த அடிமைகளுடன் இந்த நவீன இணையதள அடிமையும் இணைந்து வருகிறது.

    அடிமையாகாமல் மாற வேண்டியதும், மாற்ற வேண்டியதும் நம் கைகளில்தான் உள்ளது.

    • சின்னத்துரை தூத்துக்குடியில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
    • டேனியல்ராஜ்,ராஜேஷ், தினேஷ் ஆகியோர் செல்போனை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி நடராஜபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது53). தூத்துக்குடியில் சமையல் தொழி லாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று மாலை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவரது பேத்தியை சிகிச்சைக்காக அனுமதித்து விட்டு, அருகில் இருந்த ராஜாஜி பூங்காவில் சின்னத்துரையும், அவரது மனைவி ஜெயலட்சுமியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். உடனடியாக சின்னத் துரை தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.இதில் திரேஸ்புரத்தை சேர்ந்த டேனியல்ராஜ் (22), டேவிஸ் புரத்தை சேர்ந்த ராஜேஷ், தினேஷ் ஆகியோர் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து டேனியல் ராஜை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட டேனியல்ராஜ் மீது தருவைகுளம், தாளமுத்துநகர், வட பாகம் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    • இவர் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
    • அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் இளங்கோவன் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி மறைந்தனர்.

    சேலம்:

    சேலம் சின்ன திருப்பதி சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 54). இவர் கன்னங்கு றிச்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி யாற்றி வருகிறார். இவர் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் இளங்கோவன் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி மறைந்தனர்.

    இதுகுறித்து தலைமை காவலர் இளங்கோவன் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்கு பதிவு செய்து வழிப்பறிக் கொள்ளை யர்களை வலைவீசி தேடி வருகின்றார்.

    • பாலசுப்பிரமணியம் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார்.
    • தர்ம அடி கொடுத்து அவினாசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    அவினாசி :

    திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 55). இவர் அவினாசி கோவை புறவழிச்சாலை தேவராயம்பாளையம் பிரிவு அருகே தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போனை பறித்து கொண்டனர். அப்போது பாலசுப்பிரமணியன் திருடன், திருடன் என்று சத்தம் போட்டார் .அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து அந்த நபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்து அவினாசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் மதுரை திருவிடாகம் பகுதியை சேர்ந்த அருண்பாண்டியன்(20), திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த ராமன் என்பதும் தெரியவந்தது.

    அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து விலை உயர்ந்த செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • நடந்து செல்வோரை குறிவைத்து செல்போன் பறித்துச்செல்கின்றனர்.
    • அண்ணாநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக நடந்து செல்வோரை குறிவைத்து செல்போன்கள் பறித்துச் செல்லும் சம்பவம் அதிகரித்து வருகின்றன. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வரும் கும்பல் நடந்து செல்வோரை தாக்கி செல்போனை பறித்துச் செல்கிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் விளாத்தூரை சேர்ந்தவர் ரகு(28). மதுரை வந்திருந்த இவர், ஆரப்பாளையம் டி.டி.ரோட்டில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ரகுவை வழிமறித்து செல்போனை பறித்துச் சென்றனர்.

    சூர்யாநகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி(47). இவர் கூடல்நகர் ரோட்டில் நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் செல்போனை பறித்துச் சென்றது. இதுதொடர்பாக கரிமேடு, கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை அய்யனார்புரம் மண்டபம் தெருவை சேர்ந்தவர் ராமர்(20). இவர் சம்பவத்தன்று பனையூர் பகுதியில் நடந்த கபடி போட்டியை பார்க்க சென்றார். அப்போது அவரது செல்போன் திருடு போனது. இது தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் செல்போனை திருடியது பனையூர் கீழத்தெருவை சேர்ந்த ராமு(37), சிவகங்கை மாவட்டம் புலியூர் மேலத்தெருவை சேர்ந்த பால்பாண்டி(39) என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

    மதுரை ஆலங்குளம் மங்கள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரோஸ்கான்(47). தனியார் மது பாரில் காவலாளியாக பணிபுரியும் இவர் சம்பவத்தன்று பாரில் உள்ள அறையில் தூங்கினார். அப்போது மர்ம நபர் அவரது செல்போனை திருடிக்கொண்டு தப்பினார். இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கல்லூரி மாணவரின் செல்போனை திருடியதாக கூறப்படுகிறது.
    • பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் விடுமுறையை முன்னிட்டு உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பல்லடத்தில் இருந்து கோவை செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார்.அப்போது அவரின் அருகே இருந்த 2 பேர் கல்லூரி மாணவரின் செல்போனை திருடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கல்லூரி மாணவர் அவர்களை பிடித்து திருடன் திருடன் என சத்தம் போட்டு உள்ளார். பஸ்சில் இருந்தவர்கள் அந்த 2 பேரையும் பிடித்து சரமாரியாக தர்ம அடி கொடுத்துள்ளனர். இதையடுத்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை பல்லடம் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் இருவரும் புதுக்கோட்டையை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் ராம்ஜி(19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும் மற்றொருவரை சிறையிலும் போலீசார் அடைத்தனர்.

    • கடந்த 1973-ம் ஆண்டு இவர் அமெரிக்காவின் தெருவீதியில் நின்றபடி நியூயார்க் நகரில் உள்ளவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
    • இனிவரும் காலங்களில் தனிநபர்களின் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக பதிவு செய்யப்படும், இதனால் சுதந்திரம் பறிபோகும் என்றார்.

    பார்சிலோனா:

    அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி மார்ட்டின் கூப்பர்.

    கடந்த 1973-ம் ஆண்டு இவர் அமெரிக்காவின் தெருவீதியில் நின்றபடி நியூயார்க் நகரில் உள்ளவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.

    இதுதான் முதல் செல்போன் அழைப்பாகும். செங்கல் போன்று காட்சி அளித்த அந்த செல்போன் எதிர்காலத்தில் உலக தகவல் தொடர்பு சாதனமாக மாறி பெரும் புரட்சியை ஏற்படுத்த போகிறது என்பதை மார்ட்டின் கூப்பர் அப்போது அறிந்திருக்கவில்லை.

    செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அரை நூற்றாண்டு காலகட்டத்தில் செங்கல் போன்று காட்சி அளித்த செல்போன் இப்போது கையடக்க கருவியாக மாறி போனது.

    அதுமட்டுமின்றி தகவல் தொடர்பு என்ற எல்லையை தாண்டி அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளும் கலை களஞ்சியமாகவும் மாறிவிட்டது.

    தொலைதொடர்புக்காக மட்டுமே தொடங்கப்பட்ட செல்போன் இன்று உலக தகவல்களையும் அறிந்து கொள்ளும் சாதனமாக மாறிபோனது. அதோடு செல்போன் மூலம் பல தீய செயல்களும் நடக்கிறது.

    ஆபாச படங்களை பிறருக்கு தெரியாமல் பதிவு செய்வது, உரையாடல்களை பதிவு செய்வது, அந்தரங்கங்களை அம்பலத்துக்கு கொண்டு வருவது போன்றவையும் நடக்கிறது.

    செல்போன் கண்டுபிடித்த விஞ்ஞானி மார்ட்டின் கூப்பருக்கு இப்போது 94 வயதாகிறது. செல்போனின் இப்போதைய நிலை குறித்து அவரிடம் கேட்டபோது, செல்போனின் கருப்பு பக்கங்கள் குறித்து இப்போது நான் கவலைப்படுகிறேன். என்றாலும் அதன் அபரிமிதமான வளர்ச்சி எதிர்காலத்திற்கு நல்ல பலனை கொடுக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

    இனிவரும் காலங்களில் தனிநபர்களின் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக பதிவு செய்யப்படும், இதனால் சுதந்திரம் பறிபோகும் என்றார்.

    • கேரளாவை சேர்ந்த பலர் குழந்தைகளுக்கு எதிரான சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தது.
    • தனிப்படையினர் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    மேலும் சமூக வலைதளங்களில் குழந்தைகள் ஆபாச படங்களையும் சிலர் பரப்பி வந்தனர். அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசார் முயற்சி மேற்கொண்டனர்.

    இதில் கேரளாவை சேர்ந்த பலர் குழந்தைகளுக்கு எதிரான சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் குழந்தைகளின் ஆபாச படங்களை இணைய தளத்தில் வெளியிட்டது, அவற்றை பலருக்கும் பகிர்ந்தது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக 142 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    மேலும் இந்த வழக்குகளில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடிவந்தனர். இதற்காக ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை நடைபெற்றது.

    போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட 12 பேர் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர் உள்ளிட்ட எந்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் மெமரி கார்டுகள், செல்போன்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டது.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 233 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
    • மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.35 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் செல்போன்களை கலெக்டர் வழங்கினார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை வகித்து மனுக்களை பெற்றுக் கொண்டார். கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 233 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளி த்தனர்.

    அதனை அவர் பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட துறை அலுவல ர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கண்பார்வை குறைபா டுடைய மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட் செல்போன் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.13,500 வீதம், பத்து மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.35 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் செல்போன்களை கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசந்தர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பல மாவட்ட மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன் பிடிப்பது வழக்கம்.
    • 3 செல்போன்கள், 1 லேப்டாப்பை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரன் இருப்பு கடைவீதியில் உள்ள செல்போன் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இது குறித்த புகாரின் பேரில் வேட்டைக்காரன் இருப்பு போலீசார் வழக்குபதிவு செய்து தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பல மாவட்ட மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன் பிடிப்பது வழக்கம்.

    அப்படி மீன் பிடிக்க வந்த போது, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர் கோட்டை மணி (வயது 49) மற்றும் மணிகண்டன் ஆகியோர் திருடி சென்றது தெரியவந்தது.

    இதில் கோட்டை மணி என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 3 செல்போன்கள், 1 லேப்டாப்பை பறிமுதல் செய்தனர்.

    மேலும் தலைமறைவான மணிகண்டனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • ராஜேசின் கையில் இருந்த செல்போனை 8 பேர் கொண்ட கும்பல் பறித்து கொண்டு தப்பி சென்றது.
    • 8 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெர்மல்நகர் லேபர்காலனியில் ஒரு தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.

    செல்போன் பறிப்பு

    இங்கு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது28). என்பவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ராஜேஷ், சக ஊழியர்களுடன் நிறுவன வளாகத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் திடீரென ராஜேசின் கையில் இருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

    இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர் லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணவேல் (30) என்பவர் தெர்மல்நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் டி.எஸ்.பி. சத்தியராஜ் மேற்பார் வையில் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், தனிப்படை காவலர் செல்வின் ராஜா, நகர உட்கோட்ட காவலர் மாணிக்கராஜா ஆகியோர் அடங்கிய தனிப்படை விசாரணை நடத்தி வந்தனர். இதில் செல்போனை பறித்து சென்றது தூத்துக்குடியை சேர்ந்த விக்னேஷ் (20), வெங்கடேஷ் (19), மாரிமுத்து (19), சுரேஷ் (19), செந்தில் (19), ஜோஸ்வா டேனியல் (19) மற்றும் 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 8 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் 3 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். 

    • முசிறியில் காணாமல் போன ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 12 செல்போன்களை உரியவர்களிடம் டி.எஸ்.பி. ஒப்படைத்தார்
    • புகார்களின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, சைபர் கிரைம் வழியாக விசாரணை நடைபெற்றது.

    முசிறி:

    திருச்சி முசிறி காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்களின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, சைபர் கிரைம் வழியாக விசாரணை நடைபெற்றது. தனிப்படை போலீசார் புதுக்கோட்டை, திருப்பத்தூர், நாமக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செல்போன்களை மீட்டுள்ளனர்.

    இவ்வாறு மீட்கப்பட்ட ஒன்றரை லட்சம் மதிப்பிலான 12 செல்போன்கள் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் உரியவர்களிடம் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் திருப்பதி, கருணாநிதி, பயிற்சி இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் காவலர் சூர்யன் ஆகியோர் உடனிருந்தனர்.


    ×